சனி, 19 மார்ச், 2016

விஷ்ணுபிரியாவின் தாய் தந்தையிடம் கலைஞர் உறுதி.....சிபிஐதான் விசாரிக்க வேண்டும்


தவறினாலும், மக்கள் மத்தியில் விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உறுதிப்பட்டு விடுமேயன்றி, சிறிதும் மாறாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ''நேற்று (18-3-2016) காலையில், மு.க.ஸ்டாலின், ஆறு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் மறைந்த, காவல் துறை அதிகாரி, திருச்செங்கோடு மாவட்ட உதவிக் கண்காணிப்பாளர், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியையும், அவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரையும், என்னைச் சந்திப்பதற்காக அழைத்து வந்தார்.

கார்டனில் நடந்த கடைசி நிமிட கலாட்டா... பன்னீரை, நத்தத்தை எச்சரித்த ஜெயலலிதா...!தற்காலிகமாக தலைதப்பியது?

விகடன்.com கோவையில் இருந்து அவசரமாக போயஸ் கார்டன் வந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணைகளைக் கேள்விப்பட்டு திகிலடித்துக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். நேற்று முன்தினம் இரவு போயஸ் கார்டனில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவசர அழைப்பு. ' அம்மாவைப் பார்க்க உடனே வாருங்கள்' என்ற அழைப்பால் அதிர்ந்து போன ஓ.பி.எஸ், நள்ளிரவு 11.50 ஃபிளைட்டைப் பிடித்து சென்னைக்கு வந்தார். காலையில் 10.20 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். இவர்கள் வந்த தகவல் சொல்லப்பட்டாலும், உடனே அழைப்பு வரவில்லை. அதே நேரத்தில், கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்டவர்களும் காத்திருந்தனர். இவர்கள் யாரும் ஓ.பி.எஸ்ஸிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை.

நடிகை ரோஜா மயக்கம்.....இரத்த அழுத்தம் சர்க்கரை நோய்.....தர்ணாவில் ஈடுபட்ட போது...


நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக கூறி சபாநாயகர் சிவபிரசாத் ராவ் சட்டசபையில் இருந்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிட்டார் இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆந்திர சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நடிகை ரோஜா நேற்று காலை வந்தார். அப்போது. அவரை சட்டசபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி.... ஸ்டாலின் ஜவாஹிருல்லா சந்திப்பு.

மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைகிறது. அதன் தலைவர் ஜவஹிருல்லா கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்தார்< ஜவாஹிருல்லா தலைமை யில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியது. அப்போது நடந்த பாராளு மன்ற தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது.
அந்த கட்சிக்கு ராமநாத புரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம்பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி யில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி தோல்வி அடைந் தார்.

பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் மீண்டும் அதிமுக தலமைசெயலகம்..ஆக்டிவ் ...

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் இன்று வந்தனர்.
கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் அவர்கள் இடம் பெற்றனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நடந்து முடிந்த உள் வீட்டு  கூத்து  பகிரங்கமாவது அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய டாமேஜ் என்பது இப்போதுதான் வெளங்கி இருக்கிறது....மாபியா இயக்கங்களில் இதெல்லாம் சகஜமப்பா...இன்னும் நெறைய கூத்து தேர்தலுக்கு பிறகு விலாவாரியா வெளியே வரும்..    

விசாரணை - ஒரு பார்வை.. சரியான புள்ளியில் எடுத்து பிணைந்த திரைக்கதையில்..

visaranai 296கீற்று.com :ஒரு காவல் நிலையத்துக்குள் இருந்து தப்பி வந்தது போலதான் உணர்ந்தேன்... அதே சமயம்.. ஓர் இழவு வீட்டிலிருந்து வெளியேறும் மன நிலையில்தான் படம் முடிந்த பிறகு திரை அரங்கில் நிலவிய அமைதி உணர்த்தியது..... அதில் அச்சம் நிறைந்த வேறு உலகின் இருண்மைத் தத்துவம் லத்திகளாலும்... துப்பாக்கிகளாலும்..... அதிகாரங்களாலும்...சிஸ்டங்களாலும் சூழ்ந்து இருந்தன...படித்தவன் செய்யும் பாவம்.... ஐயோவென போகிறான் அப்பாவி.... மாற்றி எழுதும் வன்மத்தின் விரிசல்.. குடித்துக் கொண்டேயிருப்பது என்னவோ... ஒன்றுமில்லாதவன் குருதியைத்தான்...

Super singer 5....முதல் இடம்...அரவிந்தாக்ஷன், இரண்டாவது பரீதா, மூன்றாவது ராஜகணபதி.... .

விஜய் டிவியின்   சூப்பர் சிங்கர். 5 இல்  ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் இடத்தை பிடித்தார்.
முதல் இடத்தை பிடித்த ஆனந்த் அரவிந்தாக்ஷக்கு ரூ 75 லட்சம் மதிபுள்ள டவுன் ஹவுஸ் பரிசாக வழங்கப்பட்டது.
பரீதா, இரண்டாம் இடத்தை பிடித்தார் இவருக்கு ரூ 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
746 ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்த ராஜ கணபதிக்கு பத்து லட்சம் பரிசு வழங்கப்படது.
நான்காம் இடத்தை பிடித்த லட்சுமி மூன்று லட்சமும், ஐந்தாம் இடத்தை பிடித்த சியாத்க்கு  இரண்டு லட்சம் பரிசு வழங்கப்படது.   
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று  சூப்பர் சிங்கர், இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் திருச்சி,கோவை மற்றும்  சென்னையில் ஆடிசன் நடத்தி முடிக்கப்பட்டு இறுதிச்சுற்று சென்னையில் இன்று நடைபெற்றது.

