10000.20000. மட்டும் சம்பளம் வாங்கும் நாங்கள் , சட்டத்திற்கு பயந்து, 20 ,
30 கி மீ. தள்ளி , approve ஆன இடத்தில , கடன் வாங்கி , ஒரு வீடு
கட்டுகிறோம் . தினமும் 4 மணிநேரம் போக வர பயணித்து, கஷ்டபடுகிறோம்.
இப்போதும் வெள்ளத்தில் கஷ்டபடுகிறோம். ஆனால், சென்னையில் நடுவில்
ஆக்ரமிப்பு செய்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம்
கொடுத்து, அவர்களுக்கு நல்லபிள்ளைகளாகி , சலுகைகளையும் வாங்கி
கொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எல்லோரும் வக்காலத்து வாங்குகிறார்கள்.
சட்டத்தை மதிக்கிறவன் பைத்தியக்காரன், மிதிக்கிறவன் புத்திசாலி.
ஆக்ரமிப்பு செய்தவர்களை தயவு தாச்சனியம் பார்க்காமல் வெளியேற்றவும். மேலும்
மீண்டும் அவர்கள் அங்கு வந்தால், தண்டனை கொடுக்கவும். ஆக்ரமிப்பால்
அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள்.
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ரகசிய கணக்கெடுப்பை,
நீர்வளத் துறை துவங்கியுள்ளது. இதிலும் லஞ்சம் இடம்பெறும் சாத்தியம் தாரளமாக உண்டு