சனி, 1 பிப்ரவரி, 2025

தோழர் காசி செந்தில்வேல் : திரு அல்பிரட் துரையப்பா சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் முஸ்லிம் மக்களிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்தார்

No photo description available.
May be an image of 1 person and text that says 'காலம் எந்த களவாணிக்கும் காவலாளி அல்ல உண்மையை மட்டுமே உரத்து முழங்கும்! imgflip.com com imgflip. ip.com'

Kasi Senthivel :  1960 பதுகளின் நடுப் பகுதியில் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கம் தோழர்கள் நா. சண்முகதாசன், பிரேமலால் குமாரசிறி ஆகியோரின் தலைமையில் புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சியாக முன்செல்ல ஆரம்பித்தது.
அக்கால கட்டத்தில் புரட்சிகரத் தாகம் மிக்க இளம் தலைமுறையினர் இலங்கை முழுவதிலும் இக் கட்சியின் பின்னால் அணிதிரண்டனர்.
அவ்வாறு வடபுலத்தில் அணிதிரண்ட இளைஞர்களில் ஒருவனாகி 1965ல் கட்சியின் முழுநேர ஊழியனாகிக் கொண்டேன்.
அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கட்சி,வாலிபர் இயக்கம், தொழிற்சங்க இயக் கம் மிக வேகமாக வேலை செய்த காலகட்டம்.
அக் கால கட்டத்தில் யாழ் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப் பாவை பற்றி மக்களிடையே குறிப்பாக உழைக்கும் மக்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிகம் விருப்புக்கு உரியவராகக் காணப்பட்டார்.

ஆவடி தந்தை, மகள் மரணம் - அருள்வாக்கு அன்னபூரணி வீட்டில் சம்பவம் மருத்துவர் சாமுவேல் எபினேசர் கைது

தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை
மருத்துவர் சாமுவேல் எபினேசர்
தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை
அருள்வாக்கு அன்னபூரணி வீடு
தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

BBC New - விஜயானந்த் ஆறுமுகம் : ஆவடியில் தந்தை, மகள் மரணம் தொடர்பான வழக்கில் மருத்துவர் ஒருவரை திருமுல்லைவாயல் காவல்நிலைய போலீசார் வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) கைது செய்தனர்.
இருவரின் உடல்களையும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கைதான மருத்துவர் பதப்படுத்தி வைத்திருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்.
இதுதொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டி வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
தந்தை, மகள் மரணத்தில் என்ன நடந்தது? இறந்துபோன உடல்களை நான்கு மாதங்களாகப் பதப்படுத்தி வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளதா?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமையன்று (ஜனவரி 29) ஆஸ்பான் ஏபெல் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில், "தனது உறவினர்களான 78 வயதான சாமுவேல் சங்கர் மற்றும் அவரது மகள் 37 வயதான சிந்தியா ஆகியோர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி : ஈசிஆர் சம்பவம்… அதிமுகவுக்கு தொடர்பு

 மின்னம்பலம் - Selvam :  சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 1) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “ஜனவரி 25-ஆம் தேதி சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய சம்பவத்தை திமுகவுடன் தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரி விழாவில் ஆ ராசா எம்பி ! பேராசிரியரின் இடைநீக்கத்தை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

 Hindu Tamil : சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவை அழைத்து விழா நடத்திய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் 7-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சொல் என்ற மலர் வெளியீட்டு விழா கடந்த ஜன.7-ம் தேதி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திமுக எம்பி ஆ.ராசா பங்கேற்று பேசினார். இதன்காரணமாக அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பேராசிரியர் ரேவதி என்பவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

2026ல் திமுக வெற்றி உறுதி? . திமுகவின் நிரந்தர வாக்கு வங்கி 22%. அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி இப்போது 20%.....

 Kandasamy Mariyappan :   2026ல் திமுக வெற்றிபெறுவது உறுதி.
ஆனால்...
திமுகவின் நிரந்தர வாக்கு வங்கி 22%.
அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி 25%ஆக இருந்து இப்போது 20%.
அதிமுக வேண்டாம் என்பவர்களாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் (Welfare schemes), கூட்டணி பலத்தாலும் 39-45% வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.!
அதேபோல் திமுக வரக்கூடாது என்பவர்களாலும், கூட்டணி பலத்தாலும் மக்கள் நலத் திட்டங்களாலும் (Welfare schemes), 39-45% வாக்குகள் பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.!
இந்த 22%, 25% வாக்குகளை மட்டுமே நம்பி களத்தில் இருப்பது எந்த நேரத்திலும் மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகும்போது திமுக அதிமுகவை வீழ்த்தி விட்டு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.!
இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் நேரத்தில் கூடுதல் வாக்காளர்களை கவர பணம் கொடுப்பதும், களத்தில் பணி செய்பவர்களுக்கு பணம் செலவழிப்பதும், உதிரி கட்சிகள் சாதிக் கட்சிகளை அரவணைக்க பணம் வழங்குவதும், மக்களிடம் ஒரு பிம்பத்தை கட்டமைக்க (Perceptional image) ஊடகங்களுக்கு பணம் கொடுப்பதும் என்று தேர்தலில் வெற்றிபெற ஏறத்தாழ 1,000 கோடி முதல் 5,000 கோடிகள் வரை செலவு செய்கின்றன.!

