சனி, 5 நவம்பர், 2011

செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார் சில்க் ஸ்மிதா: அவரை தவறாக பயன்படுத்தினர்: வித்யாபாலன் வருத்தம்

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த தர் டி பிக்சர் என்ற பெயரில் படமாகிறது. சில்க்கின் குழந்தை பருவம், சினிமா பிரவேசம், காதல், தற்கொலை என அனைத்தும் இதில் காட்சிபடுத்தப்படுகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.
இதற்காக சில்க் நடித்த படங்களை பார்த்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பழகியும் நிறைய பயிற்சி எடுத்தார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:
சில்க் ஸ்மிதா துணிச்சலான நடிகை. எதைக்கண்டும் பயப்படமாட்டார். எப்படி நடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி நடித்தார். அதற்காக அவர் வெட்கப்பட்டது இல்லை. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆசைப்பட்டார். ஒவ்வொரு படத்தையும், வாய்ப்புகளையும் சந்தோஷமாக பயன்படுத்தினார்.

தமிழகத்தில் தரமான நூல் நிலையங்கள் இருக்கக்கூடாது...Jeyalalitha





""நானும் குழந்தைதான். எனக்கு ஒன்றரை வயதுகூட ஆகலை. நல்லா ஆரோக்கியமா இருந்த எனக்கு தடுப்பூசி போடுறதுக்குப் பதிலா விஷ ஊசியைப் போட்டிருக்காங்க. இனி என் உயிருக்கே ஆபத்துன்னு எல்லோரும் சொல்றாங்க. இந்தக் குழந்தைக்கு எந்த உயர் சிகிச்சை மருத்துவமனையில் உயிர்ப்பிச்சைக்கான ட்ரீட்மெண்ட் கொடுக்கப்போறாங்கன்னு கேட்டு சொல் லுங்க'' -அண்ணா நூற்றாண்டு நூலகம் என்கிற அறிவுக் குழந்தையின் அவலக்குரல்தான் இது. அந்த நூலகத்திற்கு ஆர்வத்தோடு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அவலக்குரல்.

சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் "பிரம்மாண்ட அபலை' போல் நிற்கிறது அண்ணா நூற் றாண்டு நூலகம். அதனை டி.பி.ஐ வளாகத்தில், இனிமேல் கட்டப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் அறிவுசார் பூங்காவுக்கு மாற்றிவிட்டு, நூலகம் உள்ள கட்டிடத்தை குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்போவதாக ஜெ.அரசு அறிவித்த சில நிமிடங்களில் நாம் அந்த 8 மாடி நூலக வாசலில் நின்றோம்.
அருகிலுள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசின் அறிவிப்பைப் பற்றி அறியாமல் வழக்கம்போல் நூலகத்திற்கு வந்தபடி இருந்தார்கள்.

நீதிபதி ஒருதலைப் பட்சம்: விசாரணை முடிந்துவிட்டதால் எனக்கு ஜாமீன் தர வேண்டும்! - கனிமொழி


டெல்லி: நான் ஒரு பெண்... எனக்கு சிறிய குழந்தை இருக்கிறான். எனவே எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்பி.
2 ஜி முறைகேடு வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. இதுவரை அவருக்கு நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக இரு தினங்களுக்கு முன் சிபிஐ நீதிமன்றம் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.

இலங்கை பற்றி செய்தி வெளியிட, ஊடக அமைச்சில் இணைய தளத்தை பதிவு செய்ய வேண்டும்

இலங்கை மற்றும் இலங்கையர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும் அனைத்து இணைய தளங்களும், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தமது இணைய தளங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு கொள்கை தொடர்பில் கனேடிய அரசு புதிய சட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது!

குடிவரவு கொள்கை தொடர்பில் கனேடிய அரசு புதிய சட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார்.இதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். இதன்படி, கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகக் கூடியதான வகையில் வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவின் மூலம் ஒரு தடவையில் அவர்கள் இரு வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும்.

Parts of Negombo, Batticaloa under water by 2040


By Ifham Nizam

Between 15 per cent and 20 per cent of the total populations of the Negombo and Batticaloa Municipal Councils are vulnerable to sea level rise in 2040, a study by the University of Moratuwa, has estimated.

Speaking at the initiation of a pilot project titled ‘Climate Resilient Action Plan for Coastal Urban Areas, Sri Lanka (CCSL)’, Moratuwa University, Architecture Facility, Dean Prof. P. K. S. Mahanama, said that Batticaloa and Negombo have been vulnerable to climate related natural disasters during the last few decades and particularly in 2000.

He said Batticaloa recently experienced its biggest floods in the last 100 years.

வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்


இந்தியாவுக்கு பாகிஸ்தான் நட்பு நாடு அந்தஸ்து

அட்டரி : இந்தியாவுக்கு ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கியிருப்பது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து சிஐஐ அமிர்தசரஸ் மண்டல தலைவரும் கன்னாப் பேப்பர்ஸ் இயக்குநருமான சுனீத் கோச்சர் கூறுகையில், பாகிஸ்தான் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.  இருதரப்பு வர்த்தகத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

ஒரிசா ஒடிசா என்று பெயர் மாற்றம் (உட்கள் )

புவனேஸ்வர்: கடந்த 2008-ம் ஆண்டு ஒரிசா மாநில சட்ட சபையில் மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்று பெயர் மாற்றுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இதுகுறித்த தீர்மானம் பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநில மொழியின் பெயரையும் மாற்ற வலியுறுத்தப்பட்ட மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவை வரவேற்று பேசிய முதல்வர் நவீன் பட்நாய்க் ஒடிஸா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார் 
இந்த மாநிலத்திற்கு உட்கள் மாநிலம் என்ற பெயரும் உண்டு.

தொலைபேசி இணைப்பு: தயாநிதியிடம் வசூலிக்க வலியுறுத்தல்

முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய புகார் தொடர்பாக, சி.பி.ஐ., விரைந்து விசாரணையை நடத்தி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

"2 ஜி ஸ்பெக்ட்ரம்' விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன், கடந்த 2004ம் ஆண்டு, தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதிக்கு வழங்கப்பட்ட, சென்னை தொலைபேசியின் 323 இணைப்புகளை, முறைகேடாக "சன் டிவி' நிறுவனத்திற்கு பயன்படுத்தியதாக, சி.பி.ஐ., கண்டுபிடித்து, கடந்த 2007 செப்.,ல் தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தது. ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை, "போர்ட் கிளப்'பில் உள்ள அவரது வீட்டிலிருந்து, 3.4 கி.மீ., தொலைவில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்ட "சன் டிவி' நிறுவனத்திற்கு, அந்த 323 இணைப்புகளும்,"ஆப்டிக் பைபர் கேபிள்' மூலம் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதோடு, இணைப்புகள் அனைத்தும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது எனவும், சி.பி.ஐ., அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இவுக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கிடுவாய்ங்க போலிருக்கே!

ஜெ. சந்தேகம்! “சுப்ரீம் கோர்ட்டில் நம்ம ஓ.பன்னீருக்கு ஆள் இருக்கா?”

Viruvirupuபுதுடில்லி, இந்தியா: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கை தவிர்ப்பதற்காகச் செய்த அடுத்த முயற்சிக்கும் விழுந்தது முட்டுக்கட்டை. வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் செய்திருந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. முதல்வர் மீண்டும் பெங்களூரு செல்ல வேண்டிய நிலை!
அதுவும் இம்முறை முன்பைவிட மோசமான நிலை. இரண்டொரு நாட்கள் வந்தால் போதும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், எத்தனை நாட்கள் அழைக்கிறார்களோ, அத்தனை நாட்கள் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று வந்து விழுந்திருக்கிறது  இடி.
முதல்வர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மனுவில், “ஒரு நாள் விசாரணை என்றார்கள். அதை இரண்டு நாட்களாக நீடித்தார்கள். இப்போது மீண்டும் 8-ம் தேதி வர சொல்கிறார்கள். இப்படியே நீடித்துக்கொண்டு இருந்தால் எம்மால் வரமுடியாது” என்ற ரிமார்க்குக்குதான் இந்த இடி விழுந்துள்ளது.
“விசாரணைக்கு காலவரம்பு எதுவும் கூறமுடியாது. எப்போது அழைக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆஜராகி, விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்”  என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்.
தேவையில்லாமல் தாமே தடியை எடுத்தும் கொடுத்து,  அடியும் வாங்கியிருக்கிறார் முதல்வர்.

கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்தனர்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு
ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்தனர்
- மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர். தங்களது ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை நேற்று வெள்ளிக்கிழமை (4.11.2011) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்துரையாற்றிய போது; தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாமை என குறிப்பிட்ட பிரதியமைச்சர் முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பனர்கள் மட்ட்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.

கால் கைகள் உடைக்கப்பட்டு வரும் இங்குள்ள கைதிகளுக்கு இந்த உப்புதான் வைத்தியப் பொருள்.

Ltte torture camp 051111புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (21)
21. உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
ltte toture081111நான் சிறைக்குள் மீண்டும் சென்றதும் அங்கிருந்த எல்லோரும் என்னை உற்று உற்றுப் பார்த்தனர். குறிப்பாக அவர்கள் எனது முதுகுப் பக்கத்தை அவதானிப்பதை உணர்ந்தேன். அதற்குக் காரணம் என்ன என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். அதை எனக்கு விளக்கிக் கூறியவர் எனக்கு அருகில் இருந்த வயோதிபர்தான். ஆனால் அதை அவா பல நாட்கள் கழித்துத்தான் சொன்னார்.

அவர் தெரிவித்த தகவல்களிலிருந்து, என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்ற வசீகரன் என்பவன், அங்கு மிகவும் பிரபலமான (கர்ணகடூரமான) ஒரு விசாரணையாளன். அவனது குறியீடு (Trade Mark) அவன் விசாரணைகளின் போது எப்போதும் வைத்திருக்கும் அந்த காய்ந்த தென்னம்பாளைதான். அந்தப் பாளையால் அவன் முதுகில் குறி வைக்காத நபர்கள் அங்கு இல்லையென்றே சொல்லலாம். வேறொரு விசாரணையாளன் விசாரணை செய்யும் கைதியைக்கூட அவனுடைய அந்தப் பாளை பதம் பார்க்கும். அவன் அவ்வாறு கட்டறுந்த காளையாக செயல்படுவதற்கான தைரியத்தை, அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்த காந்தியிடம் அவனுக்கு இருந்த  செல்வாக்கு வழங்கிக் கொண்டிருந்தது.

வசீகரனுக்கு மட்டுமின்றி, அங்கு விசாரணையாளர்களாக இருந்த ஒவ்வொருவருக்கும் விசேடமான குறியீடுகள் உண்டு. சிலருக்கு இரும்புக் கம்பிகள். சிலருக்கு மரக்கட்டைகள். வேறு சிலருக்கு மின்சாரக் கேபிள்கள். மிளகாய்த்தூள் இப்படிப்பலப்பல.

44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அவுஸ்திரேலிய

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 40 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
படகில் பயணம் செய்த 44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களினால் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சொந்த நாட்டுக்கு அனப்பி வைக்க முடியும்: சுவிட்சர்லாந்து மத்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது!

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சொந்த நாட்டுக்கு அனப்பி வைக்க முடியும் என சுவிட்சர்லாந்து மத்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும் என சுவிஸ் மத்திய குடியேற்றத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் செனட் சபையினரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துவது ஆபத்தாக அமையக் கூடும் என மற்றுமொரு தரப்பினர் சுட்டிக்காட்யுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பி வருவதாகவும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா ‘நூலகத்தை ஒரு முறை வந்து பார்க்கட்டும்!

அண்ணா நூலகம் மாற்ற ஜெயலலிதா முடிவு ‘நூலகத்தை ஒரு முறை வந்து பார்க்கட்டும்!

சென்னை :நூற்றாண்டு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றப் போவதாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நூலகத்தில் புத்தகம் படிக்க வந்த வாசகர்கள் சிலரின் கருத்து இதோ: குமார் (சூரியாநகர், கோட்டூர்புரம்): நான் சமூக சேவகராக உள்ளேன். தினமும் இந்த நூலகத்துக்கு வந்து படிக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இங்கிருந்துதான் பெறுகிறேன். இதன் மூலம் ஏழை மாணவர்கள் படிக்க உதவ முடிகிறது.
இந்த நூலகம் இருக்கின்ற சூழலை நாம் பார்க்க வேண்டும். அருகில் அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, மற்றும் ஐடி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் இருப்பதால், இது மாணவர்களுக்கு படிக்க பயன்படுகிறது. இப்போது இந்த நூலகத்தை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக கூறுகிறார்கள். இது துக்ளக் ராஜ்ஜியமா என்ற சந்தேகம் எழுகிறது.ஏற்கெனவே சமச்சீர் கல்வி விஷயத்தில் நீதிமன்றம் குட்டு வைத்தது. மக்களை ஏமாற்ற ‘சைக்காலஜி வார்’ நடத்துகின்றனர்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

பல்லை உடைப்பேன்! - A.R.முருகதாசை புகழ்ந்ததால் ஆந்திராவில் சர்ச்சை

        பொதுவாகவே தமிழ் படங்களிக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலான தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு என ரிலீஸாகிறது. ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கிற அதே அளவான வரவேற்பு ஆந்திராவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு அங்கே வரவேற்பு அதிகம்.
அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ஆம் அறிவு படம் ஆந்திராவிலும் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் சம்பந்தமாக ஐதராபாத்தில் நடந்த விழாவொன்றில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண்தேஜா பங்கேற்று பேசும் போது 7ஆம் அறிவு பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை வானளாவ புகழ்ந்தார். ஏ.ஆர். முருகதாஸ் திறமையான இயக்குனர். அவரைப் போல் சிறந்த இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்


Jayaprakash
ரூ 20 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது அந்தோணிதாஸ் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
பசங்க, நான் மகான் அல்ல, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெயப்பிரகாஷ். இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் குணச்சித்திர நடிகர் இவர்தான்.
இவர் ஜி.ஜெ. பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அடையாறு இந்திரா நகர் சர்தார் பட்டேல் சாலையில் உள்ளது.
இந்த பங்கை லீசுக்கு விடுவதாக கூறி ஜெயபிரகாஷ் ரூ.20 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

பலமுறை அவமான படுத்தப்பட்டேன்: நீதிபதி கர்ணன் பரபரப்பு பேட்டி

சென்னை:"நீதிபதிகள் கூடும் இடங்களில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மீது சில நீதிபதிகளுக்கு குறுகிய மனப்பான்மை, ஆதிக்க மனப்பான்மை உள்ளது' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.ஐகோர்ட் நீதிபதிகள் சிலர் தன்னை அவமதிப்பு செய்வதாக, ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு சிலர், நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன் என தெரிந்தும், வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் கூறியிருந்தேன். எனது புகார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் புகாரை நிரூபிப்பேன். விசாரணை முடியும் வரை, புகார் சம்பந்தமாக எந்தவித விமர்சனமும் தேவையில்லை.இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.

பைகளை தூக்கி வரவில்லை, இரு கைகளையும் தூக்கி வந்தவர்கள்!

Viruvirupu
கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது.
அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளன? இந்தக் கேள்விக்கு இரண்டு வெவ்வேறான பதில்கள் உள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு பதில் உள்ளது. யுத்தம் நடந்த இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்காக கி.மீ. தொலைவில் வெளிநாடுகளில் ஒரு பதில் உண்டு.
வெளிநாடுகளில் போய், “யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “இவர்களுக்கு தேவை, அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி அதிகாரமும், சுயநிர்ணய உரிமையும்” என்று படுசீரியசாகக் கூறுவார்கள்.
நேரடியாக இவர்களிடம் போய், “உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “அன்றாட வாழ்க்கையை நடாத்த தேவையான பொருட்களும், குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வாய்ப்பும்” என்பார்கள்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்-6 பேர் நீக்கம்-6 பேர் சேர்ப்பு-திருச்சி மேற்கு பரஞ்சோதி

தமிழக அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு 6 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்னர். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.பரஞ்சோதி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக நேற்றுதான் செய்திவெளியானது.இந்த நிலையில் தற்போது அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் இது.
செந்தமிழன், உதயக்குமார், சிவபதி நீக்கம்
அமைச்சர்கள் செந்தமிழன், ஆர்.பி. உதயக்குமார், சிவபதி, சண்முகவேலு, புத்தி சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மு.பரஞ்சோதி அமைச்சரானார்
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.பரஞ்சோதி, பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் சுந்தரராஜன், மாதவரம் வி.மூர்த்தி, நன்னிலம் காமராஜ், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கிரிமினல் வழக்குகளை சுமக்கும் 162 எம்.பிக்கள் மீதான நடவடிக்கை என்ன?- சுப்ரீம் கோர்ட்

டெல்லி: 162 எம்.பிக்களின் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க காலதாமதம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரிப்பது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற எம்.பி.க்களில் 162 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கும் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கின்றன. எம்.பி.க்கள் மீதான வழக்கு என்பதால் வழக்கு விசாரணை நத்தை போல நடந்து வருகிறது.

அஞ்சா நெஞ்சம் கொண்டவர் 'சில்க்'-வித்யா பாலன் புகழாரம்

சில்க் ஸ்மிதாவைப் பற்றி பலரும் தவறாகவே பார்த்து வருகின்றனர், சித்தரித்து வருகின்றனர். உண்மையில் பய உணர்வு சற்றும் இல்லாதவர் சில்க். தைரியமானவர், எதைச் செய்தாலும் உறுதியாக செய்யக் கூடியவர், துணிச்சல் மிக்கவர்.
குழந்தைத்தனமான மனது கொண்டவராக இருந்தாலும் தான் செய்வது சரி என்று அவருக்குத் தோன்றினால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக் கூடியவர் என்று சில்க் வேடத்தில் தற்போது தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்.

வடிவேலு போல குஷ்புவையும் திமுகவினர் சக்கையா புழிஞ்சு தூக்கிப்போட்ருவாங்க: ராதாரவி

வேலூர்: திமுகவினர் சக்கையாய் பிழிந்துவிட்டு வெளியே தள்ளிவிடுவார்கள் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராதாரவி நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் நகர அதிமுக சார்பில் 40வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராதாரவி பேசியதாவது,

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு!

பெங்களூர் : சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நவம்பர் 8ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நவம்பர் 8ம் தேதி ஆஜராக முடியாமல் போனால் நீதிபதியிடம் வேறு தேதியை கேட்டு பெறலம். ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தும் நாட்களுக்கு வரம்பு எதுவும் இல்லை எனவும், மொத்த கேள்விகள் கேட்கப்படும் வரை ஜெயலலிதாவிடம் விசாரணை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அண்ணா நூலகத்தை இடம் மாற்ற செய்ய சென்னை ஐகோர்ட் தடை!

சென்னை:அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக 6 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புலிகளின் சொத்துக்களை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

புலிகளின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய புதிய சட்டங்களை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வர்த்தகர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதனை விடுத்து புலிகளின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ஆட்ட நிர்ணய சதி: பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறை!

கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிகெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்று லண்டன் சவுத் கிரவுன் வோர்க் நீதிமன்றில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட்டுக்கு ஆறு மாத சிறை தண்டணையும், வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஆசிப்பிற்கு ஒருவருட சிறை தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் அமருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆட்ட நிர்ணய சதியில் தரகராக செயற்பட்ட மசார் மஜீட் என்பவருக்கு இரண்டு வருடங்களும், எட்டு மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 3 நவம்பர், 2011

இந்தம்மா கண்டிப்பாக “உள்ளே” இருக்க வேண்டியவர்.


என்னதான் வேணுமாம் இந்த ஆத்தாவுக்கு..? வராது வந்த மாமணியாய் இந்தம்மாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம். இதை வைத்து மக்கள் மனதில் நல்ல பெயர் எடுத்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெடுதல் வராமல் பார்த்துக் கொள்வார் என்றால் அப்படியே உல்டா அடிக்கிறார்..!
180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..? உண்மையிலேயே மருத்துவமனை அவசியமெனில் தனியிடத்தில் கட்டிக் கொள்ளலாமா..? இத்தனை முன்னேற்பாட்டுடனான வசதி, வாய்ப்புகளுடன் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு செய்திருக்கும் ஏற்பாட்டை சீர்குலைத்து கலைத்துப் போட இவருக்கு எப்படி யோசனை வருகிறது..? ஒருவேளை ஆத்தா லூஸாயிருச்சோ..?

ஜாமீன் மறுப்பு- நீதி தவறிய செயல்: ராம்ஜேட்மலானி

புதுதில்லி, நவ.3: கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது நீதி தவறிய செயல் என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம்ஜேட்மலானி கருத்துத் தெரிவித்துள்ளார்.இந்த ஜாமீன் விஷயத்தில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு நீதி தவறிய செயல் என்றே நான் கருதுகிறேன். இந்த நீதிமன்றத்தின் தவறை திருத்தி உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.ஜாமீன் கோரும் ஒரு நபர், தலைமறைவாக வாய்ப்பு இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்துவிடுவார் என்ற நிலையிருந்தால்தான் ஜாமீனை மறுக்க முடியும். இந்த வழக்கில் கனிமொழி இதுபோன்று நடந்து கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லாதபோதும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது சரியல்ல என்று ராஜ்ஜேட்மலானி கூறியுள்ளார்.

அன்று யாழ்ப்பாணம் நூலகம்: இன்று அண்ணா நூலகம்: சுப.வீரபாண்டியன் ஆவேசம்


1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது. இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதுடன், இச்செயலை எதிர்த்துப் போராடத் தன்மானமுள்ள தமிழர்களையும், அறிவாளர்களையும் பேரவை அறைகூவி அழைக்கின்றது.திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அந்த இதயம் இதையும் தாங்குமோ: கலைஞர்


தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் பண்பாட்டுச் சின்னங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழித்து வருவதாக, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் இதயம், இதையும் தாங்குமோ என்றும் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆருடைய ஆட்சிக் காலத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். அதன் பின்னர் ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் தரமணியில் சிறிய வாடகை வீட்டில் அப்பல்கலைக்கழகம் அனாதையாக இயங்கி வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உயர்ந்த மாட மாளிகைப் போன்ற கட்டிடங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய அளவுக்கு அமையும் என்று தாம் அறிவித்ததையும், அதற்கான வடிவமைப்பை தாமே உருவாக்கியதையும் கலைஞர் நினைவு கூர்ந்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரிட்டதையும், தொடக்க காலத்தில் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் திமுக இருந்தபோது, காமராஜர் சிலை திறந்து வைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தாமதமாவதால் ஈழத்தமிழருக்கு இந்தியா நேரடி நிதியுதவி

50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது.
இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.

அழியப் போகிறது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பேசும் அழகிய ஆலயம்!



சென்னை : கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
5 லட்சம் புத்தகங்கள்

தி.நகர் வர்த்தகர்கள் கட்சி கதவுகளை ‘வெறும் கையால்’ தட்டியிருப்பார்களா?

Viruvirupu
சென்னை, இந்தியா: கடந்த 3 நாட்களாக தி.நகரில் மூடிக்கிடக்கும் 25 வணிக வளாகங்கள், தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். சென்னையில் கட்சிகள் ஏதாவது பெரியளவில் கடையடைப்பு நடத்தும் தினங்களைத் தவிர, மற்றைய தினமெல்லாம் திறந்திருக்கும் கடைகள் இவை. சென்னையின் ரீடெயில்-பிசினெஸ்ஸின் டர்ன்-ஓவர் அதிகமான வர்த்தகங்களும் இவைதான்.
தி.நகரில் உள்ள இந்த 25 வணிக வளாகங்களும் கடந்த திங்கட்கிழமை சீல் வைக்கப்பட்டதில் எந்தவொரு அரசியல் பின்னணியும் இருப்பதாகத் தெரியவில்லை. இது முற்று முழுதாக சட்ட விவகாரம்.
இந்த வணிக வளாகங்களை நடாத்தும் ஆட்களுக்கு சகல அரசியல் கட்சிகளின் சகல மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு. அனைத்துக் கட்சிகளுக்கும் பெரியளவில் தேர்தல் நிதி போவதும் இங்கிருந்துதான். இதனால் தமது வர்த்தகங்களில் யாரும் கைவைக்க முடியாது என்ற நினைப்பு இவர்களுக்கு இருந்தது.
கடந்த திங்கட்கிழமை அதுதான் அடிபட்டுப் போனது.
கடைகள் சீல் வைக்கப்பட்டவுடன், மத்திய கட்சி மேலிடத்திலிருந்து, மாநில ஆட்சி மேலிடம்வரை சகல கதவுகளும் தட்டப்பட்டு விட்டன. ‘வெறும் கையால்’ தட்டியிருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
ஆனால் பலன்தான் இல்லை.

