சனி, 26 டிசம்பர், 2015

கோவில்களில் தாலிபான் பாணி உடைகட்டுப்பாடு ..RSS அஜெண்டாக்களை தமிழக அறநிலைய துறை நிறைவேற்ற துடிக்கிற.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆனால் தமிழகத்தில் உள்ள சில ஆண் பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒரு தரப்பினருக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரை ட்ரவுசர், டிராக் பேன்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ்>அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

யமுனா விரைவு சாலை விற்பனை: 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனால் ஜே.பி., குழுமம்.....நொய்டா - ஆக்ராவை இணைக்கும்

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில், கிரேட்டர் நொய்டாவையும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், 2012 ஆக., 9ல், யமுனா விரைவு நெடுஞ்சாலையை, வாகனப் போக்குவரத்திற்கு திறந்து வைத்தார்.
ஆக்ராவையும் இணைக்கும், 165 கி.மீ., நீளமுள்ள, 'யமுனா விரைவு நெடுஞ்சாலை'யை, விற்பனை செய்யப் போவதாக, அதை அமைத்த ஜே.பி., குழுமம் அறிவித்துள்ளது.டில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும், அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்தை, 2003ல், உ.பி.,யின் அப்போதைய முதல்வராக இருந்த மாயாவதி அறிவித்தார். பின், ஆட்சி மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2007ல், மாயாவதி மீண்டும் உ.பி., முதல்வரானதும், 'யமுனா விரைவு நெடுஞ்சாலை' என்ற பெயரில், இத்திட்டம் உயிர் பெற்றது.

காரமாக facebook இல் பதிலடி...ரசிகரின் ஆபாச பதிவுக்கு நடிகை பூஜா ....

சென்னை: சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பூஜா பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார்.

குட்டி ரேவதி :அது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்! ..பெண்கள்மீது அமிலம் வீசும்....வார்த்தைகளால் அமிலம் ..

பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அது வெறுமனே ஒரு பாடலில் அல்லது
சினிமாவில் 'கெட்ட வார்த்தையைப் 'பயன்படுத்துதல் குறித்த உரிமை, கருத்துரிமை என்பதாகத் திசைதிருப்பப்படுகிறது. அநியாயம். அந்த 'பீப்'பாடல் ஒரு hate song. பெண் வெறுப்புப்பாடல். இலக்கியம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் பெண் வெறுப்பின் சீழ் தான் இப்படி அதிகாரத்துடன், மறைமுக இச்சையுடன், நமுட்டுச்சிரிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் கலையாகவும் கலையுரிமையுடனும் ஒப்பிட்டு முழக்கமிடுவது என்பது செய்வதையும் செய்துவிட்டு அப்படிச் செய்யவில்லை என்பதான தப்பித்தல் தந்திரம் தான். இன்றைய சமூக ஆண்களிடம், தாய்ப்பாசம், அண்ணன் - தங்கைப்பாசம், தோழி, காதலியர் என்பதெல்லாம் அர்த்தமற்ற, உணர்வுகளற்ற வெற்று வார்த்தைகள். எல்லாமே Use & Throw.
காலங்காலமாக, கலை ஊடகங்களால் விதைக்கப்பட்டுவந்த 'ஆணாதிக்க' (அரதப்பழசான வார்த்தை தான்) பழக்கங்கள் தாம் இன்று அனிருத்தாகவும் சிம்புவாகவும் வெடித்திருக்கிறது. பெண்கள் மீது குருட்டாம்போக்கில் அமிலத்தை வீசும் ஆண்களாய் இன்றைய தலைமுறை மாறிவிட்டதற்கு, அதிலும் எந்தக்குற்றவுணர்வுமில்லாமல் பொதுவெளியில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாக்கித் தந்ததற்கு, நம்முன் உள்ள எல்லா ஊடகங்களும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி குமரி அனந்தன் தொடங்கிய நடைபயணத்தில் கலந்துகொண்ட

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி குமரி அனந்தன் தொடங்கிய நடைபயணத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் | படம் உதவி: ஸ்டாலின் முகநூல் பக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.
*அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் சென்னையில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் குமரிஅனந்தனுடன் 30 பேர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

உணர்ச்சி வசப்பட்ட நடிகை ரோஜா தகாத வார்த்தைகளை ஏன் பேசினார்? சந்திரபாபுவின் கந்து வட்டி கொடுமைதான் காரணமாம் ...


நகரி,டிச.25 (டி.என்.எஸ்) முதல்வர் சந்திர பாபுநாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி, நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜாவை சபாநாயகர் கோடல சிவபிரசாத் சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு நீக்கம் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சத்திய நாராயணாவிடம் நோட்டீசு வழங்கினார்

உலக அழகியாக இராக் பெண் தெரிவு 40 வருடங்களின் பின்பு.....


பாக்தாத்,டிச.25 (டி.என்.எஸ்) ஈராக்கில் சமீபத்தில் நடந்த அழகிப் போட்டியில்
ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்றார். இந்த நிலையில், அவருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது இயக்கத்தில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இல்லையெனில் அவரை கடத்திவிடுவோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அழகி ஷாய்மா கூறுகையில், “ஈராக் பெண்ணாகிய நான் எனது சமூகத்தில்தான் வாழ்கிறேன். ஆண்கள் போன்று பெண்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என நம்புகிறேன்.