வங்கிகளை விழுங்கியோர் விபரம் இதுதான்....மல்லையா மட்டுமல்ல..இன்னும் Rs 56,521 crore ($ 83.9 billion)

www.newslaundry.com/2016/03/17/liquor-baron-vijay-mallya-isnt-the-only-defaulter-there-are-5275-others-as-well/ Bangalore: Liquor baron Vijay Mallya (60) and his Rs 7,000-crore default occupy headlines, but there are 5,275 other “wilful defaulters”—together, they owe India’s banks Rs 56,521 crore ($ 83.9 billion), according to the Credit Information Bureau (India) Ltd, or CIBIL, a company set up by banks to collect defaulter information. The money that wilful defaulters owe Indian banks has grown nine-fold over 13 years, and is more than 1.5 times the central government’s allocation for agriculture and farmer welfare (Rs 35,984 crore) in Union Budget 2016-17, according to an IndiaSpend analysis of CIBIL data. Banks declare borrowers to be “wilful defaulters” when they deliberately do not repay loans, despite the ability to do so. Many defaults may not be wilful, caused as they may be by adverse economic conditions. Mallya’s now-defunct Kingfisher Airlines is fourth on CIBIL’s list—available with IndiaSpend—of wilful defaulters.

உதயநிதி ஸ்டாலின்: தேர்தலில் நிற்கவில்லை..எந்த காலத்திலும் தேர்தலில் நிற்க போவதில்லை .

நடிப்பு, படங்கள் தயாரிப்பு, விநியோகம் என்றிருக்கும் உதயநிதியும் அரசியலில் குதிப்பது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. ஆனால் இதை உதயநிதி மறுத்துள்ளார். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தேர்தல் என்றில்லை எந்தத்தேர்தலிலும் நான் நிற்கப் போவதில்லை. ஒரு தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், விருப்ப மனு தாக்கல் செய்யலாம். அப்படி என்னுடைய பெயரில் யாராவது விருப்ப மனு தாக்கல் செய்திருக்கலாம். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.  எமது முந்தய செய்தி தவறாக இருந்தால் அதற்காக உதயநிதியிடம் மன்னிப்பு கோருகிறோம்....இந்த செய்தி தவறாக இருந்தால் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் 

ரஜினிகாந்த் பாஜக ஆதரவு....ஆசைதான் ஆனா படவசூல் டாமேஜாகுமே? வெள்ளோட்டம் விஜயகுமார்?

ரஜினிகாந்த் எப்போதும் பார்பன பாஜகவுக்கு ஆதரவானவர்தான். சமசீர் கல்வியை குழிதோண்டி புதைக்க முயற்சித்த பத்மா சேஷாத்ரி குடும்பம் லதா ரஜினிகாந்துக்கு நெருங்கிய உறவினர்தான். பார்ப்பனர்களின் செல்ல பிராணியான ரஜினி வெளிப்படையாக ஆதரவு கொடுக்க கொஞ்சம் தயங்க கூடும். எங்கே தனது சினிமா வசூலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று ரொம்பவும் யோசிப்பவர். என்னதான் தான் தமிழ்நாட்டுகாரன் என்று வேஷம் போட்டாலும் மக்கள் அதை அவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்வதில்லை என்றும் அவருக்கு தெரியும். தமிழ்நாட்டில் இன்னும் பார்பனீயம் வேரூன்றவில்லை என்ற வருத்தம் ரஜினியின் ஆசான் சோ. ராமசாமிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் மட்டுமல்ல ரஜினிக்குமே உண்டுதான். ஆனாலும் ஆசை அவரை விடாது. நிச்சயம் பார்பன கொடிபிடிக்க தொடங்குவர். நடிகர் விஜயகுமாரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்     tamil.chennaionline.com :சென்னை,மார்ச் 18 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபை தேர்தலில், வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து தோல்வியடைந்த பா.ஜ.க, தற்போது ரஜினிகாந்தின் ஆதரவை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தரப்பும், பிரமதர் மோடி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

10636714_833153493461570_4737935019808150692_o (1)
பெரியார் இயக்கங்கள், கம்யுனிஸ்ட்டுக் கடசிகள் எவ்வளவோ ஜாதி மறுப்புத் திருமணங்களை (ஆண் தலித் – பெண் ஜாதி இந்து) செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வே.மதிமாறன் :20 காலையில் தான் நான் பேசுறேன். ஆனால், நாளை காலையிலேயே அங்கிருப்பேன். நண்பர்களைத் தோழர்களைச் சந்திப்பதை விட வேறுஉண்டோ ஆனந்தம்.. ‘சந்திப்போம்’
BHEL நிறுவனத்தில் வேலை செய்யும் தோழர்கள் திலிப், ஆண்டிராஜ், கனிவண்ணன், சந்திரன், பஞ்சு;
shift system முறையில் நாளைக்கு நிறையத் தோழர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

வெள்ளி, 18 மார்ச், 2016

புல் மப்புல இருந்தேன்..அதிமுக பெண் எம்.பி-ன் அடங்கெப்பா பேச்சு

 ”புல் மப்புல இருந்தேன்” : அதிமுக பெண் எம்.பி-ன் அடங்கெப்பா பேச்சுசென்னை,மார்ச் 18 “நான் நேற்று புல் மப்புல இருந்தேன், நண்பர் ஒருவருடன் சரக்கடிச்சு புல் மப்பாயிட்டேன், உன் ஞாபகம் வந்தது போன் பண்னேன், பிறகு ஏதாவது உலறிடுவேன் என்று போனை கட் பண்ணிட்டேன்” என்று பேசியோது மட்டும் இல்லாமல், கலகெடர் ரவிகுமார் அமைச்சர் யாருக்கும் அறிவே இல்லே, எல்லோரும் டம்மி(டி.என்.எஸ்) அதிமுக அட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த சில அமைச்சர்களின் மீது, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா, வாலிபர் ஒருவருடன் போனில் பேசியதாக சொல்லப்படும், “அடங்கப்பா...” பேச்சு வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் கலாபவன்மணியின் உடலில் பூச்சி மருந்து விஷம்....கொலை? தற்கொலை? பரிசோதனையில் தகவல்