துக்ளக் தர்பார்' நடத்துகிறார் ஜெயலலிதா: வைகோ


Vaiko
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், முன்பு இருந்த கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு காரணத்திற்காக இந்த நூலகத்தை அங்கே இருந்து அகற்ற முடிவு செய்திருப்பது தான்தோன்றித்தனமான முடிவாகும். 'துக்ளக் தர்பார்' என்பதற்கு வேறு எந்த உதாரணமும் இருக்க முடியாது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது பாராட்டிச் சொன்னார்.
முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை என்றார்.
கி.வீரமணியும் கண்டனம்:

நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர் வழக்கு: ஐகோர்ட் ஏற்பு


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: ஐகோர்ட் ஏற்பு
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சி காலத்தின் போது சென்னை கொரட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மைய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. நூலக பயன்பாட்டிற்காக இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றுவது என்றும் அந்த நூலக கட்டிடத்தை குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுத்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பானது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுத்தவரும் மனைவியும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள்!

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் புரிந்ததாக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்த இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருணாசலம் ஜெகதீஸ்வரன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் சார்பில் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் புலிகளின் புலனாய்வுப் பிரிவிலும் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் என்று இப்போது இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெகதீஸ்வரனின் மனைவி மீனா கிருஷ்ணகுமாரியும் 2002ம் ஆண்டு முதல் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். இந்தப் பெண் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் ஈழநாடு, தங்கணி என்ற புனைப்பெயருடன் செயற்பட்டதாக புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பெண் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ஐக்கிய விடுதலை இளைஞர் சங்கத்தின் தலைவியாக இருந்து வருகிறார்.

கனிமொழி ஜாமீன்-டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது திமுக


கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்


Kanimozhiடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு
அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி வந்துள்ளனர். மேலும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இசை அரசி(யல்)ஷோபா சந்திரசேகர்,கபடி ஆலோசகர் பதவிக்குசந்திரசேகர்

தமிழக அரசு நடத்தி வரும் இசைப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசகர் பதவிக்கு வேட்டை நடத்தப்பட்டதில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் கபடி ஆலோசகர் பதவிக்கும் காலியிடம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நியமனம் செய்யலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கில்லி படத்தில் விஜய் விளையாடிய கபடி விளையாட்டை சில வாரங்களுக்கு முன் ஜெ பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம் படத்தில் அரசியல் கட்சி தலைவர் மீது ஓடு விழ "இது எதிர்கட்சி சதி" என்று கூற, அதற்கு விஜய் "நல்ல வேளை, நான் ஆளும் கட்சி" என்பார்.

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

தொடர்ச்சியாக ​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது நேற்றோடு...

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.
டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

51 யாழ் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் புலமைப்பரிசில்

வடமாகாணத்தில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தினர் அப் பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்துமுகமாக பல திட்டங்களை அமுல்படுத்தி, அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்தியும் வருகின்றனர்.
பாடசாலைகளில் புதிய கட்டிடங்களை நிர்மானித்தல், உடைந்த கட்டிடங்களை புனர்நிர்மானம் செய்தல், பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளித்தல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல், க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) ஆகிய பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் போன்றன அவற்றில் சிலவாகும்.

கனடாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தை குழப்ப முனையும் புலிப் பினாமிகள்!


கனடிய அரசு இதனை அனுமதிக்குமா?
- இந்திரஜித்
deepavali invitation2010ம் ஆண்டு கனடாவில் இலங்கையர் சமூகத்தால் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் - சிங்கள – முஸ்லீம் சமூகங்களின் மக்கள், குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் கனடிய அரசின் பிரதிநிகளும் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு கௌரவமளித்தனர்.
அந்தத் தீபாவளி நிகழ்வுக்கு ஒரு சிறப்பான அர்த்தம் இருந்தது. அதாவது தீபாவளித் திருநாள் என்பது, மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை அழித்த நாளை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அதேபோல மக்களுக்கு சொல்லொணா கொடுமைகள் புரிந்து வந்த நவீன நரகாசுரர்களான புலிகளை, 2009 மே மாதத்தில் இலங்கை இராணுவம் அழித்தொழித்து மக்களைத் துன்பத்தினின்றும் மீட்டது. அதன் பின்னர் கொண்டாடப்பட்ட முதலாவது தீபாவளி என்றபடியினால், 2010 தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிகளவு கனடிய இலங்கையர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

சரிந்து போகும் நெடியவன் தலைமையிலான புலிகளின் செல்வாக்கு

Pnguthamizh 281011ரொரான்ரோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2500 – 3000 வரையான மிகக் குறைந்தளவு பேர்களே பங்கு பற்றியது நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ பகுதியினருக்கு விழுந்த பலத்த அடியாகும்.
 டி.பி.எஸ் ஜெயராஜ்
ஒக்டோபர் 29ல் நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான பகுதியினர் ரொரான்ரோவில் அரங்கேற்றிய பொங்கு தமிழ் நிகழ்வில் 3000க்கும் குறைவானவர்களே பங்கு பற்றியிருந்தனர். கனடியத் தரங்களைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் பெரிது என்று கணிக்கப்பட்ட அதேவேளை முன்னர் நடைபெற்ற எல்.ரீ.ரீ.ஈ யினரின் நிகழ்வுகளில் இதே இடத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை எண்ணிக்கையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதன், 2 நவம்பர், 2011

Former Child Soldiers Rebuilding Their Lives 2 of 3


கர்நாடக மாநிலத்தில் ஏன் ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தை துவக்கவில்லை? : திக்விஜய் சிங்

டெல்லி: ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், தனது ஆசிரமத்தின் தலைமையக அமைந்துள்ள, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஏன் ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தை துவக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினர் தங்களுக்கு கடந்த 6 மாதங்களில், ரூ. 42.55 லட்சம், அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் நன்கொடையாக கிடைத்ததாகவும், அதை திருப்பிக் கொடுத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். விலாசம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடையை திருப்பி தரப் போவதாக, நடைமுறைக்கு ஒத்துவராத செயலை இந்த, 'சூப்பர் ஹீரோக்கள்' அறிவித்துள்ளனர்.

ஜீவாவை கவர்ந்த கதை!

வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் வாமணன் படத்தை இயக்கிய அகமது இயக்க ஜீவா நடிக்கிறார்.
மருத்துவதுறையில் சிறந்து விளங்கும் டாக்டர் வி.ராமதாஸ், சிறந்த‌ தொழில்முணைவோராக பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.2006ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பபடும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதிய இவர் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுளார். திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

கனிமொழியை அழைத்துவர ஸ்டாலின் டில்லிக்கு போகும் ‘ஸ்டோரி-லைன்’!

Viruvirupu
சென்னை, இந்தியா: நாளை (வியாழக்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீண்டும் டில்லி பட்டியாலா கோர்ட்டுக்கு வருகின்றது. ஜாமீன் மனுவை சி.பி.ஐ. எதிர்க்காது என்று கூறிவிட்டதில், அநேகமாக ஜாமீன் கிடைத்தது போலத்தான் என்ற உற்சாகத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.
நீதிபதி ஷைனி என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என்பது ஒருபுறம் இருக்க தி.மு.க. வட்டாரங்களில் கனிமொழியை சென்னைக்கு அழைத்து வருவது பற்றி பேசத் தொடங்கியிருப்பதுதான் வேடிக்கை. (கனிமொழிக்கு ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டு, அது கன்டிஷன் ஜாமீனாகவும் இருக்கலாம். கன்டிஷன்களில் ஒன்று, டில்லியில் தங்கியிருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம்)
கடந்த தடவை கலைஞர் டில்லிக்குச் சென்றதே கனிமொழியை அழைத்து வருவதற்காக என்பதை தி.மு.க. முக்கியஸ்தர்கள் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். கனிமொழி இல்லாமல் சென்னை திரும்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ராசாத்தி அம்மாளையும் மிகுந்த சிரமத்தின் பின்னர்தான் கலைஞரால் சென்னைக்கு அழைத்துவர முடிந்தது என்றும் சொல்கிறார்கள்.
அதெல்லாம் பழைய கதைகள். புதிய கதை என்ன?

விஜயகாந்த் வாயைத் திறந்திருப்பது, ‘இடையில் ஏற்பட்ட தடங்கலா?’

Viruvirupu
சென்னை, இந்தியா: தே.மு.தி.க. சட்டசபைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்கும், உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய அடிக்கும் இடையே சம்மந்தமே கிடையாது என்ற நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அப்படி என்னதான் நடந்தது என்று விஜயகாந்த் யோசித்திருப்பார் போலிருக்கிறது. சிலீப்பிங் மோடில் இருந்து லைவ் ரன்னுக்கு வந்திருக்கிறார்.
மக்கள் பிரச்சினை தொடர்பாக வாய் திறக்கத் தொடங்கியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து அறிக்கை விடுத்திருக்கிறார் அவர். ஏனோ தெரியவில்லை, மாநில அரசு தொடர்பான விஷயத்தை விட்டுவிட்டு, மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில்தான் அறிக்கை விட்டிருக்கிறார். அதிலும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

போயஸ் கார்டனுக்கே காட்டிய, கில்லாடிக்கு கில்லாடியின் கில்லி வேலை!


Viruvirupuபெங்களூரு, இந்தியா: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற கோர்ட் விவகாரங்கள் மீடியாக்களில் சக்கைபோடு போட்டுவிட்டன. ஆனால், கோர்ட்டுக்கு வெளியே நடைபெற்ற சில முன்னேற்பாடுகள் அதி ரகசியமானவை. இப்போதுதான் லேசாகக் கசிகின்றன அவை.
ஜெயலலிதா என்னதான் தமிழகத்துக்கு முதல்வராக இருந்தாலும், வழக்கு நடப்பது மற்றொரு மாநிலத்தில். அங்குள்ள அரசு வேறு, இவர்களுக்கு நெருக்கமானது அல்ல.  இதையெல்லாம் மனதில் வைத்து, பெங்களூரு ‘மேட்டர்களை’ கவனிக்க சென்னையில் இருந்து ஒரு டீம் போய் அங்கே இறங்கியது.
மூன்று மாதங்களுக்குமுன் இந்த வழக்கு விவகாரம் அடிபடத் தொங்கியபோதே கோர்ட் விவகாரத்தைக் கவனிப்பதற்காக முதல்வரின் சார்பில் இந்த டீம் பெங்களூருவுக்கு போய் இறங்கியது. டிக்கின்சன் ரோடிலுள்ள ரோயல் ஆர்க்கிட் சென்ட்ரல் ஹோட்டல்தான் இவர்களது ஆபரேஷன் சென்டராக இருந்தது. இந்த டீம் தங்கியிருந்து, சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து வந்ததும் அதே ஹோட்டலில் வைத்துதான்.

ரங்கநாதன் தெரு மீண்டும் ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும்?

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.
அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது

பெங்களூரில் `வேலாயுதம்' பட தியேட்டர் முற்றுகை-பேனர்கள் கிழிப்பு: ரசிகர்களை வெளியேற்றியதால் காட்சிகள் ரத்து

Velautham - 1கன்னட ரக்ஷண வேதிகே போராட்டம்:
பெங்களூரில் `வேலாயுதம்' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் திடீரென்று முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அதோடு நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். ரசிகர்களை வெளியேற்றியதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.நடிகர் விஜய் நடித்த `வேலாயுதம்' படம், தீபாவளி அன்று திரைக்கு வந்தது. இந்த படம் பெங்களூர் ஆர்.டி.நகரில் உள்ள ராதாகிருஷ்ணா தியேட்டர் உள்பட பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பிரவீண்ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திடீரென்று "வேலாயுதம்" படம் திரையிட்டுள்ள ராதாகிருஷ்ணா தியேட்டரை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும், இன்று (அதாவது நேற்று) கர்நாடக ராஜ்யோத்சவா தினத்தையொட்டி தமிழ் உள்பட மாற்று மொழி படங்களை திரையிடக்கூடாது என்றும், எனவே காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டினர். அதோடு தியேட்டரில் இருந்து ரசிகர்களை வெளியேற்றினர்.

