சனி, 31 மே, 2025

தமிழரசு கட்சியின் தமிழ் பல்கலை கழக நாடகங்கள்! அல்பிரட் துரையப்பாவின் சாதனைகளை களவாட முயலும் கயவர்கள்

 
tamilcircle.net : காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12
தமிழனின் சமஸ்டி ஆட்சியில் தமிழ் பல்;கலைக்கழகம் என்ற தமிழினவாத அரசியல் கோசங்கள் மூலம், வாக்குகள் பெறப்பட்டது. 1960 பங்குனி மாதம் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 19 தொகுதியில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி 15 தொகுதிகளில் வெல்ல, இந்துப் பல்கலைக்கழகத்தை முன்வைத்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 8 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றை வென்றது. 1960 ஆடியில் மீண்டும் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி 21 தொகுதியில் போட்டியிட்டு 16 தொகுதியில் வெற்றி பெற, தமிழ் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த இரு தேர்தகளிலும் துரையப்பா யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், தமிழினவாதிகளின் முதன்மையான "துரோகியானார்".

நாயர்வாள் மோகன்லாலு ஷேர்ட் இல்லாமல் டூயட் பாடுகிறார்கள் நாயருக்கு ஒரு நீதி வேடனுக்கு ஒரு நீதி!

 ராதா மனோகர் : கேரளாவில் நம்பூதிரிகளுக்கு ( பார்ப்பனர்) கொஞ்சம் கூட குறையாத அல்லது அவர்களை விட இன்னும் ஒரு படிமேலாக பட்டியல் ஜாதி மக்களை கொடுமை படுத்திய ஆதிக்க ஜாதிகளின் வரலாறு ஒன்றும் பழங்கதை அல்ல 
இன்றும் வெளிப்படையாக அம்பலத்தில் அரங்கேறும்  கொடுமைகள் அவை.
ஆதிக்க ஜாதியின் முன்னால் கூனி குறுகி நிற்கும் பட்டியலின மக்கள்,
 இன்றும்கூட அவர்களின் மேட்டிமையை அங்கீகரித்து விழிக்க வேண்டிய ஒரு கட்டாய சொல்லாகத்தான் :"தம்புரானே"  என்ற சொல் பழக்கத்தில் இருக்கிறது!.
வேடன் மேலங்கி அணியாமல் ஆபாசமாக மேடைகளில் தோன்றுவது அசிங்கமாம்.
அடேகளா கேரளாவிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் கூட கோயில்களில் ஆண்கள் மேலங்கி அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறதே? 

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் |

 Hindu Tamil : சென்னை: “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; 
ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டு தொழில்துறை ஏன் உருப்படவில்லை?

ராதா மனோகர் : இலங்கையின் உள்நாட்டு தொழில்துறை ஏன் உருப்படவில்லை? இலங்கையில் உள்நாட்டு உற்பத்தி பற்றி பேசுவோர்களையே எதிரிகள் போல கருதும் ஒரு கூட்டம் இருக்கிறது
இது மிகப்பெரிய கூடடம்
மத்தியகிழக்கில் அம்மாக்களும் சகோதரிகளும் மகள்மார்களும் உழைத்து கொண்டுவரும் அந்நியச்செலாவணி
உலகம் முழுவதும் குடும்பத்தை பிரிந்து மண்ணை பிரிந்து இன்னும் சொல்லொணா துயரங்களை சுமந்து உழைத்து நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி
தேயிலை மலைகளின் முகடுகளில் முட்டி மோதி வாழ்வை தொலைத்து நாட்டுக்கு கொண்டுவரும் அந்நிய செலாவணி
இவைற்றை தாண்டி இலங்கைக்கு வரும் உல்லாச பிரயாணிகள் கொண்டு வரும் அந்நியச்செலாவணி
இப்படியாக நாட்டுக்குள் வரும் அந்நிய செலாவணியை கொள்ளை அடிக்கும் கூட்டம் .. பெரிய கூட்டம்
இது அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான கூட்டம்
இவர்கள்தான் உள்நாட்டு உற்பத்தி என்ற சொல்லை கேட்டாலே வேப்பங்காயாக கருதுகிறார்கள்
இவர்கள்தான் நாட்டின் பெரிய கொள்ளைக்காரர்கள்
உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியை வெளிநாட்டு பொருட்கள் மூலம் போட்டி போட்டுகொண்டு அழிக்கும் மாபியா கும்பல் இது
எந்த ஆட்சி வந்தாலும் இந்த இறக்குமதியாளர்கள் என்கின்ற வழிப்பறி கொள்ளைக்காரர்களிடம் இருந்து இலங்கை பொருளாதாரத்திற்கு விடிவே கிடையாது!

தேமுதிக LK சுதீஷ் மாநிலங்கள் அவை எம்பியாகிறார் .. பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி!

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :  சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆகும் காலம் கனிந்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதிமுகவின் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

 minnambalam.com  : தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. COVID-19 Spread
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது சுகாதாரத்துறை.

மதுரை முதல்வர் ஸ்டாலின் 16 கி.மீ. ஊர்வலம் - பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார்

 hindutamil.in  : மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் முகப்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ' செல்கிறார். நாளை திமுக பொதுக் குழுவில் பங்கேற்கிறார்.
 இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வெள்ளி, 30 மே, 2025

யாழ் இந்திய துணை தூதுவரக அதிகாரி சச்சிதானந்த குருக்கள் வீதி விபத்தில் அகால மரணம்

May be an image of 7 people and temple
No photo description available.

திரு பிரபாகரன் சச்சிதானந்த குருக்கள் அவர்கள் 
யாழ் இந்திய துணை  தூதுவரகத்தில் பணியாற்றியவர் 
இவர் குடும்பத்தோடு இந்திய பயணத்தை முடித்து கொண்டு இலங்கை வந்து கொழும்பு யாழ் வீதி விபத்தில்  சம்பவம்நடந்தது.
அவரது இறுதி பதிவு இதுவாக இருக்கலாம்!.
மனைவியும் ஒரு மகனும் மனைவியின் சகோதரனும் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள் 
Prabhaharan Satchithananthakurukkal : தேவபிரயாக் என்பது பாகீரதி மற்றும் அலக்நந்தா ஆகிய இரண்டு புனித நதிகளின் சங்கமமாகும்.
இந்த புகைப்படத்தின் பின்னணியில் அந்த தேவப்பிரயாக் என்று சொல்லப்படும் இடத்தை பார்க்கலாம்.
பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள முதல் பிரயாக் இதுவாகும். 
இந்த சங்கமத்திற்குப் பிறகு, இந்த நதி கங்கை என்று அழைக்கப்படுகிறது 

மாநிலங்களவைத் தேர்தல்: 2026ஐ எதிர்பார்க்கும் வைகோ - சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

vaiko mk stalin

 tamil.samayam.com - மரிய தங்கராஜ்  :  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக வழக்கறிஞர் வில்சன், சண்முகம், புதுகை அப்துல்லா, சந்திர சேகர், பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஜூன் 19ஆம் தேதி இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர்களை திமுக தலைமை ஏற்கனவே அறிவித்துவிட்டது. 
திமுக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளனர்.

வியாழன், 29 மே, 2025

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் கண்ணீர் .. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

 தினமணி : அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ்  கண்ணீர் .. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
இந்த நிலையில், அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் வியாழக்கிழமை காலை ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது ராமதாஸ் பேசியதாவது:
”அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.
புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?

அமைச்சர்கள் நளினுக்கு 25, மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை! ஊழலில் சிக்கிய இலங்கை அமைச்சர்கள்

 தமிழ் மிரர் : அமைச்சர்கள் நளினுக்கு 25, மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை
அரசுக்கு ரூ. 53 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 53 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

ஆட்டோவில் இருந்து சிறுவனை தள்ளி விட்டவருக்கு மரண தண்டனை! Colombo - Death sentence for murder of schoolboy

 ஜாப்னா முசுலீம் :ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது.
ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்வீஸ், இந்த தீர்ப்பளித்தார்.
பதுளை-பசறை வீதியில் 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் பசறை எல்டொப் தோட்டத்தில் வசித்த பிரான்சிஸ் சுதர்சன் என்ற 16 வயது சிறுவனை 2014 ஏப்ரல் 9 ஆம் திகதியன்று ஆட்டோவில் இருந்து வெளியில் தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்பது சாட்சியங்களின் ஊடாக நிரூபணமாகியது.

