சனி, 23 ஏப்ரல், 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள்-கனிமொழி

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
English summary
The second chargesheet in the 2G spectrum scam will be filed on Monday by the Central Bureau of Investigation. Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam. Sources claimed that the second chargesheet will focus on Rs214 crore transaction involving Kalaignar TV and the alleged payoff routed through Dynamix Realty, Kusegaon Realty and Cineyug Films.

Jaffna_market

இந்தியாவின் விசாரணையையடுத்து வடக்கு விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள் மீளக் கிடைத்தன


வடபகுதி விவசாயிகளுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் கணிசமானவற்றை அரச நிறுவனங்களின் பாவனைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக விசாரித்ததையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் இந்த உழவு இயந்திரங்கள் வடபகுதி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரியவருகிறது. வட பகுதி விவசாயிகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் சுமார் 200 உழவு இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் மர முந்திரிகை கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார். மேலும் 100 உழவுஇயந்திரங்கள் வேறு பல நிறுவனங்களுக்கு வழங்க தயார்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் விசாரித்ததாகவும் அதையடுத்தே, மேற்படி உழவு இயந்திரங்களை பல அரச நிறுவனங்களுக்கு வழங்கும் தீர்மானம் மாற்றப்பட்டு மீண்டும் அவற்றை வடபகுதி விவசாயிகளுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் நம்பகமான வட்டாரங்கள் டெய்லி மிரர், தமிழ் மிரருக்குத் தெரிவித்தன. 600 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 500 உழவு இயந்திரங்களும் வட மாகாணத்தின் பல்வேறு கமநல சேவை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடை

ஆர்.ஜே. ரத்னாகர், பகவதி இந்துலால் ஷா கிரி வேணு சீனிவாசன் பிரசாந்தி நிலையம்

பாகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கின்றனர். பகவானுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு குறைந்தபட்சம் 35,000 கோடி ரூபாய் முதல் 40,000 கோடி ரூபாய் வரை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மட்டும் அன்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாகவே கையிருப்பில் இருக்கின்றன.  பாபாவுக்குப் பிறகு தங்களுக்கு நல்ல வழிகாட்ட யார், அவர் தொடங்கி நடத்திவரும் அறப் பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலையெல்லாம் அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் அவநம்பிக்கையே நிலவுகிறது. 1964-ல் சத்யசாய் மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவர். இதன் நிர்வாகக்குழு 2010-ல் தான் திருத்தியமைக்கப்பட்டது.  அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இல்லை. எனவே இந்த மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  அறக்கட்டளையின் தலைவர் பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா. ஏனைய உறுப்பினர்கள்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, மும்பைத் தொழிலதிபர் இந்துலால் ஷா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி. கிரி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர் (39).  இவர்களைத் தவிர வேறு 4 பேரும் பாபாவிடம் நெருங்கி அவருக்குப் பணிவிடை செய்யும் இடத்தில் இருப்பதால் நிறைய உள்விவகாரங்களைத் தெரிந்துகொண்டு செல்வாக்குமிக்கவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சத்யஜித். எம்.பி.ஏ. படித்துள்ள நிர்வாகி. அடுத்தவர் சக்ரவர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. மூன்றாமவர் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் வெங்கட்ராமன், மற்றொருவர் எஸ்.வி. கிரி.  ஆஸ்ரம நிர்வாகத்தில் இந்த 4 பேருக்கும் இருக்கும் செல்வாக்கு குறித்து பாபாவின் உறவினர்களுக்கு தாள முடியாத கோபம்தான். இதை வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் பேசும்போது கோபத்தை அடக்காமலேயே பேசிவிடுகின்றனர்.  ""2 மாதங்களாக பாபா சாப்பிடுவதே இல்லையாம்; இது உறவினர்களான எங்களுக்கே தெரியாது'' என்று கோபம் கொப்பளிக்க ஒருவர் தெரிவித்தார்.  தலைசுற்றுகிறது, இதயத்துடிப்பு குறைந்துவருகிறது என்று மார்ச் 28-ம் தேதி பாபா கூறியபிறகே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போதுதான் பாபாவின் உறவினர்கள் அந்த 4 பேரிடம் வாக்குவாதம் செய்தனர்.  ""இப்போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம், பாபாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் தயங்கமாட்டோம்'' என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.  ""இப்போதே பிரச்னை கிளப்பினால் பாபாவின் சொத்துகளுக்காகத்தான் நாங்கள் பூசலை ஏற்படுத்துகிறோம் என்று குற்றம் சுமத்திவிடுவார்கள்'' என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறார் என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. ரத்னாகரின் தந்தை ஜானகிராமன் 2005-ல் இறக்கும்வரை அறக்கட்டளையை முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு நிர்வாகம் மற்றவர்களின் கைகளுக்குப்போனது. ரத்னாகர் ஓராண்டுக்கு முன்னர்தான் அறக்கட்டளை நிர்வாகியானார். உள்ளூர் தொலைக்காட்சி கேபிள் அவர் வசம்தான் இருக்கிறது. இவர் இப்போதுள்ள ஆந்திரத் தொழில்துறை அமைச்சர் ஜே. கீதா ரெட்டியின் நண்பர்.  அறக்கட்டளையின் மற்றொரு நிர்வாகியான சக்ரவர்த்தியும் சக்திவாய்ந்தவர். அவர் சாய் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் அறக்கட்டளை செயலராகவும் இதற்கு முன்னர் பொறுப்பு வகித்திருக்கிறார். நிலைமை மோசமாகப் போனால் சத்ய சாய் அறக்கட்டளையை அரசே ஏற்றுக்கொண்டுவிடும் என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ஆந்திர அரசு மறுத்துள்ளது.  புட்டபர்த்தி என்ற எவருமே கேள்விப்படாத சிறு குக்கிராமத்தை இன்று உலக அளவில் முக்கியமான ஆன்மிகத் தலமாக மாற்றிய பெருமை பாபாவையை சேரும். புட்டபர்த்தி கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்து இன்று மிகப்பெரிய நகரங்களே பொறாமைப்படும் அளவுக்கு நவீன வசதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. அதி நவீன மருத்துவமனை, கல்வி நிலையங்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், தியான மண்டபம், விருந்தினர் இல்லம் ஆகியவற்றுடன் நவீன ரயில் நிலையம், விமான நிலையம் என்று எல்லா வசதிகளும் கொண்டுதிகழ்கிறது. ஒரு காலத்தில் புட்டபர்த்திக்கு வர வேண்டும் என்றால் பிரமுகர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் வந்து பிறகு புட்டபர்த்திக்குக் காரில் வருவார்கள். இப்போது விமானம் நேரடியாக புட்டபர்த்திக்கே வர முடிகிறது.  பாபா ஏற்படுத்திய சொத்துகள்: சென்னையில் சுந்தரம் என்ற பெயரில் அழகிய வழிபாட்டிடம், தர்ம úக்ஷத்திரம் என்ற பெயரில் மும்பையில் வழிபாட்டிடம், பெங்களூரை அடுத்த ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் பிருந்தாவனம் (அங்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை), கொடைக்கானலில் சாய் ஸ்மிருதி, கர்நாடகத்தின் சிக்கமகளூரில் கல்லூரி, ராஜஸ்தானின் ராஜ்கோட் என்ற இடத்தில் நவீன மருத்துவமனை ஆகியவை புட்டபர்த்திக்கு வெளியே உள்ளன. இவை போக 150 நாடுகளில் எண்ணிலடங்கா சொத்துகள் உள்ளன.  ஆரம்பகாலத்தில் பாபாவை அவமதித்தவர்கள் பலர். அவருடைய சித்துகளைக் குறைகூறியும் நம்பமறுத்தும் கடுமையாக நிந்தனை செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் செவிமடுக்காமல் பாபா மீது பக்தி கொண்டவர்களே அனேகம்.  பாபா வெறும் ஆன்மிக போதனைகளோடு நிறுத்தாமல் மக்களுக்காக செய்துள்ள மருத்துவ, கல்வி, சாலை, சுகாதார வசதிகளும் குடிநீர் வசதிகளும் ஈடு இணையற்றவை என்பதால் தனிச்சிறப்போடு திகழ்கிறார். எனவேதான் பாபாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி அனைவரின் நெஞ்சங்களிலும் பிறக்கிறது.

சாய்பாபா மிகவும் கவலைக்கிடம்

புட்டபர்த்தி, ஏப்.22: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை வெள்ளிக்கிழமை மிகவும் கவலைக்கிடமானது.  86 வயதாகும் சத்ய சாய்பாபா உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் காரணமாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர அரசின் மருத்துவக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிராய் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:  சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று கணித்துக் கூற முடியாத நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்தாலும் அது இயல்பான இயக்கத்துக்கு ஈடாகாது. உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு கூடுதல் ஆதரவாக இருக்கும் அவ்வளவுதான். உடல்உறுப்புக்கள் முழுமையாக செயல் இழந்தால், மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.  முன்னதாக சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாபாவின் உடல்நிலையில் வியாழக்கிழமை முதல் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கல்லீரல் முற்றிலும் செயல் இழந்துவிட்டது. செயற்கை சுவாசமே அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் உறுப்புக்களும் வழக்கம்போல செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.  மருத்துவமனை இயக்குநர் ஏ.என். சஃபயா கூறியதாவது:  பாபாவுக்கு அளிக்கும் சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்புகள் ஒத்துழைப்பது மிகவும் குறைவு. டயாலிஸிஸ் முறையிலேயே அவரது சிறுநீரகம் செயல்பட்டு வருகிறது, அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது என்றார்.  புட்டபர்த்தியில் தடை உத்தரவு தொடர்கிறது: இதற்கிடையே புட்டபர்த்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை 2-வது நாளாக கடைகள், ஹோட்டகள் மற்ற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆந்திர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கூடுதல் போலீஸ் படை புட்டபர்த்திக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் படைகள் புட்டபர்த்திக்கு விரைந்துள்ளன. புட்டபர்த்திக்கு வரும் முக்கியப்பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க அனந்தபூர் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  பக்தர்கள் கூட்டம்: அனந்தபூர் மாவட்டத்திலுள்ள 26 தாசில்தார்களையும் புட்டபர்த்திக்கு வரும்படி அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் முக்கியப் பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். ராட்சத ஜெனரேட்டர்கள், எல்சிடி திரைகள் ஆகியவை ஹைதராபாதிலிருந்து புட்டபர்த்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. பக்தர்களால் நிறைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில் முழு அமைதி நிலவுகிறது. உணர்ச்சி வசப்பட்ட சில பக்தர்கள், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பாதுகாப்பு வளையத்தை மீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.  மருத்துவமனை அருகே வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சிலரை மட்டும் நிற்க போலீஸôர் அனுமதித்தனர்.  எந்த நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பது குறித்து சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். பாபா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை மற்றும் பிரசாந்தி நிலையத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீஸôர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வள்ளியை சமாதானப்படுத்த முயற்சி: மொய்க்கும் பத்திரிக்கையாளர்கள்

ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.

ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார். இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.

எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார். "ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.
KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
2011-04-23 01:32:46 IST Report Abuse
போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் பெண்களின் கற்புக்கு உத்தரவாதம் இல்லாத இந்த நாட்டில் ,போலீஸ் துறையில் பணி புரியும் இளம் பெண்களின் கற்புக்கு அரசு உத்தரவாதம் தர முடியுமா ? எனவே போலீஸ் நிலையத்திலோ அல்லது காவல்துறை மகளிரோ கற்புக்கு களங்கம் ஏற்படின் ,அதற்க்கு காரணமான காவல் துறை அதிகாரிகளிடமிருந்து ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து ,பாதிக்கப்பட்ட மகளிர்க்கு வழங்கவேண்டும்

போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை

கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார்.


இந்த சம்பவம் கோவையில் நடந்தது.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது.

தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த விவரம்:

பல் சிகிச்சைக்கான பரிசோதனை ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நடராஜனுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது செல்போனில் ஒரு போன் வந்தது. எதிர்முனையில் பெண் பேசினார். அது ராங் கால் என்று தெரிந்து அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசியுள்ளார் நடராஜன். இருவரும் தங்களது பேச்சை தொடர்ந்தனர்.

இவ்வாறு தொடங்கிய பேச்சு தினமும் தொடர ஆரம்பித்தது. தினமும் மணிக்கணக்கில் பேசி நேரில் பார்க்காமலேயே காதலை வளர்த்துள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து ஒரு இடத்தில் சந்தித்தனர். அப்போது நடராஜனை அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போக, அந்தப் பெண் அழகாக இல்லாததால் நடராஜனுக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து அந்த பெண்ணிடம் பேசுவதை நடராஜன் தவிர்த்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து பேச முயலவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவத்தன்று அவர் அலுவலகத்தில் நண்பர்களுடன் இரவு பத்தரை மணி வரை பேசிக் கொண்டு இருந்த நடராஜன் தனது வீட்டின் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அந்த வழியே வந்த ரயில் ஏறி இறந்துள்ளார்.

நடராஜனின் நண்பர்கள் வட்டாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் நடராஜனின் டைரியை போலீசார் கைப்பற்றினர். அதில், `நான் காதல் விவகாரத்தில் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன். நான் இறந்ததை என்னை காதலித்த பெண்ணுக்கும் தெரிவிக்க வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.
English summary
A 24 year old youth commits suicide in Coimbatore, after meeting his lover. The reason: She is not looking good.

புலம் பெயர்ந்தவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா – அமெரிக்க சஞ்சிகை தகவல்!

உலகில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா என்றும் அதே சமயம் நெதர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவு நட்புடைய நாடுகள் என்றும் போபஸ் என்ற பிரபல அமெரிக்க சஞ்சிகையின் சமீபத்திய இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவானது கனடா, பேர்முடா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பதாக எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு தெரிவித்திருப்பதாக இந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மக்களுடன் நட்பாகி, மொழியைக் கற்று புதிய கலாசாரத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த நான்கு நாடுகள் மிகவும் இலகுவாகவுள்ளன என்று குறிப்பிட்டள்ள இந்த அறிக்கையில் இந்தியா எந்த இடத்திலிருக்கின்றது என்று குறிப்பிடப்படவில்லை.

வெளிநாடு சென்றோரின் காணிகள் போலி உறுதி முடித்து விற்பனை!

யுத்த காலத்தில் வெளிநாடுகளில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக குடி பெயர்ந்து சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளுக்குப் போலி உறுதிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அந்தக் காணிகளை விற்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகத் தகவல் கிடைத்து வருவதாக மாகாண காணி நிர்வாகத்திணைக்களம் தெரிவிக்கின்றது.

இது சம்பந்தமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து பெருமளவு தகவல்கள் கிடைப்பதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திலும் இது குறித்த தகவல்கள் கிட்டுவதாகவும் மாகாண காணி ஆணையாளர் டீ.சி.அனுரதர்மதாச தெரிவித்துள்ளார்.இவ்விதம் போலி உறுதிகளைத் தயாரித்து அந்தக் காணிகளை விற்கும் செயற்பாட்டுக்கு சில சட்டத்தரணிகளும் ஒரு சில அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் கடனட்டை மோசடி: இரு இலங்கைத் தமிழர் கைது

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை களவாடி குறித்த இரு இலங்கையர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆந்திராவின் மங்களகிரி பிரதேசத்தில் வைத்தே கடனட்டை மோசடி சம்பவம் தொடர்பில் இலங்கையர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ்நாட்டின் வசித்து வருபவர்களாவர். ஹைதராபாத்தைச் சோ்ந்த நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை தொழில்நுட்பம் ஊடாக களவாடி அதனைக் கொண்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 160000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்களான அந்தோனிப்பிள்ளை நிமல்ராஜ், கனிட்சன் டினோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றையவர்களின் கடனட்டை தகவல்களைக் களவாடும் தொழிநுட்ப முறையை இவர்களுக்கு கற்பித்த மலேசிய தமிழர் ஒருவரை கைது செய்யவும் ஆந்திர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தாயின் கள்ளக்காதலனைக் குத்திக் கொன்ற தனயன்! பூனகரி

தாயின் கள்ளக்காதலனைக் கத்தியால் தனயனே குத்திக் கொன்ற சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பதினேழு வயதுடைய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். மகனுடன் தனிமையில் வசித்து வந்த நடுத்தர வயதுடைய தாயாருக்கும் அடுத்த வீட்டில் மனைவியின்றி மகளுடன் வசித்து வந்த தந்தைக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உறவே இந்த அனர்த்தத்தில் போய் முடிந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனது தாயாரும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் அடுத்த வீட்டில் இருந்த வேளை, அங்கு சென்ற மகன் காதலன் மீது சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அவரது தாயாரும் காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடலின் பின்பகத்திலும் முதுகிலும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதனால், பொன்னம்பலம் விஜயரத்தினம் என்ற அடுத்த வீட்டுக்காரர் உயிரிழந்துள்ளார். அவரைக் குத்திக் கொன்ற இளைஞனை கிளிநொச்சி நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு பூனகரி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடி

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடித் தமிழன் தனது சக
இனத்தவனிடம் காட்டிய சாதிய ஒடுக்கு முறையின் வடிவங்கள்
சாதி அமைப்பு இன்றும் மிக இறுக்கமாக இருக்கும் இலங்கையின் வட பகுதியில் – குறிப்பாக
யாழ்ப்பாண மாவட்டத்தில், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை மிகக் கடுமையான
சாதி ஒடுக்குமுறைக் கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.
இன்றைய தமிழ் இளம் சந்ததியினர் அவற்றை அறிந்து கொள்ளுமுகமாக அவற்றில்
முக்கியமான சிலவற்றைத் தருகின்றோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட விடயங்கள்.
1. மேலங்கி அணியக்கூடாது.
2. கணுக்கால் வரைக்குத் துண்டு (வேட்டி) கட்டக்கூடாது.
3. தோளில் துண்டு (சால்வை) போடக்கூடாது.
4. பெண்கள் மேற்சட்டை மற்றும் தாவணி போடக்கூடாது.
5. வீதிகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக்கூடாது. சிலவற்றில் ஒருபோதும்
நடமாடக்கூடாது. நடமாடக்கூடிய இடங்களில் தமது வருகையை உணர்த்தும் வகையிலும்,
அவர்களது பாதடிகள் பட்ட இடத்தின் “துடக்கை” அழிக்கும் வகையிலும், பனையின்
காவோலையை இழுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் செல்லும் போது
உயர்சமூகத்தவர்கள் யாராவது அவ்வழியால் வந்தால், வீதியோரம் ஒதுங்கி மறுபக்கம்
பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்.
6. உயர் சமூகத்தினர் அமைப்பது போன்ற மாதிரிகளில் குடிசைகள் அமைக்கக்கூடாது.
7. நகை அணியக்கூடாது.
8. திருமணத்தில் தாலி கட்டக்கூடாது.
9. விசேட சடங்குகளின் போது, பந்தல்களுக்கு வெள்ளை கட்டக்கூடாது.
10. உயர்சாதியினரின் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு வைக்கக்கூடாது.
11. இறந்தவர்களின் உடல்களை எரிக்காது புதைக்க வேண்டும். உயர்சமூகத்தினரின்
மயானங்களுக்குள் பிரவேசிக்கக்கூடாது.
12. நன்மை – தீமைக் காரியங்களின் போது வாத்தியங்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.
13. குடை பிடிக்கக்கூடாது.
14. பாதணிகள் அணியக்கூடாது.
15. கல்வி கற்கக்கூடாது. பின்னைய காலங்களில் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட
பிள்ளைகள் அனுமதிக்கப்பட்ட போதும், இருக்கைகளில் உயர் சமூகத்தினரின்
பிள்ளைகளுடன் சமமாக அமராது, நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டும்.
16. உயர்சாதியினரின் கோவில்களுக்குள் போகவோ, அவர்கள் வணங்கும் தெய்வங்களைத்
தமது கோவில்களில் பிரதிஸ்டை செய்யவோ கூடாது.
17. கோவிலில் தேங்காய் அடிக்கக்கூடாது.
18. தேநீர்க்கடைகளுக்குள் போகக்கூடாது.
19. பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளக்கூடாது.
20. உயர் சமூகத்தினரின் சவர மற்றும் சலவைத் தொழிலாளிகளிடம் சேவை பெறக்கூடாது.
21. சைக்கிள், கார் போன்றவற்றில் பிரயாணம் செய்யவோ அவற்றைச் செலுத்தவோ கூடாது.
22. பஸ் வண்டிகளில் உயர் சமூகத்தினருடன் சமமாக அமராமல் ஒதுக்கமாக நின்று அல்லது
கீழே குந்தி இருந்து கொண்டோதான் பயணிக்க வேண்டும்.
இவை மட்டுமின்றி இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. வட
பகுதி மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியினர் ‘பஞ்சமர்’ எனப்படும் தாழ்த்தப்பட்ட
மக்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: வானவி

Sai Baba remains critical, succession war hots up

As Puttaparthi continues to be on tensed over the deteriorating health of Sathya Sai Baba, the names of his caregiver, Satyajit and his nephew R J Ratnakar are emerging as possible persons who may have a bigger say in the Satya Sai Baba Central Trust, reports Vicky Nanjappa.
Even as Satya Sai Baba continues to be very critical, the succession war at Puttaparthi to control the Rs 40,000 crore Satya Sai Baba Central Trust has already begun. The names doing the rounds to head the trust are that of Sai Baba's personal caregiver 33-year-old Satyajit, who has been serving in the ashram since the age of five, and his nephew Ratnakar.
Although the members of the trust wanted greater control in the affairs of the ashram and the trust, it is unlikely that there may be any opposition to Satyajit. This is largely due to the fact that a year ago Sai Baba had indicated that his caregiver should assume a bigger role.
33-year-old Satyajit, who completed his education from institutions run by trust, later went on to pursue an MBA Satya Sai Institute of Higher Learning only to emerge as the topper. Soon after, he promised to serve at the ashram for his entire life.
During his stay at the ashram, Satyajit gained Sai Baba's confidence and gradually rose to becoming his personal caregiver in 2002. Satyajit enjoys a very powerful position in the trust. In addition to this, he also shares a good rapport with Chakravarthi and R Srinivasan -- two key members of the central trust at Puttaparthi.
Sai Baba's nephew Ratnakar, 39, is also emerging as a favourite to head the trust. For years, members of the family have tried to make a position for themselves at the trust, but Sai Baba has always kept them at bay. The only family member who was part of the trust was Baba's brother and Ratnakar's father Janakiram. However, even during Janakiram's tenure at the trust he faced problems with the trustees.
The devotees had, however, vouched for Janakiram and said that he encouraged Sai Baba to interact with the poor while the rest of the trust isolated them. However, the trustees alleged that Janakiram was only furthering a political career since he happened to be the vice president of the Ananthpur Congress Committee.
However, the new possible entrants into the trust -- Ratnakar and Satyajit -- have had no political affiliations and are extremely close to the godman.  

The tussle for the control over the trust has always been a sensitive issue in Puttaparthi. The trustees had always refused to relinquish control to the members of the family. However, there was extreme pressure from the devotees of Sai Baba who always wanted a greater role for his kin. And if devotees have a say in the matter, then Ratnakar who controls the cable TV transmission in Puttaparthi and is a dealer of a Hindustan Petroleum petrol pump could emerge as the head.
Both members of the family, representatives of the Andhra Pradesh government and the members of the trust are engaged in talks on succession. During their meetings, it was decided that transition should be smooth and they agreed that agreed not to air any adverse comment against one another and maintain public decorum.
Meanwhile, the Sai Baba's medical condition continues to remain critical. Doctors are working round the clock hoping his health shows improvement.   

விக்கி லீக்ஸின்' மறுபக்கம்: இன்று டிஸ்கவரி சேனலில் வெளியீடு

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் இணையதளம் தொடர்பான ஆவணப் படம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) வெளியாகிறது.  விக்கி லீக்ஸ் நிறுவனத்தில் பணி புரிவோரிடையே நிலவும் மனக் கச ப்பு, சச்சரவு உள்ளிட்டவை அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன.  பெரும்பாலான உலக நாடுகள் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் பற்றிய ஆவணப்படத்தை டிஸ்கவரி சேனல் வெளியிடுகிறது. ஏப்ரல் 22-ம் தேதியும் அதன் மறு ஒளிபரப்பு ஏப்ரல் 24-ம் தேதியும் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை புலனாய்வு பத்திரிகையாளர் பால்மொரைரா மற்றும் பிரான்ஸ் பிரஸ் ஏஜென்ஸியைச் சேர்ந்த லக் ஹெர்மான் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  உலகம் முழுவதும் கதாநாயகர்களாகக் கருதப்பட்ட விக்கி லீக்ஸ் நாயகர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. உண்மையிலேயே அவர்கள் மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்களா? அல்லது வெறுமனே தகவலைப் பெற்று அதை ஒளிபரப்பும் ஒரு சக ஊழியர்களாக அவர்கள் பணியாற்றுகின்றனரா என்பதை இந்தப் படம் விளக்குகிறது. இந்த ஆவணப்படத்தில் விக்கி லீக்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் டேனியல் டாம்ஷிட்-பெர்க்கின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செய்திகளை ஊடுருவி பெற்று அதை வெளியிடும் அதே நேரத்தில் இந்த சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கில் அதைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.  விக்கி லீக்ஸ் குறித்த அபிப்ராயம், அதன் பலம், பலவீனம், அது எதிர்கொள்ளும் சவால்கள், நிதி பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் ஆராயப்பட்டுள்ளன.  இந்த ஆவணப் படத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பேசுகையில், இராக்கில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள், புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியீட்டுக்கு அடிப்படை ஆதாரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.  மிகவும் ரகசியம் என கருதப்பட்ட இடங்களில் இருந்து கூட தகவல்களைப் பெற்று வெளியிட்டதன் மூலம் பல்வேறு விரோதிகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்பாக ஆயிரக்கணக்கான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் தகவல் அளித்தவர்கள் பற்றிய ரகசியத்தை தொடர்ந்து இந்நிறுவனம் காப்பாற்றி வருகிறது.  விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லே மோன்டே செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன. கிடைத்த ஆவணங்களிலிருந்து உண்மை தகவல்களை வெளியிட்ட விதம் குறித்து இந்த நிறுவனங்களின் செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.  புலனாய்வு தகவல்களை வெளியிட்டதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே கதாநாயகனாகக் கருதப்பட்டார். ஆனால் அவர் தனது நிறுவன ஊழியர்களுடன் சுமுகமாக பழகவில்லை என்று டேனியல் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத்தான் தம்மை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது மற்றொரு புலனாய்வு இணையதளத்தை நடத்தி வரும் இவர், தாம் ஏமாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி திரட்டுவது பிரச்னையாக உள்ளதாகத் தெரிகிறது. இராக் போர் தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஏப்ரல் 22-லும் ஏப்ரல் 24-ல் மறு ஒளிபரப்பவும் டிஸ்கவரி சேனல் திட்டமிட்டுள்ளது.  புலனாய்வு இணையதளத்தின் செயல்பாடுகளை வரிசையாகக் குறிப்பிடும் இந்த ஆவணப் படத்தில் இப்போது பென்டகனின் முதலாவது எதிரியாக மாறியுள்ள ஜூலியன் அசாஞ்சே பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாஞ்சேயின் பிரத்யேக பேட்டியும், நிறுவனத்தை உயர்த்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

வடிவேலுக்கு தி.மு.க., கொடுத்த "சன்மானம்' எவ்வளவு?

தி.மு.க., கூட்டணியின், "ஸ்டார்' பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.

* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, "வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள' போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, "கண்ணுங்களா... நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது' என்று உருக்கத்தோடு பேசினார்.

* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.

* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, "ஸ்கிரிப்ட்' இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், "பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, "டிவி' மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்'என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.

* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், "போதும், போதும்' என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், "சன்மானம்' சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.

- நமது நிருபர் -

Thennavan - Chennai,இந்தியா
2011-04-22 04:10:14 IST Report Abuse
அ.தி.மு.க., நண்பர்கள் கோபத்தை பார்த்தாலே தெரிகிறது வடிவேலு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கார்னு......அவரு என்ன உள்ளதைதானே சொன்னாரு.... இவ்வளவு ஏன் ஜெயலலிதா அவர்கள் விஜயகாந்த் பற்றி சொன்னதைத்தானே சொன்னார்....சும்மாவே அரசியல்வாதிங்க யாரும் சுத்தமானவர் கிடையாது....அதிலும் விஜயகாந்த் பொது இடத்தில் தன் கட்சிகாரரை கை வைப்பதுதும், தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவது.....இதை சொன்னால் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.....ஒருவேளை விஜயகாந்த் அ.தி.மு.க.,கூட்டணி இல்லாவிட்டால் நிங்களும் சேர்ந்து வடிவேலு சொன்னதை ரசிச்சு இருப்பீங்க....விஜயகாந்த் ‌செய்த செயல்கள் பொது மக்களிடை‌யே ஒரு அவைபெயரை பெற்று தந்து இருப்பதுதான் உண்மை...இந்த உண்மை தேர்தல் முடிவு வரும்போது தெரியும்...
Pugal - covai,இந்தியா
2011-04-22 04:03:48 IST Report Abuse
ஒரு கட்சி அதன் பேச்சாளருக்கு தரும் சன்மானம் அந்த கட்சியின் இஷ்டம். அது பற்றி பேச நமக்கு என்ன உரிமையும் இல்லை; என்ன பேசவேண்டும் என்று பேசிப்பார்த்து, ஒத்திகை செய்து தயாரெடுத்து பேசினார் என்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று; "நான் தப்பு தப்பா பேசுறேனா?" என்று உளறாமல் பேசுவது நல்லது தானே! ஏன் பொறாமையில் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?? செந்தில் / சிங்கமுத்து கோஷ்டிகள் காசு வாங்காமல் பேசியிருக்கலாம் அல்லது காசு வாங்கியும் இருக்கலாம். அது அவர்கள் இஷ்டம்.வடிவேலுவின் பேச்சு பாராட்டப்படும் வகையில் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை! பாவம் பொறாமைக்காரர்களால் தாங்க முடியவில்லை. (விந்தியா என்று ஒரு நடிகை அ.தி.மு.க.,விற்கு பேசினாரே, அவரை விட குஷ்பூ சீனியர் / திறமையும் கூடுதல் புகழும் உடையவர்). விஜயகாந்த் என்ற நடிகர் பேசலாம் - வடிவேலு என்ற நடிகர் பேசக்கூடாதா? ரெண்டு பேரும் நடிகர்கள் தானே!! ஏன் வடிவேலுவிற்கு மட்டும் இப்படி ஒரு கட்டுரை?

சரியாக சொன்னீர்கள் நடராஜன்... தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, பட்டுகோட்டை அழகிரி, நாவலர் நெடுஞ்செழியன் என்று பெரியவர்களும் தன்மானமிக்க திராவிட தலைவர்களும் பேசிய தமிழக அரசியல் மேடைகளில் இன்று கற்பு முக்கியம் அல்ல என்று பேசும் குஷ்புவும் அரசியல் என்றால் என்னவென்று தெரியாத வடிவேலுவும் பேசுகிறார்கள்... அதிலும் குஷ்புவின் தமிழ் காது கொடுத்து கேட்க முடியவில்லை... அவ்வளவு பிழை... திமுக வின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து பொய் விட்டது... இதற்கு பேசாமல் முக கட்சியை கலைத்து விடலாம்.

வசூலில் 'அவதாரை' மிஞ்சிய '3 டி' செக்ஸ் படம்!!

உலகம் என்னதான் வேகமாக முன்னேறினாலும், எல்லா நாடுகளிலும் மனிதர்களின் அடிப்படை பலவீனம் பணம்-செக்ஸ்தான். அதிலும் இந்த இரண்டாவது சமாச்சாரம் எங்கும் எவர்கிரீன் மேட்டர். சினிமா, எழுத்து என எதிலும் செக்ஸ்தான் பிரதானமாக விற்பனையாகிறது.


இப்போது, ஹாங்காங்கில் தயாராகி வெளிவந்துள்ள உலகின் முதல் 3 டி செக்ஸ் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.

'3 டி செக்ஸ் அண்ட் ஜென்: எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி' (3-D Sex and Zen: Extreme Ecstasy) என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த சீன மொழிப் படம், முழுக்க முழுக்க உடலுறவு மற்றும் செக்ஸ் காமெடிக் காட்சிகள் நிறைந்தது.

ஜப்பானை சேர்ந்த 'பலான' பட நடிகர் ஹிரோ ஹயானா, நடிகை சோரிஹரா, ஹாங்காங் நடிகை வோனிலியூ ஆகியோர் நடித்துள்ளனர். 1991-ம் ஆண் வெளியான செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சீனாவின் மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரது அந்தப்புர கூத்துகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தை சீனாவில் திரையிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் வெளியிட தடையில்லாததால், கடந்த செவ்வாயன்று செக்ஸ் அண்ட் ஜென் 3 டி படம் வெளியானது.

வெளியிட்ட முதல் காட்சியிலிருந்து படத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

ஹாங்காங்கில் முதல் நாளிலேயே ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலித்தது இந்தப் படம்.

அவதார் படம் ஒரே நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூலித்ததுதான் இதுவரை ஹாங்காங் பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக இருந்தது.

படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலை கொடுத்துள்ளது. தைவான் நாட்டிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாரத்தில் ரூ.2.5 கோடி வசூல் குவிந்துவிட்டது. படம் வெளியான தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் அலைமோதுகிறது.

சீனாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஏராளமானோர் அங்கிருந்து ஹாங்காங்குக்கு வந்து படம் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தயாராகவிருக்கிறதாம்.
English summary
The first ever erotic comedy film '3D Sex and Zen: Extreme Ecstasy' has taken the Hong Kong box office by storm, earning 17 million Hong Kong dollars (US$2.2 million) since opening on Tuesday last week. On opening day, it took in 2.78 million Hong Kong dollars, surpassing the previous first-day Hong Kong record of 2.63 million, set by Avatar.

இந்தியாவில் சந்தோஷம் கம்மி!: டென்மார்க் ரொம்ப மகிழ்ச்சி!!

மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டவர்கள் பட்டியலில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது. 124 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

124 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது. இதில் 17 சதவீத இந்தியர்கள் மட்டுமே தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் நாட்டவர்களில் 72 சதவீதத்தினர் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஸ்வீடன் மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்களில் 69 சதவீதத்தினர் இன்பமாக இருக்கின்றனர்.
59 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் குதூகலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

64 சதவீத இந்தியர்கள் போராடுவதாகவும், 19 சதவீதத்தினர் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாகிஸ்தானியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சிப் பட்டியலில் 32 சதவீதத்துடன் பாகிஸ்தான் 40-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ் (13%), சீனா(12%) 89 மற்றும் 92-வது இடங்களில் உள்ளன.
English summary
Pakistanis are found to be happier than Indians according to Global Wellbeing Survey. Only 17 percent Indians describe themselves as thriving whereas 32% Pakistanis consider themselves as thriving. Thus India and Pakistan ranked 71 and 40 in happiness. Denmark stands first in the list with 72% happy citizens

சாய்பாபா உடல்நிலை மோசமானது-புட்டபர்த்தியில் தடை உத்தரவு


புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகி்றது. இதனால் புட்டபர்த்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த நகரில் போலீசார் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 28ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகி்ன்றனர். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை மேலும் மோசமாக உள்ளது.

கடந்த வாரம் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றனர், தற்போது மேலும் மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சாய்பாபாவின் கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாய்பாபா ஜீவ சமாதி அடைய விரும்புவதாக வதந்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தியைக் கேட்ட பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்தனர். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள், வதந்திகள் பரவியதால் நேற்று புட்டபர்த்தி மற்றும் அதன் அருகில் இருக்கும் தர்மாவரம், இந்துப்பூர், அனந்தப்பூர் நகரங்களிலும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து இந்த நகரங்களில் கூடுதல் தடுப்புகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புட்டபர்த்தியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அருகில் கடப்பா மாவட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சாய்பாபாவுக்கு பிறகு சத்யசாய் அறக்கட்டளையின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் யார் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளையை ஆந்திர அரசு கையகப்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பிரசாந்தி நிலையத்தில் இருந்து விலை மதிப்பற்ற பொருட்களை அறக்கட்டளை நிர்வாகிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியானதால் பக்தர்கள் கொந்தளித்துவிட்டனர்.

ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அனந்தபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சானவாஸ் கியூசிம் கூறினார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் சாய்பாபாவுக்கு மின் பிசியோதெரபிக் சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் யோக்யா ராமன் தலைமையில் சிறப்பு நிபுணர்கள் நேற்று புட்டபர்த்தி வந்தனர். அவர்கள் இன்று சாய்பாபாவுக்கு புதிய சிகிச்சையை தொடங்கி உள்ளனர்.

சாய்பாபாவின் உடல்நிலை பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சாய்பாபா அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் அபகரிக்க முயல்வதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் இன்று சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களின் நடக்கிறது. இதில் சாய்பாபா உடல்நிலை குறித்தும், அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு:
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் அவரது பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையின் கால்களிலிருந்து நேற்று எண்ணெய் போன்ற திரவம் வடிந்துள்ளது. உடனே ரஹீமின் மனைவி அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இந்த தகவல் காட்டுத் தீ போல அருகில் உள்ள ஊர்களுக்கம் பரவ அங்குள்ள மக்களும் பக்தி பரவசத்தோடு சாய்பாபா சிலையை பார்த்து வணங்கி சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் ரஹீம் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இது குறித்து ரஹீம் செய்தியாள்களிடம் கூறியதாவது, கடந்த நவம்பர் மாதம் எனது கனவில் சாய்பாபா வந்தார். அப்போது அவர் தனது சிலையை வழிபடச் சொன்னார். அதன்படி நான் தினமும் அவரது சிலையை வணங்கி வருகின்றேன். அதனால் தான் சாய்பாபா சிலையில் இது போன்ற அதிசயம் நடந்துள்ளது. சாய்பாபா சிலையில் வந்த எண்ணெய்யை முகர்ந்து பார்த்தபோது அதில் நறுமணம் இருந்தது. இது சாய்பாபா விரைவில் குணமாகி வருவார் என்பதன் அறிகுறியே என்றார்.

104 தொகுதிகளில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்த பெண்கள்-மகிழ்ச்சியில் திமுக

தமிழகத்தில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் ஆண்களை விட அதிக பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் தேர்தல் முடிவு தங்களுக்கு சாதமாக இருக்கும் என திமுக நம்பிக் கொண்டுள்ளது.


தமிழகத்தில் இம்முறை வரலாறு காணாத வகையில் 77.8 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து மாவட்டங்களிலும் சராசரி ஓட்டுப்பதிவு 70 சதவீதத்தைத் தாண்டியது.

மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் உள்ள 104 தொகுதிகளில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதில் 43 தொகுதிகள் தென் மாவட்ட தொகுதிகளாகும்.

ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்ட தொகுதிகளில் தான் அதிக அளவில் ஆண்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த 104 தொகுதிகளில் சராசரியாக ஆண்களை விட பெண்கள் 3,500 பேர் வாக்களித்துள்ளனர். சில தொகுதிகளில் 100 ஓட்டுகள் முதல் அதிகபட்சமாக 12,475 ஓட்டுகள் வரை பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் உள்பட அந்தத் தொகுதியை உள்ளடக்கிய திருவாரூர் மாவட்டம் முழுவதுமே மிக அதிகமான பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளிலும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி தொகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.

25 மாவட்டங்களில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டிருப்பதன் மூலம், இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட சலுகைகள்-உதவிகள், இலவச டிவி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, கைம்பெண்களுக்கு உதவித் தொகை, குடிசை வீடுகளை மாற்றி காங்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களே பெண்களை அதிகளவில் வாக்களிக்க வைத்துள்ளதாக திமுக கருதுகிறது. இதனால் பெண்கள் அதிமாக ஓட்டு போட்ட தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக திமுக கருதுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இங்கு ஆண்கள் 89,916 பேரும் பெண்கள் 88,951 பேரும் வாக்களித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் 88,633 பேரும், ஆண்கள் 83,292 பேரும் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் தான் மிக மிக அதிகபட்சமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். இங்கு ஆண்களை விட 19,000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
English summary
Women voters outnumbered men in 104 Assembly constituencies across 25 districts in the Wednesday's elections. Forty-three of these constituencies are in the southern districts like Madurai, Virudhunagar, Dindigul, Theni, Ramanathapuram, Sivaganga, Tirunelveli, Tuticorin and Kanyakumari.

பகவான் சத்தியசாயிபாபா ஜீவசமாதி என்று பரவிய வதந்தியால் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி படையெடுப்பு!

புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள். பெருமளவிலான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர்.

பகவானின் உண்மை நிலையை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீ சத்திய சாயி பாபா ஆன்மிக குருவாகத் திகழும் இவர் பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். புட்டபர்த்தி என்ற வரண்ட குக்கிராமத்தை இன்று உலகம் முழுவதும் தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாயிபாபாவிற்கே உரியது. சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாயிபாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது.
அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார். சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார். இந்த நிலையில் சாயிபாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
சாயிபாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம் தான் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாயிபாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சாயிபாபா ஜீவசமாதி அடையப் போவதாக தகவல் பரவியது.
சாயிசேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாயிபாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும் இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
ஆனால், இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாயிபாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து வேறுபாடு இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாயிபாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ் பொலிஸார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மேலும் சில இளைஞர் யுவதிகளை இலங்கை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான நேர்முகப் பரீட்சைகள் வன்னியில் நடைபெற்றன. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த நேர்முகப் பரீட்சைககள் இடம்பெற்றாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர், யுவதிகளில் தகுதியுடையவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழ் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சட்ட ஒழுங்குகளை பேணுவதற்காகவும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் காப்பற்றப்பட்ட மீனவர்கள்

யாழ். வல்வெட்டித்துறை வடக்கு ஆதிகோவிலடியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு பின்பு யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்படையினரால் காப்பற்றப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். ஏமிலியாம் பிள்ளை தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தொழிலுக்குச் சென்ற இவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கரை திரும்ப வேண்டிய நிலையில் நேற்று முன்தினம் பகல் வரை இவர்கள் கரை திரும்பவில்லை. இயற்கை சீற்றம் காரணமாக இவர்களது படகு திசை தெரியாமல் தடுமாறியதாகவும், இவர்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றி மருத்துவ உதவிகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட மீனவர்களான பாபு பிரபாகரன் மற்றும் பாபு சசிகரன் ஆகிய இரு கடற்தொழிலாளர்கள் நேற்று மாலை யாழ். ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் உதவியுடன் இக் கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காப்பாற்றப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.ஏமிலியாம் பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவுகள்

மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு.

யாழ்.தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்லஉறவுடனேயே வாழ்ந்து வருகிறோம்
- ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பெருமிதம்
வடபகுதியின் கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகளினால் பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் படிப்படியாக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருப்பதும் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.
முஸ்லிம் மக்கள் பலர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது ஏராளமான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டதால், பழுதடைந்த நிலையிலிருந்த பள்ளிவாசல்களும், முஸ்லிம் பாடசாலைகளும் திருத்தம் செய்யப்பட்டு, மீளவும் இயங்க ஆரம்பித்திருப்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான முஸ்லிம் பாடசாலையாக திகழ்வதுதான் ஒஸ்மானியாக் கல்லூரி. இதன் அதிபராகக் கடமையாற்றும் எம். எஸ். ஏ. எம். முபாரக் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். பெரியகடை ஜும்ஆ பஸ்ஜித் பள்ளிவாசலின் பிரதம இமாம் பதவியையும் இவர் வகித்து வருகிறார். யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தகப்பனார் யாழ். மஸ்றஉத்தீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர்.
இவரை சந்தித்த போது ஒஸ்மானிய கல்லூரி பற்றியும், யாழ். மக்களுடனான தனது நட்புறவு பற்றியும் சிறப்பாக எடுத்துச் சொன்னார். ‘யாழ். ஒஸ்மானியா கல்லூரி 1963 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. 1200 முஸ்லிம் மாணவர்களுடனும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இக்கல்லூரியில் தரம் ஆறு முதல் க. பொ. த. உயர்தரம் வரையில் அமைந்திருந்தது. அன்றைய கால துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளினால் 1990 அக்டோபர் 30ஆம் திகதியுடன் மூடப்பட்டது.
அப்போது அதிபராகக் கடமையாற்றி வந்தவர் எம். ஹாமீம் என்பவராகும் என்கிறார் இப்போதைய அதிபரான எம். எஸ். ஏ. எம். முபாரக்.
மீண்டும் இக்கல்லூரி இயங்க ஆரம்பித்திருப்பது பற்றி அதிபரிடம் கேட்ட போது, 2003 செப்டம்பர் 25ஆம் திகதியன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முன்பதாக 2002 ஆம் ஆண்டில் ஏ9 பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் சுயவிருப்பத்தின்பேரில் படிப்படியாக இங்கு வந்து மீளக் குடியேறத் தொடங்கினார்கள்.
கொழும்பு டி. பி. ஜாயா மகா வித்தியாலயத்தில் பகுதித் தலைவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நான், யாழ். முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபராக பதவியேற்க நேரிட்டது.
சேதமடைந்த பாடசாலை கட்டடங்களை திருத்தியமைத்தோம். அரசாங்கத்தினதும், சமூக, கல்வி சிந்தனையாளர்களினதும் நலன் விரும்பிகளினதும் உதவியுடன் கட்டடங்கள் மீளவும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, மலசலகூட வசதி, நூலகம் என்பனவும் மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
இப்போது எத்தனை மாணவர்கள், கல்வி கற்கிறார்கள், என்ற கேள்விக்கு ‘முன்பு ஆண் பிள்ளைகள் மட்டும் கல்வி கற்றுவந்த இக்கல்லூரி கடந்தகால சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது ஆண், பெண் பிள்ளைகள் பயிலும் கலவன் பாடசாலையாக இயங்கி வருகிறது.
175 ஆண் பிள்ளைகளும் 147 பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 322 மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகிறார்கள். முதலாம் தரத்திலிருந்து பதினொராம் தரம் வரையில் இங்கு இயங்கி வருகிறது. இப்போது 13 ஆசிரியர்களுடன், 4 தொண்டர் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக மாணவர்களின் தொகையும் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. இவ்வருடம் மாணவர்களின் தொகை நூறால் அதிகரித்திருப்பதையும் சிறப்பாகச் சொல்லலாம்’ என்று பதிலளித்தார் அதிபர் எம். எஸ். ஏ. எம். முபாரக்.
பாடசாலையின் வளர்ச்சிக்கு கிடைத்துவரும் பங்களிப்புப் பற்றி கூறுகையில், ‘யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலமாக்கள், சமூகக் கல்வி அபிவிருத்தி அமைப்பு, அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் நிறுவகம், மக்கள் பணிமனை, சமூக கல்வியாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரமுகர்கள் எல்லோருடைய ஆலோசனையும், வழிகாட்டலும், பங்களிப்பும் கல்லூரியின் வளர்ச்சிக்கு துணைநிற்கின்றன.
அத்துடன் வலயக் கல்வி அலுவலகம், கோட்டக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு என்பனவும் கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான இயக்கத்திற்கும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையும் குறிப்பிட வேண்டும்’ என்று நன்றி பாராட்டினார்.
ஒஸ்மானியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியன்று நடைபெற்றிருந்தது. கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ். கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகம் முதன்மை விருந்தினராகவும், யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி வ. சிவபாலன் சிறப்பு விருந்தினராகவும், பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ. எம். அப்துல் அமஸ் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததாக அதிபர் குறிப்பிடுகிறார்.
பெப்ரவரி 16ஆம் திகதியன்று கல்லூரியில் மீலாத் துன் நபி விழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வைத்திய கலாநிதி எம். ஏ. சி. எம். றம்ஸி கொழும்பிலிருந்து வருகை தந்து இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்றார் அதிபர்.
அதிபரிடம் யாழ்ப்பாண மக்களைப் பற்றியும், அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் கேட்டபோது, எனக்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் இப்போது வெளிநாடு சென்றுவிட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்ல உறவுடனேயே வாழ்ந்து வருகிறேன். இதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.
மீலாத்துன் – நபி விழாவையொட்டி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி, அரபுப் பாடல் போட்டி என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டிருந்ததுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் எம். றம்ஸியால் வழங்கப்பட்டன.
ஒஸ்மானியா கல்லூரி அதிபர் முபாரக்கின் மனைவியும், யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி பயின்ற இவர், இப்போது கொம்பனித்தெரு அல்இக்பால் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார் என்ற தகவலையும் அதிபர் சொல்லி வைத்தார்.
சந்திப்பு : அ. கனகசூரியர்
நன்றி: சூத்திரம்

பிரபாகரன் பிற்காலத்தில் மட்டும் கெட்டுப்போனவர் அல்ல.

நடேசன்
இலங்கை அரசியல்வாதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரி மற்றும் புளட் அமைப்பினர் கூட கே. பத்மநாதனை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது ஏன் என்பது புரியவில்லை..
விடுதலைப்பலிகளையும் தனி ஈழக்கோட்பாட்டையும் கருத்தியல் ரீதியாக எதிர்த்த எனக்கு, வெறுப்புக்கலந்த பார்வையுடன் கே. பி. யை எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை. இந்த எதிர்பாளர்கள் எல்லோரும்
வேறு காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது கோட்பாட்டையும் எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டவர்கள் தான். மேலும் பிரபாகரன் பிற்காலத்தில் மட்டும் கெட்டுப்போனவர் அல்ல. மற்றவரால் கெடுக்கப்பட்டு சொல்வார் சொல்லு கேட்டு அழிந்து போனவரும் அல்ல. ஒவ்வொரு தவறான விடயத்திலும் பிரபாகரனது தனி முத்திரைதான் வெளிப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் போர்புரிந்த போதும் சரி இந்தியப் பிதமர் ராஜிவ்காந்தியை கொன்ற போதும் சரி அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை சங்காரம் செய்த போதும் அவரது செயல்பாடு மன்னிக்கமுடியாதது இவையாவும் இலங்கைத் தமிழ் மக்களை பாதாளம் நோக்கி பிரபாகரன் கைப்பிடித்து கொண்டுவந்த படிகள்.
இந்த விடயங்கள் நடக்கும்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பிரபாகரனை மேதாவி என போற்றியதுடன் மேதகு என்ற பட்டமும் கொடுத்தார்கள். வன்னிக்குச் சென்று சல்யூட் அடித்தார்கள்.
இந்த நிலையில்தான் கே.பி.யும் இருந்திருக்க வேண்டும். மேலும் கேபி இலங்கையில் இருக்காதது மட்டும் அல்ல நிச்சயமாக எனக்குத் தெரிந்தவரை ஒரு கொலைச் சம்பவத்திலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கே. பி. 2003 ஆண்டில் இருந்து புலி இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டிருந்த தகவலை சகல புலம் பெயர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில் விடுதலைப்புலி இயக்கத்தில் இரத்தக்கறை குறைவாக படிந்த ஒரு மனிதனாக நான் அவரை கருதுகின்றேன்.
இதை விட இலங்கை – மலேசிய அரசாங்கத்தால் கைதியாக்கப்பட்ட ஒருவர் என்ன செய்யமுடியும்.? சயனைட்டை குடித்து இறந்து ஒரு மாவீரனாகி இருந்திருக்கலாம்! என்ன சமாதி இருக்காது. கே பி.யை . இலங்கை அரசாங்கம் சுட்டுத்தள்ளி இருக்கலாம் – அப்பொழுது அதற்காக மேற்கு நாடுகள் இலங்கை அரசை விசாரிக்கவேண்டும் என புலம் பெயர்ந்தவர்கள் ஆர்பாட்டம் செய்திருப்பார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? ஓவ்வொரு உயிரும் விலைமதிக்க முடியாதது.
இலங்கை அரசாங்கம் கருணையால் கே.பியை உயிர் வாழ வைத்திருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை உணர்வுகளுக்கு அப்பால் உயிரோடு வைத்திருப்புது அரசாங்கத்துக்கு நல்லது. அத்துடன் கே. பி.யின் அழிவுக்கு பயன்படுத்திய மூளையை ஆக்கத்துக்கு பயன்படுத்தலாம் என நினைத்து வைத்திருக்கிறது..
தத்தம் உயிருக்கு விலையதிகம் என்பது புலம் பெயர்ந்தவர்களுக்குப் புரியும் . இந்த உயிருக்காகத்தான் இவர்கள் பொய்களைச் சொல்லி மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். பலர் இலங்கைக்கு செல்லவிரும்பாமல், இன்னும் தங்களைத்தான் இலங்கை அரசாங்கம் தேடிக்கொண்டு இருக்கென்று சொல்லிச்சொல்லி தங்கள் முக்கியத்துவத்திற்கு எண்ணெய் தடவிக் கொண்டிருக்கிறர்கள். சிட்னி வானெலியில (ATBC) விழல் கதை பேசும் ஒருவர் போர்நிறுத்த காலத்தில் கிளிநொச்சியில் சர்வதேசிய விமான நிலையம் அமைந்தால்தான் போவேன் என்றார். போர் முடிந்தபின்பு இலங்கை அரசாங்கம் தன்னைத் தேடுவதாகக் கூறி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியே போகாமல் இருக்கிறார். இப்படிபட்ட பயந்த மனிதரகள் கே பி.யை விமர்சிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
விடுதலைப்புலிகளுக்கு பயந்து தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வன்னியில் ஜிஞ்சா அடித்தார்கள். இந்த நிலையில் கே.பி. மட்டும் ஏன் பிரபாகரனுடன் உடன் கட்டை ஏறி தீக்குளிக்கவேண்டும்?
தமிழ் அரசியல்வாதிகள், கே.பி. அரசியலுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவது தெரிகிறது.
வந்தால் என்ன?
கே.பி.க்கு வன்னியில் நிலம் கொடுத்தது கூட பலருக்கு உறுத்துகிறது. இந்த நிலங்கள் விடுதலைப் புலிகள் வைத்திருந்தவை. இதைவிட விடுதலைப்புலிகளில் இருந்த குடும்பங்களை கவனிக்கவே இந்த உதவிகள்தரப்படுகிறது. உதவிகள் செய்வதற்கே முன்வராத புலம் பெயரந்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கே.பி.யை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
என்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தி கொடுத்த பாவத்தில் ஒருபகுதியை கழுவுவதற்கு கே.பி. முன்வந்ததும் ஒரு நேர்மையான செயலாகவும் அதற்கு அரசாங்கத்தை சம்மதிக்க வைத்தது மிகத்திறமையான விடயமாகவும் பார்க்க முடிகிறது.
போர் நடக்கும் போது ஆயுதத்திற்கு காசு கொடுத்த புலம் பெயர்ந்த அமைப்புகளில் எத்தனைபேர் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள்? நாடுகடந்த ஈழம் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் ஆர்பாட்டம் இத்தியாதி இத்தியாதி என பணத்தை விரயமாக்கும் இவர்கள் கடந்த இரண்டுவருடத்தில் செய்தவற்றை பட்டியல் போடுவார்களா? அவுஸ்திரேலிய தமிழ்காங்கிரசின் பிரசார பீரங்கிகளாhன இரண்டு பெண்மணிகளிடம் நான் கேட்டேன் “அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவுவது முக்கியமில்லையா” – என்று. அதற்கு அவர்கள் தந்த பதில் “அரசாங்கம் தான் இந்நிலையை உருவாக்கியது. எனவே அது அரசாங்கத்தின் கடமை.” இவ்வளவுக்கும் அவர்களில் ஓருவர் மருத்துவர்
எவ்வளவு பொறுப்பற்ற பதில்!
ஒருவர் அடித்து மற்றவர் காயமடைந்தால் அடித்தவனைத் துரத்துவதை விட காயமடைந்தவனுக்கு உதவுவதே மனித விழுமியம். இதைத்தான் பொலிஸ் கூட செய்யவேண்டும்.
தமிழர்கள் தங்களை ஆள முற்பட முன்பு பல விடயங்களில் மனிதத் தன்மை பெறவேண்டும்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து இந்தியாவுக்குச் சென்ற கருணா என்ற முரளீதரனை இலங்கைக்கு கொண்டு வந்து ஸ்ரீ லங்க சுந்திர கட்சியின் பிரதித் தலைவாராக்கி மத்திரி பதவி கொடுத்தவர் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் . அதே போன்று கைதியாக பிடிக்கப்பட்ட கே. பி. க்கு மருத்துவ உதவி வழங்கி மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்த உதவி செய்ததும் அவரே. .இந்த விடயங்கள் ஒருவிதத்தில் இராஜதந்திரம் ஆக இருந்தாலும் மறுபுறத்தில் இப்படியான செயல் செய்வதற்கு பெருந்தன்மையும் வேண்டும்.. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை இப்படி நடத்திய உதாரணம் உலகில் வேறு எங்கும் காட்டமுடியுமா?
என்னைப்பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தமிழர்கள் பெறக் கூடியது ஏராளம். இருக்கிறது.
அரசியல் என்பது ஒரு செஸ் விளையாட்டு. இதில் ஓரளவுக்காவது தேர்ந்த ஒரு இலங்கைத்தமிழர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மட்டும்தான். வடமாகாணம் டொக்டர்களையும் இஞ்ஜினியர்களையும் கணக்கியலாளர்களையும் வக்கீல்களையும் மட்டுமல்ல பிரபாகரனைப்போல அசுரனையும் தந்துவிட்டு, அரசில்வாதிகளைப் பொறுத்தவரையில் மலடியாகிவிட்டது.
எனக்குத் தெரியும் இந்த கட்டுரையை படித்து விட்டு நான் ராஜபக்ஷவின் ஆதரவாளன் என சிம்பிளாக சொல்லிவிட்டு போய்விடுவார்கள் எமது கல்யாணராமன்கள்.
http://noelnadesan.wordpress.com/

101 தொகுதிகள் : பெண் வாக்காளர்கள் முன்னணி

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில் ஆண்களும், பெண்களும் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து ஓட்டு போட்டது; இளைஞர்கள் தங்கள் பங்குக்கு படையெடுத்து வந்தது; பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த மேல்தட்டு மக்களும், இந்த முறை ஓட்டுச்சாவடியில் குவிந்தது போன்ற காரணங்களால், ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், "ஜிவ்'வென எகிறியது. அதேபோல், இந்த தேர்தலில், 101 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டளித்து புதுமை படைத்துள்ளனர்.

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளை பார்த்தால், மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களை தவிர, மீதியுள்ள 25 மாவட்டங்களில், 101 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.சில தொகுதிகளில், 100 ஓட்டுகள் முதல், அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 475 ஓட்டுகள் வரை, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில், 3,000 ஓட்டுகள் முதல், 4,000 ஓட்டுகள் வரை, ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ் வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய தொகுதிகளிலும், பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர். முதல்வரின் திருவாரூர் மாவட்டத்திலும், இதே சாதனை நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் பெண்கள் ஓட்டு தான் அதிகம். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டுகளே முன்னணி இடத்தை பிடிக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில், ஏழு தொகுதிகளில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி; திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.இப்படி, 25 மாவட்டங்களில் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டிருப்பதன் மூலம், இம்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர்.

என்ன காரணம்?ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கும், குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டதற்கும், தி.மு.க., கூட்டணி தரப்பில் சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், பெண் வாக்காளர்களை, "கவனித்தது' ஆகியவை காரணமாக தான், பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டனர் என்பது அவர்களின் வாதம்.அ.தி.மு.க., கூட்டணியோ, "விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளது' என கூறுகிறது. இரு அணியும், இருவேறு கருத்துக்களை கூறினாலும், பெண் வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

ஜெ.,வுக்கு ஆண்கள் : கருணாநிதிக்கு பெண்கள் :ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, ஆண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 89 ஆயிரத்து, 916; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 951.திருவாரூர் தொகுதியில் கருணாநிதிக்கு, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 83 ஆயிரத்து, 292; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 633 ஆக பதிவாகியுள்ளது.

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ""ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,'' என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
2011-04-21 04:22:15 IST Report Abuse
இதோ பி எஸ் எல் வி ராக்கெட் சீறி பாய்ந்து நம் நாட்டில் உள்ள பட்டினி சாவை போக்க போகிறது. 2020 இல் கண்டிப்பாக வல்லரசு தான். உணவு இல்லாத ஏழைகளுக்கு வீணாக குடோன்களில் நிரம்பி வழியும் உணவை கொடுக்க இந்த அரசுக்கு மனம் இல்லை. இதே ஷேர் முதலீட்டாளர்களுக்கு பட்டினி என்றால் நம் அண்ணன் சிதம்பரம் ஓடி வந்து உதவுவார். ஏன் என்றால் அவருடைய முதலீடுகள் எல்லாம் சரிந்து விடகூடாது என்று நல்ல எண்ணம் தான் . கடைசியில் நம் திருதராஷ்டிர பிரதமர் ஆமாம் தவறு நடந்து விட்டது நான் பொறுப்பு ஏற்றுகொள்கிறேன் என்று சொல்லி எல்லார் வையும் அடித்துவிடுவார்நம் நேர்மையான பிரதமர். ஜெய் ஹிந்த்

காயமடைந்த இராணுவத்தினரை கொன்றாரா?; சன் சீ அகதி மீது விசாரணை


கடந்த கோடைகாலத்தில் எம்.வி சன் சீ கப்பலில் கனடாவுக்கு வந்த தமிழர் ஒருவர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த டசின் கணக்கான இலங்கை இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதில் ஏதாவது பங்கு வகித்தாரா என வன்கூவர் குடிவரவு ம்றும் அகதிகள் சபை ஆராய்ந்து வருகிறது. துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் தனக்கு பங்கு எதுவும் இல்லை என இவர் மறுத்துள்ளபோதிலும், இவர் தனக்கு கீழ் பணி புரிந்தவர்களை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டாரா என்னும் முக்கிய கேள்வியெழுந்துள்ளது.  இந்த குடியேற்றவாசியின்; சட்டத்தரணி, இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். சன் சீ கப்பலில் வந்தவர்களுள் யுத்தக் குற்றம் இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பேரில் இவரும் ஒருவர். இந்த குற்றச்சாட்டு உண்மையென காணப்பட்டால் இவர் நாடு கடத்தப்படுவார். குறித்த ஒரு சண்டையின் பின் ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருக்கின்ற புலிகளை முன்னே வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.  இவரது சட்டத்தரணியான பியோனோ பெக் இவரிடம் சில கேள்விகளைக் கேட்டபோது, தான் அழைப்பு விடுத்தாரே தவிர, அதை வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த காயப்பட்ட இலங்கை இராணுவத்தினரை கொல்வதற்கான கட்டளையாக கருதவில்லையென கூறினார்.(DM)

யுத்தத்தின் கடைசி நாட்களில் 600 சிவிலியன்களை புலிகள் கொன்றனர்!

முன்னாள் எம்.பி கனகரத்தினம் ஏசியன் ட்ரிபியூன் இணையத்திற்கு பேட்டி ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எஸ். கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ‘ஏசியன் டிரிபியூன்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தி தடுத்து வைத்திருந்த போது இவரும் (கனகரத்தினமும்) பொதுமக்களுடன் புதுமாத்தளத்தில் தங்கியிருந்தார். அங்கு நடந்த சம்பவங்களை ஐ.நா. செயலாளரின் நிபுணர்கள் குழு திரிபுபடுத்தி கூறியிருப்பதை மறுத்துள்ள அவர், நிபுணர் குழுவின் அறிக்கை தவறானதென்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐ. நா. செயலாளரின் பழிவாங்கும் மனப்பான்மையையே இந்த அறிக்கை சித்தரிப்பதாகவும் மேற்கு நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் மேற்கு நாட்டு தலைவர்களின் கருத்தை பிரதிபலிப்பதையே வெளிப்படுகிறது எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ள அவர் பொதுமக்களுடன் தங்கியிருந்து தான் நேரில் கண்டவற்றை முதற் தடவையாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.


வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுடன் தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் உக்கிர யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திய புலிகளினால் கட்டாக்காலி நாய்கள் போன்று ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.


உச்சக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்க உத்தரவையும் மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக முன்னாள் எம்.பி. கனகரத்தினத்திற்கு எதிராக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள், பாரதூரமான கொலைகள் பற்றிய நேரடி தகவல்களை ஐ. நா.வோ மேற்கு நாடுகளோ அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார்.


மூன்றாவது அல்லது நான்காவது நபருக்கூடாக வெளியான அறிக்கைகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புகள் மூலம் கிடைத்த முறையற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.


நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிபடக் கூற முடியுமா என அவர் ஐ. நா. நிபுணர்கள் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கிதாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளிவந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார்.


வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித் தலைவர்கள் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


முக்கிய புலி தளபதிகள் எவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதும் பிரபாகரனின் ஆயுதக் குழுவினால் சுற்றிவளைக்கப்பட்டே இருந்தனர். யாராவது புலித் தலைவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சுடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.


புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் சயனைட் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். படையினரைத் தோற்கடிக்க முடியாத நிலையில் சயனைட் வில்லைகளை கடித்து தற்கொலை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர். இதனை எவரும் மீறுவதை பிரபாகரனால் சகிக்க முடியாதிருந்தது.


நடேசனும் மற்றும் தலைவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் நம்பிக்கைத் துரோகத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்றிருக்க மாட்டார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றிருக்கக் கூடும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.


1983 ஆம் ஆண்டு தின்னவேலியில் (திருநெல்வேலி) வைத்து இராணுவ படையணி மீது நடத்திய தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்தத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, ஐயர், புலேந்திரன், சந்தோசம், செல்லக்கிளி, அப்பையா ஆகியோர் தொடர்புபட்டிருந்தனர்.


செல்லக்கிளி தனது இளைய சகோதரன் என்று கூறியுள்ள கனகரத்னம், இந்த தாக்குதலின் போது அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தையடுத்து தமது குடும்பத்தினர் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் கனகரத்தினம் கூறியுள்ளார்.


தமிழ் செல்வனே தன்னை 2004 பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர் தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதை கண்டு வியப்படைந்ததாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் தான் வன்னி மக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புதன், 20 ஏப்ரல், 2011

Rumours on Sai Baba taking 'Sajeeva Samadhi'

PUTTAPARTHI (ANANTAPUR): Even as Satya Sai Baba is battling for life, Puttaparthi is abuzz with rumours of his eventual “Sajeeva Samadhi” (burial while still being alive) and of his being in a state of coma. On Tuesday evening, a large number of devotees gathered outside Sri Satya Sai Institute of Higher Medical Sciences amidst a heavy downpour leading to mild tension in the temple town.
The speculation in every street corner is that given Baba’s divine status, the Satya Sai Trust may declare that he has entered “Sajeeva Samadhi”. Lending credence to these rumour mills, a TV channel went to town with an interview of a self-styled senior Seva Dal member who claimed that the Trust was making plans to announce the “Sajeeva Samadhi” of Baba.
Meanwhile, in a health bulletin, Dr A L Safaya, Director of Sri Satya Sai Institute of Higher Medical Sciences, said, “the health condition of Baba is stable but continues to be critical.” He termed as worrisome Baba's slow response to their treatment and said a panel of doctors were monitoring his health condition round-the-clock. “Baba is still on ventilator and doctors have decided to conduct a cycle of hemodialysis,” he said.
Rumours on Sai Baba taking 'Sajeeva Samadhi'
Government officials, deputed to Puttaparthi, however, claimed that Baba was responding to the treatment.
The latest controversy of “Sajeeva Samadhi” comes in the wake of reports of an ever widening rift between Ratnakar, son of Baba’s brother and a Trust member, and the other members of the Trust. Ratnakar is said to have the backing of Industries Minister J Geetha Reddy and former TTD chairman Audikeshavulu Naidu.
A TV channel, which is airing reports highly critical of the Trust members, is back on air in Puttaparthi in the past few days after being off air for one year. Incidentally, Ratnakar holds Cable TV rights in Puttaparthi.
Indicating that all is not well, pamphlets against the Trust members, in particular former IAS officer Chakravarthy, are also being distributed in the town.
Devotees suspect foul play
The devotees of Sri Sathya Sai Baba Devotees Association held a press conference in Bangalore on Tuesday expressing their concern over Satya Sai Baba's deteriorating health.
The 86-year-old has been undergoing treatment for multi-organ dysfunction and continues to be in a critical state. Dhananjay, the president of the association, and other members expressed their displeasure with the attitude of the Sri Sathya Sai Baba Central Trust members and the government agencies.
"On realising that he had suffered a cardiac arrest, why wasn't Baba rushed to the hospital immediately? We have written to several authorities and agencies but have not received any clarification," said Dhananjay. "Despite the media publishing several incriminating evidence against people close to Baba, why are the government agencies providing them with armed protection instead of carrying out an investigation?"
He said both the Sai Trust and the super specialty hospital authorities were maintaining complete secrecy. "Also, why all the favouritism towards Satyajit (his student)? I have heard rumours that he has showed interest in attaining a higher position in the trust. I find it hard to believe that his own family is not concerned about his health."
He said the doctors have no records of the drugs administered to Baba at the ashram before he was admitted to the hospital. "This is quite strange," he said.

சத்யா சாயி பாபாவின் உடல் நிலை பற்றிய இத்தகவல்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்தே இதன் நம்பகத்தன்மையை அறிய முடியும். எனவே தான் இதை மொழி பெயர்ப்பதில் நாம் ஈடுபடவில்லை