மோடி லாட்டரி..நைஜீரியாவோடு போட்டி ...The Lord Of The Lottery Rings

வாழ்த்துக்கள், முகநூல் அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் நீங்கள் 4,000,000
பிரிட்டன் பவுண்டுகளை வென்றுள்ளீர்கள்” என்றது அந்த மின்னஞ்சல். அந்த தொகையைப் பெற என்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணமாக 150 பிரிட்டன் பவுண்டுகளையும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சில்லரை வேலை மட்டும் பாக்கி. அதைச் செய்ய முடியும் என்று தான் நினைக்கிறேன்.
இணைய லாட்டரிகளை நான் எப்போதும் விரும்புவேன். ஏனென்றால் நீங்கள் அதில் எப்போதும் கெலித்துக் கொண்டே இருக்கலாம். எனது மின்னஞ்சல் நிரம்பி வழிந்து, மாதா மாதம் அதிக சேமிப்பிடத்திற்காக கூகிள் நிறுவனத்திற்கு 2 டாலர் கொடுக்குமளவிற்கு நான் இணைய லாட்டரிகளில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது
பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.
இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்லவிருப்பதாக தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி இந்தியா திரும்பும் முன்பு பாகிஸ்தான் செல்கிறார். வரலாறு முக்கியம் அமைச்சரே ....அதைவிட விளம்பரம் ரொம்ப முக்கியம் அமைச்சரே

ட்ராபிக் ராமசாமி மீது தமிழக அரசு வழக்கு....வெள்ளம் செயற்கை பேரழிவுதான் ! நான் உண்மையைத்தான் சொல்வேன் டிராபிக் ராமசாமி முழக்கம்

Govt can sue me, I am not scared of going to jail', Traffic Ramaswamy declares -
www.thenewsminute.com
He is 83 years old and has filed over 400 public interest litigation in the past two decades. He says 'he is just 83 years old' and seems unperturbed by the latest complaint filed against him. This time, it is CM Jayalalithaa who has filed a defamation case against him for allegedly spreading messages about distribution of flood relief material on WhatsApp. 
Traffic Ramaswamy says he will not withdraw or apologise for his WhatsApp audio. "I have spoken only the truth. This was not a natural disaster, it was a man made one. The state cannot get away with claiming that the rains alone caused the flooding. The DMK and AIADMK have done a lot to bring the state to this condition, especially the AIADMK," he says.

சென்னை வெள்ளத்தில் 5000 கிளிகளுக்கு புகலிடம் தந்த ஜோசெப் சேகர்....பறவை மனிதர்


சென்னை: பறவை மனிதன் என்று இவருக்குச் செல்லப் பெயர் உண்டு. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது இவரது வீடு பறவைகளுக்கான நிவாரண முகாமாக மாறிப் போயிருந்தது.
ஜோசப் சேகரின் வீடு முழுக்க கிளிகள் குவிந்திருக்க அந்தப் பகுதியே கீச் கீச் சத்தத்தால் திக்குமுக்காடிப் போனது. வழக்கமாகவே இவரது வீட்டுக்கு ஏகப்பட்ட கிளிகள் தினசரி வருமாம். இரை உண்ணவும், ஓய்வெடுக்கவும் ஜோசப் சேகரின் வீடுதான் இந்த கிளிகளுக்கு விருப்ப இடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சமீபத்திய மழை வெள்ளம் பல ஆயிரம் கிளிகளை ஜோசப் சேகரின் வீடு தேடி வர வைத்து விட்டது. இதுகுறித்து தி நியூமிஸ்மினிட் போட்டுள்ள ஒரு சுவாரஸ்ய செய்தி
10 நாட்கள் தஞ்சமடைந்த கிளிகள் "வெள்ளம் பாதித்த அந்த பத்து நாட்களும் எனது வீடு ஒரு நிவாரண முகாம் போலவே இருந்தது. காலையில் வந்தால் மாலை வரை எனது வீட்டிலேயே இருக்கும் இந்தக் கிளிகள்

ஜெர்மன் விசாவுக்காக சென்னையில் குவியும் சிரியர்கள்...அரபு நாடுகள் கதவுகளை மூடிவிட்டன ...

இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன.   சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.
சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.
சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் இவர்களில் யாரும் தற்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை.
இந்த நிலையில், அவர்களுக்காக மொழிபெயர்ப்பாளராக உதவிவரும் சிரியாவைச் சேர்ந்த அகமது ஹுசைன் என்பவர் பிபிசியிடம் பேசினார்.

வியாழன், 24 டிசம்பர், 2015

சிம்புவின் அம்மா உஷா கண்ணீர்....தமிழ்நாடே வேண்டாம் எங்காவது போகிறோம்


சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் 17 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசி இருந்தார். அதில், சிம்புவின் பாடல் தமிழக பெண்களின் மனதை நெருடி இருந்தால், அந்த களங்கத்தை கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த நிலையில் சிம்புவின் தாய் உஷா, கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இன்று வாட்ஸ்–அப்பில் வெளியானது. அதில் உஷா கூறியிருப்பதாவது:– என் மகன் செய்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. நான் ஒப்படைக்கிறேன் என் பையனை. அப்படி என்ன தப்பு செய்து விட்டார் சிலம்பரசன். 24 மணி நேரமும் கேமராவோட வீட்டு வாசலில் உட்கார்ந்தா எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கு. எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. வீட்டுக்கு வெளியில் வந்து கோலம்கூட போட முடியவில்லை.  பணக்கார வீடுகளில்  பிள்ளைகளை  தறுதலைகளாக வளர்த்துவிட்டு  பின்பு சமுகத்தை குற்றம் சொல்லும் பெற்றோர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள்தான்

உபியில் அரசு பஸ்சை ஓட்டிய குரங்கு..பயணிகள் ஓட்டம்..

