சனி, 23 ஜூன், 2012

சகுனி - ”கார்த்தியின் முதல் சறுக்கல்”

நடிகர் கார்த்தி ஆரம்பம் முதலே வெற்றிப் படங்களை கொடுத்து வந்ததால், ஷங்கர் தயாள் இயக்கத்தில் அரசியல் சார்ந்து எடுக்கப்பட்ட சகுனி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரெய்லர்களும், போஸ்டர்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கின அஜித் நடித்த ’பில்லா-2’ படத்துடன் ’சகுனி’ போட்டி என்ற அளவிற்கு பேசப்பட்டு பின்பு தனியே களமிறங்கிய சகுனி திரையில் களமாடவில்லை
தனது பாரம்பரியமான பரம்பரை வீட்டை பாலம் அமைப்பதற்காக இடிக்காமல் இருக்க, தேர்தல் நேரத்தில் தனக்கு உறுதியளித்த அரசியல்வாதிகளை நம்பி சென்னை வரும் கார்த்தி சந்தானத்தை சந்திக்கிறார்.

இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா?

இந்த பதிவை எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

– இணைய இணைப்பு, வலை உலாவி (புரவுசர்) உங்கள் பக்கம்
– இணைய வழங்கி (சர்வர்), வேர்ட் பிரஸ் மென்பொருள் வினவு தளம் இயங்குவதற்கு.
– இந்தப் பதிவு பற்றிய விபரத்தை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் அல்லது தமிழ்மணம் திரட்டியில் பார்த்து வந்திருக்கலாம்
– கூகுள் தேடல் மூலமாக வந்து சேர்ந்திருக்கலாம்.
– இன்னும் சிலர் ஆர்எஸ்எஸ் ரீடர் மூலம் வந்து சேர்ந்திருக்கலாம்.
பதிவர் வலைப்பதிவை எழுதி வெளியிட, வாசகர்களுக்கு அது கொண்டு சேர்க்கப்பட, டுவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு படிக்கத் தர உலகளாவிய ஒரு கட்டமைப்பு செயல்பட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் இயக்குவது யார்? ‘முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள்’ என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
1970களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமடைந்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தையும் சாத்தியமாக்குவதும் இயக்குவதும் உலகளாவிய பெருந்திரளான மக்கள்தான்.
– இணையம் எந்த ஒரு நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானதில்லை.
– இணையத்தில் தேடுதல் வசதி ஒற்றை நிறுவனத்தின் பணியினால் மட்டும் உருவானது இல்லை.
– சமூக வலைத்தளங்களின் செயல்பாடு அவற்றில் பங்கு பெறும் பயனர்களால்தான் சாத்தியமாகின்றன.

இன்னும் 30 நாட்களுக்கு யாருக்கும் கண்டமில்லை

ஜெ. கொடநாடு பயணம்: தூக்க மாத்திரையை, தூக்கி எறிந்தார் அமைச்சர்!

Viruvirupu
“அமைச்சர்கள் பலர் பல நாட்களின்பின் நேற்றிரவுதான் நிம்மதியாகத் தூங்கினார்கள்” என்று வாய்க்குள் (கிண்டலாக) சிரித்தபடி சொல்கிறார்கள், அ.தி.மு.க. புள்ளிகள். என்ன சமாச்சாரம்? தூக்க மாத்திரையா? துரத்தும் கனவுகள் வரவில்லையா? அதெல்லாம் இல்லை. முதல்வர் கொடநாடு சென்றுவிட்டார்.
“அம்மா அடுத்த மாத இறுதியில்தான் வருவாங்க” என்றார் ஒரு அமைச்சர் முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்புடன்.
இவர்களது ஆனந்தத்துக்கு காரணமே, முதல்வர் சென்னையில் இல்லாத நேரத்தில் மந்திரிசபை மாற்றம் இருக்காது என்பதுதான்!

Vice President ஆண்டுக்கு 171 சமையல் கியாஸ் சிலிண்டர்கள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171 சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிற சமையல் கியாஸ் சிலிண்டர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிலிண்டர் வாங்கி 21 நாட்கள் கழிந்த பிறகுதான் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்துமே குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட பிரபலங்களுக்காக மீறப்பட்டிருக்கின்றன.
ஓர் ஆண்டில் அதிக சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்களின் பட்டியலின்படி பார்த்தால், டெல்லி பிருதிவிராஜ் சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டாலின் இல்லத்துக்கு 369 சிலிண்டர்கள் விநிநோகிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு சிலிண்டருக்கும் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கேரளா சிறுவாணியில் அணை கட்டினால் லாரிகளை நிறுத்துவோம்

சிறுவாணியில் அணை கட்டினால் லாரிகளை நிறுத்துவோம்: கேரளத்துக்கு லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தொடங்கினால் தமிழ்நாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை கேரளத்துக்கு ஏற்றிச் செல்லு லாரிகளை நிறுத்திவிடுவோம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. அப்படி அணை கட்டினால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். அதே போல கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் நிறுத்தப்படும்.

நித்தியானந்தா.. காவல்துறைக்கு ஒரு சாஃப்ட் கார்னர்

வைஷ்ணவி காலருகே.. ரஞ்சிதா தோளருகே.. மதுரை போலீஸ் கோர்ட்டருகே..