அழகிரி வீட்டில் ஸ்டாலின் விருந்து பொதுக்குழுவுக்குக் அழகிரி வருகிறார்?

May be an image of 2 people
நக்கீரன் : தென் மாவட்டத்தை குறி வைக்கும் திமுக; அழகிரி வீட்டில் விருந்து -
முதல்வரின் மதுரை ப்ளான்
தி.மு.க.வின் பொதுக்குழு எப்போதுமே சென்னை அறிவாலயத்தில்தான் நடைபெறும். தி.மு.க.வின் 75 வருட வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே மதுரையில் பொதுக்குழு நடைபெற்றது.
29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மதுரையில் ஜூன் 1ம் தேதியன்று மீண்டும் பொதுக்குழு நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழு ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தியின் கையில் ஒப்படைத்துள்ளது திமுக தலைமை. இதன் எதிரொலியாக மதுரை நகரெங்கும் தி.மு.க. கொடிகள் பறக்கின்றன. 

கர்நாடகாவுக்கு மகாராஷ்டிராவும் தமிழகத்தை பின்பற்றி இரு மொழி கொள்கை அறிவிப்பு

 ராதா மனோகர் : தமிழகம் போராடி நிலை நிறுத்திய இரு மொழி கொள்கையை,
இன்று  பல மாநிலங்களும் வலியுறுத்த தொடங்கி உள்ளன.
குறிப்பாக கர்நாடகமும் மகாராஷ்டிரமும் வெளிப்படையாக தங்கள் மாநிலங்களில் மாநில மொழியும் ஆங்கிலமும் மட்டுமே பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளன.
மேலும் இந்தி திணிப்பினால் பல மாநில மொழிகள் அழிந்து கொண்டுவருவது எல்லா மாநிலங்களிலும் தற்போது உணரப்படுகிறது.
மாநில மொழிகளுக்கான குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.
திமுகவின் ஆதார கொள்கைகளில்  ஒன்றான இருமொழி கொள்கையானது,
இன்று துணைக்கண்டம் முழுவதும் அகல கால் பதிக்கிறது என்றால் அது மிகையல்ல!

வேடன் பாடிய 'ஆனேல் எனிக்கொரு மயிருமல்ல' என்ற வார்த்தை!

 குமரிக் கிழவனார் :வேடனின் சாகித்யம் கேள்விக்குள்ளாக்கபட வேண்டியது சமூகத்திற்கு எதிரான அச்சிலேற்றபடக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று கேரள வலதுசாரிகள் மீடியாக்களில் அலைந்து திரிந்து அழுது கொண்டிருக்கிறார்கள்............
எங்கே இருந்து வருகிறது இவர்களுக்கு இந்த திடீர் சமூக சிந்தனை என்று யோசித்து கொண்டிருக்கிறேன். ண்ணூறுகளில் மலையாள சினிமாவில் ரஞ்சித் ஷாஜிகைலாஸ் ரெஞ்சி பணிக்கர் மோகன்லால் சுரேஷ் கோபி போன்ற கொம்பன்கள் அர்மாதித்த காலம்.  அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு மொழியாடலும் சமூகத்திற்கு எளிய மக்களுக்கு எதிரானதுதான். ஒடுக்கபட்ட மக்களை நேரடியாக டார்க்கெட் செய்து இவர்கள் எழுதிய பேசிய வசனங்களின் ஆழ்ந்த அர்த்தம் தெரியாது மலையாள இளைஞர்கள் அதை தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளாக மாற்றிக்கொண்டனர்............

ஸ்டாலின் போட்ட 'Quota' கணக்கு.. திமுக ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வின் பின்னணி!