 நடிகர் கலாபவன் மணி மரணத்தின் மர்மம் அவிழ்ந்தது - பிரதே பரிசோதனையில் பகீர் தகவல்tamil.chennaionline.com :கொச்சி,மார்ச் 18 (டி.என்.எஸ்) பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, மரணமடைந்ததற்கு விஷமே காரணம் என்ற உண்மை, பிரதே பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் அவரது உடலில் ‘மெத்தனால்’ என்ற போதை அளிக்கும் ரசாயனம் அதிகளவில் இருந்தது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

BJP கொடியவனால் கால் இழந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது

டேராடூன்: பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சக்திமான் குதிரையின் அடிபட்ட கால் அறுவை சிகிச்சை மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. ராணுவ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து குதிரை சத்திமானுக்கு செயற்கைக் கால் பொருத்தியுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சக்திமான் வெள்ளை குதிரை காவல் துறையில் பணியாற்றி வருகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் காவல் துறை அணிவகுப்பில் இந்த குதிரை பங்கேற்று வந்தது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கினார். இதனால் அதன் கால் முறிந்தது.

இரகசிய விசாரணை.....அப்படி என்னண்ணே அவர் தப்பு பண்ணிட்டார்? Extra Judcial Custody..சட்டம் எங்கே போனது?

விகடன்.com கோவை அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர் அவர். நேற்று அவருக்கு ஒரு போன் கால்.
" ஹலோ அண்ணாச்சி...ஒரு முக்கியமா விஷயம். காதுக்கு வந்துச்சு. சி.எம். கொடநாடு போறாங்களா?
" அப்படி எதுவும் தகவல் வரலையே? "
" சும்மா பொய் சொல்லாதீங்க...அம்மா தனி ஃபிளைட்டுல வந்துட்டாங்கன்னு தகவல் வருது"
" ஏங்க..எனக்குத் தெரியாம அப்படி எதுவும் நடக்காது. நீங்க போனை வையுங்க..கேட்டுச் சொல்றேன்.
அடுத்து அவர் போன் செய்தது உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு,
" ஹலோ சார்...நான்தான் பேசறேன். அம்மா ரகசியமாக வந்திருக்காங்களா?
" அப்படி எதுவும் இல்லையே? மேடம் கார்டன்லதான் இருக்காங்க "
" இல்லைங்க சார்..முக்கியமான நபர் ஒருத்தர் கேட்டார் அதான்..."(என இழுக்க)
" என்ன தகவல் வேணும் உங்களுக்கு? "
" நேத்து தனி ஃபிளைட்ல வந்தது யாருன்னு?  எந்த குற்றவாளியையும் சட்ட விரோதமாக கட்டபஞ்சாயுத்து பாணியில்  அறையில்  பூட்டி வைத்து விசாரிக்க இது என்ன காட்டுமிராண்டிகளின் நாடா? நீதிமன்றம் மனித உரிமை காவலர்கள்  எல்லாம் எங்கே?

மார்கெட் வட்டி தொழிலில் ஆரம்பித்த பன்னீர்செல்வம் இன்று.....அடேங்கப்பா! இதுதாண்டா வறலாறு...

விகடன்.com :பேச்சிமுத்து என்கிற ஓ.பன்னீர்செல்வம்
மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கை, கூட்டணி... என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்... என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம். நெற்றி நிறைய விபூதி-குங்குமமும் கும்பிட்ட கையும் அமைதி தவழும் முகமுமாக வலம் வந்த பணிவு பன்னீர் செல்வம் எப்படி இப்படி திகுதிகு வளர்ச்சி கண்டார்?

போயஸ் கார்டனில் 30 நிமிடங்கள் பன்னீர்செல்வம்....சோர்ட் அவுட் பண்ணிட்டாய்ங்களா?

சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பல்வேறு விதமான செய்திகள் பரவிய நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில் அதிமுகவின் ஐவரணியில் முதல்வராக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது கட்சித்தலைமையால் ஓரம்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கடந்த சில வாரங்களாக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன.

மாமல்லபுரம் கடலில் பண்டைய நகரம் கண்டுபிடிப்பு


மாமல்லபுரம் கடலில், பாறை கற்களாலான, சங்க காலத்திற்கு முந்தைய, பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் கட்டட இடிபாடுகளை, தேசிய கடல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும், தேசிய கடல் ஆய்வு நிறுவனம், மாமல்லபுரம் கடல் மற்றும் நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, பாறை கற்களாலான, பண்டைய கட்டட வடிவமைப்புகளை கண்டறிந்துள்ளது. இந்நிறுவனத்தின், கடல் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் ராஜிவ் நிகாம், முதன்மை அறிவியலாளர் விக்டர் ஜே லவ்சன், கடல் தொல்லியலாளர்கள் சுந்தரேஷ், இப்போதும் நாம் அங்கே மாமல்லபுரத்தில், படகில் பயணம் செய்தால், படகோட்டிகள், கோவிலில் பிற பகுதிகளுக்கும் கூட அழைத்து செல்வார்கள், அணு கோபுரம் போன்ற இடத்தில நிறுத்தி அப்பகுதிகளை நாம் காணலாம், நன்றாகவே கண்ணுக்கு புலப்படும். இதை ஆராய நம் அரசுகள் இவ்வளவு ஆண்டுகளாகியும் அக்கறை கொள்ளாதது மிகுந்த வருத்ததிற்குரியது.