வெள்ளி, 31 ஜனவரி, 2025

சீமான் பாணியில் நடிகர் விஜய் அரசியல் .. வசூலுக்காக மட்டுமே இன்னொரு கட்சி

Prakash Raj teams up with Vijay yet ...

ராதா மனோகர் : நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டங்களை விட வியப்பை தருகிறது அவரின் கட்சியில் மாவட்ட பொறுப்புக்கள் பெறுவதற்கு பெருகும் ஆர்வலர்களின் தொகை .
கட்சி பொறுப்புக்களை பெறுவதற்கு எக்கச்சக்கமான பணம் கைமாறுகிறது
இது ஒரு பெரிய சந்தேகத்தை கிளப்புகிறது
தமிழக அரசியலில் வசூல் வேட்டைக்காக மட்டுமே நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி போல நாம் ஏன் ஒரு கட்சியை நடத்த கூடாது என்ற எண்ணம் நடிகர் விஜய்க்கு உண்டாகி இருக்க கூடும்.
சினிமாக்காரர்களின் ஒரே நோக்கம் எப்போதும் வசூல் மட்டும்தானே?
கொஞ்சம் வாக்கு வங்கியை பெறவேண்டும் அதை வைத்து மேலும் மேலும் இலாபம் பெறுவது என்ற பார்முலா மட்டுமே நடிகர் விஜயின் அரசியல் வருகையாக எனக்கு தெரிகிறது
இது ஒரு தவறான கணிப்பாக கூட இருக்கலாம்.
ஆனால் நிச்சயமாக நடிகர் விஜயின் அரசியல் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவே முடியாது.என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
எந்த காலத்திலும் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்திராத ஒரு மனிதரை எப்படி ஒரே நாளில் ஒரு மீட்பராக கருத முடியும்?

கோவை 3,000 அமெரிக்க அவுட் சோர்ஸ் தொழிலாளர்கள் பணி நீக்கம்! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு – என்ன நடந்தது

bbc.com -  சேவியர் செல்வகுமார் :  இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலமாக பாடம் நடத்தி வந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை, ஒரேயொரு மெயிலில் 'இனிமேல் வேலை இல்லை' என்று தகவல் அனுப்பி வீட்டிற்கு அனுப்பியுள்ளது ஒரு அமெரிக்க நிறுவனம்.
இதனால் திடீரென வேலை வாய்ப்பை இழந்துள்ள பல ஆயிரம் பேர், தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர் நலத்துறையின் முயற்சியால், இவர்களுக்கு இறுதி மாத ஊதியம் மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கொடை முழுதாகக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் டிக் டொக் போட்ட மகளை பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்ற தந்தை !

Pakistan: Father Kills Daughter Over TikTok Videos in Pakistan | World News  - The Times of India

 தினத்தந்தி :பாகிஸ்தான்: டிக் டாக்கில் வீடியோ போட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது
பாகிஸ்தானில், 'டிக் டாக் வீடியோ' வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டாக்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

‘பராசக்தி’ தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு : டிஜிட்டல் வடிவில் வெளிவர இருக்கிறது

May be an image of 6 people and text that says 'JUST IN பராசக்தி Parasakthi புதிய தலைமுறை "பராசக்தி திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது" எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம் -நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு 30/01/2025- 10:00 PM www.puthiyathalaimurai.co'

புதிய தலைமுறை -RIshan Vengai :  ‘அமரன்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயனும், ‘சூரரைப் போற்று’ போன்ற தேசிய விருது வென்ற திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சுதா கொங்கராவும் இணையும் திரைப்படம் ‘SK 25’.
சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

பெண் சாமியார் அன்னபூரணியின் வீட்டில் தந்தை மகள் இரு சடலங்கள்!

 பெண் சாமியார் அன்னபூரணியின் வீட்டில் தந்தை மகள் இரு சடலங்கள்
இறந்தவர்களின் உடல்கள் ஐந்து மாதங்களாக பூட்டிய வீட்டில் இருந்துள்ளது
உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வந்ததால் போலீஸ் பூட்டை உடைத்து பார்த்து உடல்களை கைப்பற்றியது
இது தொடர்பாக எபினேசர் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்  ....

வியாழன், 30 ஜனவரி, 2025

ஈசிஆர் சம்பவம்; தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

 நக்கீரன் : சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தியுள்ளனர்.
அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்கும் செயலில் ஈடுபட்டனர்.

அர்ச்சுனா ராமநாதன் கைது - பிணையில் விடுவிப்பு ! நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா

jaffnamuslim.com : அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார்.

ஒரு காரில் 5 பெண்கள்… இரண்டு காரில் 8 இளைஞர்கள்…ஈசிஆரில் விடியற்காலையில் நடந்தது இதுதான்!

 மின்னம்பலம் - vanangamudi  : இன்று (ஜனவரி 29) காலை முதல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. youth chased the women car on the ECR
அதில், திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், இளம் பெண்கள் சென்ற காரை சினிமா பாணியில் சேஸ் செய்து நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.
அந்த காரில் இருந்து இறங்கி ஓடி வந்த இளைஞர் ஒருவர் பெண்கள் வந்த காரின் ஓட்டுநர் பக்கம் இருக்கும் கண்ணாடியை தட்டி, டோரை திறக்க முயல்கிறார்.

ஆணவக்கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை! கோவை மாவட்டம்

 மாலைமலர் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

புதன், 29 ஜனவரி, 2025

காத்தான்குடியில் கொல்லப்பட்ட 30 பாலச்சந்திரன்கள்! புலிகளின் இஸ்லாமிய இனச்சுத்திகரிப்பு

 A M Riyaz Bestor :  ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ,  அதை போல்தான் இலங்கையில் வாழும்  பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது.
காத்தான்குடியில் இருந்து வெளிவரும் எக்சத்  வெளியீட்டுக்கு தோழர் ரமேஷ்(முன்னால் தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் ஃ அவர்களின் சிறப்புக் கட்டுரை.
கடந்தகால கசப்புணர்வுகளை  சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 மின்னம்பலம் -  christopher :  விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 28) வெளியிட்டார்.
இரண்டு நாள் பயணமாக விழுப்புரம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழுதரெட்டி கிராமத்தில், முன்னாள் திமுக அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ. 5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

திமுக ஆய்வுக்கூட்டம்: ஆதாரத்துடன் பேசிய ஸ்டாலின்… அரண்டு போன நிர்வாகிகள்!

 மின்னம்பலம் - vanangamudi :  முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் பல்வேறு தகவல்களை கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 27) மாலை சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். அவருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டிவனம் நகருக்குள் சென்ற ஸ்டாலின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபம் வரை நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்திய எம்பி சந்திரா ஆர்யா கனடா பிரதமர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம்

 ராதா மனோகர் : ஒரு அசல்  ஆர் எஸ் எஸ் சங்கி ஒருவர் கனடா எம்பியாக இன்னும் இருக்கிறார்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்திரா "ஆரியா" 2006 இல் கனடாவுக்கு வந்த குடிவரவாளர்
வந்தேறு குடிகளை பெரிதும் மதித்து பொது மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்து கொள்வதை வரவேற்கும் பண்பு கனடா நாட்டுக்கு உண்டு.
பதிலுக்கு இந்த ஆர்யாவை போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கு என் நன்றி கொன்றற்கும் உய்வுண்டாம் என்ற திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது
இவர் மீது காலத்திற்கு காலம் பல விமர்சனங்கள் எழுந்தது . ஆனாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இவரை மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்து தங்கள் அறியாமையை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் (இவரது தொகுதியில் பல இலங்கை தமிழர்களும் உண்டு என்பது அடிஷனல் இஸ்பெஷல்)
காலிஸ்தான் தலைவரை இந்திய உளவு துறை ஆள் வைத்து கனடிய மண்ணிலேயே போட்டு தள்ளிய சம்பவத்தில் முழு கனடாவும் சங்கிகளின் ஒன்றிய அரசுக்கும் அதன் மோடிக்கும் எதிராக கிளர்ந்து எழுந்த போது இவர்  இந்தியா சென்று மோடியையும் இதர ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் சந்தித்து தனது சங்கி அரசியலை  வெளிப்படுத்தினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்! கடும் தண்டனை வழங்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தது

 மாலை மலர் :  பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது
கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-
பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. நம்பிய நெருங்கிய உறவினராலோ பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உடல்நலம் காக்க ஊண் உண்பதை தவிர்ப்பீர்! வள்ளுவரும் வள்ளலாரும்

May be an image of 1 person, temple and text

Thulakol Soma Natarajan : :   ஊன் உண்ணுதலை தவிர்க்க வேண்டும்
என்பதை உடல் நலம் பேணுபவர் கடைப்பிடிக்க வேண்டும்
பேராசான் திருவள்ளுவரும் இதனை புலான்மறுத்தல் என்கிற
அதிகாரத்தில் (26) வலிமையாக வலியுறுத்தியுள்ளார்
ஆனால், உலக மக்களில், புலான்மறுத்தலை கடைப்பிடிப்பவர்கள் சிறுபான்மையினர்தான்.
எனினும், தற்காலத்தில் அகவை முதிர்ந்தவர்கள் செரிமானக்கோளாறு காரணத்தால்,
புலால் உண்ணுதலைக கைவிட்டுவிடுகிறார்கள்.
அவர்களை வணங்கி வாழ்த்துவோம்
இன்று பேரருட்பேரொளி அருட்பிரகாச வள்ளற்பெருமான் இறைவனுடன் தம்மை ஆட்படுத்திக்கொண்ட தைப்பூசத் திருநாள்.

திங்கள், 27 ஜனவரி, 2025

பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா - விமானத்தில் தண்ணீர், ஏ.சி. கூட இல்லை

 மாலைமலர் : அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார்.
இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்து இருக்கிறது.

தமிழகமும் திராவிடமும் ஒன்னு ! - இதை அறியாதவர் தலையில் இருப்பது மண்ணு !

May be an image of text

 Thulakol Soma Natarajan  :  தமிழகமும் திராவிடமும் ஒன்னு ! - இதை
அறியாதவர் தலையில் இருப்பது மண்ணு !
தமிழ்த் தேசியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் செயல்பாடுகள் இப்போது உறைநிலையில் இருக்கிறது.
பூடகமாக செயல்படுகிறோம், அவற்றை எல்லாம் வெளியில சொல்லமுடியாது
என்று கூறித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் .
 எங்களையும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்..
சீமான், பெ.ம. போன்றவர்கள் இப்போது வெளிப்படையாகவே சங்கிகளின்
ஊதுகுழல்களாகச் செயல்படுகிறார்கள் என்பது,
அவர்கள் தொடர்ந்து, திராவிடத்தை பெரியாரை இழிவுபடுத்தும் இழிசெயலில் ஈடுபடுவதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.
"உண்மையான தமிழ்த் தேசியர்கள் நாங்கள் " என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் இதைக் கண்டிக்காது  வாளாவிருக்கின்றனரே ஏன் ?

அயல்வீட்டு நாயை தூக்கில் போட்டு கொலை! பழிக்கு பழியாம்! முல்லைத்தீவு

No photo description available.

மலையோரம் செய்திகள் :  இலங்கையில் தமிழர்பகுதியில் நாய்க்கு மரணதண்டனை நிறைவேற்றம்
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் குறித்த ஒருவரின் ஆட்டை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் ஆடு இறந்து விட்டது
இதனால் இரு தரப்புக்குள் பிணக்கு ஏற்பட்டு ஆட்டின் உரிமையாளரான குறித்த பெண் இனக்க சபைக்கு சென்று உள்ளார்
இனக்க சபையில் நாயை செல்லப்பிராணியா பாசமாக வளர்த்த பெண் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்ணாம் அவருக்கு எதிர் தரப்புக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லையாம்

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை! காவல் ஆய்வாளர் இடை நிறுத்தம்

 tamil.samayam.com : மதுமிதா.M: புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வழக்கை மெத்தனமாக விசாரித்ததாக கூறி திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரனை இடைநிறுத்தம்  செய்து டிஐஜி வருண் குமார் உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வசித்து வந்தவர் ஜெகபர் அலி முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மை நலப் பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

சிங்கள மொழியில் திருக்குறள்!

 ராதா மனோகர் : இது சிங்கள மொழியில் வெளியான திருக்குறள்!
இரு மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளது
முதல் மொழி பெயர்ப்பு திரு கோவாக்டா  மிஸிஹார்மி என்பவரோடு திரு எஸ் தம்பையாவும் சேர்ந்து  1961 இல் வெளியிட்டுள்ளனர்
இரண்டாவது மொழி பெயர்ப்பு  திரு சார்ள்ஸ் டி சில்வாவினால் 1964 வெளியானது
இது ஸ்ரீ லங்கா சாகித்ய மண்டலயாவினால் வெளியிடப்பட்டது!
சிங்கள திருக்குறள் பற்றிய சிறு விளக்க குறிப்பு இது
சில திருக்குறள்களை தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்
கீழே பதிவிட்டுள்ளேன்
சிங்கள குறள் வரிகளை ஆங்கிலத்தில் தந்துள்ளேன்!
அவற்றின் உச்சரிப்பு சிங்கள மொழி தெரிந்தவர்கள் மூலம்தான் சரியாக அறியமுடியும்.

 ෆසැම අකූරටම මුල - ,අ, කාරය වන සේ මැ යි
 නැණවතූන් තර ලොව - අති උසස් වේ ආදි භගවත්.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகலன் முதற்றே உலகு
fasæma akūraṭama mula - ,a, kāraya vana sē mæ yi
 næṇavatūn tara lova - ati usas vē ādi bhagavat.
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.