ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பிரஷாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு + பவன் கல்யாண் கூட்டணிக்கு வேலை?

May be an image of 1 person, dais and text that says 'The meeting has sparked speculation of Prashant Kishor advising the TDP. f Hyderabad: In an interesting development in Andhra Pradesh politics four months before the Assembly polls, former election campaign strategist Prashant Kishor flew into the state and met Telugu Desam Party President Chandrababu Naidu on Saturday.'

Seshathri Dhanasen :      IPAC,  சுனில் நிறுவனங்களால் வரும் சிக்கல்:
சென்ற ஆந்திரா தேர்தலில் IPAC முழுக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வேலை பார்த்தது.
ஜெகன் 175 சீட்களில் 151 சீட் ஜெயித்தார்.
அதன் பின்னர் பல்வேறு காண்ட்ராக்ட்கள் IPAC நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.
தற்போதும் IPAC நிறுவனம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வேலை செய்வதாக தான் சொல்கிறது
ஆனால் தற்போது அதே பிரஷாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் கூட்டணிக்கு வேலை பார்க்க ஒப்பந்தம் செய்யபட்டு இருக்கிறார்.
கேட்டால் IPAC இல் இருந்து நான் வெளியேறி விட்டேன் என்று சொல்கிறார்.
ஆனால் சந்திரபாபுவிடம் பேசி கொண்டு இருக்கிறார்.
அதிலும் நீங்கள் குப்பத்தில் மட்டும் அல்லாது வேறு ஒரு தொகுதியிலும் நில்லுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.
பவன் கல்யாண்க்கும் 2 தொகுதியை suggest செய்து இருக்கிறார்.

அமெரிக்காவில் இந்திய குடும்பம் தற்கொலை ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக .. அமெரிக்காவில் அதிர்ச்சி !

ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !

கலைஞர் செய்திகள் Praveen :  இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (வயது 57), டீனா (வயது 54) ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அரியானா ( வயது18 ) என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை தொடங்க இந்த தம்பதியினர் ஏராளமான அளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த கல்வி நிறுவனத்தி ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த கல்வி நிறுவனத்தை இந்த தம்பதியினரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள் தப்பிப்பார்களா? ஸ்டாலின் நடத்திய பதட்ட ஆலோசனை!

 மின்னம்பலம் - Aara : வைஃபை ஆன் செய்ததும் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,  இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் குறிப்பிட்ட படியே இனிய மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கின்றன.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். டிசம்பர் 21 முதல் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளாகி உச்சநீதிமன்ற  மேல்முறையீட்டு வழக்கை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  மேலும், திமுகவின் அமைச்சர்கள்  ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு  ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து சூமோட்டோவாக எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றம் சென்றவர், ஜனவரி 3 முதல் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் ஆண்டுக்கணக்கில் இயங்கியது எப்படி?

  BBC News தமிழ் -, RAJESH AMBALIYA :  2023ம் ஆண்டில் குஜராத் சந்தித்த ஏராளமான நிகழ்வுகளில், “போலி” என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரே மாதிரியான சில சம்பவங்கள் இந்தியா முழுவதும் பேசுபொருளாயின.
அது போலி சுங்கச்சாவடியில் தொடங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை, இந்தாண்டில் குஜராத்தில் மட்டும் பல போலி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவை குஜராத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான சம்பவங்கள் என்பதே இதில் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் குஜராத்தின் மோர்பியிலிருந்து, கட்ச் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 27ல் உள்ள வகாசியா சுங்கச்சாவடியில் ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வந்த போலி சுங்கச்சாவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் போதைக்கு அடிமையானோர் 19 லட்சம்: வாழ்க குஜராத் மாடல்

மாலைமலர் :இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:
சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.
குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

லதா ரஜனிகாந்த் முக்காட்டுடன் பெங்களூர் நீதிமன்றத்தில் - பிடி வாரண்ட்!

 Maha Laxmi : முக்காடுடன் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்.
மோசடி புகாரில் லதா ரஜினிகாந்த்துக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானர் ரஜினி மனைவி லதா.
நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
கோச்சடையான் பட தயாரிப்புக்காக, ரூ6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது .

இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையம் : கிளாம்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் செய்திகள் - Lenin :  தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையம் : இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

ரூபாய் - யுவான் - சீன நாணயத்தை ஏற்கும் நாடுகள் இந்திய ரூபாயை நிராகரிப்பது ஏன்? -

இந்திய ரூபாயை உலக நாடுகள் அங்கீகரிக்காதது ஏன்?

BBC News தமிழ் :  இந்தியா தற்போது வரை கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர்களில் மட்டுமே வாங்கி வருகிறது. ஆனால், முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இந்திய ரூபாயில் எண்ணெயை வாங்கியுள்ளது.
ரூபாயை உலகளவிலான நாணயமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாகவே முயற்சித்து வரும் இந்தியாவுக்கு இது ஒரு மைல்கல்..
இந்தாண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது, இரு நாட்டு நாணயங்களை கொண்டு வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு, அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனமான Adnoc-மிடமிருந்து 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்திய ரூபாயில் வாங்கியுள்ளது இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் .

சனி, 30 டிசம்பர், 2023

பழைய தவறான Projectகளை ஒழித்துவிட்டு well planned and thoroughly feasibility ensured projectகள் தொடங்குவது சிறந்தது.

 Uma Pa Se :   Not to sound pessimistic.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட Projectகளை நைச்சியமாக ஆள்பவர்கள் தலையில் கட்டப்படும்போது அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துவிட்டு அதை own செய்வது நன்று.
இல்லாவிட்டால் யாருடைய மோசமான திட்டமிடலுக்காகவோ பழியும் ஏசலையும் சந்திக்க நேரிடும்.
ஏனெனில் கடந்த ஆட்சியில் நடந்த 80% மேற்பட்ட முன்னெடுப்புகள் மக்களுக்காக தொடங்கப்பட்டவை அல்ல.
எதற்காக யாருக்காக என்று ஊருக்கே தெரியும்.
ஏனெனில் வேலூர் ஜோலார்பேட்டையில் கடும் வரட்சியும் தண்ணீர் பஞ்சமும் நிலவிய காலத்தில்,
அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவரும் "மகத்தான " யோசனையை,
 ஒரு நடைக்கு 8.6 லட்சம் ரெயில்வேவுக்கு கட்டி தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கொண்டுவந்ததும்,
smart city என்ற பெயரில் நடந்த கூட்டுக் கொள்ளை நடந்ததும் கடந்த ஆட்சியில் தான்.
அந்த கட்சியின் முன்னோடி ஆவியாகிவிடும் ஆறுகளுக்கு asbestos sheet போட்டு மூட முடியுமா என்று யோசித்த பொன்மனச்செம்மல்.