கஜானாவைத் தேடும் கார்டன்... வீட்டுச் சிறையில் மூன்று அமைச்சர்கள்!

vikatan.com சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் கார்டனின் குட்புக்கில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் தேடித் தேடி வேட்டையாடி வருகிறார்கள். உச்சக்கட்டமாக, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் உறவினர்களுடன் கோவைக்கு வந்திருந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் வருகைக்கான காரணம் தெரியாமல் கட்சிக்காரர்கள் தவித்தனர். இந்த முறை எல்லா ஊழல் குற்றச்சாட்டுகளையும் பன்னீரு கோஷ்டி மேலேயே போட்டுவிட்டு அம்மா முதலை கண்ணீர் வடித்து பிரசாரம் செய்வாங்க மக்களும் சிலவேளை நம்புவாய்ங்க?

மாடுகளை வெட்டக் கூடாது என்பவர்கள் குதிரையை அடித்தே கொல்கிறார்கள்!

vikatan.com இறைச்சிக்காக இந்தியாவில் மாடுகளை வெட்டக் கூடாது என்று கூறும் பாஜகவினர், போலீசாரால் வளர்க்கப்படும் குதிரையை அடித்துக் காலை உடைத்து இன்பம் காணுகிறார்கள்.அதே போல தமிழர்களின் மரபு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து மகிழ்ச்சிக் கண்டவர்களுடன் சேர்ந்துகொண்ட  ஆட்சியாளர்கள், ஒரு பாவமும் அறியாத குதிரை தாக்கப்பட்ட சம்பவத்தை எந்த மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை" என்கிறார்கள் சமூக மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

குதிரையின் காலை முறித்த எம்எல்ஏ கைது 50 ரூபாய் அபராதம் விடுதலை செய்யபடுவான்? maximum fine Rs 50 for animal cruelty.

Even when there is a huge outcry over the treatment meted out by a Bharatiya Janata Party MLA to a horse in Uttarakhand, legally the punishment for cruelty against animal is very little. The Prevention of Animal Cruelty Act prescribes a maximum fine of Rs 50 for animal cruelty.
டேராடூன்: குதிரையின் காலை முறித்த எம்எல்ஏ.,கைது உத்தரகண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பா.ஜ., எம்எல்ஏ., கணேஷ்ஜோஷி தலைமையில் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்ட்டது. இந்நேரத்தில் குதிரையில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீது எம்எல்ஏ., போலீசாரின் லத்தியை பிடுங்கி தாக்கினார். இதில் நிலை குலைந்த குதிரை கால் முறிந்தது.  இவன்  பாரத மாதா கீ ஜே என்று கூறி வெளியே வந்து விடுவார். ஏனென்றால் அது தானே தேச பற்றிற்கு அளவுகோல். இதற்கு மோகன் பகாவாத் பதில் கூறுவாரா?. இந்த தவறை வேறு யாரேனும் அல்லது இஸ்லாமியர் செய்திருந்தால் ஒரு கும்பல் சென்று அடித்து கொன்று விடுவார்கள். ஆனால் இங்கு செய்தது கேடு கெட்ட பா ஜ க. ஆயிற்றே. மாலை மரியாதையுடன் வெளியே வந்து விடுவான்.

10 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை.ஹைதராபாத்தில் (ஆடியோ) அக்கிரமம்


ஐதராபாத்தில் பத்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட 15 வயது சிறுவனை கடத்தல்காரர்கள் கொலை செய்தனர். ஐதராபாத் நகரின் ஷாகினாயாத்காஞ் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் அபாய் மொதானி (வயது 15) கடந்த புதன்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற அபாய், மாலை வரையில் சிறுவன் வீடு திரும்பவில்லை. சிறுவனை கடத்தி விட்டதாகவும், தங்களுக்கு பணம் வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர்கள் சிறுவனை விடுவிக்க ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். பின்னர் ரூ. 5 கோடி கேட்டு உள்ளனர்.

இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”.

மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமியின் தத்து புத்திரன் பணவெறி பிடித்து செய்த அட்டூழியம்...அதிக சொத்து அதிக துயரம்?

54-Muthiah-Ramaswamysavukkuonline.com :வீதிக்கு வந்த செட்டிநாட்டு சண்டை தமிழகத்தின் பாரம்பரியமிக்க செட்டிநாட்டு பாரம்பரியங்களில் ஒன்றான எம்ஏஎம் ராமசாமியின் குடும்பச் சொத்துக்கள் நீண்ட நாட்கள் நீதிமன்ற சிக்கல்களில் சிக்கியிருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கிறது.
எம்ஏஎம் ராமசாமியின் உடல்நிலை மிகவும் நலிவடைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை, சமீபத்தில் அவர் உருவாக்கிய அறக்கட்டளைக்கு, சாட்சிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் எழுதி வைத்தார்.   இதையடுத்து, விலக்கி வைக்கப்பட்ட அவரது வளர்ப்பு மகன் எம்ஏஎஎம்ஆர் முத்தையா என்கிற அய்யப்பன், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் ராமசாமியின் சொத்துக்களை அபரிக்க திட்டமிட்டு வருவதாகவும், காவல்துறை உடனடியாக தலையிட்டு அதை தடுக்க வேண்டும் என்றும் புகாரளித்துள்ளார்.

