சனி, 14 ஏப்ரல், 2018

கர்நாடகாவில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை ? வாக்குகளை பிரிக்கும் தேவகவுடா கட்சி

கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம்?மின்னம்பலம்: இந்தியா டுடே – கார்வி நிறுவனங்கள் கர்நாடகாவில் நடத்திய கருத்துக்கணிப்பில், அம்மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மே 12ஆம் தேதியன்று கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இந்திய டுடே - கார்வி இன்சைட்ஸ் நிறுவனங்கள் சார்பில் கடந்த மாதம் தேர்தல் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று (ஏப்ரல் 13) வெளியானது.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் மூலமாக, 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆங்கிலோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரை அம்மாநில ஆளுநர் நியமிப்பார். இதனால் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க 112 உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்பது கட்டாயம். ஆனால், இதற்கு மாறான தகவல் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழு... கிளர்ச்சிகள் தொடரும் ,, கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

மத்திய அமைச்சருக்கு மறுப்பு!மின்னம்பலம்: தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிரான கிளர்ச்சிகள் தொடரும் என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
மத்திய நிதித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தென் மாநிலங்களுக்கான வரி வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 15ஆவது நிதிக்குழு தென் மாநிலங்களை வஞ்சிப்பதாகவும் தென் மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான தொடர் எதிர்ப்புணர்வைக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் காட்டிவருகிறது. 15ஆவது நிதிக் குழு தென் மாநிலங்களுக்கும் உரிய நிதிப் பகிர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என, ஏப்ரல் 10ஆம் தேதியன்று தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தை கேரளா நடத்தியது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
15ஆவது நிதிக் குழு எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி வழங்கத் திட்டம் வகுக்குமாறு நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று பிரதமர் மோடியும் விளக்கமளித்தனர்.

பிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய பாஜகவினர்!


மின்னம்பலம் :பெங்களூரு குல்பர்கா நகரில் நேற்றிரவு நடிகர் பிரகாஷ்ராஜின் காரை வழிமறித்து பாஜகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பாஜக அரசு கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கர்நாடகத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கர்நாடகத்தில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் கர்நாடகாவில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ்ராஜ், "தான் எந்த கட்சியை சாராத நிலையிலும். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வகுப்புவாதத்தை வளர்த்து வரும் மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறேன்" என்று அறிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு : பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக...

பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக:  சந்திரபாபு நாயுடுமின்னம்பலம்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு சிங்கப்பூரில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பாஜகவையும் அதிமுகவையும் ஒருசேரத் தாக்கியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு நேற்று (ஏப்ரல் 13) வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்குபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியையும் மற்றும் பாஜக தலைமையில் உள்ள அரசையும் கடுமையாகத் தாக்கினார்.
பாஜக தலைமையிலான அரசு ஆந்திராவுக்கு நன்மைகள் செய்யும் என்று நம்பியே அக்கட்சியுடன் கூட்டணி வைத்துப் புறப்பட்டதாகவும், ஆனால் பாஜக அரசு உறுதி அளித்தவாறு நடந்துகொள்ளாத நிலையில்தான் இந்த நிலைக்கு ஆந்திர அரசு வந்ததாகவும் அவர் கூறினார்.

பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக கேரளாவில் ....


வெப்துனியா: காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாஜகவிற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுல்ளனர். சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில், தேர்தலின் போது ஓட்டு கேட்க பாஜகவினர் வருவது போலவும், அப்போது, எங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறாள். எனவே, பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்கள்  யாரும் உள்ளே வரவேண்டாம்’ என்கிற வாசகம் அடங்கிய போஸ்டர்களை நெட்டிசன்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு?