அதர்மம் மனோஜ் குமாருக்கும் மதி மாறனுக்கும் கொள்கை முரண்பாடா? தனிப்பட்ட மோதலா

 Manoj Kumar :  மதிமாறன் என்ற மண்டை வீங்கி ஒன்னு,,தனக்கு மட்டும் மூளை இரட்டிப்பு மடங்குங்கற கற்பனை உலகுல வாழக் கூடிய ஒரு ஜந்து,,
பெரியார் இயக்கத்துக்கே தான் தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது போலவும்,
அதற்கு முன்னர் எல்லாம் பெரியார் இயக்கங்கள் ஏதோ தலித் விரோதிகளாக இருந்தது போல எல்லாம் பேசிய போதும்,
அவங்க பெரியாரை திட்டுனா,நீங்க பிரபாகரனை திட்டுங்க என லூசுத்தனமாக பரிந்துரைத்த போதும்,
சீமான் சொல்வது போல பெரியார் இயக்கத்தினருக்கு தெலுங்கு பாசம் என கேனத்தனமாக உளறிய போதும்,,,,
இதற்கெல்லாம் எதிர்வினையாற்றிய காரணத்தால் அப்போதிருந்தே என் மீது ஜீரணிக்க முடியாத அளவு வன்மத்தை வைத்திருக்கும் ஒரு பீசு,,,
மேலும் இவருடைய விசம அரசியலை புரிந்து கொண்ட இயக்கங்கள் இவரை மேடை ஏற்றுவதை நிறுத்தி விட்டனர்,,

விஜயகாந்த் மகன் 10 அடியாட்களை ஏவி விட்டு வடிவேலுவை தாக்கினார்! வடிவேலு விஜகாந்த் பகை flash back

May be an image of 2 people and text

VS Maran :  வடிவேலு பத்தி விமர்சனம் செய்பவர்களுக்கு
பிரேமலதா உறவினர்கள் ஒரு முறை விஜயகாந்த் வீட்டிற்கு விருந்துக்கு வந்த விருந்தாளிகள்
அதே தெருவில் உள்ள வடிவேலு வீட்டின் முன் கார்களை நிறுத்தி விட்டார்கள்
அவர் (பீக் காக இருந்த காலகட்டத்தில்)
அவர் கார் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை
கேப்டன் வீட்டிற்கு உதவியாளரை அனுப்பி காரை நகர்த்த சொல்கிறார்
 (விஜயகாந்த் ஊரில் இல்லை)
அதற்கு விஜயகாந்த் மகன் அவன் என்ன பெரிய மைரா கார்கள் அங்கு தான் நிற்கும் என்று பௌன்சர்ஸ் ஏவி விட்டு வடிவேலுவை தாக்குகிறார்கள்!
அவரும் விஜயகாந்த் ஊரில் இல்லை என்பதை அறிந்து அடிபட்ட கையோடு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சென்றுவிட்டார்
(இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில்)
வடிவேலு திமுக ஆதரவாளர் என்பது ஊரறிந்த ரகசியம்...
ஆனாலும் ஆய்வாளர் வடிவேலுவை தாக்கிய பத்து குண்டர்களை கைது செய்கிறார்.
இனி விஜயகாந்த் படத்தில் நடிப்பதில்லை என்று வடிவேலு முடிவெடுத்தார்.

பிரேமலதா : ஆட்சியில் அமர வேண்டும்.. கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா போட்ட சபதம்.. !

 tamil.asianetnews.com -  Raghupati R :  சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் மதியம் 2.30 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் வாகனத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் வாய்ப்புக்கொடுக்கக்கூடாது...

May be an image of 1 person and smiling
கார்த்திக் ராமசாமி  :   மாமன்னன் படத்தில் நடித்ததால் விஜயகாந்தாக வடிவேல் ஆகிவிட முடியாததுதான்!
ஆனால் அதற்காக மானங்கெட்டு மண்டியிடலும் ஆகக்கூடாது என்கிற சுயமரியாதை இருப்பதையும் இழந்து விடக்கூடாது என்று உறுதியாக வடிவேல் இருப்பதில் என்ன தவறு கண்டீர்?
சக நடிகராக இருந்தால் எல்லாவற்றிற்கும் சென்றுதான் ஆகவேண்டும் என்கிற சட்டமேதும் இருக்கிறதா? சொல்லுங்கள்!
2011-2021 காலகட்டத்தில் விஜயகாந்தை விமர்சித்தமைக்காக!
திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக வடிவேலுவை பழிதீர்க்க  ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் நடிக்க வாய்ப்புக்கொடுக்கக்கூடாது!
இம்மியளவுகூட திரையில் வடிவேலின் முகம் தெரியக்கூடாது என கங்கணம் கட்டி!
வடிவேலின் திரைவாழ்க்கையை மட்டுமல்ல!

வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஸ்ரீ சபாரத்தினம் கொலையின் முக்கிய சூத்திரதாரி எம் ஜி ஆர்! முழு விபரமும் வெளியானது!

May be a black-and-white image of 1 person
Vetri Chelvan :  எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரில் ஆதரித்தாரா?
இன்றும் பல பல இலங்கை தமிழர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள் பதிவுகள் போடுகிறார்கள்.
எம்ஜிஆர் ஆதரித்தது தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்து, அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தை கொலை செய்ததும் எம்ஜிஆர் மனம் மகிழ்ந்து அளவில்லா பணமும் அளவில்லா உதவிகளும் செய்தார்.
தனிப்பட்ட முறையில் எல்லா இயக்கங்களும் தங்கள் சக சகோதரர்களை கொலை செய்து வந்தாலும்,
ஒரு பெரிய இயக்கத்தை அழித்து , தொடர்ச்சியாக மற்ற விடுதலை இயக்கங்களையும் அழித்து மறைமுகமாக சிங்கள அரசுக்கு உதவிகள் புரிந்து விடுதலைப்புலிகளை மட்டும் ஒரு சர்வாதிகார இயக்கமாக மாற வைத்து கடைசியில் அவர்களும் அழிய ஆரம்ப புள்ளி வைத்து கொடுத்தவர் எம்ஜிஆர் அவர்கள்.

