செவ்வாய், 22 அக்டோபர், 2024

சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்- Cadillac.Sky blue with Navy blue top Automatic Left hand drive

May be an image of 2 people, car, hood ornament and text ராதா மனோகர் : சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது

திங்கள், 21 அக்டோபர், 2024

அந்தரங்கங்களை கூறுபோட்டு விற்கும் யூ டியூபர்கள் .. இர்பான் வகையறாக்கள்

May be an image of 5 people, hospital and text

 LR Jagadheesan :  ஒருபக்கம் உங்கள் அந்தரங்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கூவிக்கூவி கூறுபோட்டு விற்று காசாக்குகிறீர்கள்.
மறுபக்கம் என் தனிப்பட்ட வாழ்வு பற்றி கருத்துசொல்லவோ விமர்சிக்கவோ அடுத்தவருக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். அது எப்படி எடுபடும்?
பொதுச்சந்தையில் உங்களை நீங்களே அதிக விலைக்கு விற்கத்தானே உங்கள் வாழ்வின் அந்தரங்கமான ஒவ்வொன்றையும் தினம் தினம் காட்சிப்படுத்துகிறீர்கள்?
உங்கள் வாழ்வை காட்சிச்சந்தையின் கடைச்சரக்காக்கி விற்றபின் அதன்மீது கருத்துசொல்லும்/விமர்சிக்கும் உரிமை உங்களுக்கேது?
அதை காட்சிச்சந்தையில் தம் கண்களால் வாங்கிய பார்வையாளர்கள் தானே அதன் உரிமையாளர்கள்? அவர்களை எப்படி நீங்கள் தடுக்கமுடியும்?

குவைத்தில் பாதிக்கும் மேல் திருமணம் ஆகாத இளம் பெண்கள்... தொடரும் விவாகரத்துகள்

 tamil.samayam.com - மகேஷ் பாபு  : சர்வதேச அளவில் பண மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது? என்றால் குவைத் என்று தான் பதில் கிடைக்கும்.
எண்ணெய் வளங்களால் செல்வம் கொழித்து காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டி வருகிறது.
இந்நாட்டில் பிறப்புரிமை பெற்றிருந்தால் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் பெண்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

தேசம் நெட்  -arulmolivarman :        உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Canada நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இந்திய தூதர் சஞ்சய் வர்மா

மாலை மலர்  :  ஒட்டாவா கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோக்கேரி Vs நவ்யா.

 மின்னம்பலம் -Selvam : வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று (அக்டோபர் 19) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

உ.பி.யில் ரூ.500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால்காரர்-வீடியோ

மாலைமலர் : “உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில்

மின்னம்பலம் - Selvam :   தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 18 ஆம் தேதி  (நேற்று) சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மொழி விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவில் இவ்வாறு நடந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர்.’

ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.. முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

 tamil.oneindia.com - Shyamsundar : கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. அதன்படி ஈஷா மீது உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மையம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

 மாலை மலர் :  ராஞ்சி ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.