Viruvirupu
நித்தியானந்தா விவகாரம் தொடர்பில் தமிழக காவல்துறைக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது என்ற தோற்றம் உண்டு. அதை உறுதி செய்வது போல, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், மதுரை ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுமீது வழக்கு தாக்கல் செய்யாமல் ‘கம்’மென்று இருந்து வந்தது மதுரை போலீஸ்.
சோலை கண்ணனின் மனு என்ன சொல்கிறது?
மே 12-ம் தேதி அவரும், நண்பர்களும் மதுரை ஆதீன மடத்துக்கு சென்றிருக்கின்றனர். அங்கேயிருந்த ‘இளைய ஆதீனம்’ நித்யானந்தா அவர்களைத் தனியாக அழைத்து, சமாதானம் பேசியிருக்கிறார். “எனது பூஜைகளில் கலந்துகொண்டால் ‘பேரின்பம்’ கிட்டும்” என்றும் சொன்னாராம்.
‘பேரின்பத்தை’ காணும் ஆவலில் இவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.
முத்த ஆதீனம் வந்தார், இளைய ஆதீனம் வந்தார். இளம் பெண்கள் வந்தார்கள். ரஞ்சிதா வந்தார். பூஜை ஆரம்பமானது.
மூத்த ஆதீனத்துக்கு பெரிய சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. (பூஜை அவரது ஹோம்-கிரவுண்டில் நடந்ததால்!) பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மூத்த ஆதீனத்தின் கால்களை வைஷ்ணவி வருடிக் கொண்டிருந்தார்.

போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை நெருங்கியது மீட்புக்குழு!


 Rescue Team Nearing The Baby Bore W
குர்காவ்ன்: ஹரியானா மாநிலம் மனேசர் அருகில் 70 அடி ஆழ போர் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை மஹி, அருகே மீட்புக் குழுவினர் நெருங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மஹி மீட்கப்படுவார் என்று அப்பகுதி மக்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

Criminal நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்

பெங்களூரு: ""நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய பல அதிரடி தகவல்களை, ஆர்த்திராவ் விரைவில் வெளியிடுவார்,'' என, அவரின் தந்தை சேதுமாதவராவ் கூறினார்.
நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, ஸ்வர்ணா கன்னட "டிவி' சேனல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஆர்த்திராவ். நேற்று, அவரின் தந்தை சேதுமாதவராவ், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிர பக்தை: நித்யானந்தா, 2004ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது, நான், என் மனைவி, மகள் ஆர்த்தி மூவரும் கலந்து கொண்டோம். அப்போது, எங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிடதி ஆஸ்ரமத்தில் நடக்கும், "எனர்ஜி தரிசனம்' நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார். நாங்கள் மூவரும் ஆஸ்ரமம் சென்றோம்.

Bore Well 3வது நாளாக சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

குர்கான் : 4வயது சிறுமி மகியை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் உள்‌ள கசன் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி மகி விளையாடிய போது 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் ராணுவ ஜவான் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
.‌நேற்று நள்ளிரவில் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமிக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வது நாளாக சிறுமியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Singrur டாடா நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு

டாடாவுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும் சட்டம் செல்லாது: கொல்கத்தா நீதிமன்றம்! மமதாவுக்கு பெரும் பின்னடைவாக

கொல்கத்தா: டாடா நிறுவனத்துக்காக சிங்கூரில் முந்தைய இடதுசாரி அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கும் வகையில் மமதா பானர்ஜி அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கூரில் டாடாவுக்காக விவசாயிகளின் 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து மமதா போராட்டம் நடத்தினார். இதனால் தமது தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது டாடா நிறுவனம். தேர்தல் வாக்குறுதிகளிலும் முதன்மையாக ஒன்றாக சிங்கூரில் 400 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைப்போம் என்று கூறியதுடன் அதற்கான சட்டத்தையும் மமதா இயற்றினார். ஆனால் மமதா அரசின் சட்டத்தை எதிர்த்து டாடா நிறுவனம் நீதிமன்றத்துக்குப் போனது. அப்பொழுது நீதிபதி ஐ.பி. முகர்ஜி, மமதா அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்குட்பட்டது- செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தார்.

வெள்ளி, 22 ஜூன், 2012

குளு குளு கொடநாட்டில் ஜெயலலிதா மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிற

மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிறபோது கொடநாட்டில் ஒய்வு! பொன்முடி பேச்சு!
                                                                                                   
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி,

காலையிலே செயற்குழு, மாலையிலே தீர்மானம், இரவிலே பொதுக்கூட்டம். இந்த ஒரு நாளில் கலைஞர் இப்படி பாடுகிறாரே என்று சொன்னார்கள். இந்த ஒரு நாள் மட்டுமல்ல, தலைவர் கலைஞர் என்று அரசியலில் அடியெடுதது வைத்தாரோ அன்றிருந்து இன்று 89வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தக் காலம் வரை உழைப்பு. அந்த உழைப்புத்ôன் இந்த இயக்கத்தை கட்டிக்காக்கிறது என்பது வரலாற்று உண்மை. எந்தக் காலத்திலும் ஓய்வு எடுக்கத் தெரியாத தலைவர்.

திமுக சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 4ம்

 Dmk Executive Meet Discuss Repressive Jayalalitha அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்- திமுக!

சென்னை: பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில், திமுக முன்னணித் தலைவர்கள் மீது தொடர்ந்து அதிமுக அரசு அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டுவருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக பிரமுகர்கள் மீது சரமாரியாக நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்தவண்ணம் உள்ளன. கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதும், பிறகு மீண்டும் கைதாவதுமாக உள்ளனர் திமுகவினர்.

திருப்பதி 6 மாத தலைமுடி 61 கோடிக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கடந்த 6 மாதத்தில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி ரூ.61 கோடியே 72 லட்சத்துக்கு ஏலம் விடப் பட்டது. இந்த தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. நேற்று முன்தினம் 35 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருந்தனர். திருப்பதி கோவிலில் மழை வேண்டி இன்று வருண யாகம் நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் கனவில் ஜெயாவின் ஜோக்காரகிய அத்வானி

ஜனாதிபதி தேர்தல் கலாட்டா: “அத்வானி சராசரி கூட இல்லை.. நர்சரி!”

Viruvirupu
ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவை ஆதரிப்பதாக நேற்று பா.ஜ.க. அறிவித்த போது, அதற்கான காரணத்தையும் சேர்த்தே தெரிவித்திருந்தது. பா.ஜ.க. அறிவித்த காரணம், குழந்தைத்தனமானது என்று பிலுபிலுவென பிடித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. அறிவித்த காரணம் என்ன? “ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, பிரணாப் முகர்ஜியை அறிவிக்கும் முன்னர், எம்முடன் அவர்கள் (காங்கிரஸ்) கலந்து ஆலோசிக்கவில்லை. அதனால்தான், அவர்களது வேட்பாளரை விட்டு, நாம் சங்மாவை ஆதரிக்கிறோம்” என காரணம் கூறியிருந்தது பா.ஜ.க.
ஜனார்த்தனன் திவேதி: சிலேட்டில் அறிக்கை எழுதற பசங்ககூட என்ன பேச்சு?
இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

DMK மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்க முடிவு?

 Dmk Executive Meet Discuss Repressive Jayalalitha அதிமுகவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்க முடிவு?

 பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என வளைத்து வளைத்துக் கைது செய்து வரும் அராஜகப் போக்கைக் கண்டித்து மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி கூட்டத்துக்கு வரவில்லை. மதுரை அருகே தனது பண்ணை வீட்டில் அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொய் வழக்கு போடும் ஒரு அதிகாரியையும் விடக் கூடாது- ஸ்டாலின் ஆவேசம்

 Stalin Blames Police Officials Slapping False Cases
சென்னை: வேண்டும் என்றே திமுகவினர் மீது பொய் வழக்குப் போடும் ஒரு அதிகாரியையும் விடாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக செயற்குழுக் கூட்டம் பெரும் பரபரப்புக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அதிமுக அரசு கட்சியினருக்கு எதிராக போட்டு வரும் பொய் வழக்குகளை முறியடிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாக அங்கிருந்து கிடைத்த தகவல் வருமாறு...
திமுகவினர் மீது அடுக்கடுக்காக அதிமுக அரசு பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. இதை சட்ட ரீதியாக, போராட்டங்கள் மூலமாக நாம் சந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால் ஒருவரை விடுவித்தவுடன் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்கின்றன். பொய்யான புகார் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள், வழக்குப் போடுகிறார்கள். அதாவது தெரிந்தே பொய் வழக்குப் போடுகின்றனர்.

போதை டான்ஸ்' விவகாரம்: நித்தியானந்தா மீ நானே கேஸ் போடுவேன்... நீதிபதி ஆவேசம்!

 Madurai Hc Bench Orders Police File Case Against Nithi
மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் டான்ஸ் ஆடியது தொடர்பான புகாரில் முகாந்திரம் உள்ளது. 
எனவே இதுகுறித்து உடனே போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நானே வழக்குப் பதிவு செய்வேன் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.
அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன.
அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் டான்ஸ் ஆடினர். கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.

பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!

அழகிரி புறக்கணிப்பு திமுக செயற்குழு கூட்டம்

அ.தி.மு.க, அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை 10 க்கும் மேற்பட்ட மாஜி அமைச்சர்கள், 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,மாவட்ட செயலர்களை கைது செய்து சிறையில் அடைத்து வரும் போக்கு தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பலரும் சிறையில் இருப்பதால் கட்சி பணிகள் பாதிப்பதோடு முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கட்சி சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கைள் எடுக்கலாம் என்று ஆலோசிப்பதற்கு இன்று தி.மு.க., செயற்குழு கூட்டத்தை கட்சி தலைவர் கலைஞர் அவசரமாக கூட்டியுள்ளார். இதையடுத்து மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு கட்சித் தலைமை முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது.  கடிதத்தை வாங்கிக்கொண்ட மு.க.அழகிரி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவில்லை. மதுரை விக்கிரமங்களத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.பரபரப்பான சூழ்நிலையில் கூடும் திமுக செயற்குழுவை அழகிரி புறக்கணித்துள்ளது மதுரை திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

ராமஜெயம் கொலை இதுவரை கண்டுபிடிக்கவில்லை! தமாஷான போலீஸ்!!

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சி போலீஸ் பீமநகரில் ‘பிசைந்தது’ யாரை?

Viruvirupu
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், திருச்சி போலீஸால் சிறிய அளவில்கூட முன்னேற முடியாத நிலையில், புலனாய்வு தற்போது சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர்தான், இந்த படுகொலை வழக்கில் குற்றவாளியை திருச்சி போலீஸ் லபக் என்று பிடித்து விட்டதாக சில மீடியாக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியது.
மீடியாக்களால் ‘லபக்’ செய்யப்பட்ட கொலையாளி, திருச்சி போலீஸின் கண்களில் தட்டுப்படாமல் ‘களுக்’ என்று சிரித்தபடி வெளியே சுற்றிக் கொண்டு இருப்பதால், வழக்கையே ‘லபக்’ என்று அவர்கள் கைகளில் இருந்து பிடுங்கி, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை புலனாய்வின் ஆரம்பத்தில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களும் 007 ஜேம்ஸ் பாண்ட் பாணியில் திருச்சி முழுக்க பறந்து பறந்து விசாரித்தார்கள். ஊரிலுள்ள ரவுடிகளை எல்லாம் ரவுண்டு கட்டி, பொறி பறக்க தகவல் சேகரித்தார்கள்.

நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தையில், இடியோசை கேட்ட நாகங்கள்!

Viruvirupu
ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ‘எதிர் காற்று’, அமெரிக்க பொருளாதாரத்தின் நிச்சயமின்மை, மற்றும் சீனாவில் பொருளாதாரமும் சறுக்கத் துவங்குவது ஆகியவை, உலக அளவில் முதலீட்டாளர்களை நேற்று திகிலடைய வைத்தன. 
நேற்று (வியாழக்கிழமை) Dow Jones industrial average, 250 புள்ளிகளில் வந்து முடிந்தது. இது ஒரே நாளில் சுமார் 2% வீழ்ச்சி!
அது மட்டுமல்ல, ஐரோப்பிய பங்குச் சந்தையில் பல முக்கிய பங்குகள், தினசரி சராசரியைவிட அதிகம் கீழே இறங்கின.
ஐரோப்பிய பங்குச் சந்தையின் தடுமாற்றத்துக்கு காரணம், ஸ்பெயின் பற்றி நேற்று வெளியான
யூரோ முதலீடுகளில் உள்ளீர்களா? .. அதி ஜாக்கிரதையாக இருங்கள்!
ஒரு அறிவிப்புதான். ஸ்பெயினில் தற்போது ஏற்பட்டுள்ள பேங்க் திவால் நிலைகளை தடுப்பதற்கு, 78.7 பில்லியன் யூரோ பணம் தேவை என்பதே அந்த அறிவிப்பு. அவ்வளவு பணத்தை ஸ்பெயினில் முதலீடு செய்ய யாரும் முன்வரப் போவதில்லை.

மதபோதகர் மகன் கைது பாலியல் தொல்லை, கருணை இல்லத்தில்

சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.

பிரணாப் 6.30 லட்சம் சங்மா 3 லட்சம் ஓட்டுக்கள்

India Pranab Mukherjee Flies High With 6 29 Lakh Votes 6.30 லட்சம் ஓட்டுக்களுடன் வெற்றியின் விளிம்பில் பிரணாப்-சங்மாவிடம் வெறும் 3 லட்சம் ஓட்டுக்களே!

சென்னை: ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவருக்கு ஆதரவாக இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் திரண்டுள்ளன. அதேசமயம், பாஜக, அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 3.10 லட்சம் வாக்குகளே சேர்ந்துள்ளன.

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்? கலக்கும் ரிப்போர்ட்


Bad Vaastu Rupee Symbol Caused Its Fall
உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.

இந்திய பாசுமதியை சீனா வாங்குகிறது இந்தியா-சீனா ஒப்பந்தத்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21- மெக்சிகோவில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ரியோ பிளஸ் 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

காதல்ஜோடிகளை பந்தாடும் தமிழக கலாசார காவலர்கள்

விழுப்புரம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத சவுக்கு தோப்பில் இளைஞர்கள் கும்பலிடம் சிக்கிக் கொண்ட ‘காலேஜ் , ஸ்கூல்’ காதல் ஜோடிகளை போலீசார் மீட்டனர். 
விழுப்புரம் அருகே கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது ஆழங்கால் கிராமம். சாலையோரத்தில் அடர்த்தியான சவுக்கு தோப்புகளும், முட்புதர்களும் இங்கு அதிகம். ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைவாகவே இருக்கும். இதனால் இப்பகுதியில் காதலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். இவ்வாறு தனியாக வரும் காதல் ஜோடிகளிடம் இப்பகுதி இளைஞர்கள் வம்பு செய்வதும் பணம் பறிப்பதும் சில நேரங்களில் நடக்கும். இந்நிலையில், சவுக்கு தோப்புக்கு வெளியே 2 பைக்குகள் இருப்பதை இளைஞர்கள் நேற்று பார்த்துள்ளனர். ‘ஜோடி சிக்கிடிச்சு’ என்று உற்சாகமாகி உள்ளே சென்றனர். மொத்தம் 2 ஜோடிகள்.

தமிழக நகைக்கடை கொள்ளை பின்னணியில் ஜார்க்கண்ட் மாவோயிஸ்டு

வேலூர்: தமிழக நகைக் கடைகளில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டது தெரிய
வந்துள்ளது.
கன்னம் வைத்து...: தர்மபுரி நகை கடையில், மே மாதம், 9ம் தேதி, கொள்ளை முயற்சி நடந்த போது, வட மாநிலங்களை சேர்ந்த, ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் மிதுன் மண்டல் ஷபீகுல், ஆலம், பைரோஸ் ஆகியோர், வேலூர் மெயின் பஜாரில் உள்ள, நகை கடை ஒன்றில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவரில் துளை போட்டு, ஐந்து கிலோ நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது, விசாரணையில் தெரிந்தது. இவர்கள் மூவரையும், வேலூர் வடக்கு போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த வாரம், வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி., மோகன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மூன்று கொள்ளையர்களையும், மேற்கு வங்கத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்தனர்.

மகாராஷ்ட்ரா அரசு தலைமைச் செயலக தீ விபத்து சதிச் செயலா?

Viruvirupu மகாராஷ்ட்ரா அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள பில்டிங் தீப்பிடித்ததில், மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது இந்த பில்டிங்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்தான், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான பைல்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதால், பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
‘மந்த்ராலயா’ என்ற பெயருடைய இந்த பிலிடிங்கில், மாநில முதல்வரின் அலுவலகம், முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்கள், மற்றும் மகாராஷ்ட்ரா அதிகார மையத்தின் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ளன.
அரசு தலைமைச் செயலகம்

வெள்ளப்பெருக்கிலும் வரண்டது காவிரி அதிச்சி மேல் அதிர்ச்சி

மேட்டூர்: வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலக் கட்டத்தில், நடப்பாண்டு, முதன்முறையாக, மேட்டூர் அணை நீர்வரத்து, பூஜ்யம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; 93.470 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. காவிரி மற்றும் துணையாறுகள் நீர்பரப்பு பகுதியில், ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தென்மேற்கு பருவமழை காலத்தில், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.
கடும் வறட்சி: நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை தாமதமானதால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில், கடும் வறட்சி நீடிக்கிறது. காவிரி மட்டுமின்றி, தமிழக எல்லைக்குள் காவிரியில் கலக்கும் பாலாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதியாறு போன்றவையும் வறண்டு விட்டது. கடும் வறட்சி காரணமாக, கடந்த 1ம் தேதி, வினாடிக்கு, 2,118 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஜூன் 13ல், 1,059 கன அடியாகவும்; நேற்று முன்தினம், 688 கன அடியாகவும் சரிந்தது. காவிரியாறு மேலும் வறண்டதால், நேற்று காலை, வினாடிக்கு 458 கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு, 220 கன அடியாக சரிந்தது. மாலை 4 மணிக்கு, 375 கன அடி நீர் வந்தது.

sakthi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
அம்மா ஆட்சி காலம் வந்தாலே இப்படி தான் நடக்குது

கனிமொழி: தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது அ.தி.மு.க.,வின் சாதனை

தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவது தான், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது,'' என, வேலூர் சிறை வாசலில் எம்.பி., கனிமொழி கூறினார்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தை, எம்.பி., கனிமொழி, அவரது தாய் ராசாத்தி ஆகியோர் நேற்று பகல் 12.10 மணிக்கு சந்தித்து பேசினர். 12. 50க்கு சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர்.

வியாழன், 21 ஜூன், 2012

சில்க் ஸ்மிதாவாக நடிக்க மறுத்த நயன்தாரா

Nayan Returns Cheque Rs 2 Cr இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நயன்தாரா மறுத்த ரூ 2 கோடி!

பிரபு தேவாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமலிருந்த நயன்தாரா, கடைசியாக ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்தார்.
அந்த வேடம் அவருக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்தது என்று கூட சொல்லலாம்.
எதிர்ப்பார்த்தபடி பிரபு தேவாவுடன் நயன்தாராவின் திருமணம் நடக்காமல் போனது. இருவரும் இப்போது பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
காதல் முறிந்துவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க வந்துவிட்டார் நயன்தாரா. தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் அவர் கையில் உள்ளன. இப்போதும் அவர்தான் நம்பர் ஒன்.

பா.ஜ.க. சங்மாவுக்கு ஆதரவு! (கூட்டணிக்கு திருவோடு!!)

Viruvirupu,
அப்பாடா.. ஒருவழியாக பா.ஜ.க., ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என முடிவு எடுத்து விட்டது. பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். இங்கு ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். பாரதீய ஜனதா கட்சிதான் சங்மாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறதே தவிர, பா.ஜ.க. கூட்டணி அல்ல.
பா.ஜ.க.-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் கடந்த சில தினங்களாக பேசு பேசு என தமக்கிடையே பேசியும், ஒருமித்த முடிவு ஒன்றை எட்ட முடியவில்லை.
பேசாம விஜயகாந்த் கட்சில சேர்ந்திருக்கலாமோ!

ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு : வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை :மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து சிலரால் தாக்கப்பட்டார். இதில், அவரும் அவரது மனைவி மற்றும் வேலைக்காரரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 11 பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. ராதாகிருஷ்ணன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, நான் தாக்கப்பட்டது தொடர்பாக ஜெயேந்திரர் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில், ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் நடக்கும் சாட்சி விசார
ணையில் ராதா கிருஷ்ணன் சொல்லுவதை அவர், வெளியே பேட்டியளிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்

கொடநாடு..தொடங்கினார் ஜெயலலிதா- ஒரு மாதம் ரெஸ்ட்!

 Jaya Leave Kodanadu Today
கோவை: முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு சென்றார். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர் ஓய்வெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அதிமுகவினர் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவர் அங்கு இருக்கும் வரை அங்கிருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனிப்பார் என்று தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இன்று தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு சென்றார் ஜெயலலிதா.
முதல்வர் கொடநாடு எஸ்டேட்டில் முகாமிட்டிருப்பதால் அங்கு தற்காலிக தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதல்வர் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், பணியாளர்களும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

Mumbai பயங்கர தீவிபத்து: முக்கிய பைல்களை அழிக்க சதி?

மும்பை: மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 25 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான பைல்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதால் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தின் 4வது மாடியில் இன்று மதியம் 2.45 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கடல் அருகில் அமைந்துள்ளதால் கடல் காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி, 5வது மற்றும் 6வது மாடியிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட போது, மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் அப்போது மந்த்ராலயாவில் உள்ளே இருந்தார். தீவிபத்து ஏற்பட்ட செய்தியறிந்தவுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

ராமதாஸ்: பிரணாப் தான் ஜெயிப்பார், அதனால் ஆதரிக்கிறோம்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்பதால் தான் அவரை ஆதரிக்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார். அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கூறியது. ஆனால் அவர் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

மோடியால் தான் 2004 தேர்தலில் பாஜக தோற்றது: நிதிஷ்குமார்

பாட்னா: குஜராத் கலவரத்தையடுத்து நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்காததால் தான் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியடைந்தது. இப்போது நரேந்திர மோடியையே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவித்தால், பிகாரில் எங்கள் ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார்-சரத் யாதவ் கூட்டுத் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனதா தளம்.
பிகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே பிரச்சாரத்துக்கு நரேந்திர மோடி வரக் கூடாது என்று தடை போட்டார் நிதிஷ். அதை பாஜகவும் வேறு வழியின்றி ஏற்றது.

மர்ம சந்நியாசி – 5 நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார்



இறுதியாக, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார். மேஜோகுமாருக்கும் சந்நியாசிக்குமான ஒற்றுமை/வேற்றுமை பட்டியல் அது.
இந்த வழக்கு நடந்த சமயத்தில் கை ரேகைவியல் நிபுணத்துவம் அடைந்திருந்த போதிலும், வழக்கில் பயன்படுத்தப்படவில்லை.

பிரணாப் 52%, சங்மா 33% எப்படி ஜெயிப்பார் சங்மா??

India How Can Sangma Win With Just 33 Votes
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதுள்ள லேட்டஸ் நிலவரப்படி பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன. அதேசமயம், பி.ஏ.சங்மாவுக்கு 33 சதவீத அளவிலான வாக்குகளே சேகரமாகியுள்ளன. 
இதனால் சங்மா எப்படி வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே ஏதோ ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், அதிமுக, பிஜூ ஜனதாதளம், பாஜக, சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர்.

அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேறு வழியின்றி சங்மாவை ஆதரிக்கும் பாஜக!

 Nda May Back Sangma President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்ய இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டையில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கூறிவருகிறது. இரு கட்சிகளையும் பாஜக் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சமாதானப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவையும் பாஜக கோரி வருகிறது.

தலிபான்கள் தடை போலியோ சொட்டு மருந்து பிரச்சாரத்துக்கு

இஸ்லாமாபாத், ஜூன் 19- பாகிஸ்தானின் வஜிரிஸ் தான் பகுதியில்,போலியோ சொட்டு மருந்து திட்டத் துக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வாஜிரிஸ்தான் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதியை அரசு பெயர ளவில் தான் ஆட்சி செய் கிறது. மற்றபடி இங்கு பழங்குடிகள் போர்வை யில் தலிபான்களின் ஆதிக் கம் அதிகம் உள்ளது.
அல்-குவைதா தலை வர் ஒசாமா பின்லாடன், அபோதாபாத்தில் கடந்த ஆண்டு அமெரிக்க அதி ரடி படையினரால் கொல் லப்பட்டார்.
போலியோ சொட்டு மருந்து கொடுப் பது போன்ற போர்வை யில் பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிடி, ஒரு குழுவை அமைத்து ஒசாமாவை நோட்டமிட்டு அமெ ரிக்க உளவு படையின ருக்கு அவர் பதுங்கியி ருந்த இடத்தை காட்டிக் கொடுத்தார். இதற்காக அப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

Laughter கிளப்'பை மூட உத்தரவிட்ட மும்பை கோர்ட்

 Not So Funny Laughing Club Mumbai Banned By Court காலாங்காத்தால 'ஓவர்' சிரிப்பு... 'லாப்டர் யோகா கிளப்'பை மூட உத்தரவிட்ட மும்பை கோர்ட்!!


மும்பை: காலை நேரத்தில் லாப்டர் யோகா கிளப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக கூடி சத்தம் போட்டு சிரித்ததால், அதைத் தொந்தரவாக கருதிய முதியவர் ஒருவர் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் அந்த நகைச்சுவை கிளப்பை சேர்ந்தவர்கள் சிரிக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டு விட்டது.
லாப்டர் தெரப்பி என்பது மேற்கத்திய நாடுகளில் எப்போதோ பிரபலமான ஒன்று. நமது நாட்டிலும் இப்போது அது பிரபலமாகி விட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் நகைச்சுவையாளர் கிளப்கள் அதிகரித்து விட்டன. இந்த கிளப்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் ஏதாவது ஒரு பொது இடத்தில் கூடி விழுந்து விழுந்து சிரிப்பார்கள். கண்களில் நீர் வடிய இவர்கள் சிரிப்பது வழக்கம்.

உலகின் தொடரும் மர்மங்கள் -1 பிரி ரெயிஸ் வரை படம்


 - (Piri Reis Map)
1929 ஆம் ஆண்டில் சில வரலாற்று ஆய்வாளர்கள் துருக்கி அரச மாளிகையில் மான் தோலில் வரையப்பட்ட ஒரு வரை படத்தைக் கண்டெடுத்தனர்.அந்த வரை படத்தை ஆய்வு செய்ததில் அது ஒரு உண்மையான ஆவணம் என்பதும் துருக்கிய ஆட்டமோன் மன்னரது கடல் படையில் உயரதிகாரியாக (அட்மிரலாக) இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் 1513 ஆம் வருடம் வரையப்பட்ட வரை படத்தின் பகுதி என்பதும் தெரிந்தது.

ஜூலை முதல் வாரத்தில் பில்லா2 ரிலீஸ்!

சினிமா ரசிகர்கள் இப்போது விவாதித்து வரும் சூடான தலைப்பே அஜித் நடிக்கும் பில்லா2 படத்தின் ரிலீஸ் தேதியைப் ற்றித் தான். தல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக பில்லா2 படம் ரிலீஸ் தள்ளிவைத்தபடியே இருக்கிறது. 
 அஜீத் நடித்த 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளனர்'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே (அடட்ல்ட்ஸ்) பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம் என விதிமுறைகள் உள்ளன. அஜித்குமார் இப்படத்தில் தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரிடோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை.

Pakistan புதிய பிரதமர் ஆகிறார் சகாபுதீன் கிலானி பதவி பறிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானியின் பதவி, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்தூம் சகாபுதீனை புதிய பிரதமராக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. 
இதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பிரதமர் கிலானிக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதிபருக்கு விசாரணையில் இருந்து விலக்கு இருப்பதாக கூறிய கிலானி, கோர்ட் உத்தரவை செயல்படுத்தவில்லை. கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் கிலானி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. கிலானி, கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி முல்க் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச், கடந்த ஏப்ரல் 26,ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கிலானியை குற்றவாளி என கூறிய நீதிபதிகள், அவருக்கு அடையாள தண்டனையாக கோர்ட் கலையும் வரை சிறை தண்டனை விதித்தனர். அரசியல் சட்டப்பிரிவுகள் 63 (1), 113 ஆகியவற்றின் கீழ் கோர்ட் தண்டனை பெற்றவர், எம்.பி.யாக 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியாது.

பாதிரியும் அய்யரும் ரேட்டை கூட்டி விட்டார்கள் அல்லலோய கோவிந்தா


‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால்  குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன்.

தொடரப் போகுது "குண்டாஸ்'வீரபாண்டியோடு விடப்போவதில்லை

சேலம்: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, சேலத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. "பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 20 ஜூன், 2012

நடிகர் சிரஞ்சீவிக்கு கைது வாரண்ட் தேடப்படும் குற்றவாளி



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிட்டார். 
இவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பாகலூரில் பிரச்சாரம் செய்தார்.   அப்போது அரசாங்க அதிகாரி களை மீறி கூட்டம் கூட்டியதாகவோ,  வாகனங்கள் அதிகம் வைத்திருந்ததாகவோ சிரஞ் சீவி, கோபிநாத் உட்பட 6 பேர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 4 பேர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜரானார்கள்.  எம்.எல்.ஏ. கோபிநாத்தும், சிரஞ்சீவியும் சம்மனையும் வாங்கவில்லை.  கோர்ட்டிலும் ஆஜராகவில்லை.   இதனால் நீதிபதி கெஜராஜ், கோர்ட்டை மதிக்காமல் சம்மனை வாங்காத குற்றத்திற்காக கோபிநாத்தும், சிரஞ் சீவியும்   தேடப்படும் குற்றவாளிகள் என்று கைது வாரண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 16

”குடும்பக் கட்டுப்பாடு ஹிந்துக்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. முசுலீம்கள் நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் சிறுபான்மையினராகி இந்தியா ஒரு இசுலாமிய நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. எனவே குடும்பக் கட்டுப்பாட்டில் ஹிந்துக்களை மட்டுமின்றி மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
- இந்து முன்னணி மேடைப் பேச்சு.
குடும்பக்கட்டுப்பாடு என்பது சட்டப்படி யாருக்கும் கட்டாயமான ஒன்றல்ல. இந்துக்கள் மட்டும் கட்டாயக் கருத்தடை செய்யுமாறு எந்தச் சட்டமும் கூறவில்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டோ, செய்யாமலேயோ அளவாய்ப் பெற்றுக் கொள்வோரும் உண்டு.
முசுலீம் ஆண் ஒவ்வொருவரும் தலா நான்கு மனைவிகள் மணம் செய்ய வேண்டுமெனில் முசுலீம் ஆண், பெண் விதிகம் 1:4 என இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருபால் விகிதம் சமமாகவே உள்ளது. மேலும் 1975-ல் மைய அரசினால் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பலதார மண விகிதம் முசுலீம்களை விட இந்துக்களிடம்தான் அதிகம் உள்ளது.

சந்தர்பவாதம்.. விஜயகாந்த் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ம் உண்மைக்காரணம்

 யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு! விஜயகாந்த் அறிவிப்பு!
 அதிமுகாவா? காங்கிரசா ?திமுகவா? பிஜேபியா? என்று இன்னும் பேரம் பேச வசதியாக தேர்தலை  புறக்கணிக்க முடிவுசெய்துள்ள நடிகன் விஜயகாந்த்
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தீராத பிரச்சனைகள் பல்லாண்டுகளாக இருந்தும், அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் குடியரசுத் தலைவராக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்துகொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு செய்கின்ற நன்மை. தேமுதிக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானித்திருப்பதாக விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதிமுகாவா காங்கிரசா திமுகவா பிஜேபியா என்று இன்னும் பேரம் பேச வசதியாக தேர்தல் புறக்கணிக்க முடிவுசெய்துள்ள நடிகன் விஜயகாந்த் 

பங்குச் சந்தை உள்பேர வர்த்தகம் (Inside Trading) என்றால் என்ன?

பங்குச் சந்தையில் உள்பேர வர்த்தக மோசடி" (Inside Trading) என்ற வார்த்தை அண்மைக்காலமாக அடிக்கடி உங்கள் பார்வைக்குப் படுகிறது அல்லவா? அதென்ன "உள்பேர வர்த்தகம்" என்ற கேள்வி இயல்பாக எழத்தான் செய்யும்!
ஒரே வரியில் சொல்வது என்றால், பங்குச் சந்தையில் வெளியிடப்படாத விலை மதிப்புகளை முன்கூட்டியே ரகசியமாக தெரிந்து கொண்டு அந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பது மற்றும் பங்குச் சந்தை தொடர்பான அதிமுக்கிய தகவல்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் ஆதாயம் அடைவது என்று சொல்லலாம்..
இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லலாம்..

நித்தியின் பிளானை பிசைந்து.. பரோட்டா போடுகிறார்கள்!


Viruvirupu


நித்தி சுவாமிகள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துவிட்டால், ‘யாவரும் நலம்’ என்பது அவரது சிஷ்யகோடிகளின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில் மண் விழுந்திருக்கிறது. 
தமிழகத்திலும், பொதுமக்கள், பிளஸ் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பை நித்தி எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கர்நாடகாவில் ஜெயில்வாசத்தை முடித்துக் கொண்டு, வேண்டாம் அந்த மாநிலம் என்று உதறிவிட்டு மதுரை வந்தவரை, நம்ம ஆதீனம்தான் கட்டித் தழுவி வரவேற்றாரே தவிர, வேறு யாரும் தழுவுவதாக தெரியவில்லை, ஆளை கழுவுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ராமதாஸ்: ஆட்சியாளர்களின் பழிவாங்கும் உணர்வு

 Ramdoss Condemns Arrest Veerapandi Arumugam Undergundas வீரபாண்டி ஆறுமுகம் மீது 'குண்டாஸ்': ஜெ.வின் பழிவாங்கும் குணத்தையே காட்டுகிறது- ராமதாஸ்


சென்னை: அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீதும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் நிலப்பறிப்பு புகார் அளித்தவர்களை மிரட்டி புகார்களை திரும்பபெற செய்யும் காவல்துறையினர், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நான் செய்த 4 'தவறுகள்': ராசா

 I Did Four Mistakes Says Raja
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
2-ஜி வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு முதன்முறையாக வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள திமுக பிரமுகர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று ராசா சந்தித்தார்.
செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே பேசிய அவர், இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி. வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிகம் பேசக் கூடாது. 3 முறை என்னை மக்களவை உறுப்பினராக்கிய பூமி இது. இந்த மாவட்ட மக்கள் காட்டும் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
இவ்வளவு வழக்குகள் தொடர்ந்தும், ஒரு தவறும் செய்யவில்லை என ராசா பேசுகிறாரே எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.
உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெற முடியும். நாற்காலிக்காக ஒரு மரத்தை இழக்கிறோம். ஒரு பவுன் நகை தயாரிக்கும்போது, ஒரு கிராம் சேதாரம் ஏற்படும்.
இந்தியாவில் தற்போது சாதாரண மனிதன் கையிலும் செல்போன் இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந்துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள்.
முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை இவ்வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது. 2-வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த செல்போன் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது.
3-வது தவறு நான் பதவியேற்றபோது 100 கோடி இந்திய மக்கள் தொகையில், 30 கோடி பேரே செல்போனை பயன்படுத்தினர். சிலரின் ஆதிக்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் செல்போனை பயன்படுத்தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது.

பாடகி சுட்டு கொலை தலிபான்கள் வெறியாட்டம்

இசை, நடனம் ஆகியவை மதத்துக்கு எதிரானது என்று கூறி வரும் தலிபான்கள், கைபர் , பக்துங்வா மாநிலத்தில் பாடகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். சமீப காலங்களில் அங்கு பாடகர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. 

FEFSI ஃபெப்சி தலைவரானார் அமீர்! விசு தோல்வி


 மிழ் சினிமாவின் பலமிக்க தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியியின் தலைவராக இயக்குநர் அமீர் தேர்தெடுக்கப்படுள்ளார்.
ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச, ஊதியக் குழுத் தலைவராக சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அமீர் நியமிக்கப்பட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதுதான் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. 
தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அமீர் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தொழிலாளர்களை தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதாகக் கூறி அமீர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. 

பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்?????

‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ

பெரியாரை பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும் காரணம் உண்டு. ஆனால், அவரால் பயனடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களே ஏன்?
-mathimaran
பெரியார் எதிர்ப்பு என்பது பார்ப்பன ஆதரவின் தொடர்ச்சி.
தமிழ் நாட்டை பொறுத்தவரை, பார்ப்பனர்கள் மூலம் கிடைக்கிற லாபத்திற்கு, அங்கிகாரத்திற்கு, ‘தோழமை’ க்கு பார்ப்பனியத்தை, பார்ப்பன மேன்மையை ஒருவர் ஒத்துக்கொண்டால் மட்டும் போதாது; அவர் கண்டிப்பாக பெரியார் எதிர்ப்பாளர் அல்லது திராவிட எதிர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று உளவு துறை பாணியில், படு பச்சையாக பார்ப்பன ஆதரவுகூட இல்லாமல் இருக்கலாம்; ஆனால் கண்டிப்பாக பெரியார், திராவிட எதிர்ப்பு என்பது மிக முக்கியம்.
இது அந்த காலத்து ப. ஜீவானந்தம் தொடக்கம், அதுவே இன்றைய சில அறிவாளிகளின் வழக்கம்; அதற்கு மகாகவி பாரதியே இவர்களுக்கு பார்ப்பன நட்பின் பாலம்.
பெரியார் எதிர்ப்பும் பாரதி ஆதரவும் பார்ப்பன உறவின் முற்போக்கு வடிவம்.
இன்று கூட பார்ப்பன பத்திரிகைகளில் வேலை செய்கிற பெரியார் ஆர்வலர்களில் பலர் பாரதி, காந்தி, தமிழ் உணர்வு, ஈழம், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் திராவிட எதிர்ப்பு என்றுதான் புழங்குகிறார்கள்.
முற்போக்காளர்கள், பார்ப்பன பத்திரிகைகளில் எழுதுகிற எழுத்தாளர்கள் பெரியார் எதிர்ப்பு, அம்பேத்கர் புறக்கணிப்பு அல்லது பெரியார், அம்பேத்கர் புறக்கணிப்பு என்கிற இந்த ‘டெக்னிக்’ கைதான் கையாளுகிறார்கள்.
இவர்களும் காந்தி, பாரதி ஆதரவு நிலையிலிந்து அங்கெங்கே தமிழ் உணர்வு, ஈழம் என்று தூவி, பார்ப்பன சார்பு கொண்ட தீவிர திராவிட எதிர்ப்பைதான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தோழர் திராவிடன், நீங்கள் என்னிடம் கேட்ட இதே கேள்வியை பெரியாரிடமும் கேட்டார்கள் அதற்கு அவர் தந்த பதில்,
“பார்ப்பனரல்லாதவர்கள் என் மேல் கொண்ட கோபத்தினால்தான் என்னை விமர்சிக்கிறார்கள் என்பதல்ல, என்னை திட்டுவதின் மூலம் பார்ப்பானிடம் பொறுக்கி திங்கலாம் என்பதினால்தான்..” என்றார் பெரியார்.
பெரியார் எதிர்ப்பாளர்கள் யார்?
பார்ப்பன ஆதிக்கம் குறித்து அவர்களின் கருத்து என்ன?
இப்போது அரசியல் ரீதியாக யாரோடு சேர்ந்து புழங்குகிறார்கள்.. என்பதை எல்லாம் ஒப்பிட்டு பாருங்கள்;
பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளர் மட்டுமல்ல, தீர்க்கதரிசியாகவும் தெரிவார்.
**
‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. பேஷ்.. தலைப்பு ரொம்ப நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ.. அப்படியே வாசல்லேயே… நில்லுங்கோ..தோ.. சாதத்தோடு வந்துடுறேன்..
தட்டு வைச்சிருக்கேளா..கையிலியே ஏந்திக்கிறேளா..