சனி, 3 ஜனவரி, 2015

உலக நிர்வாண சங்கத்தை தொடங்கியவர் காலமானார் ! 103 வயது Funeral for naturist Christiane Lecocq held in Paris

அளவில் இயற்கையாளர்கள் அல்லது ஆடைகளற்று வாழ்பவர்களுக்கான சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ்டியான் லெகாக்கின் இறுதி நிகழ்வுகள் பாரிஸில் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் தமது 103ஆவது வயதில் அவர் காலமானார்.
இயற்கையாக வாழ்வது அதாவது ஆடைகளற்று நிர்வாணமாக வாழ்வது எனும் கலாச்சாரத்தை 1933ஆம் ஆண்டு முதல் பின்பற்றத் தொடங்கிய அவர், உலக இயற்கையாளர்கள் சம்மேளனம் எனும் அமைப்பை இதற்காகத் தொடங்கிட உதவினார்.
விடுமுறை காலத்தில் ஆடைகள் இல்லாமல் இருக்கும் அனுபவத்தை கூடுதலாக முன்னெடுப்பதே தமது லட்சியம் என்று கூறும் அந்த அமைப்பு, நிர்வாணம், சமூக மற்றும் சுகாதார அனுகூலங்களை அளிக்கும் என்று கூறுகிறது.
கிறிஸ்டியன் லெகாக் அம்மையார் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் இணைந்து உலக அளவில் முதல் முறையாக இயற்கையான முறையில் நிர்வாணமாக விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு மையத்தை, தென்மேற்கு பிரான்ஸில் தொடங்கினர்.

லிங்கா பில்டப் மோசடி அம்பலம் ! செலவு 45 கோடி ! அள்ளியது 220 கோடி! விநியோகஸ்தர்கள் ஒப்பாரி உண்ணாவிரதம்!

லிங்கா படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்று விநியோகஸ்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், 'லிங்கா' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஒரு பதில் சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதை ’லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். ஒரேயடியாக ரஜினிக்கு பில்டப் கொடுப்பதன் மர்மம் இதுதான் ,அதிக விலைக்கு விற்பது! தியேட்டர்காரர்களும் பிளாக்கில் டிக்கெட் வித்து போட்ட காசை எடுக்கட்டும் என்ற திருட்டு புத்தியின் ஆணிவேரே இந்த மாதிரி ரஜினி ஷங்கர் கும்பல்கள்தான் . திருட்டு டிவிடியை  ஒரு தேச சேவையாக கருதிவேண்டி இருக்கிறது

மோசடி சர்ச்சையில் ஈசா யோகா மையம்! லிங்கபைரவ business ஜோர் ஜோர்

கோவை: லிங்க பைரவ சிலைக்காக ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டு உடைந்த சிலையை தந்து ஏமாற்றியதாக கோவையில் உள்ள ஈசா யோகா மையம் மீது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து பணத்தை ஒப்படைத்தது ஈசா யோகாமையம். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார் ஸ்வீடன் பெண். ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக் ஹோமைச் சேர்ந்தவர் ஜெயா பாலு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 16-ம் தேதி ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்துள்ளார். பண மோசடி சர்ச்சையில் ஈசா யோகா மையம்! டிசம்பர் 23ஆம் தேதி, கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற லிங்க பைரவ யந்திர விழாவில் கலந்து கொண்டார். அப்போது, யோக மையத்தில் 160 கிலோ லிங்க பைரவ சிலை வேண்டி, கோயில் நிர்வாகத்திடம் ரூ.4.50 லட்சத்தை வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.business

அரூபம் ஒரு ஆவிகளின் கதை ! காப்பியாய் இல்லாதவரைக்கும் ஆவியாய் இருக்கலாம்

மிருகங்களுக்கு பயந்து ‘அரூபம்' பட குழுவினருடன் மலை உச்சியிலேயே 3 நாள் முகாமிட்டார் தர்ஷிகா. இதுபற்றி பட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியது:நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் ஆத்மா இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த கூற்றை அடிப்படையாக வைத்து இப்பட ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடைக்கானலில் மிக உயர்ந்த இடமான பல்லங்கி மலை உச்சியில் நடந்தது. அந்த இடத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹீரோ தேவா, ஹீரோயின்கள் தர்ஷிகா, சஹானா மற்றும் பட குழுவினர் நடந்தே சென்றோம். இரவு நேரத்தில் திரும்பினால் மிருகங்கள் தாக்கும் ஆபத்து இருக்கும் என்று எச்சரிக்கை தரப்பட்டதால் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயபாலன் ஒளிப்பதிவு. சுனில் சேவியர் இசை அமைக்கிறார். ஜி.யுவபாலகுமரன் தயாரிக்கிறா - See more at: tamilmurasu.org

தீபா: யட்சன் படத்தின் மூலம் ஒரு ரவுண்டு வருவேன்! வாய்ங்க !

கன்னட நடிகையான தீபா சன்னிதி, 'எனக்குள் ஒருவன்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். அவருடைய இந்த முதல் படம் வெளியாகும் முன்பே அவருக்கு விஷ்ணுவர்த்தன் இயக்கம் 'யட்சன்' படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.ர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக்  கொண்ட மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்துக் கொண்டு வென்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்து உள்ள இவர் கவிதைகளை எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்.

திறமை இல்லா பட்டதாரிகள்? கல்வித்துறையின் கோளாறு ?

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

நிர்மலா சீதாராமன் என்றெரு அசல் பார்ப்பன பெண்ணின் ஆணவம் பொய் பித்தலாட்டம் ?



கட்டிட வேலைக்கு வரும் மலிவான தொழிலாளிகள் ஹிந்தி வடநாட்டினர்தானே  ? சரவணா ஸ்டோர்ஸ் முதல், நாயர் டீக்கடை வரை, மிகக் குறைந்த ஊதியத்திற்கு நாள் தோறும் வேலை பார்க்க, பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஹிந்தி படித்தவர்கள் கூட்டம் கூட்டமாக  குடும்பத்தோடு, தமிழ்நாட்டிற்கு ஏன் வர வேண்டும்?

என்னால் ஹிந்தியில் பேச பயமாகவும் தயக்கமாகவும் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என சொல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-இல் போராட்டம் நடைபெற்றபோது, இந்த மாமிக்கு வயது ஆறு. இந்த போராட்டத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மதுரையில் பிறந்தவர், 1978இ-ல் திருச்சியில் பட்டப்படிப்பை முடித்து, புதுடில்லியில் 1980இ-ல் முதுகலை பட்டம் முடித்திருக்கிறார். புதுடில்லி யில் இருந்த இரண்டு ஆண்டுகளில், அங்கே இவரால் ஹிந்தியை கற்றுக்கொள்ள முடியவில்லையா?
இருமொழிக் கொள்கை காரண மாக, அரசுப் பள்ளிகளில் ஹிந்தி வேண்டுமானால் இல்லாது இருந் திருக்கலாம். ஆனால், இவர் படித்தது எல்லாம் தனியார் பள்ளி, கல்லூரி களில். அதுவும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி என்கிற பார்ப்பனமயமான கல்லூரியில் தான் படித்துள்ளார்.

