வெள்ளி, 11 நவம்பர், 2016

ஆயிரக்கணக்கான சினிமா கலைஞர்கள் பணமின்றி கண்ணீர்!

500, 1000 நோட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழ்சினிமா
படப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமாவை நம்பி பிழைப்பு நடத்திவந்த பல ஆயிரம் தொழிலாளிகள் கையில்  காசு இல்லாமல் கதறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கைகளில் பணத்தை வைத்துக் கொண்டு, செலவழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் பல்வேறு துறையினரும் தங்கள் வேலையாட்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா துறையினரையும் பாதித்துள்ளது. ஏற்கனவே தியேட்டர் பக்கம் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிறைய படப்பிடிப்புகளும் பாதித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.படப்பிடிப்பில் கலந்து கொள்ளும், தொழிலாளர்களுக்கு, தினக் கூலிதான் வழங்கப்படும். அதற்கு கண்டிப்பாக 100 ரூபாய் நோட்டுகள் வேண்டும். மேலும், செலவுகளை சமாளிக்க பணம் வேண்டும். ஆனால், இருப்பதோ செல்லாத 500 மற்றும் 1000 நோட்டுகள்தான்.
எனவே பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், நாளை வெளியாகவிருந்த பல புதிய படங்களை, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறது தென்னிந்திய சினிமா உலகம்.முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: