சனி, 29 செப்டம்பர், 2018

கஞ்சா கறுப்பு :அடுத்த ஜென்மத்துல கூட படம் எடுக்க மாட்டேண்ணே.. எனக்கு இது தேவையாண்ணே''” --கண்ணீர் விடும் கஞ்சா !

Ganja Karuppu
velmurugan-borewellnakkheeran.in-ஈ.பா. பரமேஷ்வரன் சினிமா மார்க்கெட்டில் காமெடி ஃபீல்டில் ஓஹோ என இருந்தவர் கஞ்சா கருப்பு. இப்போது கடனாளியாகி, கொடுக்குற சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் நிலைமைக்குப் போய்விட்டதாக தகவல் கிடைத்ததும், கஞ்சா கருப்புவுடன் எப்போதும் இருக்கும் கவிஞர் ஜெயங்கொண்டான் மூலம் கருப்புவைத் தொடர்பு கொண்டோம். "வீட்டுக்கு வாங்கண்ணே வௌக்கமாப் பேசுவோம்'' என்றார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கஞ்சா கருப்புவின் "பாலா-அமீர்'’ இல்லத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றோம்.அப்போது காரில் இருந்து இறங்கியபடியே நம்மைப் பார்த்த கஞ்சா கருப்பு, “"மாங்காடு கோவிலுக்குப் போயி காமாட்சி ஆத்தாள கும்பிட்டு வர்றேண்ணே, இனிமே எல்லாத்தையும் அந்த தாயி பாத்துக்குவா. நீங்க கேக்க வேண்டிய கேள்விய கேளுங்க. அம்புட்டு உண்மையையும் சொல்லிப்புடுறேண்ணே'' என்றதும் பேட்டி ஆரம்பமானது.
 போனமுறை பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனீங்களே, அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஒட்டு மெஷின் தில்லுமுல்லு . எதை அமுக்கினாலும் பாஜகவுக்கே .. 2019 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம்?

   m.dailyhunt.in :டெல்லி , டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் முதன் முறையாக வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அதில் மோசடி செய்து பாஜக மாணவர் அணியான ஏபிவிபி வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஏபிவிபி தலைவர், மற்றும் துணைத்தலைவர், துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயலாளர் பதவிக்கு மட்டும் காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

சபரிமலை ஐய்யப்பனும் – தோள்சீலை போராட்டமும்…!

theekkathir.in :சபரிமலை ஐயப்பன் கோயில் உரிமையாக இருந்த திருவாங்கூர்
சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வ சபரிமலை ஐயப்பன் கோயில் உரிமையாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமையாக இருந்தனர் என்பது தோள் சீலை போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதி பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல கூடாது என்பதாகும்.
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடாது என சிந்திக்கும் பேசும் வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.
*******
தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்ளான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதியுகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பட்டில் இருந்தது.

மோடி- பாசிசத்தின் பிம்பம்.

சவுக்கு : அரசியல் விஞ்ஞானியான டாக்டர் லாரன்ஸ் பிரிட், பாசிசம் தொடர்பாக ஒரு கட்டுரையை (பாசிசம் எனிஒன்? பிரி என்குவய்ரி, ஸ்பிரிங் 2003, ப 20) எழுதினார். ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), பினான்கோ (ஸ்பெயின்), சுகர்த்தோ (இந்தோனேசியா), பினோசெட் (சிலி), ஆகிய பாசிச ஆட்சியாளர்களை ஆய்வு செய்த பிரிட், அவர்களிடையே 14 அம்சங்கள் பொதுவாக இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை பாசிசத்தின் அடையாளக் கூறுகள் என
குறிப்பிடுகிறார். அதன்படி, பாசிசத்தின் 14 முக்கிய அம்சங்கள் வருமாறு:
சக்தி வாய்ந்த, தொடரும் தேசியவாதம்
பாசிச ஆட்சியாளர்கள், தேசப்பற்று சார்ந்த இலட்சியங்கள், கோஷங்கள், அடையாளங்கள், பாடல்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். கொடிகள் எல்லா இடங்களிலும் இருக்கும். ஆடைகள் மற்றும் பொது இடங்களிலும் கொடிகளைப் பார்க்கலாம்..
மனித உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பு
 எதிரி மீதான அச்சம், பாதுகாப்பு தொடர்பான தேவை காரணமாக, பாசிச அரசின் கீழ் உள்ள மக்கள், சில நேரங்களில் தேவை காரணமாக மனித உரிமைகளை அலட்சியம் செய்யலாம் என நம்ப வைக்கப்படுகின்றனர். சித்திரவதை, விசாரணை இல்லாத தூக்கு தண்டனை, படுகொலைகள், கைதிகளின் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றை மக்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது ஆங்கீகரிக்கவும் செய்கின்றனர்.

மணல் கொள்ளையர்களை விரட்டிய போது விபத்து.. விராலிமலை தாசில்தார் உயிரழப்பு

Viralimalai Tahsildar died in a accident
Viralimalai Tahsildar died in a accident புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காட்டாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு பணிக்காக அங்கு சென்றார்.
அப்போது சிலர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க சென்றார். வட்டாட்சியரை பார்த்த மணல் கொள்ளையர்கள் தப்பிஓடினர். அவர்களை பார்த்திபன் தனது வாகனத்தில் மற்ற 3 அதிகாரிகளுடன் சென்று விரட்டினார். இதில் ஆவூர் பகுதியில் ஜீப்பின் டயர் வெடித்து அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மற்ற 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். /tamil.oneindia.com
By Vishnupriya R"

வாட்சைப் பொய் செய்தியால் இன்பீப்ம் நிறுவன பங்குகள் சரிந்தது ..

வாட்ஸ் அப் செய்தியால் அடிவாங்கிய நிறுவனம்!மின்னம்பலம்: வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட செய்தி காரணமாக இன்ஃபிபீம் அவென்யூஸ் என்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு பங்குச் சந்தையில் ஒரே நாளில் 71 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான இன்ஃபிபீம் அவென்யூஸ் தனது கிளை நிறுவனங்களுக்கு வட்டியில்லா மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்கியதாக சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இச்செய்தி வாட்ஸ் அப்பில் மீண்டும் வலம் வர நேற்றைய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிரடியாகச் சரிந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பரவிய இன்ஃபிபீம் நிறுவனத்தின் கணக்கு நடவடிக்கைகள் தொடர்பான இந்த செய்தியானது, பங்குதாரர்களின் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 31ஆம் தேதிவரை இந்நிறுவனம் சில நிறுவனங்களுக்கு 135 கோடி ரூ கடன் வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதிமுகவின் எம்ஜியார் நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்? அவற்றில் திமுக எதிர்ப்பை மட்டும் பேசுகிறார்கள் ..

tamil.news18.com: தனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர் - மு.க.ஸ்டாலின் புகழாரம்சென்னையில் நாளை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும்  இடையேயான நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

ரமணா பட பாணியில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த K.G hospital மருத்துவமனை- தஞ்சாவூர்

ரமணா பட பாணியில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்மாலைமலர் :தஞ்சை ஆஸ்பத்திரி நிர்வாகம் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்து விட்டதாக எழுந்துள்ள புகார் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேகர் தஞ்சாவூர்: நாகை மாவட்டம், திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் இருந்து வந்தது. இந்நிலையில் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதல் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டி முடிந்த பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி 384 பேர்கள் உயிரழப்பு

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வுமாலைமலர் : :இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. ஜக்ர்தா: இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

சபரிமலையில் 1986 இல் படஷூட்டிங் நடந்தது ..1972 வரை பெண்களுக்கு அங்கு சட்டப்படி உரிமை இருந்தது

LR Jagadheesan : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை
அனுமதிக்கக்கூடாது என்கிற ஆண்களின் கோரிக்கையை ஏற்று பெண்களை தடை செய்யும் சட்டம் முதன்முதலில் 1972 ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டது என்கிறார்கள்.
1969 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 1977ஆண்டு மார்ச் 25 வரை எட்டு ஆண்டுகள் கேரளத்தை ஆண்டது கம்யூனிஸ்ட் கட்சி.
அப்படியானால் சபரிமலையின் மகரஜோதியை அரசு செலவில் ஏற்றி உலகத்தை ஏமாற்றியதைப்போல சபரிமலையை ஆண்களின் ஏகபோகமாக்கியதும் கேரளத்தின் மார்க்சியம் உயிர்மூச்சாய் கொண்ட இடதுசாரி அரசாங்கம் தானா? எண்டே பகவதி! — அப்போ என்னதான் நடந்தது?
சிகப்பு வெளுத்தால் செங்காவி என்பது வெறும் சொலவடையல்ல அவர்களின் சரித்திரமே அது தானா????