சானிடரி நாப்கினுக்காக ஒரு முகநூல் போராட்டம்! நாப்கினை அப்புறப்படுத்த வசதி....

நீங்கள் யூஸ் செய்த நாப்கினை தூக்கியெறிய வேண்டாம், நாங்கள் குறிப் பிடும் இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்ற ப்ரொபைல் பிக்சருடன் தடதடக்கிறது ஒரு முகநூல் பக்கம். 'கிஸ் ஆப் லவ்' என்னும் போராட்டத்தின் மூலமாக பல்வேறு விமர்சனங்க ளை சந்தித்த அதே கேரள மண்ணில்தான் இப்படி ஒரு நூதன போராட்டம் தொடங்கியிருக்கிறது. கொச்சியில் உள்ள ’அஸ்மா ரப்பர் புராடக்ட்ஸ்’ என்ற நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு, “ பயன்படுத்திய நாப்கினை கழிவறையில் போடக் கூடாது”  என்ற விதிமுறையை விதித்திருக்கிறது. ஆனால் கடந்த மாதம், ஒரு பெண் ஊழியர் தான் பயன்படுத்திய நாப்கினை கவனக் குறைவாக கழிவறையில் போட்டுவிட பதட்டமானது அந்த நிறுவனம். யார் இந்த வேலையை செய்தது என்பதை அறிவதற்காக அங்கு பணிபுரியும் அனைத்து பெண்களின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த விவகாரம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்றிவிட, பெண் போராளிகள் கொதித்துப் போயினர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சோதனையிட்ட இரண்டு பெண் பணியாளர்கள் மீது வழககு தொடரப்பட் டுள்ளது.

ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை! சட்டம் அவாளுக்கு மக்சிமம் வழிந்து கொடுக்கும்?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள் சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கோப்பு படம்
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர், எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா தானாகவே இழந்துவிட்டார்.

வயதான தாயை பெற்ற மகனே பஸ் நிலையத்தில் வீசிய கொடுமை... ஏமாற்றி ஆட்டோவில் அழைத்து வந்து..

சென்னை: வயதான தாயை ஆட்டோவில் ஏற்றி வந்து, பெற்ற மகனே பஸ் நிலையத்தில் வீசி சென்ற கொடுமையை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் மனைவி சரோஜா (65). இவர், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் பசி, பட்டினியுடன் நோய்வாய்ப்பட்ட நிலை யில் நேற்று கிடந்தார். இதேபோல், உத்திரமேரூர் அடுத்த மருதம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி சரஸ்வதி (80)யும் பஸ் நிலைய பயணிகள் உட்காரும் இடத்தில் பெட்டி, படுக்கைகளுடன் அநாதையாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் அடிபட்டு கிடந்தால்தான் வருவோம் என்று கூறி பிடிவாதமாக வர மறுத்துவிட்ட னர்.

BBC :புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?

மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

மணல் வைகுண்டராஜன் தலைமறைவு ! சிபிஐ யின் நான்கு கோஷ்டிகள் தேடுகின்றன!

<சிபிஐ ஸ்பெஷல் டீம் கிடுக்கிப்பிடி: வைகுண்டராஜன் தலைமறைவு முன்னாள் தூத்துக்குடி துறைமுக பொறுப்புத்துறை கழக தலைவர் சுந்தரம் ஐஏஎஸ். இவர் 2012-ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசனை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் வைகுண்ட ராஜன். இந்த மனு தள்ளுபடி ஆனதும் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி விடுமுறை கால மதுரை உயர்நீதிமன்றத்தில், ஜாமீன் மனு மீதான விசாரனையை முன் கூட்டியே விசாரிக்ககோரி வைகுண்டராஜன் தரப்பு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்று சிபிஐ, நான்கு ஸ்பெஷன் டீம்கள் அமைத்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொச்சின், மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் வைகுண்டராஜனை தேடியது. இது தெரிந்ததும் வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார்.nakkheeran,in

AirAsia இதுவரை 16 உடல்கள் கிடைத்துள்ளன !

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து இன்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.> இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இன்று காலை நிலவரப்படி இந்த விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 7 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 16 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.

பார்பனர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்? – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

brahmin1வே.மதிமாறன் :
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய கிராமங்கள் முழுக்கவே அன்றும் இன்றும் தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள். தொடர்ந்து கொடூரமான முறையில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால், கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் கூட அல்ல, காரணமே இல்லாமல் வெறும் ஜாதி காழ்ப்புணர்ச்சியால் படுகொலைச் செய்யப்படுகிறார்கள்.
பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதி வெறியர்கள் + பிற்படுத்தப்பட்டவர்கள் தன்னை ‘சூத்திரன்’ ‘பார்ப்பானின் வேசி மகன்’ என்று இழிவு செய்கிற பார்ப்பனியத்திற்கு எதிராக இதுவரை எந்த வன்முறையையும் நிகழ்த்தியதே இல்லை.

ஸ்ரீபெரும்புதூரில் கொரியா அதிகாரி தமிழ் தொழிலாளியை காலால் மிதிக்கும் விடியோ காட்சி! Make in India?

வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர். வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் வீடியோவை வெளியிட்டட சக தொழிலாளர்கள், தமிழக அரசே! கொத்தடிமை கூடாரமா ஸ்ரீபெரும்புதூர்? மோடி அரசே! இது தான் உங்கள் "MAKE IN INDIA" திட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தொழிலாளார் நலத்துறை இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.nakkheeran.in

குஜராத்தில் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள் கப்பல்! கடற்படை தடுத்ததால் வெடிவைத்து தகர்ப்பு!

Gujarat மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது.  இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியன்று குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது. உடனடியாக இந்திய கடலோரக் காவல்படை அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி சென்றது. அப்போது முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிச் சூட்டையும் கடலோர காவல்படையினர் மேற்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் மிக வேகமாக தப்பிச் செல்ல முயன்றது. இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் திடீரென மீன்பிடிக் கப்பல் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சிறுமியை கடத்தி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கற்பழித்த போலீசார்!

Uttar Pradesh: A 14-year-old girl was allegedly abducted and gang-raped by two constables inside a police station here in Uttar Pradesh, prompting the authorities to suspend the accused who are absconding. உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த சிறுமி சென்றாள். அப்போது, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இரண்டு போலீசார் அந்த சிறுமியை அருகில் வரும்படி சைகை காட்டி அழைத்தனர். காரருகே சென்ற சிறுமியை பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த காரை முஸாஜக் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குள் இருந்த ஒரு அறைக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற அவர்கள், அவளை மிரட்டி, அடித்து, சித்ரவதை செய்து கற்பழித்தனர்.

திட்டக்குழு கலைக்கப்படுவது தனியார் துறைக்கு பொருளாதாரத்தை நகர்த்தும் சதி? டாக்டர் ராமதாஸ் கண்டனம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில்  65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப் படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற வினா எழுந்தபோது, அதற்கான விடையாக 1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான அப்போதைய அரசு  ஏற்படுத்தியது தான் திட்டக் குழு ஆகும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.

Sangeetha (24) murderd by Swamy Niththiyaanandha on 29 december 2014 ? Sudden death of young girl in Nithiyanandha Ashram!


Mysterious & sudden death of a 24 year old brahmacharini of the ashram has raised very serious questions and put the Nithyananda ashram in the center of a controversy once again. Sangeetha's mother has cried foul over the death of her daughter and also registered a complaint against Nithyananda. She also wants re-postmortem to ascertain the cause of death. It was reported that on 29th December 2014 a 24 year old girl called Sangeetha fell down in the ashram and was taken to BGS hospital, but she suffered a heart attack & died on the way to the hospital. Post mortem was conducted in Rajarajeshwari hospital and the report claims she died of heart attack. The young girl has been living in Nithyananda ashram in Bidadi for last 4 years & she had taken sanyas.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இளம்பெண் சங்கீதா(24) கொலை? கேசை ஊத்தி மூட நித்தியானந்தா ......


திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. இவர், பி.சி.ஏ., படித்த பின்னர், கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். ஆசிரமத்தினர் உடனடியாக, சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு வரப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, நாவலூர் குட்டப்பட்டுக்கு வந்த உடலை அடக்கம் செய்துவிட்டனர்.சங்கீதாவின் மரணம் குறித்து, வெளியே பேசவோ, ஊடகங்களில் தகவல் தெரிவிக்கவோ கூடாது' என, குடும்பத்தினரிடம், நித்யானந்தா மடத்தில் உள்ளவர்கள் சத்தியம் வாங்கியிருப்பதாக, சங்கீதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

யுவன் சங்கர் என்கின்ற அப்துல் 3 rd திருமணம் ! என்னாப்பா ஒரே ஆம்பளைங்க போடோவையே காம்பிக்கிறீங்க ? அப்புறம் திருமணம்கிறீங்க?

இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இளையராஜா திருவண்ணாமலையில் உள்ளார் .கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.இந்தநிலையில் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாம் மதத்துக்கு மாறியஅவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது. தந்தை பெரியார் திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்த  நன்றி மறந்த இளையராஜாவுக்கு காலம் கொடுத்த செருப்படி இது . சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சியால் வாழ்வில் உயர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இளையராஜா இனி முகத்தை எங்கே?

கனிமொழி கொந்தளிப்பால் தத்தளிக்கிறார் கருணாநிதி? தினமலர் !

கட்சியில் தன்னை முழுமையாக ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், அதற்காகவே, தன்னை மாணவர் அணி செயலர் பொறுப்பில் நியமிக்க, தலைமையில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் தி.மு.க., உட்கட்சித் தேர்தல், பரபரப்போடும், விறுவிறுப்போடும் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்து, மாவட்ட செயலர்கள் தேர்வும், முடிவுறும் நிலையை எட்டி இருக்கிறது. அடுத்த கட்டமாக, மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. வரும் 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதால், முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதெல்லாம் கவலை இல்லை...கட்சியை கைப்பற்றி அதன் சொத்தை முழுவதுமாக கொள்ளை அடித்து தன குடும்பத்துக்கு மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் ஸ்டாலின் திட்டம்... இல்லாவிட்டால் டி வி ஆரம்பம் மற்றும் அனைத்து மேல் மட்ட வேலைகளையும் பார்த்த இவர் தன் பெயர் வெளியே வராமல் தாயையும் - தங்கையையும் மாட்டி விட்டு தான் தப்பித்து கொண்டுள்ளார்...பங்குதாரராக தங்கையை மட்டும் போட சம்மதிக்கும் போது  இவர் ஏதோ தங்கை மீதான பாசத்தில் சம்மதிக்கிறார் என்று நினைத்திருப்பர்..அதன் பின் இவ்வளவு பெரிய சதி...இப்போது அந்த வழக்கை காட்டியே கட்சியின் உயர் பதவியை தங்கைக்கு மறுக்கிறார்,  இந்த ஆள்  துரோக வேலையில் ........விட மேலானவர் என்று நிருபித்து விட்டார்....

வியாழன், 1 ஜனவரி, 2015

J K எனும் நண்பனின் வாழ்க்கை DVD யிலும் தியேட்டரிலும் 15ம் தேதி வெளியாகிறது


புது படங்களை தியேட்டரில் வெளியிடும் நாளிலேயே வீட்டுக்கு வீடு டிவிடியாக விற்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் கூறியது:திருட்டு வி.சி.டியை ஒழிக்க கேட்டு தோற்றதுதான் மிச்சம். கேட்க நாதியில்லாத நிலை ஆகிவிட்டது. அதன்விளைவுதான் பட ரிலீஸ் அன்றே வீட்டுக்கு வீடு ஒரிஜினல் டிவிடி விற்க முடிவு செய்தேன். நான் இயக்கியுள்ள ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை‘ வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் எனது முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஒரு டிவிடி விலை ரூ.50. சி2எச் என்ற எனது அமைப்பு மூலம் தரமான புதுபடங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இதுபோல் வழங்கப்படுகிறது.

2014 அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நீதித்துறையை ஏப்பம் விட்ட ஆண்டு! குன்ஹா மட்டுமே நீதித்துறையின் ஆக்சிஜன்!

ஜெயலலிதாவுக்காக இந்திய பத்திரிகைகளும் டிவிக்களும் (ஜாதி ஜாதி ) எவ்வளவு தூரம் அடிமை சேவகம் செய்கின்றன என்பதை காட்ட இந்த சவுக்கு கட்டுரை ஒரு நல்ல Flashback ஆகும் 
நேற்றைக்கு முன்தினம், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை முடிந்து, செப்டம்பர் 20 அன்று தீர்ப்பு என்று அறிவித்தார்,  சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் முக்கிய வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் அல்ல.  தமிழகத்தின் முதல்வர்.    தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இந்தச் செய்தி. ஆனால், தமிழகத்தில் உள்ள அத்தனை அச்சு ஊடகங்களும் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்தன அல்லது முழுமையாக புறக்கணித்தன. இந்து நாளேடு, 7வது பக்கத்தில் இரண்டு காலத்தில் சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த செய்தியை ஏழாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.  டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு இது செய்தியே அல்ல.

ஜெ. மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமி நியமனம்- கர்நாடகா ஹைகோர்ட்!

பெங்களூரு: தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் சிறப்பு அமர்வின் நீதிபதியாக குமாரசாமியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. 1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று பெங்களூர் தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி, சசிகலா, இளவரசி,சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அமித்ஷா என்கவுண்டர் வழக்கில் இருந்து விடுதலையானது போல ஜெயாவும் தனது குற்றங்களில் இருந்து விடுதலையாவாரா என்பது ஒன்றும் மில்லியன் டொலர் குவேஸ்சன் அல்ல. நிச்சயம் விடுதலையாவார். நீதித்துறையின் லட்சணம் அப்படி ?

மகப்பேறு அறுவை சிகிச்சையில் தாய்மார்கள் பலி ! கிரிமினல் ஜெயலலிதாவுக்கு ஒப்பாரி வைப்பவர்கள் எங்கே போனார்கள்?


ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில், பிரசவத்துக்குப்பின் உயிரிழந்த தாய்மார்களின் எண்ணிக்கை, நேற்று ஐந்தாக உயர்ந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் ஜெயந்தி, அமுதா ஆகியோர் பிரசவத்துக்குப்பின் உயிரிழந்தனர். சரஸ்வதி, ராதிகா ஆகியோர் கோவை மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்தடுத்து இறந்தனர். இந்நிலையில், ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்துக்குப்பின் ரேவதி என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மதியம் அரசு மருத்துவமனையில் ஆய்வு முடித்தபின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கடந்த ஓராண்டில், 2750 பிரசவங்கள் நடந்துள்ளன; ஒரு தாய் கூட உயிரிழக்கவில்லை. ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் நடந்த பிரவசத்துக்குப் பிந்தைய இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த, மாநில சுகாதார திட்ட இயக்குனர், மருத்துவப் பணிகள் துறை இயக்குனர் உட்பட உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு, சேவை குறைபாடு உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், தனியார் மருத்துவ நிபுணர்களை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

அமித் ஷாவின் திட்டமிட்ட என்கவுண்டர் கொலை வழக்கில் வண்டுமுருகன் வாதாடி விடுதலை வாங்கி ......


ஒரு கொலைகாரனின் மனதை இன்னொரு கொலைகாரன்தான் புரிந்து கொள்வான்
amit_shah
கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார்.பள்ளிக் குழந்தைகளை சுட்டுக் கொன்ற பாக் தாலிபான்களை உலகமே கண்டித்தது. ஆனால் பேருந்தில் பயணம் சென்ற அப்பாவி சொராபுதீன் ஷேக்கை கொலை செய்த பாஜக கும்பல்தான் இங்கே நாட்டை ஆள்கிறது.
‘பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த சொராபுதீன், குஜராத்தின் முக்கிய பாஜக தலைவர்களை கொலை செய்ய திட்டமிருந்தார்’ என்று குஜராத் போலிஸ் திட்டமிட்டபடி ஒரு பொய்க்கதையை அதுவும் எந்த ஆதாரமோ, தடயங்களோ இல்லாமல் அவிழ்த்து விட்டிருந்தது.
மோடியின் போலிஸ் சொன்னால் ஊர் உலகம் அப்படியே நம்ப வேண்டும், நம்புவார்கள் என்பதால் அப்படி தெனாவெட்டாக அடித்து விட்டிருந்தார்கள். பிறகு பல்வேறு ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் இந்த போலி என்கவுண்டர் கொலை வெளிச்சத்திற்கு வந்து சிபிஐ வழக்கு போட்டது.

காங்கிரஸ்: நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை ஆதரிக்க முடியாது

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, விவசாயிகளுக்கு விரோதமாகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காத நிலையில் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது. எனவே நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டு கூட்டத்தைக் கூட்டி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது  nakkheeran.in

List of 32 இணையதளங்கள் ! மத்திய அரசு முடக்கம்! including Vimeo , Dailymotion......

Internet service providers to block 32 websites, in cluding popular video-sharing plat forms such as Dailymotion and Vimeo, reportedly over concerns that they are being misused by Islamic State jihadists.
The ban has angered free-speech proponents who allege that the Narendra Modi government is using national security as a pretext to censor online content. On Wednesday, tweets criticising the restrictions were trending on #GOIBlocks. Senior lawyer Karuna Nandy said that she would challenge the DoT order in the Supreme Court.
Apart from Dailymotion and Vimeo, Internet service providers have also been ordered to block Github and Pastebin, which are popular among programmers; Weebly, a free website creator; and Archive.org, a non-profit digital library.
32 இணையதளங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும், நாட்டிற்கு குழப்பதை ஏற்படுத்தும் கருத்துக்களை கொண்டும் இயங்கும் 32 இணையதளங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டு, பின்னர் சட்டப்பிரிவு 66ஏ அடிப்படையில் அந்த 32 இணையதளங்களை முடக்கவும், அந்த அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பிரச்சனைக்குரிய கருத்துக்களை நீக்கும் பட்சத்தில், அந்த இணையதளங்கள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

அரசியல்வாதிகளிடமிருந்து 197 போலீசாருக்கு கிடைத்தது சுதந்திரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த, 197 போலீ சார், தங்களின் வழக்கமான பணிக்கு திரும்புகின்றனர்.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தார்.
பின், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில், தங்கள் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏராளமான அரசியல்வாதிகள், போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில், முந்தைய, காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி அரசு, ஏராளமான அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளித்தது.தற்போது நடந்த ஆலோசனையில், குறிப்பிட்ட சில அரசியல்வாதி களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

புதன், 31 டிசம்பர், 2014

மீண்டும் மருதநாயகம் வருகிறார்? லண்டன் தயாரிப்பாளர் காலி?


இங்கிலாந்து ராணியை வரவழைத்து 1997ம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தை தொடங்கினார் கமல். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பைனான்ஸ் பற்றாக்குறையால் நின்றுபோனது. இந்நிலையில் அப்படத்தை மீண்டும் தொடர்வதுகுறித்து ஆலோசனை நடத்தி வந்தார் கமல். பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதுவரை அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘மருதநாயகம் படம் கைவிடப்பட்டுவிட்டதா?' என்று கேட்டபோது கமல் பதில் அளித்தார். அவர் கூறும்போது,‘இது நிறைவேறும் காலம் நெருங்கி வந்திருக்கிறது. லண்டனை சேர்ந்த எனது நண்பரும், பெரிய தொழில் அதிபருமான ஒருவர் இப்படத்தை தயாரிக்க தயார் என்று என்னிடம் கூறி இருக்கிறார். இதற்கான பட்ஜெட் பெரிய அளவில் செலவாகும் என்றேன். அதுபற்றி கவலை இல்லை. எவ்வளவு செலவானாலும் அதை என்னால் தாங்க முடியும் என்று கூறி உள்ளார்' என்றார்.இதையடுத்து 2015ம் ஆண்டு மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார் கமல்..tamilmurasu.org

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி அதிரடி?

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கார்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி கூறுகையில், “நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்துக்கான அவசரச் சட்டம் கொண்டுவருவது நியாயமற்ற செயல். நாடு முழுவதும் ஜனநாயகத்தை மத்திய அரசு நசுக்கி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டிலும், நரேந்திர மோடி அரசு உருவாக்கியுள்ள சூழ்நிலை நாட்டில் அவசர நிலையை விட மோசமானது. நிர்ப்பந்தம் காரணமாகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது” என்று மம்தா பானர்ஜி  கூறினார்.மம்தாஜி இதுவுல  நீங்க உறுதியா நின்னா அடுத்த  பிரதமர் நீங்கதான் 

PK திரைப்பட தியேட்டர்கள் மீது இந்து பயங்கரவாத பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பி.கே.இப்படம்  வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பஜ்ரங் தள் அமைப்பினர், இப்ப்டம் வெளியிடப்பட்ட  தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிட்டி கோல்டு மற்றும் சிவ் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு சுமார் 20 பேர் கொண்ட குழுவுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், தியேட்டர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர்.இந்த சம்பவத்தையடுத்து நவராங்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அமைப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நடிகை சார்மி : மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்க்க சகிக்காது! அப்படி என்னதாய்ன் கோபம்?

இலியானாவை கலாய்த்த சார்மி! இலியானா ரியாக்‌ஷன்?>டிகைகளுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது என்று சொல்லிவிட முடியாது. பொறாமையும் இருக்கலாம், ஆனால் அது மனதிற்குள் இருக்கவேண்டும். இப்படி டி.வி நிகழ்ச்சிகளெல்லாம் கொட்டி தீர்த்துவிடக்கூடாது என்று நடிகை சார்மியை பொருமிக்கொண்டிருக்கிறது தெலுங்கு திரையுலகம். அப்படி என்ன செய்துவிட்டார் சார்மி?டி.வி. நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சார்மியிடம் ‘ மேக்-அப் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது என நீங்கள் நினைக்கும் ஹீரோயின் யார்?’ என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் சார்மி “இலியானா தான். அவரை மேக்-அப் இல்லாமல் பார்க்க சகிக்காது. அவர் எங்கு போனாலும் மேக்-அப் சாதனங்களை மறக்காமல் எடுத்துக்கொண்டு போகச் சொல்லவேண்டும்” என்று ஓபன் கமெண்ட் அடித்துவிட்டார்.சார்மி இந்த அளவிற்கு இலியானாவை இடித்துப் பேச காரணம் என்ன என்று விசாரித்தால் கதை கதையாஇ சொல்கிறது டோலிவுட்.அடடே மேக்கப் இல்லாமலே காருக்கு வெளியே இலியான நன்றாகவே இருக்கிறார் ஆனா நீங்க காருக்குள்ளேயே மேக்கப்போட இருந்தும்....

காமுகனை அடிக்க முடியாத ஆத்திரத்தில் காவல் நிலைய வாகனம் எரிப்பு: போலீசார் குவிப்பு பதட்டம் நீடிப்பு

திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியரின் மகள் சௌமியா ( பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது ). திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.29ந்தேதி இரவு டியூஷன் சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இரு இளைஞர்கள் சாரோன் சர்ச் அருகே அந்த பெண்ணை ஆட்டோவில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.செய்துவிட்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அடித்து உதைத்து எடப்பாளையம் கிராமத்தில் கொண்டு வந்துவிட்டுள்ளனர். அந்த பெண் வீட்டுக்கு செல்கிறாளா அல்லது வேறு எங்காவுது செல்கிறாளா என பின் தொடர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் பார்த்து எதுக்குடா அந்த பெண்ணை கிண்டல் செய்றிங்க என விரட்டியுள்ளார். அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்ற அந்த பெண் தன் பெற்றோரிடம் அதுப்பற்றி முறையிட அவர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

போலி என்கவுண்டர் கேசில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்!

மும்பை: குஜராத்தில், 2005ம் ஆண்டில் நடைபெற்ற, போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, விடுவிக்கப்பட்டார். அவருக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று அவரை விடுவித்தது.
குஜராத்தில் தாதாவாக வலம் வந்த சொராபுதீன் ஷேக், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் அவன் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி படுகொலை வழக்கில், குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா பெயர் சேர்க்கப்பட்டது; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது.சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, எம்.பி.கோசாவி பிறப்பித்த உத்தரவில், 'சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், அமித் ஷா மீது தொடரப்பட்ட வழக்கிற்கு ஆதாரம் இல்லை. எனவே, அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' என, உத்தரவிட்டார்.

ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"... முன்கூட்டியே எச்சரித்த சீன பிளாக்கர்!

பெய்ஜிங்: இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன. ஏர் ஏசியாவை குறி வைக்கும் டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட்டில், ஏர் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு (கருப்புக் கரம் என்று அதை இவர் குறிப்பிடுகிறார்) குறி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச். 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் ஒரு கூட இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார்.

Air Asia கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்!

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்த 40 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தின் பாகங்கள், ஜாவா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த கியூஇசட் 8501 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த விமானத்தை முதன்மை விமானி இரியாண்டோ இயக்கினார். அவருடன் இணை விமானி ரெமி இம்மானுவேல் ப்லீசெல் இருந்தார்.இந்தோனேசியாவைச் சேர்ந்த 144 பேரும், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தில் மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர்.ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு புறப்பட்ட விமானத்தை இயக்கிய விமானி, ஜகர்டா வானூர்தி பகுதியில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை காலை 6.13 மணிக்கு கடைசியாக தொடர்பு கொண்டு, மேகம் சூழ்திருப்பதால் 34 ஆயிரம் அடி உயர்த்திற்கு மேல், மாற்றுப் பாதையில் திசை மாறி செல்வதாக தெரிவித்துள்ளார். காலை 6.16 மணி வரை விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் கருவியுடன் தொடர்பில் இருந்த அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை 6.17 மணிக்கு ரேடார் தொடர்பை இழந்தத  nakkheeran.in

ஏர் ஏசியா விமானம் ? உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல் !

சுமத்ரா: இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு, மாயமான ஏர் ஏசியா கியூஸ் 8501விமானம் 62 மணி நேரத்திற்கு பின்னர் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சுர்பையா விமான நிலையத்தில் உறவினர்கள் பலர் கதறி அழுதபடி நிற்கின்றனர். 95 சதவீதம் இது மாயமான விமானத்தின் பாகங்களே என்றும் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் ஏசியா கியூஸ் 8501 ( மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ) சுர்பயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது. காலை 7.42 க்கு தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரியன், 1 பிரிட்டன் , 1 மலேசியன், 7 விமான ஊழியர்கள் இருந்தனர்.

படப்பிடிப்பின் நடுவில் தம்பியை எண்ணி அழுத கேத்ரின் தெரசா

மெட்ராஸ்‘ படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவரது தம்பி சமீபத்தில் பெங்களூருவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபகாலமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வரும் கேத்ரின் தம்பியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவ்வப்போது கதறி அழுகிறாராம். இது பற்றி அவர் கூறியது: என்னுடைய தம்பி கிறிஸ்டோபரை நான் இழந்துவிட்டேன். இந்த இழப்பை வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. நானோ என் குடும்பத்தினரோ கிறிஸ்டோபரின் இந்த பரிதாப முடிவுக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இது தாங்கமுடியாத வேதனையை தந்துள்ளது. அவன்தான் எங்கள் வீட்டில் கடைக்குட்டி. எங்களுக்கு ரொம்பவும் முக்கியமானவன். கடந்த 2 வருடமாக எனது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் அவனது படிப்பில்  ஆர்வம் குறைந்தது.

நிர்மலா புலம்பல்: குவிந்தது அன்னிய நேரடி முதலீடு: 7 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி!

புதுடில்லி: நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், ஏப்., - அக்., வரையிலான ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.டில்லியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற பயிலரங்கை, அவர் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: தயாரிப்புத் துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்பு நாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன் மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப்பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது. 
இந்தம்மா சும்மா சாமியாடாம இருக்கமாட்டாய்ங்க ? 83 லட்சம் முதலீடு உள்ள நாட்டில் ஒரு லட்சம் வருவது போவது ஒன்றும் பெரிய செய்தி இல்லை. நோக்கியா  foxon தமிழகத்தில் மூடுகிறார்கள். ஏனெனில் அவர்களின் சலுகை காலம முடிந்து விட்டது. அது போல எவ்வளவு முதலிடு திருப்பி சென்றுள்ளது. ? கூடவே வெளி நாட்டு பொருட்களும் இறக்குமதியாகும்.... உள்ளூர் தொழில் நலிவடையும்.....

சுபவீ :சாதியை கட்டிப்பிடித்து காப்பாற்றும் கயிறுதான் பகவத் கீதை?

கீதை - யாருக்குப் புனித நூல் என்னும் என் கட்டுரையைத் தொடர்ந்தும், கீதை குறித்த என் உரையைத் தொடர்ந்தும், நம் வலைப்பூவில் ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. அதில் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர் என்றாலும், வினோத், கணேஷ்வேல், விருபாக்ஷன்  ஆகிய மூவரும் குறிப்பிடத் தக்கவர்கள். அறிவார்ந்த முறையிலும், நாகரிகமாகவும் தங்கள் வாதங்களை முன்வைத்த அம்மூவருக்கும் முதலில் என் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.கிருஷ்ணதாஸ் என்று ஒரு நண்பர் இடையில் தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார். கீழ்த்தரமான, குறுக்குப்புத்தி கொண்டவன் என்று என் மீது தனி மனிதத் தாக்குதலை அவர் தொடுத்துள்ளார்.

RSS தலித் பாசம்? இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களை யூஸ் பண்ணத்தாய்ன்?

பையாஜி ஜோஷி

 ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
முசுலீம் ஆட்சியாளர்களும் மாட்டுக் கறி தின்பவர்களுமான அந்நிய படையெடுப்பாளர்கள் சன்வார்வன்ஷிய ஷத்ரியர்களின் ஹிந்து பெருமிதத்தை உடைப்பதற்காக மாட்டைக் கொல்வது, அதன் தோலை உரிப்பது, அதன் மீதங்களை கண்காணாத இடத்தில் எறிவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். பெருமிதம் மிக்க ஹிந்து கைதிகளுக்கு இந்த மாதிரியான வேலைகளைக் கொடுத்ததன் மூலம் தோலை உரிக்கும் (charma-karma) சாதி என்ற பிரிவையே அந்நியப் படையெடுப்பாளர்கள் தான் உண்டாக்கினர்” – இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் வார்த்தைகள். சகல ஜாதி கொடுமைகளுக்கும் மூல காரணம் பார்ப்பான்தான் !ஆனால் அதே  பார்ப்பான் ஒதுங்கி நின்று சேதாரம் இல்லாம  கூத்து பார்ப்பான்

திக்விஜய் சிங் : மத சுதந்திர சட்டம் நாட்டுக்கு மிக அவசியம்.மதமாற்ற தடை தேவையில்லை

போபால்: நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது மத சுதந்திர சட்டம் தானே ஒழிய மதமாற்ற தடை சட்டம் அல்ல என  காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்.உத்தரபிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மதமாற்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். இந்த சூழலில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசம் லக்னோவில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

AirAsia காணாமல்போன ஏர்ஏஷிய விமானம் கடலுக்கடியில்? BBC News

காணாமல்போன இந்தோனேஷியாவின் ஏர்ஏஷிய விமானம் (எண்:QZ8501) கடலின் ஆழத்தில் இருக்கக்கூடும் என்று இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த விமானம் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அந்த விமானத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒருங்கிணைப்புத் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இந்த அனுமானத்திற்கு வந்திருப்பதாக பாம்பாங் சொய்லிஸ்டோ தெரிவித்தார்.
162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த ஏர் பஸ் A320-200 ரக விமானம் காணாமல் போய் ஒரு நாள் முடிந்துவிட்டநிலையில் அதனைத்தேடும் பணிகள் தொடர்கின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழில் பேசும் ஜனாதிபதி ராஜபக்ஸ: இந்தியா என் உறவு; சீனா என் நண்பன்’’


அதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள் : தமிழக பகீர்!

தமிழ்நாட்டில் 2012-ல் 34 தலித் பெண்கள் மட்டுமே பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனால்,  ‘எவிடன்ஸ்’அமைப்பு தமிழ்நாடு முழுக்க நடத்திய ஆய்வில் 124 தலித்பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு அதிர்ச்சியூட்டிள்ளது. இதில்,  பாதிக்கப்பட்ட 29 சதவீதம் பெண்கள் பாலியல் வண்புணர்ச்சிக் குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதுவும், 124 வன்கொடுமை  சம்பவங்களில் 1 சம்பவத்தில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்கிற  ‘எவிடன்ஸ்’அமைப்பின் ஆய்வு... இதற்கு ஆதாரமாக சுமார் 6500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சேகரித்துள்ளது!அதிர்ச்சியில் உறையவைக்கும்  தலித்பெண் வன்கொடுமைகள் சில...

நாகர்கோவில் பணத்துக்காக ஒரு குடும்பத்தையே கொன்ற ஒரு எம்.ஏ. பி.எட். பட்டதாரி

A customs employee,wife and adopted daughter found dead
ஆன்லைன் வர்த்தகத்தில் எனக்கு ரூ.35 லட்சம் லாபம் கிடைத்ததாகவும், அந்த பணத்தை பாதுகாப்பாக வைக்கும்படி சுப்பையாவிடம் கூறினேன். அதற்காக இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி எனக்கு ரூ.35 லட்சம் வருவாய் வந்ததுபோல தகவலை அனுப்பி அதனை சுப்பையாவிடம் காண்பித்தேன். 
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12).
இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். வசந்தி, அபிஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டுக்குள்ளேயே பிணமாக கிடந்தனர். சுப்பையாவின் உடல் 2 நாட்களுக்கு முன்பு முப்பந்தல் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

சகாயம் அதிர்ச்சி! சிட்டிசன் படக்கதை போல் காணமல் போன கிராமங்கள் மனிதர்கள் .....

புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக். கிரானைட்-தொழிலுக்காக-கிராமங்கள்-முற்றிலும்-அழிப்பு-ஆய்வுக்குச்-சென்ற-ஐஏஎஸ்-அதிகாரி-சகாயம்-அதிர்ச்சி/
புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக்.
கிரானைட் தொழிலுக்காக கிரா மங்கள் இருந்த சுவடே தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை நேரில் பார்வையிட்ட சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஐஐடி டெல்லி இயக்குநர் பதவி விலகினார்! சுப்பரமணியம் சாமியின் மிரட்டல் காரணம்?

டெல்லி: தனக்குரிய சம்பளப் பாக்கி ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு சுப்பிரமணியன் சாமி கொடுத்த நெருக்கடி காரணமாக, தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் டெல்லி ஐஐடியின் இயக்குநர் ரகுநாத் செவ்கோங்கர் பதவி விலகியுள்ளார். இவரது விலகல் குறித்து மத்திய மனிதவளத்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் செவ்கோங்கர் பதவி விலகி விட்டதாக மூத்த ஐஐடி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு முக்கியக் காரணமே சுப்பிரமணியன் சாமி கொடுத்த பிரஷர்தான் காரணம் என்கிறார்கள். சம்பளப் பாக்கி கேட்டு சாமி, டெல்லி ஐஐடியின் முன்னாள் டி பிரிவு ஆசிரியராக இருந்தவர். இவர் அங்கு ஆசிரியராக இருந்தபோது அதாவது 1972ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தனக்குரிய சம்பளப் பாக்கித் தொகையான ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு ஐஐடியை தொடர்ந்து நெருக்கி வந்துள்ளார் சாமி.

400 சாமியார்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு? ப்ரீயா செக்சில் ஈடுபடலாம் ஜனத்தொகையும் பெருகாது!

 புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது.சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னைத் தானே அறிவித்து, 'நானே கடவுள்' என கூறி வருகிறார்,  இதுவெல்லாம் ஆஷ்ரமம் என்று ஒன்று ஏற்படுத்தி கூட்டு கும்மாளம் போடுவதற்கு தயார் செய்தது..

சவுக்கு : 2000 கோடிக்கு குன்ஹாவின் தீர்ப்பு என்று ஒரு16 பக்க ஆவணத்தை .... நம்பிய மன்னார்குடி மாபியா

வெங்கடாச்சலம், சசிக்கலா, இளவரசி ஆகியோர் எப்படியாவது பெங்களுரு சிறப்பு நீதிபதி குன்ஹாவை விலைக்கு வாங்கி விடலாம் என்று கடும் முயற்சி எடுத்ததாகவும், அவர்களின் விரக்தியை பயன்படுத்திக் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி, 2000 கோடி வாங்கிக் கொண்டு, குன்ஹாவின் தீர்ப்பு இதுதான் என்று ஒரு 16 பக்க ஆவணத்தை வழங்கியதாகவும், அதை அப்படியே நம்பிய மன்னார்குடி மாபியா கூட்டம், அதை ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும், உலகில் பணத்துக்கு விலைபோகாத நபர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்ற இறுமாப்பிலேயே வளர்ந்த ஜெயலலிதா, அதை அப்படியே நம்பியதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 27 செப்டம்பர் அன்று பரப்பன அக்ரஹாரா சென்று நீதிமன்ற வாசலில் இறங்கியதும், கைக்கடியாரத்தில் மணியைப்பார்த்து விட்டு, நாம் 12.30 மணிக்கு கிளம்பப் போகிறோம் என்று வாகன ஓட்டுனரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சரியாக 11.04 மணிக்கு நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்ததும், அடுத்த வினாடி, சசிகலாவை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு, அது வரை, தாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பதையும் ....
 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? என்றான் பாரதி. இதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றம் செல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக என்னால் செயல்படவே முடியாது தந்தி டி.வி.க்கு ராஜபக்சே சிறப்பு பேட்டி

‘‘தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை’’ என்றும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ராஜபக்சே பேட்டி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.ஹரிஹரன் சிறப்பு பேட்டி கண்டுள்ளார்.
அவர் கேட்ட சுறுசுறுப்பான கேள்விகளுக்கு, ராஜபக்சே விறுவிறுப்பாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
நரேந்திரமோடிக்கு நன்றி கேள்வி:– சமீபத்தில், சார்க் மாநாட்டின்போது நீங்களும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்தீர்கள். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவித்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாகக்கூட இது கருதப்பட்டது. மீனவர்களும் வரவேற்றார்கள். ஆனால், இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மீனவர் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.ரயில்வேயில் அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயம், ஆட்குறைப்பு, 100 சதவீத அக விலைப்படி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வது பற்றி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில் பணிமனை கோட்ட செயலாளர் எம்.சூரியபிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

மதுரை மாட்டுத்தாவணியில் கல்வீசி அரசு விரைவுப் பேருந்தின்  கண்ணாடி உடைக்கப்பட்டது.    பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே  வந்த பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னைக்கு புறப்பட்ட பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலால்  பயணிகள் தவித்து வருகின்றனர். நெல்லையிலும் பேருந்து மீது கல்வீச்சு நெல்லை: நெல்லையிலும் வடக்கு புறவழிச்சாலையில் 2 அரசு விரைவுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பெண் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைகளின் நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது என அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தஸ்நீம் அஸ்லாம் தனது சுட்டுரை வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவது எந்த சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாக கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உலக நாடுகளின் கருத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கிறது. பாகிஸ்தான் தற்போது மிகவும் அசாதாரணமான சூழலைக் கண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அசாதாரணமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி

பெங்களூரு:பெங்களூரில், நேற்று இரவு, குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி, 38 என்ற பெண், பலத்த காயமடைந்தார்; உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பெங்களுருவை சேர்ந்த கார்த்திக் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த பகுதியில், ரெஸ்டாரெண்டு, பார், 'பப்'கள் அதிகமாக உள்ளன. தினமும், நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை, இப்பகுதி பரபரப்பாக காணப்படும். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. குண்டு வெடித்தவுடன், ரெஸ்டாரெண்ட், 'பப்'களில் இருந்தவர்கள், பதட்டத்துடன் வெளியேறினர். அப்பகுதி முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மைனா கும்கி கயலை விட பிரபு சாலமன் இயேசு அழைக்கிறார் எடுக்கலாம்

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து.. இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ மாற்றங்களைக் கடந்து மக்களின் அரசியல், எளிய மக்களின் வாழ்க்கை; காதலன் – காதலி, கணவன் – மனைவி, சகோதர-சகோதரிகள், தாய் – மகன் இப்படியாக ‘ஆண்-பெண்’ உறவில் சமூகம் மற்றும் பொருளாதராத்தை ஒட்டி எழுகிற பிரச்சினைகள், மனப் பிரச்சினைகள், சிக்கல்கள், தீர்வுகள் என்று பயணிக்கிறது; ஆனால், தமிழ் சினிமாக்காரர்களோ, ‘காதல் கோடு’ தாண்ட முடியாமல் தவிக்கிறார்கள். இதிகாசகாலத்திலேயே, ‘பத்தினி சீதை’ கூடத் தன் ‘அவதாரபுருஷன்’ போட்ட ‘கோட்’ டை தாண்டியிருக்கிறார். இந்த நவீன காலத்தில் இதிகாசகாலத்தை விடப் பிற்போக்காக இருக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள விடலைத் தனமான ரசிகர்களின், காதல் குறித்த அறியாமையை நியாயப்படுத்தி,

AirAsia விமானம் ஜாவா கடலில் விழுந்தது? இந்தோனேஷியா விமானம் மீட்பு பணியில் தீவிரம்!

Indonesian military is deploying forces to search for the plane, after alleged report of plane crashing in the sea between Java and Kalimantan, military sources said.
Meanwhile, AirAsia said in a statement that the search and rescue operations were in progress and promised to "keep all parties informed as more information becomes available."

மாயமான விமானம் ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்று சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பெலிடன் கடற் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமானம் இந்தோனேசியா ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஏசியாவிற்கு சொந்தமான ஏர்-பஸ் A320-200 விமானம் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்திவிமானத்தில் 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பயணத்தினர். ஏர்ஏசியா விமனத்தின் எண் QZ8501 ஆகும். விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வழக்கமாக காலை 8;30 மணிக்கு சென்றடையும்.  ஆனால் இன்று வழகத்திற்கு மாறாக விமானத்தின் தொடர்பு துண்டித்தது.

மோடி மனைவிக்கு பதில் அளிக்க போலீஸ் மறுப்பு ! பாதுகாப்பு பற்றி கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டம் ஜசொதாவுக்கு இல்லையே?

Modi's wife Jashodaben denied information under RTI  பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் மோடியுடன் திருமணமான சில நாட்களில் பிரிந்து விட்டார். குஜராத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். மோடியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இதற்கிடையே மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு அவருக்கு மனைவி இருப்பது பற்றிய தகவல் நாடு முழுவதும் தெரிய வந்தது. மோடி பிரதமரானதால் ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற அடிப்படையில் குஜராத் போலீசார் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஜசோதா பென் தனக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனக்கு எந்தெந்த சலுகைகள் உள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் போலீசுக்கு மனு அனுப்பி இருந்தார்.

AirAsia 4.5 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் ? 8 மணிநேரம் ஆகியும் தகவல் இல்லை?

ஏர்ஏசியா விமானம் மாயமாகி 8 மணிநேரம் ஆகியும் விமானம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணிக்கு உதவி செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது. இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியாவின் ஏர்-பஸ் A320-200 விமானம் நடுவானில் மாயமானது. காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. காலை 7:24 மணியளவில் விலகி சென்றது. துண்டிப்பை அடுத்து மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாயமான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது.

நிலம் கையகப்படுத்த வசதியாக அவசர சட்டம் ! இன்சுரன்ஸ், சுரங்கத்தொழில், நிலம் ! அந்நியரே Take India ! மோடியின் புதிய கோஷம்?

புதுடில்லி : காப்பீடு, நிலக்கரி ஆகிய துறைகளை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் நிறைவேறிய காப்பீட்டு மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய முடியாத வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது; நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவை நடைமுறைக்கு வந்துள்ளன.இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவையும், அவசர சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மக்களின் சொத்து கார்பொரேட்கையில..நிலம் அபகரிப்பை எளிதாக்கும் வழி..அப்புடியே அந்நியரும் இந்தியாவை பகுதி பகுதியா வாங்க அனுமதிப்பாங்க போல.."டேக் இந்தியா" இதுதான் மோடி அரசின் அடுத்த கோஷம்..

இன்னொரு வருங்கால தமிழக CM நிர்மலா சீதாராமன் : தமிழகம் எனக்கு செய்த சேவை என்ன ? இந்தி படிக்கவிடல்லையே?

எந்த சபையிலும், அன்னிய பாஷையான ஆங்கிலத்தில் பயமின்றி பேச முடிகிற என்னால், இந்திய மொழியான இந்தியில் பேச பயமும், தயக்கமும் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்; என்ன காரணம்?'' என, ஆவேசமாக கேள்வி எழுப்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இந்தி படிப்பது அவசியம்,'' என்றும் வலியுறுத்தினார். கோவையில் தொழில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த, நிர்மலா சீதாராமன், 'தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி: ஒவ்வொரு கட்சியும், தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது. அதன்படி பா.ஜ.,வும், தேசிய கட்சி என்ற முறையில், மொழிப் பிரச்னையை அணுகுகிறது.தமிழுக்கும், பா.ஜ.,வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர். ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், தமிழக மக்களை, அவர்களது உணர்வை பார்க்கிறோம். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்று தான், வட மாநிலங்களில், திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம். தாய், தாய் மொழி, தாய் தேசம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என வலியுறுத்துகிறோம். இந்த அய்யங்கார  அம்மணி இப்படியே பேசினால் இனி பொன் ராதாகிருஷ்ணன்  கூட வெற்றி பெறமுடியாதுல ?

சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது!

பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட் திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி, பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலிக்கும்போது பரஸ்பர சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது இந்தியாவின் பெரிய நகரங்களில் தற்போது இயல்பாகிவிட்டதாகவும், இந்த விதமான காதல் தோல்வியில் முடிவடைந்த பின்னர், காதலி தன்னை காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.nakkheeran.in

AirAsia இந்தோனிசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்?

An AirAsia flight travelling from the Indonesian city of Surabaya to Singapore has lost contact with air traffic control, the company has said.இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். dinakaran.com

பாரதரத்னா :யார் இந்த மண்ணுருண்டை மாளவியா? பார்ப்பான் கடல் தாண்ட கூடாது என்பதால் மண் உருண்டையுடன் கப்பலில் சென்ற கில்லாடி!

மண்ணுருண்டை மாளவியா!இந்து  மத வருணாசிரமவாதி - காந்தியைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த - ஒரு சனாதனவாதிக்குப் பாரத ரத்னா  விருது கொடுக்கப்படலாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடிஅரசு நாளான - ஜனவரி 26இல் தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.
ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற - மனிதநேய அடிப்படையில் வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).
அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி  பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் - வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி)

அரவிந்தரே உயிர்த்து வந்தாலும் கழுவ முடியாத பாவம் சூழ்ந்த அரவிந்தர் ஆஸ்ரம்?

- வா.மணிகண்டன் (எழுத்தாளர் )

லைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு செய்தி கடந்த சில நாட்களாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது,  அரவிந்தர் ஆசிரமத்தின் பிரச்னைகள்.
1926-ம் ஆண்டு அரவிந்தரால் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட ஆசிரமம், இப்பொழுதுதான் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குகிறது. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இளைய பெண்ணான ஹேமலதா கர்ப்பம் அடைந்ததுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என்று ஆசிரம நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த கிருஷ்ண பெல்லியப்பா என்பவருடன் ஹேமலதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், இது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், எல்லா செய்திகளுக்கும் இன்னொரு தரப்பு இருப்பதைப்போல, ஹேமலதாவின் குடும்பத்தினருக்கும் ஒரு தரப்பு இருக்கிறது. அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். நிர்வாகிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். உள்ளூர் அரசாங்கத்திலிருந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெண்கள் கமிஷன் என்ற எந்த இடத்திலும் அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் முறையிட்ட ஒவ்வோர் இடமும், ‘நீங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்றே கெடு வைத்து உத்தரவிடுகிறார்கள்.  ஆசிரமம், பணம், அரசியல் சப்போர்ட், பாலியல் வக்கிரம், கொலை ! இந்த மாபியா கும்பலுக்கு அதிகார வர்க்கம் பாத பூஜை செய்திருக்கும் என்பதை யூகிக்க யாரும் ஒரு ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை ! பேசாம இழுத்து மூடுங்கப்பா உள்ளே போடுங்கப்பா

கராச்சியில் வசிக்கும் தாவுத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி
1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம் இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பலமுறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.

கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா! பாட்டும் நானே பாவமும் நானே !

கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்,திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே என்றபாடல் இவரது பாடல்தான் .
கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன.