சனி, 2 ஏப்ரல், 2011

. ஜெயலலிதாவுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது.

திருச்சி என்.சிவா, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் : ஜனநாயக நாட்டில் நேர்மையாக, சுதந்திரமாக தேர்தல் நடக்க வேண்டும் என்பது அடிப்படை கோட்பாடு. நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டுமானால், தேர்தல் கமிஷன் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். தேர்தலின் போது சுதந்திரமாக செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், ஒரு சிலருக்கு மட்டும் கெடுபிடிகள் தளர்த்தப்படுவது போல தோற்றமளிப்பதை மறுக்க முடியாது. தேர்தல் கமிஷன் நடத்திய வாகன சோதனை மூலம் சாதாரண வியாபாரிகள், பொதுமக்கள், அவசிய தேவைக்காக எடுத்துச் செல்கிற பணம் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சொந்தப் பணி நிமித்தமாக, பொருளோ, பணத்தையோ கொண்டு செல்கிறபோது, அவர்களிடம் கெடுபிடிகள் செய்வதை தேர்தல் கமிஷன் தவிர்த்து இருக்க வேண்டும். அரசியல் கட்சி கொண்டு செல்லும் பணத்தை தடுக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபனை இல்லை.

தேர்தல் கமிஷன் கெடுபிடியால், அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டு, கட்சித் தலைவர்களின் சிலைகள் கூட துணிகளால் மூடப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதியின் அறிக்கையை, ஐகோர்ட் தானாகவே பிரச்னையாக எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. நீதித்துறை தலையீட்டின் காரணமாகத் தான், மீண்டும் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன.

பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் தவிர, வீடுகளின் முன் உள்ள கொடிக் கம்பங்களும், இரவோடு, இரவாக ரம்பத்தால் அறுத்து எடுத்துச் செல்கின்றனர். தேர்தல் ஆடம்பரம், படோபகாரம், கண்ணை உறுத்தும் விளம்பரத்துக்கு நடவடிக்கை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். கட்சிக் கொடியையே பறிக்கும் அளவு கெடுபிடி என்றால், ஜனநாயகம் கேலியாகிவிடும். கொடிகள் இல்லாமல், சின்னங்களை வெளிப்படுத்தாமல் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? மொத்தத்தில் தேர்தல் கமிஷன், நமது அடிப்படை உரிமைகளை பறிப்பதைப் போலவே நிலைமை உள்ளது.

தேர்தலை நேர்மையாக நடத்த முனைப்பு காட்டும் தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் டி.ஜி.பி., அதுவும் பெண் டி.ஜி.பி.,யையே மாற்றுகின்றனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் தான் கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது. ஜெயலலிதாவின் பிரசாரத்துக்கு லாரிகள், வேன்கள் மூலம் ஆட்கள் ஏற்றிச் செல்வதைக் கூட தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.

தேர்தலைச் சந்திக்க வேண்டிய பரபரப்பில் இருக்கிற காரணத்தால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை குறித்து பேச முடியவில்லை. வருகிற காலங்களில், தேர்தல் கமிஷன் நடைமுறை குறித்து, பார்லிமென்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குரிய பரிகாரம் காணப்படும்.

ந.பாலகங்கா, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணைச் செயலர் : தமிழகத்தில் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிற கட்டுப்பாடுகள் ஆரோக்கியமான தேர்தலை நடத்த வழிகோலும். விதிமுறைகளை மீறி தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. அது குறித்து புகார் அளித்தால், அளிக்கப்பட்ட புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரிவதில்லை.

மாநிலம் முழுவதும் பல இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தி.மு.க., பணம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கொடுத்துள்ளோம். அவர்கள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேர்தல் கமிஷனைப் பாராட்டுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது கடும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் கருணாநிதி வழக்கமாகக் கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் கொடி கட்டக் கூட விடவில்லை.

ராவ் என்னும் தேர்தல் அதிகாரி, ஆளுங்கட்சியான எங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். தொகுதியில் அமைச்சர்கள் தங்குவதற்கு கூட அனுமதிக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, தேர்தல் கமிஷனைப் பாராட்டினார். இன்று இவர் முதல்வராக இருக்கும் போது, தேர்தல் கமிஷன் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தால், அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்.

தேர்தல் கமிஷன் நடத்தும் வாகன சோதனை பாராட்டக் கூடியது. ஆளுங்கட்சியினர் பணத்தை சுதந்திரமாக எடுத்துச் சென்று வாக்காளர்களுக்கு அளிக்கும் செயலை வாகனச் சோதனை தடுக்கிறது. வாகனச் சோதனையில் இதுவரை 23 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை ஒருவர் கூட கேட்டு முறையிடவில்லை.

காவல் துறை வாகனங்களிலேயே தி.மு.க.,வினர் பணத்தை அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, "108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக, தி.மு.க.,வினர் பணத்தை அனுப்பி வருகின்றனர். கடந்த 17ம் தேதி தி.மு.க., தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஒன்பது "108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெளியேறின. அவை அங்கு வந்த காரணம் என்ன? இது குறித்து நானும், மைத்ரேயனும் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் உள்ள, ஒரு மருத்துவமனையில் வைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது. அதை, கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் விதிமுறை மீறல்களைச் செய்வதற்காகவே, மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகளை தங்களுக்கு வசதியாக ஏற்கனவே தி.மு.க.,வினர் நியமித்துவிட்டனர். தற்போது பணப்பட்டுவாடாவிற்கு அவர்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் கமிஷனின் செயல்பாடு இருக்க வேண்டும்.

National Post கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: “ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்” (பகுதி 1)