வெப்துனியா: தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால்,
அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப் போட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட  மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி வந்தார்.
அந்நிலையில்தான், காவிரி நீர் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என பாரதிராஜா தலைமையிலான அமைப்பினர் சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள வாலஜா சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசாரை திருப்பி தாக்கினர்.
;அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ரஜினி, போலீசாரின் மீது வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவிற்கு ஆதரவாகவே ரஜினி பேசுகிறார். அவர் போராட்டங்களில் கலந்து கொண்டால்தான் அவருக்கு போலீசார் பற்றி தெரிய வரும். அவரின் டிவிட்டர் அதிகாரத்திற்கு ஆதரவாகவே பேசுகிறது. மக்கள் பிரச்சனைளை அவர் பேசுவதில்லை என அமீர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

BBC :காமன்வெல்த்: 10வது நாளில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்தியா... ஒரே நாளில் 7 தங்கங்கள் ..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில்,
10ஆவது நாளான இன்று இந்தியர்கள் பல பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 7 தங்கங்களை இந்தியா வென்றுள்ளது. பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மனிகா பத்ரா, சிங்கப்பூரை சேர்ந்த மென்க்யூவை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக, பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கனடாவை சேர்ந்த ஜெஸ்ஸிக்காவை வீழ்த்தி தங்கம் வென்றார் வினேஷ் போகாட். ஆண்களுக்கான மல்யுத்த பிரிவில் 125 கிலோ எடைப்பிரிவில் சுமித் மாலிக் தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.
20 வயதான நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார்.
முன்னதாக, இந்திய துத்தச்சண்டை வீரர் கவுரவ் சோலன்கி 52 கிலோ எடைப்பிரிவில் தங்கத்தை கைப்பற்றினார்.

தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணா சுரேஷ் உயிரழப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்மாலைமலர் :காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் விருதுநகரில் நேற்று காலை தீக்குளித்தார் இதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரவண சுரேஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவண சுரேசுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதைமாலைமலர் :அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை: அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் படத்துக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சாலை விபத்தில் மரணம் (கொலை?)

Gopinath Pillai, the father of Pranesh Kumar alias Javed Sheikh who was killed along with Ishrat Jahan in an alleged encounter with Gujarat police in 2004, died on Friday after sustaining injuries in a road accident in Kerala’s Alappuzha district, police said
தினமலர் :ஆழப்புலா: குஜராத் ஆமதாபாத் அருகே, 2004ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள், 'என்கவுன்டர்'
முறையில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த, நான்கு பேரும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைக் கொல்ல வந்தவர்கள் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'நடந்தது போலி என்கவுன்டர்; கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல' என, தெரியவந்தது.
கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், பிரனேஷ்குமார் என்ற ஜாவித் ஷேக், அம்ஜத் அலி, ஜிஸான் ஜோஹர் என்ற நான்கு பேர்களில் பிரனேஷ் குமாரின் தந்தை கோபிநாத் பிள்ளை, 77 நடந்தது போலி என்கவுன்டர் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் நேற்று வயலார் செர்தாலா தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரணை நடக்கிறது.

காங்கிரஸ் சசி தரூர் சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் சிக்குகிறார்

சுனந்தா புஷ்கர், மர்ம,                                                                                                                                            மரண வழக்கு, சிக்குகிறார் சசிதரூர்
தினமலர் :புதுடில்லி; சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவரும், காங். எம்.பி.யுமான சசிதரூருக்கு எதிராக டில்லி போலீசார் குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர்.2014-ம ஆண்டு டில்லி சொகுசு ஒட்டலில் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. சசிதரூருக்கு பாக். பெண் நிருபருடன் ஏற்பட்ட தொடர்பு அம்பலமானதில் ஏற்பட்ட தகராறு காரணம் என கூறப்பட்டது.
டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் அவரது ரத்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள தடயவியல்துறைக்கு டில்லி போலீசார் அனுப்பி வைத்தனர்.

காவிரி பிரச்னை தீர புது யோசனை... கேட்கத்தான் ஆளில்லை!" புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

