
வேலூர்: நாளை மறுநாள் வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக முக்கிய தலைவர் கனிமொழி இதுவரை பிரச்சார களத்திற்கே வராமல் தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.
பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அக்கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.கதிர் ஆனந்த்
தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், திமுகவினர் பம்பரமாக சுழன்று அவரது வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். திமுகவின் இளைஞரணி செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூட, நிறைய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. ஆனால் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி களத்துக்கே வரவில்லை. திமுக தொண்டர்கள் நடுவே இதுதொடர்பாக வாத விவாதங்கள் எழுந்துள்ளன.