
முத்து. இவரது மகள் ருக்குமணி (வயது 21). திருச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். செந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன் (24). இவரும் திருச்சியில் ருக்குமணி படித்து வந்த அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தெரிந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.
இதற்கிடையே ருக்மணியின் பெற்றோர் வருகிற 26–ந்தேதி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ருக்மணியை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த மணிகண்டன் ருக்குமணியின் பெற்றோரிடம் ருக்குமணியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணிகண்டன் திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு போன் செய்து தான் கடந்த 3 ஆண்டுகளாக ருக்குமணியை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது.