சனி, 28 மே, 2022

அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

அதானி போர்ட்ஸ்

Tamilarasu J  -  GoodReturns Tamil  : அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு மே மாதம் 105.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
யார் இந்த கவுதம் அதானி? எப்படி இவருக்கு இந்த வெற்றி கிடைத்தது? விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
20 வயதில் லட்சாதிபதி
மும்பைக்கு 17 வயதில் வைரம் விற்பனை செய்யும் தரகராக வந்த கவுதம் அதானி அடுத்த 3 வருடத்தில், தனது வயது 20 ஆகும் போதே லட்சாதிபதியாக உருவாகினார்.
அதானி எண்டர்பிரைஸ் தொடக்கம்
1988-ம் ஆண்டு, 26 வயதாகும் போது ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்ய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்கள் உள்பட அதானி குழுமம் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது.

35 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா சாலையில் கலைஞர் சிலை ..16 அடி உயரம்.. 5 கட்டளைகள்

 கலைஞர் செய்திகள்  : முத்தமிழரிஞர்  கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு !
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை இன்று (28.05.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

500 கொள்கலன்கள் - பழுதடையும் நிலையிலுள்ள உணவு பொருள்களை விடுவிக்க முடியாதுள்ளது : இறக்குமதியாளர் சங்கம்

வீரகேசரி : திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன கூறுகையில்,
திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 கொள்கலன்கள் தேங்கி இருக்கிறது.
மேலும் வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, பருப்பு, உலர் உணவுப் பொருட்கள் போன்ற இலகுவில் பழுதடையும் அத்தியாவசிய பொருட்கள் இதில் காணப்படுகிறது.

RSS / ஆரியர்கள் பூர்வகுடி இந்தியர்களா? ஆர்எஸ்எஸ்காரர்கள் என்ன திராவிடர்களா? கர்நாடக Ex CM சித்தராமையா :

 Vigneshkumar  -       Oneindia Tamil   : பெங்களூர்: கர்நாடகாவில் புதிய பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனரின் பேச்சு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேடவாக்கம் அருகே ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லா @ 1.82 கோடி ரூபாய் முதல்!
கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் உரையின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு அங்குள்ள கல்வியாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் கர்நாடக மூத்த தலைவருமான சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆரியர்கள் இந்தியர்களா

பெண்களின் உடல் உறுப்புக்கள் திருடும் கொடூரம் .. காதல் வலையில் சிக்கவைத்து ..

 S.k. Babu :  *கள்ளச் சந்தையில் மனித உடல்கள் குறிப்பாக பெண்கள் குறி வைக்கப் படுகிறார்கள்.*
*பெண்கள் இந்த பதிவில் கவனம் செலுத்தவும். பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.*
உங்களுக்கு தெரியுமா?
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன..?
40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம் மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம்.
இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள்..
பிணவறைகளில் கிடக்கும் சடலங்களிலிருந்தா? அல்லது விபத்துகளில் இறந்தவர்களிடமிருந்தா?

வெள்ளி, 27 மே, 2022

அண்ணா சாலையில் கலைஞர் சிலை - 38 ஆண்டுகளுக்கு பின் - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!

 கலைஞர் செய்திகள்  :  சிலையாக நின்று, நிலையாக நமை வழிநடத்தும் தலைவர்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன் எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.

வெயிட் அண்ட் சீ': கே. எஸ். அழகிரியிடம் சோனியா

டிஜிட்டல் திண்ணை: 'வெயிட் அண்ட் சீ':  கே. எஸ். அழகிரியிடம் சோனியா

மின்னம்பலம் : சென்னையில் நேற்று மே 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் ஏறுவதற்கு சுமார் ஒன்றரை மணிநேரம் முன்பு... டெல்லியில் மாலை 4.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?" என்று அந்த புகைப்படத்தை அனுப்பி இடம் சுட்டி பொருள் கேட்டது.
ஒரு ஸ்மைலியை முன்னோட்டமாக அனுப்பிவிட்டு இன்ஸ்டாகிராமின் கேள்விக்கு
பதில் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ்அப்.
"தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த காலகட்டம் மிக முக்கியமானது.

மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

 வீரகேசரி : இலங்கையில் கடந்த 9ஆம் தேதி காலி முகத்திடல் பகுதி மற்றும் கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்ததாக, செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், “அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற குழப்ப நிலை, அதனையடுத்து காலி முகத்திடலில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மூத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.”

8 ஆண்டு மோடி ஆட்சியில் 10 ஆயிரம் மதக்கலவரங்கள்! ‛பகீர்’ ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்

 Nantha Kumar R -  Oneindia Tamil :  டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ரிப்போர்ட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 10,000 மதக்கலவரங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேடவாக்கம் அருகே ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லா @ 1.82 கோடி ரூபாய் முதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கட்சி மத்தியில் 2014ல் ஆட்சியை பிடித்தது. தொடர்ச்சியாக 8 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட வில்லை என தொடர்ச்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
காங்கிரஸ் ரிப்போர்ட் கார்டு

வியாழன், 26 மே, 2022

நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) தமிழ் பேரகராதி உட்பட பல நூல்களை தந்த யாழ்ப்பாண சதாவதானி

No photo description available.

Susairaj Babu  :  தமிழறிஞர் தெரிந்துகொள்வோம், வாழ்ந்தது 33 ஆண்டுகள், மட்டுமே,,,,  
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.
இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.
கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்! இலங்கைக்கு எல்லா உதவியும் செய்வோம் - சென்னையில் மோடி உரை

 Noorul Ahamed Jahaber -   Oneindia Tamil :  சென்னை: பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
கச்சத் தீவு மீட்பு, தமிழுக்கு இந்திக்கு இணையான அங்கீகாரம் தேவை! மோடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்கச்சத் தீவு மீட்பு, தமிழுக்கு இந்திக்கு இணையான அங்கீகாரம் தேவை! மோடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பாலியல் தொழில் - வயதுவந்த, சுய ஒப்புதலோடு ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி

BBC - சுசித்ரா கே.மொகந்தி -     பிபிசி செய்திகளுக்காக
வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது,
அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும்
குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா அடங்கிய ஆயம், இந்த உத்தரவை மே 19-ம் தேதி பிறப்பித்துள்ளது.

ஜி ஸ்கொயர் - ஜூனியர் விகடன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை: காவல்துறை!

 மின்னம்பலம் : ஜி ஸ்கொயர்  - ஜூனியர் விகடன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை: காவல்துறை!
ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்களின் பெயரை எப்.ஐ.ஆரில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் புருஷோத்தம் குமார் மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தில், 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக அளித்த புகாரின் பேரில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

 மாலைமலர் :எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமரை வரவேற்றனர்.

மோடி சென்னை வருகை - ஆந்திர கர்நாடக முதல்வர்களும் வருகை! சென்னைக்கு வெளியே போராடுமாறு கூட்டணி .

 மின்னம்பலம் : பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் குறைக்க வேண்டும், அவற்றின் மீதான அனைத்து செஸ், சர்சார்ஜ் வரிகளையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் அறிவித்துள்ளளன.
கடந்த மே 17 ஆம் தேதி இது தொடர்பாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை மூலம் போராட்ட நிகழ்ச்சிகள் பட்டியலையும் வெளியிட்டிருந்தனர்.

ராமேஸ்வரம் கூட்டு பாலியல் - மீனவ பெண் எரித்து கொலை 6வடமாநில இளைஞர்கள் கைது A

தினகரன் :  ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடி தாங்க முடியல.. மனைவியிடம் இருந்து காப்பாத்துங்க: CCTV ஆதாரத்துடன் நீதிமன்றம் சென்ற காதல் கணவன்!

 கலைஞர் செய்திகள்  : ராஜஸ்தானில் மனைவி அடிப்பதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். பள்ளி தலைமையாசிரியரான இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருக்கும் போது கணவன் யாதவை, சுமன் அடித்து வந்துள்ளார்.

புதன், 25 மே, 2022

பிறப்புறுப்புச் சிதைப்பு - சுன்னத் : குழந்தைகளுக்கு எதிரான உடலியல் வன்முறை!