                                                 -   ஸ்ரூவாட் பெல்

பாங்கொக் - வெம்பஸ் ரெஸ்ட்ரான்ட்  பச்சை வண்ண சுவர்க் கடதாசிகளால் அலங்கரிக்கப் பட்ட ஒரு சிறிய அறை கூரையில் பெரிய மின்விசிறி சுழன்று கொண்டிருக்க கீழே மேசைகள் வாசனை வீசும் தென்னிந்திய உணவுத் தட்டுகளால் நிறைந்திருக்கின்றன. அதன் உரிமையாளர் வித்தியாசங்கர்.  ஸ்ரீலங்காத் தலைநகர் கொழும்பைச் சேர்ந்தவர். தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 முதல்  3000 வரையில் பாங்கொக்கில் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்” என அவர் தெரிவிக்கிறார்.
உணவு விடுதியின் உரிமையாளர் வித்யாசங்கர், பெப்ரவரி 25,2011 வெள்ளியன்று பாங்கொக்கில் அவருடன் நடத்திய நேர்காணலின் போது பேசுகிறார்.
2009ல் அவர்களில் ஒருவரை சங்கர் தனது உணவு விடுதியின் மேற்தளத்தில் நடத்தும் நடுத்தர தங்கும் விடுதியில் வைத்துச் சந்தித்தார். அவரது பெயர் சிறீதரன். 19 அல்லது 20 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபரான அவர் தான் தமிழ் புலிப்போராளிகளில் ஒருவராக இருந்ததாக உறுதி செய்தார்.
அவரிடம் தங்கும் அறைக்கும் உணவுக்கும் செலுத்துவதற்கான பணம் எதுவும் இருக்கவில்லை எனவே சங்கர் அவரைத்  தனது உணவு விடுதியில் சமையல் வேலையிலும் அவரது மற்றொரு வியாபாரமான ஸ்ரீலங்காவுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் இடத்தில் காலணிகளை பொதிசெய்யும் பணியிலும் அமர்த்தினார்.” அவர் மிகவும் கடுமையாக வேலை செய்தார். அவரிடம் பணம் எதுவும் இல்லை. மிகவும் ஏழை” திரு.சங்கர் கூறினார்.
சிறீதரன் மாதக் கணக்கில் பாங்கொக்கில் தங்கியிருந்தார்.ஆனால் கடந்த வருடத்தில் ஒரு நாள் அவர் எங்கோ போய்விட்டார். கடந்த மாதம் சிறீதரன் அவரை தொலைபேசியில் அழைக்கும் வரை சங்கர் அவரைப்பற்றிய எந்தத் தகவலையும் அறியவில்லை.
சிறீதரன் தான் கனடாவில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா கரையை வந்தடைந்த மனிதக் கடத்தல் கப்பலான எம்வி.சண் சீ கப்பலில் சிறீதரனும் ஏறியிருந்திருக்கிறார். அவரின் கடத்தல் திட்டம் பற்றித் தான் எதுவுமே அறிந்திருக்கவில்லை என சங்கர் கூறினார்.
ஆனால் சிலோம் பகுதி அயல்வாசிகள் தெரிவித்தது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்வதற்கு ஒரு கப்பல் தயார் நிலையில் இருப்பது பரவலாக எல்லோராலும் அறியப் பட்டிருந்தது என்று.
சிலோமில் ஸ்ரீலங்காவாசிகளுக்கு குறைவான வாடகையும் பழக்கமான உணவு வசதியுடனும் தங்கக்கூடிய ஒரு கோவில் உள்ளது. ”சில வேளைகளில் கோவிலில் இருந்தும் அவர்களுக்கு உணவு கிடைக்கும், அவர்கள் தங்கள் அறையைக்கூட மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளலாம்” சங்கரின் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த ஒலிவர் என்கிற ஸ்ரீலங்காவாசி இவ்வாறு தெரிவித்தார். பெரும்பாலானவாகள் கனடாவுக்குப் போக விரும்புகிறார்கள். ஆனால் காவல்துறையினரின் தேடுதல் வேட்டைகள் தொடங்கியிருப்பதானால் அது இப்போது மிகவும் கடினமானதாகி விட்டது. மேலும் தமிழர்களுக்கு பாங்கொக்கை இடைமாற்றுத் தளமாகக் கொண்டு மேற்கிற்கு பயணம் செய்ய முடியும் என்பதில் இனிமேலும் நம்பிக்கையில்லை என்று அவர் தொடர்ந்து கூறினார்.
சண் சீ கப்பலில் பயணம் செய்த சிலர் தமிழ் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று எதிர் விளைவுகளுக்கு அஞ்சித் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை ஏற்கனவே அப்படியான இருவரை நாடு கடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இருவருமே புலிகளின் கடற் போராளிகளின் பகுதியில் அங்கத்தவர்கள் என இனங்காணப் பட்டுள்ளார்கள். அரசாங்கம் முன்னாள் போராளி எனக் குற்றம் சாட்டிய மற்றொருவர் புலிகளின் அங்கத்தவர் அல்ல எனக் கண்டறியப் பட்டுள்ளது.
பாங்கொக்கில் கப்பல்களுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா வாசிகளை கைது செய்த சம்பவங்கள் சிலரை நகரின் வெளிப் பகுதிகளுக்குத் துரத்தியுள்ளது என்று  நீண்டகாலமாக சிலோமில் வசிக்கும் ஒருவர் கூறினார்.. அவர் மேலும் தெரிவித்தது அவர்கள் எல்லோரும் எங்கேயாவது போவதற்காகக் காத்திருக்கிறார்கள். ”கனடாவுக்கு மட்டுமல்ல” “எந்த நாட்டுக்காவது” என்று அவர் கூறினார்.
அருகில் உள்ள ‘சவேரா இன்’னில் பணியாற்றும் ஒரு ஊழியர் புகைப்படத்திலிருந்த ஒரு மனிதரை சண் சீ கப்பலின் கடத்தல் நடவடிக்கைக்கு உதவி புரிந்தவர் என அடையாளம் கண்டறிந்தார், - அந்த நபர் இப்போது கனடாவில் இருக்கிறார்.  கடத்தல்காரர்கள் தங்கள் மனிதச் சரக்குகளில் சிலரை, அவர்களை கப்பலில் ஏற்றுவதற்காக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படும்வரை இந்த விடுதியில்தான் தங்க வைத்திருந்தார்கள், என்று உள்ளுர் வாசிகள் கூறினார்கள்.
அந்த விடுதி இந்திய சுற்றாடலிலுள்ள சிறிய சந்துப் பகுதியில் அமைந்துள்ளது. தாய்லாந்து அரசரதும் அரசியினதும் படங்கள் முகப்பு பீடத்தின் பின்னே தொங்கவிடப் பட்டிருந்தது. அங்கு வாடகைக்குத் தங்கியிருந்த ஒருவர் 20 – 30 பேர்களடங்கிய சுற்றுலாக் குழுக்கள் சில நாட்கள் தங்கியிருக்கும் எனத் தெரிவித்தார். ஆனால் சந்தேகப் படத்தக்க எதனையும் அவரால் நினைவுகூர முடியவில்லை. அதன் உரிமையாளர் அஜ்மல்கான் தெரிவித்தது, தான் சாதாரணமாக அறைகளை வாடகைக்கு விடுவதாகவும், மனிதக் கடத்தல் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று.”அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை” எனத் தெரிவித்த அவர் தான் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இனிமேலும் அறைகளை வாடகைக்கு விடுவதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: பல தலைகளையுடைய பாம்பு
அதிக இலாபம் தரும் தொழிலான துருப்பிடித்த பழைய கப்பலில் கனடாவுக்கு பயணச்சீட்டை விற்பனை செய்வதைக் கண்டு பிடிக்கும் வரையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தோல் சட்டைகளை பரீசுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது வாழ்க்கை வருமானத்தைத் தேடிக் கொண்டிருந்தார் சத்தியசீலன் பாலசிங்கம். 41 வயதான மனிதக் கடத்தல் வலையமைப்பின் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் இவர் பிரபா எனும் பட்டப் பெயரினால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த வலையமைப்பு கனடாவுக்கு கப்பலில் செல்ல விரும்பும் ஸ்ரீலங்காவாசிகளினால் விருப்பத்துடன் செலுத்தத் தயாராகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான டொலர்களைச் சேகரித்து வருகிறது.
பறவைகள் நல்லதிருஷ்டத்துக்காக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைத்து அதன் கூட்டிலிருந்து விடுதலையாக்கப் படுகின்றன. பாங்கொக் சுற்றாடலிலுள்ள சிலோம் வீதியிலுள்ள இந்தக் கோவில் ‘வாற் காயெக் சிலோம் இந்து ஆலயம்’எனவும் அழைக்கப் படுகிறது.
இங்குதான் மற்றைய நாடுகளுக்கான மாறி ஏறும் இடைத்தங்கல் பயணங்களைத் தொடரும்வரை அநேக ஸ்ரீலங்கா வாசிகள் தங்குகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட்டில் பிரிட்டிஸ் கொலம்பியா கரையை வந்தடைந்த எம்வி சண் சீ கப்பல் மூலமாக பிரபாவிற்கு கிடைத்துள்ள பங்கிலாபம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தாய் காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளார்கள்.பாங்கொக்கில் பல வருடங்களாக வாழ்ந்த இவர் கடந்த வருடம் தாய்லாந்தை விட்டு ஓடி விட்டார். – ஆனால் கனடிய காவல்துறையினர் அவர் இன்னமும் கடத்தல் தொழிலில்தான் இருக்கிறார் என நம்புகிறார்கள்.
சமீபத்தில் ஜனவரி 20 ல் மனிதக் கடத்தலுக்கு எதிரான கனடிய பொலிஸ் பிரிவின் தலைவரான பரிசோதகர் ஜோர்ஜ் பெம்பேர்ட்டன் தாய் காவல் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பிரபாவின் சமீபத்தைய முயற்சியாக மேற்கொண்டு வரும் புகலிடம் தேடுவோரைக் கொண்ட மற்றொரு குடிவரவுக் கப்பலைக் கனடாவுக்குள் கொண்டுவருவதைப் பற்றி ஆராய்வதற்கு உதவும்படி கேட்டுள்ளார்.
கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: “ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்”
கடற்குதிரைத் திட்டம் என அழைக்கப் படும் கனடிய காவல்துறையினரின் ஒரு புலன் விசாரணையில் வெளியாகியிருப்பது, பிரபாவினால் மேற்கொள்ளப் படுவதாகச் சந்தேகிக்கப்படும் முயற்சிக்கு, மலேசியாவிலும்,பாங்கொக்கிலும் தளம் அமைத்து செயற்படும் அவரது இரு கூட்டாளிகளும் அவருடன் சேர்ந்து, பசுபிக் சமுத்திரமூடாக ஒரு மனிதக் கடத்தலை நடத்துவதற்காக பிரயாணிகளைத் திரட்டி வருகிறார்கள என்பதாகும்.
பிரபாவின் கீழ் அவரது கூட்டாளிகளாகப் பணியாற்றும் மற்ற ஒன்பது பேர்களில் ராகுலன் கஜன் எனப் பெயருடையவர்களும் பிரயாணிகளைச் சேர்த்து, அவர்களிடம் பணம் பெற்று அவர்களைப் பராமரித்து வருவதுடன் பயணத்துக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்து வருவதாக அந்தக் கடிதம் மேலும் தெரிவிக்கிறது.
தாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
“நீங்கள் என்னை நேர்காணல் நடத்தும்வேளையில் கடத்தல் வளைய வலையமைப்பு ஒன்றிருப்பதையும், அது கனடாவுக்கு ஆட்களைக் கடத்தத் தயாராகி வருவதையும் நான் அறிவேன்” இவ்வாறு சொன்னார் தாய்லாந்தின் மத்திய புலனாய்வு நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் பொங்பட் சாயாபான்.
எம்வி சண் சீயும் அதன் வரவிற்கு 10 மாதங்களுக்கு முன்பு வந்த மற்றொரு குடிவரவுக் கப்பலான ஓசன் லேடியும் சமிக்ஞை காட்டியிருப்பது, தென்கிழக்காசியாவின் மனிதக்கடத்தல் குழுக்களின் இலக்காக கனடா மாறியிருப்பதை.
குற்றவாளிக் குழுக்களிடம் தங்களைக் கனடாவின் கரையில், அதிக எண்ணிக்கையில் அதுவும் இதுபோன்ற ஆபத்தான பயண முறைகள் மூலம் கொண்டுசென்று இறக்கி விடுவதற்காக பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து, வரப்போகும் எதிர்கால அகதிகளை என்ன செய்வது என்பதைப்பற்றி ஒட்டவாவில் ஒரு அரசியல் விவாதமே உருவாகியிருக்கிறது.
நிராகரிக்கப்பட்ட 59 மீட்டர் சரக்குக் கப்பலுக்கு தாய் கொடியின் நிறங்களால் வண்ணம் தீட்டிய சண் சீ எனும் பெயருடன்  நியாயமான அகதிகள் போலக் காட்சியளிக்கும் பிரயாணிகளையும், கப்பல் பணியாளர்களையும் மற்றும் தமிழ் புலிப் போராளிகளையும் ஏற்றிக் கொண்டு இங்கு வந்ததில் ஒட்டவாவிற்கு இதுவரை 25 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது.
மேலும் வரப்போகும் தேர்தல் காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சார விடயமாக உருவெடுக்கும். நிச்சயமாக இந்தப் பிரச்சனை பிரச்சார அடிச்சுவட்டில் புதிய வடிவத்தை ஏற்படுத்தும். கன்சவேட்டிவ் கட்சியினர் ஏற்கனவே தொலைக்காட்சி விளம்பரங்களில் லிபரல் மற்றும் புளொக் கட்சியினர் புதிய மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்ட மசோதா சீ – 49 ஐ எதிர்ப்பதின் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறார்கள் எனக் கூறி வருகிறார்கள்.
இத்தகைய முன்னெச்சரிக்கைகளையும் தவிர்த்துக் கொண்டு கப்பல்களின் பின்னணியில் இருக்கும் மனிதக் கடத்தல்காரர்கள் இன்று வரை பகிரங்க கண்காணிப்புகளைச் சமாளித்து வருகிறார்கள். விளம்பரம் செய்யப்பட்ட ஆவணங்கள்,முக்கிய அதிகாரிகளுடனான நேர்காணல்கள் அதேபோல பல நாடுகளிலுமுள்ள உத்தியோகப் பற்றற்ற ஊற்றுக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு’நஷனல் போஸ்ட்’ நடத்திய புலன் விசாரணையிலிருந்து முக்கிய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.கனடாவில் ஏற்படுத்தப்பட்டு வரும் மனிதக் கடத்தல்களுக்கு எதிரான புதிய நிகழ்ச்சித் திட்டத்தைப்பற்றி ‘போஸ்ட்’டின் புலன் விசாரணைகள் வெளிச்சம் பாய்ச்சியதையடுத்து ஆகக் குறைந்தது இதுவரை ஒரு கப்பலையாவது தடுக்க முடிந்திருக்கிறது,இதன் விளைவாக பல கடத்தல் சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்திருக்கிறது.
(தொடரும்)

இலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்.


- ஜனாதிபதி
உலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது. நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

OSHO: Absolutely Free to Be Funny

ம.தி.மு.க.வின் ஆதரவைக் கோரும் பணியில் தி.மு.க. களம்

தேர்தலில் இருந்து ஒதுங்கி நிற்கும் ம.தி.மு.க.வின் ஆதரவைக் கோரும் பணியில் தி.மு.க. களம் இறங்கியுள்ளது.
ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியாகி பத்து நாள்கள் ஆகியும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியோ, யாருக்கு பணி செய்ய வேண்டும் என்றோ ம.தி.மு.க. தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. ம.தி.மு.க.வுக்கு கொங்கு மண்டத்திலும், தென் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவுக்கு வாக்கு வங்கி உள்ளதை யாரும் மறுக்க முடியாது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை வென்றது ம.தி.முக. அதன் வாக்கு சதவீதம் 5.98 சதவீதமாக இருந்தது. இதேபோன்று 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 11,12,908 வாக்குகளைப் பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 2.67 ஆகும். ஆதரவைக் கோருகிறது: 20 முதல் 30 தொகுதிகள் வரை குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளை வைத்திருக்கும் ம.தி.மு.க.வை சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வினர் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளனர். "தேர்தலில் ம.தி.மு.க.வினரின் பணியை மறுக்க முடியாது. குறைந்த அளவில் கட்சியினர் இருந்தாலும் அவர்களின் தேர்தல் பணி முக்கியமானது. இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை என முடிவு செய்துவிட்ட நிலையில் அவர்களின் வாக்கு வங்கியும், பணித் திறனும் வீணாகின்றன. இதனால், அந்த வாக்கு வங்கியை எப்படியாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்து ம.தி.மு.க.வுடன் பேசி வருகிறோம்'' என்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர். தேர்தலைப் புறக்கணித்துள்ள ம.தி.மு.க., தி.மு.க. அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு முன்னதாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் தி.மு.க. தரப்பு நல்லுறவை பேணத் தொடங்கிவிட்டிருக்கிறது. "கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்பினோம். இதனால், பல முக்கிய பிரச்னைகளை கையில் எடுத்து பிரசாரத்தில் எதிரொலிக்கத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளைக் கொடுத்து அ.தி.மு.க. தலைமை அவமானம் செய்து விட்டது. இதனால், அந்த அணியையே நாங்கள் முதலில் எதிர்க்கிறோம்' என்கின்றனர் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ம.தி.மு.க.வினர். வைகோ அறிவிப்பார்? தி.மு.க. தரப்பில் இருந்து ம.தி.மு.க. தலைமையிடமும் பேசப்பட்டு வருவதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கெல்லாம், ஏப்ரல் முதல் வாரத்தில் பதில் அளிப்பதாக ம.தி.மு.க. உறுதி அளித்துள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், கட்சியினர் தங்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம் என்ற நிலையுடன் ம.தி.மு.க. அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் மௌனத்தையே சம்மதமாக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது செல்வாக்கு தி.மு.க.வுக்குச் செல்லும் என ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல்களில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகளால்தான் தி.மு.க.வின் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க.வினரை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதைச் சரிக்கட்டவே ம.தி.மு.க.வின் வாக்கு வங்கிகளை தி.மு.க. கோருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தாய் கழகத்துடன் இணைந்து பணியா அல்லது தள்ளி நிற்பதா என்கிற முடிவு ம.தி.மு.க. சார்பில் விரைவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்களாலும், தி.மு.க.வினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க வேண்டும்: ராமதாஸ்

சிதம்பரம், மார்ச் 31: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கொள்கை திட்டங்கள், வாக்குறுதிகள் பற்றி பேசாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஜெயலலிதா விமர்சனம் செய்து வருகிறார். இதுபோன்று எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் அநாகரிகம் இல்லை. தலைவர்களின் குடும்பங்களை பற்றி யாரும் விமர்சித்தது இல்லை. அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பற்றி பாஜக குழுவினர் ஒரு முறை தவறான தகவலை வெளியிட்டனர். அதற்காக அக்கட்சி மூத்தத் தலைவர் அத்வானி உடனே வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். இது அரசியல் நாகரிகம், பண்பாடு. ஆனால் இங்கு ஜெயலலிதா தனது பிரசாரத்தில் முழுக்க முழுக்க தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள நடிகர் நிதானமிழந்து பேசி வருகிறார். அந்த நடிகர் திமுக, பாமக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என கூறி வருகிறார். திமுக, பாமக இரு கட்சிகளும் இடஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமச்சீர்கல்வி, இருமொழிக் கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதற்கேற்ப இடஒதுக்கீடு, மத்திய, மாநில தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆகிய கொள்கைகளில் பாமகவுக்கும், திமுகவுக்கும் ஒற்றுமையும் உடன்பாடும் உள்ளது. அந்த வகையில் திமுக, பாமக கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி. அதிமுக மற்றும் நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தற்போது நடிகர் கட்சியை ஏன் சேர்த்தோம் என அதிமுக தலைமை புலம்பி வருகிறது. நடிகர் கட்சியினால் தமக்கு பாதிப்பு என அதிமுக தலைமை நினைக்கிறது. நடிகர் தனது வேட்பாளரை அடித்ததால் அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள கொஞ்சம், நஞ்சம் இருந்த பெண்கள் ஆதரவும் போய்விட்டது. கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் இதுபோன்று தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி கிடையாது. தமிழகத்தில்தான் அதிக கெடுபிடி செய்கிறது என்றார் ராமதாஸ்.

மேற்கு வங்கத்திலும் வெடித்தது காங்கிரசின் பிறவி குணம்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தை தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திரிணமுல் தலைமையிலான கூட்டணியில், போராடி பெற்ற 65 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.மேலும், 2006ல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி எடுத்து கொண்டது. இதனாலும், வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியடைந்த மாநில காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாநிலத்தின் வடக்கில், பல தொகுதிகளில் சுயேச்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடக்கில் 54 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், இன்றுடன் முடிவடைகிறது.முராரி தொகுதி, காலம் காலமாக, காங்கிரஸ் வசமிருந்து வருகிறது. இத்தொகுதியை தற்போது, திரிணமுல் கட்சி எடுத்து கொண்டது. இங்கு, கோல்கட்டா ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி நூரி ஆலம் சவுத்ரியை, திரிணமுல் கட்சி நிறுத்தியுள்ளது.இதை எதிர்த்து பிர்பும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மோதகர் உசேன் மகனை, போட்டி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். கடந்த ஊராட்சி தேர்தலில், முராரி தொகுதியின் பல ஊராட்சிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்ஜன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா கூறுகையில், "காங்கிரஸ் போட்டியிடும் ஐந்து தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ய வரவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் மானஸ் புனியா கூறுகையில், "பிர்பும் மாவட்டத்தில் இருந்து தகவல்களை சேகரிக்க, முயற்சித்து வருகிறோம். ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரட்ட, திரிணமுல் கட்சியுடன் கூட்டணி அமைக்க, மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்களை கேட்டு கொண்டுள்ளேன்' என்கிறார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலிலும், இதேபோல் தோன்றிய அதிருப்தி வேட்பாளர்களால், திரிணமுல், காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டது. உள்கட்சி குழப்பம் நடப்பு தேர்தலிலும் குழிபறித்து விடுமோ என, மாநில காங்கிரஸ் தலைமை கவலை கொண்டுள்ளது.

வாகன விபத்தில் படுகாயமடைந்த மின்னல் ஸ்ரீரங்காவின் மெய்பாதுகாவலர் உயிரிழந்தார்!

செட்டிகுளம் பகுதியில் மின்னல் ஸ்ரீரங்கா பயணம் செய்த வாகனம் நேற்று முன்தினம் கடந்த புதன்கிழமை விபத்திற்கு உள்ளாகியது. இதன்போது ஸ்ரீரங்காவும் அவரது வாகனசாரதியும் சிறு காயங்களிற்கு உள்ளாகிய நிலையில், படுகாயமடைந்த மெய்பாதுகாவலர் செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீரங்காவின் மெய்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் அதிவேகமாக சென்ற நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்ததினால் நேற்று முன்தினம் மாலை 5;:00 மணியளவில் செட்டிகுளம் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் விபத்திற்கு உள்ளாகியது.

Credit card மோசடியை தடுக்க நிபுணர்கள் குழு: விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவ ஏற்பாடு

கிரடிட் கார்ட்’ மோசடியை தடுக்க நிபுணர்கள் குழு: விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவ ஏற்பாடு
கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடியை தடுப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் பிரகாரம் கிரடிட் கார்ட் மோசடி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு பொலிஸாருக்கு உதவுவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் கீழ் கிரடிட் கார்ட் மோசடி மற்றும் அது தொடர்பான மோசடிகளை விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு விசாரணைகளின் போது உதவுவதற்காக பொறியியல் துறை மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பில் தகைமை யுள்ள நபர்களடங்கிய குழுவொ ன்றை நியமிக்க முடிவு செய்யப் பட்டது. அதன் படி விசேட வர்த்தமானி மூலம் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ள தோடு இதற்கு பாராளு மன்ற அனுமதி பெறுவதற் காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இந்த நிபுணர்கள் குழுவில் ஹேமசிறி கருணாநாயக்க, துவான் இர்சாத் ஹலால்தீன், பிமல் குணபால, நளின் சரத்குமார, கே. ஜி. பி. சிரிகுமார ஆகியோர் அங்கம் வகிக் கின்றனர். இலங்கை கணனி அவசர பொறுப்புணர்வு அமைப்பும் இதில் அங்கம் வகிக்கிறது. கிரடிட் கார்ட் மோசடிகள் நடைபெற்றதோடு இவற்றை தடுக்கும் வகையில் புதிய நிபுணர்கள் குழு செயற்படும்.

Colombo விமான நிலையத்தில் காணாமல் போன 6 கோடி ரூபா தங்கம் மீட்பு ; 7 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காணாமல் போன சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இத்தங்கம் காணாமல் போனமை தொடர்பாக உள்ளூர் விமான சேவை நிறுவனமொன்றின் ஊழியர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய முற்றுகையொன்றின்போது, 22 லட்ச ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். தங்க பிஸ்கட்டுகள் சிலவற்றை விற்பனை செய்து பெற்ற பணம் இதுவென பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். செட்டியார் தெருவிலுள்ள நகையகமொன்றின் உரிமையாளர் இறக்குமதி செய்த 5 கோடி பெறுமதியான தங்கம் உட்பட 6 கோடி பெறுமதியான தங்கம் மார்ச் 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சரக்குப் பிரிவு களஞ்சியசாலையில் வைத்து காணாமல் போனமைகுறிப்பிடத்தக்கது. சுமார்15 கிலோ எடையுடைய 126 தங்க பிஸ்கட்டுகளும் நகைகளும் காணாமல் போயிருந்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். அதேவேளை, இது தொடர்பாக விசாரணைகளுக்காக சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் இருவரை சுங்கப்பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்திருந்தார்.

வியாழன், 31 மார்ச், 2011

பறக்கும் மீன்,மன்னார் வளைகுடா கடலில் தாவித் தாவி


மன்னார் வளைகுடா கடலில் தாவித் தாவிக் குதிப்பதும் காற்றைக் கிழித்துக் கொண்டும் செல்லும் மீன்தான் பறக்கும் மீன். கடலுக்கடியில் பல்லாயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது: ""எக்úஸôசீடஸ் என்ற விலங்கியல் பெயருடைய இம்மீனின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் எளிதாக காற்றில் படபடத்து தாவும் வகையில் உள்ளது. கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை. கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது இம்மீன்கள் தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்தும் காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்றும் கடலில் குதிக்கும். இதனால் இதற்கு பறக்கும் மீன்கள் என்றும் பெயர் வந்தது. அதிக பட்சமாக 6 மீ உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70கி.மீ வேகத்துக்கு பறப்பதும் இதன் சிறப்பு. வேகமாக பறக்கும் போது அதன் தூரம் 160அடி வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது. காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் பறவைகளின் இறக்கைகளைப் போன்றே இதன் முன்துடுப்புகள் இவை எளிதாகப் பறக்க உதவுகிறது. ஒரு விநாடிக்கு 70 முறை இதன் வால் அசைவதால் காற்றில் அந்தரத்தில் ஒரு விதமான பேலன்ஸ் கிடைத்துப் பறக்கிறது. தண்ணீரில் ஒரு முறை குதித்தவுடன் திரும்பவும் தனது முன்துடுப்புகளை முன்பக்கம் திருப்பி தண்ணீரைத் தள்ளி விட்டு நீந்தும். பிறகு மீண்டும் கடலின் மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும்.பறக்கும் நேரத்தில் தவளையின் கால்களைப் போலவும் இதன் முன்துடுப்புகள் செயல்படுகின்றன. கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் இதன் விருப்ப உணவாகும்.பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் டால்பின்கள், டுனா, மர்லின் உள்ளிட்ட மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன் பிடிப்போர் ஒளி உமிழும் டார்ச்சுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்தும் பிடிக்கின்றனர். இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இதனைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படாஸ், டிரினிடாட், டொபாக்கோ உள்ளிட்ட தீவுகளுக்கிடையே இம்மீனைப் பிடிப்பது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பின்னர் ஐ.நா.சபை இப்பிரச்னையில் தலையிட்டு சமரசம் உண்டாக்கியது. ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக பிடிபட்டாலும் நமது நாட்டில் இதற்கென்று மீன்பிடி முறைகள் இல்லை. ஆனால் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் கடல் மாசுபடுவதாலும் இதன் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. பறக்கும் மீன்தான் பார்படாஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும் தேசிய மீனாகவும் திகழ்கிறது.''

பாலியல் பற்றிய மிக நூதனமான கண்காணிப்புக்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை

part one

நீங்களல்ல நாங்கள்”

-கற்சுறா-
நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம்.
இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள்  புரி ரொட்டி புல்லு வெட்டுற மிசின் என்ற மிக அதிகளவான கொச்சைத்தனமான வார்த்தைகளாலும் அழைக்கப்படுகின்றவர்கள் குறித்தே இங்கு பேசுகிறேன்.
மிக இறுக்கமான காலாசாரவழிமுறைகளாலும் தேசிய வெறியூட்டப்பட்ட சூழல்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தால் அதற்குப் புறநிலையிருக்கும் தனது தாக்கத்தை மெதுவான முறையில் உள்நுழைக்க முயற்சிக்கும் மிகப்பெரிய – அதிர்ச்சியூட்டக் கூடிய தற்பாலுறவுக் கோட்பாட்டை அல்லது ஒட்டுமொத்த புறநிலையில் இயங்கும் ஙரநநச கோட்பாட்டை எதாவது ஒரு தருணத்தில் உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்குமா நமது சமூகம் என்பதை நாம் பேசத்தானே வேண்டும்.
மிக மிக அதிகமான பாலியல் இச்சைகளுடனும் மிக அதிகளவாக பெண்களில் விருப்பும் கொண்ட ஒரு ஆண் தனத்திலிருப்பதாக உணரும் கற்சுறாவாகிய நான்- தற்பாலுறவு குறித்தஅரசியலையும் அழகியலையும் அதன் உள்ளும் புறமும் இருக்கின்ற  முரண்பாடுகளையும் நாங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும், இதற்குள் எவ்வாறு உள்நுழைய முடிகிறது என்றும் பார்க்கும் எனது ஆரம்பநிலை அணுகலே இது.
பொதுவாக தமிழ் இனத்தின்; மானமாகவும் புனிதமாகவும் போற்றப்படுகின்ற ஒழுக்கம் என்ற பாலியல் சார் நடவடிக்கை மீதான கண்காணிப்பு என்பது மிக முக்கியம் வாய்ந்ததொன்று. இந்தப் பாலியல் பற்றிய கவனமென்பதே ஒவ்வொரு தனிநபரையும் அச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றாக வாழ்நாள் ப+ராவும் இருந்து வருகிறது. தனிநபர்களது பாலியல் விருப்பு என்பதை எமது சமூகம் ஒருபோதும் ஒத்துக் கொள்வதி;ல்லை. அதை சமூகத்தின் விருப்பாக  ஒரு இனத்தின் விருப்பாக ஒவ்வொரு தனிநபர்கள் மீதும் திணித்து விடுகிறது. பொதுவாக கல்வி, உடை, உழைப்பு, வேலை மற்றும் அனைத்து விதமான இருத்தல்களையும் விருப்புக்களையும் சமூகத்தின் விருப்பாக நமது சமூகம் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தாலும் பாலியல் பற்றிய தெரிவில் அனைத்தையும் மீறிய வன்முறையைச் செலுத்தி தனிநபர் விருப்பை நிராகரித்து விட்டு  இனத்தின் தெரிவாக சமூகத்தின் தெரிவாக முன்நிறுத்தகிறது.
புலம்பெயர் சமூகத்தில் பாலியல் பற்றிய அறிவுடனும் தெரிவின் உரிமையுடனும் நமது குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பாலியல் பற்றிய மிக நூதனமான கண்காணிப்புக்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கே இந்த இரண்டு பிரிவுக்குமிடையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய இடைவெளி குறித்து அதற்குள்ளிருக்கும் ஆபத்துக் குறித்து நாம் அவ்வளவு அக்கறைப்படுவதேயில்லை.
அண்மையில் கனடாவில் சாதிமாறிக் காதலித்ததற்காக காரினால் அடித்துத் தன் பிள்ளையைக் கொல்ல முயன்ற ஈழத்தமிழ்த் தகப்பன் பற்றிய சம்பவம் அறிந்திருப்பீர்கள். இதுதான் இன்று 30வருடத்தின் மேலாகப் புலம் பெயர்ந்து வாழும் நமது இனத்தவர்களது மனநிலை. இதற்குள் தற்பாலுறவு குறித்த அறிவு அல்லது புரிதல் எப்படி நிகழும் ? எங்கே சாத்தியம்?
ஆனாலும் நாம் கட்டிவைத்த புனிங்கள் நம் கண்முன்னாலேயே தகர்ந்து போய்க்கொண்டிருக்கும் காலம் இது. அத்தோடு தகர்க்க வேண்டிய காலமும் கூட. மதங்களின் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் விடுதலையின் பேரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் நீதியன் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும்
தகர்ந்து போனதைக் கண்டுகொண்டிருக்கிறோம். ஒழுக்கத்தின் பெயரால் போதிக்கப்பட்ட பாலியல்  உறவும் அதன் மீதான கண்காணிப்பும் தகரும் தருணம் தான் அடுத்து நடக்கப்போவது.
தற்பாலுறவு பற்றிய அறிவு எதுவுமற்ற வயதில் அதாவது பதின்மங்களில் எனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களால்  அவர்களின் பாலியல் இச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது சிறிய வயதில் கம்பியடிக்கப்பட்டவன் நான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான்  பேசுகின்ற விடையமும் அதனைப் புரிந்து கொள்ளலுக்கும் இடையே ஊடாடப் போவது இதுதான்.
to be continue

லண்டன்: வைன் விற்பனை நிலையத்தில் துப்பாக்கிசூடு!

கடந்த செவ்வாய்கிழமை (29ம் திகதி) இரவு 9:15 மணியளவில் லண்டனில் “ஸ்ரொக்வெல் ப+ட் மற்றும் வைன்” விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 36வயதுடைய இலங்கையர் ஒருவரும், 5வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த துப்பாக்கி பிரயோகத்தை கறுப்பு இனத்தவர் ஒருவரே மேற்கொண்டதாக தெரியவருவதுடன், சம்பவம் குறித்து லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Congress 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார்


சம்மர் சூடு தகிக்குமுன் சும்மாத் தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நீ எஸ்.வி.சேகர் பேட்டி எடுத்துப் போட்ட வேளை அவருக்கு சீட் கிடைக்காமல் தங்கபாலுவின் மனைவிக்குக் கிடைத்தது. ஆனால் 2B மனுக்களில் அந்தம்மா கையெழுத்துப் போடவில்லையாம். 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார் என்று தெரியல. அதனால் இப்போ அந்த தொகுதியில் தலையெழுத்தே என தங்கபாலுவே போட்டி போடுகிறாராம். என்னாமாப் பிளான் பண்ணி இருக்காரு! இந்த நேரத்தில் இளங்கோவன் எங்கே போனார் என்று தெரியவில்லை. திமுக முக்கிய தலைவர்களே பயந்துக்கொண்டு சென்னையை விட்டு ஓடி போய் படிக்க தெரியாத கிராம மக்கள் இருக்கும் இடத்தில் நிற்கிறார்கள். இதற்கு தான் நாலு எழுத்து படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாலு எழுத்து வேண்டாம் அட்லீஸ்ட் இரண்டு எழுத்து அதும் 2G இது படிக்க தெரிந்தால் போறும் மக்கள் புத்திசாலியாகிவிடலாம்.

ம.தி.மு.க., குளத்தில் கல்லெறிந்தவர்கள்

நான் 1996ல் ரஜினியை அவரது வீட்டில் போய் சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது நான் ஏன், தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டேன் என்றும் சொன்னேன். "நீங்கள் கட்சி துவக்குவதாக இருந்தால் துவக்குங்கள். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். உங்கள் பெயரை சொல்லி, உங்கள் மன்றத்தின் பெயரை சொல்லிக்கொண்டு பலனை யாரோ சுரண்டிக்கொண்டு போவதற்கு அனுமதிக்காதீர்கள்' என்றும் சொன்னேன்.

"நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். ஒரு வாரத்தில் அமெரிக்கா போகிறேன்' என, ரஜினி சொன்னார். தேர்தலில் கம்யூனிஸ்ட்டுடனும், ஜனதா தளத்துடனும் கூட்டணி அமைத்து போட்டியில் குதித்தோம். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு இணையாக ம.தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.

திடீரென மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கி தி.மு.க.,வுடன் கூட்டு வைத்ததாலும், அருமை நண்பர் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில், "அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என ஜெ., ஆட்சி குறித்து பேட்டி கொடுத்ததும், ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

தேர்தலில் தி.மு.க., - த.மா.க., கூட்டணி வெற்றி பெற்றது. மூப்பனார் புதிய கட்சி துவங்காமல் இருந்திருந்தால், ரஜினி பேட்டி கொடுக்காமல் இருந்திருந்தால், அந்த தேர்தலில் ம.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றிருக்கும்.

அது குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "மிகப்பெரிய வெள்ளத்தில், சில சந்தன மரங்களும் அடித்து செல்லப்படலாம். ம.தி.மு.க., என்ற இந்த சந்தன மரம், வளர்ந்தாலும், வெட்டப்பட்டாலும் மக்களுக்கு பயன் தந்துகொண்டே தான் இருக்கும்.

-ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ "டிவி' பேட்டியில்

புலிகளின் சகோதர படுகொலையான “கந்தன் கருணை” படுகொலை நினைவு நாள்!


புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சக விடுதலை அமைப்பு போராளிகள் 100க் கணக்கானோர் விடுதலை புலிகளின் சிறைக்குள்ளேயே வைத்து படுகொலை செய்ததன் மூலம் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைக்குள் வைத்து 50க்கு மேற்பட்ட தமிழ் சிறைகைதிகளை சுட்டும், வெட்டியும் மிகவும் கோரத்தனமாக படுகொலை செய்தது. இந்த சிங்கள இனவாத அரசிற்கு சற்றும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை புலிகளும் கந்தன் கருணை படுகொலை மூலம் உலகிற்கு எடுத்து கூறப்பட்ட நினைவு நாளே இன்றைய துயரமான நாளாகும்.

யாழ். மண்ணில் பௌத்த வரலாற்று பொக்கிஷம்

மதங்களின் வரலாறுகளைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு இடங்களிலும் பலவாறான வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றமை சிறப்பானதாகும். இருப்பினும் குறித்தவொரு பிரதேசத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள சமய கலாசார சின்னங்களுக்கு மத்தியில் மற்றுமொரு மதத்தை வலியுறுத்தும் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷங்கள் காணப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமாகும்.

அந்தவகையில், தமிழர் தாயகமாம் யாழ். மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புராதன விகாரையொன்று பற்றிய கண்ணோட்டமே இது. யாழ். சுண்ணாகம், கந்தரோடை பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கந்தரோடை புராதன விகாரை. சுமார் 2,500 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த விகாரையில் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகளே விசேடமானவை.

இலங்கைக்கு வருகை தந்த புத்த பெருமான் யாழ். நாகவிகாரைக்கு செல்வதற்கு முன்னர் இந்த கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு முதன் முதலில் வந்து ஓய்வு பெற்றதாகவும், அங்கிருந்தவாறே பல்வேறு தியானங்களில் ஈடுபட்டதாகவும் கந்தரோடை விகாரையின் வரலாறு கூறும் கண்டி இராசதானிக்கு உரித்தான விகாரைகள் மற்றும் புண்ணிய பூமிகள் தொடர்பான புத்தகமான 'நாமாவலிய'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசமரக் கிளையுடன் இலங்கை வந்த சங்கமித்தை பிக்குனியுடன் 60 பிக்குமார்கள் வருகை தந்ததுடன் அவர்கள் அனைவரும் இந்த கந்துருகொட விகாரை அமைந்துள்ள பிரதேசத்திலேயே தங்கியிருந்ததாகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி 60 பிக்குமார்களும் இங்கிருந்தவாறே நாடு முழுவதிலும் பல்வேறு பௌத்த போதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க, புங்குடுதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற மேற்படி பிக்குமார்கள், அங்கு உணவுடன் வழங்கப்பட்ட காளான் கறி விஷமானதில் அவ்விடத்திலேயே உயிர் துறந்துள்ளனர். இதனையடுத்து பிக்குமார்கள் தங்கியிருந்த கந்தரோடை பிரதேசத்துக்கே அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.

பின்னர் உயிர் துறந்த பிக்குமார்கள் வகித்திருந்த பதவிகளுக்கு ஏற்ற வகையில் அவரவர் புதைக்கப்பட்ட இடங்களில் 60 தூபிகள் அவர்கள் நினைவாகக் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் பரைசாற்றுகின்றன. பின்னர், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராசதானிகள் காலத்தைச் சேர்ந்த முதலாவது பரகும்பா மன்னன், மல்லவ மன்னன், லீலாவதி மற்றும் புவனேகபாகு ஆகியோரின் காலங்களில் இந்த விகாரை புதுப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், தேவநம்பியதீஸன் மன்னன் காலத்தில், தம்பகோளப்பட்டிணம் முதல் அநுராதபுரம் நகரின் வடக்கு வாயில் வரையில் கற்தூண்கள் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் இந்த விகாரையும் உள்ளடக்கப்பட்டு அதற்கென விசேட அலங்காரங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் காலத்தில் மேற்படி விகாரை சேதமாக்கப்பட்டதாகவும் அதனையடுத்து விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் காடு வளர்ந்தும் தூபிகள் அனைத்தும் மண் மேடுகளால் மூடப்பட்டதால் விகாரை இருந்த இடம் கண்டுபிடிக்க முடியாதளவில் புதையுண்டுள்ளது.

இதனையடுத்து, 1917ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெய்த அடை மழை காரணமாக மேற்படி தூபிகள் தென்பட ஆரம்பிக்கவே, அப்போது யாழ். மாவட்ட நீதிவானாக இருந்த போல் ஈ. பீரிஸ் என்பவர் அவற்றைக் கண்டு அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்யுமாறு எழுத்துமூலமாக அகழ்வாராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

1917 முதல் 1919 வரையான இரண்டு வருடகால அகழ்வாராய்ச்சிகளின் போதே மேற்படி  தூபிகளுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த விகாரையும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை காலங்களுக்கு உரித்தான புராதனப் பொருட்களும் புத்தர் சிலைகளும் ஓடுகள் மற்றும் நாணயங்கள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மேற்படி 60 தூபிகளில் 56 மட்டுமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவற்றின் அத்திவாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஏனைய நான்கு தூபிகள் தொடர்பில் இன்றும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் விகாரை பூமிப் பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள், நாணயங்கள் மற்றும் ஏனைய புராதனப் பொருட்கள் அனைத்தும் யாழ். அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கி.பி. 9ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் நான்காம் காசியப்ப மன்னனால் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக இப்புண்ணிய பூமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 'அத்தானே டெம் கடிதம்' எனும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்படி விகாரை கி.பி. 9ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது என குறிப்பிடலாம்.

1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் விகாரை அமைந்துள்ள சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பு, அகழ்வாராய்ச்சி திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் அதில் தற்போது சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எஞ்சியுள்ளதாக விகாராதிபதி கோட்டே விஜயானந்த தேரர் தெரிவிக்கின்றார்.

வடக்கின் வரலாறு கூறும் புராதன சொத்துக்களில் ஒன்றான கந்தரோடை விகாரையையும் அதன் புனிதத் தன்மையினையும் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
நன்றி: தமிழ் மிரர்

Vijjayakanth வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை!-சோ



சென்னை: தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ. தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.

புலிகள் ஆதரவு உறுமல் சத்தம் அடங்கிய நிலையில் தமிழகத் தேர்தல் களம்


கோயம்புத்தூர்: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழக மாநிலம் எங்கும் தேர்தல் களங்களில் புலிகள் சார்பு "உறுமல்கள்' எதிரொலித்துக் கொண்டிருந்தன.

லோக்சபாத் தேர்தலின்போது இலங்கையின் யுத்தமும் சிறுபான்மைத் தமிழர்களின் துன்பநிலையும் நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமித்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கையாலாகாத தன்மையைக் கொண்டிருப்பதாகச் சாடியதுடன், அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தியிருந்தார். அதன் பின்னர் 18 மாதங்கள் கடந்து விட்டன.

தமிழ் நாட்டிலுள்ள புலிகள் சார்பில் உரத்துக் குரலெழுப்பும் வைகோ தேர்தல் களத்திலிருந்து இப்போது அகன்றுவிட்டார். அத்துடன், கடந்த மூன்று தேர்தல்களில் தோல்வி கண்டிருந்த அ.தி.மு.க. தமிழ்நாட்டில் இலங்கை விடயம் தேர்தலில் வெற்றிபெறச் செய்யாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால், புலிகள் சார்பு துப்பாக்கிகள் ஏன் மௌனமாகியுள்ளன? புலிகள் சார்புக் குழுக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தன. இதற்கு அ.தி.மு.க. ஆதரவளித்திருந்தது. ஆனால், இப்போது அந்த விடயத்தில் சத்தமின்றி அ.தி.மு.க. ஓய்வெடுத்துவிட்டதாகத் தெரிகின்றது. ஆனால், நடிகரும் இயக்குநருமான சீமான் 63 தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். ஆயினும் புலிகள் சார்பு முன்னணி ஆதரவாளர்கள் பலர் இந்தக் காட்சிகளை ஓரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பணவீக்கம்,இலவசம்,மோசடிகள் என்பனவே தேர்தலின் தொனிப்பொருளாகக் காணப்படுகிறது. இலங்கைத் தமிழர் விவகாரம் வாக்கை வசீகரிக்கும் விடயமாகக் காணப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்போவதாக தி.மு.க.,அ.தி.மு.க. கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தாலும் கூட இந்த விடயம் வாக்கு வங்கிக்கான காட்சியாகத் தென்படவில்லை. இராமேஸ்வரத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருந்த சீமான் தமதுரையில்;

"தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இதுவாகும்.இலங்கைத் தமிழர்களின் துன்பங்கள் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் பேசாமல் இருப்பது துன்பகரமான நிலைமையாகும் என்று தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வும் தி.மு.க. வும் ஈழம் விவகாரத்தை உயர்த்திப் பிடித்திருந்தன. வாக்குகளுக்காக இதனை மேற்கொண்டிருந்தன. ஆனால், அவர்கள் தமிழர்களை உண்மையாக நேசிப்பவர்களல்ல' என்று சீமான் குற்றஞ்சாட்டுகிறார்.

சென்னையைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணியான ராஜீவ் காந்தி என்பவர் கடந்த தேர்தலில் நான்காயிரம் வாக்குகளை சிவகங்கைத் தொகுதியில் பெற்றவர். அங்கு சிதம்பரம் சிறிதளவு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்தார். இந்த முறை ராஜீவ் காந்தி போட்டியிடவில்லை. சீமானுடன் அவர் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். ஈழ விவகாரத்தை அரசியல் கட்சிகள் மறந்துவிட்டதாக அவரும் சாடியுள்ளார்.

புலிகளின் ஆதரவாளர்களில் அநேகமானோர் தமது சுருதியை அடக்கி வாசிக்கின்றனர். பெரியார் திராவிட கழகத்தின் கே.இராமகிருஷ்ணன் 2009 பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலத்தில் இராணுவ வாகனத் தொகுதி மீதான தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரும் தேர்தலை பகிஷ்கரிக்கின்றார். நாங்கள் தேர்தலை பகிஷ்கரிக்கத் தீர்மானித்துள்ளோம். இப்போது எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கமாட்டோம். தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க.,காங்கிரஸில் இணையக்கூடும். இதனை ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் காங்கிரஸுடன் கூட்டுச்சேரவே விரும்புகின்றார் என்று இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை மோதல் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க காங்கிரஸைத் தோற்கடிக்க வைப்பது மிகவும் முக்கியமானதாக அச்சமயம் கருதப்பட்டது என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இப்போது இலங்கைத் தமிழர்கள் மறக்கப்பட்டவர்களாகத் தோன்றுகின்றது என்பதை இராமகிருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறார். புலிகள் சார்பு உறுமல் இப்போது அமர்ந்துவிட்டதாகத் தென்படுகிறது என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

ராஜனியை கடத்தி கொலை செய்ததாக மூவருக்கு மரண தண்டனை

ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வேலாயுதன் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கல் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்கள் மூவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான ராஜினியை 1996 ஆம்ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியளவில் கோண்டாவில் பகுதியில் வைத்து ராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தைச் சேர்ந்த காமினி சமன் உயனகே, ஏ.பி.சரத்சந்திர, டி.கமகே கித்சிறி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் மேற்படி மூவரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அம்மூவரில் காமினி சமன் உயனகேவும் டி.கமகே கித்சிறியும் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர்கள் சார்பில் வழக்குரைஞர் லக்மினி கிரிஹகம ஆஜராகியிருந்தார்.

புதன், 30 மார்ச், 2011

பட்டியல் தராததால் காங்.,குக்கு வந்தது சிக்கல்:தேர்தல் களத்தில் தேசிய தலைவர்களை கா‌ணோம்

:அரசியல் கட்சிகளின் சார்பில், பிரசாரம் செய்யும் வி.ஐ.பி.,க்களின் பட்டியல் தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான, "பாஸ்' பெறப்பட்டுள்ளது. இதில், தேசிய கட்சியான காங்கிரஸ், ஒருவரது பெயரைக் கூட தராததால், அக்கட்சி வேட்பாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யவுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பட்டியலை, தேர்தல் கமிஷனிடம் இம்மாதம் 25ம் தேதிக்குள் அளித்து, அவர்களுக்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற முக்கியஸ்தர்களின் பிரசாரத்துக்கு ஆகும் போக்குவரத்து செலவு போன்றவை, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 40 பேருக்கும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தலா 20 பேருக்கும் அதிகபட்சமாக, "பாஸ்' வழங்கப்படுகிறது.
இதன்படி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய, 340 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸ் இம்முறை 63 தொகுதிகளில் போட்டியிட்டும், கட்சிக்காக பிரசாரம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்கள் பட்டியலையே தரவில்லை. இதனால், இந்த சட்டசபை தேர்தலின் போது, சோனியா, ராகுல் போன்றவர்கள் தமிழகத்துக்கு வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, தேசிய தலைவர்கள், அக்கட்சியின் மாநில முதல்வர்கள் அனைவரது பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அத்வானி, கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, ராமன் சிங், எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான், வருண், ஹேமமாலினி, குட்டி பத்மினி, வெங்கய்யா நாயுடு, பங்காரு லட்சுமண், ரவிசங்கர் பிரசாத், ராஜிவ் பிரதாப் ரூடி, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் உட்பட 40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பிரகாஷ் கராத், சீத்தாராம் யெச்சூரி, கே.வரதராஜன், மானிக் சர்க்கார், பிருந்தா கராத், டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், என்.வரதராஜன், நன்மாறன் உட்பட 40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., சார்பில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், திரைப்படத் துறையைச் சேர்ந்த பாக்யராஜ், நெப்போலியன், குஷ்பூ, வடிவேலு, வாகை சந்திரசேகர், திண்டுக்கல் லியோனி, ரித்தீஷ் உட்பட 40 பெயரும் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க., சார்பாக ஜெயலலிதா, பன்னீர் செல்வம், பொன்னையன், செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், செம்மலை, பாலகங்கா, மைத்ரேயன், அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், திரைப்படத் துறையைச் சேர்ந்த டி.கே.கலா, ராதாரவி, செந்தில், சரவணன், குண்டு கல்யாணம், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, பொன்னம்பலம், ஆர்.வி.உதயகுமார், நெத்தியடி நாயகன், லியாகத் அலி கான், ஜெயசூரியகாந்த், கவிஞர் முத்துலிங்கம் உட்பட40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பா.ம.க., சார்பில் ராமதாஸ், அன்புமணி, மணி, மூர்த்தி, வேலு, வேல்முருகன் உட்பட 40 பெயரும் இடம் பெற்றுள்ளன. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார், ராதிகா உட்பட 20 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உட்பட 20 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஜனதா கட்சி சார்பில் கூட சுப்பிரமணியசாமி, சந்திரலேகா ஆகிய இருவரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர, அகில பாரத வள்ளலார் பேரவை, கிறிஸ்தவ முன்னேற்ற கழகம், இந்திய கிறிஸ்தவ முன்னணி, புரட்சி பாரதம், தமிழ் மாநில காயிதே மில்லத் லீக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் கூட பட்டியல் அளித்து அனுமதி பெற்றுள்ளன.ஆனால், ஐந்து மாநிலங்களிலும் தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸ், தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக, அனுமதி பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா, ராகுல் தவிர, சிதம்பரம், வாசன் போன்றவர்கள் பிரசாரத்துக்காவது அனுமதி வாங்கியிருக்கலாம். ஆனால், "சீட்' பெறுவதில், இங்குள்ள கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வந்ததால், தேர்தல் கமிஷன் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களின் பிரசார செலவு, வேட்பாளர்கள் தலையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஆங்கில அறிவில் கொடிகட்டிப்பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை

ஆங்கிலமொழி அறிவு மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கும்
இலங்கையில் சமாதானமும், அமைதியும், இன ஐக்கியமும் திரும் பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எங்கள் நாடு இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. அதில் ஒன்று பொருளாதாரத் துறையை கைத்தொழில் மயமாக்கல் மூலமும், உணவு உற்பத்தியின் பசுமைப்புரட்சியின் மூலமும் மேற்கொள்ளவேண்டிய ஒரு பாரிய சவாலாகும். இரண்டாவது சவாலாக இருப்பது இந்நாட்டின் கல்வித் துறையை குறிப்பாக, உயர்கல்வித்துறையை மேம்படுத்துவ தற்கு மீண்டும் ஆங்கில அறிவை எமது மாணவ, மாணவிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பெரும் பொறுப்பாகும்.
இலங்கை 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற போதிலும், சுதந்திர இலங்கையின் நிர்வாகம் கோட் சூட், தொப்பி அணிந்த ஆங்கிலேயர் பாணியில் வீட்டிலும் ஆங்கி லம் பேசும் ஏகாபத்திய வாதிகளின் கைப்பிள்ளைகளின் பொறுப்பி லேயே விடப்பட்டிருந்தது. இதனால், அன்று தேசிய இன உணர்வு அந்தளவுக்கு வலுப்பெற்றிருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் பதவியிலிருந்த அரசாங்கம் மேற்கொண்ட முத லாளித்துவ கொள்கைகளினால், அன்று, வலுப்பெற்றிருந்த இடதுசாரி அமைப்புக்களின் அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக பாரம்பரியத்தி ற்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட பொது வேலை நிறுத்தங்கள் போன்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்து, நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கையின் தேசியத்துவத்திற்கும் மக்கள் ஆட்சிக்கும் ஒரு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்காக 1951 ஆம் ஆண்டில், அன்றைய அரசாங்கத்தில் தான் வகித்து வந்த சிரேஷ்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து, முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.
ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்தார். அன்று, அமரர் பண்டாரநாயக்காவின் வலது கரமாக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷ ஆவார்.
எங்கள் நாட்டில் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தி, மக்கள் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் உயர் பட்டம் பெற்று, கோட்டும், சூட்டும் அணி ந்து, நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, அந்த ஆடை களை களைந்தெறிந்து விட்டு, தேசிய உடையை அணிந்து, தேசிய உடைக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.
அவர், பஞ்சமகாசக்தியான விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மகாசங்கத்தினர் மற்றும் சுதேச வைத்தியர்களின் பூரண ஒத்துழைப்பு டன் தேர்தல்களத்தில் குதித்து, மிகவும் பழைமைவாய்ந்த இலங்கை யின் முதலாவது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை படுதோல்விய டையச் செய்து, இலங்கையில் மக்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக் கினார். அன்னாரது இந்த முயற்சிக்கு தற்போதைய மக்கள் ஐக்கிய முன் னணியின் தலைவரும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவின் தந்தை பிலிப் குணவர்த்தனவும், முன்னாள் பிரதம மந்திரி கலாநிதி டபிள்யு. தஹாநாயக்கவும் உறுதுணை புரிந்தனர்.
24 மணி நேரத்தில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஏற்ப டுத்துவேன் என்று தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத் தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க அன்று அளித்த வாக்குறுதி எமது நாட்டின் கல்வித்துறையை சீர்குலைத்ததுடன், இலங்கையில் வலு வாக நிலை கொண்டிருந்த தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கு இடையி லான நட்பு பாலத்தையும் சின்னாபின்னமாக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது.
வாகனங்களுக்கு சிங்களத்தில் ஸ்ரீ சின்னத்துடனான இலக்கங்களை கொடு க்கும் முறையை நடைமுறைப்படுத்தியதும், நாட்டின் இன ஐக்கியம் சீர்குலைவதற்கு அன்று, அடித்தளமாக அமைந்தது.
பிரதம மந்திரி எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தமது ஆதரவாளர் களை திருப்திப்படுத்துவதற்காக, சுயபாஷை கல்வியை நாடெங்கிலுமு ள்ள பாடசாலைகளில் தீவிரமாக அமுலாக்க ஆரம்பித்தார். இது ஆர ம்பித்தது முதல் இலங்கையில் ஆங்கிலக்கல்விக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது.
1956ற்கு பின்னர் குறிப்பாக சொல்வதானால் 1960 ஆம் ஆண்டிற்கு பின் னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்வோரினதும் பட்டம் பெற்று சமூக த்தில் சங்கமிப்பவர்களும் போதியளவு ஆங்கில அறிவு அற்றவர்க ளாக இருப்பதற்கு இந்த சுயபாஷை கொள்கையும் ஒரு பிரதான கார ணமாகும். இதனால், இலங்கைக்கு பாரம்பரியமாக வெளிநாடுகளில் இருந்து வந்த மதிப்பு குறைய ஆரம்பித்தது. அன்று, இலங்கைப் பல் கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்கு வெளிநாட்டில் எவ்வித பிரச்சினையின்றி, உடனடியாக உயர்பதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு காத்திருந்தது.
1956ஆம் ஆண்டிற்கு முன்னர், ஓரே வகுப்பில் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி இன மற்றும் மலாய் இன, சீன இன மாணவர்களும் சகோதரர் களாக அமர்ந்து கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. அதனால், அன்று, இந்நாட்டு மக்களிடையே இன பேதமோ, மத பேதமோ, பிர தேச பேதமோ இருக்கவில்லை. தமிழ் அல்லது சிங்கள பாடத்திற்கு மாத்திரமே இந்த ஒரு வகுப்பு மாணவர்கள் பிரிந்து வெவ்வேறு வகு ப்புகளுக்கு சென்றார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் நாட்டில் கல்வித்து றையை மேம்படுத்தி, ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை எமது பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நிலைகொள்ளச் செய் வதற்கு இப்போது நல்ல பல திட்டங்களை வகுத்திருக்கிறார். அவரது இந்த முயற்சி பூரண வெற்றி பெற்று, நம்நாட்டு மக்கள் மீண்டும் ஆங்கில அறிவில் கொடிகட்டிப்பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்ற நற்செய்தியை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

Vaiko:கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை

அதே இருபத்தியொன்று... ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம். இன்றைய மதிமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் இந்த கூற்றினை நம்பியே ஆகவேண்டும்.


2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.

அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.

இது பழைய கதை.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.

மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.

திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.

ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.

இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.

அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.

Jeya and Vijayakanth சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து

குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம்.தேசிய முற்போக்கு திம்மி கழக தலைவரான விஜயகாந்த் தற்போது தங்கத்தாரகையோடு கூட்டணியில் இருக்கிறார் என்பதால் அவரை குறித்து தேசத்தில் எண்பது கோடி ஹிந்துக்களும் பெருமை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர் குறித்து தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கொடூர வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மூத்த திம்மியின் லேட்டஸ்ட் அல்லக்கை திம்மியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறியிருக்கிறார். திருவாரூரில் நடந்த திம்மிகள் முன்னேற்ற கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஈ காக்கை கூட இல்லையாம். அந்த மேடையில்தான் வடிவேலு குடித்துவிட்டு 'குடிகார' வாந்தி எடுத்திருக்கிறார். தங்கத்தாரகையோடு கூட்டணி அமைத்திருக்கும் விஜயகாந்த் குடிகாரர் என்று பேசியிருக்கிறார். அன்புச் சகோதரர் விஜயகாந்த் குடிக்கும்போது, இவரென்ன ஊறுகாய் வாங்கிக் கொடுத்தாரா?

அதெல்லாம் இருக்கட்டும். அன்புச் சகோதரர் குடிப்பார் என்கிற விஷயத்தையே இவர்தான் கண்டுபிடித்தது போல பீத்திக் கொள்கிறாரே? அதை கேட்டு மூத்த திம்மியும், அவரது மகன்களான மதுரை திம்மி, கொளத்தூர் திம்மி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கிறார்களே? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பார் இல்லையா? தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் அயல்நாட்டு அண்டோமேனியாவின் அடியாளான தாடிவைத்த சர்தார்ஜியோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாராம்.

அன்புச் சகோதரருக்கு சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து முதன்முதலாக உலகுக்கு தெரிவித்த பெருமை நம் தங்கத்தாரகையே சாரும். இண்டெலிஜென்ஸ் பிராப்பர்ட்டி ரைட்ஸ் என்கிற சட்டம் மூலம் பார்க்கப் போனாலும் கூட, புரட்சித்தலைவியே இந்த கண்டுபிடிப்புக்கான உரிமை பெற்ற சொந்தக்காரர் ஆவார். நேற்று வந்த வடிவேலுவோ அல்லது யாரேனும் குடிவேலுவோ இதை தங்கள் கண்டுபிடிப்பு என்று மக்கள் முன் சொன்னால், அதை நம்பிவிட தமிழக மக்கள் என்ன மாங்காய்களா? வாழை மட்டைகளா?

அம்மா அன்புச் சகோதரரை குடிகாரர் என்று செல்லம் கொஞ்சியதும், பதிலுக்கு குடிகாரச் சகோதரர், நீதான் ஊத்திக் கொடுத்தாயா என்று அன்பாக பதிலளித்ததையும் திம்மிக்கள் மறைக்க நினைத்தாலும், தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். ஆயிரம் பாட்டில்கள் மறைத்து நின்றாலும், இரட்டை இலை மறைவதில்லை.

இந்த வதந்தியைப் போலவே இன்னொரு வதந்தியும் உலவுகிறது. ஏதோ 'டாஸ்மாக்' என்கிற சேவை அமைப்பினை முதன்முதலாக மூத்த திம்மிதான் அமைத்ததைப் போல குடிகார வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களது வாக்கினை கவரும் அடாத செயலிலும் திம்மிக்கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் பெயரில் சரக்கு விற்கமுடியும் என்கிற பேருண்மையை அண்ட சராசரங்களுக்கும் முதன்முதலாக உணர்த்தியவர் அம்மா. தங்கத்தாரகையின் ஆட்சியில்தான் தமிழகம் வளமாக, பசுமையாக இருந்தது என்பதை குறிக்கும் பொருட்டு, டாஸ்மாக் போர்டுகளை பச்சை வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே அம்மாதான் என்பதை தமிழக குடிகார வாக்காளர்கள் அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள். அந்த டாஸ்மாக்குக்கு சரக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, 'மிடாஸ்' தொழிற்சாலையை உருவாக்கியவரும் அம்மாதான்.

'குடி'யரசு என்கிற உயர்ந்த சித்தாந்தம் அடிப்படையில் பார்க்கப்போனாலும் எந்த திம்மியை விடவும், புரட்சித்தலைவி அம்மா தலைசிறந்தவர் என்பதை நாடு மறக்காது. நாட்டு மக்கள் நன்றி மறக்கவும் கூடாது. காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த தமிழன், நிம்மதியாக குவார்ட்டர் வாங்கி சரக்கு அடிக்கக்கூடிய நிலைமை இன்று தமிழகத்தில் நிலவுகிறதென்றால், நாமெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டவர் உலகம் போற்றும் உத்தம அம்மா புரட்சித்தலைவி டாக்டர் தங்கத்தாரகை அவர்கள்தான். எனவே 'குடி'யாட்சி நீடிக்க, குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம். அம்மாவின் சின்னம் இரட்டை இலை.

குடியுயர அம்மா வரவேண்டும், அம்மா உயர நாடுயரும். அம்மா வாழ்க. திம்மி வீழ்க.

ஐஸ்வர்யா ராயை வெளுப்பாக்கல்


சமீபத்திய Elle சஞ்சிகையின் அட்டையில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் படம் வெளியாகியிருக்கிறது.  இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். ஐஸ்வர்யா வழமையாக இருப்பதைவிட வெளிறிக் காணப்படுகிறார். தொடர்ச்சியாக வெளுப்பு == அழகு என்று புகட்டிவரும் நம் ஊடகங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் அழகுகூட போதவில்லை போலிருக்கிறது.

Lightening Aishwarya Rai Bachchan on the Cover of Elle

Deeb K. and YetAnotherGirl pointed out another example of a woman apparently having her skin lightened on the cover of a magazine. The December 2010 issue of Elle features Aishwarya Rai Bachchan, a major star in the Indian film industry who has also been a spokesperson for L’Oreal and appeared on the “Most Beautiful Women in the World” lists of various magazines. Here’s the cover, with a very pale Bachchan:

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

சென்னை : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள்.மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.

கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில், இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒற்றுமையாக இருந்து, அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து, உற்சாகமூட்டுகிற முறையில் பொறுப்புடன் விளையாடி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு தருகிற வாழ்த்து.இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

உலகக்கிண்ணத்தை வெல்ல இலங்கைக்கு சந்தர்ப்பம்!

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றபெற்று இறுதிப்போட்டிக்கான தகுதியைபெற்றது. முதலில் துடுப்பொடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளது.

218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக டில்ஷான் 73 ஓட்டங்களையும் சங்க்க்கார 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சௌத்தி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

மட்டைபந்து [cricket] மானங்கெட்டவர்களின் விளையாட்டு.

 by teavadai
மட்டைபந்து உலககோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாளை நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கும் பாகிசுதானுக்கும் இடையிலான அரையிறுதி போட்டி பற்றி கடந்த நான்கைந்து நாட்களாக ஊடகங்கள் பரபரப்பூட்டி வருகின்றன.காதை பிளக்கும் இவர்களது கூச்சல்களுக்கு இடையே மட்டைபந்து குறித்து இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாக்கியுள்ள பிரமைகளை களைந்து அதன் கோரமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியிருக்கிறது.
கல்வி,மருத்துவம் என எதையும் விட்டு வைக்காத வணிகமயமாக்கம் விளையாட்டை மட்டும் விட்டு வைக்குமா.இந்திய துணைக்கண்டத்தில்  கடந்த சில பத்தாண்டுகளாக ஆளும் வர்க்க மேல்சாதி கும்பல் திட்டமிட்டு திணித்துள்ள மட்டைபந்து மீதான காதலை தங்கள் வணிக நோக்கங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்தி தங்கள் உற்பத்தி பொருட்களை மக்கள் தலையில் கட்டி வருகின்றனர்.அதனால்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக  எண்ணிப்பார்க்கவே மலைப்பூட்டும் அளவிற்கு கோடிகள் கொட்டப்படுகின்றன. இப்படி கோடிகளில் புரள்வதால்தான் ஆட்டத்தை நேரில் பார்க்க சில நூறு ரூபாய்களுடன் வரும் ரசிகர்களை காவல்துறையை விட்டு நாயை அடித்து விரட்டுவது போல அடித்து விரட்டுகிறார்கள் ”பெருமாந்தர் விளையாட்டு”நிர்வாகிகள்.
அடிமைத்தனத்தை நேசிப்பதே மட்டைப்பந்து விளையாடுவது.
 இங்கிலாந்தில் தோன்றிய மட்டைபந்து விளையாட்டை பிரித்தானிய ”துரைமார்கள்” குடியேற்ற நாடுகளிலும் விளையாடி பிரபலப்படுத்தினர். வெள்ளை நாய்களுக்கு நாட்டை காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த இந்திய மன்னர்கள் என்ற பெயரில் வாழ்ந்த இழிபிறவிகள் அவர்களோடு சேர்ந்து இந்த மட்டைப்பந்தை விளையாடி வந்தனர்.பகல் பொழுதில் வெள்ளையனின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கு ஒத்தூதி விட்டு மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் குடித்து கும்மாளமிட்டும் பொழுதை கழித்த இந்த இழிபிறவிகள் தூக்கி பிடித்த விளையாட்டுதான் இந்த மட்டைப்பந்து விளையாட்டு. இவர்களோடு சேர்ந்து அன்றைய ஆட்சி இயந்திரத்தில் பங்கு வகித்த பார்ப்பன மேல்சாதியினரும் இந்த விளையாட்டை தூக்கி பிடித்து வந்தனர்.
ஆகவேதான் மட்டைப்பந்து விளையாட்டு இன்றளவும் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. இந்தியாவில் இன்றளவும் முன்னாள் மன்னர்களின் வாரிசுகளும் மேல்சாதியினருமே இந்திய அணியில் இடம்பெறுகிறார்கள்.ரஞ்சி மகராசா பெயரில்தான் ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. மன்னர் பரம்பரையை சேர்ந்த பட்டோடி நவாப்களும் கெய்க்வாடுகளும் பார்ப்பன மேல்சாதியினரான சிரிகாந்துகளும் கவாசுகர்களுமே இந்திய மட்டைபந்து விளையாட்டை கட்டுபடுத்துகின்றனர்.
ஆக வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிமைகளும் அடிமைத்தனத்தை நேசிப்பவர்களும் மட்டுமே மட்டைபந்தை விரும்பி விளையாடலாம். மான உணர்ச்சி கொண்டோர் விரும்ப முடியாது.
இந்திய துணைக்கண்டத்திற்கு ஏற்றதல்ல மட்டைப்பந்து.
மட்டைப்பந்து கண்டுபிடிக்கப்பட்ட இங்கிலாந்து ஒரு குளிர் நாடு. ஆண்டின் ஆகப்பெரும்பான்மையான நாட்களில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் வகையில் உலக உருண்டையின் ஓரத்தில் அமைந்த நாடு.குளிர் மிகுந்த அந்நாட்டில் வெயில் என்பதே அபூர்வமானது.இதமானது.அங்கு நீண்ட நேரம் வெயிலில் காய்வது உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்கிறது.ஆகவே அந்த நாட்டில் நாள்முழுவதும் வெயிலில் நின்று விளையாடும் மட்டைப்பந்து அவர்களுக்கு பொருத்தமான விளையாட்டு.அப்படியிருந்தும் அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் விரும்பி விளையாடுவதும் ரசிப்பதும் கால்பந்து விளையாட்டைத்தான்.அங்கும் கூட மட்டைப்பந்து மேட்டுக்குடி சோம்பேறிகளின் விளையாட்டாகவே இருக்கிறது.கால்பந்தே உழைக்கும் மக்களின் விளையாட்டாக இருக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத விளையாட்டு மட்டைப்பந்து.நில நடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால் ஆண்டின் பெரும்பாலான  நாட்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் வெப்பமண்டல பகுதி இது.இங்கு வெயில் என்பதே சுட்டெரிப்பது.கொடுமையானது.இந்த நாடுகளில் நாள் முழுவதும் வெயிலில் நின்று விளையாடுவது என்பது உடலுக்கு தீங்கிழைப்பதாகவே இருக்குமேயன்றி நலன் பயப்பதாக இருக்காது.இங்கு இதமான மாலை வெயிலில் ஓரிரு மணிநேரம் கால்பந்து,கூடைப்பந்து,கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதே உடல்நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இருக்கும்.
மட்டைப்பந்து ஒரு விளையாட்டே அல்ல.
விளையாட்டு மனித உடலுக்கு மூன்று நன்மைகளை தர வல்லது என்கிறார்கள் விளையாட்டுத்துறை வல்லுனர்கள்.அவை;வேகம் [speed] வலு  [strength] ஆற்றல்வலு  [stamina]. இவற்றை மட்டைபந்து ஒருக்காலும் தரமுடியாது.அதற்கான வாய்ப்பும் அந்த விளையாட்டில் இல்லை.ஒருவர் பந்து வீச,அதை ஒருவர் அடிக்க ஏனைய அனைவரும் சோம்பி நிற்கும் விளையாட்டில் என்ன நன்மை விளைந்திட முடியும்.அதிக நேரம் கொளுத்தும் வெயிலில் காய்வதால் ஆற்றல் இழப்பும் தோல் புற்று நோயும் வேண்டுமானால் ஏற்படலாம்.
ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓடியவாறு விளையாடும் கால்பந்தையும் கூடைப்பந்தையும் தாவியும் குதித்தும் இடைவிடாது வலுக்கொண்டு ஆடும் கைப்பந்தையும் [volleyball] இந்த சோம்பேறிகளின் விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.
ஆகவே ஏகாதிபத்திய வெள்ளையர்களும் அவர்களது அடிவருடிகளும் நம் மீது திணித்த இந்த மட்டைப்பந்து என்ற அவமானத்தை துடைத்தெறிவோம்.நம் மண்ணுக்கேற்ற விளையாட்டுகளை விளையாடி உடல் உரம் பெறுவோம்.
இந்த விளையாட்டை அது தோன்றிய நாட்டிலேயே இப்படி காரி உமிழ்ந்தான் அறிஞன் பெர்னாட் சா.
”பதினோரு முட்டாள்கள் மற்றொரு பதினோரு முட்டாள்களுடன் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கிறார்கள்”