சனி, 18 மே, 2019

சங்கர மடம் மீண்டும் சங்கடச் சூழலில்.. ஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர்! -

"ஜூனியர் விகடன் டீம் : ஆன்மிகம்... அரசியல்... அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது.< “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச் சாதித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் எங்களால் ஒன்றும் செய்யமுடிவில்லை’’ - ஜூனியர் விகடனில் கடந்த இரு இதழ்களில் மிஸ்டர் கழுகு பகுதி யில் வெளியான சங்கர மடத்தின் விவகாரம் பற்றிய செய்திகளைப் படித்துவிட்டு, நம்மைத் தொடர்புகொண்ட மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள் சிலர், புலம்பியதுதான் மேற்கண்ட வரிகள். என்னதான் நடக்கிறது காஞ்சி மடத்தில்? தீவிர விசாரணையில் இறங்கினோம்.

இலங்கை கலவரங்கள் : சுமார் 500 கட்டிடங்கள் சேதம், இருவர் மரணம், பலர் கடும் காயம் ...

Jeevan Prasad : கடந்த 13ம் திகதி காவாலிகளின் வன் முறையில் .......
🧐 இருவர் மரணம்
🧐 10 பேருக்கு கடும் காயம்
🧐 நாத்தண்டிய பகுதியில் 5 படையினர் காயம்
🧐 வாறியப்பொலவில் 23 வீடுகளும் ,எண்ணை தயாரிக்கும் இடமென்றும் எரிந்து சாம்பல்
🧐 ஹெட்டிப்பொலவில் 70 வீடுகளும், 40 வியாபாரதலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
🧐 பிங்கிரியவில் 3 இஸ்லாமிய மதக் கட்டிடங்கள் தாக்குதலுக்கு உண்டாகியுள்ளன
🧐 மினுவாங்கொடவில் 60 வியாபாரதலங்கள் தீக்கிரையாகியுள்ளன
🧐 60 பேர் கைது 33 பேர் தடுப்புக் காவலில்
🧐 இதுவரை சுமார் 500 வரையிலான கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
🧐 இதில் சிங்களவரது கட்டிடங்களும் அடக்கம்.
🧐 காடையர்களது தாக்குதலால் நாத்தண்டிய , கொட்டறாமுல்லை பிரதேசத்தில் வசித்த M.M.S. அமீர் எனும் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
🧐 இதனிடையே கொட்டராமுல்ல மற்றும் தும்மோதர பிரதேச முஸ்லீம் காடையர்கள் , மொறகலே எனும் சிங்கள கிராமத்தினுள் நுழைந்து சிங்களவரது சில வீடுகளுக்கு சேதம் விளைவித்துள்ளார்கள்.

இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு.. 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர்.

r
rr.nakkheeran.in - இளையராஜா : சேலத்தில், இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இலங்கையில் எல்டிடிஇ போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின்போது, அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்காக தமிழகம் முழுவதும் 110 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்பத்தில் 3 லட்சம் அகதிகள் இருந்த நிலையில், பலர் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர் இப்போது, 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் குறுக்குப்பட்டி, பவளத்தானூர், நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அறிவதற்காக நாம் குறுக்குப்பட்டியில் உள்ள இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தோம். 

ரணில் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா.. Ranil meets Dhammika! 2020 common candidate Dhammika?

Jeevan Prasad : · ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது
அபேட்சகருக்கான தம்மிக்க பெரேராவின் பரப்புரைகள் இன்று சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவர் ஜனாதிபதியானதும் ,பீல்ட் மாசல் சரத் பொண்சேகாவை பாதுகாப்பு அமைச்சராகவும் , கோடீஸ்வர தொழிலதிபரான ரொகான் பல்லேவத்தவை நிதியமைச்சராகவும் , ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி நாகாணந்த கொடிதுவக்குவை நீதியமைச்சராகவும் , நியமிப்பதாக குறிப்பிட்ட விளம்பர போஸ்ட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று காண முடிகிறது.
இவரது நெருங்கிய நண்பர் மைத்ரியின் தம்பி டட்லி சிரிசேன. மகிந்தவின் ஏகப்பட்ட பணத்தை இவர்தான் நிர்வகிக்கிறார். பினாமியாக ....... ஆனால் தம்மிக்க ரணிலின் பழை கூட்டாளி. குடும்ப நண்பர்.
இரு நாட்களுக்கு முன் ரணிலும் - தம்மிக்கவும் தனிமையில் சந்தித்துள்ளார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு ரணிலிடம் தம்மிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். ரணில் சந்திரிகா சொன்னதற்காக மைத்ரிக்கு வாய்பளித்தார். இப்போதுள்ள நிலையில் ரணில் தம்மிக்கவை தம்மோடு இணையச் சொல்லியதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து. அதை தம்மிக்க ஏற்றுள்ளார்.

எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை

``எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!
vikatan.com - வெ.வித்யா காயத்ரி வி.ஶ்ரீனிவாசுலு :
 ஒருவர் மட்டுமே படுக்கும் அளவிலான வீடு. வீட்டின் மேற்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டிருந்தது. வீடு முழுக்கப் பாத்திர பண்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. சூரிய வெளிச்சம் கூட முழுமையாக அந்த வீட்டுற்குள் வர வாய்ப்பில்லை. மழை கொஞ்சம் வெளுத்து வாங்கினால் வீடு முழுக்கத் தண்ணீர் மயமாகிவிடும். அப்படிப்பட்ட வீட்டிற்குள்தான் இந்தப் பாட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
க்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும் திருவல்லிக்கேணி ஏரியாவிற்குள் நுழைந்தோம். எங்கே பார்த்தாலும் பெண்கள் காலி குடங்களுடன் வரிசையில் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவில் வயதான பாட்டி ஒருவரும் அமர்ந்துகொண்டு அனைவரையும் வரிசையில் நிற்கும்படி கண்டித்துக்கொண்டிருந்தார். கம்பீரமான குரல், வளைந்து நெளிந்து கிடக்கும் கால் நரம்புகள், நீளமான கூந்தல் என முதுமையின் அழகோடு இருந்த அவரிடம் பேசாமல் நகர மனமில்லை. பேச ஆரம்பித்ததும் அவருடைய வீட்டிற்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்னம்பலம் : பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது: உத்தரவு!ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்களான ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்குப் பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களைப் பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர குடும்பத்து பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்திரா காந்தியை போல் பாதுகாவலர்களால் நானும் சுட்டுக் கொல்லப்படுவேன் - கெஜ்ரிவால் பகீர்

இந்திரா காந்தியை போல் பாதுகாவலர்களால் நானும் சுட்டுக் கொல்லப்படுவேன் - கெஜ்ரிவால் பகீர்மாலைமலர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன். என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள். இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்

கேதார்நாத் குகையில் மோடி

கேதார்நாத் குகையில் மோடிமின்னம்பலம் : இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள் என அரசியல் கட்சியினர் பரபரப்பாகக் காணப்பட்டனர். எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாளை இறுதியாக 7ஆம் கட்ட தேர்தலுடன் ஜனநாயக திருவிழா நிறைவு பெறுகிறது.
மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொள்ள மோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகப் பிரதமர் அலுவலகத்துக்குத் தேர்தல் ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் மூவர் கொலை... மகன் கைது சொத்துக்காக மகனும் மருமகளும் சேர்ந்து ..


viluதினமணி : திண்டிவனத்தில் ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அது திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடித்த காவல்துறை அதே குடும்பத்தைச் சேர்ந்த மகன், மருமகளைக் கைது செய்துள்ளது.
குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து மூன்று பேரும் உயிரிழந்ததாகக் கூறிய மகனிடம், காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது மனைவியுடன் சேர்ந்து சொத்துக்காக சொந்த தாய், தந்தை, சகோதரனைக் கொன்றுவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

ஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை!

ஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை!
Rishi Joshua Thomas
மின்னம்பலம் : டெல்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படித்துவந்த வேலூர் மாணவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் ரிஷி தாமஸ். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள மஹி மாண்ட்வி ஆண்கள் விடுதியில் இவர் தங்கியிருந்தார். நேற்று (மே 17) ஆங்கிலப் பேராசிரியர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ரிஷி தாமஸ். அதில், தான் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியர் இது பற்றித் தகவல் தெரிவித்ததன் பேரில், மதியம் 12 மணியளவில் ரிஷி தாமஸை பல்கலைக்கழக வளாகத்தில் தேடினர் போலீசார்.

மெரீனா அருகே 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்

சென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என கூறப்படுகிறது

ரேஷனலிஸ் முகமூடியில் ஒளிந்திருக்கும் பாஸிஸ்ட்கள்

Devi Somasundaram : அரசியல் இத்தனை பரபரப்பா இருக்கு .ஆனா சில கள்ளமெளனங்களை நான் கவனித்துகொண்டு இருக்கின்றேன் .
சீமான் தனக்கு யாரோ 400 கோடி கொடுக்க முயன்றதா சொல்கிறார் ..அதற்கு சுபவீ யார் சொன்னது ஆள காட்டுன்னு செக் வைச்சு இருக்கார் .
தமிழிசை ஸ்டாலின் பி ஜே பி கிட்ட பேசியதா கூறினார் ..அதற்கு ஸ்டாலின் நான் பேசியதை நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்ன்னு திருப்பி அடிக்கிறார்.
கமலின் இந்து தீவிரவாதி அரசியல் ஒரு புறமும் ..
சீமான் 400 கோடி கதைக்கு சுபவீ பதில் சொல்லாம இருந்திருந்தா திமுக ஏன் அறிக்கை விடலன்னு இங்கு பலர் பேசி இருப்பாங்க ..திமுக வை ஸ்டாலினை குறி வைத்து பேசி இருப்பார்கள் .
இப்ப சுபவீ பேசின் பின் ஏன் யா பொய் சொன்னன்னு சீமான இவர்கள் கேட்டு இருக்கனும்...கேட்க மாட்டார்க்ள் . ஏன் ? ..
பயந்த பெண்களை, எதிர்க்க முடியாத குழந்தைகளை ரேப் செய்கின்ற அக்யூஸ்ட்கள் போல் அதென்ன உங்கள் அறச்சீற்ற பெனிஸ் திமுக வை பார்த்தா மட்டும் விரைத்து கொள்கிறது ...
தமிழிசைக்கு ஸ்டாலின் பதில் தராம இருந்திருந்தா பாத்தியா ஸ்டாலின் துரோம்னு இந்த சங்கி கும்பல் போட்டு தர மீம் தூக்கிட்டு திமுக ஆதரவாளர் பேஜ் பேஜா போட்டு இருப்பார்கள் .. திமுக ஒன்றும் யோக்கியமில்லைன்னு லெஙக்தியா கட்டுரை எழுதி இருப்பார்கள் .. .நாம் தமிழர் தும்பிள் கமண்ட் போட்டா அதுல உள்ள பூந்து ஆமா ஆமான்னு அவர்களுக்கு சப்போர்ட் செய்து ஸ்டாலின தாக்குவார்கள் ..
ஆனா இப்ப அவர்கள் அத்தனை பேரும் சைலண்ட் ..

ஊறுகாய்கூட காசுதான்… பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் தஞ்சை உணவகம்!

மண்பானை சமையல்உணவகம்விகடன் -கே.குணசீலன் - ம.அரவிந்த் : தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள சைவ உணவகம் ஒன்று, குடிக்கிற தண்ணீர் முதல் உட்காரும் நாற்காலி வரை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நம் பாரம்பர்யத்தை நினைவுப்படுத்தும் வகையிலும் அதை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. “இங்க சாப்பிடுறவங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்க எல்லா வகையில் முயற்சி செய்கிறோம்” என்கின்றனர் ஹோட்டல் நிர்வாகிகள்.
உணவகம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிச் சாலையில் உள்ள கணபதி நகரில், `பாரம்பர்யத்தின் மீட்டெடுப்பு’ என்கிற அடைமொழியுடன் ‘செல்லம்மாள் மண்பானைச் சமையல்’ என்ற சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. பழைமையான வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை அப்படியே பாரம்பர்யம் மாறாமல் புதுப்பித்துள்ளனர். வாசலில் மாட்டு வண்டியும், பயணத்துக்குப் பயன்படுத்திய கூண்டு வண்டியும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. டைனிங் ஹாலில் பத்துக்கும் மேற்பட்ட மரத்தினாலான தூண்கள் அழகுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. தென்னை மற்றும் பனங்கீற்றுகளைக் கொண்டு பூ போன்ற வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையைச் சுற்றிலும் ஈச்சை ஓலை, வாழை மட்டை, நாணல், கோரைப்புல் ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பழங்காலத்து அரிக்கன் விளக்கில் மின் விளக்கு மின்னிக்கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல் ..4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன?