பரேலி :உ.பி.,யில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை இயக்கிய சுட்டி அப்போது, அங்கு வந்தஒரு சுட்டிக் குரங்கு, டிரைவர் இருக்கையில் அமர்ந்தது. பின், இன்ஜினில் இருந்த சாவியை திருகியது. இன்ஜின் இயங்கிய சத்தம் கேட்டதும், பஸ்சில் இருந்த சில பயணிகளும், குட்டித் துாக்கம் போட்ட டிரைவரும் அலறினர். டிரைவர் வேகமாக ஓடிவந்து, குரங்கை விரட்ட முயன்றார்.
குரங்கு, பயணிகளை அலற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்ட பாஜக MP கீர்த்தி ஆசாத்துக்கு சுப்பிரமணியம் சுவாமி பகிரங்க ஆதரவு

டெல்லி: கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக மத்திய அமைச்சர், ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. BJP shouldn't lose an honest person like Kirti Azad: Subramanian Swamy ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.

வைகோவின் : எங்களைப் பார்த்து கருணாநிதிக்கு கலக்கம்..நாமளும் வடிவேலுவுக்கு வசனம் எழுதுவோம்ல?

சென்னை: நாங்கள் விஜயகாந்தை அழைத்தது கருணாநிதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் . விஜயகாந்தை நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் அழைக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 6 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொள்கை திட்ட கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத பலமிக்க கவசதன்மை மிக்க நம்பிக்கைதன்மை கொண்டது. 65 சதவீத இளைய தலைமுறையின் கருத்து தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார். Karunanidhi is afraid of us, says Vaiko வெள்ளச்சேதத்தின் போது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது.

பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் மோடி மீது கடும் குற்றச்சாட்டு: கிரிக்கெட் சங்க ஊழல் சிபிஐ ஏன் சோதனை நடத்தவில்லை?

நான் செய்த தவறு என்ன என்பதை பாஜகவும், மோடியும் விளக்க வேண்டும்:
கீர்த்தி ஆசாத் எந்த காரணமும் தெரிவிக்காமல் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது
குற்றச்சாட்டு கூறிய பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆசாத்,
ஊழலுக்கு எதிராக பேசியதால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையா. நான் செய்த தவறு என்ன என்பதை பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விளக்க வேண்டும். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகாரை எழுப்புவது கட்சிக்கு எதிரான நடவடிக்கை இல்லை. நான் யாருடைய முதுகிலும் குத்த விரும்பவில்லை. டெல்லி முதல் அமைச்சர் அலுவலத்தில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ, டெல்லி கிரிக்கெட் சங்க அலுவலத்தில் ஏன் அத்தகைய சோதனையை நடத்தவில்லை.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம்..மோடி புடின் சந்திப்பு

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றை அளித்துள்ளார். ரஷ்யப் பிரதமருடனான பேச்சுக்கள் 'பலனுள்ளவையாக' இருந்ததாக நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம் பயணிகள் தடுக்கப்படுகின்றனர்? லண்டனில் முஸ்லிம் குடும்பம்...

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார்.
இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
வால்தாம்ஸ்டோ தொகுதியில் வசிக்கும் குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் அமெரிக்காவின் டிஸ்னி லாண்டில் தங்களது விடுமுறையைக் கழிக்க திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் டிசம்பர் 15ஆம் தேதியன்று அவர்களது பயணம் கடைசி நிமிடம் இடைநிறுத்தப்பட்டது.

தமிழுக்கு அப்படி என்னதான் பெருமை? நெசமாலுமே ஏதாவது கீதா?




அனுஷ்காவுக்கு இஞ்சி இடுப்பழகியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை....அழகாகவே..

கமல் படத்தின் மூலம் பாப்புலர் ஆன ‘இஞ்சி இடுப்பழகி’ வார்த்தை தங்கள் படத்தையும் பாப்புலராக்கும் என்று டைட்டில் வைத்ததாக இயக்குனரே சொல்லியிருந்தாலும், அனுஷ்காவின் இடுப்பை பார்த்த பிறகு தான் இந்த டைட்டிலை வைத்தாரோ எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 70 கிலோ இருப்பார் அனுஷ்கா. ஆனாலும் அந்த இடை வளைவும், பொலிவான தோற்றமும், அழகு பேசும் கண்களும் மாறவே இல்லை.
 இரவு பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டு உறங்கிய முகத்தில் காலையில் ஒரு முகப்பரு தோன்றினால் எவ்வளவு அதிர்ச்சியடைவோமோ, அவ்வளவு அதிர்ச்சியை தருகிறார் புடவையில் பாதி ஸ்கிரீனை மறைத்துக்கொண்டு வரும் அனுஷ்கா. இவரது கதாபாத்திரத்தை மாதிரியான பெண்களை நாம் பெரும்பாலும் காணலாம். ஆனால் குண்டாக இருக்கிறோம் என்பதை குறையாக நினைக்காதபடி மகிழ்ச்சியுடன் அப்பாவால் வளர்க்கப்படுகிறார்

ஆகமவிதியின் பெயரில் பார்ப்பன அடாவடி – வீடியோக்கள்


உச்சநீதிமன்றத்தின் அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, தீர்ப்பைக் கண்டித்து நடந்த சென்னை ஆர்ப்பாட்டம் – வீடியோக்கள்; னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி பேரத்தில் ஏதாவது பொறுக்க நினைக்கும் கொள்கை வீரர்கள்

இரண்டு பெரிய கம்பனிகளும் கூடாது? நாங்க நல்ல யோக்கியமானவுங்க
எங்களுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன் என்ற கோஷத்தில் சுமார் நான்கு கோஷ்டிகள் மூன்றாவது அணி அல்லது நாலாவது அணியாக ஷோ காட்டுகிறது.
இவர்கள் நிச்சயமாக ஷோதான் காட்டுகிறார்கள்.
உள்ளே இவர்களிடம் உருப்படியாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
ஈழப்பிரச்சனை ஒட்டு வாங்கி தருமா என்று முயற்சித்து மௌனமாக ஏமாந்து போனவர்கள்.
ஊழல் என்று சொல்லிக்கொண்டே சொத்து குவிப்பு ராணியிடம் விலை போனவர்கள் . இது நிச்சயமான உண்மை. கடந்த தசாப்தங்களாக வேறு என்னதான் இவர்கள் செய்தார்கள்?
எப்படியாவது இவர்கள் காப்பற்றுவார்கள் என்று நம்பியவர்களை எப்படி இவர்கள் நட்டாற்றில் தள்ளி விட்டார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

சொந்தமாக எந்த அரசியல் கொள்கையும் உண்மையையில் இவர்களிடம் இல்லவே இல்லை.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு ட்ராபிக் ராமசாமி அல்லது சகாயம் ஐ எ எஸ் போன்றவர்களின் கால்தூசிக்கு கூட இந்த மக்கள் நலன் போர்டுகாரர்கள் வரமாட்டார்கள்.

வெள்ள நிவாரணம் :.வந்தது வெள்ளம் அல்ல....அதிஷ்டம்....சொல்வது வசூல் கோஷ்டி...அடப்பாவிகளா?

"சென்னை நகரில் நிவாரணக் கணக் கெடுப்பில் யார் வேண்டுமென்றாலும் தங்களது பெயரை பதிவு செய்யலாம். வீடு பெறவேண்டு மென்றால் 1 லட்ச ரூபாய், பாதிப்பே இல்லாமல் வெள்ள நிவாரணத் தொகை 5,000 ரூபாய் பெற 2,500 ரூபாய் லஞ்சம் என ரேட்டை ஃபிக்ஸ் செய்து அடாவடி வசூலில் அதிகாரிகளுடன் கூட்டணிப் போட்டு அ.தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் இறங்கி கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டிருக்கின்றனர்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.வெள்ள நிவாரணம் எப்போது வரும் என்ற ஏக்கக்குரல் சென்னையில் பலமாக ஒலிக்கிறது."இன்று வரை எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. வெள்ளத்தை வடிய வைக்கத் தோண்டிய குழிகளில் இன்றுவரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. குடிசைக்குள் நுழைய முடியாமல் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறோம்'' என கண்ணீர் மல்கக் கதறும் சுகன்யாவின் சோகத்தைக் கேட்க அங்கே யாருமில்லை. சுகன்யா வசிக்கும் தாம்பரம் வரதராஜபுரம் சுற்றுப்பகுதி முழுவதும் இதே நிலைமைதான் என்பதை டெடல், ராஜா ஆகியோரும் உறுதி செய்கிறார்கள்.

கூட்டணி வியாபாரம் களை கட்டுகிறது : அருண் ஜெட்லி ஜெயலலிதாவை மறுபடியும் காப்பாற்றுவாரா ?

ஹலோ தலைவரே.. ..  போனவாரம் வெங்கையா நாயுடு வந்தாரு.. இந்த வாரம் அருண் ஜெட்லி வந்தாரு.'' 

""எல்லாமும் கூட்டணிக் கணக்குத்தானா?''

""தமிழகம், கேரளா, மேற்குவங்கம்னு அடுத்த வருடத்தில் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வலுவா கால் ஊன்றணும்ங்கிறது மோடி- அமித்ஷாவோட கணக்கு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு ராஜ்யசபா சீட் வாங்குற அளவுக்கு சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் வேணும்னு நினைக்கிறாங்க. அந்தக் கணக்கோடுதான் அவங்க அ.தி.மு.க தலைமையை அப்ரோச் பண்ணுறாங்க.'அப்படின்னா 35 சீட்டுக்குக் குறையாம ஜெயிக்கணுமே, அந்தளவுக்கு பா.ஜ.க.வுக்கு ஜெ. சீட் கொடுப்பாரா என்ன?'வெள்ளநிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதி உதவி ஜெ.வுக்குத் தேவை. அதோடு சொத்துக்குவிப்பு அப்பீல் கேஸிலும் சட்ட உதவி தேவை. அதனால ஜெ இறங்கி வருவார்ங்கிறது பா.ஜ.க மேலிடத்தோட கணக்கு. நிவாரணப் பணத்தை நாமதான் கொடுக்குறோம்ங்கிறதை தமிழக மக்கள் உணரணும்னும் மோடி அறிவுறுத்தியிருப்பதோடு, மத்திய அமைச்சர்களையும் தொடர்ந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறாரு. ஆனா வெள்ள நிவாரணத்தை வச்சி, அ.தி. மு.க.வோடு கூட்டணின்னு பா.ஜ.க போட்ட கணக்கு ஒர்க் அவுட் ஆகலை.''

பெண்களை போக பொருளாக்கிய சினிமாவின் பரிணாம வளர்ச்சிதான் பீப்....சிம்பு அனிருத் மட்டும் அல்ல எம்ஜியாரில் இருந்து


சர்ச்சை பாடலுக்கு எதிர்ப்பு சிம்பு எழுதி, பாடி, அனிருத் இசையில் இணையதளத்தில் வெளியான ‘பீப்’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இப்பாடலுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். * ஜெ.பிஸ்மி, சினிமா பத்திரிகையாளர்
நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் உள்ள பலரும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை அவர்கள் நடித்த படங்களில் காட்சிப்படுத்தியவர்கள். திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான செயல்களை கட்டுப்படுத்த இவர்கள் விதிமுறைகளை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

நீங்களும் வாங்க...திமுகவுடன் சேர்ந்து கூட்டணி....விஜயகாந்த் வைகோ கோஷ்டிக்கு...அட்டுவைசு ..

