திங்கள், 7 நவம்பர், 2016

ஜேஎன்யூ மாணவியிடம் போலீஸின் அத்துமீறல்.. மாணவர் நஜிப் அகமதுக்காக நடந்த போராட்டத்தில் ..

nzeeb-motherஜேஎன்யூவில் காணாமல் போன மாணவர் நஜிப் அகமதுவுக்காக நேற்று டெல்லியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் நஜிப்பின் தாய், சகோதரி ஆகியோரும் ஜேஎன்யூ மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்களை மிகக் கடுமையாக அடித்து இழுத்து கைது செய்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ். தன் மகனுக்காக நீதிகேட்ட நஜீப்பின் தாயை இழுத்துச் சென்றனர். இது சமூக ஊடகங்களில் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவியிடன் ஆண் காவலர் ஒருவர் அத்துமீறலுடன் நடந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவலருக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலர் வலியுறுத்திவருகின்றனர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: