![]() |
ராதா மனோகர் : சென்ற வாரம் பிரான்ஸ் தலைநகரில் லாச்சப்பல் என்ற இடத்தில வைத்து ஒரு தமிழ் பெண் ( மலையக பூர்வீகம்) மீது படுமோசமான தாக்குதல் மிரட்டல் முட்டை வீச்சு இடம்பெற்றது.
தாக்குதல் நடத்தியவர்கள் எலி ஆதரவாளர்கள்!
அந்த பெண் டிக் டாக்கில் இயக்கம் பற்றி பல சுதந்திர கருத்துக்களை கொஞ்சம் காரமாகவே தொடர்ந்து முன் வைத்திருக்கிறார்.
இதுவரையில் அந்த பெண்ணின் டிக் டொக் பற்றியோ அல்லது அவரை பற்றியோ தெரியாதவர்களுக்கும் இப்போது தெரியவந்துள்ளது
ஆயிரக்கணக்கில் அவருக்கு பின் பற்றாளர்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்
இனி அவருக்கு இலட்சக் கணக்கான பின்பற்றாளர்கள் கிடைப்பார்கள்!
அந்த அளவுக்கு அவர் உலக அளவில் பிரபலமாகி விட்டார்
இப்போது கிடைத்திருக்கும் விளம்பரத்தை அந்த பெண் இனி ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன் படுத்தலாம்.
இவருக்கு கிடைத்திருக்கும் வெளிச்சம் சாதாரணமானது அல்ல.
இந்த வகையில் இவர் இந்த தாக்குதல் மூலம் கிடைத்த மன உளைச்சலை வெற்றி கொள்ளலாம்.