டாஸ்மாக் அமைச்சர் நத்தம் ஸ்டோரி (4000 கோடிக்கு கணக்கு காட்டலியாம் பங்கும் கொடுக்கலியாம்)

savukkuonline.com :தமிழக அமைச்சரவையில் செல்வம் கொழிக்கும் இரண்டு துறைகளை வைத்திருந்தவர் என்றால் அது நத்தம் விஸ்வநாதன்தான்.    டாஸ்மாக்கை கவனிக்கும் கலால் துறை மற்றும் மின் துறை.   இரண்டு துறைகளிலும் பணம் கோடிக்கணக்கில் புழங்கும்.
மிகவும் செல்வாக்காக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு உள்ளார். ஏன் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்க டெண்டர் விடப்பட்டது.  அந்த டெண்டரில் பங்கெடுத்த அதானி நிறுவனம், ஒரு யூனிட் 6 ரூபாய் 4 பைசா விலையில் சூரிய மின்சாரம் வழங்குவதாக கூறியிருந்தது.    ஆனால், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் 5 பைசாவுக்கு வழங்க முன்வந்ததும், அதானி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மொரீஷியஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.

பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாத சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம்

ஜனநாயகத்தில் திணிப்பு என்பது சட்டவிரோதமானது,அதனை ஏற்றுக் கொள்ள முடியாது' மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் யூசுப் பட்டான், `உயிரே போனாலும் பாரத் மாதா கி ஜே என்ற வாசகத்தை உச்சரிக்க மாட்டேன்' என்று கூறியதால் சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாட்டிற்கு அவமதிப்பு செய்துவிட்டதாக தெரிவித்தே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுண்டரில் பலியான இஸ்ரத் ஜகான் மீது சேறு பூச முயற்சி?


குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட மும்பை இளம் பெண் இஸ்ரத் ஜகான், ‘தற்கொலைப்படை தீவிரவாதி’ என்று மும்பை கோர்ட்டில் டேவிட் ஹெட்லி நேற்று ஒரு திடீர் வாக்குமூலம் அளித்தார். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து இஸ்ரத் ஜகானின் சகோதரி முஸாரத் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது: இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டரால் கொல்லப்பட்டது விசாரணையில் நிரூபணம் ஆனது. மேலும், அவர் ஓர் அப்பாவி என்பதை விசாரணை அதிகாரிகள் நிரூபித்துக் காட்டினர். தற்போது அவரை தற்கொலைப்படை தீவிரவாதி என்று கூறுவது, திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் சதி. இதில், பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக இதன் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹெட்லி இதனை சொல்கிறார். இஸ்ரத் ஜகான் ஓர் அப்பாவி என்பது நிரூபணம் ஆகியும், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது என்பது புரியவில்லை.

கார் வரிக்கு டிமிக்கு கொடுத்த தோனி....5 years no tax...அதிகாரி குற்றச்சாட்டு

MS Dhoni in trouble over his sports vehicle Hummer after transport ... one-time tax along with penalty after his sports vehicle 'Hummer H2'
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது ஹம்மர் சொகுசு காருக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரி கட்டவில்லை என‌ ராஞ்சி மாவட்ட போக்குவரத்து அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே அவர் 5 ஆண்டுகளுக்கான வரியை அபராதத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றும் மாவட்ட போக்குவரத்து அதிகாரி கூறியுள்ளார். வாகன பிரியரான தோனியிடம் சொகுசு கார்கள் சிலவும் அதிவேக ரேஸ் பைக்குகளும் உள்ளன. தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஹம்மர் சொகுசு காரை அவர் கடந்த 2009ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கினார். webdunia.com

அத்தனை கூட்டணிகளாலும் கழற்றி விடப்பட்ட தே மு தி க ! எல்லா கதவும் அடிச்சாச்சு...சு.சாமி?

இனி எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை என மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது.  மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த கூட்டணியாக வளர்ந்துவிட்டோம்.  இனி  விஜயகாந்த் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதுபற்றி நாங்கள் கவலைப்படபோவதில்லை என  வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 தே.மு.தி.க.,வில் நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேர் குழு, கூட்டணி பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற திடீர் சந்தேகத்தால், அவர்களை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துள்ள அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கட்சியினர் நெருக்கடியாலும் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக, தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை, விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர், தொடர்ச்சியாக சந்தித்து பேசி வந்தனர். தே.மு.தி.க., தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாமல், கட்சி தலைவர்கள் அனைவரும் தடுமாறினர். நந்தவனத்தில் ஒரு ஆண்டி...அவன்  கூத்தாடி கூத்தாடி போட்டுடைந்தாண்டி... ஓவர் ரவுசி காட்டி காட்டி டவுசர் பீஞ்சிடுச்சு...    

ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின்....ஹாப்பி இன்று முதல் ஹாப்பி....

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்' என, தென் சென்னை மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பரசன் உட்பட, ரசிகர்கள் சிலர், நேற்று விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். உதயநிதி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யும் முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம், அவரது ரசிகர்கள் அனுமதி கேட்டு பெற்றுள்ளனர். இதே போல, உதயநிதி ரசிகர் மன்ற மாநில தலைவரும், இளைஞரணியின் மாநில நிர்வாகியுமான மகேஷ் பொய்யாமொழி, திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, இளைஞரணிநிர்வாகிகள் விருப்ப மனுக்கள் கொடுத்துஉள்ளனர். சொந்த காசில பிளேன் டீ குடித்துவிட்டு   பிழைக்க தெரியாதவனாக இருக்கும் அடிமட்ட தொண்டர்கள் அதிக அளவில் திமுகவுக்குதான் உள்ளனர் அவர்களின் மகிழ்சிக்காக இதுவும் வேணும் இன்னமும் வேணும்?

பாஜக மிருக எம் எல் ஏயின் அட்டாக்கில் காலை இழந்த சக்திமான் குதிரை.....



இலங்கை தமிழர்களின் கால்களை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு உடைத்தார்...கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் அக்கிரமம்

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களில் சுபேந்திரன், கண்ணன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர்  டில்லிபாபு, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரிடமும் கடுமையாக கடந்து கொண்டார்.இதில் சுபேந்திரனின் இரண்டு கால்களும் செயல்பட முடியாத அளவில் உடைக்கப்பட்டது. கண்ணனுக்கு உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.;மேற்கண்ட தகவலை17.03.2016  வியாழக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் அருண் பாரதி ஆகியோர் தெரிவித்தனர்.;மேலும், சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்.

வியாழன், 17 மார்ச், 2016

உடுமலை சங்கர் கொலை.....கொலையாளி இந்து மக்கள் கட்சி செயலாளர் செல்வகுமார்! திண்டுக்கல் நகரம்..மீடியாக்கள் சைலன்ட்

0a2nஉடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலைகாரர்களில் ஒருவன் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் செல்வகுமார் என்றும், இவனது காவிக்கட்சி அடையாளத்தை போலீசும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்த, திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யா (வயது 19) என்ற தேவர் சாதிப்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

நேர்மையாக கொரியன் படத்தை ரீமேக் செய்த நலன் குமாரசாமி

(டி.என்.எஸ்) வெளிநாட்டு படங்களை சொல்லாமல் காப்பியடிப்பதும், உள்நாட்டு படங்களை ரீமேக் என்ற பெயரில், சொல்லிவிட்டு காப்பியடிப்பதும் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் கலாச்சாரம் தான் என்றாலும், முதல் முறையாக வெளிநாட்டு படம் ஒன்றை ரீமேக் என்ற பெயரில் சொல்லிவிட்டு காப்பியடித்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னையில் வேலை தேடி சுற்றும் நாயகி மடோனா செபாஸ்டியனின் லட்சியமும், ஒயின்ஷாப் பார் முதலாளியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் விஜய் சேதுபதியின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா, என்பது தான் இப்படத்தின் கதை.

Art Of Cheating or Living ? ....வாழுங்கலை என்கின்ற வியாபாரம்

subavee.com :  "வாழும் கலை" ஒரு பெரிய விழா நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதே கடினம். நெரிசல் ஏற்படுமா, சுற்றுச் சூழலுக்குக் கேடு வருமா என்பன போன்ற ஆயிரம் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் சாமியார் ரவிசங்கர் 'உலகக் கலாசார விழா' நடத்தினால், இராணுவமே அவருக்கு வாடகைக்கு விடப்படுகிறது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்கினார் என்று கூறி 5 கோடி ரூபாய் தண்டம் விதிக்கிறது. ஒரு காசு கூடக் கட்டமாட்டேன் என்கிறார் சாமியார். சரி என்று சொல்லி அவருக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (பாவம் ஒரத்தநாடு விவசாயி). குற்றம் சாற்றப்பட்டுள்ள ஒருவர் நடத்தும் விழாவில், இந்தியாவின் பிரதமரே நேரில் வந்து கலந்து கொள்கிறார். அந்தச் சாமியாருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அடடா மோடி எவ்வளவு நல்லவர் என்று நம்மவர்கள் பலர் வியந்து பாராட்டுகின்றனர். 

பேரவையிலிருந்து நடிகை ரோஜா இடைநீக்கம்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரோஜாவை ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்த நடவடிக்கைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தின் நகரி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக நடிகை ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆந்திரச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் குறித்தும், முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்தும் ஆட்சேபகரமான சில கருத்துகளைத் தெரிவித்ததாகத் தெரிகிறது.

பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல்

edit milhaanthaireporter.com :ஒவ்வொரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக் கிறது.பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.பசும்பாலில் தயாரிக்கப் படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.

நாங்க டேக் ஆப் ஆகிவிட்டோம் - தேமுதிக வந்தாலும் தலைமை ஏற்க முடியாது- விஜயகாந்துக்கு வைகோ குட்பை

மக்கள் நலக் கூட்டணி மக்கள் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது; தேமுதிக வந்தாலும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ உறுதிபட தெரிவித்துவிட்டார். இதனால் தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணியோ அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவோ கூட்டணி அமைக்காது என்றே தெரிகிறது. சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டி என்று பிரகடனம் செய்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேலும் விஜயகாந்த் தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து பேசுங்கள் எனவும் தேமுதிக அழைப்பு விடுத்தது. இதுநாள் வரை தேமுதிகவுக்காக காத்திருந்த பாஜக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகளோ இப்போது விஜயகாந்த்தை விட்டு விலகி வருகின்றன. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவோ, தேமுதிக தங்களுடைய கூட்டணிக்கு வந்தாலும் தலைமை ஏற்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது

டோனால்ட் டிரம்ப் :வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு நுழைய விடக்கூடாது..NRIக்களின் வயிற்றில் புளி....

வாஷிங்டன் - வெளிநாட்டவர்களை அமெரிக்காக்குள் நுழைய விடக்குடாது என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த் டோனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் பிற நாட்டவர்கள் மீது தொடர்ந்து விஷத்தைக் கக்கி வருகிறார் டிரம்ப். சமீபத்தில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
வெளிநாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற விடக் கூடாது. . இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டவர்களை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

வரவேற்க ஆளே இல்லாத நிலையில் வந்திறங்கிய ஓ.பி.எஸ். ( படங்கள் )

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு வந்திருந்தார் . கோவை விமானநிலையத்தில் வீல் சேரில் தனது அம்மாவுடன் கடந்த பிப்ரவரி -16 –ந் தேதி வந்திறங்கிய ஓ.பி.எஸ் முகம் தொங்கியபடியே வெளியே வந்தார்.ஒரு காலத்தில் மீடியாக்களின் ப்ளாஷ் வெளிச்சத்தில் மிதந்தும், பூங்கொத்துகளும், மாலைகளும், பொன்னாடைகளோடும், அம்மா வாழ்க ...அம்மா வாழ்க ...என்ற கோஷங்களோடும் வாகன வரிசையில் எந்த வாகனத்தில் ஏறுவது ? என்ற குழப்பத்தில் சிரித்து பயணித்த ஓ.பி.எஸ்...இப்போது  தன்னை வரவேற்க ஆளே இல்லாத நிலையில் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து வந்தார்.உறவினர்கள் யாரோ இரண்டு பேரின் கார்கள் மட்டுமே நின்றிருக்க..அதில் ஒரு காரில் தன் அம்மாவுடன்  ஏறி ஓ.பி.எஸ் பறந்ததை ஒரே ஒரு  செல்போன் மட்டுமே எடுத்தது. அந்த செல்போன் படங்கள் தான் இவை. nakkheeran,in

பிரேமலதா! - பின்னணி பேரங்கள் ....மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா!

vikatan,com :அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!” - “தி.மு.க-தான் இறங்கி வரலை!”ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி:இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை... வந்தார்; சொல்வதாகவே இல்லை... சொன்னார்.அவர் சொன்னாரா... சொல்லவைக்கப் பட்டாரா என்பது, பிரேமலதாவுக்குத்தான் தெரியும்.

புலனாய்வு....விஜயகாந்த் டம்மி.....தேர்தலுக்கு பிறகு பிரேமலதா கட்சியை....? ஆங் அதேதான்

தேர்தலுக்கு பிறகு, விஜயகாந்த்தை டம்மியாக்கி, பிரேமலதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தி.மு.க.,வுடனான கூட்டணியை தவிர்த்துள்ளதாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தே.மு.தி.க., நேர்காணலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கேள்வியை விஜயகாந்த் கேட்டுள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம் என, பதிலளித்துள்ளனர். இந்நிலையில், மார்ச், 11ம் தேதி நடந்த மகளிர் அணி கூட்டத்தில், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்ற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார். இதனால், தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பை எட்ட முடியுமா? என்ற குழப்பத்தில் நிர்வாகிகள் வலம் வருகின்றனர்.  அந்த ஆள் இப்பெல்லாம்  தண்ணி போடாமலே உளறுகிறார்..மறை கழண்டுகிட்டே வரது ...பிரேமாவுக்கு அடிச்சது  ஜாக்பாட்...சு.சாமிவேற திட்டங்கள் தீட்டி தீட்டி கிட்டே பிரேமாவை வழி நடத்துறார்....ஜமாயுங்க    

மலம் அள்ள மனிதர்களைப் பயன்படுத்தும் உலகின் மிகப் பெரிய நிறுவனம் இந்திய ரயில்வே


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு நாள். பொழுதைக் கழிக்கப் பக்கத்திலிருந்த சுட்டிப்பையன் உதவினான். அவன்தான் கேட்டான், “அங்கிள், இன்ஜின் டிரைவர்ஸ் ரயில் போய்க்கிட்டிருக்கும்போது எங்கே போயி உச்சா போவாங்க?” இந்திய ரயில் இன்ஜின்களில் கழிப்பறை கிடையாது. இதுபற்றியெல்லாம் நாம் யோசிப்பதும் கிடையாது. ஒரு கேள்விக்கான பதிலையே சொல்ல முடியாமல் தத்தளித்தபோது, அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான். “நீர்க்கடுப்பு வந்தா என்ன செய்வாங்க? வயித்தால வந்தா என்ன செய்வாங்க?”

திமுகவோடு கூட்டணி சேரும் கார்த்திக்.....கலைஞரை சந்தித்து பேசவுள்ளார்

சென்னை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுக கூட்டணியில் இணைகிறார். அவருக்கு ஒரு சீட் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இதுவரை பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான கட்சிகளாக காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை மட்டுமே. அதுதவிர ஏகப்பட்ட சாதி, மத அமைப்புகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. தினசரி பல்வேறு அமைப்புகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் கட்சி திமுக கூட்டணியில் இணைகிறது.

தினமலர்: தகுதியான ஆளின்றி தவிக்கும் தி.மு.க....தகுதியானவர்களை வெளியேற்றுவதிலேயே குறி.......

தமிழகத்தில், ஆறு முறை ஆட்சி கட்டிலை பிடித்த கட்சி என்ற பெருமையை பெற்ற, தி.மு.க., இன்று, கூட்டணி பேசக்கூட, தகுதியான ஆட்கள் இன்றி திணறிக் கொண்டிருக்கிறது.
திராவிட கழகத் தலைவர், ஈ.வெ.ரா. வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணா துரை மற்றும் சில தலைவர்கள் பிரிந்து, 1949 செப்., 17ம் தேதி, தி.மு.க.,வை துவக்கினர். கட்சி துவக்கப்பட்ட பின், 1952ல் நடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., பங்கேற்கவில்லை. இணைந்து போட்டி: அடுத்து, 1956 மே, 17ம் தேதி முதல், 20ம் தேதி வரை, திருச்சியில் நடந்த, தி.மு.க., இரண்டாவது மாநில மாநாட்டில், தேர்தலில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில், 112 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.கடந்த, 1958 மார்ச் 2ல், தி.மு.க., மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, 'உதயசூரியன்' சின்னத்தை, தேர்தல் சின்னமாக பெற்றது. அடுத்து, 1962ல், நடந்த பொதுத் தேர்தலில், 50 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியது. என்னதான் சொன்னாலும் அழகிரிதான் இந்த மாதிரி விவகாரங்களுக்கு சரியான ஆளு....அதனால்தானோ அவருக்கு  கல்தா?  

