சனி, 3 ஆகஸ்ட், 2019

வேலூர் தொகுதிக்கு கடைசி வரை வராத கனிமொழி.. திமுகவில் நடப்பது என்ன?

களம் வராத கனிமொழி tamil.oneindia.com - veerakumaran. : பிரச்சார களத்திற்கே வராத கனிமொழி..என்ன காரணம்?-
வேலூர்: நாளை மறுநாள் வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக முக்கிய தலைவர் கனிமொழி இதுவரை பிரச்சார களத்திற்கே வராமல் தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.
பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அக்கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.கதிர் ஆனந்த்
தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், திமுகவினர் பம்பரமாக சுழன்று அவரது வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். திமுகவின் இளைஞரணி செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூட, நிறைய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. ஆனால் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி களத்துக்கே வரவில்லை. திமுக தொண்டர்கள் நடுவே இதுதொடர்பாக வாத விவாதங்கள் எழுந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் .. வெளியேறும் 2.50 லட்சம் மக்கள், குவிக்கப்படும் கூடுதல் ராணுவம்! உச்சக்கட்ட பரபரப்பில்


tamil.indianexpress.com :ஜம்மு காஷ்மீர், லே மற்றும் லடக் பகுதியில் வசிக்கும் மக்கள் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். கடந்த 30 வருடங்களில் இதுபோன்றதொரு உச்சக்கட்ட பரபரப்பான சூழ்நிலையை இப்போது...
ஜம்மு காஷ்மீரில் திடீரென முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. காஷ்மீரில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட காஷ்மீரை அதிகப்படியான பதற்றம் ஆட்கொண்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் .. 17 வயசு பெண் பாஜக எம்.எல்.ஏவால பாலியல் வன்கொடுமை... தொடர் குற்றங்கள்


Sadhu Sadhath : ஒரு கிரைம் திரில்லர் எடுக்க கதைய தேட வேண்டியதில்லை உபியில நடந்த இந்த சம்பவங்களை அப்படியே சீன் பை சீனா எடுத்தாலே போதும் கண்டிப்பா ஹிட்டாகும் .... இதே காங்கிரஸ் ஆட்சியில நடந்திருந்தா இந்த ஊடகங்கள் எவ்வளவு ஊளையிட்டிருப்பாங்க ... இப்ப பாருங்க பொத்துனாப்புல இருக்காங்க ...
எவ்வளவு கேவலமா போயிடுச்சுல நாடு ... 😢
June 2017: ஒரு 17 வயசு பொண்ணு பாஜக எம்.எல்.ஏவால உனோ நகரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுறா
June 2017 - April 2018: போலிஸ் புகாரை வாங்க மறுக்குறாங்க. பெற்றோர்கள் கோர்ட்டுக்கு போறாங்க
April 3, 2018: அப்பாவை எம்எல்ஏ ஆட்கள் அடிக்கிறாங்க
April 3, 2018: போலிஸ் அப்பாவை கைது செய்றாங்க
April 8, 2018: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்னாடி அந்த பொண்ணு தற்கொலை செய்ய முயற்சிக்கிறா
April 9, 2018: அப்பா போலிஸ் கஸ்டடியில் இருக்கும் போது கொலை செய்யப்படுறார்
April 10, 2018: போலிஸ் எம்.எல்.ஏ அடி ஆட்கள் 4 பேரை கைது செய்றாங்க. CBIகு கேஸ் மாறுது.
April 13, 2018: அலகாபாத் கோர்ட் எம்.எல்.ஏவை கைது செய்ய உத்தரவு இடுது
11 July 2018: CBI பாலியல் வன்கொடுமைக்கும், அப்பாவோட கொலைக்கும் chargesheet file செய்றாங்க.

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசுக்கே திருப்பி தாரை வார்க்கும் அதிமுக அரசு!

சாவித்திரி கண்ணன் : இவர்களை நினைத்தாலே மனம் ரணமாகிறது!
மக்களின்  அத்தியாவசிய தேவைக்கென மத்திய அரசு தந்து கொண்டிருக்கும் நிதியோ யானைப்பசிக்கு சோளப்பொறி போல மிகவும் குறைவு தான்! ஆனால், அதைக் கூட செலவழிக்க துப்பின்றி, மத்திய அரசுக்கே திருப்பி தந்துள்ளது தமிழக அரசு!
இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக் காட்டியிருக்காவிட்டால் இதுவும் வெளியே தெரிந்திருக்காது.!
விளிம்பு நிலை அடித்தள தலித் மக்களுக்கு வீடுகட்டித் தரும் திட்ட நிதி ரூ 2,355 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது.
கிராமப் பஞ்சாத்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தரப்பட்ட நிதியில் ரூ 758 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது! – குடிநீருக்கு கூட வழியின்றி தவிக்கும் கிராமங்கள் எத்தனையெத்தனை…!
சிறப்பான வகையில் செயல்படும் பஞ்சாயத்துகளை ஊக்குவிக்க வழங்க வேண்டி நிதி ரூ 195 கோடி தரப்படாமல் திருப்பி அனுப்பபட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி ரூ 248 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.

Tata 30 தொழிற்சாலைகளை மூடும் டாடா நிறுவனம்... பொருளாதார மந்த நிலையால்

tat palns to shutdown its 30 steel factoriesநக்கீரன் : இந்திய ஆட்டோமொபைல் உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30 ஸ்டீல் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் ஆர்டர்கள் குறைந்த நிலையில், மின்கட்டண உயர்வு போன்ற மற்ற காரணிகளும் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இந்த நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

போலீசுக்கு மட்டும்தான் சிசிடிவி கிடைக்குமா?” ரூட் தல பிரச்னையில் திடீர் திருப்பம்

கைதான மதன் மற்றும் ஆகாஷ்
”போலீசுக்கு மட்டும்தான் சிசிடிவி கிடைக்குமா?” ரூட் தல பிரச்னையில் திடீர் திருப்பம் tamil.news18.com:  காவல் துறைக்கு மட்டும்தான் சிசிடிவி காட்சிகள் கிடைக்குமா, தங்களுக்கும் சிசிடிவி ஆதாரம் கிடைக்கும் என நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரூட்டு தல மதனுக்கு ஜாமின் பெற்றுள்ளார் அவரது தாயார். சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைதான 3 பேரில் மதன் என்ற மாணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இல்லை என்பதற்கான சிசிடிவி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டதால் மதன் என்ற மாணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்த போது மதனை போலீசார் கைதுசெய்து கையை உடைத்ததாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம்.. சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்ற கணவன் -சித்திரவதை செய்த நண்பர்கள்

Jaunpur (UP): In a horrifying incident, a man addicted to gambling and alcohol, bet his wife after running out of money and allowed his friends to gangrape her after losing the stake. The incident took place in Jaunpur district and after the incident, the victim went to court when the police refused to take action on her complaint. Following a court order, an FIR has been registered in Jaffarabad police station in Jaunpur district.
வெப்துனியா : உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயம் வைத்து சூதாடி கணவர் தோற்றதால், அவரது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். லக்னோ:> உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது வீட்டில் குடிபோதையில் தன் இரு நண்பர்களுடன் சூதாடியுள்ளார். அப்போது தனது மனைவியை பணயம் வைத்து விளையாடியுள்ளார். பின்னர் அவர் தோற்கவே, உடன் இருந்த நண்பர்கள் அவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அப்பெண்ணின் கணவர் தடுக்க முன்வரவில்லை. இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார் அந்த பெண். பின்னர் சில மாதங்கள் கழித்து, திருந்தி விட்டதாகவும், மீண்டும் வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண் காரில் கணவருடன் வந்துள்ளார். வழியிலேயே மீண்டும் அவரது நண்பர்களை போனில் அழைத்துள்ளார். அவர்களும் காரில் ஏறி, மீண்டும் அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல்துறையிடம் புகார் கொடுக்கவே அதனை எடுக்க யாரும் முன்வரவில்லை.

10 இஸ்லாமிய அமைப்புகள் ஒரு கோடி கையெழுத்து குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு

ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்து அனுப்ப முடிவு - 10 இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்புவெப்துனியா : முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்து அனுப்ப முடிவு செய்துள்ளதாக 10 இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளனர். சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை, என்.ஐ.ஏ. சட்டம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உருது மேம்பாட்டு கழகத்தின் தலைவர் பண்ருட்டி கான், பைத்துல்மால் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜஹிருதீன் அகமது, உலமாக்கள் பேரவை சார்பில் கான் பாகவி, இஸ்லாமிய பெண்கள் திருமண கவுன்சில், ஜமத்துல் உலாமா பேரவை உள்பட 10 இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள்.

காஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது ?

மூன்றாகப் பிரிக்கப்படுகிறதா காஷ்மீர்?மின்னம்பலம் : சில வாரங்களாகவே காஷ்மீர் மாநிலத்தின் நிலவரம் பற்றி தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த மத்திய அரசு, வெகு விரைவில் காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த வருடமே மத்திய அரசு வட்டாரங்களில் இந்த பேச்சுகள் நடப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தன் உரையில் இதுபற்றி அறிவிப்பார் என்று இப்போது டெல்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.
இதன்படி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு பகுதியை ஒரு மாநிலமாகவும், புத்தமதத்தினரும், ஷியா முஸ்லிம்களும் அடர்த்தியாக வாழும் லடாக்கை தனி மாநிலமாகவும், சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரை தனி மாநிலமாகவும் பிரிக்கக் கூடும் என்று கடந்த செப்டம்பர் மாதமே காஷ்மீர் மாநில தினசரி செய்தித் தாள்களில் மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய மோடித் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அப்போது பத்திரிகைகள் எழுதின. ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் அதையடுத்த இந்திய -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் காஷ்மீர் பிரிவினை தள்ளிப்போடப்பட்டது.

காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட காரணம்..? உளவுத்துறை தகவல்...

jammu kashmir issueநக்கீரன் :  காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக வந்து உளவுத்துறை தகவல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அம்மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை, மாதா யாத்திரை என்றழைக்கப்படும் துர்க்கையம்மன் யாத்திரை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணம், மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் குறித்த உளவு துறையின் தகவல் தான் என கூறப்படுகிறது.

குழந்தைகளின் கல்வியை கொல்லும் புதிய கல்வி கொள்கை....

Uma Anand : சென்னையில் , ஒரு தனியார் பள்ளியில் தோழியின் மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.திடீரென்று,” உங்கள் குழந்தைக்கு அடிப்படை தெரியவில்லை. அதனால் ஐந்தாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பிற்கு மாற்றுகிறோம்” னு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
பதறி அடித்து பள்ளிக்கு சென்று கேட்டபோது பலருக்கும் இதுபோல் கடிதம் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
சில பெற்றோர்கள்(கிறுக்கு பிடித்த ஜன்மங்கள்) அதற்கும் சரி என்று சொல்லி இருக்கிறார்கள்
இத்தனைக்கும் அந்த குழந்தைகள் LKG ல் இருந்து அங்கேயே படிப்பவர்கள். இந்த வருடம்தான் இப்படி ஒரு நடவடிக்கை . ஏன்?
ஏனென்றால் புதிய கல்விக்கொள்கையின்படி 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு. அதனால்தான் 5 ம் வகுப்பில் இருந்து 3ம் வகுப்பிற்கு மாற்றப்படுகிறார்கள். இதைவிட கொடுமையாக ஒன்றாம் வகுப்பில் இருந்து weak students என்று ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்கு தனியாக கோச்சிங் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் பெற்றோர் சரியென்று சொன்னதும் நேற்றே ஒரு மாணவனை மூன்றாம் வகுப்பில் அமர வைத்துள்ளார்கள். மற்ற மாணவர்கள் தன்னை பார்த்து சிரிப்பதால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அந்த பையன் மெற்றோரிடம் அழுதிருக்கிறான். ஒரு சிறுவனை என்ன மாதிரியான மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குகிறீர்கள். இன்னும் மற்ற பள்ளிகளிலும் இது தொடரக்கூடும். என்ன செய்யப்போகிறோம்??
முதல் பாடம் தேவைப்படுவது பெற்றோருக்குதான். சுயபுத்தியும், குழந்தையின் மனநிலையின் மீதும் அக்கறையுடைய எந்த பெற்றோராவது இதற்கு சரியென்று சொல்லமுடியுமா? தன் மகன் எப்படி உணர்வான் என்ற அறிவு கூட இல்லாமல் எப்படி சரியென்று சொல்லமுடிந்தது அந்த பெற்றோரால்? இதற்கு பெயர்தான் தரமா? இதைத்தான் உங்கள் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறீர்களா?
சிறு வயதில் இருந்தே கடுமையான மன நெருக்கடியில் வாழும் குழந்தை நாளை என்னவாகும் ?

அனுமதியின்றி கூட்டம் மு.க.ஸ்டாலின் மீது போலீசில் புகார்

தினகரன் : ஆம்பூர்: ஆம்பூரில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அங்குள்ள  ஒரு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதுகுறித்து, ஆம்பூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுஜாதா, நேற்று முன்தினம் அங்கு சென்று திருமண மண்டபத்திற்கு சீல்’’ வைத்தார். பின்னர் கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை எனவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்
ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது,

சித்தார்த் தற்கொலைதான் செய்துகொண்டாரா? நம்ப முடியவில்லை - போலீஸ் இணை கமிஷனர்

சித்தார்த் தற்கொலைதான் செய்துகொண்டாரா? நம்ப முடியவில்லை - போலீஸ் இணை கமிஷனர்மாலைமலர் : தொழில் அதிபர் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டது நம்ப முடியவில்லை என போலீஸ் இணை கமிஷனர் தெரிவித்துள்ளார். மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சந்தீப் பட்டீல் பெங்களூரு மாநகர போலீஸ் இணை கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை மங்களூருவில் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கபே காபி டே’ அதிபரும், தொழில் அதிபரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. இதுவரையில் நடந்த விசாரணையிலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் சித்தார்த்தின் வழக்கு தற்கொலை என்று நம்பப்படுகிறது.
இன்னும் நிறைய கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக சித்தார்த் அணிந்திருந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லை. அந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லாததால், அவர் உண்மையாகவே தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்பதை உறுதிபட நம்பமுடியவில்லை. இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினா

காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக தக்கவைக்கவும், மத்திய அரசு முடிவு?

தினமலர் : ஜம்முவை மாநிலமாக்கவும் மத்திய அரசு யோசனைlt; ஸ்ரீநகர் : ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக தக்கவைக்கவும், மத்திய அரசு முடிவு செய்திருப்ப தாக, நேற்று இரவு, உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 'ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க, மத்திய அரசு ரகசிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது' என்ற வதந்தி, அந்த மாநிலத்தில், சூறாவளி போல வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், 'அமர்நாத் யாத்ரீகர்கள், எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வெளியேறுங்கள்' என, மாநில அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின், 35 A மற்றும், 370 பிரிவுகள், இதற்கான சலுகையை அளிக்கிறது. இதன்படி, அந்த மாநிலத்தில் பிறர், சொத்துகள் வாங்கவோ, வேலை பார்க்கவோ முடியாது. இதை ரத்து செய்து, நாடு முழுமைக்கும், ஒரே சீரான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என, சங் பரிவார் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார்

Maldives former vice-president arrested in Tuticorin for illegally entering india return to same countryMaldives former vice-president arrested in Tuticorin for illegally entering india return to same countrynakkheeran.in - santhosh : தமிழகத்தில் இருந்து கட்டுமானப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 11-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணல், கல், ஜல்லி போன்றவை விர்கோ 9 என்ற இழுவைக் கப்பல் மூலம் மாலத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 கப்பல் ஊழியர்களும் ஒரு தமிழரும் இருந்துள்ளனர்.
மாலத்தீவில் பொருள்களை இறக்கிய பின்னர் கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. திரும்பி வந்த அந்தக் கப்பலில் கூடுதலாக ஒரு நபர் இருந்தார்.

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு: மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

மின்னம்பலம் :  தேசிய மருத்துவ ஆணையத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் போராட்டம் வலுத்து
வருகிறது. கடந்த 31ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 2) வகுப்பைப் புறக்கணித்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. முதலில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இந்திய மருத்துவ ஆணையத்தைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக இயற்றப்படவுள்ளது.
இதன் மூலம் மருத்துவ படிப்பு முடித்த பின்னர் மருத்துவ பயிற்சி பெற நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நெக்ஸ்ட் என்ற புதிய தேர்வையும் எழுத வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்துடன் காபி டே பேச்சுவார்த்தை!

அமெரிக்க நிறுவனத்துடன் காபி டே பேச்சுவார்த்தை!மின்னம்பலம் : தனது குழுமத்துக்குச் சொந்தமான தொழில்நுட்பப் பூங்காவை விற்பனை செய்து கடனை அடைக்கும் முயற்சியில் காபி டே நிறுவனம் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய காபி தொழில் நிறுவனமான கஃபே காபி டேயின் நிறுவனர் சித்தார்த்தா கடுமையான கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார். அவரது கடன் சுமை ரூ.11,000 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், கடன் சுமையைக் குறைக்கும் முயற்சியில் காபி டே நிறுவனம் இறங்கியுள்ளது. இதன்படி, பெங்களூருவில் உள்ள காபி டே நிறுவனத்துக்குச் சொந்தமான 90 ஏக்கர் தொழில்நுட்பப் பூங்காவை அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் விற்பனை செய்ய காபி டே நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இதற்கான பேச்சுவார்த்தையை சித்தார்த்தா இருந்தபோது மேற்கொண்டிருந்த நிலையில், மைண்ட் ட்ரீ பங்கு விற்பனையில் கவனம் செலுத்தியதால் இதற்கான ஒப்பந்தம் தாமதமானது.

காஷ்மீரில் படைகள் குவிப்பு ... அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் -குலாம்நபி ஆசாத் வேண்டுகோள்


மாலைமலர் :காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: பயங்கரவாதிகள் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம். அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப  செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு  காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்தோம். ஜம்மு காஷ்மீர் குறித்து வெளியாகும் தகவல் பற்றி ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தோம் என்றார்.

தீக்குளித்த வண்டாரி தமிழ்மணியின் மனைவி ஜான்சி ராணி சிகிச்சை பயனின்றி இறந்தார் .. சீமான்தான் காரணமா ? வீடியோ ...

மணி அமுதன் மா.பா : நண்பர் வண்டாரி தமிழ் மணி அவர்களின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. அண்ணன் சீமான் அவர்களே மிக பெரிய துரோகத்தை நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்..
வினவு : நீ என்ன வேண்டுமானாலும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ... ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்து தான் கட்சியை
வளர்த்து வருகிறேன்...
Tamilmani
வண்டாரி தமிழ்மணி
.vinavu.com/author/sahkiyan   :  வண்டாரி தமிழ்மணி என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர். இவரது மனைவி ஜான்சி ராணி கடந்த ஜூலை 29-ம் தேதி (திங்கள்கிழமை) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த முயற்சியில் 63 சதவீத தீக்காயங்களுடன் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, வண்டாரி தமிழ்மணியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தனது கணவரின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஜான்சி ராணி தானே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தீக்குளித்தார். இது குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களில் வண்டாரி தமிழ்மணி முக்கியமான பிரமுகராக செயல்பட்டு வந்துள்ளார்.

கம்போடிய அங்கோர் வாட் – தங்கநிறத்தில் தகதகக்கும் டைம் மெஷின்!

Angkor TempleAngkor Watவிகடன் - நித்திஷ் : அங்கோர் வாட் என்பது நாம் படங்களில் பார்க்கும் அந்த ஒரே ஒரு கோயிலை மட்டும் குறிப்பதல்ல. சிறியதும் பெரியதுமாக 292 கோயில் அமைப்புகளை உள்ளடக்கிய பிரமாண்ட பரப்பு அது. அங்கோர் வாட் – தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணப்பட விரும்பும் மனங்கள், அங்கோர் வாட் மேல் வட்டமடிக்காமல் தாய்நாடு திரும்பாது. தங்கநிறத் தகதகப்பில் பிரமாண்டமாய், தண்ணீரின் நிழல் அலையில் தன்னடக்கமாய், இளஞ்சிவப்பு மேகப் பின்னணியில் சிணுங்கும் குழந்தையாய்… கண்கள் நிறைக்கும் கட்டடக் கலை அது! நீளும் பாம்பாய் சயனித்திருக்கும் அதன் பாதைகளில் நடக்க நடக்க காலம் நம்மை பின்னோக்கி இழுத்துச்செல்வதை உணரமுடியும். அப்பேர்ப்பட்ட அங்கோர் வாட்டில் ஒருநாள் எப்படி இருக்கும்?
அங்கோர் வாட் என்பது நாம் படங்களில் பார்க்கும் அந்த ஒரே ஒரு கோயிலை மட்டும் குறிப்பதல்ல. சிறியதும் பெரியதுமாக 292 கோயில் அமைப்புகளை உள்ளடக்கிய பிரமாண்ட பரப்பு அது. ஏறத்தாழ 160 ஹெக்டேர்களுக்கு பரந்துவிரிந்திருக்கிறது.
அத்தனை கோயில்களையும் பார்ப்பதற்கு, நீங்கள் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து மாதக்கணக்கில் தங்கினால்தான் சரிவரும். அதனால் கம்போடிய சுற்றுலாத்துறையே அங்கு வருபவர்களுக்கு மூன்று ஆப்ஷன்களைக் கொடுக்கிறது. ஒரே ஒரு நாள் பாஸ், மூன்று நாள்களுக்கான பாஸ், ஒரு வாரத்திற்கான என்ட்ரி பாஸ். ஒரு நாள் உள்ளே சுற்றிவருவதற்கான பாஸின் கட்டணம், ஒரு ஆளுக்கு 37 அமெரிக்க டாலர்கள். (கம்போடியாவில் உள்ளூர் கரன்சியைவிட டாலரே அதிகம் புழங்குகிறது). மூன்று நாள்கள் என்றால் 62 டாலர்கள். ஒரு வாரமென்றால் 72 டாலர்கள்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்... Unites states of India மாநிலங்கள் அவையில் வைகோ முழு பேச்சு வீடியோ


SP Somasundaram : இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா,
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்
நேற்று நடந்த (01.08.2019)
மாநிலங்கள் அவையில் வைகோ அவர்களின் 45 நிமிட பேச்சு....
என்னுடைய 55 ஆண்டுக் கால பொதுவாழ்க்கையில், இந்த நாள் மறக்க முடியாத நாள்!
ஆம்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் இன்று என்னுடைய கன்னி உரை ஆற்றுகின்றேன்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வாய்ப்புகள்தாம், அவருக்குக் கிடைக்கின்ற பரிசு!
புகழ்பெற்ற கவிஞர் தாமஸ் கிரே எழுதிய Elegy written in a Country churchyard என்ற கவிதையின் ஒருசில வரிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
அவர் ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைகின்றார்; ஒவ்வொரு கல்லறையாகச் சுற்றிப் பார்க்கின்றார்; அழுகின்றார், கண்ணீர் உகுக்கின்றார். அடுத்துச் சொல்லுகின்றார்:-
“இந்தக் கல்லறைக்குள் புதையுண்டு கிடக்கின்ற மனிதன் ஆலிவர் கிராம்வெல் போல அரசியல் தலைவன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த உலகத்தின் கவனத்திற்கு வராமலேயே மறைந்து போய்விட்டான்.”
அடுத்தக் கல்லறையைப் பார்த்துச் சொல்லுகின்றார்:- “இந்தக் கல்லறையில் உறங்குகின்ற மனிதன், மில்டன் போன்ற கவிஞன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.”

சித்தியும், அக்காவும், தம்பியின் காலை பிடித்துக் கொள்ள, சரத்குமார் கழுத்தை நிதானமாக அறுத்து .... கள்ள உறவு கொலை ...

Illegal Relationship with Own sisteer and Elder Brother arrested near Villupuram tamil.oneindia.com - hemavandhana.: சித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. தம்பியை கொன்ற அண்ணன் உளுந்தூர்பேட்டை: சொந்த சித்தியுடன் கள்ள உறவு.. உடன் பிறந்த தங்கச்சியை பல நாள் மிரட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. என வாழ்ந்து வந்திருக்கிறான் கொலைகார சரத்குமார் என்ற 21 வயசு இளைஞன்! அதனால்தான் 15 வயது தம்பியை காப்புக் காட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறான் கொடூரன்!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன் குஞ்சரம். இங்கு வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. கூலிவேலை செய்து வருகிறார். இவர்களது மூத்த மகன் சரத்குமார். வயசு 21 ஆகிறது. கரும்பு வெட்டும் தொழில் செய்கிறார். 2-வது மகன் சிவக்குமார். வயசு 15. அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

வைகோ : உங்களுக்கு இந்தி வேண்டுமா?இந்தியா வேண்டுமா?.. இந்தியில் கூச்சலிட்டவர்களை எச்சரித்த ...

Durai Mohanaraju : நேற்று இந்திய மருத்துவ ஆணைய மசோதா விவாதம்
மாநிலங்கள் அவையில் நடைபெற்றது.அப்போது மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரம், உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் தான் பேசினர்.அவர்களின் வாதங்களுக்குப் பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பேசத் தொடங்கினார்.
அப்போது தலைவர் வைகோ எழுந்து,
"இது மருத்துவம் குறித்த விவாதம்
அதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில் தான் சொல்ல முடியும்.எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்.." என்றார்.
அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் பேசினார்.
உடனே,வடநாட்டு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து,
"இந்தியில்தான் பேச வேண்டும்..." என்று கூச்சல் போட்டனர்.
உடனே வைகோ,
"இந்தியில் பேசக்கூடாது.உங்களுக்கு இந்தி வேண்டுமா?இந்தியா வேண்டுமா?உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்து விடும்..." என்று உரத்த குரலில் சொன்னார்.

அமர்நாத் பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் : மாநில அரசு வலியுறுத்தல்

அமர்நாத் யாத்திரைஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை  விட்டு வெளியேறுங்கள் : மாநில அரசு வலியுறுத்தல்
மாலைமலர் : அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம்.
 இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 46 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை  நிறைவு அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கனமழை மற்றும் நிலச்சரிவால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காதல் கணவரை திருமணம் ஆன 20 நாளில் உயிருடன் எரித்து கொன்ற மனைவி ... குடி .. சந்தேகம் ....

திருமணம் ஆன 20 நாளில் காதல் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவிமாலைமலர் : திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த கணவரை மனைவியே தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முருகவேணி- எரித்து கொல்லப்பட்ட சேதுபதி.< திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுவையில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் டி.வி. நகரை சேர்ந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வந்தனர். சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று மாலை சேதுபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று பரவியது.

நடிகர் விஷால் விரைவில் கைது? வருமானவரி வழக்கு ... பிணையில் வெளிவரமுடியாத அழைப்பாணை

நடிகர் விஷால் விரைவில் கைது?மின்னம்பலம் : வருமான வரித்துறை வழக்கினால் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சென்னையில் இயங்கிவருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் சம்பளத்தை வழக்கமாக அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்படும் வரிப் பிடித்தம் செய்துள்ளது. ஆனால், அவ்வாறு பிடித்தம் செய்த டிடிஎஸ் வரித்தொகையை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனரான விஷால் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை.

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை ..இன்றுமுதல் . மீறினால் ஒரு லட்சம் தண்டம்

nakkheeran.in - sundarapandiyan : தமிழகத்தில் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள்  கோரிக்கை விடுத்து வந்தன.  அரசும் இதை ஏற்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தாமல் அமல்படுத்துவதற்கான தேதியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாததால் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  அப்போது ஒரு சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் (இன்று) பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். அதையடுத்து இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

ஜூனியர் விகடனும் புலி பிரசார வியாபாரமும்

ஜூனியர் விகடனுக்கு ஒரு இரத்த கறை படிந்த வரலாறு உண்டு .
ஈழ போராட்டம் ஆரம்பித்த உடனே உலகம் முழுதும் ஈழத்தமிழர் பரவினர். இன்றைய தொடர்பு சாதனங்கள் எதுவும் அன்றிருக்கவில்லை.
ஈழத்தமிழர்களிடையே ஈழத்து செய்திகளை கலர் படங்களோடு தங்களது கவர்சிகரமான கற்பனைகளோடு பரப்பியதில் ஜூனியர் விகடனுக்கு பெருத்த வருமானம் . அதுவும் டாலர்களில் பவுண்களில் பிராங்குகளில் டினார்களில் எல்லாம் கொட்ட ஆரம்பித்தது.
விகடன் குழுமம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியதன் மர்மம் இதுதான்.
புலிகள் டெலோ ஈபிஆர் எல் எப் போன்ற சகோதர இயக்கங்கள் மீது கொலைவெறி தொடங்கியதும் . உலக தமிழர்கள் மத்தியில் ஈழப்போராட்டம் மீது ஒரு சலிப்பு வெறுப்பு விரக்தி எல்லாம் ஏறபட்டது.
இதன் காரணமாக ஜூனியர் விகடனின் வெளிநாட்டு விற்பனை அடியோடு சாய்ந்தது.
புலிகளுக்கு இந்த் சகோதர படுகொலையால் ஏற்பட்ட பின்னடைவை விட ஜூனியர் விகடனுக்கு வெளிநாட்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவு பாரதூரமானதாக ஜூனியர் விகடன் கருதியது .
இதில் இருந்து மீண்டும் புலிகளின் கலர் படங்களையும் கவர்ச்சிகரமான செய்திகளையும் விற்க வேண்டிய தேவை புலிகளை விட ஜூனியர் விகடனுக்கு ஏற்பட்டது.
யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பச்சை துரோகத்தை ஜூனியர் விகடன் செய்தது

மன்மோகன் சிங் மாநிலங்கள் அவைக்கு தெரிவாகிறார் .. ராஜஸ்தானில் இருந்து ?

தினமலர் :  புதுடில்லி : காங்., மூத்த தலைவரான மன்மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, தொடர்ந்து, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம், இந்தாண்டு, ஜூன், 14ல் முடிவுக்கு வந்தது. அசாமில் போதிய பலம் இல்லாததால், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட முடியவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தானைச் சேரந்த, பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த, மதன் லால் சைனி, ஜூன், 24ல் மரணமடைந்தார். அதையடுத்து, காலியாக உள்ள அந்த இடத்துக்கு, தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவித்துள்ளது. வரும், 26ல் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, 15ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ராஜஸ்தானில், காங்., அரசு அமைந்துள்ளதால், இந்த இடத்துக்கான தேர்தலில், அந்தக் கட்சியின் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது.

தாயுடன் உறங்கிய குழந்தை: வன்கொடுமை செய்து கொலை.. ஜார்கண்ட் டாட்டா ரயில் நிலையத்தில் ....

தாயுடன் உறங்கிய குழந்தை: வன்கொடுமை செய்து கொலை!மின்னம்பலம் : நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிகழ்கின்றன என்பதை அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன. உன்னாவ் சிறுமியை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொலை செய்ய முயன்றது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ரயில் நிலையத்தில் 2ஆம் நடைமேடையில் தனது தாயுடன் ஜூலை 25ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மாயமாகியுள்ளார். இரவு முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால் ஜூலை 26ஆம் தேதி காலை குழந்தையின் தாய் ரயில்வே காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கூட்டாளி ஒருவரைச் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சவூதி பெண்கள் ஆண்களின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லலாம் .. சலுகையாம்

ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதிதினத்தந்தி : சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி" ரியாத், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பெரும் சரிவு .. களவாணித்துறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு!

சாவித்திரி கண்ணன் : : சத்தமில்லாமல் ஒரு மிகப் பெரும் சரிவு
அரங்கேறிவருகிறது..! அந்த சரிவின் விளைவு ஒரு கட்டத்தில் இந்த சமுகத்தையே சவக்குழிக்குள் தள்ளீவிடும்..!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடுகிடுவென்று குறைந்து வருகிறது. பத்தாம் வகுப்பில் இருந்து 300 மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள் என்றால், முதலாம் வகுப்பில் சேர்பவர்கள் வெறும் ஐம்பதாகத் தான் உள்ளனர்!
கடந்த இருபதாண்டுகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்துள்ளனர்.- அரசு பள்ளிகளில்! பத்தாண்டுகளுக்கு முன்பு 3000 த்திற்கு அதிகமான மாணவர்கள் படித்த ஒரு அரசு பள்ளியில் தற்போது 700 த்து சொச்சம் மாணவர்கள்! 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்த அரசு பள்ளிகளில் அறுபது,எழுபது மாணவர்கள்!
மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தாலும் தங்கள் சம்பளம் குறையப் போவதில்லை!
பள்ளிகூடமே மூடப்பட்டாலும் தாங்கள் பணியிடமாற்றம் செய்ய்யப்படுவோமேயன்றி வேலைக்கு ஒரு போதும் பாதிப்பு வராது என்ற எண்ணத்தில் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்!
எந்தெந்த பள்ளிகளில் அர்பணிப்புள்ள தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் குழாமும் அமைந்துவிடுகிறதோ, அப்படிபட்ட அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கே சவால்விடுகின்றன...!

டி.கே,சிவகுமாருக்கு விரித்த வலையில் சித்தார்த்த சிக்கி உயிரை இழந்தார். .. பாஜகவின் அரச பயங்கரவாதம்

கபே காபி டே சித்தார்த்தா சிக்குவதற்கு இதுதான் காரணம்மாலைமலர் : கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் மூத்த தலைவரான சிவக்குமார் வீட்டில் நடந்த சோதனையே சித்தார்த்தாவின் சிக்கல்களுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது. பெங்களூர்: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் மூத்த தலைவரான சிவக்குமார் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இ
து தவிர அவர் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களில் வரி ஏய்ப்பு முறைகேடுகள் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரை அவர் தனது பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தார். சோனியாவின் உதவியாளர் அகமதுபடேலை குஜராத் மாநிலத்தில் இருந்து மேல்-சபைக்கு தேர்வு செய்வதற்காக அந்த 44 எம்.எல்.ஏ.க்களையும் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தார்.
அதனால்தான் குஜராத்தில் இருந்து அகமதுபடேல் வெற்றி பெற முடிந்தது. இதனால் கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பா.ஜனதா தலைவர்கள் சிவக்குமாரின் பின்னணி பற்றி தீவிரமாக விசாரித்தனர். அதன் பிறகுதான் சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். சிவக்குமாரின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிலவற்றில் காபிடே அதிபர் சித்தார்த்துக்கும் சிவக்குமாருக்கும் இடையே நடந்த பணபரிமாற்றம் பற்றி தெரிய வந்தது.

Electic Car ..? உங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம்.

Alwar Narayanan : உங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம்.
இருசக்கர வாகனத்தின் பதிவு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 2000 ஆகிறது. வேன், பள்ளிப் பேருந்து, சரக்கு லாரி முதலியவற்றின் கட்டணம் ரூபாய் 1500 லிருந்து 40 ஆயிரமாக உயருகிறது. வருங்காலத்தில் பெட்ரோல் விலை குறையப்போவதில்லை. மேலும் கூடும். ஏற்கனவே பஸ் மற்றும் இரயில் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. "நாங்கள் வந்தால் டோல்கிட்டே இருக்காது" என்று சொல்லிவிட்டு தற்போது சுங்கவரியை மேலும்அதிகமாக உயர்த்திவிட்டார்கள்.
இவை எல்லாமே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகர்பொருள் விலை ஏற்றத்தில் பிரதிபலிக்க போகிறது. அதாவது காய்கறி, பால், பழம், மற்றும் வீட்டு விலை, போக்குவரத்து எல்லாமே உயரும்.
இந்த அடாவடியான நடவடிக்கைகள் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை முழுக்க முடக்குவதற்கு செய்யப்படும் உத்தி என அரசாங்கம் சொல்கிறது. இப்படிச் செய்தால் நீங்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள் என்று அரசு நம்புகிறது. அனேகமாக சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை நீங்களாகத்தான் இருக்க போகிறீர்கள்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

காபி டே ..சித்தார்த் .. பயணங்களில் சாதாரண பயணிகளோடு எளிமையாக ....

பயணங்களின் போது உயர்ந்த வகுப்பு பயணத்தை மேற்கொள்ளாமல், சாதாரண பயணிகளுடன் பயணம் செய்வதையே சித்தார்த்தா விரும்புபவர். காபி டே நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றால் வரிசையில் நின்று பரிசுப் பொருளைக் கொடுத்து வாழ்த்தி விட்டு வருவாராம். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
மின்னம்பலம் : கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அவரது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததின்படி, பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சித்தார்த்தாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வருமான வரிச் சோதனைகள் அவரது நண்பரும் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.எஸ்.சிவக்குமார் மீதான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சித்தார்த்தாவின் மாமாவும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா வாயிலாக சித்தார்த்தாவுக்கு சிவக்குமாரின் நட்பு கிடைத்துள்ளது. இவ்விருவரும் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதும், வரி செலுத்தாமல் இருந்ததும் வருமான வரித் துறையின் சோதனைகளில் தெரியவந்தது.
தான் பெற்ற கடனை விடப் பல மடங்கு சொத்து சேர்த்துள்ள சித்தார்த்தா, சொத்துக்களைக் கொண்டு கடனை அடைக்காமல் தற்கொலை செய்துகொண்டிருப்பது அவரது குடும்பத்தாரிடமும் தொழில் துறையினரிடமும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தாலும், மிக எளிய மனிதராகவே சித்தார்த்தா வாழ்ந்து வந்ததாக அவருடன் பழகியவர்களும் ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களுடன் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை

தமிழக எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!மின்னம்பலம் : புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (ஆகஸ்ட் 1 ) ஆலோசனை நடத்தினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம் கடந்த மே 31ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல அம்சங்களை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. புதிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து திமுக குழு தயாரித்த அறிக்கையை அக்கட்சியின் எம்.பி.க்கள் கடந்த 30ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பித்தனர். அதில் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இதுதொடர்பாக அறிக்கை அளித்துள்ளன.

கோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி பூபதி தற்கொலை!

கோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை!மின்னம்பலம் : சங்ககிரி கொங்கணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி, கோவை இந்தியன் வங்கி முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் 2015ஆம் ஆண்டு தனது நண்பர்கள் இருவருடன் கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில், பால் பண்ணை வைப்பதற்காகக் கடன் வாங்கியுள்ளார். பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கடனுக்காகத் தனது சொத்து பத்திரங்கள் சிலவற்றை பூபதி வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் பெற்ற கடனை மட்டும் திருப்பி செலுத்தி பத்திரத்தை திரும்பப் பெறுவதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் பூபதி, வங்கி மேலாளருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மூவரும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே பத்திரங்கள் திரும்பி ஒப்படைக்கப்படும் என்று வங்கி தரப்பில் பூபதிக்கு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

கோவை சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு..உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

tamilnadu coimbatore child issue delhi supreme court judgmenttamilnadu coimbatore child issue delhi supreme court judgmentnakkheeran.in - nagendran : முஸ்கின், ரித்திக் என்ற இந்த 2 பெயர்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த பிஞ்சுக் குழந்தைகள் பி.ஏ.பி வாய்க்காலில் சடலமாக மிதந்து கிடந்த காட்சியை கண்டு, அப்போது தமிழகமே கண்ணீர் சிந்தியது. கோவை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் மகள் தான் முஸ்கின் (வயது11), அவளது தம்பி ரித்திக்(வயது8) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அக்.29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அவர்களை வேனில் கடத்திச் சென்ற மோகனகிருஷ்ணனும், அவனது கூட்டாளியான மனோகரனும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தனர். சிறுவன் ரித்திக்கின் வாயில் சாணிப்பொடி கலந்த தண்ணீரை ஊற்றி கொலை செய்துள்ளனர். 

பெரம்பலூர் மாணவி தற்கொலை.. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ...

nnnakkheeran.in - sekar ; மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி வரை  காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் பெரம்பலூரில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடந்துனர் (TNSTC) செல்வராஜ், இவரது மகள் கீர்த்தனா (19). இவர் கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்.  மருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி கீர்த்தனா,  அதற்காக சென்னையில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க 75 லட்சத்தை பறிகொடுத்த ராமநாதபுரம் தொழில் அதிபர்

தவணை நுழைவு கட்டணம் tamil.oneindia.com - hemavandhana : ராமநாதபுரம்: நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு, தொழிலதிபரின் மகன் ஒருவர் சுமார் 75 லட்சம் ரூபாயை ஒரு மோசடி கும்பலிடம் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனுக்கு வயசு 27. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்டர்நெட்டில் இருந்த ஒரு அட்ரஸ்-க்குள் போனார்.
நடுநடுவே ஆபாசமான போட்டோக்கள் வந்தன. அதை டெலிட் செய்யலாம் என்று போனால் இன்னொரு வெப்சைட் திறந்தது. அதில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் கொட்டி கிடந்தன. "யாருக்கு ஆசையோ, இந்த நடிகைகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று ஒரு குறிப்பு இருந்தது. உடனே தொழில் அதிபர் மகனுக்கு சபலம் வந்து, தன்னுடைய செல்போன் நம்பர் முதல் எல்லா விவரத்தையும் அதில் போட்டுவிட்டார்.

தூத்துக்குடி கடலில் அடைக்கலம் கேட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்-

tamiloneindia -athivanan Maran   ;  தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் இந்திய சரக்கு கப்பலில் தஞ்சமடைந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.
படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என அச்சப்படுகிறேன் என கதறி இருக்கிறார். முன்னாள் துணை அதிபர் என கூறியதால் செய்வதறியாது அவரை கப்பலில் அழைத்துக் கொண்டு இந்தியா நோக்கி பயணப்பட்டனர். மீண்டும் மாலத்தீவு சென்றால் சட்ட சிக்கல்கள் வரலாம் என்பதால் இந்தியா நோக்கி வந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தை அடைவதற்கு முன்னதாக சரக்கு கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தமது நிறுவன உரிமையாளருக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடலோர காவல் படை மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு முன்னதாக கப்பலில் ஏறி சோதனை நடத்தி அகமது அதிப்பை கைது செய்திருக்கின்றனர்

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் ஸ்டாலினை சிக்க வைக்க திட்டம்?

dmk
நக்கீரன் : நெல்லை தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை விவகாரத்தில் தி.மு.க. மேலிடத்தைக் குறிவைத்து போலீஸ் விசாரணை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியும் அவர் கணவர் முருகசங்கரனும் பணிப்பெண் மாரியம்மாளும் போன 23-ந் தேதி அவர்கள் வீட்டிலேயே வைத்துக் கொடூரமாகக் கொல்லப் பட்டிருந்தாங்க. இதுதொடர்பாக நமது நக்கீரன் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் பெண் பிரமுகர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்குன்னு குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் இந்தக் கொலைகளோடு தொடர்பில்லைன்னு தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மறுத்துவந்த நிலையில், அவர் மகன் கார்த்திகேயனை கைது செய்திருக்கு போலீஸ்.

காகிதமற்ற மக்களவையை உருவாக்குவோம்: சபாநாயகர் நம்பிக்கை .... ஹேக் செய்ய வசதியாக இருக்கும்ல ?

சபாநாயகர் ஓம் பிர்லா காகிதமற்ற மக்களவையை உருவாக்குவோம்: சபாநாயகர் நம்பிக்கைமாலைமலர் : புதுடெல்லி: பாரளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெறும் விவாதம், வாக்கெடுப்பு போன்ற அனைத்துவிதமான செயல்பாடுகளும் காகிதத்தில் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின் போது அவையில் காகித பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: மக்களவையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் காகிதத்தாள் பிரதி பயன்படுத்தப்படுகிறது. உறுப்பினர் ஏதேனும் கேள்வி ஏழுப்ப வேண்டுமானாலும், வாக்கெடுப்பு நடைபெறும் போதும் என எல்லாவிதமான செயல்களும் காகிதத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும், அவை நடவடிக்கைகள் அனைத்தும் காகித வடிவில் கோப்புகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கில் அரசுக்கு செலவு ஏற்படுவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் மரங்களும் வெட்டப்படுகிறது.

சித்தார்த்தா தற்கொலை: ரெய்டு பின்னணி!


சித்தார்த்தா தற்கொலை: ரெய்டு பின்னணி!  மின்னம்பலம் : கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மீதான வருமான வரி நடவடிக்கைகளால்தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே நிறுவனருமான சித்தார்த்தா வருமான வரிச் சோதனை வளையத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. வருமான வரித் துறை கொடுத்த துன்புறுத்தல்கள், கடன் வழங்கியவர்களிடமிருந்து நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மனமுடைந்த சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார். ஜூலை 31ஆம் தேதி அவரது சொந்த ஊரான சிக்கமகளூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சித்தார்த்தாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தொழில் துறையினரும் அரசு அமைப்புகள் தொழில் துறையினரைப் பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சித்தார்த்தாவின் மரணத்தில் தீவிர விசாரணை தேவை எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா CM ஜெகனுக்கு மீண்டும் கிடைத்த ரூ. 746 கோடி மதிப்பு சொத்து

தீக்கதிர், : புதுதில்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரின் மனைவி பாரதி ரெட்டியின் சொத்துகளை விடுவிக்க, மத்திய பணப்பரிவர்த் தனைக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ியின் போது, சிபிஐ வழக்கு பதிவுசெய்தது.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் ரூ. 152 கோடி மதிப்பிலான சுண்ணாம்புக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்றும் வழக்கில் குறிப்பிட்டிருந்தது. சிபிஐ பதிவுசெய்த இந்தஎப்ஐஆர்-ஐ அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
“சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மூலமாக ரூ. 404கோடியே 70 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ. 344 கோடியே 30 லட்சம்மதிப்பிலான அசையா சொத்துகள் என ரூ. 749 கோடியே 10 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது” என்றுஅமலாக்கத்துறை தனதுகுற்றச்சாட்டில் குறிப்பிடப் பட்டு இருந்தது.இந்நிலையில், “சரியான முறையில்தான் பணப்பரிவர்த்தனை நடந்துள் ளது” என்றும் கூறி முடக்கப் பட்ட ரூ. 746 கோடி சொத்துக்களை விடுவித்து, பணப்பரிவர்த்தனை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Cafe Cofeee day சித்தார்த்தா.. மோசமானவர்கள் எல்லாம் நல்லா இருக்காங்களே!

செல்வாக்கு tamil.oneindia.com - hemavandhana :  சென்னை: சித்தார்த்தா ரொம்பவும் நேர்மையானவர் போல.. அதனாலதான் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டார்..
இவரது இந்த முடிவு பல்வேறு விதமான தாக்கங்களை சிறுதொழில் செய்யும் வணிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு போயுள்ளது.
சித்தார்த்தாவுக்கு என்ன குறைச்சல்.. நல்ல வசதி, நல்ல சொத்து, மிக திறமையானவர், கடினமான உழைப்பாளி.. தன் குடும்பத் தொழிலான, காபி கொட்டை ஏற்றுமதியைதான் இவரும் கையில் எடுத்தார் பிசினஸ் என்று எடுத்து கொண்டால் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், கடன்கள் வருவது இயல்பு என்பதை இத்தனை வருடங்களாகவே உச்சத்தில் இருந்த சித்தார்த்தா புரிந்து கொள்ளாதது ஆச்சரியம்தான். ஆரம்பத்தில் இருந்தே லாபத்தையும், தொழில் பெருக்கத்தையும் பார்த்தவருக்கு சிறு சறுக்கலை ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு மனோபாவம் இருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.
உயிரோடு இருந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தர தவறி விட்டதும் தெரிகிறது. கடன் வந்துவிட்டால், அதை அடைக்க நிறைய முயற்சி செய்திருக்கலாம், அல்லது இருக்கிற சொத்தை விற்று கடனை அடைத்திருக்கலாம். அம்பானிக்கும்தான் நஷ்டம் என்று சொன்னார்கள்.. மீளவில்லையா? அல்லது கோடி கோடியாய் கடனை வாங்கி கொண்டு ஒருத்தர் லண்டனில் சுகபோக வாழ்வு வாழவில்லையா?