சென்னை: தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் நீங்களும் வாருங்கள் என்று தம்மை சந்தித்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஆலோசனை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளாராம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர். எப்படியும் விஜயகாந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைத்து கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. ஆனால் விஜயகாந்த் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் பா.ஜ.க. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இன்னமும் நம்பிக்கையை சற்றும் விட்டுக் கொடுக்காமல் பா.ம.க, தே.மு.தி.க.வை எப்படியும் இழுத்துவிடுவோம் என்கிற அசாத்திய தைரியத்தில் இருக்கிறது பா.ஜ.க.

புதன், 23 டிசம்பர், 2015

சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள்...செல்போன் ஆப் செய்யபட்டுள்ளது

சிம்பு | கோப்புப் படம் 'பீப் பாடல்'தொடர்பான புகாரில் நடிகர் சிம்புவை கைது செய்ய போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் நலகூட்டணி தலைவர்கள் சந்திப்பு.....

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலப்பணிகளை பாராட்டிப்பேசினார். அதனால் நன்றி செலுத்தும் விதமாக அவரைச்சந்தித்தோம். எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் அணிக்கு வருவார் என்று நம்புகிறோம்’’ என்றார் nakkheeran,in

கமிஷன் அதிகரிப்பால் அலறும் கான்ட்ராக்டர்கள் இயற்கை சீற்றங்களாலும் அடிக்குது யோகம்



தேனி: ரோடு, கட்டுமான பணிகளுக்கு 45 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளதால், ஒப்பந்த பணிகளை எடுக்க விருப்பம் இல்லாமல் கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் மூலம் பேரழிவு ஏற்பட்டால் கூட, அங்கு நடக்கும் வளர்ச்சிப்பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெரிய அளவில் ஆதாயம் பார்த்து விடுகின்றனர் என கான்ட்ராக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் பல கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக மழைசேதத்திற்கு மத்திய அரசு 1980 கோடி ரூபாய் ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கிறது. இந்த நிதி கிடைத்து விட்டால், அத்தனை பேருக்கும் வீடுகள் கிடைக்கப்போகின்றன. தமிழகம் முழுவதும் ரோடுகள் ஒளிரப்போகின்றன என செய்திகள் வெளிவருகின்றன.ஆனால் இந்த நிதியில் மக்களுக்கோ, கான்ட்ராக்டர்களுக்கோ எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளுமே வருவாய்
அள்ளிக் குவிக்கப்போகின்றனர்.

கலைஞர் பதில் :தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அண்மையில் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்தனர். அப்போது மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

சகாயமோ ட்ராபிக் ராமசாமியோ வரமாட்டாங்களா...?who இஸ் next பெஸ்ட்?

இப்படி எந்த அலையும் இல்லாத சமயங்களில் யாராவது புது ஆள் வந்துவிட மாட்டாரா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்குகிறது. ட்ராபிக் ராமசாமி வந்தாலும் பரவாயில்லை; சகாயம் வந்தாலும் பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி சகாயத்தை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று அந்தக் கூட்டம் நம்புகிறது. டெல்லி போன்ற சிறிய, படித்தவர்கள் அதிகமாக வாழ்கிற, நகர்ப்புற மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாவில் சாத்தியமாகும் என்று நம்ப வேண்டியதில்லை. சென்னையிலும் கோவையிலும் திருச்சியிலும் வாக்களிப்பவர்கள் மட்டும் வாக்காளர்கள் இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகிற அறுபத்தைந்து சதவீத வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமப்புறத்தில் வாழ்கிற எளிய மக்களின் வாக்குகள். இவர்களிடம் சகாயம் மாதிரியானவர்களைக் கொண்டு சேர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. 

பீப் பாடலைக் கேளுங்கள் கனம் கோர்ட்டார்.....அய்யய்யோ வேண்டவே வேண்டாம்...நீதிபதி கேட்க மறுப்பு

சிம்பு - அனிருத்தின் பீப் பாடலை கேட்குமாறு வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன். அனிருத்துடன் இணைந்து ஆபாசப் பாடல் பாடிவிட்டு, இப்போது கடும் எதிர்ப்பும் கைதாகும் சூழலும் உருவானதால் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சிம்பு. High Court judge denied to hear abusive Beep Song இந்த மனுவை நீதிபதி ராஜேந்திரன் இன்று விசாரித்தார். அப்போது, சிம்புவுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன தமிழக அரசுத் தரப்பு மற்றும் மகளிர் அமைப்புகள். விசாரணையின் போது, அந்த பீப் பாடலை ஒருமுறை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி ராஜேந்திரனோ அந்தப் பாடலை கேட்கவே தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார் //tamil.oneindia.com

2ஜி ஸ்பெக்ரம் வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிபிஜ தொடர்ந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதோடு, மூன்று நிறுவனங்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞரான ஆனந்த குரோவர், கடந்த 8 மாதங்களாக குற்றஞ்சாட்டபட்டவர்களுக்கு எதிரான சிபிஐ-ன் வாதத்தை முன் வைத்து வந்தார்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சிம்புவுக்கு முன்ஜாமீன் கிடையாது....கொம்பு சீவி தறுதலையாக வளர்த்த ராஜேந்தரும் குற்றவாளிதான்

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை

சென்னை விமான நிலைய கூத்து...சாரா வில்லியம்சுக்ககாக சாரா தாமசை சிறையில்...இரண்டு லட்சம் அபராதம்

சென்னை விமான நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுக்ளுக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரா வில்லியம்ஸ். வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த இவர், கேரள மாநில சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சேலையூரைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாரா தாமஸ் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி விடுவிக்கப்பட்டார்.