மரணம் அடைந்து 40 நிமிடங்களுக்கு பிறகு மீண்ட பெண்.. இறந்ததற்கு பிறகு நடந்தது என்ன..? பகீர் பேட்டி

uk woman dead alive

tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங் :  விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல லட்சம் கி.மீ. தூரம் இருக்கும் கிரகங்களை நாம் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு மனிதன் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை இன்று வரை எந்த ஆராய்ச்சியாலும் கண்டறிய முடியவில்லை.
ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியின் வாக்குமூலம் இந்த ஆராய்ச்சியின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
uk woman dead alive
லண்டன்: என்னதான் விஞ்ஞானத்தில் நாம் உச்சத்தை அடைந்திருந்தாலும் இன்னமும் மனிதனின் மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்! யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்..

 zeenews.india.com - Malathi Tamilselvan : யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்: உணவுகளே, நமது உடலில் சத்தை கூட்டவும், குறைக்கவும் காரணம் என்பதுபோலவே, நாம் உண்ணும் உணவும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் உடலின் கழிவான யூரிக் அமிலத்தின் சுரப்பை நிர்ணயிக்கிறது.
யூரிக் அமிலம் என்பது பூயூரின் என்ற வேதிப்பொருளினால் உருவாகிறது.
பொதுவாக, நமது சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன.
 அப்படி வடிகட்டும்போது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது,
​​அது மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம், எலும்புகளில் வலி, நடப்பதில் சிரமம் என பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
எனவே, உடலில் சுரக்கும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

மம்தா பானர்ஜி : நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும்:

Hindu Tamil :  கொல்கத்தா: நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "இண்டியா கூட்டணிக்கு திட்டம் இல்லை; தலைமை இல்லை; வியூகம் இல்லை. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.
தேர்தலின்போது, பாஜக வெற்றி பெற்றால் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சி கூறியது. 2021ல் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றதில் இருந்து நமது அரசு அனைத்து ஏழைகளுக்கும் 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

விஜயகாந் 1986 பேட்டி : இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே?

May be an image of 4 people, beard and text

Jæs J Wiki  :  1986 இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து...
இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான்.
சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன்.
அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம்
அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது.
அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.

வியாழன், 28 டிசம்பர், 2023

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை மலர் :  சென்னை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.

உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா? -

மனிதக் கழிவு சில நேரங்களில் கழிவறை நீரில் மிதப்பது குறித்த ஆய்வு

bbc.com - , ரிச்சர்ட் கிரே  - பிபிசி ஃபியூச்சர் :  சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன், நாகராஜ கண்ணன் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
"உங்களது கழிவு மிதக்கிறதா அல்லது கழிவறை நீரில் மூழ்குகிறதா?"
மின்னஞ்சல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒருவரிடம் இவ்வாறு கேட்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

கட்டார் 8 இந்திய கப்பல் படை அதிகாரிகள் தலை தப்பியது

மாலை மலர் :   அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார்.. கதறி அழும் தொண்டர்கள்

tamil.oneindia.com  -  Jeyalakshmi C :  சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.
விஜயகாந்த் எப்படி இருக்கிறார்.. சாலிகிராமம் வீடு முன் கண்ணீருடன் குவிந்த தொண்டர்கள்! விஜயகாந்த் எப்படி இருக்கிறார்.. சாலிகிராமம் வீடு முன் கண்ணீருடன் குவிந்த தொண்டர்கள்!

புதன், 27 டிசம்பர், 2023

தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!

May be an image of 1 person and smiling

 Suba.Veerapandian :  தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!   
அரசியல் துறவரத்தை மீண்டும்  துறந்து விட்டு, களத்திற்கு வந்திருக்கிறார் தமிழருவி மணியன்!  அன்றாடம்  தி.மு.கழக ஆட்சியை, திமுக கழகத்தைக் கடுமையாகத் தன் காணொளிகள் மூலம் விமர்சித்து வருகிறார். அது அவர் விருப்பம், அவர் உரிமை!  
அவருடைய பேச்சில் தவறாமல்  மூன்று கூறுகள் இடம்பெறுகின்றன. 1. தற்பெருமை  2.  காழ்ப்புணர்வு  3. விரக்தி!
உலகத்தில் உள்ள வரலாற்று நூல்களை எல்லாம், தேடித்தேடி துருவித் துருவிப் படிக்கிறவன் நான் என்று சொல்கிறார்.
அவரிடம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது.
மகிழ்ச்சி, படிப்பது நல்ல பழக்கம்தான்.
ஆனால் அதைத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது அவ்வளவு நல்ல பழக்கமில்லை!

சத்தீஸ்கர் காங்கிரசுக்கு உலை வைத்த Mahadev Betting App. துபாயில் அதிரடி கைது.. சிக்கிய உரிமையாளர்.. பின்னணி

Mahadev Betting App another owner cum promoter Sourabh Chandrakar secured in Dubai after Ravi Uppal

 tamil.oneindia.com -Nantha Kumar R : துபாய்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக அதன் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார்.
வடஇந்திய மாநிலங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் மோசடி என்றால் அது மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியாகும். இந்த மோசடியில் பல அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரணம் யார் என்றால் 2 பேர்.
Mahadev Betting App another owner cum promoter Sourabh Chandrakar secured in Dubai after Ravi Uppal

எண்ணூர் அமோனியா கசிவு! ? 8 கிராமங்களில் நடந்தது என்ன

பிபிசி , பிரபாகர் தமிழரசு :   சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண், காது, மூக்கு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்கான திரவ அமோனியம் நேரடியாக கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கடலுக்கு அடியில் உள்ள குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு, திரவ அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் வாயு கசிந்துள்ளது.

மலையக தமிழரா இந்திய தமிழரா? அடையாள சிக்கலின் பின்னணியில் இந்திய ரோ RAW அமைப்பு?

 பெருமாள் கணேசன் : இந்திய தமிழர்கள் இலங்கைக்கு பதிவில் வந்தது 1817 களில் அவர்களை முதன்முதல் பணிக்கமர்த்தப்பட்டது கொழும்பில். இன்றும் அவர்களின் சந்ததி நீள்கிறது மலையில் செறிவாக வாழ்வது ஒரு அதிகாரம் என சிலர் தலைகீழாக ஆடுகிறார்கள் இன அடையாளச் சொல்லை அழிக்க. யாரோடு கூட்டு எனில் பூர்வீகத்தமிழருக்கே அதிகாரம் கொடுக்க மறுக்கும் இனவாதிகளுடன்

Manju Ganesh Thevar : தமிழர்கள் பன்னெடுங்காலமாக நாவல்தான் என்கிற இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.பாண்டிய,சேர சிங்கள மன்னர்களுடன்,நட்பும் மண உறவும் உண்டு. பிற்கால சோழர்கள் காலத்தில் இலங்கையி்ல் உண்டு. மலையகத் தமிழர்கள்,கிழக்கிந்திய கம்பனி இலங்கையை கைப்பற்றிய பிறகு,தமிழர்களை மலைப்பகுதிகளில் குடியமர்த்தி வனங்களை,எஸ்டேட்டுகளாக மாற்றினர்.மகாராணி விக்டோரிய காலத்தில் காலனி ஆட்சியில் இலங்கை சென்னை மாகாணத்தின் தொடர்ச்சியாகத்தான் இலங்கையை பிரிட்டிஷ் அரசு நிர்வகித்து.
சங்க காலம் தொட்டு தமிழர்கள் இலங்கையில் ஆட்சி,நிர்வாகம்,வணிகம் செய்துள்ளனர்.

Sundar Sundaralingam : I am agreeing with your point. People should move out of the estate and live independently, if they want let them work in the estate

koose munisamy veerappan கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1- நடுநிலையான தொடரா?

 Jaison Prathish  · :   கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1-நடுநிலையான தொடரா?
ஒரு கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது ஆனாலும் வீரப்பன் வீரன்தான் என்று நக்கீரன் கோபால் சொல்லத் தொடங்குகிறது இந்த தொடர்.
இந்த தொடர் பற்றி பேசுவதற்கு முன்பு இந்த தொடர் வருவதற்கான காரணம் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
K.விஜய் குமார் Special Task Force(STF) தலைமை அதிகாரி Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில்  2017-ல் எழுதுகிறார். அது பெரிதாக அறியப்படவில்லை.
அதனுடைய Audio Book PodCast வடிவில் 100 எபிசோடுகளாக டிசம்பர், 2022 ஆன்லைனில் வெளியாகி பரபரப்பாகிறது.
அந்த ஆடியோ புக்கின் அடுத்த கட்டமாக ஆகஸ்ட்,2023 நெட்ப்ளிக்ஸ் The Hunt For Veerappan- The Most Notorious Criminal of Indian History ரிலீசாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!

summon to ED officers

minnambalam.com - Monisha : அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 26) விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெறும் போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அவரை சிறையில் அடைத்தது.
பின்னர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

திமுக ஐடி விங் தோல்வியுற்றதா? எங்கே? எப்படி? ஏன்?

 Pa Prem  :  திமுக ஐடி விங் எங்கே தொல்வியுற்றது?
எம்.எம்.அப்துல்லா
டான் அசோக்
டாக்டர் புருனோ
எல்.ஆர்.ஜகதீசன்
சாய் லட்சுமிகாந்த்
ராஜராஜன்
பிலால் அலியார்
விக்னேஷ் ஆனந்த்
கார்த்திக் ராமசாமி
ரவிசங்கர் அய்யாக்கண்ணு
இன்னும் பலர் உள்ளிட்ட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரில் தனித்தனி முகங்களை போர்த்திக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தலித் தரப்பிலிருந்து மேலெழுந்து வந்த குரல்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் இடதுசாரி, தலித் வெறுப்பை முன்னெடுத்ததன் விளைவை இன்று திமுக சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பல முக்கியமான திமுக அனுதாபி, தலித் சோசியல் மீடியா செயற்பாட்டாளர்களை ஓரம் கட்டியதில் மேற்குறிப்பிடப்பட்டவர்களின் பங்கு மிக மிக மிக முக்கியமானது..
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தனி நபர் தாக்குதல்களை ஒருங்கிணைத்து பல தலித் திமுக அனுதாப சோசியல் மீடியா இன்ஃபுலுயன்ஸர்களைத் துரத்தி விட்டிருக்கிறார்கள்.
அவர்களைத் துரத்தி விட்டு, இன்று இந்த நபர்கள் எல்லாம் நம் வரலாற்று எதிரிகள் மீது வலிமையான தாக்குதல்களை துல்லியமாக முன்னெடுக்கிறார்களா? என்றால், அதுவும் இல்லை..

ஜம்மு காஷ்மீர்: ராணுவம் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேர் மரணம் - முகாமில் என்ன நடந்தது?

BBC News தமிழ் - , மஜித் ஜஹாங்கீர் : இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 9 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
அவர்களில் மூவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்ததையடுத்து, இராணுவம் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது.
மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மக்கள் எருமைப் பகுதியின் டோபா கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது கிராமத்தின் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே திங்கள்கிழமை பூஞ்ச் பகுதிக்கு சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் கைது!

மின்னம்பலம் - Monisha  :  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதனை போலீசார் இன்று (டிசம்பர் 26) கைது செய்துள்ளனர்.
சேலம் ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜெகன்நாதன் பணியாற்றுகிறார்.
இவர் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் புகார்களும் எழுந்து வந்தன. இந்நிலையில் ஜெகன்நாதன் நண்பர்களுடன் இணைந்து வர்த்தக நிறுவனத்தை தொடங்கியதாகப் புகார் எழுந்தது. மேலும் போலி ஆவணங்களை தயாரித்து தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

பெரியாரை இரட்டைமலையார், அயோத்திதாசர் போன்றவர்களோடு ஒப்பிடமுடியுமா?

May be an image of 4 people and text that says 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா!'

Thiru Nila Virumandi  ;    இரட்டைமலையார், அயோத்திதாசர் என்று தூங்கிக் கொண்டு வருபவர்கள் பெரியாருக்கு முன்னாடியே இவர்கள் புரட்சி செய்துவிட்டார்கள் என்றோ திராவிடம் இருட்டடிப்பு செய்துவிட்டது என்றோ அழுவார்கள்.
அதற்கு முதன்மைய காரணம் தாழ்வு மனப்பான்மை. தமிழ்நாடே பெரியாரைத் தூக்கிக் கொண்டாடுகிறதே, எந்த வேற்றுமையும், சாதி மதப் பிரிவும் அதற்குத் தடையாக இல்லையே என்ற பொறாமை. தொன்னூறுகளுக்குப் பிறகான தன் சாதி அடையாள அரசியல் போக்கில் தலைவர்களும் தன் சாதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற தேவையில் இருந்து இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
இந்த இடத்தில் தான் சில அறிவுக்குடி அறிஞர்களின் அருமையான தேவை ஏற்படுகிறது. கருப்பு வெள்ளையாக தெளிவுபட்டு அறியப்பட்ட வரலாற்றை இந்த அரிப்பாளர்கள் நோண்டி நோண்டி தங்கள் சாதிக்கு சேர்த்தியான துண்டு துக்கடாக்களை கவ்வி வந்து வாந்தி எடுத்து அதை பின் நவீனத்துவ வண்ண ஓவியமாக வரைந்து வைத்தனர்‌.
வரலாற்றைத் தொகுப்பாகப் பார்க்க வேண்டும் என்பது ஒரு தேவை எனில் அதை எந்த நோக்கத்துக்காக பார்க்கிறோம் என்பது அதை விட பார்க்க வேண்டியது.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

இந்திய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலில் 3 இந்திய போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில்

மாலை மலர் :  அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.
இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. இனி ஐபிசி, சிஆர்பிசி இல்ல!

tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali :  டெல்லி: இந்தியாவில் அமலில் இருந்து வரும் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் சட்டம் போன்றவற்றை மாற்றும் 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்ளான ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. ஆனால், சில நிமிடங்களுக்கு முன்பிருந்து அவர் முழுமையாக மாற்றப்பட்டு உள்ளன. இனி அவற்றின் பெயர் இந்தியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா என்று அழைக்கப்படும். இந்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே பெயர்களைதான் இனி பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் 1000 கைதிகள் விடுதலை! கிறிஸ்மஸ் .. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி

மாலை மலர் : இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு உள்ளேயே இருக்கிற ஆர்எஸ்எஸ் பிடிஆரைத் தூக்கி அடிச்சது? social media musings

May be an image of 1 person and text that says 'Ashok R @idonashok PTRஐ மிஸ் செய்வதென்றால் தாராளமாகச் செய்யலாம். தப்பில்லை. ஆனால் நிர்மாலாவுக்கு எதிராக மாண்புமிகு அமைச்சர்கள் உதயநிதி முதல் தங்கம் தென்னரசு வரை அடி வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அமைச்சர்களின் இந்த பதிலடியால் மக்களின் முன்பு பாஜக அம்பலப்பட்டுப் போயிருக்கிறது. இந்நேரம் "we miss PTR" என திமுகவில் ஏதோ போதாமை இருப்பதைப் போல காட்ட Rஸிடம் பொறுக்கித் தின்னும் ஊடகவியலாளர்கள் பதிவிடுகிறார்கள். நம் ஆட்களில் சில அப்பாவிகளும் இதற்குப் பலி ஆகி பதிவிடுகிறார்கள். நன்றாகக் கவனித்துப் பார்த்தாலே தெரியும். எந்தக்காலத்திலும் திமுகவையோ PRரையோ ஆதரிக்காத RSS ஊடக புரோக்கர்களின் இந்த சூழ்ச்சிக்கு பலியாகலாமா? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?'

Vimalaadhithan Mani :  அண்ணண் PTRன் ஆளுமையை புரிந்து கொள்ளாத சில அரக்க தற்குறிகளில் இவரும் ஒருவர்.
இவர்களை போன்றவர்களிடம் பேசி புண்ணியமில்லை.
அதிகார வர்க்கத்துக்கு வலிக்கக்கூடாது என்று மயிலிறகால் தடவி கொடுப்பதை போன்ற பதில்கள் அடித்து வெளுத்து துவைத்தலில் சேராது.
அண்ணன் PTR போன்று தரவுகளுடன் பிரதமரை கூட துவம்சம் செய்தலே அறிவார்ந்த திராவிட பதிலடியாக இருக்கும்!

Skp Karuppanna Samy - Vimalaadhithan Mani Yes 100%

Gnana Bharathi :  ஒரு மனுஷன் உண்மையான கொள்கையோட ஊழல் பண்ணாம இருந்தா அவர ஒதுக்கி வெச்சிட்டு....
அப்பன் வீட்டு காசையா கேக்கறோம் னு பேசறது ok. Strong language.
அதுக்காக PTR ah இன்னும் ஒதுக்கி வைக்கறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல

Nilan Vajram :  ஹிந்தி தெரிந்த வடக்கன் இங்கே தமிழ் நாடு வந்து கட்டடம் கட்டி, கக்கூஸ் கழுவுறான்,
இதான் அவனுங்க. இந்த பொன்னான வார்த்தைகளை பேசியது தயாநிதி மாறன் MP, இதான் இவனுங்க கற்றுக்கொண்ட சமூக நீதியா?
அந்த வேலைகளை எல்லாம் மட்டம் என்று சொல்ல வரானா?
ஒரே கேள்வி அவர்கள் அந்த வேலைகளை செய்யாமல் ஒரே ஒரு நாள் நிறுத்தினால் என்ன ஆகும்?

திங்கள், 25 டிசம்பர், 2023

மசினன்குடி மக்களின் அவலம் . எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கிறார்கள்!

vikatan.com -  எம்.குமரேசன் : மலைகள், அருவிகள், கொஞ்சம் ஆபத்து... மனதை மயக்கும் மசினகுடி!
கோடை காலம் நெருங்குகிறது. மக்கள் குளிர்பிரதேசங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்குவார்கள். ஊட்டி செல்பவர்கள் பூங்காக்களையும், தேயிலைத் தோட்டங்களையும், சிகரங்களையும் பார்த்துவிட்டு, கொஞ்சம் குளிரையும் அனுபவித்து விட்டு ஊர் திரும்பி விடுகிறார்கள். இந்த இடங்கள் மட்டும்தான் நீலகிரியா? நீலகிரியில் பார்க்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு ஊர்தான் மசினகுடி.  
மனதை மயக்கும் ஒரு ஊர். இந்த ஊருக்குச் செல்லும் சாலையே நம்மை மிரள வைக்கும். உதகையில் இருந்து சரியாக ஏழாவது கிலோ மீட்டரில் தலைக்குந்தா என்ற இடம் வரும். இங்கிருந்து கல்லட்டிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இதனை கல்லட்டி பாதை என்பார்கள். சிறிய ரக பேருந்துகளில் மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும். பெரிய பேருந்துகளால் ஏற முடியாது. சாலை அவ்வளவு செங்குத்தாக இருக்கும். 

மீண்டும் வாக்குச்சீட்டு! ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் விசிக!

மின்னம்பலம் - Monisha :  தேர்தலில் மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
VCK announced protest
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து சதிகார போக்கோடு செயல்பட்டு வருகிறது.

‘‘போண்டா மணியின் இறுதி அஞ்சலிக்கு நடிகர் வடிவேலு வராதது ஏன்..?

வடிவேலுவை படையெடுக்கும் மாமன்னன் பாணி கண்ணீர் கதைகள் .. கதைகளை கேட்டு கதறும் வடிவேலு

tamil.filmibeat.com -  Abdul Rahman Peer Mohamed :  ஒரேயொரு மாமன்னன் பண்ணேன்... எல்லாமே சோகமா போய்டுச்சு..” அழுகையை கன்ட்ரோல் செய்த வடிவேலு!
சென்னை: வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் ரொம்பவே சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் நடித்ததால் எல்லாமே சோகமாகிவிட்டதாக வடிவேலு மனம் திறந்துள்ளார்.
மாமன்னன் படத்தால் சோகமாகிவிட்டது
தமிழ்த் திரையுலகில் வடிவேலுவின் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தயாநிதி மாறன் பழைய பேச்சு-இந்தியா கூட்டணியில் புகைச்சல்- பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சாடல்!

 tamil.oneindia.com - Mathivanan Maran  :   பாட்னா: உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் வந்து கழிவறை கழுவுகின்றனர் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசிய பழைய பேச்சு "இந்தியா" கூட்டணியில் கடும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சென்னை: என்ஜினியர் நந்தினி உயிரோடு எரித்துக் கொலை, திருநம்பி கைது - என்ன நடந்தது?

சென்னை: பெண் என்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை
நந்தினி
வெற்றிமாறன்
வெற்றிமாறன்

BBC News தமிழ் :  சென்னை புறநகர் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது?
சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், சிறுசேரியை அடுத்த பொன்மார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண் உயிருக்குப் போராடியுள்ளார்.

2024 தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர்களை அதிரடியாக அறிவிக்க ராகுல் காந்தி திட்டம்

மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான நிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 138 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
அதில் இருந்து கட்சியை மீட்டு புத்துணர்ச்சி கொடுக்க ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்னமும் 100 சதவீத பலன் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செயல்பாடு ராகுலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நகுறைவால் சென்னையில் காலமானார்

தினத்தந்தி இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
 இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக சுயபரிசோதனை செய்ய தவறினால்.. கொந்தளிக்கும் உடன்பிறப்புக்கள்

May be an illustration of 1 person

Vimalaadhithan Mani :   இறையன்பு தலைமை செயலாளராக, அறிவார்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக, பேராசிரியர் ஜெயரஞ்சன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதெல்லாம் நாம் அனைவரும் திமுக அரசுக்கு தாராளமாக சில்லறையை சிதறவிட்டோம்.
ஆனால் நடந்தது என்ன?
ஒன்றியத்தின் முட்டாள்தனமான கொள்கை முடிவுகளை, ஜக்கியை தரவுகளுடன் தைரியமாக, கடுமையாக எதிர்த்த PTR வேறு டம்மியான ஒரு துறைக்கு தூக்கியடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அமைதியாக்கப்பட்டார்.   முற்போக்கு இயக்கங்கள் தெருமுனை கூட்ட அனுமதி பெறுவதே குதிரைக்கொம்பாக இருக்கையில், ஆர்எஸ்எஸ் ஊட்டியில் எவ்வித இடையூறும் இன்றி பகிரங்கமாக ரகசியக்கூட்டம் நடத்துகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை என்ன?

இந்திய மேற்கு கரையில் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்.. பின்னணியில் ஈரான்?

மாலை மலர்  :   வாஷிங்டன்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பலின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய பெருங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூருக்கு வந்து கொண்டிருந்த எம்.வி செம் என்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீ பிடித்தது. கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், தாக்குதல் நடத்த பயன்பட்ட டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

300 இந்திய பயணிகளுடன் பிரான்சில் விமானம் தடுத்து நிறுத்தம். அமெரிக்காவுக்கு மனித கடத்தல்!

BBC News தமிழ் :  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்தியர்களுடன் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் மனித கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து நிகரகுவாவின் தலைநகரான மனகுவாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக பிரான்சில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி. சின்னவரை நம்பினார் கைவிடப்படார்-

 மின்னம்பலம் -]Aara : “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறை தண்டனை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அளிக்குமாறு முதலமைச்சர் பரிந்துரை செய்ய அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பொன்முடி குற்றவாளி என்று டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்த போது அவரது துறையை நிர்வகிக்க போகும் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்து விட்டது.
உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்முடிக்கு பதிலாக அதே உடையார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது.

வெள்ளி, 22 டிசம்பர், 2023

பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி

 மாலை மலர் : சென்னை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில்:-

நிதிஷ்குமாரை சமாதான படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி! தொலைபேசியில் பேசினார்

மாலை மலர் :  பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரண்டு முறை தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கணிப்பாக உள்ளது.
காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.
இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் உடைபடுமா தண்டனை? இரவு 11 மணிக்கு பொன்முடி எடுத்த திடீர் முடிவு

minnambalam.com -  Aara :  வைஃபை ஆன் செய்ததும் நீதிமன்றத் தீர்ப்பால் அமைச்சர் பதவியை இழந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடி உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று டிசம்பர் 21ஆம் தேதி தண்டனையை அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதற்காக இன்று காலை பொன்முடி தனது மனைவி விசாலாட்சியோடு காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். இன்று நேரில் ஆஜராகலாமா அல்லது வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆஜர் ஆகலாமா என்று நேற்று இரவு வரை தனது வழக்கறிஞர்களோடு தீவிரமாக ஆலோசித்தார் பொன்முடி.

அந்த பெண்களின் சதை இன்னமும் போலீஸாரின் பல் இடுக்கில் இருக்கும்.. வீரப்பன் ஆவணப்படம் அதிர வைக்குது!

tamil.filmibeat.com - Mari S :சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணப்படத்தில் நக்கீரன் கோபால் பேசிய அந்த வசனத்தை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
சின்ன பொண்ணை துரத்திக் கொண்டு ஒரு கர்நாடக போலீஸ் அம்மணமா ஓடுறான். அத்தனை வீடுகள் இருக்கு, ஊர் மக்கள் உள்ளனர். யாருமே நம்மை எதுவுமே செய்ய முடியாத என அதிகாரத்திமிர் அவனுக்கு எவ்ளோ இருக்கும் எனக் கேட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் கொடுத்த சித்ரவதைகள் போதாது என மகனை வைத்து அம்மாவையும், அப்பாவை வைத்து மகளையும் வன்புணர்வு செய்ய வைத்த கொடுமைகள் எல்லாம் வொர்க்‌ஷாப் பெயரில் நடந்துள்ளதாக அந்த டாக்குமென்ட்ரி சீரிஸில் காட்ட காட்ட ஈரக்குலையே நடுங்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வியாழன், 21 டிசம்பர், 2023

மல்லிகார்ஜுன கார்கே மீதுள்ள கோபத்தை டி ஆர் பாலுவிடம் காட்டிய நிதிஷ் குமார்

 tamil.samayam.com - மகேஷ் பாபு :  பிரசாந்த் கிஷோர் சொன்னது பலிச்சிடுச்சு... கிளைமேக்ஸ் நெருங்கிடுச்சு... நிதிஷ் குமார் அரசியல் ரூட் இனி என்ன ஆகும்?
தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனம் மூலம் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு முதல் பஞ்சாப் வரை பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்காக வேலை செய்துள்ளார். கார்ப்பரேட் பாணியிலான இவரது வியூகத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என அரசியல் கட்சிகளிடையே எந்தவித வேறுபாடும் கிடையாது. தற்போது ஐபேக்கிற்கு குட்பை சொல்லிவிட்டு தனது சொந்த மாநிலமான பிகாரில் அரசியல் புத்தெழுச்சி ஊட்டுவதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தி திணிப்பால் சிதறப்போகும் இந்தியா கூட்டணி? ஹிந்தியில் பேசிய நிதிஷ்குமார் அடாவடி!

 tamil.oneindia.com -  Mathivanan Maran :  டெல்லி: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோர் மீது ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நேற்று "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
I.N.D.I.A bloc: Nitish loses cool after DMK request translation of Hindi speech
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதன், 20 டிசம்பர், 2023

பொன்முடி குற்றவாளி.. வாயையே திறக்காமல்.. கப்-சிப் என்று மாறிய அதிமுக!

 tamil.oneindia.com  -   Shyamsundar :  சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு பற்றி அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாடியுடன் வகுப்பறைக்குள் நுழைய தடை - இலங்கை மருத்துவ கல்லூரிகளில் தாடிக்கு தடை! பி பி சி

இலங்கை, கல்வி, இஸ்லாம், முஸ்லீம்கள், மதம்

  BBC News தமிழ் -  , யூ.எல். மப்றூக் : தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை - கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர் - தாடி வைத்துள்ளமையைக் காரணம் காட்டி, ‘அவர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாது’ என, அந்தப் பல்கலைக் கழகம் அண்மையில் தடை விதித்தது.