காளிநதி, சாராவதி, சக்ராநதி, நேத்ராவதி, வாராஹி, மகாதாயி உள்ளிட்ட ஆறுகள் மூலம் சுமார் 2,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதில்,900 டி.எம்.சி-க்கு மேல் மிக எளிதாக தமிழகத்துக்குத் திருப்பிவிட முடியும்.
விவசாயம்துரை.வேம்பையன்- RAJAMURUGAN - வீ.சிவக்குமார்-  விகடன் :
வீ.சிவக்குமார்காவிரியில் நம் 'நீர் உரிமை'யை நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு! இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இன்னொருபக்கம் நீர்ப்பங்கீடு முறைக்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டு, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து பட்டை நாமம் சாத்துவதை செவ்வனே செய்து வருகிறது கர்நாடக அரசு.
இந்தச் சூழலில், ``கர்நாடக - தமிழக காவிரி பிரச்னை தீர அருமையான மாற்றுத் திட்டம் இருக்கு. தமிழகத்துக்கு 900 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடிய நவீன நீர் மேலேற்றுத் திட்டம் கைவசம் இருக்கு. ஆனால், அந்தத் திட்டம் பற்றி கர்நாடக - தமிழக முதல்வர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லியும் அதனைச் செயல்படுத்த யாரும் முன்வரவில்லை. ஒருவேளை காவிரி பிரச்னை தீர்ந்தால், டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று எடுத்து டெல்டாவைப் பாலைவனமாக்க முடியாது என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்னவோ?!" என்று நொந்து புலம்புகிறார்கள் தமிழக விவசாயச் சங்கப் பிரமுகர்கள்.

தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi.. .... சவுக்கு

savukkuonline.com: தமிழன் என்றோர் இணமுன்டு,
தனியே அவற்கொரு குணமுண்டு
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்
என்றார் நாமக்கல் கவிஞர்.
அந்த கவிஞரின் வாக்குகள் பொய்யில்லை என்பதை 12 ஏப்ரல் 2018, இந்தியாவுக்கு அல்ல.  உலகுக்கே நிரூபித்துள்ளது.
ஒருவன் அரசியல்வாதியாவதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நாசிஸ்சிஸ்ஸம்  எனப்படும் சுயமோகம் என்கிற குணம் தேவை.   தன்னை நேசிக்கும் அத்தகைய குணம் இல்லாதவனால், அரசியல் தலைவனாக முடியாது.  அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு இது இருக்கும்.  அந்த சுயமோகத்தின் அளவு ஒரு எல்லையைக் கடந்து போகையில், அது நோயாகும்.  அந்த நோயை      Narcissistic Personality Disorder என்று வைப்படுத்துகிறார்கள்.
அந்த நோய் மிகவும் முற்றிப் போனால் எப்படி இருக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கான வாழும் உதாரணம்தான் நரேந்திர மோடி.   துளியும் கூச்ச நாச்சம் இல்லாதவர்.  ஆசூயை அற்றவர்.
2013 முதல் மோடியை தொடர்ந்து பார்த்து வருபவர்களால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  எந்த நிகழ்வாக இருந்தாலும், நான், நான் நான் மட்டுமே.
ஒரு தேர்தல் நடக்கையில் வாக்குச் சாவடியில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை, தேர்தல் சின்னத்தை காட்டுவது தவறு என்பது தெளிவான விதி.   பெரிய தலைவர்கள் யாரும் இதை மீறியதாக தகவல்கள் இல்லை.
ஆனால் 2014 தேர்தலின்போது, தேசிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பதை நன்றாகவே உணர்ந்து, வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியின் வாயிலிலேயே, தாமரை சின்னத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்ட கேவலமான பிறவிதான் மோடி.

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது

தினத்தந்தி : சென்னை, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப்போகும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியதாகும். உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆண் காவலர்களை வைத்து எங்களை சோதிப்பதா?- மனவேதனையில் வலிப்பு வந்து விழுந்த பெண் உதவி இயக்குநர்

நேற்று பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட வந்த உதவி இயக்குநர்களில் பெண்
உதவி இயக்குநர்களின் உடைகளை ஆண் காவலர்களை வைத்து சோதிக்கச் சொன்னதாக மனவேதனையில் பேட்டி அளித்த பெண் உதவி இயக்குநர் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மோடியின் சென்னை வருகையைக் கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், திரைத்துறையினர் என பலதரப்பட்டவர்களும் கருப்பு உடை அணிந்து தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

BBC: ஆசிஃபா கொலை: காஷ்மீரில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா.. காஷ்மிரி பண்டிட்டுகளால் பாலியல் ...


எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு
கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னதாக, இச்சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோதி, நாகரீகமான சமூகத்தில் இது போன்ற செயல்கள் வெட்கக்கேடான ஒன்று எனக் கூறினார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், பா.ஜ.கவுக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.e>தில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், ஆசிஃபா கொலைக் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என தாம் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். > இது போன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது எனவும் அவர் கூறினார். நம் சமூகத்தில் உள்ள தீமைகளை ஒழிக்க நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார் பிரதமர் மோதி. > நடந்தது என்ன? எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதிலும் கடும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

மீண்டும் லாட்டரி .. எடப்பாடி பன்னீர் அரசு கல்லா கட்ட முடிவு

டிஜிட்டல் திண்ணை: மீண்டும் லாட்டரி!மின்னம்பலம்: ‘சிக்கிம், அஸ்ஸாம், பூடான், ராஜஸ்தான், தமிழ்நாடு!’ என ஒரு மெசேஜ்ஜைத் தட்டியது.
‘என்ன ஏதோ அந்தக் காலத்து லாட்டரி விற்பனை செய்யும் வண்டியில் கேட்ட குரல் மாதிரி இருக்கு..?’ என்று கமெண்ட் அடித்தது ஃபேஸ்புக்.
வாட்ஸ் அப்பில் அடுத்த மெசேஜ் தடதடத்தது. “சொல்றேன். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக துணை முதல்வரைச் சந்தித்திருக்கிறார் லாட்டரியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு நபர்.
பன்னீருடன் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த அந்த நபர், ‘தமிழ்நாட்டுல மறுபடியும் லாட்டரிச் சீட்டைக் கொண்டுவந்தால் என்ன சார்?’ என கேட்டாராம். அதற்கு பன்னீர், ‘அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என சிரித்திருக்கிறார். நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார் அந்த லாட்டரி அதிபர்.

மாணவனின் தொண்டையில் பிரம்பால் குத்திய ஆசிரியர் ... உயிருக்கு போராடும் .. மகராஷ்டிரா

tamilthehindu :  maths class session in Class II, Rohan D. Janjire apparently failed to solve a problem which enraged the teacher Chandrakant Sopan Shinde.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்ட அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவர் கணக்குப் பாடம் செய்யாத காரணத்தால் அவரின் தொண்டையில் ஆசிரியர் பிரம்பால் குத்தியுள்ளார். இதில் மாணவரின் உணவுக்குழாய், மூச்சுக் குழாயில் காயம் ஏற்பட்டு பேச்சிழந்து, உயிருக்குப் போராடி வருகிறார்.
அகமதுநகர் மாவட்டம், கர்ஜத் வட்டத்தில் பிம்பால்கான் கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ரோஹன் டி ஜான்ஜிரே. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று கணக்கு ஆசிரியர் சந்திரகாந்த் சோபந்த் ஷிண்டே வகுப்பில் கணக்குப் பாடம் எடுத்துள்ளார். அப்போது, வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு கணக்கை மாணவர் ரோஹன் எழுதவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் சந்திரகாந்த் சோபந்த் ஷிண்டே தான் வைத்திருந்த பிரம்பை ரோஹனின் வாய்க்குள் செலுத்தி தொண்டையில் குத்தியுள்ளார். இதனால், பிரம்பு தொண்டையின் மூச்சுக்குழல், உணவுக்குழாய் ஆகியவற்றில் பட்டு அதைக் கிழித்துள்ளது. இதனால், மாணவர் ரோஹன் வலி தாங்காமல் அலறி, ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

RSS பிரதமர்,முதல்வர்,மந்திரிகள் நிர்வாகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

ஆலஞ்சியார் : 8 வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விவகாரத்தை உலக அளவில் ஊதி பெரிதுபடுத்தினால் சுற்றுலா துறை மூலம் இந்தியாவிற்கு வரும் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மிகவும் வேதனைபடுகிறார். 
இவரைப் போன்றோர் நம்மை ஆள்கிறார்கள் என்கிற கூனிகுறுகி

வெட்கபடுகிறேன்.. இவனை அமைச்சர் என்று சொல்வதுகூட வெட்கமாக இருக்கிறது .. இவன் மகளுக்கு பேத்திக்கு நடந்திருந்தால் இதே வார்த்தையை இந்த அயோக்கியன் சொல்வானா... கடும் கோபம் வார்த்தைகளில் வருகிறது.. அடக்கவே முடியவில்லை .. இவர்கள் தாம் நாட்டின் அதிகாரமிக்க உயர்பதவிகளில் இருக்கிறார்கள் இதே நிலை இவர்களுக்கு சிறுமிக்கு வந்திருந்தால் .. ஊடகநாய்கள் இந்நேரம் கொதித்திருக்கும்.. சுவாதியாக இருந்திருந்தால்
நீதிமன்றம் ஊளையிட்டிருக்கும்.. இதே செயலை இஸ்லாமியனோ .. கிருஸ்துவனோ ஏன் பார்பனன் அல்லாத வேறாவது செய்திருந்தால் மத்திய அரசு கையாலும் விதமே வேறாகயிருக்கும்.. விவகாரத்தை உலக அளவில் ஊதி பெரிதுபடுத்தினால் சுற்றுலா துறை மூலம் இந்தியாவிற்கு வரும் வருமானம் பெரிதும் பாதிக்கப்ப

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

IPL ஐபிஎல் புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு!

Shyamsundar- Oneindia Tamil  CSK போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு புனே: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை புனே மைதானத்தில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட வேண்டிய 14 போட்டிகளில் 2 போட்டிகளை ஆடி முடித்துள்ளது. இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. Maharashtra opposes CSK match schedule in Pune due to the water crisis காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஐபிஎல் போட்டிக்கும் எதிர்ப்பு நிலவியது. 
இதனால் சென்னையில் போட்டிகளை நடந்த கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. போட்டியின் போது நிறைய பாதுகாப்பு போடப்பட்டும் செருப்பு வீசுதல் போன்ற சம்பவங்கள் நடந்தது. இதனால் மீதம் இருக்கும் 6 சென்னை போட்டிகள் கடைசியாக புனேவிற்கு மாற்றப்பட்டது. 

சீமான் கட்சியினரின் மீம்ஸ்களால்தான் வைகோ மருமகன் தீக்குளித்தார்? வைகோ கதறி அழுதார்!

tamilthehindu :தீக்குளித்த மருமகனை பார்த்து அழும் வைகோ படம் சிறப்பு ஏற்பாடு  போராட்டத்தில் ஈடுபடும் போது நான் தெரிவிக்கும் கருத்துகளையும், ஸ்டெர்லைட் ஆலையில் 3-1 பங்கை நான் வாங்கிவிட்டதாக சீமான் ஆட்கள் போட்ட மீம்ஸைப் பார்த்து என்னிடம் மருமகன் வருத்தப்பட்டார் என்று வைகோ பேட்டி அளித்தார்.
அரசியல் போராட்டங்களில் தொண்டர்கள் தீக்குளித்தது இதுவரை நடந்துள்ள நிலையில் முதன்முறையாக அரசியல் தலைவரின் உறவினரே தீக்குளித்த சம்பவம் இன்று நடந்தது. வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்தார். அவரைப் பார்த்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கதறி அழுதார்.
பின்னர் தன்னைத் தேற்றிக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''30-ம் தேதி மாலையில் வந்து சரவண சுரேஷ் என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டார். நீங்கள் இன்று வந்த தகவலை பார்க்கவில்லையா என்று கேட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் என் மகன் வையாபுரி பேரில் மூன்றில் 1 பங்கு வாங்கிட்டேன், இப்போது ஸ்டெர்லைட்டுக்கு டீல் போட போகிறேன் என்று சீமான் ஆட்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.

ஆசிபா (8) வழக்கு: எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

மின்னம்பலம்: கத்துவா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயன்றபோது தடுத்த
வழக்கறிஞர்களுக்கு எதிராக சூ மோட்டோ வழக்கு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு இந்த விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு அதிகாரி, காவல் துறை அதிகாரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்களன்று கைதான 8 பேர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கத்துவா நீதிமன்றத்துக்கு குற்றவியல் துறையினர் சென்றனர். அப்போது, பாஜக ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளை நீதிமன்றத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.
காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாடகர் கோவன் கைது .. எடப்பாடிக்கும் மோடிக்கும் எதிராக பாட்டு பாடினார்