May be an image of 2 people and text that says 'BREAKING BREAKINGNEW NEWS SEWS NEWS SUN மாநிலங்களவைத் எம் பி. ஆகிறார் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ. ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவிப்பு SUNNEWSTAMIL SUNNEWS 1 sunnewslive.in 28 MAY 28MAY2025 2025'

 மின்னம்பலம் : தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்களான திமுகவின் வில்சன், புதுகை அப்துல்லா, தொமுச சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே அரசியல் களம் பரபரத்துவிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே திமுக – அதிமுகவில் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் யார் யார்? வைகோ, அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற விவாதங்கள் களைகட்டின.

புதன், 28 மே, 2025

காசா 11வயது இன்ஸ்டகிராம் பிரபலம் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழப்பு! போருக்கு அடிபணிய மறுத்து– கார்டியன்

 வீரகேசரி : போருக்கு அடிபணிய மறுத்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி முகாம்களில் மனிதாபிமான பணியில் ஈடுபட்ட காசாவின் 11வயது இன்ஸ்டகிராம் பிரபலம் இஸ்ரேலின் தாக்குதலில் பலி – கார்டியன்
இஸ்ரேல் காசாவில் சமீபத்தில் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் காசாவின் மிகவும் வயது குறைந்த இன்புளுன்சரான 11 வயது யாகீன் ஹம்மாத்தும் கொல்லபட்டாள்  என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பிரகாசமான புன்னகை மற்றும் தன்னார்வ முயற்சிகளிற்கு பெயர் பெற்ற யாகீன் வெள்ளிக்கிழமை இரவு வடக்கு காசாவில் உள்ள டெய்ர் அல் பலாவின் அல்பராக பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டாள்.

செவ்வாய், 27 மே, 2025

பேரறிஞர் அண்ணா : நாங்கள் மட்டும்தான் எப்போதும் தியாகங்கள் செய்யவேண்டுமா?

 
தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் சி என் அண்ணாதுரை 1968 (சட்டமன்றத்தில்)
இந்திய ஒற்றுமைக்காக நாம் எமது கோரிக்கைகளை கைவிட்டு அவற்றை தியாகம் செய்ய முன்வரவேண்டும் என்று இங்கே சிலர் பேசினார்கள்
இந்தியாவில் நாங்கள் மட்டும்தான் எப்போதும் இந்திய ஒற்றுமைக்காக உரிமைகளை விட்டு கொடுத்து தியாகங்கள் செய்யவேண்டுமா?
இந்திய ஒற்றுமையை பேணுவதற்கு ஹிந்தி பேசும் மக்கள் இதுவரை என்ன விதமான தியாகங்களை  செய்துள்ளார்கள்?
இதற்காக என்ன விதமான துன்பங்களை  அவர்கள் இதுவரை அனுபவித்துள்ளார்கள்?

தவெகவினர் மீதான தாக்குதலுக்கு விஜய் கண்டனம்! ‘தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி!

 Hindu Tami : சென்னை: “காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வில்சன் - கமலஹாசன் - அப்துல்லா மாநில அவை உறுப்பினராவது உறுதி? வைகோ அவுட்?

 மாலை மலர் : பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.

இலங்கை தமிழர் பகுதி காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டது சுமந்திரன் அறிவிப்பு

 கிருனியுஸ்  :வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வேடன் தமிழன் அல்ல மலையாளி அல்ல ஈழத்தவன் அல்ல வேடன் ஒரு உலக போராளி

 வேடன் பற்றி சமூகவெளியில் உலாவும் பல கருத்துக்களில் இவை முக்கியமானவை!
வேடன் தமிழன் அல்ல மலையாளி அல்ல ஈழத்தவன் அல்ல
வேடன் ஒரு உலக போராளி!
வேடன் ஒரு அசல் திராவிட கலைஞன்!
ஆதிக்க சமூக கொடுமைகள் அவனை ஒரு தீப்பொறியாக்கி விட்டிருக்கிறது!
ஆரிய சம்ஸ்கிருத திரிபுகளில் இருந்து மலையாளத்தை மீட்கும் பணியை தெரிந்தோ தெரியாமலோ தொடங்கி விட்டான் வேடன்!
திராவிட வீரன்!
இந்திய நிலப்பரப்பில் ஆரியம் புகுந்த பின்பு வந்தவன் எல்லாம் ஆண்டான்!
இப்போதும் ஆரிய காலனியின் ஆட்சிதான் நடக்கிறது!

வேடன் - Bob Marleyலியும் Che Guveraராவும் Michael jackson னும் ஒன்றாக கலந்த Medleyதான் வேடன்

 ராதா மனோகர் : கேரளா வேடன் வெறும் சத்தங்களை வைத்து கூட்டத்தை கட்டி போடும் ஒரு பாடகன் மட்டுமல்ல!
சத்தங்களை  தாண்டி சத்தம் போடாமல் கேரள மண்ணில் பெரும் நிலநடுக்கத்தை உண்டாக்கி வருகிறார்!
பல போலி உணர்வு ராப் பாடகர்கள் நம்மிடையே பலருண்டு
வேடனுக்கு எதிராக அந்த சக்திகள் உக்கிரமாக போர் தொடுத்துள்ளன.
தாய்லந்தில் இருந்து யாரோ ஒரு நண்பன் வாங்கி கொடுத்த புலிப்பல் வனத்துறையின் சட்டத்தை மீறியதாக வேடன் மீது வழக்கு
முழுபுலியையும் யானையையும் வெட்டி தோலும் தந்ததும் வைத்திருக்கும் நம்பூதிரிகளும் நாயர்களும் பிடிபட்டால் சத்தம் போடாமல் அந்த கொடும் சட்டங்களில் இருந்து தப்பி விடுவது ஒன்றும் அதிசயம் அல்ல.
வெறும் ஐந்து கிராம் கஞ்சா வைத்திருந்தார் என்று இன்னொரு வழக்கு
காண்டெயினர் கணக்கில் ஹீரோயின் கடத்துவோர்கள் இருக்கும் நாட்டில் வெறும் ஐந்து கிராம் கஞ்சா பெரிதாக போய்விட்டது
கஞ்சாவும் புலிப்பல்லும் அல்ல பிரச்சனை   
 நான் பாணன் அல்ல புலாயன் அல்ல பறையன் அல்ல நீ தம்புரானும் அல்ல ஆளேதும் ஒரு மயிரும் அல்ல
இனியும் காத்திருக்க காலமில்ல

இலங்கை திரையுலகின் மகாராணியாக மின்னிய மறைந்த மாலினி பொன்சேகா

 பி பி சி : சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
இலங்கை  சிங்கள சினிமாவின் மகாராணி என அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 24ம் தேதி காலமானார்.
சினிமாத்துறையில் மாத்திரமன்றி, அரசியலிலும் மாலினி பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
கில்பர்ட் பொன்சேகா மற்றும் சீலாவதி பொன்சேகா ஆகியோருக்கு 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி மாலினி பொன்சேகா பிறந்தார்.

ஜூன் 19-ல் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்:! திமுகவுக்கு 4 அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பு பிருக்கிறது

 hindutamil.in  :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அந்த இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திங்கள், 26 மே, 2025

உதட்டு வீக்கத்துக்காக சென்ற சிறுவனுக்கு சுன்னத் ஆபரேஷன் செய்த சென்னை தனியார் மருத்துவமனை! The crecsent hospital chennai

 hindutamil.in  : சென்னை: உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற சென்ற சிறுவனின் ஆண் குறியில் ஆபரேஷன் செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் செவிலியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறது! – அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை

மாலைமலர் “இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA), மே 25, 2025 அன்று வெளியிடப்பட்ட ‘2025 உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ என்ற வருடாந்திர அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றிய பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் தொடர்பான துணைக்குழுவிற்காக தயாரிக்கப்பட்டது.

புலிகள் பலாலியை (யாழ்ப்பாணம்) கைப்பற்றுவதை பொட்டம்மான் ஏன் தடுத்தான்?

 கிழக்கு தளபதி கருணா அம்மான் தலைமையில் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆனையிறவு இயக்கச்சி பளையை நோக்கி வந்த புலிகள் பலாலியை (யாழ்ப்பாணம்) கைப்பற்றுவதை  பொட்டம்மான் ஏன் தடுத்தான்?
ஒரு கிழக்கு தளபதி கருணா வடக்கை கைப்பற்றுவதற்கு பொட்டம்மானின் வடக்கு மேலாதிக்கம் அனுமதிக்கவில்லை!
சந்தி சிரிக்கும் வரலாறு .. அம்பலமாகும் வெற்று தமிழ் தேசியம்!
பொன். கரிகாலன்  :  “வரலாற்று பிழை விடாதீர்கள் என கருணா அம்மான் கெஞ்சினார்; யாழ்நகரை நாங்கள் கைப்பற்றித் தருகிறோம்!”
2000ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) “ஓயாத அலைகள் மூன்று” (Operation Unceasing Waves III) எனும் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் நோக்கிய முக்கியமான படைத்தளமான ஆனையிறவை கைப்பற்றியது.
இந்த வெற்றி, தமிழீழம் எனும் தனியரசை உருவாக்கும் வாய்ப்பை உருவாக்கியது.
ஆனால், இந்த வாய்ப்பு, புலிகள் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானின் சுயநலமும், அதிகார ஆசையும் காரணமாக, கைவிடப்பட்டது.

தமிழ் ராப் பாடகர்களில் முதலிடம் வேடனுக்குதான் ..

 Nikhil Dev  :  கலை வடிவங்களில் அரசியலை வீரியமாகவும், மக்களுடன் நேரடி உரையாடலை நிகழ்த்தவும் முடியும் என்பதையும் புரிந்து கொண்ட காலகட்டம்.
புத்தகங்களிலும், எழுத்துக்களிலும் மட்டுமே அரசியலை புரிந்து கொள்வதை தாண்டி திரைப்படங்களிலும், நாடகங்களிலும்,
பாடல்களிலும் நுணுக்கமான அரசியலை தேட துவங்கினேன்.
கலை வடிவங்களில் அரசியலை கண்டுபிடிப்பது அவர்கள் கூற வரும் கருத்துக்களை உள்வாங்குவது மிகவும் சுவாரசியமான ஒன்று.
அதுபோல இந்திய அளவில் யாரெல்லாம் பாடல்கள் வாயிலாக அரசியலை பேசுகிறார்கள் என்பதை தேடினேன்.
 தமிழ்நாட்டில் rapper அறிவு தனது பாடல்கள் வாயிலாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார்.
2020 ஆம் ஆண்டு தற்செயலாக ஒரு பாடலை கேட்க நேர்ந்தது.
குரலில் அவ்வளவு வலிமை, வரிகளில்  கோபமும், வலியும், போராட்டமும்.
அதுபோன்ற உணர்ச்சிப்பூர்வ பாடலை மலையாள திரைப்படங்களில் அதுவரை கேட்டதில்லை.

ஞாயிறு, 25 மே, 2025

பாஜகவிடம் விலைபோன ஐந்து முக்கிய நீதிபதிகள்

May be an image of 5 people and text that says 'பரிசுகள் RANJAN GOGOI SHARAD ARVIND BOBDE D.Y. CHANDRA- CHUD ASHOK BHUSHAN SA NAZEER'

Arunachalam R  : பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர் அவர்களை பாஜக எப்படி கவனித்தது?
டி.வை.சந்திர சூடு :- டெல்லி சட்ட பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியராக உள்ளார்
அசோக் பூஷன்:- தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக  உள்ளார்.
ராஜன் கொகாய் :-  தேர்தல் சந்திக்காத பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
அப்துல் நாசர் :- ஆந்திரா கவர்னராக உள்ளார்.
அரவிந்த் போபடே :- தேசிய சட்டக் பள்ளிக்கூடத்தின் வேந்தராக உள்ளார்.
இதைப் பார்த்த பிறகு  நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது..
1. எதிரி தான் நினைத்ததை சாதிப்பதற்கு எத்தனை வருடங்கள் பொறுமையாக இருந்தான் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
2. எதிரி காத்திருந்த நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தான் என்பதையும் உணர்த்துகிறது.

இலங்கையின் நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்

 hirunews.lk : இலங்கையின் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார்.
ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.