![]() |
Dhinakaran Chelliah : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவாளர் சீமான் அவர்கள் அருந்ததியர் சமூகம் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறிய வந்தேறிகள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக இரு நூல்கள் என் கவனத்தை ஈர்த்தன,
ஒன்று முனைவர் ச.சீனிவாசன் அவர்கள் எழுதிய தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும்(விலை ரூ.200, தொடர்புக்கு 9911223484),
இன்னொன்று எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதிய அருந்ததியர் வரலாறு வினாவும்-விளக்கமும், முதற் பதிப்பு 1998.
இந்த இரு நூல்களும் அருந்ததிய சமூகத்தினர் தமிழகத்தில் வீரமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் தமிழ் நிலத்தின் ஆதிக் குடிகள் எனும் கூற்றையும் இனவரைவியல் குறிப்புகள்,கல்வெட்டுகள்,சங்க நூல்கள் உள்ளிட்ட பல சான்றுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.
இந்த இரு நூல்களையும் இணையத்தில் கண்ணில் தென்பட்ட தரவுகளைத் தாண்டி எனது பாணியில் தேட ஆரம்பித்த போது பழம் பெரும் நூல்களில் “சக்கிலியர்களைப்” பற்றிய குறிப்புகள் கிடைத்தன.அசாத்தியமான அரசியல் சூழல் கருதி இங்கே அவற்றை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்பதை உணர்கிறேன்.
அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் எழுதுகிறேன்,