Gajalakshmi - Oneindia Tamil திருச்சி: திருச்சியில் இன்று அதரிடியாக கைது செய்யப்பட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவனுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்து விடுவித்தது.
 மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பாடல் வடிவில் மக்கள் மத்தியில் வீதிகளில் இறங்கி பாடி வருபவர் இவர் பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி போலீசார் கோவனை கைது செய்தனர். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட கோவன் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடல் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 
மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து இதனை கோவன் செய்து வருகிறார். விஷ்வஇந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் பாடல் பாடியுள்ளார். பிரதமர், முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகக் கூறி கோவனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்தார் ... 90 வீதம் தீக்காயம் மதுரை மருத்துவமனையில்

வைகோ உறவினர் தீக்குளிப்புவிகடன் செ.சல்மான்< ஆர்.எம்.முத்துராஜ்:
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர், இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார் உடனே, அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து, அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்துள்ள அவரைக் காப்பாற்ற மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுவருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தீக் குளித்ததாகச் சொல்லப்படுகிறது. வேறு ஏதும் காரணமா என்பது பற்றி காவல்துறை விசாரித்துவருகிறது.
வைகோ-வின் மனைவி ரேணுகா தேவியின் உடன் பிறந்த சகோதரர் ராமானுஜத்தின் மகன்தான், சரவண சுரேஷ்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ராமனுஜம், குடும்பத்துடன் விருதுநகர்  ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்துவருகிறார். வைகோ, அவ்வப்போது இங்கு வந்துசென்றிருக்கிறார். காவிரிப் பிரச்னையால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலையில் உள்ளதால், மத்திய அரசுக்கு எதிராக வைகோ கடுமையாகப் பேசிவரும் நிலையில், சமீபத்தில் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார். இந்த நிலையில், வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BBC :மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் ..இருப்பதையும் இழக்கும் தென்மாநிலங்கள்: வளர்ச்சிக்கு கிடைத்த தண்டனையா?


மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கு ஊக்கமளிப்பது குறித்து 'பரிசீலிக்குமாறு' மத்திய அரசு 15வது நிதிக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஏப்ரல் 12 அன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அன்று தமிழகத்தில் ஒரு ராணுவக் கண்காட்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோதியும் அதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
;இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280-ன்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே வரி வருவாய் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்க நிதிக்குழு ஒன்று கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.
ஒரு நிதிக்குழுவின் பரிந்துரை ஐந்து நிதியாண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதுவரை 15 நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அமலில் இருப்பது 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகள்.
 வரும் 2020-21ஆம் நிதியாண்டு முதல் 2024-25 வரையிலான காலத்துக்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க 15வது நிதிக்குழு அமைப்பதற்கான குடியரசுத் தலைவரின் ஆணை, 2017ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

17 மாணவர்களுக்கு சிறை,, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய திருச்சி ..

gh
நக்கீரன் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
கோரி தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் எதிர்கட்சிகள் முதல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் எல்லோரும் போராட்டம், முற்றுகை பொதுகூட்டம் என நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜல்லிகட்டு போரட்டத்திற்கு வரலாறு காணாத வகையில் கூடிய திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதியில் கூடியதுடன், சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். நிமிடத்துக்கு நிமிடம் மாணவர்கள், அந்த வழியே செல்லும் பொதுமக்கள் எல்லாம் அப்படியே போராட்டத்தில் கலந்து கொண்டதால் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவர்களை தடியடி நடத்த முடிவு செய்தனர்.

உபி பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ

உத்தர பிரதேசம், குல்தீப் சிங் சென்கர் , உன்னாவ் பலாத்கார வழக்கு, எம்எல்ஏ குல்தீப் சிங் ,பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் ,  உன்னாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்,  Unnao rape case, MLA Kuldeep Singh, Bharatiya Janata MLA Kuldeep Singh, Uttar Pradesh, Kuldeep Singh Sengar, Unnao Magistrates Court,தினமலர் :லக்னோ: உ.பி.,யில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தர பிரதேசத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, 18 வயது இளம் பெண், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாக கூறி, முதல்வர் வீடு முன் தீக்குளிக்க முயன்றார். இந்த வழக்கு தொடர்பாக, எம்.எல்.ஏ.,வின் சகோதரர், போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறப்பு விசாரணை குழுவினர், இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங்குக்கு எதிராக, போலீசார் நேற்று, வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது தேர்தலுக்காக அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காகவே ...

தேர்தலுக்காக அல்ல; மக்களுக்காக இணைந்துள்ளோம்!மின்னபலம்: ‘எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது தேர்தல் கூட்டணிக்காக அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காகவே ஒருங்கிணைந்துள்ளோம்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முன்னெடுத்த காவிரி உரிமை மீட்புப் பயணம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாவட்டம் முக்கொம்பில் தொடங்கியது. இரண்டாவது குழுவின் பயணம் 9ஆம் தேதி அரியலூரிலிருந்து தொடங்கியது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நடை பயணம் செய்த இரண்டு குழுக்களும் நேற்று கடலூரில் தங்களது பயணத்தை நிறைவு செய்தன.
இதைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. இதில் கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
திருமாவளவன் பேசுகையில், “தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுகிறார் பிரதமர் நரேந்திரமோடி. தமிழகத்தின் முதல் எதிரி பிரதமர் நரேந்திர மோடிதான். கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக நம்மை அவர் அடமானம் வைத்திருக்கிறார். இன்று தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க முடியாமல் ஹெலிகாப்டரில் வந்து சென்றுள்ளார் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அவர் இனி தமிழகத்தில் என்றைக்கும் காலடி எடுத்துவைக்க முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதுதான் இந்தக் கொடியவர்களின் ராமராஜ்ஜியம்!


Mathava Raj : படிக்கவே முடியாமல் பதற வைக்கிறது.
அஸிஃபா!
எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் போதெல்லாம் கடுமையான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள்.
சஞ்சிராம் என்னும் வருவாய்த்துறை அதிகாரி திட்டமிட, அவனது மகன், அவனது மருமகன், அவர்களின் நன்பனொருவன் சேர்ந்து இந்த சகிக்க முடியாத கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரியும் உடந்தை.
பின் தங்கிய அந்த முஸ்லீம் சமூகத்து மக்களை பயமுறுத்தி, அந்த நிலங்களை விட்டுத் துரத்துவதே இந்த பயங்கரத்தின் பின்னணி.
காணாமல் போன அஸிஃபா, உடலெல்லாம் சிதைக்கப்பட்டு காட்டிலிருந்து கண்டெடுக்கப்படுகிறாள். பாவப்பட்ட பெற்றோரும் அந்தப் பகுதி மக்களும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறார்ர்கள். துப்பு கிடைத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். பண்டிட்கள் பிஜேபியின் தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊர்வலம் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் பார் அசோஷியேஷனும் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.

வியாழன், 12 ஏப்ரல், 2018

காவிரி கண்ணீரில் விளம்பரம் தேடிய சிம்பு ... வஞ்சக காமடி

“அவங்ககிட்ட இருந்தா தருவாங்க சார்.
அவங்களுக்கே இல்லாதப்ப எப்படித் தர முடியும். அவங்க இடத்தில் நீங்க இருந்தா தருவீங்களா!? அவங்களே கஷ்டப்படுறாங்க, அதில் நமக்கு எப்படி!?
அதனால் அம்மா அண்ணா தம்பி நீங்க எல்லாரும் தமிழக மக்களுக்கு தண்ணீர் தர்றோம் என்பதற்கு அடையாளமா ஒரு டம்ளர் தண்ணி தாங்க”
... என படு மொக்கையான எரிச்சலூட்டும் சென்டிமென்ட் மூலம் சிலம்பரசன் வேண்டுகோள் விடுக்க...
தமிழகத்திற்கான உரிமையின் கழுத்தில் கால் வைத்து மிதித்துக்கொண்டு.... ”தமிழக எஸ்டிஆர் சிம்பு தமிழ்நாட்டுக்கும் இல்லாம, கர்நாடகத்துக்கும் இல்லாம நடுநிலையா பேசியிருக்கார்!” என அங்கே சிலர் டம்ளரில், வாட்டர் பாட்டிலில், 20 லிட்டர் வாட்டர் கேனில் தண்ணீர் தருவதாக படங்களும், காணொளிகளுமாக லைக் அள்ளி வாரிக் குவிக்கிறார்கள்.
மிஞ்சியதை கர்நாடகா வழங்க நாம் ஒன்றும் காவிரியில் பிச்சை ஏந்தவில்லை. எந்த நதியிலும் முதல் உரிமை கடைமடைக்கே. சேலம், ஈரோடு நாமக்கல் தொடங்கி பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு காவிரியே குடிநீர் ஆதாரம். உணவுக்கான உத்திரவாதமும் காவிரியே!
இந்த ஒரு டம்ளர் தண்ணி செல்ஃபி வீடியோவிற்காகவா இத்தனை காத்திருத்தல்கள். நெய்வேலியிலிருந்து போகும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மொபைல் டார்ச் அடித்து நாமும் செல்ஃபி வீடியோ போட்டு அன்பைக் காட்டிவிட்டால் அவர்கள் திருப்திப் பட்டுக்கொள்வார்களா!?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஐபிஎல் போராட்டம்: தெறிக்க விட்ட தமிழர்கள்