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி தீர்மானம்

 மாலை மலர்  :   இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது.
இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

A Quantum Leap In The Wrong Direction .பாஜகவின் பொருளாதார எடுப்புக்களின் உண்மை நிலவரம்

Vimalaadhithan Mani :   இந்த ஜெயதி கோஷ் எழுதி இருக்கும் A Quantum Leap In The Wrong Direction என்ற புத்தகத்தை  சில காலம் முன் படித்தேன் .
10 ஆண்டு கால நடுவண் அரசின் அருமையான செயல்பாடுகள் என்று சங்கிகளால் பில்டப் செய்யப்பட்டு இருக்கும் அத்தனை பர்னிச்சர்களையும் பீஸ் பீஸாக புள்ளி விவரத்துடன் போட்டு உடைத்து சம்பவம் செய்து இருக்கிறார் .
அப்படிப்பட்ட ஒரு பிரபல பொருளாதார மேதைதான் A Quantum Leap In The Wrong Direction என்ற அவரு9டைய ஆராய்ச்சி புத்தகத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்!
 அதே போல இந்தியாவில் பிறந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்யா சென் அவர்கள் மற்றொரு பொருளாதார மேதை ஜான் ட்ரெஸ் (John Dreze) அவர்களுடன் இணைந்து எழுதி இருக்கும் அவருடைய "An Uncertain Glory: India and its Contradictions"  என்னும் புத்தகத்தில் தமிழ்நாடு எப்படி சமூக நீதி, கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு மாநிலமாக திகழ்கிறது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கி இருப்பார்.

செவ்வாய், 19 டிசம்பர், 2023

141 எம்.பி.க்கள் இடைநீக்கம்! BJP அரசின் சர்வாதிகாரம்

 hindu tamil :  : வரலாற்று ‘சம்பவம்’ – இந்திய நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கடந்த 13-ம் தேதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 90-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் பிரதமர் மோடியின் படம் விகாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சபாநாயகர் கண்டித்தார். பதாகைகளை ஏந்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஏற்காததால்இ அவை கூடிய சிறிது நேரத்துக்குள் அவையை அவர் ஒத்திவைத்தார்.

இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை..

tamil.oneindia.com - Mani Singh S :  இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை.. சிவ்தாஸ் மீனா
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலாலியில் தரையிறங்காமல் சென்ற சென்னை விமானம்!

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21

hirunews.lk யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் வந்த விமானமொன்று தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விமானத்தை தரையிறக்க பல முறை முயற்சி செய்தும் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.
இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

திங்கள், 18 டிசம்பர், 2023

மாமியாரை துன்புறுத்திய மருமகள் கைது .. கேரளாவில் ... வைரலாக பிரபலமான வீடியோ

May be an image of 1 person

மலையோரம் செய்திகள்  :   சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்ட காணொளி ஒன்றில் தென்பட்ட மாமியாரை கீழே தள்ளி விட்டு தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.
கேரள மாநிலத்தில் 80 வயதான மாமியாரை ஆசிரியையான மருமகள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருக்கும் மாமியாரை எழுந்து போகச் சொல்லி திட்டிய மருமகள், ஒருகட்டத்தில் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார்.
அதை அவரின் கணவர் வீடியோ எடுத்துள்ளார். கீழே விழுந்துகிடந்த மூதாட்டி தன்னை தூக்கிவிடும்படி கேட்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இன்று ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்! .. இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில்

tamil.oneindia.com - Vigneshkumar : டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று ஒரே நாளில் 78க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நுழைந்த சிலர் புகை வரும் குப்பிகளை வீசி ரகளை செய்தனர். அதேபோல இன்னும் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ரகளை செய்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது.
Amid Protests Over Breach 31 Opposition MPs Suspended From Lok Sabha
நாடாளுமன்றத்தில் நடந்த மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தூத்துக்குடி -காயல்பட்டினம் - 95 செ.மீ. மழை: ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியது - தற்போதைய நிலை என்ன?

 BBC News தமிழ் -  Ansari    எழுதியவர், சிராஜ் :  தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் எனும் சிறிய கடற்கரை நகரம் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஊராக மாறியிருக்கிறது,
காரணம் அங்கு ஒரே நாளில் பெய்துள்ள வரலாறு காணாத மழை. அங்கு 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை போன்ற ஒரு பெருநகரில் 2 நாட்களில் பெய்த 50 செ.மீ மழையே பல வாரங்களுக்கு நகரத்தை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்த போது, காயல்பட்டினம் எனும் சிறிய ஊரில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மொத்த மழை 24 மணிநேரத்தில் பெய்தால் அந்த ஊரின் நிலை என்னவாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!

தினத்தந்தி :  பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நெல்லை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் தலா 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி வழியாக அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணிமுத்தாறு அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

யாழ் வர்த்தகர் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!

நித்தியானந்தன் உங்கள் தோழன்:  யாழ் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!  யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டான். யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவனது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவன் கைது செய்யப்பட்டான்.
இவனிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது.

கயானா: 10இல் 4 பேர் இந்திய வம்சாவளியினர்

BBC News தமிழ் -  லூயிஸ் பாருச்சோ- பிபிசி நியூஸ், பிரேசில் ;  தென் அமெரிக்காவில் உள்ள ஒரே ஆங்கிலம் பேசும் நாடு, கயானா. இந்நாடு பிரிட்டனால் காலனித்துவப்படுத்தப்பட்டது என்பதுடன் அனைத்து முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளிலும், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் குடியேறிய பகுதியாக மாறியது.
வெனிசுலாவுடன் இந்நாட்டுக்கு பல நூற்றாண்டுகளாகப் பழமையான தகராறு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இங்கு இருப்பவர்களில் 10-ல் 4 பேர் எப்படி இந்தியர்களாக உள்ளனர் என்ற கேள்வி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.    இந்நாட்டில் உள்ளவர்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர்களாக உள்ளனர். நாட்டின் முழுப் பகுதியும் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது எப்படி இந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு சென்றனர்?

கனமழை - 3 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

மாலை மலர் :  நெல்லை: தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சனி, 16 டிசம்பர், 2023

நாடாளுமன்றத்தில் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் லலித்! ! - போலீஸுக்கு நீதிமன்றம் விதித்த கெடு!

Delhi court sends Parliament attack accused Lalit Jha to 7-day police remand

nakkheeran.in : நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரிக்கு இறைச்சி கட்டில் உட்பட five star வசதிகள் வழங்க உத்தரவு!

மின்னம்பலம் -christopher : அங்கித் திவாரி மீதான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர்.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில் !

தேசம் நெட் : இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன.
மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு இணங்கியுள்ளது. இதனால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்..

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்று அமைச்சர் எவ. வேலு தெரிவித்துள்ளார்.
சேலம் ஏற்காடு சாலையில் 1935 ஆம் ஆண்டு டி. ஆர் சுந்தரம் என்பவரால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ தொடங்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டது. அதன்பிறகு அந்த இடத்தை வர்மா கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் அந்த இடத்தை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

ED அங்கித் திவாரி வழக்கு - விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!

மின்னம்பலம் - Selvam :  அங்கித் திவாரி வழக்கு – விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி அங்கித் திவாரி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

இணுவில் வைத்தியசாலையும் .,மேரி ratnam அவர்களின் சேவையும்

May be an image of 2 people

Manikkavasagar Vaitialingam : இணுவில் வைத்தியசாலையும் .,மேரி ratnam அவர்களின் சேவையும்  தெரியாமல் போன வரலாறும் .சிந்திக்க மறுக்கும் தமிழினமும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
02.06.1873ஆம் ஆண்டு கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தில் பிறந்த மேரி ஏர்வின் ஐரிஷ்-ஸ்கொட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
திருச்சபைக் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் சமூக சீர்திருத்தங்களில் பங்குபற்றி சமூகத் தீமைகளை அகற்றும் நோக்குடன் மிஷனரி பணிகளில் ஈடுபடுபட்டு வந்த காலம்.  
மேரி ரட்னத்தின் இள வயது காலத்தில் இப்படியான பணிகளில் ஈடுபட்டார்.
அவர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சிபெற்று 1896இல் பட்டம் பெற்றார்.
வைத்திய சமூகப் பணிகள் செய்யும் “உலக சகோதரத்துவம்” என்கிற கிறிஸ்தவ இலட்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் வெளிநாட்டில் மிஷன்களுக்கான பணியில் ஈடுபட நியுயோர்க்கில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.

வியாழன், 14 டிசம்பர், 2023

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!


minnambalam - Selvam : மக்களவையில் வண்ண வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட நான்கு பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் நேற்று (டிசம்பர் 13) பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த இருவர் வண்ண புகை குண்டு வீசினர். உடனடியாக அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே வண்ண வெடி குண்டுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்ட இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா, மைசூர் மனோ ரஞ்சன், ஹரியானா நீலம் வர்மா, மகாராஷ்டிரா அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது. நான்கு பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இடைநிறுத்தம்- கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட

 மாலை மலர் : சென்னை பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஈரான் பெண் உரிமை போராளி நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு!

வீரகேசரி ; ஈரான் கடும் சிறையில் வாடும் பெண் வீராங்கனைக்கு  நோபல் பரிசு
மனித சமூகத்தில் பெண் வழி சமூகம் என்பதே ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஆண்கள், பெண்களை விட வலிமையானவர்கள் என்ற எண்ணக்கரு உருவானது.
இதன் காரணமாக பெண் அடிமைத்துவம் என்பது பன்னெடுங்காலமாக உலகில் பல சமூகங்களிலும் நிலவி வந்தது. ஆனால், காலமாற்றத்தால் உலகில் ஆண்களை விட பெண்கள் பல துறைகளிலும் இன்று முன்னேறிவிட்டனர்.
பெண் அடிமைத்துவம் என்பதே இன்று இல்லை என்று கூறுமளவு சில சமூக கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், சில பாரம்பரிய மத நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் அடிமைத்துவத்துடனேயே நடத்தப்படுகின்றனர்.

  ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற சில நாடுகளில் இவ்வாறு பெண்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பெண் அடிமைத்துவம் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு. அதற்கிணங்க பல சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

புதன், 13 டிசம்பர், 2023

பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..?

க.ம.மணிவண்ணன்  : பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.

1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

மக்களைவையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

  Kalaignar Seithigal - KL Reshma : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தின் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், வீரர்களுக்கு தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
அதாவது கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

ஊர்காவற்றுறை: ஆலயத்தில் நகைகள் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!

ilakkiyainfo.com : ஊர்காவற்றுறை: ஆலயத்தில் இருந்த நகைகள் மற்றும் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!
ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீவகம் .ஊர்காவற்றுறை சுருவில் ஐயனார் கோவில் என அழைக்கப்படும்,  ஸ்ரீ பூர்ணா புஸ்கலாதேவி சமேத ஸ்ரீ அரிகரபுத்திர  ஐயனார் ஆலய மூல விக்கிரமான ஐயனார் விக்கிரம் , பரிவார மூர்த்திகளான பிள்ளையார் , முருகன் – வள்ளி தெய்வானை , நவக்கிரங்கள் , வைரவர் , நந்தி – பலி பீடம் , கொடி தம்ப பிள்ளையார் , சண்டேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்களின் கீழ் இருந்த யந்திர தகடுகளை ஆலய பூசகர் திருடி விற்று வந்தார் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீக்கிய தலைவர் நிஜ்ஜார் கொலை - பாராளுமன்ற பேச்சிற்கு காரணம் வெளியிட்ட ட்ரூடோ

மாலை மலர்  : இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது.

பாஜகவின் 3 மாநில வெற்றிகள் ..மாநிலங்களின் தனித்தன்மைக்கு நெருக்கடி? ஒன்றிய கோட்பாட்டுக்கு சவால்?

tamil.oneindia.com - Shyamsundar I ;  டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.
மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது.

துரை தயாநிதி மருத்துவத்திற்கு அமெரிக்கா அழைத்து செல்லப்படுவார்!

மின்னம்பலம் - Kavi :  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி டிசம்பர் 6 ஆம் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.
அன்றிரவு நண்பரின் வீட்டிலேயே தங்கிய அவரை விடிந்து நண்பர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் துரை தயாநிதி எழுந்திருக்கவில்லை. துரையின் மனைவிக்கு போன் செய்து தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
அருகில்தான் வீடு என்பதால் அவரது மனைவியும் அங்குச் சென்று தனது கணவரை எழுப்பியபோது மயக்கத்திலிருந்தது தெரிய வந்தது.

தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது” : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP வலியுறுத்தல்!

கலைஞர் செய்திகள்  : தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா என பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது.
இன்றைய கூட்டத் தொடரில் தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

செவ்வாய், 12 டிசம்பர், 2023

கச்சா எண்ணெயை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம்

 tamil.abplive.com :  த. மோகன்ராஜ் மணிவேலன் :  மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த சென்னையும் கடந்த வாரம் முழுவதும் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.
வெள்ள பாதிப்புகள் ஒருபுறம் மக்களை தொந்தரவு செய்ய, சென்னை திருவொற்றியூரில் உள்ள CPCL -இல் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெள்ள நீரில் கலந்துள்ளது.
இதனால் திருவொற்றியூர் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இது மட்டும் இல்லாமல், கொற்றலை ஆற்றிலும் இந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்து கடலில் கலந்து வருகின்றது.
இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் உள்ளது என சூழலியல் தொடர்பான செயல்பாட்டாளார்கள் தெரிவித்து வருகின்றனர்.