உடுமலை வனத்தில் 3 கிமீ சட்டவிரோத சாலை....சந்தனமர கடத்தல்....

உடுமலை: உடுமலை வனத்தில் தடை மீறி 3 கிமீ சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மரங்களை வெட்டி சாய்த்து, பாறைகளை உடைத்துள்ளனர். இது குறித்து வனத்துறை குழு விசாரணையை துவக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்தில் தடை மீறி 3 கிமீ தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாறைகள் உடைக்கப்பட்டு, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது சந்தனமர கடத்தல் கும்பலின் வேலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட வனத்துறையினர் இன்று அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இங்கு மலைவாழ் மக்கள் வாழும் ஏராளமான செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன.

வாக்கு சீட்டிலும் ஸ்டிக்கர் ஓட்டுவோம்ல.....இனி அது மட்டும்தான் சாத்தியம்?

அரசுப் பணியில் இருந்தபோதே அம்மாதான் எனக்கு பிடித்த தலைவர் என்று பேட்டி கொடுக்கிறார் அந்த அதிகாரி. பணிக்காலம் முடிந்தபின் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை பதவியே பரிசாக கிடைக்கிறது. அதுவும் காலாவதி ஆனபின் தோட்டத்துக்கே வரவழைத்து உறுப்பினர் அடையாள அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறார் தலைவி.
அப்படிப்பட்ட விசுவாசமான ஒரு உண்மைத் தொண்டன் ஒரு டீவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசை கடுமையாக விமர்சனம் செய்வதாக ஒரு தகவல் வருகிறது.
தலைவியின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம்? “அவருக்கு ஃபோன் போட்டு கொடு, என்னானு கேக்கிறேன்” என்பதுதானே குறைந்தபட்ச ரியாக்‌ஷனாக இருக்கும். “ஏன் அப்படி பேட்டி கொடுத்தார் என்று அவரிடம் விசாரித்து எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுங்கள்” என்று கட்சியிலோ அரசிலோ நமது நம்பிக்கைக்கு உரிய நபரிடம் கேட்டுக் கொள்வோம், இல்லையா.அட்லீஸ்ட், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆள்? ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்புங்கள்” என்போம்.

அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார்: சீதாரம் யெச்சூரி

புதுடெல்லி, ஊழல் புகாரில் சிக்கியுள்ள அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து குற்றமற்றவராக அத்வானி வெளிவந்தது போல, அருண் ஜெட்லியும் இந்த வழக்கில் இருந்து விடுபடுவார் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், இது குறித்து இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீதாராம் யெச்சூரி கூறியதாவது:- “அத்வானி பெயருடன் இணைத்து பேசியதன் மூலம், அருண் ஜேட்லி ராஜினாமா செய்து புகார்களிலிருந்து விடுபட்டு மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவிப்பதாகவே நான் நினைக்கிறேன். 

மாநிலங்கள் அவையில் சிறார் குற்ற சட்டம் நிறைவேறியது . ராகுல்காந்தியிடம்...ஜோதி சிங்கின் பெற்றோர்

பிந்திய செய்தி:  மாநிலங்கள் அவையில் சிறார் தண்டனை மசோதா நிறைவேறியது, Under the new law, those in 16-18 age group will be be examined by Juvenile Justice Board to assess if crime was committed as child or adult.:மாநிலங்களவையில், சிறார் சட்ட திருத்த மசோதா மீது இன்று நடைபெற்று வரும் நிலையில், அவை நடவடிக்கைகளை கவனிக்க நிர்பயா பெற்றோர் மாநிலங்களவைக்கு வருகை தந்துள்ளனர். சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வதின் மூலம், கொடூர குற்றங்கள் புரியும் 16-18 வயதுடையவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்த முடியும்.

10 லட்சம் ..அகதிகள் போர்வையில் இஸ்லாமிய....ஐரோப்பிய மக்கள் விசனம்


கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. Image caption ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர். bbc.தமிழ்.com

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....சிம்பு அனிருத் பாட்டால் நொந்துபோனவர்களுக்கு ஆறுதல்


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (13.4.1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர்,நடனக்காரர், உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 15-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது. இந்த பாடலில் படத்தின் கதையையே  மிகவும் அழகான கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார் பட்டு கோட்டையார் .இவரல்லவோ கவிஞர்.

அனுஷ்கா சருமா :100 கோடி வசூலை குறி வைப்பதால் நல்ல படங்களே வருவதில்லை....

அழகான நடிகை அனுஷ்கா சருமா கோபத்தில் கொதிக்கிறார். திரையுலகில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரும் பாகுபாடு
காட்டப்படுகிறது, பெண்கள் வெறும் அழகுப் பொம்மைகளாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்பது அனுஷ்காவின் ஆத்திரத்துக்குக் காரணம். ‘‘சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது. நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறது? இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்’’  என்று சீறித் தள்ளுகிறார், அனுஷ்கா.

16 வயது சிறுவனையும் தண்டிக்க சட்டம்...டெல்லி மேல்–சபையில் இன்று விவாதம்

புதுடெல்லி கொடிய குற்றங்களுக்காக 16 வயது சிறுவனையும் விசாரிப்பதற்கான திருத்தத்துடன் கூடிய இளம் குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு குவிகிறது. டெல்லி மேல்–சபையில் அம்மசோதா இன்று விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரிக்கலாம் டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, டெல்லி மேல்–சபையில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம்.

