சனி, 31 டிசம்பர், 2022

 ராமேஸ்வரம் தலைமன்னார் புகையிரத பாதை சாத்தியமா? 1893 இல் ஆங்கிலேயர்கள் முயன்ற திட்டம் .. இந்திய லங்கா றெயில்




 

1893 ஆம் ஆண்டிலேயே இந்தியாவையும் இலங்கையையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ஒரு முயற்சியை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்துள்ளனர் . இதன் விபரங்களை அன்றைய ஆங்கிலேய அரசின் உரிய ஆவணங்களை படித்தால்தான் முழுமையாக தெரியவரும்
மன்மோகன் சிங் அவர்களின் காலத்தில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் இது கவனம் எடுத்திருந்தார்.
இந்திய அரசிடம் இது பற்றி பேசியும் இருந்தார் . அந்த பேச்சுவார்த்தை ஆய்வு நிலையிலேயே இருந்தது. திரு ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கோரிக்கை இந்திய ஆட்சியாளரிடம் என்ன விளைவை அப்போது ஏற்படுத்தி இருந்தது என்பது தெரியவில்லை . ஆனாலும் இது பற்றி ஆய்வு செய்வதாக கூறியிருந்தனர் .
ரணிலின் ராமேஸ்வரம் தலைமன்னார் ரயில் பாதை என்பது நடக்கவே முடியாத ஒரு திடடம் என்று கூற முடியாது. இது பற்றி 1893 யிலேயே ஆங்கிலேயர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான செய்தியாகும் . இது பற்றிய ஒரு முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளியான கத்தோலிக்க பாதுகாவலன் அல்லது Jaffna Catholic Guardian என்ற இதழில் வெளியாகி உள்ளது  

உலகளாவிய அறிவுச் சுட்டெண் - தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியது

ஜாப்னா முஸ்லீம் :  உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43 ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக அமைந்துள்ளது.
உலகளாவிய அறிவுக் குறியீட்டின் சராசரி மதிப்பு 46.5 , மேலும் உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணின் படி, தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.

துடிக்க துடிக்க மஸ்தான் கொலை - காருக்குள் நடந்தது என்ன?

மின்னம்பலம் - Kavi  : முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி.மஸ்தான். திமுகவில் மாநில சிறுபான்மையினர் நலச் செயலாளராக இருந்தார்.
தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த மஸ்தான் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருமண அழைப்பிதழ் வைப்பதற்காகக் கடந்த 21ஆம் தேதி இரவு திருச்சி புறப்பட்டார்.
அப்போது அவரது சகோதரர் மகன் இம்ரான் பாஷா மஸ்தானிடம், “நீங்கள் தனியாகப் போக வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.   பின்னர், காரை இம்ரான் பாஷா இயக்க, மஸ்தான் அவருடன் கிளம்பினார். இரவு 9.30 மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பிய நிலையில் நள்ளிரவில் இம்ரானிடம் இருந்து மஸ்தான் வீட்டுக்கு ஒரு அழைப்பு வந்தது.

சென்னை சங்கமம் ..கனிமொழி தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கமம்

நக்கீரன் : நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும்,
அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022 - 2023 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்! 368 இடங்களில் சோதனைச்சாவடிகள்; காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை

மாலை மலர் :  M தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2,400 தற்காலிக நர்சுகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மாலைமலர் : சென்னை: கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை தேர்வு செய்து கொள்ள தேசிய சுகாதார குழுமம் அனுமதி அளித்தது.
அதன் பேரில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நர்சுகளை தேர்வு செய்தது. மொத்தம் 2,400 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி பதவி நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இது நர்சுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. உண்ணாவிரத போராட்டம் தொடரும்.. இடைநிலை ஆசிரியர்கள்

 tamil.oneindia.com  -  Mani Singh S :  சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுகு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கேசன்துறை புதுசேரி கப்பல் போக்குவரத்திற்காக குடிவரவு குடியகல்வு துறைமுகமாக காங்கேசன்துறை அறிவிப்பு !

hirunews.lk  :  பயணிகள் கப்பல் சேவைக்காக தயாராகும் காங்கேசன்துறை!
காங்கேசன்துறை துறைமுகத்தை குடிவரவு குடியகல்வு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட அரசு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 23ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு, இந்த அரசு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,
காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மாலை மலர் :  பெனாம் பென்.  கம்போடியா நாட்டில் தாய்லாந்து எல்லையில் கிராண்ட் டயமண்ட் சிட்டி கேசினோ என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
நேற்றிரவு 11.30 மணி அளவில் ஓட்டலின் ஒரு அறையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் அறைக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் 10 பேர் பலியானதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை! போலீஸ் தகவல் – சம்பவ நாளில் என்ன நடந்தது?

BBC Tamil :  திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான்.
கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தங்கள் தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஓடும் விமானத்தில் அண்ணாமலை? தண்ணீ தொட்டி தேடி வந்த ஆட்டுக் குட்டி?

May be an image of 1 person

 Maezhi.:  தண்ணீ தொட்டி தேடி வந்த அசிங்க ஆட்டுக் குட்டி யார்?
பிட்டு படம் தான் எடுப்பான்கள் என்று பார்த்தால் ஓசியில் எது கிடைத்தாலும் விட மாட்டானாம்.
இப்படிதான் கட்சி செலவில் ஹோட்டலில் தங்க வைத்தால் ஓசி சரக்கு வாங்கி வயிறு முட்ட குடித்து விட்டு காஸ்ட்லி உணவுகளை தின்று உடல் ஊதி வருகிறானாம்.
ஓவராக சரக்கடித்து வாய் உப்பி விட்டது !
கவனித்தீர்களா?
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஹோட்டலில் தண்ணீ அடித்ததால் ஆட்டுக்கும், தேதஸ் ஆட்டுக்கும் விமானத்தில் ஹோங்கோவர் ஏற்பட்டது என்று சொல்லி வயிறு முட்ட குடித்தனர் தேசியர்கள்.
விமானத்தில் இருக்கும் பணிப் பெண்களிடம் நாங்கல்லாம் யார் தெரியுமா ? என்று பெருமை பீத்திக் கொண்டு இருந்த போது வயிறு முட்டக் குடித்ததால் சிந்து பைரவி சிவக்குமாருக்கு போல் வாந்தி வந்து உள்ளது.
போதையில் பாத்ரூம் என்று நினைத்து விமானத்தில் உள்ள எமர்ஜென்ஸி வாசலை திறக்க முயன்றனர் தமிழ்நாடு,கர்நாடக அசிங்க குட்டிகள் இருவரும்.

மருத்துவத்துறையில் செவிலியர்களின் துன்பம் .. கண்டு கொள்ளாத அமைச்சர் மா சுப்பிரமணியம்

Loganayaki's :       மா.சு அவர்கள் மருத்துவத்துறையில் கொட்டும் வன்மத்தை பார்த்தால் ... மாடு ஒரு பெரிய விலங்கு.. தமிழனுக்கு சாப்பிட்டால் செமிக்காதுன்னு கதை கட்டுற கேங்க் தான் வருங்கால தமிழக மருத்துவக்குழுவாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.
    அவரால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி அரசுத்துறை செவிலியரை பெர்மெணண்ட் செய்ய இயலாது.
    அரசு மருத்துவர்கள் field லயும் இருக்கனும் ..field க்கு சம்மந்தமில்லாத தூரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்தில் attendance ல கையெழுத்தும் போட்ருக்கனும்.
    துணை சுகாதார மைய செவிலியர்கள் சுகாதார நிலையத்துல போய் biometric தினமும் காலை மாலை இருவேளை பதிவு செய்யனும்.என் துணை சுகாதார மையத்துல இருந்து சுகாதார மையம் 25 நிமிடம் ட்ராவல்.பேருந்து அடிக்கடி இல்லை.திரும்ப என் லொக்கேசனுக்கு போய் வேலை துவங்க 12 ஆகும்.அடுத்து 4 மணிக்கு திரும்ப சுகாதார நிலையம் தேடி பஞ்ச் பண்ணனும்.அதுக்கு 3 மணிக்காவது பஸ் இருக்கனும்.இந்த துயரக்கதைய dept ல சொல்லி 2 நாள் போதும் என்றனர்.(பெரும்பாலும் ஒவ்வொரு சுகாதாரமையமும் தூரமாகத்தான் இப்படித்தான் இருக்கும்)

உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார்.. பிரேசில் நாட்டை சேர்ந்தவர்

unews.lk  :  பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண வெற்றிகளில் பீலே பிரேசில் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பின்னர் 2000 ஆம் ஆண்டில், அவர் நூற்றாண்டின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்து படுகொலை

 மாலை மலர் : கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் அந்த பெண் வீடு திரும்பவில்லை.
வயல் வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்.
சிந்து: பாகிஸ்தானின் இந்து பெண் தயா பீல் என்பவர் (வயது 44) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாண சிறுபான்மை பிரிவு நிர்வாகி கிருஷ்ணகுமாரி தமது டுவிட்டர் பதிவில், சின்ஜிரோ பகுதி வயல்வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான தயா பீல், கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
தாய் வராததால் அவரை தேடி சென்றதாகவும் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு வயலில் அவரது சிதைந்த உடலை கண்டதாக, தயா பீல் மகன் சூமர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கிய அரிசி மூடைகளை பதுக்கிய அபிவிருத்தி சங்க ஊழியர்கள்! புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்குதவாது போனது

தேசம்நெட் -  அருண்மொழி : தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி மூடைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதுராநகர் கிராமத்தில் சுமார் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த அரிசி மூடைகள் பழுதடைந்து புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் கூறினார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு

 PM Narendra Modis mother Heeraben Modi dies

tamil.oneindia.com  -  Mani Singh S  :  அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100 வயதான ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதரருமான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார்.

சந்தேக வளையத்தில் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா? veerakesari

வீரகேசரி : அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் 37 அரசியல்வாதிகள் தாக்கல் செய்த ரிட் மனுவொன்று வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது, ஆளும்கட்சியின் அரசியல்வாதிகள். பிரதிவாதிகளாக கூறப்பட்டிருப்பவர்கள், பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள்.
காலிமுகத்திடலில் ‘கோ ஹோம் கோட்டா’ போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மே 9ஆம் திகதி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அலரி மாளிகையில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஆளும்கட்சியின் குண்டர்கள், போராட்டக்காரர்களின் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வன்முறைகள் இடம்பெற்றன.  அதன்போது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் வீடுகளை இழந்த 37 பேரே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! .. Dok 1 Max Syrup'

 நக்கீரன் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இருந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பட்டு வேட்டியில் சீன தூதரக அதிகாரி!

/tamil.adaderana. :  சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது.
நேற்று யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.

வியாழன், 29 டிசம்பர், 2022

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த ஐ.எஸ் உறுப்பினர் உட்பட இருவர் தமிழகத்தில் கைது!

hirunews.lk இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவர் உட்பட இருவரை இந்திய புலனாய்வு பிரிவு நேற்று கைது செய்துள்ளது.
அக்டோபர் 23 ஆம் திகதி, தமிழகம்- கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது - தயவு தாட்சண்யமே கிடையாது.. அமைச்சர் மெய்யநாதன்!

tamil.oneindia.com -  Vignesh Selvaraj  :  புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.
இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வாட்டர் டேங்க்கில் மலம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையின்போது அந்த கிராமத்தில் கோவிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியைக் கிளப்பியது.

நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம்

BBC News தமிழ் : மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும்,
 பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும்,
 நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில்,
விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற விரிவான விளக்கத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது பெற்றோருடன் விமானப் பயணத்திற்காக மதுரை விமான நிலையம் சென்றிருந்தபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது முந்தைய பதிவில் சாடியிருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம்.

TTF வாசன் ..சமூகத்தை சீரழிக்கும் ஒரு வியாதி! கேள்விக்கு பதில் சொல்லாமல் Walkout செய்த TTF வாசன்

Mohamed Abbas Abs : TTF வாசன் வளர்ச்சி கண்டு பொறாமைல அவன பத்தியே பேசிட்டு இருக்கேன் ன்னு தோணுதா உங்களுக்கு...?
அது தான் இல்ல TTF வாசன் மாதிரி யூடியூப் வழியா சம்பாதிக்கும் எத்தனயோ நபர்கள் இருக்காங்க,சொல்லப்போனா இவன விட அதிக Followers ஓட லாம் இருக்காங்க
அப்படி இருக்கப்போ இவன மட்டும் Target பண்ண என்ன காரணம் னா....வேற ஒன்னுமே இல்ல....இவன் Toxic to the core
இன்னைக்கு அய்யப்பன் ராமசாமி உடனான Interview ல Road Accidents 80% குடியாலயும், ஆடு மாடு குறுக்க வர்றதாலயும் தானே நடக்குது..
.20% தான Overspeed ஆல நடக்குது...அரசாங்கம் 80% பிரச்சினைய தான முதல்ல சரி பண்ணனும் ன்னு கூலா சொல்றான் ...
சமீபத்துல எவ்வளவோ Overspeed Accidents பார்த்தாச்சு... சின்ன பசங்க அவ்வளவு பேரு இவனால Inspire ஆகி சுத்துறாய்ங்க.... இவனுக்கு எத பத்தியும் கவல இல்ல...

ஈபிஎஸ் தான் பொதுச்செயலாளர்; அங்கீகரித்த மத்திய அரசு; கொண்டாட்டத்தில் பழனிசாமி 

நக்கீரன் : ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது.

Ex CM சந்திர பாபு நாயுடுவின் மாநாட்டில் கூட்டநெரிசல்; 8 பேர் உயிரிழப்பு

நக்கீரன் : தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கந்துக்கூர் பகுதியில் ஆளுங்கட்சிக்கு எதிராக மாநாடு நடைபெற்றது.
 இதில் தெலுங்கு தேசம் கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள் மற்றும் கட்சியினர் என அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது அங்கு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

புதன், 28 டிசம்பர், 2022

பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண் கைது!...புதுக்கோட்டை

தினமணி :  புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக அவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
அப்போது, பெற்றோர்களிடம் உங்கள் பகுதியில் குடிநீரில் ஏதேனும் கலந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பனங்கள்ளு ஏற்றுமதி - யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்சுக்கு ஏற்றுமதி

 தேசம் நெட் - அருண்மொழி : அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.
மேலும், கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு ஒரு தொகை மீன்கள் அனுப்பியதன் மூலம் சுமார் 6300 டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பதிராஜா, ஏனைய நாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சேது சமுத்திரத் திட்டம்.. அத்வானி & ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!

Kalaignar Seithigal - Prem Kumar  :  முரசொலி தலையங்கம்
சேது சமுத்திரத் திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் நிறைவேற்றித் தர பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முனைப்பு காட்ட வேண்டும்!
சேதுபாலமும் இரட்டை வேடமும் – 2
எல்லாவற்றிலும் மதவாத காவிச் சாயம் பூசும் சக்திகள், சேது சமுத்திரத் திட்டத்திலும் அதே காரியத்தைச் செய்தார்கள். இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘‘நாம் இருக்கும் வரை ராமர் சேதுவை யாராலும் தொட முடியாது” என்று எல்லாக் கூட்டங்களிலும் அத்வானி சொல்லி வந்தார்.
பா.ஜ.க.வை விட ஜெயலலிதாதான் அதிகமாகக் குதித்தார். ‘‘ராமர் பாலம் ஒரு புராதனச் சின்னம். நடுக்கடலில் இவ்வளவு தொடர்ச்சியாக இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் பாலம் ஏற்படக் காரணம் என்ன? இயற்கையாக இது தோன்றியது என்றால் வேறு எங்கும் ஏன் தோன்றவில்லை?” என்று பெரும்புத்திசாலியைப் போல கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தார் ஜெயலலிதா.

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

மின்னம்பலம் - Prakash :   குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், “இரட்டைக்குவளை, தாழ்த்தப்பட்டோரை கோயிலில் அனுமதிக்காதது மற்றும் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!

 hirunews.lk : திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து காவல்துறை நிலையங்களில் இருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்- 23 அணிகளுடனான ஆலோசனையின் போது மு.க.ஸ்டாலின் உத்தரவு

Maalaimalar  :  சென்னை  :  தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவும் அண்மையில் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்திய அரசியலில் தி.மு.க. முக்கியமான சக்தியாக திகழ வேண்டும்" என்று பேசி இருந்தார். அதற்கேற்ப கட்சியில் ஒவ்வொரு வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்கேற்ப தி.மு.க.வில் உள்ள அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டன.
அதன்படி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமின்றி இளைஞரணியின் மற்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

சொத்துக்கணக்கை காட்ட மறுக்கும் மலையக தலைவர்கள் .. இலங்கை தேர்தல் ஆணையம் கோரிக்கை

tamilmirror.lk - பா.நிரோஸ்:  திகாம்பரம், ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு?
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம் ஒன்றுக்கு, நுவரெலியா மாவட்ட ​உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மறுக்கப்படும் மடிக் கணினிகள்! ஏக்கத்தில் மாணவர்கள்!

aramonline.in : அதிமுக ஆட்சியில் பிளஸ் 2, மற்றும் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவசமாக லேப் – டாப்கள் வழங்கப்பட்டன! திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், புதிய லேப்டாப்களும் தரவில்லை, அதிமுக ஆட்சியில் தேங்கிய 56,000 லேப்டாப்களையும் தரவில்லை. இவற்றை முடக்கி வைத்துள்ளதன் பின்னணி என்ன?
தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் செப்டம்பர்  2011 முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. அதிமுக ஆட்சியில் 38 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

ஆண்டுக்கு 16,000 உயிரினங்கள் ரயில் மோதி பலி.. முதலிடத்தில் உத்தர பிரதேசம்! ஆக குறைந்த இடத்தில் தென் மாநிலங்கள்

ஒட்டுமொத்தமாக

tamil.oneindia.com - Halley Karthik  :    டெல்லி: சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மோதி சில கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நாடு முழுவதும் ஆண்டு தோறும் ரயில் விபத்தில் சிக்கி சுமார் 16,000 உயிரினங்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியன் ரயில்வே கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அதன்படி ரயில் பயணங்களை வேகமாக்க திட்டமிடப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா -பனிப்புயலுக்கு 60 பேர் பலி - 15 ஆயிரம் விமானங்கள் ரத்து

 தினத்தந்தி  :   அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
வாஷிங்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும்.
அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அளவு உச்சத்தை ஏட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பண்டிகைகளுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. பனிப்பொழிவுடன் சேர்ந்து பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒன்றிய அரசு பணி நியமனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.

கலைஞர் செய்திகள் - KL Reshma :  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை, ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் உறுதி செய்திட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர் - 1000 பேரை இறக்கிவிட்ட போலீஸ்

மாலை மலர் : சென்னை  கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறினர். உள்ளே ஏறிய அவர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து அடாவடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருவொற்றியூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அனைத்து முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களைக் கண்டித்து வெளியேற்றினர்.

வாழ்வாதாரத்திற்காக போராடும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் – பட்டதாரிகள்! பாராமுகம் காட்டிவரும் அரசு!

vinavu.com  :  ஒப்பந்த அடிப்படையில் பணி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26.12.2022 அன்று காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் சிங்காரவேலன் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
எந்த அரசும் தற்போது வரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துளியும் முயற்சி எடுக்கவில்லை. இந்த சமூகநீதி பேசும் ஆட்சியில், ஏதாவது நடக்குமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதுதான்.
ஏன் என்றால், அமைச்சரை பார்த்து எங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என வந்தோம்.

பிரிட்டனில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மை இல்லை.. நாத்திகர்களுக்கு இரண்டாவது இடம்

 tamil.oneindia.com  - Vigneshkumar  ; லண்டன்: பிரிட்டன் நாட்டில் மக்கள்தொகை கணக்கீட்டில் முதல் முறையாக 50% குறைவானார்கள் மட்டுமே கிறிஸ்துவர்களாக தங்கள் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இது அந்நாட்டின் கலவையான கலாச்சாரத்தைக் காட்டுவதாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இதைப் பலரும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் மக்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த சமீபத்திய டேட்டா வெளியாகியுள்ளது. இதில் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாகக் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

(கோவை தென் சென்னை) கமல் ஹாசன் 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார் கை சின்னத்தில் போட்டியா? அப்போ மநீம!

 tamil.oneindia.com  -  Vishnupriya R  : சென்னை: 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மிகப் பெரிய ஆளுமைகளுடன் நன்கு பழக்கம் கொண்டவர் கமல்ஹாசன். அரசியல் ரீதியில் இல்லாவிட்டாலும் திரைத்துறையில் இவர்களுடன் பயணம் செய்தவர். ஜெயலலிதா இறந்தபிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு கட்சித் தொடங்கிய நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை. இந்த கட்சி அவ்வப்போது கரைந்து வருகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் , ஆண்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற கொள்கையுடன் கமல்ஹாசன் பயணித்து வருகிறார்.

திங்கள், 26 டிசம்பர், 2022

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது

 மாலை மலர் :   புதுடெல்லி: இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து மேற்கோண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது என பதிவிட்டுள்ளது.

கமல் ஹசன் தி.மு.க. கூட்டணியில் .. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டி

Maalaimalar  :  சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன் தேர்தல் களத்தில் இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்காமலேயே உள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது.
பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ப.வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.
தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு கமல்ஹாசனால் வெற்றி பெற முடியவில்லை. இது அக்கட்சியினர் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவன் : பாஜக சமத்துவத்தை பேசினால் கூட்டணி வைக்கத் தயார்!

 tamil.samayam.com :  பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் ஆனால்.? திருமாவளவன் கண்டிஷன்.!
விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேசிவரும் சனாதன தர்மம் குறித்து, அதன் உண்மையான அர்தத்தை மிக விளக்கமாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.
மனு தர்மத்தை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களிடம் வழங்கிவருகிறார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தவுடனே,
அதேநாளில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். திருமாவளவனின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சமூக நல்லிணக்க பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் : ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு"

மின்னம்பலம் - christopher  :  “ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்லால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) மாலை வெளியிட்டார். இதனை இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கற்றனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை விடுத்தது அமெரிக்க தூதரகம்

மாலை மலர் :  இஸ்லாமாபாத்  பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும்,

ஆடைகளை கிழித்து.. ஆபாசமாக பேசி! இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை! ஹைகோர்ட் வழக்கறிஞர் கைது

Bar Council issues notice to Patna high court advocate who sought sexual favour as 'guru dakshina' from intern

tamil.oneindia.com  - Halley Karthik  : பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னிடம் இன்டர்ன்ஷிப்புக்காக வந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அம்மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா உயர்நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருபவர்தான் நிரஞ்சன் குமார்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் அவரிடம் இன்டர்ன்ஷிப்புக்காக 22 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சேர்ந்திருக்கிறார்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்

மாலை மலர் : சென்னை - தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் : வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை

மாலை மலர்  :  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்

அமெரிக்கா கனடாவில் கடும் குளிர் பனிப்பொழிவு : வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு; 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

தினத்தந்தி :  அமெரிக்காவில் வானிலை தொடர்பான வாகன விபத்துகளில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், அந்நாட்டில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது.
குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் இருளில் மூழ்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலை நேற்றும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி காணப்பட்டன. மற்ற இடங்களில் நிலைமை சீரமைந்து இருந்தது.

ஆப்கானிஸ்தான்: தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபான் அரசு தடை

தினமணி : ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து தொண்டு நிறுவனங்களும் பெண்களைப் பணியமா்த்துவதற்கு தலிபான் அரசு சனிக்கிழமை தடை விதித்தது.
நிதிஅமைச்சா் காரி தின் முகமது ஹனீஃப் அனுப்பியுள்ள கடிதத்தின் வாயிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வுத்தரவைத் தொண்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லையெனில், ஆப்கானிஸ்தானில் அவை செயல்படுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், ‘தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறைபடி ‘ஹிஜாப்’ அணிவதில்லை என ஏராளமான புகாா்கள் பெறப்பட்டுள்ளன ’ எனத் தெரிவித்தது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்: சினிமா துறைக்கு நல்லதா கெட்டதா?

Red Giant in the eyes of producers

மின்னம்பலம் - Kavi : திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சிறுபட தயாரிப்பாளர்கள் என்று விசயங்களைச் சேகரித்தபின் கிடைத்த தகவல் இது’ என தயாரிப்பாளர் கஸாலி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர், “பத்து வருடங்களாக அமைதி காத்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகாரத்திற்கு வந்தபின் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரும்பாலான படங்களை காசு கொடுத்து வாங்காமல் கமிஷன் பேஸிஸ் வகையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கின்றது.   பொதுவான கணக்குப்படி இதுவரை 1300 கோடியைத் தாண்டி ரெட் ஜெயண்ட் மூலம் மட்டும் விநியோக வியாபாரம் நடந்திருப்பதாகவும், அதன்மூலம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கிடைத்த கமிஷன் தொகை மட்டும் 120 கோடி வரை தேறும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா சிகிச்சைக்கு 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன!

 மாலை மலர் :  சென்னை:  சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.