சபரிமலை.. அநீதிகளை துடைத்து போடும் தீர்ப்பு இது.. வழக்கறிஞர் அருள்மொழி

 அருள்மொழி (வழக்கறிஞர்) tamiloneindia :சென்னை: சபரிமலை தீர்ப்பு என்பது அநீதிகளை துடைத்துப் போடும் தீர்ப்பு என வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடைவிதிப்பது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அருள்மொழி (வழக்கறிஞர்):
இந்த தீர்ப்பின் முடிவு எப்படி இருக்கும் என நமக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது இந்த தீர்ப்பு கண்டிப்பாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும். ஏன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கேள்வி கேட்டதால்தான் கேரளாவில் வெள்ளம் வந்தததற்கு காரணம் என்றார்கள். இப்போது இந்த தீர்ப்பையும் கேட்டபிறகு அவர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. எப்படிப்பார்த்தாலும் இந்த தீர்ப்பு சற்று கொந்தளிப்பைதான் கொடுக்கும். இந்துமதம் என்றில்லை, எல்லா மதங்களிலுமே அந்த மதத்திற்குள் இருக்கும் பெண்களின் உரிமைகளை ஆண்கள் மறுப்பதும் அதில் நீதிமன்றம் தலையிட்டு அந்த உரிமையை உறுதி செய்கிறது. இதேபோலதான் முத்தலாக் சட்டத்திலும் பெண்கள் வரவேற்றார்கள், ஆண்கள் அதை எதிர்த்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ் சினிமாவிற்கு தப்பிவந்த ‘இளவரசன்’! பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமாவிற்கு தப்பிவந்த ‘இளவரசன்’!minnambalam :மதரா :பரியேறும் பெருமாள்: திரைப்பார்வை ஆதிக்க சாதி ஒன்றின் பெயரைத் தாங்கி எடுக்கப்பட்ட ஒரு படமும் அதன் பாடலும் 90களில் தென் தமிழகத்தில் பல்வேறு சாதி மோதல்களை ஏற்படுத்தின. அதே வரிசையில் சாதியைத் தூக்கிப் பிடித்த, ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்திய பல படங்கள் வெளியாகியுள்ளன; இன்னமும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அரிவாளை சட்டையின் பின்னால் சொருகுவதற்கும் மீசையை முறுக்குவதற்கும் பாடம் எடுத்த தமிழ் சினிமா தன் பாவங்களை கழுவிக்கொள்வதற்காக வெளிவந்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.

சென்னையிலிருந்து கொழும்பைத் தாக்கத் திட்டமிட்டனர்

மின்னம்பலம்: “விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்க முயற்சி செய்தனர்” என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு உலக நாடுகளும் இதற்காக இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கிடையே இலங்கையில் 2015ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேவைத் தோற்கடித்து புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவியேற்றார்.

எம்ஜியார் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது ஈ வி கே எஸ் இளங்கோவன் அறிவிப்பு

தினகரன் : சென்னையில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது. சென்னையில் நாளை அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. விழாவில் திமுக பங்கேற்குமா என்பது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறியது: எதிர்க்கட்சி தலைவர்  என்ற உரிய மரியாதை இல்லாமல், முறையான வகையில் தெரிவிக்காமல் அழைப்பிதழில் பெயரை அச்சிடுவதால் கலந்துகொள்ள முடியாது. ஏற்கனவே ஒருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் எதிர்க்கட்சி தலைவர்  அமர வைக்கப்பட்டதை மறக்க முடியவில்லை.

கருணாஸ் ஜாமீனில் விடுதலை ..எழும்பூர் நீதிமன்றத்தில் ..

ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலைதினத்தந்தி :வேலூர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்தநிலையில் ஜாமீன் கோரிய மனு மீது நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று தீர்ப்பு கூறினார். கருணாசுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, 30 நாட்களுக்கு தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இந்தோனீசியா சுனாமி: சுலவேசி தீவில் 6.6 அடி உயர அலைகள்


BBC : 7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவின் கடலோர நகரை சுனாமி தாக்கியது என்கிறார்கள் அதிகாரிகள். >இந்தோனீசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த மரணங்கள் சுனாமியால் நிகழ்ந்தவையா என்ற தெளிவு இல்லை. கடந்த மாதம் இந்தோனீசியாவின் லாம்போக் தீவை தொடர் நிலநடுக்கங்கள் தாக்கின. இவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவற்றில் மிகப் பெரியதான நிலநடுக்கம் ஆகஸ்ட் 5-ம் தேதி நிகழ்ந்தது. இதில் மட்டும் 460 பேர் கொல்லப்பட்டனர்.

பரியேறும் பெருமாள் ..முழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ..

chennaicitynews.net: முழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ..
பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு ,
லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பை பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்..
பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி பரிச்சயம் இல்லை எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்கசொல்கிறது.

செக்கச்சிவந்த வானத்தை ஏன் வறுக்கிறார்கள் வலைத்தளங்களில் ...

Mani Mathivannan : ரெண்டு நாளா மணிரத்னத்தை பதிவர்கள்
வறுத்தெடுக்கிறார்கள். இதற்காகத்தான் சுஹாசினி அடித்துக் கொண்டார் ஸ்மார்ட் போன் உள்ளவரெல்லாம் படம் பற்றிக் கருத்து சொல்கிறார்களே என்று.
அவரும் அவரது ஆத்துக்காரரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊடகம் என்பது வெகுஜனமயமாகி நாளாகிறது. அத்திம்பேர்கள் மட்டுமே எழுத்தாளராக இருந்த காலத்தில் உங்க வீட்டுக்காரரும் சித்தப்பாவும் ஆளுக்கொரு பக்கம் வெளிநாட்டுப் படங்களை டப்பா அடிச்சி பெரிய படைப்பாளிங்கிற ஹோதாவில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் வெட்கமின்றி வருடாவருடம் ஆஸ்காருக்கு வேறு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சினிமா விமர்சகர்கள் என்பவர்களின் கூட்டுக் களவாணித்தனத்தின் உதவியுடன்.
இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சித்தப்பா அரசியல் கடைவிரித்துவிட்டார். அம்மையார் இப்போது அறிவுரை சொல்ல வேண்டியது முகநூல் பதிவர்களுக்கல்ல!

ஓரகடம் Yamaha யமகா நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத அக்கிரமம்


strike hits production at chennai plants of royal enfield, yamaha
 tamil.samayam.com :இதுகுறித்து பேசிய ராயல் என்பீல்டு தொழிற்சங்க துணைத் தலைவரும், உழைக்கும் மக்கள் வர்த்தகச் சங்கத் துணைத் தலைவருமான ஆர்.சம்பத், ராயல் என்பீல்டு நிறுவனத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ராயல் என்பீல்டு தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரகடம் தயாரிப்பு ஆலைக்கு ரூ.150 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இங்கு 1,50,000 யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி 750 வாகனங்கள் தயாரிக்கப்படும். போராட்டம் தொடங்கியதில் இருந்து ஒரு வாகனம் கூட தயாரிக்கப்பட வில்லை. தகுதி காலத்தில் இருக்கும் 120 தொழிலாளர்களை நிர்வாகம் நிரந்தரமாக்கவும் இல்லை. பணி நீக்கம் செய்யவில்லை.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சேலம் அம்பேத்கார் சிலை உடைப்பு .. மக்கள மறியல் போராட்டம்

ஸ்ரீனிவாசன்tamilthehindu :
சேலம் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து, வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
சேலம், கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டியில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை உள்ளது. அந்த சிலையை நேற்று முன் தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து வெள்ளாளப்பட்டியில் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். தவகலறிந்து வந்த கருப்பூர் போலீசார், அம்பேத்கர் சிலை உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அம்பேத்கர் சிலை உடைப்பு பிரச்சினை சம்பந்தமாக சேலம் - பெங்களூரு சாலையில் விடுதலை சிறுத்தை அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், சேலம் - பெங்களூரு நெடுங்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ரஃபேல் ஊழலின் அதிர்ச்சியூட்டும் கதை – 1 அம்பானிகளின் சொத்து ஒவ்வொரு நொடிக்கும் 34,666 உயர்வு ...

சவுக்கு :பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2015 ஏப்ரலில்
முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டியிருந்தது. இந்திய விமானப் படைக்கு 126 ஜெட் விமானங்களை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கு முன்வந்திருப்பது டஸ்ஸால்ட் நிறுவனம்தான் என 2012இல் மன்மோகன் சிங் அரசு அறிவித்தது. கிட்டத்தட்டப் பத்தாண்டுக் காலம் கவனமாகத் திட்டமிட்டு, களச் சோதனைகள் நடத்தி, கடுமையான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தி ஏழு தொகுப்புகளாக அந்த விமானங்களை இறுதியாகக் கொள்முதல் செய்துவிடலாம் என்ற கட்டத்திற்கு இந்தியா வந்திருந்தது. 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தனது முத்திரையைப் பதிக்கும் வாய்ப்பு மோடிக்கு கிடைத்தது.

5 மனித உரிமை போராளிகள் பிணை கோரலாம் .. உச்சநீதிமன்றம்

ஐவர் ஜாமீன் கேட்க அனுமதி!மின்னம்பலம்: கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணைக் குழு அமைக்கமுடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பீமா-கோரேகான் போர் வெற்றியின் 200ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி புனே காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆதார் கட்டாயமில்லாமல் இருந்திருந்தால்... என் மகள் இறந்திருக்க மாட்டாள்'

சந்தோஷியின் தாய் கொயலி தேவி மற்றும் அவரது மாமியார்
BBC :ஜார்கண்ட்
மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் கரிமடி பகுதியில் உள்ள கொயலி தேவியின் இல்லத்திற்கு நான் சென்றபோது, தன் 3 வயது மகனுக்கு கீரை சாதத்தை ஊட்டி முடித்திருந்தார். செப்டம்பர் 28, 2017, அவரது 11 வயது மகளான சந்தோஷி குமாரி பட்டினியால் இறந்து போனார். இன்று அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிறது. பட்டினியால் அழுது தன் மகள் இறந்ததை கொயலியால் மறக்க முடியவில்லை.
வீட்டில் போதிய ரேஷன் பொருட்கள் இல்லாததால் சந்தோஷிக்கு உணவு அளிக்க இயலவில்லை. தனது ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படாததால் எட்டு மாதங்களுக்கு அவர்களால் ரேஷன் பொருட்கள் பெற முடியவில்லை. அப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளை ஜார்கண்ட் அரசாங்கம் ரத்து செய்திருந்தது.
<>25 மரணங்களுக்கு பொறுப்பாகும் ஆதார் திட்டம்

BBC :சபரிமலை கோயிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

கேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.
பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுனாமி ... நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை - நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியதுமாலைமலர்: இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டுள்ளது. #7.5magnitudeearthquake #Indonesiaarthquake #TsunamiAttack ;
ஜகர்தா: புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது.
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம் மாலைமலர் : ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை: நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனியில் 12 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை ... படுகொலை


விசிக-ரிச்சர்ட் :
தேனி அல்லிநகரத்தை சார்ந்த ராஜா என்பரின் மகள் 7-ம் வகுப்பு படிக்கும் 12
வயது சிறுமி ராகவி. எந்த தவறும் செய்யாத இந்த குழந்தை ஆனந்த் என்பவனின் காம வெறிக்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ய ஆனந்த் என்ற காம வெறியனுக்கு தைரியம் தந்தது என்ன? எந்த குற்றமும் செய்யாத ராகவி பிறந்த சமூகம் தான். தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகமான அருந்ததியர் சாதியில் பிறந்தது தான் ராகவி செய்த குற்றமா? தட்டிக் கேட்க யாரும் வரமுடியாது தாழ்த்தப்பட்ட சமூகம் தானே என்ற சாதி ஆணவ சிந்தனை ஆனந்த் என்ற காம வெறியனுக்கு சிறுமி ராகவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் துணிச்சலை தந்துள்ளது.
தகாத உறவுகளெல்லாம் இங்கு தகும் என சட்டம் அனுமதித்துள்ளது. தற்போது சட்டம் அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கவும் செய்கிறது. 497 சட்டம் நீக்கமெல்லாம் தவறு செய்யும் ஆண்களைத்தான் பாதுகாக்குமே தவிர, தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தில் பிறந்து காதல் கொண்ட இளவரசன், கோகுல்ராஜ் , சங்கர் போன்ற ஆண்களை படுகொலையில் இருந்தும் பறிபோகும் பெண்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பது இல்லை.

ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்புமாலைமலர் :ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை: ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டித்து ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகள் அடைப்பில் ஈடுபட்டு, கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஆதார் ஒரு பிராடு, மோசடியாக கொண்டு வரப்பட்டுள்ளது - நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு

ஆதார் ஒரு பிராடு, மோசடியாக கொண்டு வரப்பட்டுள்ளது - நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்புமாலைமலர் :ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். புதுடெல்லி: ஆதார் வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.
மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதில் ஆதார் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும்.
அரசின் சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அதேசமயம், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசின் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நிறுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆதார் விவரங்களைப் பெறக்கூடாது என்று கூறி ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை ரத்து செய்து பெருமபான்மை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.< ஆனால், இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழங்கினார்.

முதல்வராகும் எண்ணமில்லை: கனிமொழி"

மின்னம்பலம் :முதல்வராகும் எண்ணம் எனக்கில்லை என்று திமுக எம்.பி.
கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் நேற்று (செப்டம்பர் 27) FICCI நடத்திய கருத்தரங்கில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கவிதைகள் வழியாகச் சொல்ல வேண்டிய கருத்துகளை துல்லியமாகவும், வலிமையாகவும் கூற முடியும். இந்தியாவில் பட்டதாரிகள் எண்ணிக்கை உயர்ந்தபோதும், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை மற்றும் பெண் தொழிலதிபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கருத்தரங்கைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, FICCI பெண்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சுயதொழில் தொடங்குவதற்காகவும் இந்த அமைப்பு தொடர்ந்து நிறைய பணிகளை செய்து வருகிறது. தொழில் செய்வதில் பெண்களைச் சொந்த காலில் நிற்பவர்களாக மாற்றுவதில் இந்த அமைப்பின் பங்கு அளப்பரியது என்று கூறினார்.

ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்!

சிறப்புக் கட்டுரை: ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்!மின்னம்பலம் -பா. சிவராமன்  :உச்ச நீதிமன்றம் ஆதாரை முற்றிலுமாக அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என நிராகரிக்காதது அந்தரங்க உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்களுக்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால், அரசு இயந்திரத்தை வேவுபார்க்கும் கண்காணிப்பு அமைப்பாகவும் இந்திய ஜனநாயகத்தை டிஜிட்டல் கொடுங்கோன்மையாகவும் மாற்றுவதற்கு ஆதாரை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பலத்த அடியாகும்.
இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்பதற்காக முயற்சி செய்துவரும் அனைவருக்கும் இது ஒரு முதல் வெற்றியே. நிலையான முழு வெற்றிக்கு அவர்கள் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இத்தீர்ப்பின் முக்கியமான சாதக அம்சம், உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டத்தின் பிரிவு 57ஐ அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நிராகரித்து அதைத் தள்ளுபடி செய்ததாகும். அதாவது ஆதாரைத் தனியார் கம்பெனிகள் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ஆதார் சட்டம் அனுமதித்திருந்ததை இத்தீர்ப்பு தடை செய்துள்ளது. மேலும், அரசாங்கம் தனது குடிமக்களையே வேவு பார்ப்பதற்கு எதிராக ஆரம்ப நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

BBC :20 வயது 65 வயது காதல் திருமணம் .. ராமேஸ்வரத்தில் பிரிய மறுத்த தம்பதிகள்

வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து
கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"காதலுக்கு வயது இல்லை என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.
தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.

வியாழன், 27 செப்டம்பர், 2018

TOUT la HAUT அனில் அம்பானியின் பிரெஞ்சு படம் .. ரபேல் .. பிரஞ்சு அதிபரின் பாட்னருக்காக அனில் தயாரித்த படம்

இந்தியாவின் 67 வது சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இந்திய வந்த பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, இந்திய அரசுடன் ரபேல் விமான ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 58000கோடி அதாவது 7.8 பில்லியன் யூரோ விற்கு வாங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அனில் அம்பானியின் Reliance Defecne நிறுவனத்தை மோடி அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
மொத்தமுள்ள 58000 கோடியில் அனில் அம்பானிக்கு 51% பங்கும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திற்கு 49%பங்கும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு லஞ்சமாக பிரான்ஸ் அதிபரின் பாட்னரும், நடிகருமான ஜூலி ஹையட்டிற்கு படம் தயாரித்து கொடுத்துள்ளது அனில் அம்பானியின் Reliance Entertainment நிறுவனம்.
ரபேல் ஒப்பந்தம் பேசப்பட்ட 10 ஆவது நாளில், அதாவது ஜனவரி 24 ஆம் தேதி, அனில் அம்பானியின் Reliance Entertainment நிறுவனம், ஹையட்டின் நிறுவனத்துடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஹையட் என்பவர் பிரான்ஸ் அதிபராக இருந்த ஹோலண்டேவின் பாட்னர் ஆவார்.

செங்கோட்டையில் விநாயகர் சிலை மீது கல் எறிந்த இந்து முன்னணியினர் ஐய்யப்பன் பேருந்து தாக்குதலில் வசமாக சிக்கினர்

goodnewstamil.com :புதுச்சேரியில் இருந்து சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி, ஜெயக்குமார் என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து பக்தர்கள் அனைவரும் பேருந்து மூலம் சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து செங்கோட்டையை கடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பேருந்தில் இருந்த பக்தர்கள் மீது கல் எரிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
TN 76 AE 0042 நம்பர் உடைய அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல்துறையினர் செங்கோட்டையில் வைத்து விசாரணை நடத்தினர்.

கானா பாடல்களால் தமிழ் மொழி நரிக்குறவர் மொழியாகிறதாம் நரிக்குறவர் சமுகம் மீது வாந்தி எடுக்கும் சீமான்

ஆலஞ்சியார் :கானா பாடலால் தமிழ் சிதைகிறது தாய் மொழியை நரிக்குறவ மொழியாக
ஆக்கிடாதீங்க : சீமான்.. ..
முதலில் நரிக்குறவர்கள் என்றழைப்பதே தவறு அவர்கள் நெறிக்குறவர்கள் என்கிறார் ஆய்வாளர் ராஜேந்திரன் .. அவர்கள் வாழ்வியல் முறை நெறிபடுத்தபட்டதென்று தன் ஆய்வின் முடிவில் சொல்கிறார்.. ஆம் ..
அவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை வரைந்துக்கொண்டு வாழ்பவர்கள் சேர்ந்தே வாழும் பழக்கமும் .. இரவு எத்தனை மணி ஆனாலும் தங்கள் வசிப்பிடத்திற்கு வந்துவிடவேண்டும் .. அதிலும் பெண்கள் அந்திமயங்கும் நேரத்திற்குள் வந்துவிடவேண்டும் ..மீறினால் கூட்டத்திலிருந்து விலக்கிவிடுவார்களென நிறைய சேதிகளை சொல்கிறார்.. சேர்ந்து வாழ்தல், பகிர்ந்துண்ணல், நாடோடி வாழ்க்கை முறையை .. உடை உணவு பழக்கவழங்களில்
தனித்துவமாய் தெரிதல் நம்பிக்கையோடு வாழ்தல் பழைமை சிதைக்காமல் நேர்மையோடு நாணயமான.. தங்களுக்கென்ற நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ்பவர்கள்
அவர்கள் நெறி குறவர்களே தவிர நரிக்குறவர்கள் அல்ல..
அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் அடிக்கடி இடம்பெயர்வதால் அரசின் திட்டங்களும் ..சலுகைகள் கிடைப்பதில்லை இப்போதுதான் கொஞ்சம் மாறி குழந்தைகளை கல்விக்காகவும் தங்களின் உரிமைகளை உணர்ந்து நகர்தலை நிறுத்தி ஒரே இடத்தில் வாழ தொடங்கியிருக்கிறார்கள்..

தமிழ் சினிமாவில் புது செண்டிமெண்டு .. போஸ்டரில் நாயும் கூட இருக்கனுமா?

கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ள  'புதிய' சென்டிமென்ட்!மின்னம்பலம் :சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகிக் கவனம் பெற்றுவருகின்றன.
வெற்றிகரமான இயக்குநராக வலம்வந்த இயக்குநர் சுந்தர்.சி தலைநகரம் என்னும் படத்தின் வாயிலாக நடிகராகவும் களமிறங்கினார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரவே பலபடங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துவந்தார் சுந்தர்.சி. ஆனால் தலைநகரம் அளவுக்கு அவருக்கு எந்தப் படமும் தனித்த கவனத்தைப் பெற்றுத்தரவில்லை.
அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெற்றாலும் அது அவரது இயக்கத்திற்கென்றே கிடைக்கிற வழக்கமான ஒரு வெற்றியாகவே ரசிகர்களிடம் பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் தனது நடிப்பால் முத்திரையைப் பதித்துவிடவேண்டும் என்னும் சூழல் சுந்தர்.சிக்கு. இந்தநிலையில்தான் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சுந்தர்.சி. இதில் சுமார் 85 சதவிகித படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவுற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் சூரத்தில் நடக்கவுள்ளன.

திலீபன் - 32 கிழக்கு மாகாண சிறுவர்களை கொன்றொழித்த திலீபனின் கறைபடிந்த ...

Vijaya Baskaran : திலீபன்-  இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு
உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது.
இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.
உத்தேச மாகாண சபையின் நிர்வாகத்துக்கு புலிகள் பூரண உரிமை கோரினார்கள்.ஆனால் இந்திய அரசு ஈ.பி.ஆர.எல.எப் ஐயும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இணைக்க வலியுறுத்தியது.புலிகள் அதை விரும்பவில்லை.இதனை திசை திருப்பவே மக்கள் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நாடகம் ஆரம்பிக்கப்பட்டது.உண்மையில் திலீபன் தான் பலிக்கடா ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை .புலிகளும் அவரை பலிக்கடா ஆக்கும் எண்ணத்திலும் இருக்கவில்லை.
திலீபன் உண்ணாவிரதத்தை தடுக்க இந்திய இராணுவமோ அல்லது டிக்சிற் அவர்களோ வருவார்கள்.அவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் நின்று எரிச்சலூட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் இராணுவம் மக்களை தாக்கும்.அதன்மூலம் மக்கள் கவனத்தை மறுபடியும் தம்பக்கம் கொண்டுவர முடியும் என புலிகள் நம்பினார்கள்.ஆனால் இந்திய இராணுவமோ ,இந்திய அரசோ கண்டுகொள்ளவில்லை .இதன் காரணமாக தவிர்க்கமுடியாமல் திலீபன் பலியாக்கப்பட்டார்.
திலீபன் நல்ல மனிதர் அல்ல.புலிகளின் ரெலோ அமைப்பினர் மீதான திடீர் தாக்குதலால் அந்த அமைப்பு நிலை குலைந்தது. பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர்.பலர் தப்பி ஓடினர்.இவ்வாறாக சங்கானையில் மாவடி என்னும் இடத்தில் உள்ள ரெலோ உறுப்பினர்கள் தப்பி ஓடிவிட்டனர்.அதில் கிழக்கு மாகாண உறுப்பினர்களின் வயதில் குறைவான சகோதர்ர்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து வந்து அங்கே தங்கியிருந்தனர்.அவரகள் அனைவரும் 15 வயதுக்கு குறைவானவர்கள்.அமைப்பில் அங்கம் வகிக்காதவர்கள்.

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை ... ஆனால் மணமுறிவு பெறலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை, ஆனால் அது விவாகரத்து பெறுவதற்கான காரணமாக இருக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil டெல்லி: தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. />இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 497ஐ நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. />திருமணமான பெண் தன் கணவரின் அனுமதியின்றி வேறொரு ஆணுடன்
;தகாத உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படமாட்டார். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

அமித் ஷா : உண்மையோ பொய்யோ சமுகவலையில் எதையாவது கிளப்புங்கள்! தொண்டர்களிடம் அமித் ஷா அட்வைஸ்

உண்மையோ பொய்யோ எதையாவது கிளப்பி விடுங்கள் - அமித்ஷா தொண்டர்களிடம் பேச்சுமாலைமலர் :உண்மையா பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பரப்பலாம் என ராஜஸ்தானில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசியுள்ளார். ஜெய்ப்பூர்:< ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம்” என அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
“சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையான முலாயம் சிங்கை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது.