சனி, 19 பிப்ரவரி, 2011

வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை! இந்திய மீனவர்களினால் கடத்தப்பட்டார்களா என்ற சந்தேகம்

கடற்தொழிலுக்கு சென்ற வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற ஆறுபேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேறறு காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு என புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறுபேரும் கரை திரும்பாதமையினால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய கடற்தொழிலாளர்கள் 136பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை மாதகல் பகுதிகளில் வைத்து யாழ் கடற்தொழிலாளர்களினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக இவர்கள் இந்திய கடற்தொழிலாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

50 சோமாலிய அகதிகள் பலி!

மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி!

தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெட்ரோ கோசா தெரிவித்ததாவது,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து 129 எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அகதிகள் சட்டவிரோதமாக தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 9-ம் தேதி கப்பலில் புறப்பட்டனர். ஆனால் அந்த கப்பல் கடந்த 13-ம் தேதி தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே தண்ணீருக்குள் மூழ்கியது. இதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தானாசானிய கேப்டனும் கடலுக்குள் மூழ்கி இறந்தனர்.

இதில் காப்பாற்றப்பட்ட 89 பேரையும் மொசாம்பிக் கடற்படையினர் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 3 ஆயிரம் அகதிகள் உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.

ஆப்பிரிக்காவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஏராளமானோர் வழியில் ஏற்படும் விபததுகளில் பலியாகின்றனர்.

கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!

அண்ணா அறிவாலயத்தில் உள்ள 'கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஐஞர் டிவி அலுவலத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர். மேலும் இந்த சேனலின் நிர்வாகி சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சரக்குமாரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த விலையிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலி்காம்-டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் தரப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், சினியுக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே ரூ. 214 கோடியை முதலீடு செய்ததாகவும், பங்கு விலைகள நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந்ததால் அந்தப் பணத்தை திருப்பி ரூ. 31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடம் தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது.

மேலும் சினியுக்-டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தொடர்பு குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால், இதை சிபிஐ நம்பவில்லை. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் தரப்பட்டதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் இந்த ரூ. 214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடிக்கும் முன் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி தந்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான பின் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐ கருதுகிறது.

இது தொடர்பான ஆவணங்களைத் தேடியே இன்று ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12.10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது.

அப்போது கலைஞர் டி.வி. அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரிடன் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், சரத்குமாருக்கு கொஞ்சம் பங்குகளும் உள்ளன.

சன் டிவியின் பங்குகளை தயாளு அம்மாள் திருப்பித் தந்தபோது கிடைத்த பணத்தை வைத்து கலைஞர் டிவியில் பங்குகளை வாங்கியுள்ளார் தயாளு அம்மாள். அதே போ ல சன் டிவியின் பங்குகள் மூலம் முதல்வர் கருணாநிதி தனக்குக் கிடைத்த பணத்தில் பிரித்துக் கொடுத்த ரூ. 2 கோடியை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி பங்குகளை வாங்கியுள்ளார்.

ஆனால், பங்குதாரர் என்ற அளவோடு தயாளு அம்மாள் நின்று கொண்டார். அதே போல பெயரளவுக்கே கனிமொழியும் கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்துள்ளார். மற்றபநிர்வாகத்திலோ அதன் பண பரிவர்த்தனைகளிலோ இருவருமே தலையிடுவதில்லை என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

முக்கிய முடிவுகளை சரத்குமார் தலைமையிலான அதிகாரிகளே எடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த ஸ்வான் டெலிகாமின் தாய் நிறுவனமான டி.பி.ரியாலிட்டி தனது இன்னொரு துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியைத் தந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பணத்தை கலைஞர் டிவி திருப்பித் தந்துவிட்டாலும் கூட, எதற்காக இந்த நிறுவனம் பணத்தை டிவியில் முதலீடு செய்ய முன் வந்தது என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

இதனால் இது தொடர்பாக கலைஞர் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் என்ற முறையில் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருந்தது.

இந் நிலைசில் சரத்குமாரின் வீட்டில் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தியதோடு அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த கட்டமாக கனிமொழியிடம் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் கலைஞர் டி.வியின் வெறும் முதலீட்டாரான இன்னொரு இயக்குநர் தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. அவர் தொலைக்காட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர் என்று சிபிஐ கூறியுள்ளது.

சம்மன் வரவில்லை-கனிமொழி:

இந் நிலையில் சிபிஐயிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிபிஐயிடமிருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கலைஞர் டி.வியில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாதிக்குமா என்று கேட்டதற்கு பதிலளிக்க கனிமொழி மறுத்துவிட்டார்.

கோகோ கோலாவின் இரகசியம் அமெரிக்க வானொலியில் ஒலிபரப்பு

125 ஆண்டுகளுக்கு பிறகு
125 ஆண்டுகளுக்குப் பிறகு இரகசியமாக வைக்கப்பட்ட கோகோ கோலாவின் சூத்திரம் வெளியாகியுள்ளது. கடந்த 1886ம் ஆண்டு தான் கோகோ கோலா முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. கோகோ - கோலா விற்பனையாகத் தொடங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்தியேக சுவை அளிக்கும் சூத்திரத்தை தெரிந்துகொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் சூத்திரம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட சூத்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன். இந்த சூத்திர இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரே ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையத்தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ - கோலாவின் அதிகார பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும்தான் அந்த சூத்திரம் தெரியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலமும்தான் இரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஆயுத காண்டம்


மோகன் தாஸ்
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய மோகன்தாஸ் ஒரு சுவாரசியமான மனிதர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்; இவரை ஆலோசனை செய்யாமல் எம்.ஜி.ஆர். முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டார்; எம்.ஜி.ஆருக்கு கண்ணும், காதும் மோகன்தாஸ்தான் என்றெல்லாம் சொல்வார்கள். அவர் ரிடையர் ஆனவுடன், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அவர் வசித்த உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த அவரது பிரத்யேக அறையில் (அதற்கு செல்லமாக “டென்” என்று பெயரிட்டிருந்தார்) கல்கிக்காக அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அதற்கு முன்பும், பின்னரும் கூட சில தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், ரிடையர் ஆனதும் அளித்த பேட்டி முக்கியமானது.
அவர் உத்தியோகத்தில் இருந்தபோது விவரமாகப் பேச முடியாமல் போன விஷயங்கள் உட்பட சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பழைய போட்டோக்கள் சிலவற்றை தன் சொந்த புகைப்பட ஆல்பத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். “நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானீர்கள்? மலையாளி என்பதால்தானா?” என்று கேட்டபோது, ” அவர் என்னை தமிழ்நாடு போலிசின் இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைவராக்கினார். 24 மணி நேரமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு அது. மாநிலம் முழுவதும் என்ன நடக்கிறது? என்பதை மட்டுமின்றி, பக்காவான இன்டலிஜென்ஸ் நெட் ஒர்க் மூலமாக அடுத்து எங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட அறிந்து முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப் பட்ட பதவி அது. எம்.ஜி.ஆரும், நானும் என்று இல்லை, ஒரு மாநில முதலமைச்சருக்கும், ஐ.பி. தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவே செய்யும்” என்று விளக்கியவர், தனது பதவிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களையும் கூட தயங்காமல் பகிர்ந்துகொண்டார்.
“ஐ.பி. தலைவராக நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது, பலருடைய பொறாமையை சம்பாதித்துக் கொடுத்தது. நான் என் மகள் திருமணத்துக்காக ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு கேரளாவுக்குப் போயிருந்த சமயம், மரியாதை நிமித்தம் அப்போதைய கேரள முதலமைச்சர் கருணாகரனை சந்தித்தேன். இரண்டே நிமிட சந்திப்புதான் அது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை அரை மணி நேர உரையாடல் என்று செய்தியாக்கிவிட்டது.
என்னை எப்படியாவது சங்கடத்தில் மாட்டிவிடவேண்டும் என்று காத்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய், ” நான் எம்.ஜி.ஆர்.பற்றிய ரகசியங்களை கருணாகரன் மூலமாக ராஜிவ் காந்திக்குச் சொல்லி அனுப்பி, எம்.ஜி.ஆர். மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக கதை கட்டிவிட, எம்.ஜி.ஆரும் அதை நம்பிவிட்டார். மகள் திருமணத்துக்கு பத்தே நாட்கள் இருந்த நிலையில், என் லீவை ரத்து செய்து, பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். பணிக்குத் திரும்பிய என்னை, பழைய பதவியில் தொடர விடாமல், ஒரு டம்மியாக ஓரிடத்தில் உட்காரவைத்தார்கள்.  இந்த உதாசீனம் என்னை ரொம்ப பாதிக்கவே, ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்புறம் நிலைமை சீரடைய, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்” என்றும் விளக்கினார்.
ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர் பற்றி மோகன்தாஸ் ஒரு புத்தகம் கூட எழுதினார். “எம்.ஜி.ஆர்: தி மேன் அண்ட் தி மித் ” என்று தலைப்பு. அந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை நடந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழு ராஜிவ் படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்ற கோணத்திலேயே புலனாய்வினை மேற்கொள்வது சரியல்ல என்ற அவரது கருத்து கூட சலசலப்பை ஏற்படுத்தியது. இதே கருத்தை அடிப்படையாக வைத்து மோகன்தாஸ்,  ஆங்கிலத்தில் ஒரு நாவல் கூட எழுதினார்.  ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சந்திரா சுவாமி என்று எந்தப் பெயர்களையுமே நேரிடையாகக் குறிப்பிடாமல் நாவலில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல வந்தது, நம் ஊரில் இருக்கும் அந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் தலைவரது ஊழல் காரணமாக கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கி, மீண்டும் ஆட்சிக்கு வர அந்த தலைவரையே பலியாக்கி, அனுதாப அலையை வீசச் செய்யும் வியூகத்தை வகுக்கிறார்கள். அந்தப் படுகொலையை, அந்தத் தலைவரின் மீது கோபம் கொண்ட அயல்நாட்டு போராளிக்குழுவின் மூலமாகச் செயல் படுத்துகிறார்கள். அயல் மண்ணின் போராளிக் குழு, தலைவரது படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிதான் என்பது அந்த நாவலின் ஹைலைட். அந்த நாவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
மோகன்தாஸ் சி.பி.ஐ. யில் இருந்த நாட்களில் அவர் துப்பு துலக்கிய கேஸ்கள் பல. உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரது தம்பி தன் 60 வது பிறந்த நாளைக்கொண்டாடியதன் அடிப்படியில், விசாரணை நடத்தியதில் அந்த நீதிபதி பொய்யான வயது கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது அம்பலமானது.  அதன் பிறகு, அந்த நீதிபதி தானாகவே முன் வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாகச் சொன்னார் மோகன்தாஸ்.
தன் சர்வீசின் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொன்னார் மோகன்தாஸ். அப்போது தூத்துக்குடி ரௌடியிசத்துக்குப் பேர் போன ஊராம். அங்கே, இவர் கையாண்ட ரௌடி தூத்துக்குடி கொம்பன் கேஸ் மிகப் பிரபலம். அந்தக் கொம்பன், மேலே ஏழெட்டு கொலை கேஸ்கள் இருந்தன. ஆனால் அவன் மீது போலிஸ் கை வைத்தது இல்லை. அவனைப் பிடிக்க சரியான ஒரு தருணத்துக்கு பொறுமையோடு காத்திருந்து, சாமர்த்தியமாகப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி, அவனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார் மோகன்தாஸ்.
அவர் சொன்ன இன்னொரு சுவாரசியமான கொலை வழக்கில் நான்கு பேர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது, நான்காவது நபர்கள் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த கேஸின் முதல் தகவல் அறிக்கையில் அந்த நான்கு பேருடைய பெயர்களுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மோகன்தாஸ் தீவிர புலன் விசாரணை நடத்தினார். துப்பு துலங்கியது. முதல் இருவரும்தான் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள். பர்சனல் விரோதம் காரணமாகப் பழி வாங்கும் நோக்கத்துடன் மற்ற இரண்டு பேர்களின் பெயர்களும் கேஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர்களில் தக்க ஆதாரங்களைத் திரட்டி முதல் இருவருக்குத்தான் கொலையில் சம்மந்தமுண்டு; மற்ற இருவரும் சம்மந்தமில்லாத அப்பாவிகளென்று நிரூபித்து, அந்த இருவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தார்.  இதை நீதிபதிகள கூட பாராட்டினார்கள்.
மனைவியுடன்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இந்தியா விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்துவந்த ஆதரவு நிலைபாடு அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் மற்றும் இதர போராளிக் குழுக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மோகன்தாஸ். காக்கிச் சீருடைப் பணிக்காலத்தில் அவரது மாபெரும் சாதனை என்று நான் நினைப்பது அவர் விடுதலைப் புலிகளிடம்  நடத்திய ஆயுதப் பறிப்புதான். அது நடந்தபோது கூட அந்த ராஜ தந்திர வியூகம் பற்றி பற்றி விரிவாகப் பேசாத மோகன்தாஸ் ரிடைர்மென்ட்டுக்குப் பிறகு என்னிடம் விரிவாகப் பேசினார்.
மோகன் தாஸ் என்னிடம் விவரித்ததை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதமேந்தித் திரிந்து வந்த காலம் அது. வேதாரண்யம், சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் காரணமாக மத்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என நினைத்தது. ஆனால் அதைச் செய்கிற பணியை எம்.ஜி.ஆரிடம் விட்டுவிட்டது. இது பற்றிப் பேச என்னை அழைத்தார் முதலமைச்சர்”
“விடுதலைப்புலிங்க கிட்டேயிருந்து ஆயுதங்களைப் பிடுங்கிடுங்க” என்றார் எம்.ஜி.ஆர். நான்,” அது இயலாத காரியம்”என்றேன். அவரோ,” எப்படியாவது செய்தே ஆகணும்” என்றார். “நிறைய உயிர்ச் சேதம் ஆகுமே?” என்று நான் சொல்ல,” மத்திய அரசுக்கு நான் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.
மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு விவகாரம், உள்ளூர் அரசியல் என பல பரிமாணங்கள் கொண்ட மிகவும் சிக்கலான ஆயுதப் பறிப்பை எப்படிச் செய்வது என்று தீவிரமாக யோசித்தேன். நான் ஸ்பெஷலாக உருவாக்கிய கமாண்டோ படையினரைக் கொண்டு இதனைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்தேன். இது ரொம்பவும் ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், முதலமைச்சருக்குக் கூட நீங்கள் உத்தரவிட்டபடி ஆயுதப் பறிப்பை செய்யப்போகிறேன்” என்று மட்டும் சொன்னேனே ஒழிய எப்போது என்று தேதியைச் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் போராளிகளின் முகாம்கள் எங்கெங்கே உள்ளன? அவற்றில் உள்ள முக்கிய போராளிகள், அவர்களிடமிருக்கும் ஆயுதங்கள் என எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு போராளி முகாமிற்கும் ஒரு கமாண்டோ சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சமீபகாலமாக போராளிகள் ஆயுதங்களோடு திரிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்னும் ஒரு வார காலத்துக்காவது நீங்கள் ஆயுதங்களை கையிலெடுக்காமல் இருக்கவேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது.” என்று சொன்னதும் அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.
“எல்லா ஆயுதங்களையும் உங்கள் முகாமிலேயே ஒரு அறையில் போட்டுப் பூட்டி, சாவியை நீங்களே வைத்துக் கொண்டால்போதும்” என்றதும் உடனடியாக அப்படியே செய்தார்கள். இப்படியாக தமிழகத்தின் ஒவ்வொரு முகாமிலும் ஆயுதங்கள் ஒரு பூட்டிய அறையில் முடக்கப்பட்டன; போராளிகள் நிராயுதபாணிகளானார்கள். கமாண்டோக்கள் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய அரை மணிநேரத்தில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஸ்பெஷல் கமாண்டோ படையினர் போராளிகளின் பல்வேறு முகாம்களுக்கும் அதிரடியாகச் சென்று சுற்றி வளைத்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அறைகளின் பூட்டைத் தகர்த்து அனைத்து ஆயுதங்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, என்ன நடக்கிறது என்று போராளிகள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நவீன ஆயுதங்களுடன் வந்த கமாண்டோ படையினரை நிராயுதபாணிகளான போராளிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அன்றைக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். டெலிபோனில், விவரம் சொன்னபோது,” சாவு ரொம்பவுமா? என்றார். “ஒரு கேஷுவாலிடி கூட இல்லை” என்றதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்” என்று அந்த  அத்தியாயத்தைச் சொல்லி முடித்தார் மோகன்தாஸ். இதில் ஆன்டி-கிளைமாக்ஸ் என்னவென்றால், ஆயுதப் பறிப்பு அமைதியாக நடந்து முடிந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களில் பிரபாகரன் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார்.
அரசியல்!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

கதையை விட்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி ரீலிஸ் ஆகும் படங்கள்!

கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ்   திரையுலகிற்கு டப்பிங்  கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை.
அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியை‌யெல்லாம் தெலுங்கு‌ தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.
நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது.
இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது.
இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

ஆனந்தகீதம்

Automatic Writing என்பது நிரூபணம் செய்ய இயலாத ஒன்று (பிறப்பு இறப்புச் சுழற்சி போல). ஒரு குழந்தையைப் பார்த்து அது ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்ததென்று தெரிந்து கொள்கிறோம் . அதேபோல ஒரு இறப்பின்போது உயிர்ச்சக்தி போய்விட்டது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அதே போல தன்னிச்சையான எழுத்தென்பதைப் பார்க்கவும் வாசிக்கவும் இயலும். ஆனால் அதை எழுதவோ டைப் பண்ணவோ இயக்கும் அந்த விசை எமது எந்த ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஒன்று. பல புத்தகங்கள் இந்த மாதிரி எழுதப்படிருக்கின்றன. அவற்றுள் ஒன்று Patience Worth Series Received by a Midwestern Housewife என்பதும் இன்னொன்று The Fascinating New Testament Stories Dictated through Geraldine Cummins என்பதுவும் அடங்கும்.
பொதுவாக இப்படிப்பட்ட உந்துசக்தி நம்மைப்போலப் பிறந்து வாழ்ந்து இறந்து போன ஒருவரிடமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை மறுப்பவர்கள் பொதுவாக இது எமது அடிமனத்திலிருந்துதான் வருவதாகச் சொல்வார்கள். அடிமனத்தில் தான் எல்லா நினைவுகளும் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். இப்படியாகக் கருத்து வேறுபாடுகள் பல விதமாக உள்ளன.
என்னால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமென்று சொல்லவரவில்லை. என்னால் ஒன்று மட்டுமே சொல்ல இயலும். அதாவது இப்புத்தகத்தில் வரும் மறுவாழ்வைப் பற்றிய விளக்கங்களெல்லாம் எனது கற்பனையோ இயற்றியதோ இல்லை. அவை எனது டைப்ரைட்டரில் டைப்பண்ண முன் எனக்குத் தெரியாதவை.
உதாரணத்துக்கு இந்தியாவிலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உதய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ.சி.சர்மா என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தத்துவவியற் பீடத்துக்குத் தலைவராவார் (head of the department). அக்கடிதத்தில் அவர் தனது மாமியார் இறந்ததை முன்னிட்டு உடனடியாக 'ஹிஸார்' என்ற இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும், உதய்பூர் வந்ததன் பிற்பாடு எனக்குத் தன்னிச்சை எழுதுகை (automatic writing) வருவதையறிந்ததாகவும் தனது மனைவி பாக் (Bhag) க்கு ஆறுதல் தரும் விதமாக ஏதாவது செய்ய இயலுமா ஏனெனில் அவரது மாமியார் 'சீதா தேவி மனுஜா' அகால மரணமடைந்ததாகவும் எழுதியிருந்தார்.
அடுத்த நாள் காலை ஆர்தர் போர்ட் (Arthur Ford) இடம் இறந்த 'சீதா தேவி'யைப் பற்றி ஏதாவது தெரியுமாவெனக் கேட்டதற்கு ஆர்தர் சொன்ன (எழுத்து மூலமான) பதில் "நாம் அவரைச் சந்தித்தோம். அவர் சந்தோஷமான ஆத்மா. இங்கு வந்ததில் அவர் வெகு சந்தோஷமாகவும் சக்தியுடனும் இருப்பதாகவும் அவரது பூவுலகத்திலிருக்கும் குடும்பத்தினரைப் பிரியவில்லை என்றும் கூடிய நேரம் அவர்களுடன் தான் இருப்பதாகவும், அவர்கள் மனத்தைத் தேற்றுமளவும் தான் அப்படியிருப்பேன் என்று சொன்னதாகவும் அதனுடன் வேறு பல பிரத்தியேகச் சமாச்சாரங்கள் எழுதப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட நீல மலரொன்றைச் சொல்லித் தனக்கு விருப்பமான அந்த மலரைப் பார்க்கும் போது தன்னை நினைக்கும் படியும் அந்த நேரத்தில் அங்கு தானும் இருப்பேனென்று சொன்னதாகவும் எழுதப்பட்டது.
இந்த சீதா என்பவரைப் பற்றி எனக்கு ஒரு நாளும் தெரியாது. அவர் இருக்கும் இடத்தில் அந்த நீலப்பூப் பூப்பது பற்றியும் எனக்குத் தெரியாது. எனவே இதை டாக்டர் சர்மாக்கு எழுதுவதற்குத் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் எதற்கும் எழுதுவோமெனத் தீர்மானித்து எழுதினேன். ஏப்பிரல் 20 ஆம் திகதி 1971 ஆம் ஆண்டு டாக்டர் சர்மா ஜோட்பூரிலிருந்து அதற்குப் பதில் எழுதினார். ஆர்தருடைய ஒவ்வொரு சொல்லும் உண்மையென்றும் அந்த நீலப்பூவைப் பற்றித் தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் மாமனார் சொன்னதாக ஒரு விஷயம் அதில் எழுதியிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக சீதா பூக்களில் அதிகம் விருப்பமடையவராக இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக அந்த நீலப்பூவை அவர் உண்டாக்கி அதை வீட்டை அழகுபடுத்த அவர் உபயோகித்ததாகவும் மாமனார் சொன்னதாக எழுதியிருந்தார்.
சர்மாவுக்கோ அவரது மனைவிக்கோ கூட சீதாவின் இந்தக் கடந்த ஆறுமாதமாக நீலப்பூவிலிருந்த ஈடுபாடு தெரிந்திருக்கவில்லை. எனக்கோ திருமதி சர்மாவின் பெற்றார் உயிருடனிருக்கிறார்களா என்பதே அவரது (மாமியாரின் இறப்பைப் பற்றிய) கடிதம் வருமளவும் தெரியாது. எனவே இந்த விஷயம் சாதாரணமான வழிகளில் எனக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. நிச்சயமாக இது ஆர்தர் சீதாவை மேலுலகில் சந்தித்தை உறுதிப்படுத்துகிறது.
இப்புத்தகம் மேலுலகைப் பற்றிய சந்தேகங்களை ஆர்தரின் சொந்த அனுபவங்களின் மூலமாக நிவர்த்திக்கும்
http://ananthageetham.blogspot.com/

பயணம்

ஹரன் பிரசன்னா

மீட்பரின் புதிய சீடர் வருகை
முதல்நாள் முதல் காட்சியில் ‘பயணம்’ திரைப்படத்தைப் பார்ப்பேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கெனவே ‘மொழி’, ‘அபியும் நானும்’ தந்த கடும் மனச்சிக்கலில் இருந்து, ராதா மோகனின் இன்னொரு செண்டிமெண்ட் இண்டெலெக்‌சுவல் காமெடிக் கொடுமையைக் காணத் துணியவில்லை. அலுவலகத்தில் நண்பர்களோடு சேர்ந்து போகலாம் என்று முடிவானதும் ஒரு சின்ன நப்பாசை ஒட்டிக்கொண்டது. ராதா மோகன் மட்டுமே தற்காலத் தமிழ் நாட்டின் தலைசிறந்த இயக்குநர் என்ற முடிவுக்கு, ராதா மோகனின் முதல் படம் வருவதற்கு முன்பே வந்துவிட்ட பாராவும் உடன் வருகிறார் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். வேலை இருக்கிறது என்ற ஒரு வரியில் பாரா ஒதுங்கிக்கொண்டார் இன்று. நான் படத்துக்குப் போனேன். அங்கே கடவுளும் சைத்தானும் ஒன்று சேர்ந்து டிக்கெட் கிழித்தார்கள்.
பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குச் செல்லும்போது யுனிஃபார்முடன் செல்வதுபோல, நான் கிழக்கு டி ஷர்ட்டுடனும் உள் நெஞ்சில் ‘வேலையை விட்டுட்டு படம் பார்க்க வந்திருக்கமே’ என்னும் குறுகுறுப்புடனும், ராதா மோகனின் மொக்கை மீது முன்முடிவுடனும் உட்கார்ந்துகொண்டிருந்தபோது, நாகார்ஜூனா என்று திரையில் ஓடியது. அடுத்து பிரம்மானந்தம் என்று வந்தது. இது தமிழ்ப்படமா டப்பிங் படமா என்ற சந்தேகமும் என் குறுகுறுப்புடன் சேர்ந்துகொண்டது. கூடவே நாகார்ஜூன் நம்மைக் காப்பாற்றுவார் என்னும் சிறிய சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.
படத்தை அதன் பாராட்டுப் பத்திரத்திலிருந்து துவங்கிவிடலாம். இடைவேளை வரை மிக பலவீனமான திரைக்கதை எளிதில் ஊகிக்கக்கூடிய மொக்கை காட்சிகள், நாலாந்தர செண்டிமெண்ட் காட்சிகள், நேரத்தை வீணடிப்பதற்காகவே அநாவசியமாகச் சேர்க்கப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சி, தீவிரவாதிக்கு உதவியனைப் பிடிக்கும் காட்சி என நீண்டு சலிக்கும் காட்சிகள், இந்தப் படம் எப்ப முடியும் என்கிற டென்ஷனை எகிற வைத்தன. இதில் போதாக்குறைக்கு இது டப்பிங் படம்தான் என்ற முடிவுக்கு வரவைக்கும் வாயசைப்புப் பிரச்சினை. ஒரே ஆறுதல் காந்த நடிகரும், பாலாஜியும் வரும் காட்சிகள்தான். இப்படிப் போய்கொண்டிருந்த படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் நாகார்ஜுனாவும் பிரம்மானந்தமும். இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் வேகம் பெறுகின்றன. வழக்கம்போல ஆனந்தவிடகன் ஜோக் போன்ற வசனங்கள்தான் என்றாலும், சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஓர் ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான நிமிடப்பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. சுகர் வந்து இளைத்துப் போகாத கவுண்டமணியான பிரம்மானந்தத்தின் அனாயசமான யதார்த்தமான ரீயாக்‌ஷனும், நாகார்ஜுனாவின் அடக்கமான நடிப்பும், திகைக்க வைக்கும் சில காமெடி காட்சிகளும் (குறிப்பாக ‘என்ன கதகளியா ஆடற’ என்று பிரம்மானந்தம் கேட்கும் காட்சி) நம்மை வசீகரிக்கின்றன. சாதாரண மனிதர்களை உச் கொட்ட வைக்கும் க்ளிஷே காட்சிகள் அமைக்கும் களன்கள் கூர்மை பெறுகின்றன. கடைசியில் எப்படி நாகார்ஜுனா பயங்கரவாதிகளை முறியடிக்கிறார் என்பது கதை.
பாராட்டவேண்டிய இன்னொரு விஷயம் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் என்றாலே ஓவர் ஆக்டிங் என்கிறது என் அகராதி! அவர் நடித்து நான் ரசித்த ஒரே ஒரு திரைப்படம் காஞ்சிவரம் மட்டுமே.  இப்போது இந்தப் படம். எந்த இடத்திலும் கொணட்டல்கள் இல்லை. அதீத முகபாவம் இல்லை. அதிலும் குறிப்பாக, அவர் கோபம் கொண்டு கத்தும் காட்சி, அவரது நடிப்பின் உச்சம். தான் தயாரிக்கும் படம் என்பதால் தன் காட்சிகளை அதிகம் வைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் சேர்த்துப் பாராட்டலாம். (பிரகாஷ் ராஜை நான் பாராட்டுவேன் என நான் நினைத்ததே இல்லை.)
பிறகு என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை? அரசியல். ராதா மோகனின் அரசியல். கமலை மிஞ்சுகிறார். ராதா மோகனின் படங்களில் கிறித்துவ சார்பு உண்டு என்பதும், ஃபீல் குட் என்ற பெயரில் வரும் செண்டிமெண்ட் மொக்கைகளும், ஆனந்தவிகடனில் இருந்து பொறுக்கி எடுத்தாரோ என்று ஐயம் கொள்ள வைக்கும் சொறி விட்டுகளைத்தான் காமெடியாகத் தருகிறார் என்பதும், ராதா மோகன் மீது எனக்கு ஏற்பட்டிருந்த முன் தீர்மானத்துக்கு அடிப்படைகள். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பட்டமான கிறித்துவப் படம். சார்பு என்ற சொல்கூட அநாவசியம். முதல் காட்சியிலிருந்து பாதிரியார் தொடங்கும் அன்புப் புராணஅதிதீவிர காவியம், என்ட் கார்டு வரையில் நம்மைத் துரத்து துரத்து என்று துரத்துகிறது. மொழி திரைப்படத்தில் வரும் பாஸ்கர்தான் பாதிரியாராக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அக்கதாபாத்திரத்தின் தொடர்ச்சிதான் இக்கதாபாத்திரமோ என்ற சந்தேகமே நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாதிரியார் இப்படத்தில் ராதா மோகன் வழியே செய்திருக்கும் சாதனை, காண்டம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியதுதான். மலையாளப் படங்களில் இப்படிப் பேசும் தோழமையான பாதிரிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் இது தொடக்கமாக இருக்கலாம். இந்தப் பாதிரிப் புராணத்தில் மூச்சு முட்டி ஓடுபவர்களுக்கு எதிரில் காத்திருக்கிறது ஹிந்து மத அரசியல் நிந்தனை. நேரடியாகவே பாஜகவைத் திட்டியிருக்கலாம் ராதா மோகன். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியா ‘பால் வரும் தேன் வரும் பூமியாக’ இருந்ததை எல்லோருமே அறிந்திருந்தார்கள். ஆதியில் இந்தியா அப்படித்தான் இருந்தது. ராதா மோகன் இந்தப் படத்தில் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார். அவரே ஒரு கதாபாத்திரமாக வருகிறார் என்னும்போது அவர் பேசும் வசனங்கள் இன்னும் ‘அர்த்தம்’ பெறுகின்றன. அவர் பெயரையே அதாவது ‘இயக்குநர் ராதா மோகன்’ என்றே இப்படத்தில் காட்டியிருக்கலாம். இப்படி எதிரே நளினமாக ஆடும் ஹிந்துத் தாக்குதலில் மேலும் மூச்சு முட்டும்போது ‘இருவாசல் மூடி ஒரு வாசல் வைப்பான் இறைவன்’ என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார் ராதா மோகன். ஆம், இதுவரை தமிழ்த் திரை காணாத அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தின் காட்சிகளை நெடுகிலும் காட்டிச் செல்கிறார்.
அதிலும், ஒரு பயங்கரவாதி தான் அன்பாகப் பேசிய குழந்தையிடம் வெடிகுண்டை மறைப்பது அதன் உச்சம். ராதா மோகன் இப்படி எல்லாம் எடுக்கமாட்டாரே என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்வைத்து ஹிந்துத்துவாதிகளும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை முன்வைத்து முற்போக்காளர்களும் குழம்பும்போது, கிறித்துவர்கள் மட்டும்தான், மீட்பர் அனுப்பியிருக்கும் புதிய சீடரின் வருகையை நினைத்து மயிர்க்கூச்செறிதலுடன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் படத்தின் கடைசி சட்டகத்தில் உறையும் காட்சி முக்கியமானது. அதுவரை நமக்கு இருந்துவரும் சந்தேகங்களை எல்லாம் அறவே நீக்குவது. படத்தில் வரும் ஹிந்து நிந்தனைக் காட்சிகள்கூட சப்பைக்கட்டுத்தானோ என்று சந்தேகம் கொள்ள வைப்பது. ஐந்து பயங்கரவாதிகளின் பிணங்கள் மீதும் அவரது பெயர்கள் நிலைபெறுகின்றன. ஐந்தும் இஸ்லாமியப் பெயர்கள். (இனி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கிருந்து தொடங்கிக் கொள்ளவேண்டும்!)
கமலாவது ‘உன்னைப் போல் ஒருவனில்’ ஒரு கடத்தல் தாதாவையாவது ஹிந்து எனக் காட்டினார். அந்த ‘இரக்கம்’கூட ராதாமோகனுக்கு இல்லை. அத்தனையும் இஸ்லாமியப் பெயர்கள். வெடிகுண்டை விமானத்தினுள்ளே கடத்திப் போக உதவியரும் இஸ்லாமியராம். என்ன அநியாயம் பாருங்கள். தீவிரவாதிகளின் புனிதப் போர்ப் பெயர்க்காரணமாக ஒரு வசனம் வருகிறது. எந்தப் பொண்ணையாவது நாங்க கை வெச்சோமா என்று. இதற்கு இஸ்லாமியர்கள் வருத்தப்படவேண்டுமா, சந்தோஷப்படவேண்டுமா என்று திகைக்க வைக்கிறார் இயக்குநர். இன்னொரு விஷயம், நாகார்ஜுனாவின் உதவியாளராக வருவது ஓர் இஸ்லாமியர். எங்கே அவரும் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்று காட்டி ராதாமோகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமோ என்று பயந்தேன். அல்லது அவர்தான் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளைக் கொன்றார் என்று காட்டி செக்யூலர் பூனை வெளிவருமோ என்று ஆர்வத்துடன், ஆம், மீண்டும் பயந்தேன். இரண்டுமே நடக்கவில்லை. இப்படி நிகழாததில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. என்ன அந்த நுண்ணரசியல்? குழப்பமும் உள்ளது. என்ன அந்தக் குழப்பம்?
ரஜினிகாந்த் போன்ற பஞ்ச் டயலாக் கமர்சியல் உச்ச நடிகர்களை ஆதி முதல் அந்தம் வரை போட்டுத் தாக்குகிறார் ராதா மோகன். ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வந்துகொண்டே இருக்கும் ஒரே விஷயம் இது மட்டுமே. இடையிடையே வரும் இரண்டு நிமிட செண்ட்டிமெண்ட் அறுவைக் காட்சிகள்கூட இதைப் போலத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் கடைசி காட்சியில், அதுவரை வந்த அத்தனை விமர்சனங்களையும் போட்டு நொறுக்கும் வகையில், அந்த நடிகர் வீரராகிறார். இப்படி ஒரு மாற்றம் இஸ்லாமியர்களின் வாயிலாக நடப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை ராதா மோகன் செய்யவில்லை. இது நுண்ணரசியலா அல்லது ஸ்கிரிப்டா?
பொதுவாக ஹிந்துத்துவச் சார்பு உள்ள எனக்கு இந்தப் படத்தின் மூலம் வந்த சந்தோஷங்கள் என்ன என்ன?
01. எல்லாப் படத்திலும் மெல்லிய கிறித்துவச் சார்பை பின்னணியில் வைத்து பார்வையாளர்களை, அவர்கள் அறியாமலே தன்னரசியலுக்குப் பயன்படுத்தும் அல்லது தான் நம்பும் சூடோ செக்யூலரிசத்துக்கும் பயன்படுத்தும் ராதா மோகனின் முகமூடி கிழிகிறது. அவர் இனி நேரடியாகவே கிறித்துவ ஆதரவுத் திரைப்படம் எடுக்கலாம்.
02. ஹிந்து அரசியல் தவறுகளைச் சொல்லும் ராதா மோகன் என்னும் முற்போக்காளர், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்த தீரர், இனி கிறித்துவத்தின் மதமாற்ற அரசியலைப் பற்றி எடுப்பாரா? எடுத்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சலாம் உண்டு. எல்லா மதங்களையும் உண்மையிலேயே ஒரே மாதிரியாகப் புறக்கணிப்பவர்கள் வணங்கத் தக்கவர்களே. படமாக எடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒன்றிரண்டு காட்சிகளாவது…?
03. சாரு நிவேதிதாவும் எத்தனை நாள்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்காக கமலைத் திட்டிக்கொண்டிருப்பது? அது என்னவோ சாருவின் ராசி, அவர் யாரையாவது பாராட்டினால், இப்படி நடந்துவிடுகிறது. ‘மொழி’யைப் பாராட்டினார். இனி ராதா மோகன் பெயரையும் பாராட்டு என்னும் வார்த்தையையும் ஒரே வரியில் அவர் எழுத வாய்ப்பே இல்லாத அளவுக்கு இப்படி நடந்துவிட்டது. அதிலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கான எதிர்க்குரல். சாருவின் அறச்சீற்றத்தை இனி யாரால் தடுக்க இயலும்? இனி தொடங்கப் போகும் சாருவின் எழுத்து ரகளையை ரசிக்கலாம்!
04. ஒரு திரைப்படத்தில் ஒருவர் ஓர் எதிரியைத்தான் உருவாக்கிக்கொள்வார். இதில் ராதா மோகன் ஹிந்துத்துவ இஸ்லாமிய எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்னும் ஆர்வம்.
05.ஹிந்துக்களை நிந்திப்பதும், அரசியல் ஹிந்துக்களை விமர்சிப்பதும் மட்டுமே எளிது என்பது இனி ராதா மோகனுக்கு உறைக்கத் தொடங்கும்.
06.நாட்டில் நிலவும் உண்மை ஒன்று,  ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே தைரியமாக அதை நீங்கள் சொல்லமுடியும் என்பதும் ராதா மோகனுக்குப் புரியும்.
07.முற்போக்காளர் பட்டம் பெற முப்பது வருஷம், அதைப் போட்டு உடைக்க முப்பது நிமிடம் என்பதும் புரியும்.
அரசியலை ஆழப் பார்க்கப் பழகாத மக்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடுவார்கள். பெரும்பாலான நம் மக்கள் இவ்வகையினர்தான் என்பதால் இதுவே நிகழும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். கூடவே பாடல் இல்லாத, காதல் இல்லாத, சண்டை இல்லாத, தனிப்பட்ட ஹீரோயிஸ க்ளிஷே இல்லாத படம் என்று பத்திரிகைகள் எழுதும். அதோடு, சூடோ செக்யூலரிசக் காட்சிகளின் பாராட்டும் சேர்ந்துகொள்ளும். இதுவும் நிகழ்ந்தே தீரும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். ஆனால் இணைய வாசகர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், டிவிட்டர்கள்? இந்த வகையினரை ஏமாற்றுவதில்தான் ராதா மோகன் தோற்றுவிட்டார். அவர்கள் இந்தப் படத்தைக் கைமா செய்யாமல் விடமாட்டார்கள் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். என்னிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்.
சரி, ராதா மோகனின் இத்தனை குழப்பங்களுக்கு என்ன காரணம்? அவரே இப்படத்தில் சொல்கிறார், காந்தியையும், கார்ல் மார்க்ஸையும் படிச்சு இப்படி ஆயிட்டேன் என்கிறார். குழப்பம் எந்த ‘இடத்திலிருந்து’ துவங்குகிறது பார்த்தீர்களா?!