Freedom Speaks சுகந்திரத்தின் பேச்சு எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது




சுகந்திரத்தின் பேச்சு என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ள “பிரீடம் ஸ்பீக்” எனும் ஆவணப்படம் இன்று (நவ-01) மாலை 5 மணிக்கு கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின், தரங்கனி திரையங்கில் திரையிடப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

Wikileaks ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட வேண்டும் : பிரிட்டன் நீதிமன்றம்!

பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாஞ்சே வழக்கறிஞர்கள் பிரிட்டனில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றுவது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று வாதிட்டனர்.
அசாஞ்சே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது நிறுவனமான விக்கிலீக்ஸ்-இல் பணிபுரியும் பெண்கள் இரண்டு பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ஜாமீனில் விடுதலையாவாரா கனிமொழி?: டெல்லியில் அழகிரி, ஸ்டாலின்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொனியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி செல்கிறார்.
இந்த ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின.
ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை நாளைக்கு (நவம்பர் 3ம் தேதிக்கு) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார். அதன்படி நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

அண்ணா நூலகம் மாற்றம்: தன்மானமுள்ள தமிழர்களிடமே முடிவை விட்டுவிடுகிறேன்- கருணாநிதி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தை தன்மானமுள்ள தமிழர்களிடமும், தமிழறிஞர்களிடமும் விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் தற்போது நூலகம் உள்ள இடத்தில் உயர் தர குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், இதனை தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்.

ஜெயலலிதாவால் மூடப்படும் இரண்டாவது கலைஞர் கட்டிடம்


New Secretariat Building and Anna Centenary Library
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் பார்த்துப் பார்த்துக் கட்டடம் ஒன்றை வேறு உபயோகத்திற்காக முதல்வர் ஜெயலலிதா மாற்றுவது இது 2வது முறையாகும்.
கடந்த திமுகஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் எழுப்பப்பட்ட பிரமாண்ட கட்டடங்களில் புதிய தலைமைச் செயலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் முக்கியமானவையாகும்.
இப்போது இந்த இரண்டையுமே வேறு உபயோகத்திற்காக தற்போதைய அரசு பயன்படுத்தப் போகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து அந்த புதிய கட்டடத்தில், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

அண்ணா நூலகம் அகற்றப்படுகிறது மருத்துவ நிலையமாகிறதாம்


Anna Centenary Library
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அங்குள்ள நூலகம் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும், டிபிஐவளாகம் ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்காவாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


அதி நவீன அண்ணா நூற்றாண்டு நூலகம்
இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில், எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த தினத்தன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!“குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!சு என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. “இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்சு என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (International Food Policy Research Institute, Rome) குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.
இப்படி நாடு முழுவதும் முதலாளித்துவ நிறுவனங்களும் ஊடகங்களும் பார்ப்பனபாசிச மோடியைச் சிறந்த அரசாளுமை கொண்டவர் என்றும், விவசாயத்தில் வளர்ச்சியைச் சாதித்தவர் என்றும் கொண்டாடுகின்றன. எனில், விவசாயிகளுக்கு குஜராத் சொர்க்கபுரியா? மோடி அரசு விவசாயத்தில் அப்படி என்ன ‘புரட்சியை’ச் செய்துள்ளது?

சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை மறுத்து தமது விவரங்களை தோழர்கள் பதிவிடுகிறார்கள்.
பள்ளிகளில் சேரும் போது மட்டுமல்ல, பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ் ஆகியவற்றிலும் சாதி, மதம் இல்லை என்றோ, வெற்றிடமாக விட்டோ தர இயலும். இதற்க்காக அரசு வெளியிட்டுள்ள ஆணையை இங்கு படமாகவும்,  பிடிஎஃப் கோப்பாகவும் இணைத்திருக்கிறோம். தோழர்கள், நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

America: பிளாங்கட் எல் விசா டிசம்பர் 1 முதல் சென்னையில் மட்டும் வழங்கப்படும்

சென்னையில் அமெரிக்க துணை தூதரக பணிகளின் தலைவர் நிகோலஸ் மான்ட்ரிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் உள்ள இந்திய கம்பெனிகளுக்கு தொழில்ரீதியாக செல்வோருக்கான பிளாங்கட் எல் விசா இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க துணை தூதரகங்களிலும் வழங்கப்பட்டு வந்தது. இனி டிசம்பர் 1 முதல் இந்த விசா சென்னையில் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

பாரிமுனை, புரசைவாக்கம் கடைகளுக்கும் விரைவில் மூடுவிழா

விதிமுறைகளை மீறிய பாரிமுனை, புரசைவாக்கம் கடைகளுக்கும் விரைவில் மூடுவிழா

சென்னை: சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைத்ததைத் தொடர்ந்து அடுத்து பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட பல அடுக்கு மாளிகை ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவற்றை நேற்று அதிரடியாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இதனால் தி.நகர் பகுதி வர்த்தகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்டமாக பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான் கைதுசெய்யப்படவேண்டும் என்று விரும்பும் ஊடக விபச்சாரிகள்!

டான் ரிவி குகநாதனின் முகநூலிலிருந்து
இலங்கை ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் சிங்கப்பூரில் கைது என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பல ஊடகவியலாளர்கள் டான் ரிவி அலுவலகத்துடன் தொடர்புகொண்டு நான் கைது செய்யப்பட்டிருப்பதாக கேட்கத் தெடங்கிவிட்டனர். கைது செய்யப்பட்டவர் 5 லட்சம் சிங்கப்பூர் டொலர்களுடன் கைதுசெய்யப்பட்டதாக அந்தச் செய்தி வந்தபோதே அதற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது என்பதை அவர்களால் ஊகிக்க முடியவில்லை.

அறக்கட்டளை உறுப்பினரை தாக்கியதாக வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ் கைது

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினரைத் தாக்கிய வழக்கில் அதன் தலைவர் ஐசரி கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த அதிமுக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐசரி வேலனின் மகன்தான் கணேஷ். இவர் தனது தந்தை நினைவாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவி நடத்தி வருகிறார். அதன் வேந்தராகவும் உள்ளார். பல்லாவரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது.
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளைத் தலைவராக கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் கணேஷ்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள்




மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுத்தந்த பகுத்தறிவுப் பகலவனுக்கு மக்கள் எடுத்திட்ட பாசப் பெருவிழா!
சென்னை, நவ.1-தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாளை ஒட்டி அவருடைய கொள் கைகள் பல ஊர்களில் பரப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!

லண்டம் கலவரம்வினவு
வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது

மருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 அன்று இலண்டனின் புறநகர்ப் பகுதியான டாட்டன்ஹாம் என்ற இடத்தில் தொடங்கிய இக்கலகம், காட்டுத் தீ போல அந்நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், மேட்டுக்குடி கனதனவான்கள் வசிக்கும் மேற்குப் பகுதிகளுக்கும்; பிர்மிங்ஹாம், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டால் எனப் பிற நகரங்களுக்கும் பரவியது.
இக்கலகம் நடந்த பகுதிகளில் எல்லாம் கலகக்கார இளைஞர்கள் போலீசாருடன் நேரடியான மோதலில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவுக்கு சோ சொல்லிக் கொடுத்த ஐடியா போலிருக்கே இது!


Viruvirupu, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை செல்ல இருந்த பாதையில், வெடிகுண்டு இருந்தது பற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு, முதல்வர் ஜெயலலிதா 50,000 பரிசு பிளஸ் பாராட்டுகளை வழங்கியுள்ளார். (இருவரும் அ.தி.மு.க.-வை சேர்ந்த ஆட்கள் என்கிறார்கள்) இவர்கள் இருவரும் நேரடியாக சென்னைக்கு (போயஸ் கார்டனுக்கே) வரவழைக்கப்பட்டு, முதல்வரை நேரில் சந்திக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட தகவல் சும்மா பத்திரிகைச் செய்தியாக வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. தலைமைக் கழகம், அதை ஒரு அறிக்கையாகவே வெளியிட்டிருக்கின்றது.
மேலே குறிப்பிட்டது ஒரு சாதாரண செய்தி. டிப்பளமட்டிக்-பாலிட்டிக்ஸ் தெரிந்தவர்களுக்கு, அதன் பின்னணியில் ஒரு அரசியல் பிளானிங் தெரியும்.

திருஅண்ணாமலையார் கோயிலில் ஊழலோ ஊழல்




திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கிலும், பௌர்ணமியன்று லட்ச கணக்கிலும் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகின்றனர்.
கோயிலில் கடந்த 7 ஆண்டுகளாக அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், கோயில் அலுவலத்தில் கோயில்களுக்கான மளிகை மற்றப்பொருட்கள் எங்கு வாங்கப்படுகிறது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால் கோயில் தரப்பில் தகவல் தராமல், இவைகளை தரமுடியாது என்றுள்ளனர். இதனால் கோபமான இந்து முன்னணியினர் கோயிலில் நடக்கும் ஊழல்களைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும். ஊழல் செய்தவர்களை பணியை விட்டு நீக்க வேண்டும் என 15.11.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய சங்கர், அண்ணாமலையார் கோயிலில் ஊழல் அதிகமாக நடக்கிறது. அதை தடுக்கவே போராடுகிறோம் என்றார்.

பாமகவுக்கு இளைஞர்களை இழுத்து வந்த வேல்முருகன் அதிரடி நீக்கம்


Velmurugan
சென்னை: பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவும், பாமகவுக்கு பெருமளவில் இளைஞர்களை சேர்க்க பாடுபட்டவருமான வேல்முருகன் திடீரென கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் படங்கள், கட்சிக் கொடிக் கம்பங்களை அடித்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தினர்.
பண்ருட்டி தொகுதியிலிருந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் வேல்முருகன். கடந்த தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாமகவிற்கு பெருமளவில் இளைஞர் படையைத் திரட்டி வந்து கட்சியைப் பலப்படுத்தியவர்.

இதயம் காக்கும் பூண்டு

மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது. பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர்.
இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர். பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது. இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும். இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம். அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.
இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.

வடக்கு அபிவிருத்தி குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆராய்வு

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தலைமையில் இன்று திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தி, கடற்றொழில் வீட்டுத்திட்டம், விவசாய அபிவிருத்தி, குடிநீர்த்திட்டம், சுகாதார சேவைகள், மினிவிநியோகம், கல்வி அபிவிருத்தி தொடர்பாக முன்மொழிவுகள் செய்யப்பட்டு ஆராயப்பட்டன.
இதில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், சி.சிறிதரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்கள், வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஆ.சிவசுவாமி மற்றும் யாழ்.மாநகர முதல்வர், பிரதேச செயலளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

புலிகளை யாரும் அழிக்கவில்லை; அவர்களாகவே அழிந்துபோனார்கள்!

தமிழ் தேசியவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு குழு போய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்வதை தங்கள் தேசியக் கடமையாகக் கருதி செயற்படுகின்றனர்.
புலிகள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்தார்கள் ஏகாதிபத்தியங்கள் சதி செய்துவிட்டன என்ற தொனியில் அறிவழகன் …. போன்றோர் எழுதுவதும் இந்த அபத்தங்களில் ஒன்று தான். விடுதலை இயக்கங்கள் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்திப்பது ஒன்றும் புதிதல்லவே. ஆனால் எனக்கு தெரிந்தவரை விடுதலை இயக்க வரலாற்றில் ஒட்டுமொத்த தலைமையையும் கொன்றழிக்கப்பட்டது என்றால் அது புலிகளாகத் தான் இருக்க வேண்டும். புலிகள் ஏன் அழிந்து போனார்கள் என்பதை தமிழ் தேசியவாதிகள் புவிசார் அரசியல், சமூக, பெருளாதார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக ஆய்வு செய்வதை திட்டமிட்டே தவிர்க்கின்றனர். இந்தப் போக்கு தமிழர்களின் எதிர்காலத்துக்கு செய்யும் பச்சைத் துரோகம்.
30 வருடம் நாம் கொடுத்த விலைகளையும் சமூகம் வழிநடத்தப்பட்டு வந்த பாதையையும் மீளாய்வு செய்வதை தமிழ்த் தேசியவாதிகள் விரும்பவில்லை. புலிகள் எல்லாவற்றையும் சரியாகச் செய்திருந்தால் ஏன் அழிந்து போனார்கள்?