எடப்பாடி பழனிசாமிஸ்டாலின்முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன? மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பனர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். சூலூர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். ஓசூர் தொகுதியின் உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற வழக்கின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆகவே தற்போது தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை 212ஆகக் குறைந்துள்ளது. இதில் அ.தி.முகவின் பலம் சபாநாயகரைத் தவிர்த்து 115ஆக உள்ளது.

வெள்ளி, 17 மே, 2019

ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி 5 வருடங்களில் ஒரே ஒரு தடவை ... அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. !

Shyamsundartamil.oneindia.com : டெல்லி: டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி செய்தியாளர்களின் கேள்விகள் எதையும்
எதிர்கொள்ளவில்லை.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் அமித் ஷாதான் பேசினார். அமித் ஷாவை தொடர்ந்து மோடி பேசினார். மோடி தேர்தல் குறித்த விஷயங்களை பேசிவிட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்கள் கேள்வி கேட்க தொடங்கினார்கள்.
முதலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் செய்த சர்ச்சைக்குரிய பிரச்சாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதன்பின் மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் வரிசையாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்து வந்தார்.
ஆனால் பிரதமர் மோடி எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்

பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்

13480884-7027437-image-m-39_1557834481514 பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம் பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம் 13480884 7027437 image m 39 1557834481514வீரகேசரி: சவூதி அரேபியா – ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான லவ்லி அகோஸ்டா பார்லேலோ என்ற பெண், பல மாதங்களாக, சவுதி அரேபியாவின் ரியாத்தில் பணக்கார குடும்பத்தில் பணியாற்றி வருகிறார்.  குறித்த பணிப்பெண் வீடு உரிமையாளரின் விலை உயர்ந்த தளபாடங்களை சூரியன் ஒளிபடும் படி வெளியில் போட்டதால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு மரத்தோடு இணைக்கப்பட்டு கயிற்றால் கட்டி தண்டனை வழக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கை வன்முறை .. அரசுக்கு எதிரான குழுவின் கைவரிசை...


தினகரன் :அரசாங்கத்தை கஷ்டத்துக்குள் தள்ளும் நோக்கில் அரசியல் பின்புலத்தைக் கொண்ட குழுவொன்று திட்டமிட்டு வன்முறைகளை
கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திட்டமிட்ட குண்டர்கள் குழு வன்முறைகளில் ஈடுபட்டமைக்கான சாட்சிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.
அரசியல் நோக்கம் கொண்டவர்களால்
மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பயங்கரவாதிகள் குறித்த விசாரணைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிரு்பபதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நவீன் திஸ்ஸாநாயக்க ஆகியோரே இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய். அவ்வாறானதொரு தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியல் நோக்கம் கொண்டவர்களால் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா!

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா!மின்னம்பலம்:  ’கொல்லாதே கொல்லாதே விவசாயிகளைக் கொல்லாதே... நிறுத்து நிறுத்து... கெயில் குழாய் பதிப்பதை நிறுத்து. நாசம் செய்யாதே நாசம் செய்யாதே பயிர்களை நாம் செய்யாதே...’
-இந்த முழக்கங்கள் ஏதோ தெருமுனைப் போராட்டங்களில் முன் வைக்கப்படுபவை அல்ல. நாற்றுகள் நிறைந்த வயல்களில் சேற்றில் நின்று நேற்றில் இருந்து (மே 16) விவசாயிகள் எழுப்பும் முழக்கங்கள் இவை.
கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பற்றிய பேச்சுகளில் ஊடகங்கள் மூழ்கியிருக்கும் நேரத்தில், காவிரி டெல்டா பகுதியான மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் ஓஎன் ஜிசி நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

காரணம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி அருகே உள்ள மேமாத்தூர் வரை உள்ள 29 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பசுமையான வயல்கள் வழியாக ஹைட்ரோ கார்பன் கேஸ் கொண்டு செல்வதற்காக கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் வேலைகளில் சில நாட்களாக தீவிரமாகியிருக்கிறது .

தாய்வான் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. ஆசியாவில் முதல்முறை ..

ஆசியாவில் முதல்முறை - ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தைவான் பாராளுமன்றம் ஒப்புதல்வெப்துனியா ; ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை தைவான் பாராளுமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது. தாய்பெய்: அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும், எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

மோடியும் அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர் 5 ஆண்டுகளில் முதல் தடவையாக .... வீடியோ

.vikatan.com- -malaiarasu : மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையின் கடைசிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதேநேரம் மற்றொருபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரஸ் மீட் நடத்தினார். முதலில் பேசிய அமித் ஷா, ``இந்த மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவில் பா.ஜ.க பிரசாரம் செய்துள்ளது. சுதந்திரத்துக்கு பிந்தைய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இதுதான் முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உணர்கிறார்கள்.

ஹைட்ரோ காபன் எடுக்க 274 இடங்களில் கிணறு ... இதை மடைமாற்றும் கமல் ... கோட்சே திரைக்கதை ..


குருமூர்த்தி - கமல்
ராஜா ஜி : கோட்ஸே பற்றிய கமலின் பேச்சு-- என் சந்தேகம்! - ஜே.டி.சாக்ரடீஸ்
தமிழகத்தை அழிப்பது மட்டுமே பாஜக வின் நோக்கம் என்பதற்கும், அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி நடத்தும் அஇஅதிமுக அரசையும் விமர்சிப்பதற்கு எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ..... கோட்ஸே பிரச்சினையை கமல்ஹாசன் பேசி இருக்க வேண்டியதில்லை.... கோட்ஸே யார்? காந்தி யார்? என்பது மக்களுக்குத் தெரியாத ஒன்றல்லவே.... ஆனால்..... பேசிவிட்டார்...... இது கமல்ஹாசனின் இயல்பான பேச்சு அல்ல என்பதும் முன் தயாரிப்புடன் பேசப்பட்ட பேச்சு என்பதும் என் கணிப்பு!
இங்கே....> இந்த முன் தயாரிப்புக்கு மூளையே பாஜக வாகத்தான் இருக்க முடியும் என்பது என் நம்பிக்கை .....
ஆம்..... நெல் விளையும் டெல்டா மாவட்ட பூமி ஹைட்ரோ கார்பனுக்காக சல்லடையாகத் துளைக்கப் பட உள்ளது......
இந்த சிந்தனையை..... இதை எதிர்த்து போராடாமல் நம்மை மடைமாற்றம் செய்வதற்காக செய்யப்பட்ட முன் தயாரிப்பு.....

BBC :திரிணாமுல் - பாஜக கடும் மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்


புதன்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி ஒன்றை நடத்தியது. அது எதற்காகத் தெரியுமா? ஒரு நாள் முன்னதாக அமித் ஷாவின் சாலை பேரணியில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே நான் பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டேன். அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.
அங்கு நான் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையில் வன்முறை தொடர்பான தனது கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
"அனைத்துக் கட்சிகளும் வன்முறை அரசியல் செய்கின்றன. பாஜக பாதிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் வங்காள கலாசாரத்தை காப்பாற்றுவதாகவும், இடதுசாரிகள் தீவிரவாத வன்முறையை கண்டிப்பதாகவும் சொல்லி ஆதாயம் தேடிக்கொள்ள விரும்புகின்றன" என்கிறார் அவர்.
 கூட்டம் மேலும் அதிகரித்தபோது, மீண்டும் அந்த வயதான பெண் ஆசிரியரை தேடிப்பார்த்தேன். அவரை காண முடியவில்லை. ஆனால் அவரது கருத்துக்களில் இருந்த உண்மை புரிந்தது.

அதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்: காங்கிரஸ் புகார்

அதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்: காங்கிரஸ் புகார்மின்னம்பலம் : தேனியில் மறுவாக்குப்பதிவுக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் களத்தில் உள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி, பெரியகுளம் அருகிலுள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு இடங்களுக்கும் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூரிலிருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இதற்கு திமுக, அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரிங்கா காந்தி உத்தர பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் ...


தினகரன் :உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  நேற்று முன்தினம் மாலை   வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பிரியங்கா உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து தண்ணீர்  கொடுத்து முதலுதவி செய்தார்.
மயக்கம் தெளிந்த அந்த நபரிடம் விசாரித்தலில் அவர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக கார் ஒன்றை வரவழைத்த பிரியங்கா, அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.  இதேபோல சில தினங்களுக்கு முன்  கட்டியால் பாதிக்கப்பட்ட  சிறுமியை தனி விமானம் ஏற்பாடு செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைகான செலவுகளை தானே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தலையணைக்குள் கஞ்சா கடத்தல் ...பொறி வைத்து கும்பலை பிடித்த போலீஸ்


வெப்துனியா:  சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கஞ்சா விற்பதாகவும் போலீஸாருக்குத் தலகவல் சென்றது.
இதனையடுத்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையில் ஒருதனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் ஜோதி என்ற பெண்ணின் வீட்டிலிருந்து 3 கிலோ கஞ்சாவையும், கொருக்குப்பேட்டை பகுதில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் காசிமேடு பகுதியில் வசிக்கும் பாலமுருகன், இளங்கோவன் ஆகியோரிடம் போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறிய தகவலின்படி மிஞ்சூர் பகுதில் வசிக்கும் சுரேஷ் குமார் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு தலையணையில் கஞ்சா அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

தொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை

தொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை
தினமலர் : வாஷிங்டன், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும், அவசர நிலை பிரகடனத்தில், அந்த நாட்டு அதிபர், டிரம்ப், நேற்று கையெழுத்திட்டார்
சமீப காலமாக, அமெரிக்காவுக்கும், நம் அண்டை நாடான, சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது. சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலடியாக, சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில், தொலை தொடர்பு சம்பந்தமான தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதை தடுப்பதற்காக, தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே.,வங்கத்தில் தேர்தல் ஆணையருக்கு கட்சிகள் கண்டனம் ..ஒருநாள் முன்னதாக பிரசாரம் முடித்தமைக்கு ..

ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்தினத்தந்தி :ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் 19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவுக்கு வர இருந்தது.
ஆனால் கொல்கத்தாவில் 14-ந் தேதி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நடத்திய பேரணி நடத்தினார். அதில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி (நேற்று) இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 324-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் இப்படி அரசியல் சாசன சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருப்பது இதுவே முதல் முறை.
இதை அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கையின் 9 மாகாணங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டினார்கள் .. பிடிபட்டவர்கள் தகவல் ...

Jeevan Prasad : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!
கருத்து மோதல் - கனதியை குறைத்தது - 5
இதுவரை கைதான அனைவரையும் விசாரித்ததில் ஒரே நாளில் , ஒரே நேரத்தில் , இலங்கையின் 9 மாகாணங்களிலும் பாரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு திட்டம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக வெடி பொருட்கள் அடங்கிய குண்டுகளை நிரப்பிக் கொண்டு செல்லக் கூடிய, தோளில் சுமக்கும் 20 backpack பைகளை , பத்தரைமுல்லையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்கியுள்ளார்கள். 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடிய backpack bagகளை அந்தக் கடையில் தேர்வு செய்து எடுத்துள்ளார்கள்.
அந்தப் backpack bag பைகள் ,தற்கொலைதாரிகள் வெடித்துச் சிதறக் கொண்டு செல்லும் குண்டுகளை நிரப்பி , நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு கொண்டு செல்வதற்கேயாகும். அதோடு வாகனங்களில் பொருத்தும் குண்டுகளையும் , நாடு முழுவதும் வெடிக்க வைக்க வேண்டும் என்பது , அத்தாக்குதலலோடு இணைந்த தாக்குதல் திட்டமாகும். ஏப்ரல் 16ம் திகதி இரவு வேளையில் காத்தான்குடியில் வைத்து எதிர்பாராதவிதமாக ஒரு வாகன குண்டு வெடிக்கிறது. அது ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டாகும்.

பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..

Mansoor Mohammed :; ஏன் இஸ்லாமிய இயக்கங்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் அரசியல் செய்யகூடாதென்கிறார் சமூக போராளி Banu Iqbal.
.. பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..
நீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா..
இஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட
Assignment வேலையே அதுதானா..? ..
ஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்.. ..

வியாழன், 16 மே, 2019

சீமானுக்கு 400 கோடி ரூபாய் பேரம் ... கைமாறியது எவ்வளவு? தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?


சத்தியத்தின்_பிள்ளைகள்_வாய் #திறப்பார்களா?
(நுணலும் தன் வாயால் கெடும்)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கூட்டத்தில் பேசும் போது, "தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் 400 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கு நான், "தெருக்கோடியில் நின்றாலும் நிற்பேனே இல்லாமல், கோடிகளுக்கெல்லாம் இந்தச் சீமான் மயங்க மாட்டான்" என்று பேசினார். அது மட்டுமல்லாமல், '#நாங்கள் #சத்தியத்தின்_பிள்ளைகள்' என்று அடிக்கடி கூறிக் கொண்டார். அந்த சத்தியத்தின் பிள்ளைகளிடம் சில கேள்விகள் -
 அப்படி 400 கோடி ரூபாய் உங்களுக்கு தருவதாக பேரம் பேசியவர்கள் யார்? அவர்களை பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தீர்களா? லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தீர்களா?
நீங்கள் அறிவும், மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உண்மைகளை வெளியிடவும் முன் வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஏனெனில் நீங்கள்தான் சத்தியத்தின் பிள்ளைகள் ஆயிற்றே! ஒருவேளை வெளியிடாமல், இதற்கும் விடை சொல்லாமல் மெளனமாக இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போனவர் ஆவீர்கள் என்பதுடன், பேரம் படியாததால்தான் உண்மையை வெளியிட மறுக்கின்றீர்கள் என்றும் ஆகும். சத்தியத்தின் பிள்ளைகளே, உண்மை அறியக் காத்திருக்கின்றோம் ! #சுப_வீரபாண்டியன்

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை!

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை!மின்னம்பலம் : பணியிலுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா எனும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தங்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

சென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்!

சென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்!மின்னம்பலம்: சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்களில் குளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.ஹரிஹரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உருவானது. தற்போதைய நிலவரப்படி, பூண்டியில் 133 மில்லியன் கன அடி, புழலில் 37 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 4 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் ஒரு மில்லியன் கன அடி என மொத்தம் 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி!ரவிக்குமார் - மின்னம்பலம் : அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு இணைப்புக் கல்லூரிகளில் கடந்த செமஸ்டரில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அந்த ஆறு கல்லூரிகளிலிருந்து 682 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.73 உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்களுக்கும் குறைவாகவே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தரமான கல்லூரிகள் எனச் சான்றளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 59 கல்லூரிகளில் மட்டும்தான் 50% மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகவும் தரமான கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே 85.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். (தகவல் : தி இந்து ஆங்கில நாளேடு 16.05.2019). இந்தத் தகவல்கள் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

தேனிக்கு மீண்டும் வந்த இருபது வாக்கு இயந்திரங்கள் ..... பன்னீரின் சொந்த இயந்திரங்கள்...?

votepallavinakkheeran.in - sakthivel.m : கடந்த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியோடு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தநிலையில்தான் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரழப்பு சந்தேகம் ... கொலையா?

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் பலி வழக்கில் திடீர் திருப்பம்தினத்தந்தி : திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடுத்து வைத்தல் என்பது யாதெனில்.....

Karthikeyan Fastura : ஒரு டாக்டர் நண்பரையும் Entrepreneur ஆக்கிவிட்டாச்சு. Dr.Vijay Anand என்னோட Startup பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தவர். அந்த பதிவுகள்
தான் இப்போது Startup விக்கிரமாதித்தன்ஸ் என்ற புத்தகமாக வந்திருக்கிறது. FB messengerல் தொடர்ந்து பேசுவார். நிறைய ஐடியாக்களை விவாதிப்பார். பல அவரது மருத்துவ துறைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும். ஆனால் மனிதருக்கு ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும் என்ற ஊக்கம் மட்டும் இருந்தது.
திடிரென்று ஒருநாள் "ப்ரோ, ஒரு புது ஐடியா. நான் எங்க மருத்துவ துறையில் PG முடித்து அதற்கு மேல் படிக்கணும் என்றாலும் அதற்கென்று தனி NEET Exam இருக்கிறது. அதற்கு ஒரு Online Mock Exam Portal பண்ணலாமா.. நீங்க செய்வீங்களா.. " என்றார்.
தாரளாமாக செய்யலாம். அது எப்படி இருக்கணும்னு சொல்லுங்க என்றேன்
அது ஒருவர் Online Test பண்ணிட்டு அவர்கள் எவ்வளவு Score எடுத்தாங்க. அவங்க கூட எழுதியவர்களில் எத்தனையாவது Rank, என்ன பண்ணினார்கள் என்று Test எழுதி முடித்ததும் தெரிந்தால் அவர்கள் Prepare பண்றதுக்கு வசதியாக இருக்கும். எங்கள் துறையில் இதற்கு போதிய கோச்சிங் சென்டர்ஸ் கிடையாது என்றார்.

எம்ஜியாரை மீறி பிரபாகரனால் டெலோ மீது தாக்குதல் நடத்தி இருக்க முடியாது

ஸ்ரீ சபாரத்தினம் - கலைஞர் கருணாநிதி
 ஈழப்போராட்டத்தின் தோல்வி சகோதர இயக்க படுகொலைகளில் ஆரம்பமானது.
இதில் புலிகளுக்கு துணை போனவர்கள் இந்திய மத்திய மாநில அரசுகள்தான் .
ஒரே நோக்கத்திற்காக போராட புறப்பட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட பொழுது தமிழ் மக்கள் அதிர்ந்து விட்டனர்.
கலைஞரும் இதர திமுக தலைவர்களும் மட்டுமல்ல பலரும் அதை தடுக்க குரல் கொடுத்தார்கள் .
ஆனால் எவரது பேச்சையும் செவி மடுக்ககூடிய நிலையில் அன்று புலிகளும் பிரபாகரனும் இருக்கவில்லை. வெற்றிகரமாக சகோதர இயக்க தலைவரையும் ஏராளமான் போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் . உடல்களை டயர் போட்டு தீயிட்டார்கள் . அதை ஒரு வீர போராக
கொண்டாடினார்கள்.
அந்த கொடிய நிகழ்வினால் தமிழக மக்கள் மிகவும் கொதித்து போயிருந்தார்கள் .அவர்களின் கொபத்தை தணித்து புலிகளை புனிதர்களாக காட்டும் பொறுப்பை ஏற்ற ஜூனியர் விகடன் பத்திரிகை பிரபாகரனின் அழகான படத்தை முன் அட்டைப்படமாக போட்டு அவரது பெரிய பேட்டியை வெளியிட்டு இருந்தது.
அது முழுக்க முழுக்க புலிகளின் பிரசாரமாகவே இருந்தது.
அந்த சகோதர படுகொலைகளை தடுத்து நிறுத்த கூடிய நிலையில் இருவர் இருந்தார்கள் ஒருவர் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமாச்சந்திரன் .அடுத்தது அன்றைய இந்திய மத்திய அரசும் அதன் raw அமைப்பும்.
இந்த இருபகுதியினரும் வேண்டுகோளின்படியே இந்த சகோதர படுகொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக பூட்டான் தலைநகரமான திம்புவில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் இயக்கங்களுக்கும் தமிழர் விடுதலை கூட்டணிக்கும் பேச்சு வார்த்தை நடந்தது .

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!மின்னம்பலம் :ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவினர் வித்தியாசமான பணப் பட்டுவாடா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது பணம் கொடுத்துவிட்டு, அந்தந்த வீட்டு சுவர்களில் அடையாள குறியிட்டுவருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன், அமமுக வேட்பாளர் சுந்தரராஜன், திமுக வேட்பாளர் சண்முகையா களத்தில் உள்ளார்கள்.
அதிமுகவினரின் பணப் பட்டுவாடா வியூகம் என்னவெனில், பணம் கொடுக்கப்பட்ட வீட்டில் அதிமுகவுக்கு ஓட்டு உறுதி என்றால் அந்த வீட்டில் சிவப்பு நிற மார்க்கர் மூலமாக, வீட்டு வாசலில் இன்ஷியல் போட்டுவிட்டு கீழ்ப் பகுதியில் வாக்காளர் எண் எழுதிவிட்டு போய்விடுகிறார்கள். இது வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே நடக்கிறது என்பதுதான் ஜனநாயகக் கொடுமை.
ஓட்டப்பிடாரம் சிவன்கோவில் வீதியில் வசிக்கும் வெள்ளைப்பாண்டியின் வீட்டில் ப.க.37/ 197,38 என எழுதியிருந்ததைப் பார்த்தோம். இதுபற்றி அவரிடமே கேட்டோம்.

வித்தியாசாகர் சிலையை பாஜகவினர் உடைக்கும் வீடியோவை வெளியிட்ட மம்தா கட்சி


வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டதுதினத்தந்தி :வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி நேற்று இந்த சிலை உடைப்பு காட்சி அடங்கிய வீடியோவை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அதில், காவி நிற டி-சர்ட் அணிந்த பா.ஜனதா தொண்டர்கள் அந்த சிலையை சுக்குநூறாக உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சட்டர்ஜி கூறும்போது, இதுதான் பா.ஜனதாவின் கலாசாரம். அமித்ஷாவும், அவரது கட்சியினரும் சிலை உடைப்பு வி‌ஷயத்தில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்.