![]() |
![]() |
Kasi Senthivel : 1960 பதுகளின் நடுப் பகுதியில் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கம் தோழர்கள் நா. சண்முகதாசன், பிரேமலால் குமாரசிறி ஆகியோரின் தலைமையில் புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சியாக முன்செல்ல ஆரம்பித்தது.
அக்கால கட்டத்தில் புரட்சிகரத் தாகம் மிக்க இளம் தலைமுறையினர் இலங்கை முழுவதிலும் இக் கட்சியின் பின்னால் அணிதிரண்டனர்.
அவ்வாறு வடபுலத்தில் அணிதிரண்ட இளைஞர்களில் ஒருவனாகி 1965ல் கட்சியின் முழுநேர ஊழியனாகிக் கொண்டேன்.
அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கட்சி,வாலிபர் இயக்கம், தொழிற்சங்க இயக் கம் மிக வேகமாக வேலை செய்த காலகட்டம்.
அக் கால கட்டத்தில் யாழ் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப் பாவை பற்றி மக்களிடையே குறிப்பாக உழைக்கும் மக்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிகம் விருப்புக்கு உரியவராகக் காணப்பட்டார்.