றிஷ்வின் இஸ்மத்  :  சிறுவயதினருக்கு எதிரான சுன்னத் (விருத்தசேதனம்) எனும் உடலியல் வன்முறை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
*மிகச் சிலருக்கு மட்டும் அரிதாக வரக் கூடிய நுனித்தோல் சார் நோய்களைக் காரணமாகக் காட்டி அனைத்து ஆண்களுக்கும் (குழந்தையிலேயே) விருத்தசேதனம் செய்வதானது, எப்போதாவது ஒரு காலத்தில் பல்வலி வரலாம் என்று பயந்து அனைத்துப் பற்களையும் இப்பொழுதே கழட்டி (எடுத்து) விடுவதற்கு ஒப்பான மடத்தனம் ஆகும்.
இந்தக் குரூரமான செயல் சுன்னத், கத்னா, விருத்தசேதனம் போன்ற பெயர்களில் அறியப்படுகின்றது.
யூத, இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களில் ஒரு சிறு பிரிவினரும் ஆண்களுக்கு இந்த ஆணுறுப்பு மீதான உடலியல் வன்முறையை மேற்கொள்கின்றனர், இதற்கு மேலதிகமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிராக பெண்ணுறுப்புச் சிதைப்பு வன்முறை மேற்கொள்ளப் படுகின்றது.

தமிழ்நாட்டின் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் (நிவாரண உதவி) வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கிறது.

வீரகேசரி : தமிழ்நாடு அரசு இலங்கைக்கு வழங்கிய உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக  சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கிறது.
 இதனை முன்னுரிமை அடிப்படையில் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கவிருக்கின்றோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் (கலெக்டர்) கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பால்மாவைப் பொறுத்தவரையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

BBC Tamil :  அமெரிக்க டெக்சாஸ் துப்பாக்கி சூடு!  அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 24 மே, 2022

வெளிநாடுகளில் இலங்கை இராணுவத்தினர் சேவை .. அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவர் -இராணுவத் தளபதி

thinakkural - ச எல்.சிசில்-: மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று (23) மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சென்று அக்குழுவினருடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

75 ஆண்டுகளுக்கு பின் மேமாதமே மேட்டூர் அணை தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்ச

 கலைஞர் செய்திகள் : காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.5.2022) தண்ணீர் திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜுன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

கேரளா வரதட்சணை தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 சிறைத்தண்டனை

மாலைமலர் : வழக்கின்போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது.
கொல்லம்:
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது.

ம.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்- வைகோ அதிரடி நடவடிக்கை

மகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து  நீக்கினார் வைகோ… – www.patrikai.comமாலைமலர் : கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முக சுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.
ம.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட செயலாளர்களை நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும்,

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

 மாலைமலர் : நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

விகடன் மீது வழக்கு: முதல்வர் தலையிட பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை!

 மின்னம்பலம் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைச்செயலாளர் பாரதி தமிழன் மே 22ஆம் தேதி வெளியிட்ட செய்தியில்...
"ஜி ஸ்கொயர் என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் புருஷோத்தமன் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கெவின் என்கிற தனிநபர் மீது 21-05-2002 அன்று புகார் ஒன்றை அளிக்கிறார். கெவின் என்பவர் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா என்பவரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் ஜூனியர் விகடன் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் மீடியாக்களில் தவறான செய்திகளை வெளியிட செய்வேன் என்றும் கடந்த 09-05-2022 அன்று பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய ஒருவர் ஜி ஸ்கொயர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

 மின்னம்பலம் : அரசியல்வாதிகள் இந்த பட்டின பிரவேசம் நிகழ்வை தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தருமபுரம் ஆதீனம். அதன் ஒரு பகுதியாகத்தான் பட்டினப் பிரவேசத்தை எந்த வகையிலும் அரசியலாக்கி விட வேண்டாம் என தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த அடிப்படையில் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் எந்த அரசியல் தலைவரும் தங்களை முன்னிறுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதில் ஆதின தரப்பினர் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

May be an image of 1 person
அதேநேரம் மயிலாடுதுறையில் இருக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு எப்போதும் போல கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆதின தரப்பிலிருந்து கொடுத்தார்கள்.