தமிழகம், கேரளா, மே.வங்கம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல்.....ஆணையம் திட்டம்

டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக சட்டமன்ற தேர்தலை தாமதமாக நடத்த சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் அட்டவணையை மாற்றும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகிற நிலையில், விரைவில் வாக்கு இயந்திரங்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. Tamil Nadu, Kerala, West Bengal and Assam polls in April-May இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஜவடேகர் : கனமழை பெய்யும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டது ...மாநிலஅரசு.......?

கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது: பிரகாஷ் ஜவடேகர்
நாட்டில் நிலவும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு வெள்ளம் ஏற்படப்போகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தோல்வியால் 400 உயிர்களை இழந்துள்ளோம். 

திங்கள், 21 டிசம்பர், 2015

நேபாள பெண் கற்பழித்து கொலை! 7 பேருக்கு தூக்குத் தண்டனை ஹரியான மாநிலத்தில்

சண்டீகர்: ஹரியான மாநிலத்தில் மனநலம் பாதித்த நேபாளப் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கு ரோதக் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒரு பெண் ஹரியாண மாநிலம் ரோக்டெக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோதக் போலீசில் புகார் செய்தனர். 7 get death for gangrape and murder of nepal woman in Rohtak ஆனால், 4-ந்தேதி ரோதக் அருகில் உள்ள பாகு அக்பர்பூர் கிராமத்தில் ஒரு வயலில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது.

கரகாட்டகாரி தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் ..இளங்கோவன் மீது புகார் ...மாதர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை அவதூறாக பேசியதற்காக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கமிஷனர் ஆபீசில் புகார் மனு அளித்தனர். பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கரகாட்டக்காரி, பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார் இளங்கோவன். பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார்

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு..மோடியிடம் ஆதரவு கோரும் கெஜிரிவால்

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை அமல்ப்படுத்த மோடியிடம் ஆதரவு கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம்.

சிம்பு -அனிருத்துக்கு பாதுகாப்பு.....கோவன் பாட்டுக்கு தேசதுரோக வழக்கு...இதுதான் மேட்டுக்குடி வாழ்வியல்

protest-against-simbu-aniruth-3
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது
செக்ஸ் பாடகன் சிம்புவையும் பக்கவாத்தியம் அனிருத்தையும் கண்டிக்கும் வகையில், தி,நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டின் முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில், தோழர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது, அதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
சிம்புவின் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு வழிகள் இருந்ததால் காவல் துறை நம்மிடம், “மேடம் எந்த இடத்தில் பண்ண போறீங்க, நாம ஒரு understand-ல் பண்ணலாம்.” என்று சரியான இடத்தை சொல்ல சொல்லி காலையில் இருந்தே தொந்தரவு பண்ண தொடங்கி விட்டார்கள்.

விஜயகாந் யாரோடு......கணக்கு கணக்கு கணக்கு பார்த்தவண்ணமே உள்ளார்

வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, பிரதான கட்சிகளான, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்வர் காட்டி வருகின்றனர். அதனால், கூட்டணியில் சேரும்படி, அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகின்றனர்.ஆனாலும், தொகுதி பேரத்தை அதிகரிக்கவும், முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை உறுதி செய்யவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதால், கூட்டணி தொடர்பாக வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது; விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனாலும், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாமல் வெளியேறினார்.   இவரு ஏதோ பெருசா புரட்டுவார்னு எல்லாரும் நம்புறாய்ங்க ஆனா நானு நம்பல்ல இவரு இன்னொரு டம்மியாதான் .....

இந்த ஆண்டுதேர்வுகளை ரத்து செய்யவும் .கலைஞர் கோரிக்கை : மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை விபரம் : ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறை.
கேள்வி :- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இழந்து, பல நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்திருக்கிறார்களே?

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஜல்லிகட்டில் நடிகை எமி ஜாக்சன் சிக்குவாரா? ஏனிந்த வில்லங்கம்?

எமி ஜாக்சனுக்கு தமிழ்நாட்டு விபரம் ஒண்ணுமே புரியல்ல. ஜல்லிகட்டுக்கு
எதிராக பெடா அமைப்பு கையெழுத்து வேட்டை ஆரம்பித்து உள்ளது. இதில் நடிகை எமியும் ஆதரவு கையெழுத்து போட்டு உள்ளார் . பல நட்சத்திரங்கள் பாய்ந்து பாய்ந்து கையெழுத்து போட்டு தங்கள் ஜீவகாருநியத்தை பறைசாற்றி வருகிறார்கள் .ஜல்லிகட்டுக்ககவே வீரலட்சுமி இயக்கத்தை நடத்தி வருபவர்கள் எமியின் எந்திரன் படத்துக்கு ஆப்பு வைக்க கூடிய சாத்தியகூறுகள் உள்ளது, அய்யா பாவம் மாட்டிக்க போறாங்களே?

கலைஞர்: GATT காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதீர்!

சென்னை:'உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.   கலைஞர் சொல்லுவதில் இருக்கின்ற உள் அர்த்தங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,எப்பொழுதும் அவர் எது சொன்னாலும் கேலி பேச ஒரு கூட்டம் இங்கே இருக்கின்றது, அவர்களுக்கு இங்கே நல்லது நடப்பதை விட அந்த நல்ல கார்யங்கள் இவரால் நடந்துவிட கூடாது என்று இந்த கூட்டங்களின் குறிகோள். கலைஞர் எப்பொழுதும் மாணவர்களின் நலனின் அக்கறை உள்ளவர் அதனால் தான் சமச்சீர் கல்வி, இலவச பஸ் பாஸ் என்று மாணவர்களுக்கு கொடுத்தார், இங்கே கேலிபேசும் கோமாளிகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை, தெரிந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் இல்லை.

