Venkat Ramanujam : பொட்டிபுரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே India-based Neutrino
Observatory (INO)அமைக்க மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே,
மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன்
இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். மரங்களை
வெட்டாமல் இதனை செய்ய முடியாது .
இந்தப் பகுதியைச் சேர்ந்த
டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம்,
திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை
சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், "இந்த ஆய்வு மையம்
அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.
குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க
கூடாது என தொடர் போரட்டம் செய்தும் மனுவும் அளித்துள்ளனர்.
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான்
நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். இங்கு இத்திட்டத்தை உள்ளூர் மக்கள்
எதிர்த்ததால் சமீபத்தில் அரசே காட்டு தீ பரப்பியதாக ஒரு சந்தேகம்
வலுபெற்றுள்ளது.
கடுமையான வெயில் காலத்தில் மலைகளின் காடுகளில்
தீப்பிடிக்கும், பொதுவாக அக்னி வெயிலில் - ஏப்ரல் இறுதி, மே மாதம். இப்போது
அதற்க்கான வெப்பநிலை ஒன்றும் இல்லை என்கிறார்கள் இந்தப் பகுதியைச்
சேர்ந்தவர்கள் .இதன் மூலம் 12 பேரை பலிகொண்ட தேனி குரங்கணி காட்டு தீ அதன்
நீட்சியே என கருத வேண்டியுள்ளது.
இந்த கட்டுரையின் நோக்கம்
நியூட்ரினோ திட்டம் சரியா தப்பா என்பதில்லை. பிரான்ஸ் இந்த சோதனை நிறுத்தி
விட்டது ஏன் என்றெல்லாம் கேக்க போவதில்லை
ஆனால் நமது வரி பணத்தில் ஓளிவு மறவின்றி செயல் பட வேண்டிய அரசாங்கம் ..
பொய் பொய்யாக சொல்லி புளுகி தள்ளி இருக்கிறது என்பதே உண்மை
தேனியில் நாங்க மலை எறும் போது காட்டுத்தீ கிடையாது ., முறையாக நபர்
ஒருவருக்கு 200 ரூ கட்டி அனுமதி பெற்றே மலை எற செய்தோம் என்கிறது chennai
trekking club (CTC)
இந்த செய்தி வெளிட்ட சில மணி நேரத்தில் 10
வருடமா செயல்பட்டு வரும் CTC நிறுவனர் , ஊழியர் வீடுகள் சோதனை கைது
அதிரடியாக சென்னை காவல்துறை செய்கிறது .