திங்கள், 23 மே, 2022

அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் திருமதி.மிஷேல் ஆனந்தராஜா வெற்றி

 Vicky Vigneswaran  யார் இந்தப் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மிஷேல் ஆனந்தராஜா?
மிஷேல் ஆனந்தராஜாவின் உண்மையான பூர்வீகம் வெளியே தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறதா என்ற கேள்வி பல இடங்களில் இருக்கிறது. 'அவரது பெயரை வைத்துக்கொண்டு அவரை ஓர் இந்தியர் என்று சொல்லமுடியும்' என்ற ஊகங்களும் இணையத் தளங்களில் உள்ளன. அவையெல்லாம் உண்மை அல்ல.
அவரைப் பற்றிச் சொல்வதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் யார்?
அவரே சொல்லும் நேரடியான சுயதரவு இது.
சிறிது நேரம் எடுத்துக்கொண்டு என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் இங்கிலாந்தில் பிறந்தேன், ஆனாலும் நான் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவள்.

தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது...!

தினத்தந்தி :   தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது.
தனுஷ்கோடி, ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது.
தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரெயில் போக்குவரத்தும் இருந்துள்ளது.
மேலும் பள்ளிக்கூடம், தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு மாநிலவாரியாக...

 தினத்தந்தி :   பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
புதுடெல்லி, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது.
இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது.
இது தொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மக்கள் பயன் அடையும் வகையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு வழங்கிய நிவாரண பொருட்கள் இலங்கை வந்து சேர்ந்தது!

தமிழ் மிரர் : தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அறிவிப்புக்கு இணங்க தமிழக மக்களால் வழங்கப்பட்ட  இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளித்தார்.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான்,  பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.
9000 மெட்ரிக்தொன்  அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா  மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்த போர்த்துகீசியர் 1520-30களிலேயே

May be an image of sky
No photo description available.

Nagapattinam - Heritage City  :   நாகை பற்றி அறியாத தகவல்  - 20
நாகப்பட்டினத்தை போர்த்துகீசியர் 1520-30களிலேயே கைப்பற்றி விட்டனர். இதே சமயத்தில் சென்னையின் சாந்தோம் நகரையும் (பழைய மயிலாப்பூர்) அவர்கள் கைப்பற்றினர். நாகையைச் சுற்றி இருந்த பத்து கிராமங்கள் போர்த்துகீசிய வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன (நாகை துறைமுகமும் நகரமும், புத்தூர், முட்டம், பொரவச்சேரி, அந்தணப்பேட்டை (அந்தோனிப்பேட்டை என்று போர்த்துகீசியர் குறிப்பிடுகின்றனர்), அழிஞ்ச மங்கலம், கரூரப்பன்காடு, சங்கமங்கலம், திருந்தினமங்கலம், மஞ்சக்கொல்லை, நரியங்குடி).
போர்த்துகீசியருடன் வந்த டொமினிகன், ஃப்ரான்ஸிஸ்கன், அகஸ்டினியன், ஜெஸ்யூட் பாதிரிமார்கள் நாகப்பட்டினத்தில் தங்கி தமது மதமாற்ற பணிகளில் ஈடுபட்டனர். 1540 களில் அவர்கள் தமது பணிகளை தீவிரப்படுத்தினர்.

மதுராந்தகம் ஆறுமுகம் வீட்டை 700 பேர் கொண்ட கொலை வெறி கும்பல்,,,, அந்த கொடிய நாட்கள்

May be an image of 3 people, people standing and text that says 'மே ம22 மறக்கமுடியுமா 1058'

Arumugam Karthikeyan  ல் மதுராந்தகம் ஆறுமுகம் வீடு கொளுத்தப்பட்டது
“இன்று மறக்கமுடியாத நாள். அந்த கொடூரமான தாக்குதல் இன்றும் மனதில் நீங்காது இருக்கிறது. அந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிருடன் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை. என் தாயை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து 4 மணி நேரம் கதவை புட்டி ஒரு நாற்காலியை வைத்து முட்டுகொடுத்து தடுத்து நின்றார். அவர் அப்படி தடுத்து எங்களுடன் நிற்கவில்லை என்றால் என் தாய் தந்தை என்னுடன் சேர்ந்து ஏழு உயிர்கள் 31 ஆண்டுகளுக்கு முன்பே பலியாகியிருக்கும் அந்த கொலைவெறி தாக்குதலுக்கு.

ஞாயிறு, 22 மே, 2022

பன்னீர்செல்வம் : உயர் பதவிகளில் இந்தியர்கள் என்றால் அது பார்ப்பனர்கள் என்றே பொருள்

May be an illustration of 1 person

Paneerselvan  :  * Defile(அசுத்தி) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இயற்கையான அசுத்தி என்றே பொருள்-வெள்ளைய நீதிபதி போர்டர்.
*
* பிராமணர்கள் அதற்கு எப்படி பொருள் கொள்கிறார்களோ அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்- (தாந்திரிகமான அசுத்தி)                              நீதிபதி சா.முத்துச்சாமி அய்யர்
* :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவரைப் பற்றி பார்ப்பனர்கள் -தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்தவர்.அப்படிப் படித்து வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி என்பார்கள்.
- [x] பொதுவாக அந்தக்காலகட்டங்களில் வெள்ளையர்கள் தான் நீதிபதி,கலெக்டர்,காவல் துறை உயர் அதிகாரிகளாக இருப்பார்கள்.
*
* வெள்ளையர் அல்லாத யாராவது உயர் பதவிகளுக்கு வந்தால் அது பார்ப்பனர்களாகத் தான் இருக்கும்.
*
* பார்ப்பனர்கள்,இந்தியர்களை உயர் பதவிகளில்அரசு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அது பார்ப்பனர்களை நியமிக்க வேண்டும் என்பதே அன்றைய பொருள்.

அமரர் ராஜீவ் காந்தி ஒரு சாதாரண இந்திய பிரதமர் அல்ல ..

ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தி ஒரு சாதாரண இந்திய பிரதமர் அல்ல ..
இன்று இந்தியாவில் எல்லோரும் அனுபவிக்கும் தகவல் தொடர்பு புரட்சிக்கு முதலில் கதவை திறந்தவர் ராஜீவ் காந்தி
வண்டில் மாட்டு வேகத்தில் இருந்த தொலைபேசி தொடர்பை நவீன படுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் இருந்த சாம் பிட்ரோடாவை அழைத்து அது பற்றி ஒரு புதிய கொள்கையை வகுத்து வேகமாக அதை முடிக்கி விட்டவர் ராஜீவ் காந்தி
 Sam Pitroda  is an Indian telecom engineer, inventor and entrepreneur. He is popularly known as the Father of India's Computer and IT Revolution as he helped Prime Minister Rajiv Gandhi in bringing computerization as an advisor to the PM.[citation needed] He was also an advisor to the PM during Dr. Manmohan Singh's tenure (the print )
அதை நடைமுறைப்படுத்தி அந்த கனவை நனவாக்கியவர் ஆ ராசா.  
அமெரிக்க அதிபராக ரீகன் இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு சூப்பர் கொம்பியூட்டர் தேவை என்று ரீகன் நிர்வாகத்தோடு கடுமையாக முயன்றார்

ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

 கலைஞர் செய்திகள்  - ஜனனி  " 5 மாநிலங்களின் முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் அதிகப்படியான மக்களின் ஆதரவையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த 5 மாநிலங்களின் முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் அதிகப்படியான மக்களின் ஆதரவையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு, புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திமுகவுக்கு 72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

 கலைஞர் செய்திகள்  : திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல அடுத்த 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இரு முறை குறைத்துள்ளது. தற்போது பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை மாநில அரசும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

தமிழக நிவாரண பொருட்கள் இலங்கை அமைச்சர் ஜி எல் பீரிஸ் பெற்றுக்கொண்டார்

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

மாலைமலர் : இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு
நிவாரணப் பொருட்கள் ஒப்படைப்பு
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரஷ்யர்கள் பலாத்காரம் பண்றாங்க.. கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டில் நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு!

  Mari S  -  tamil.filmibeat.com  : கேன்ஸ்: ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன், தமன்னா உள்ளிட்ட இந்திய நடிகைகளுடன் உலக நடிகைகள் பலரும் அணிவகுத்து வரும் கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டில் நிர்வாணமாக ஓடி வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், தமிழ் சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன், பா ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா
பிரான்ஸ் நாட்டில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 17ம் தேதி கோலாகலமாக ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், வரும் மே 28ம் தேதி வரை அங்கே இந்த பிரம்மாண்ட சினிமா விழா நடைபெற உள்ளது. முதல் முறையாக ஒரு நாட்டின் சினிமாவை கெளரவிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ள கேன்ஸ் அமைப்பு இந்திய சினிமாவை கெளரவப்படுத்தி வருகிறது.