![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIypeY0EkhhK_8G-qtZu69aKu7PCeAKu_jXdon3i1R7-CodAYhx2eSq8RMpjPu6kqh03PPcjUQldqMM0hGSsApgtssDfSWSSDwgKNMl11ZsDgh_m9pWdqIqKc-hAUNAlOlqJq_RNDPCBqG/s320/104559496_10216580423439370_8306049068409487515_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJwyiwFzzr49iRtHaNoqCVpJANgMWeMiQ8I7vl7a0nPntr_nHWhfQJ1-q7qETOOohOdLCZO4esTmOgafuhoLhxmO-m12bVL5nCz_EnrW5U_dWv9MexgSpP8rEr_wDniWfkUvoEOz9oLium/s400/saaththaan.jpg)
தமிழக வணிகர் சங்கங்கள் ஒரு சாதியின் பேரக்குழுக்களாகத்தான் இயங்கி வருகின்றன.. கொல்லப்பட்டவர்களின் அதே சாதி.. ஆனால் அவர்களின் பிணம் காணுமுன் காவல்நிலையம் பக்கம் கூட செல்லவில்லை.. இத்தனைக்கும் தவறாமல் சந்தா வாங்கி விடுவார்கள்.. உள்ளூர் காவல்துறையினரிடம் காரியம் சாதிக்க வணிகர்சங்கத்தின் தலைவர்கள் வைத்திருக்கும் சுமூக உறவுக்கான விலை இது..!
வேறெந்த தொழிற்குழுக்களைக்காட்டிலும் இந்த வணிகர் சங்கங்கள் அமைப்புரீதியாக வலுவானவை.. இருந்தும் கூட சாதாரண சிறுவணிகர்களுக்காக ஒரு ஆணியையும் பிடுங்குவதில்லை என்பது வெளிப்படை.. இருவரையும் காவல்துறை அழைத்துச்சென்ற போது வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று கைதுக்கு என்ன காரணம் எனக்கேட்டிருந்தால் போதும்.. இருவரும் செத்திருக்க மாட்டார்கள்.. அதிகபட்சம் வழக்கோடு பிரச்சனை முடிந்திருக்கும்.. ஆனால் அப்போது செல்லாமல் பிணத்தை பார்த்தபின் அவர்கள் பாடும் பிலாக்கனம் அருவெறுப்பாக இருக்கிறது.
இன்று பா.ஜ.க வின் எச்.ராஜா வணிகர் சங்கங்களை அந்நியக்கைக்கூலி என்கிற அளவுக்கு பேசியிருப்பதன் பின்னணி தெளிவானது.. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் வணிகத்தில் கோலோச்சும் தமிழ் சாதிக்குழுக்களின் மீது மார்வாரிகள், குஜராத்தி பனியாக்கள், ஜெயின்கள் இவர்களுக்கு ஒரு கண்.. இவர்களின் கூலிப்படைகள் பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்கள்.. தமிழகத்தின் வணிகர்சங்கங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக இதே தூத்துக்குடியில் "இந்து வணிகர் சங்கம்" என்ற பெயரில் ஒரு உடைப்புக்குழுவை