சங்கர் - கௌசல்யா ! தமிழகம் மீளமுடியாத ...... ரிப்போர்ட்

kumaralingam-dalit-murder-report-9வினவு.com :அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும் அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை, வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி? உடன் கொமரலிங்கத்திற்கு புறப்பட்டோம்.
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம்தான் கொமரலிங்கம். 16.03.2016 அன்று அங்கே நுழையும் போது கிராமமே மயான அமைதியுடன் இருந்தது. சுவரொட்டியோ, அரசியல் கட்சி தலைவர்களின் வருகையோ எதுவுமில்லை. தெருவுக்கு தெரு குவிக்கப்பட்டிருந்த போலீசை தவிர ஒரு தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட கிராமத்திற்கான தடையமே இல்லை.

சாதி அடையாளம் என்பது.....மகளையும் மருமகனையும் கொல்லும் அளவுக்கு

தஞ்சாவூரில் சசிகலா குடும்பமும், அதன் உறவுக் கும்பலும்தான் கடந்த 30 வருடங்களில் கணக்கற்ற அளவுக்கு பணம் சேர்த்த கும்பல். இந்த கள்ளர் குடும்பம் சம்பாதித்ததால் என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த இரண்டு உறவுக்கார தாத்தாக்களும் மகனை விலக்கி வைத்ததைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. இப்போது ஒருவர் வீட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார். இன்னொருவர் விலக்கி வைக்கப்படுவது தொடர்கிறது, ஆனால், அவருடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை இருக்கிறது. அவருக்கான சொத்துக்கள் முறையாக தரப்பட்டது.

எம்ஜியார் அதிமுக? அதிருப்தி கோஷ்டி புதுக்கட்சி ? பணம் பத்தும் செய்யும்.....

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கியதால், அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட ஜெயலலிதாவே காரணமாக இருக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜெயலலிதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில், சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னரே, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மார்ச், 2016

சாய் பிரசாந்த் தற்கொலை: தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ராதிகா வேண்டுகோள்: கண்டிஷன் கையெழுத்து வாங்காதீர்கள்

சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ராதிகா சரத்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது தெருவில் வசித்தவர் நடிகர் சாய் பிரசாந்த் (30). நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ‘இளவரசி’, ‘அண்ணாமலை’, ‘அரசி’, ‘செல்வி’ உட்பட பல சின்னத்திரை மெகா தொடர்களிலும், ‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’, ‘ஐந்தாம்படை’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சாய் பிரசாந்த்தின் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து ராதிகா சரத்குமாரிடம் கேட்டபோது "சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.

சமச்சீர் கல்வியால் பயனில்லை ! அறிவுக்கொழுந்து அன்புமணி ராமதாஸ் கருத்து


தமிழகத்தில் சமச்சீர் கல்வியால் எந்த பயனும் இல்லை’ என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
`தமிழக வளர்ச்சி பற்றி’ என்ற தலைப்பில் 7 நகரங்களில் 7 நாட்கள் அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நேற்று தரமான கல்விக்கான செயல் திட்டங்கள் குறித்து அவரது உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர் பேசியதாவது:
தமிழக மக்கள் தொகையில் 1.30 கோடிபேர் மாணவ, மாணவிகள். அவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்படவில்லை.ராமதாஸ்  போன்ற தனியார் கல்லூரி உரிமையாளர்கள் (கொழுத்த லாபம் பார்பவர்கள்)....சமசீர்கல்வியை தொலைக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவது ஆச்சர்யம் இல்லை

பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடித்தது 16 பேர் பலி 30 பேர் படுகாயம் தலைமை செயலக ஊழியர்கள் பணயம்

dailythanthi.com :பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து குண்டு வெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மர்தான் பகுதியில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், பெஷாவரில் குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்சில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள்16 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மாவை வீழ்த்த அசுவமேத யாகம் ஓ.பி.எஸ்! - அதிர்ந்தது கார்டன்!.... நிரந்தரமா உள்ளே இருக்க பன்னீரு வளர்த்த தீ?

விகடன்.com :  சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம் அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து  வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.

தமிழ் திரை வளர்த்த ஜாதி வெறி....பார்பனர் சினிமா வேறு என்ன சொல்லும்?

தேவர் மகன் விருமாண்டி போன்ற போன்ற படங்கள் மட்டும் அல்ல பாலச்சந்தர் ஷங்கர் மணிரத்னம் படங்களும்  மறைமுகமாக ஜாதிவெறியை தூண்டியவைதான். பார்பனீயத்தை வளர்த்ததில் இவர்களின் பங்கு அளப்பெரியது. சாதியத்தின் மூலவேரே பார்பநீயம்தானே?   vikatan.com :ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா? அவன் வேறு சாதி. அவனும் இருக்கக் கூடாது. அவன் தொட்ட, அல்லது அவனைத் தொட்ட அவளும் இருக்கக்கூடாது. சாகடிப்போம்’ என்று இளைஞர்களின் மனதில் சாதிய வெறியை பல தளங்கள் விதைக்கிறது. அதில் திரைப்படங்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. திரைக் கலைஞர்களும் ‘மேல் சாதி’ என்று சொல்லப்பட்டு வருகிற ஒரு சில சாதியைச் சார்ந்தே திரைப்படம் எடுப்பது, அவர்களைப் பற்றிய வசனங்களில் அடக்கி வாசிப்பது என்று சாடவேண்டிய சாதிக் கொடுமையைச் சாடாமல், பேசாப் பொருளாய் பட்டும் படாமலும் காட்சிகளில் வைத்துச் செல்கின்றனர்.