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு ஆரம்பம்: சென்னை முழுவதும் விரைவில் இடிப்பு?

10000.20000. மட்டும் சம்பளம் வாங்கும் நாங்கள் , சட்டத்திற்கு பயந்து, 20 , 30 கி மீ. தள்ளி , approve ஆன இடத்தில , கடன் வாங்கி , ஒரு வீடு கட்டுகிறோம் . தினமும் 4 மணிநேரம் போக வர பயணித்து, கஷ்டபடுகிறோம். இப்போதும் வெள்ளத்தில் கஷ்டபடுகிறோம். ஆனால், சென்னையில் நடுவில் ஆக்ரமிப்பு செய்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நல்லபிள்ளைகளாகி , சலுகைகளையும் வாங்கி கொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எல்லோரும் வக்காலத்து வாங்குகிறார்கள். சட்டத்தை மதிக்கிறவன் பைத்தியக்காரன், மிதிக்கிறவன் புத்திசாலி. ஆக்ரமிப்பு செய்தவர்களை தயவு தாச்சனியம் பார்க்காமல் வெளியேற்றவும். மேலும் மீண்டும் அவர்கள் அங்கு வந்தால், தண்டனை கொடுக்கவும். ஆக்ரமிப்பால் அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள். 
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ரகசிய கணக்கெடுப்பை, நீர்வளத் துறை துவங்கியுள்ளது.  இதிலும் லஞ்சம் இடம்பெறும் சாத்தியம் தாரளமாக உண்டு

டெல்லி பலாத்கார கொலையாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டுவிட்டான்..அவனது உயிருக்கு ஆபத்தாம்...ரகசிய இடத்தில்...

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா( ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. விடுதலையை எதிர்த்து நிர்பயாவின் பெற்றோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், இளம் குற்றவாளி, ரகசிய இடத்திலிருந்து விடுவிக் கப்பட் டுள்ளார். இவர், ஒரு தனியார் அமைப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வந்த நிர்பயாவின் பெற்றோர் திடீர் என்று கைது செய்யப் பட்டனர். இதைக்கண்டித்து பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்
செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளி இன்று (20.12.2015) விடுதலையாகியுள்ளார்.

அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு

டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்துவருகிறது. இந்த பின்னணியில் சமீபத்தில் அகதிகள் தொடர்பான புதிய சட்டமசோதா ஒன்றை டென்மார்க் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி, அகதிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதனை செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. bbc.தமிழ்.com

இனி இந்தியா மத/ஆகம சார்புள்ள நாடு ?ஆகம விதி என்பது ஆரிய மாயை!

சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள்
 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
- இதை எழுதினது சிவனென்றும்
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று என் அறிவிற்கு சுட்டிக்காட்டிய தமிழ்ப் பெருங் கடலே ன்னு அவ்வைப்பாட்டி முருகனைப் பார்த்துப் பாடினார் என்றும் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.
இப்படி தமிழில் விளையாடிய அப்பாவும் மகனும் சமஸ்கிருதம் கற்றது எப்போது? இவர்களிருவரும் சமஸ்கிருதம் கற்றதாக எந்த இலக்கியத்திலும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால் இவர்களுக்குப் புரியுமா?  சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறார்கள். இந்துக்களே உங்களுக்கு இந்து சமயத்தில் என்ன இருக்கிறது? பாப்பானுக்கு எல்லாம் இருக்கிறது ..

ஜெயலலிதா : உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன், எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான்

சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். Jayalalithaa's heart touching speech to Tamil people மிக உருக்கமாக அமைந்துள்ள அந்த உரையில், "வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்: கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு.  இந்தம்மாவை  இன்னுமா நம்புறாங்க?  ......ஆனால் இயங்கியல் தத்துவம்னு ஒண்ணு இருக்கே? எந்த பெரிய சர்வாதிகாரியும் கம்பி எண்ணிதானே தீர வேண்டும்?  அம்மணீ உங்களுக்கு ஏன் இத்தனை பேராசை? 

எங்கே தேடுவேன் அவனுகளை எங்கே தேடுவேன்....சிம்பு அனிருத் வலைவீசும் போலீஸ்

கேமிராவுக்கு முன்னால்… அல்லது ஏதாவது ஸ்டுயோவில் அட்டைக் கத்தியை, டம்மி துப்பாக்கியை வைத்துக் கொண்டு பஞ்ச் வசனம் முழங்குவதும், நேரில் ட்ரவுரைப் பிடித்தபடி ஓடி ஒளிவதும் சினிமாக்காரர்களின் வழக்கம். பீப் பாட்டால் பிராப்ளமாகி நிற்கும் சிம்புவும் அனிருத்தும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.
“இனி மறைக்க ஒன்றுமில்லை.. சட்டத்தைச் சந்திப்பேன்..” என்றெல்லாம் முழங்கிய பீப் பாய் சிம்பு, இப்போது வீட்டிலேயே இல்லை. எங்கிருக்கிறார் என்ற தகவலும் இல்லை.
அதாவது தலைமறைவு வாழ்க்கை.
இன்று அவர் கோவை போலீஸ் முன்பு ஆஜராகியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஒருபக்கம் வீராவேசமாக அறிக்கை விட்டுக் கொண்டே, மறுபக்கம் வக்கீல்கள் மூலம் முன்ஜாமீன், வாய்தா என அழுகுணி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் சிம்பு.மகளிர் அமைப்புக்கள் மட்டுமல்ல மொத்த தமிழகமே உண்மையில் கடும் கோபத்தில் தான் உள்ளது,