வெப்துனியா :சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தை ஆளுங்கட்சி என்பதால் அதிமுக தலையிடவில்லை, ஐபிஎல் அணிகளில் ஒன்றின் உரிமையாளராக இருப்பதால் திமுகவும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் சிறுசிறு கட்சிகளும் அமைப்புகளும்
திரையுலக பிரபலங்களும் இந்த பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்து சென்னையை சில மணி நேரங்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். இந்த நிலையில் ஐபிஎல் என்பது உலகின் கவனத்தை கவரும் போட்டி என்பதால் இதற்கு எதிரான போராட்டமும் உலகின் கவனத்தை பெற்றுள்ளது.
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் காவிரி பிரச்சனை குறித்து தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் இன்றைய நியூயார்க் டைம்ஸ் இதழிலும் சென்னையில் நடந்த போராட்டம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

காஷ்மீர் .. காவிகளின் காம கொடுரம் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் .. துணைபோன அதிகாரவர்க்கம்

Troll Trousers 2.0: காஷ்மீரில் முஹம்மது யூசஃப் என்பவரின் 8 வயது மகளை
கடத்தி கோயிலில் பூஜை நடத்தும் அறையில் அடைத்து வைத்து ஒரு வாரம் கற்பழித்து விட்டு, பிறகு ஒரு பாலம் அருகே கொண்டு சென்று தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார்கள் தேச பக்தர்கள்...!
காணாமல் போன அன்றே மகளை காணவில்லை என்று தகப்பனார் புகார் கொடுத்துள்ளார்,, ஆனால் காவல்துறையோ குற்றவாளிகளின் தலைவனான ராம் என்பவனிடம் ஒன்றரை லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வழக்கை கிடப்பில் போட்டு விட்டது...!
பிறகு ஒரு வாரம் கழித்து சடலத்தை மீட்ட பிறகு இந்தப் பிரச்சினை பூதாகரமாகவே வழக்கினை காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றபட்டுள்ளது,, அவர்கள் விசாரித்து குற்றவாளிகள் ராம், விஷால், காஜூரியா உட்பட 6 பேரையும் மற்றும் அவர்களிடம் லஞ்சம் வாங்கி குற்றத்தை மறைக்க முற்பட்ட 2 போலிசாரையும் கைது செய்துள்ளார்கள்...!
கொலை செய்வதற்க்கு இறுதி நிமிடங்கள் வரை கற்பழித்து சிதைத்திருக்கிறார்கள் அயோக்கிய மிருகங்கள்...!
இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் அம் மாநில வழக்கறிஞர்களே தடுத்து போராட்டம் செய்துள்ளார்கள் என்பது தான்...!

மோடி வருகை ! கறுப்பு கொடி ,, அதிர்ந்தது தமிழகம் .. உலக கவனத்தை ஈர்க்கிறது

BBC :பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப்
பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் கண்காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. அதனை முறைப்படி திறந்து வைக்கவும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் நரேந்திர மோதி இன்று சென்னை வந்தார். e>ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத காரணத்தால் பிரதமர் மோதிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.