
நடந்துசென்று ஷூட்டிங்கில் பங்கேற்றனர். இதுபற்றி இயக்குனர் அழகன் செல்வா கூறியது:பெற்றோரின் உணர்வை புரிந்துகொள்ளாமல் நண்பர்கள்தான் வாழ்க்கை என்று இருக்கும் வாலிபன் வாழ்வில் காதல் பிறக்கிறது. நட்பா, காதலா என்ற சூழல் எழும்போது அவன் எடுக்கும் முடிவுதான் கிளைமாக்ஸ். புதுமுகம் உதய் ஹீரோ. மாளவிகா வேல்ஸ் ஹீரோயின்.இதன் ஷூட்டிங் பெரும்பகுதி அகமலை, புலிக்குகை போன்ற இடங்களில் நடந்தது. ‘பிதாமகன்‘, ‘பரதேசி‘ போன்ற பாலாவின் படங்கள் ஷூட்டிங் நடந்த இடங்கள் மற்றும் அதற்கும் உயரமான இடங்களில் ஷூட்டிங் நடந்தது. இந்த இடத்துக்கு செல்ல வாகன வசதி கிடையாது. எனவே உதய், மாளவிகா வேல்ஸ், பட டெக்னீஷியன் என எல்லோருமே 10 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று ஷூட்டிங் நடத்தினோம். அக்கு அஜ்மல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். ஞானதேஸ் அம்பேத்கர், ஆர்.செல்வி தயாரிக்கின்றனர்.tamilmurasu.org