சனி, 5 நவம்பர், 2022

‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது

இரா.மன்னர் மன்னன். - ஆவணம் :க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.
இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.
ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.
ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!

tamil.indianexpress.com  : தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தள்ளிவைக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஊர்வலத்திற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்க போகும் பாஜக...? களநிலவரம் என்ன?

tamil.oneindia.com  -   Nantha Kumar R  :  சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட எம்எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என ஏராளமான பாஜகவினர் மேடைகளில் அழுது புலம்பி வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச சட்டசபையின் காலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கோவை சிக்கிய பென் டிரைவ்... 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவு வீடியோக்களை ஆய்வு செய்யும் போலீஸ்

மாலை மலர் :   கோவை:  கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கோவையில் சிலரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர். அதில் முபினும் ஒருவர். மேலும் 2 பேரை கைதும் செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு அவர்களை விட்டுவிட்டனர். இருப்பினும் அவர்களின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்ட முபின் திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் இந்த தாக்குதலை நடத்தியதும், அவர் அதில் இறந்து விட்டதும் தெரியவந்தது.

குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

கலைஞர் செய்திகள்  : நாட்டுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்காதீர் என முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது விபரீத விளைவுகளையே நாட்டுக்கும் ஏற்படுத்தும். இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும் ஏற்படுத்தும். இந்த பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு குடியுரிமைச் சட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவதே நல்லது.‘‘அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது” என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் (தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் 232 மனுக்கள் போடப்பட்டுள்ளன.
இம்மனுக்களின் மீது அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்; தமிழக அரசு திட்டவட்டம்

நக்கீரன் : சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?'
 என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- ஒன்றிய பாஜக மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் புகார்


மாலை மலர்  :   அமிர்பூர்:  வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது:

சாத்தான்குளம்: “தந்தை, மகன் இருவரையும் ரத்தம் வடிய கூட்டிட்டு வந்தாங்க!”- சாட்சியம் சொன்ன ராஜாசிங்

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ராஜாசிங்
, ராஜாசிங்

விகடன்  :  இந்த வழக்கில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது.
அதில் பல அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை இணைத்திருந்தவர்கள், புதிய சாட்சிகளாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வின்னிலா, கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங் என்ற கைதியையும் சேர்த்திருந்தனர்.
ஏற்கெனவே அரசு மருத்துவர் வின்னிலா சாட்சியம் அளித்த நிலையில், ராஜாசிங் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
வெளியில் வந்தவர் செய்தியாளர்களிடம், “நான் கோவில்பட்டி சிறைச்சாலையிலிருந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நடக்க முடியாத நிலையில் கொண்டு வந்தாங்க.
உடம்பெல்லாம் காயமா இருந்துச்சு. ரத்தம் வடிய வடிய வந்தாங்க. நான் அவங்ககிட்டே விசாரிச்சப்போ, சாத்தான்குளம் போலீஸ் அடிச்சதா சொன்னாங்க.

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: இதுவரை 277 பேர் பலி; 14,000 பேர் கைது.. Protests in Iran gain momentum

Hindu Tamil  :  தெஹ்ரான்: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் கூறும்போது, “கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறையை கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 4 நவம்பர், 2022

தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞசெழியனார் காலமானார் (அகவை 78)

May be an image of 1 person and text that says 'பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (15-6-1944/4-11-2022)'

 கூத்தன் செந்தமிழ் செந்தமிழ்  : இனமானத் தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞசெழியனார் (அகவை 78) தமிழுடன் கலந்தார்
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கொள்ளிடக் கரையேராம் அமைந்துள்ள படுகை என்னும் ஊரில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சூன் மாதம் 15, 1944 இல் பிறந்தார்.
தமிழில் முதுகலைத் தமிழில் பட்டம் பெற்று, அரசுக் கல்லூரி ஆசிரியராக பல ஆண்டுகாலம் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராவும் செயல்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தின் பேராசிரியராகவும் செயல்பட்டார்.
அறிவு தளத்தில் தமிழ் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து 22 நூல்களை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள்;-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
2. இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் 1989
3. தமிழர் தருக்கவியல்

இம்ரான் துப்பாக்கி சூடு ஒரு நாடகம்? பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் இழந்த செல்வாக்கை மீட்க நடந்த கூத்து?

 Waseem Altaf  ; Imran Khan has NOT been hit by a bullet!
This information is from authentic sources!
Either he himself engineered face-saving, or it was maneuvered by someone else for him!
Thankfully Imran was scratching his ear with his feet  otherwise bullet would have hit his head
வசீம் அல்தாஃப் ; பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி குண்டு பாயவில்லை இம்ரான் கான் தோட்டாவால் தாக்கப்படவில்லை!இம்ரான் கான் ஒரு தோட்டாவால் தாக்கப்படவில்லை!
இந்த தகவல் உண்மையான ஆதாரங்களில் இருந்து!
அவரே தனது அரசியல் வீழ்ச்சியில் இருந்து தன்னை காப்பாற்றுவதற்காக  ஒரு ஏற்பாட்டை  செய்திருக்கவேண்டும்
அல்லது அவருக்காக வேறு யாரோ இந்த வித்தையை செய்திருக்கவேண்டும்!
ஒருவேளை அதிர்ஷ்டவசமாக இம்ரான் தனது கால்களால் காதை சொறிந்து கொண்டிருந்திருக்க வேண்டும்  இல்லையெனில் புல்லட் அவரது தலையில் தாக்கியிருக்கும்

சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்- டெல்லி மகளிர் ஆணையத்தில் .. குஷ்பு பேட்டி

மாலைமலர் : புதுடெல்லி  தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.
அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.
சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.
குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை!

மாலை மலர் அமிரிட்சார் : பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமிர்ட்ஸார் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆதரவு பாசிச ஆர் எஸ் எஸ் வரலாறு .. விவேகானந்தர் சூத்திரர்.. அவர் துறவி அல்ல என்று வழக்கு தொடுத்த பார்ப்பனர்

Kalai Selvi   *வாருங்கள் நாம் அனைவரும் இந்த புரோகித துரோகிகள் மற்றும் இந்து மதவெறியர்களின் உருவபொம்மையை எரிப்போம்*
🔸திப்பு கெட்டவன் என்றால், பல தசாப்தங்களாக இருந்ததாகக் கூறப்படும் புரோஹித் திப்புவின் சன்னதியில் திவானகிரி ஏன்?
அதாவது திப்புவை விட திவான் பூர்ணய்யா மோசமாக இருக்க வேண்டும்! வாருங்கள் அந்த பூர்ணய்யாவை இந்து விரோதி என்று அறிவிப்போம்.
🔹சிவாஜி இந்து சக்கரவர்த்தியானால், அப்சலா கானுடன் சேர்ந்து சிவாஜியைக் கொல்ல முயன்ற கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி இந்து விரோதி இல்லையா?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியின் இந்த உருவ பொம்மையை எரிப்போம்.
🔸அக்பர் தீயவர் என்றால் பீர்பாலும் தொடரமல்லாவும் ஏன் அவனது அரண்மனையில் வேலை செய்தார்கள்?
இந்த இரு இந்து விரோதிகளின் உருவபொம்மையை ஆண்டுதோறும் எரிப்போம்.
🔹விவேகானந்தர் ஒரு இந்து மதத் துறவி என்றால், அவர் சிகாகோ தர்ம மாநாட்டிற்குச் செல்வதை அர்ச்சகர்கள் ஏன் எதிர்த்தார்கள்?
மதவெறியர்கள் என்று இந்து விரோதிகளின் உருவ பொம்மைகளை எரிப்போம்.

பலதாரமணத்திற்கு ஆதரவான பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை .. மேடைக்கு வாருங்கள்.

Sharmila Seyyid  :   பலதாரமணத்திற்கு ஆதரவாக பல பெண் சட்டத்தரணிகள் கொம்பு சீவிக் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
 இஸ்லாமிய சமூகத்தைப் பாலியல் வரட்சியிலிருந்து காப்பாற்றத்தக்க வரப்பிரசாதம் பலதாரமணம் என்பது வரையில் உளறிக் கொட்டுகிறார்கள்.
இவர்கள் ஆண்களின் மூளையில் பேசுகிறார்கள் என்ற என் முன்னைய ஒப்பீடுகள் ஒன்றும் இந்த சாமி மாடுகளுக்குப் பொருந்தாது.
ஆண்களே இவர்களுக்குள் புகுந்து சாமியாடுகிறார்கள்.
 பலதாரமணத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பும் சட்டத்தரணி பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டு மேடைக்கு வாருங்கள்.
உங்கள் கணவரின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணங்களுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும் காணொளிகளைப் பதிவேற்றுங்கள்.
நீங்கள் அரபு தேசத்துக் காசுக்குப் பேசவில்லை என்பதையும், நீங்கள் ரியல் அக்டிவிஸ்ட் தான் என்றும் இந்த சமுதாயத்தில் பலதாரமணங்களினால் நெஞ்சுடைந்து குமுறித் திரியும் மாதர்குலம் நம்பட்டும்!

சுப்பிரமணியம் சுவாமி உயிராபத்தில்? மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!

minnambalam.com -    Aara  :  “ஹரேன் பாண்டியா மாதிரி என் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன். இது உண்மையென்றால் என் நண் பர்களை நான் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு என்ன செய்கிறீர்களோ அதையே திருப்பிச் செய்வேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த இரட்டையர்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் உயர் நிலையில் இருப்பவர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர்”
இப்படியாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது பாஜகவின் டாப் வட்டாரங்களிலும், ஆர்.எஸ்.எஸ்.சின் டாப் வட்டாரங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

    I hope Modi & Shah are not planning a Haren Pandeya on me. If so I may have to alert my friends. Remember I give as good as I get. The duo have even bluffed those in the highest authority in RSS.
    — Subramanian Swamy (@Swamy39) October 31, 2022
இந்த ட்விட்டர் பதிவிட்ட சில நிமிடங்களில் சுதிர்தா மிஸ்ரா என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாணவர், “அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் நீங்கள் இரட்டையரை குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று சுவாமியிடம் கேள்வி கேட்கிறார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிஷோர் கே. சுவாமி மீது வழக்குப்பதிவு

tamil.indianexpress.com   :   கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீபாவளி முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை ஓடும் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஜமேஷா முபின் எனத் தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் சம்பவ இடத்தில் ஆணி, கோலி குண்டு, பால்ரஸ் குண்டு கண்டெடுக்கப்பட்டது.
டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு விசாரணை மேற்கொண்டார். சதிச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பண்டிகை தினம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னை வெள்ளத்தின் சாதனை மேயர் திருமதி.பிரியாராஜன் M Com

May be an image of 1 person

 Gudiyattam Kumaran Orator : மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு சென்னை மேயர் திருமதி.பிரியாராஜன் M Com அவர்கள்!
இவர்கள் தான் யார் தன்னால் என்ன முடியும் என்பதையெல்லாம் நிரூபிக்கும் முன்பே எவ்வளவு ஊடகத்தாக்குதலுக்கு உள்ளானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்!
திரு.உதயநிதி நேரடி அரசியலில் வந்த பொழுது வாரிசு வாரிசு என்று சொல்லி கூக்குரலிட்டு கும்பல் இன்னும் 30-40 ஆண்டுகள் ஆனாலும் அதையே தான் பாடும் அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்திக்கொண்டே இருக்க எழுதப்படாத சட்டம் இயற்றுவார்கள், அதே போல் அன்று வரை யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத இன்றைய மாண்புமிகு சென்னை மேயர் அவர்களை தளபதியார் அறிவித்த பொழுது ,அவ்வளவு காலம்-திரு.உதயநிதிக்கு என்ன என்ன அளவு கொள் எல்லாம் வைத்தார்களோ அதையெல்லாம் 100% கொண்ட நமது சென்னை மேயரை வார்த்தை தாக்குதலால் சிறுமை படுத்தி ஒரு ஊடக தாக்குதலே நடத்தினார்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக!

வியாழன், 3 நவம்பர், 2022

தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் .. எந்த வேலையும் செய்யாமல் ... உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

கலைஞர் செய்திகள்  : எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே தனது வளர்ப்பு நாய் கேட்பதாக காட்பாடி இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் பலரும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகமாக வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் நாய் நன்றியுடனும், நல்ல துணையாகவும் இருக்கும்.
வீட்டிற்கு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வந்தால் நாய் குறைத்து உரிமையாளருக்குக் காட்டிக் கொடுக்கும். ஏன் வீட்டிற்குள் புகுந்த பாம்புகளைக் கடித்து தனது உரிமையாளர் உயிரைக் காப்பாற்றியது நாய் என்ற செய்தியை நாம் பார்த்து படித்திருப்போம்.
அந்த அளவிற்கு நாய் நன்றியுடன் இருக்கும்.

ஆளுநரை திருப்பி அனுப்ப முடிவு - திமுகவின் திட்டம் பலிக்குமா? பிளானோடு இறங்கிய CM ஸ்டாலின்!

tamil.oneindia.com  -   Shyamsundar   :  சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெறுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆளும் திமுக தரப்பு கையெழுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆளுநருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி, திமுக அரசுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக மற்றும் தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை ஆளுநருக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை கொடுத்தது.
சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது? சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது?

பாகிஸ்தான் Ex PM இம்ரான் கானுக்கு துப்பாக்கி சூடு ... ஆபத்தில்லை

  மாலைமலர் " வசிராபாத்:: பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியினர் (பிடிஐ) சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

இவரை பார்க்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும்?”- மம்தா நெகிழ்ச்சி பேட்டி!

 kalaignarseithigal.com  -   KL Reshma   :  “இவரை பார்க்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும்?”-முதல்வரை சந்தித்த பின் மம்தா நெகிழ்ச்சி பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், தற்போது மணிப்பூர் ஆளுநராக மட்டுமல்லாமல் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மூத்த சகோதரரின் 80 ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இந்த வாரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

குஜராத்துக்கு வந்த பிரதமர்.. ஒரே இரவில் படு ஜோராக மாறிய அரசு மருத்துவமனை! gujarat Morbi Hospital Painted Ahead Of PM Modi's Visit

tamil.news18.com  : பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, குஜராத் மோர்பி பால விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு இரவோடு இரவாக போலியான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை,சரியாக  மாலை 6.40 மணிக்கு குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள தொங்கு பாலம் விபத்துக்குள்ளானது.
இதில், தற்போது 140க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற்னர்.  
பால விபத்து உலகளாவிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. உள்ளூர் முதல் மேற்கத்திய ஊடங்கங்களை வரை மோர்பி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

ராஜாஜி ஆலோசனையில் சி பா ஆதித்தனார் உருவாக்கிய நாம் தமிழர் .. சோ .+ குருமூர்த்தியால் சீமான் நாதக வாகிய கதை ..

Junior Vikatan - 30 March 2016 - பெரியோர்களே... தாய்மார்களே! - 75 |  Periyorkalae Thaimarkalae - Political column - Junior Vikatan - Vikatan

Balasubramania Adityan T : தனக்கு ஓட்டு போட தமிழ்நாட்டில் சாத்தான்குளம் தொகுதியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு எவர்சில்வர் குடம் கொடுத்து ஓட்டு வாங்கி தமிழக அரசியலை கேவலமாக ஆக்கியவர் தான் இந்த சி.பா.ஆதித்தனார்...
இதற்கு சி.பா.ஆதித்தனார் பயன் படுத்திய ஆயுதம் இலுமினாட்டி பிரீமேசன் ராஜாஜி ஆலோசனையில் உருவாக்கப்பட்ட "நாம் தமிழர்" இயக்கம்.
எவர்சில்வர் குடம் ஓட்டுக்கும்,நாம் தமிழர் என்கிற பெயருக்கும் சம்மந்தம் உண்டா ?
அதே "நாம் தமிழர்" பெயர் தற்போது இவர்களிடம் இருந்து பெறப்பட்டு நடிகர் சீமானை ஒருங்கிப்பாளர் ஆக்கி அரசியல் கட்சியாக செயல்படுத்தப் படுத்தப்படுகிறது.
சி.பா.ஆதித்தனை எவர்சில்வர் குடம் இலவசமாக கொடுக்க வைத்தது போலவே சீமானுக்கு நடிப்பு என்கிற மூலதனம் சூட்டப்பட்டு உள்ளது.
பாதிரி ஜெகத்கஸ்பர் நாடார் சொல்வதை கேட்டு நடிகர் சீமானும் பிரமாதமாக நடிக்கிறான்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொத்துக்கள் யார் யாருக்கு சென்றது? சொத்து விபர பட்டியல்

Rajamani Ganesan Ganesan  :   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உண்மையும் புனைவும்
சொத்தை தாழ்த்தப்பட்டவர்க்கு எழுதிய கதை
பசும்பொன் முத்துராமலிக்க தேவர் தன் சொத்தையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்க்கு உயிலெழுதி வச்சுட்டு செத்துப்போனாரா?
 ,அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அரைவேக்காடுகளே.
அதாவது முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டோர் மீது அதீத கரிசனம் கொண்டவர் என்றும்,
 அவர் சாதி பேதம் பார்க்காத தூய்மையாளர் என்றும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டி திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களுள் ஒரு அரைப்பொய் இது.
 ஏன் அரைப்பொய் என்றால், தமது சொத்தை பதினேழு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றைத் தமக்கென வைத்துக்கொண்டு,
மீதி பதினாறு பாகத்தை பதினாறு நபர்களுக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தார், அவர்களுள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரும் இருந்தனர் என்பது வரையில் இது உண்மையாகும்..
ஆனால் அப்பதினாறு பாக சொத்தையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோருக்கே எழுதி வைத்தார் என்பது நாய்த்தோலில் வடிகட்டிய பொய்யாகும்.
அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள்,
அருப்புக்கோட்டை வி.ஏ.சிவன்,
தூரி இராமசாமித் தேவர்,
பாரக்குளம் நல்லமுத்துத் தேவர்,
பசும்பொன் நல்லகுட்டித் தேவர்,
பசும்பொன் சின்னதம்பித் தேவர்,
பசும்பொன் ராமச்சந்திரத் தேவர்,

புதன், 2 நவம்பர், 2022

வெளிநாட்டு குடிவரவாளர்களுக்கு எதிரான புதிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ( indian origin)

புதிய பக்கா இந்து பார்ப்பன பிரதமர் ரிஷி சுணக்கின் முதல் பேச்சே இவர் யாருக்கானவர் என்பதை காட்டுகிறது..
இவரின் தாத்தா ராம்தாஸ் சுனக் அங்கு வேதிக் சொசைட்டியை தொடக்கியவராம்  Vedic Society Hindu Temple in Southampton in 1971.
அது மட்டுமல்ல அதற்காக ஒரு கோயிலே கட்டியவராம்
இவரரே  ஒரு இந்திய குடிவரவு .. ஆனால் புதிய குடிவரவாளர்களை எதிர்க்கட்சி அளவுக்கணக்கிலாமல் வருவதை ஆதரிக்கிறது என்று கூறி பிரித்தானிய மண்ணின் மைந்தர்களின் மனதில் துவேஷ விதையை விதைக்கிறார்.. இவர் பதவிக்கு தெரிவான காரணங்களை தேடுங்கள்  
ஒரு கருப்புத்தோல்  என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இவர் புகழ் பாடினால் .
எதிர்காலத்தில் இவரால் விளையப்போகும் விளைவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறோம்?
இவர்பிரதமரானதும் நாடாளுமன்றத்தில்  பேசியதில் ஒரு சிறு துளி    
"குற்றவாளிகளை ஒழித்து கட்டுவதில் கவனத்தை செலுத்துவோம்
எல்லைகளை பாதுகாப்போம்

பாஜக அண்ணாமலை கைது

நக்கீரன் : அண்மையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், இதுதொடர்பாக பாஜக  சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக  மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அங்கு போராட்டம் நடத்திய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கல்-கொலுசு திருகாணியை வைத்து தையல்: உறவினர்கள் அதிர்ச்சி

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கல்-கொலுசு திருகாணியை வைத்து தையல்: உறவினர்கள் அதிர்ச்சி

மாலைமலர் :மெலட்டூர்  தஞ்சை மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி ராதிகா (வயது 30). இவர் பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மொபட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் கண் புருவம். மற்றும் கை, காலில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கண் புருவம் மற்றும் கால் பகுதியில் தையல் போடப்பட்டு முதல் உதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனடாவுக்கு 2025 ஆம் ஆண்டிற்குள் 500 000 (ஐந்து இலட்சம்) குடிவரவாளர்கள் தேவை . கனடா அமைச்சர் Canada needs more people,' says immigration minister

கனடா குடிவரவு அமைச்சர் Sean Fraser  : கனடாவிற்கு அதிகமான குடிவரவாளர்கள் மக்கள் தேவை!
2025 ஆம் ஆண்டிற்குள் 500 000 (ஐந்து இலட்சம்)  கனடாவிற்கு வருவோரின் தொகையாக  அதிகரிப்பதே எமது   இலக்கு என்றும் அமைச்சர்  Sean  Freser  ஸீன்  பிரேசர் கூறினார்!.
Canada has just released its Immigration Levels Plan 2023-2025.
Canada will aim to welcome 465,000 new immigrants in 2023.
The target will rise to 485,000 new immigrants in 2024.
It will further rise to in 500,000 new immigrants 2025

செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

 28-10-2022 (வெள்ளிக்கிழமை) முதல் தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிகள்  நடைமுறைக்கு  வந்துவிட்டன.
1.இன்சூரன்ஸ் இல்லை என்றால்
 ரூ.5,000 அபராதம்
2.ஹெல்மெட் அணியாவிட்டால்
 ரூ.1000 அபராதம்
3.Stop line தாண்டி வண்டியை நிறுத்தினாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சாலையை கடந்தாலோ 1,500 அபலாதம்
4.லைசன்ஸ் இல்லாவிட்டால்
ரூ.5,000 அபராதம்.
5.செல்போன் பேசிய படி வண்டி ஓட்டினால் முதல் முறை
 ரூ.1000 அபராதம்
6 . ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10,000 அபராதம்.

சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு - நடிகைகள் பற்றி தரக்குறைவான பேச்சு

தினமலர் : சென்னை: சமீபத்தில் சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்
அக்கட்சி மாநில பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.,வில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இரட்டை அர்த்தம் தரும் வகையில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சைதை சாதிக்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சைத சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,

ராகுலுடன் ரோஹித் வெமுலாவின் தாய் நடைபயணம்! அரசியலமைப்பை காக்கவேண்டும் .

 minnambalam.com -  monisha  :  ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரை நடைப்பயணத்தில் ரோஹித் வெமுலாவின் தாய் பங்கேற்றுள்ளார்.
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது முதல் நாள் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகாவில் தனது நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி தற்போது தெலங்கானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று(நவம்பர் 1) 55வது நாள் பயணத்தைத் தெலங்கானா ஷம்ஷாபாத்தில் இன்று காலை தொடங்கினார். இந்த பயணத்தில் ராகுல் காந்தியுடன் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா கலந்து கொண்டார்.

நடிகை ரம்பா கார் விபத்தில் -கனடாவில்... மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபரீதம்..

tamil.news18.com    நடிகை ரம்பா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபத்து ஏற்பட்டதாக இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வார் என்பது குறிப்பிடதக்கது.

ராமஜெயம் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 11 பேர் ஆஜர் .....விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

மாலைமலர் : திருச்சி   :தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். இவர் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சுப்பிரமணியன் சாமிக்கு கொலை அச்சுறுத்தல்?.. மோடியும் அமித் ஷாவும் என்னை கொல்லக்கூடும் . ஹரேன் பாண்டியவை கொன்றது போல .... சு சாமி டுவீட்

குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியவை கொலை செய்தது போல என்னையும் ...? மோடியும் அமித் ஷாவும் முயற்சிக்கலாம் என சு. சாமியின் கடுமையான குற்றச்சாட்டு Dr. Subramanian Swamy · I hope Modi & Shah are not planning a Haren Pandeya on me. If so I may have to alert my friends. Remember I give as good as I get. The duo have even bluffed those in the highest authority in RSS. tamil.oneindia.com  -  Noorul Ahamed Jahaber Ali  : டெல்லி: கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் திட்டமிடவில்லை என்று தான் நம்புவதாக பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியன் சாமி பரபரப்பு கருத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.      முன்னாள் பாஜக எம்.பியும், பாஜக மூத்த தலைவருமாக இருந்த சுப்பிரமணியன் சாமி கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும், அரசையும் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.

குழந்தைக்கு மவுலவி செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !

Maulana Madrasa girl molested

kalaignarseithigal.com  -  KL Reshma  :    இந்தியா  பச்சிளம் குழந்தைக்கு பல நாட்களாக பாலியல் வன்கொடுமை.. ஆசிரியரே செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !
5 வயது பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்வா பகுதியை அடுத்துள்ள கத்வா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 5 வயதுடைய சிறுமியும் பயின்று வருகிறார்.
அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மு.க. ஸ்டாலின் - மம்தா பானர்ஜி விரைவில் சந்திப்பு!

ஆளுநர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள்  சந்திப்பு: டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என முதல்வர் மு.க ...

நக்கீரன் : தமிழ்நாட்டிற்கு வரவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளார்.
தமிழகத்திற்கு வரும் 2ம் தேதி வரவுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்  
இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர் அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்ல உள்ளார்.
தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் உடைந்த பாலத்தின் கன்டராக்டரும் மோடியும்

May be an image of 2 people and people standing

Muruganantham Ramasamy  :  இந்த படத்தில் இருக்கும் ஓதவ் பட்டேலின் ஒரோவா நிறுவனம்தான் மோர்பியில் விபத்திற்குள்ளான பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்றது.
கொசு அடிக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் எப்படி பாலம் புனரமைக்கும் ஒப்பந்தம் பெற்றது என எந்த ஊடகம் நீதிமன்றம் ஒருவனும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டானுக..
எப்படி ஒரு ஸ்க்ரூ கூட தயாரிக்காத அனில் அம்பானிக்கு ரஃபேல் விமான ஒப்பந்தம் கிடைச்சதுனு ராகுல்காந்தி கரடியா கத்துனப்ப அது அப்படித்தான் அதுல என்ன தப்பு?
ஹெச். ஏ .எல் க்கு திறமை போதாதுனு சஙகிகளை விட அதிகமா ஆத்துனது ஊடகத்தானுகளும் இந்தக்கேள்வியெல்லாம் காதுலயே வாங்காத நீதிமான்களும் மோசமான அயோக்கியர்கள்.
இப்ப பாருங்க பாலத்த புனரமைக்கறன்னு கிளம்புன மாநில அரசாங்கத்தின் முதலமைச்சர்,

திங்கள், 31 அக்டோபர், 2022

25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை'...

தினமணி : சென்னை: தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 446 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 3 கல்லூரிகளில் மட்டும் 100% இடங்கள் நிரப்பியுள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். என பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
 சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடந்தது.

அமைச்சர் தான் ஆனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்" : கே.என்.நேரு

minnambalam.com  கலை :“அமைச்சர் தான் ஆனாலும் வெட்கத்தை விட்டு வெளிப்படையாக சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் இன்று(அக்டோபர் 31) நடைபெற்றது. அதில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “ஆளுநர் எதிர்க்கட்சியைப் போல செயல்படுகிறார்.
பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதிப் பெரிதாக்குகின்றனர். நான் வெளிப்படையாக, வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இன்றைக்கு இருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்.

போர்ச்சுகல் நாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்.. ரியல் எஸ்டேட், விசா, குடியுரிமை..!

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு ஏற்றார் போல் இக்காலகட்டத்தில் உலகில் பல நாடுகள் முதலீட்டு அடிப்படையில் குடியுரிமை சேவையும், வாய்ப்புகளையும் அதிகரிக்கத் துவங்கியது.
இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பல தனிநபர் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு வெளிநாட்டுக் குடியுரிமை பெற மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
கொரோனாவுக்குப் பின்பு பணக்காரர்கள், முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், முதலீட்டு வங்கியாளர்கள் எனப் பலர் வெளிநாட்டில் குடியுரிமை வாங்குவதை முக்கியமான விஷயமாகக் கருதுகின்றனர். ஸ்டார்ட்அப் வெற்றி மூலம் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Morbi bridge விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை! ராகுல் காந்தி

nakkheeran.in  : குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பாலத்தின் கேபிள்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும்,
4 நாட்களுக்கு முன்புதான்  இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்தப் பாலத்தின் மீது குவிந்தனர்.

தமிழில் மருத்துவம் கற்றுக்கொடுக்க மொழிபெயர்ப்பு நடந்து வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாலைமலர் : சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோய், வலி மற்றும் நாள்பட்ட நிவாரண சிகிச்சைக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியையும் வழங்கினார். மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் வழங்க சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.

முந்தைய தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் பலமான கூட்டணியை அமைப்பார் -உதயநிதி ஸ்டாலின் ! ( பாமக உள்ளே வரும்?)

முந்தைய தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் பலமான கூட்டணியை அமைப்பார் -உதயநிதி ஸ்டாலின் !

Kalaignar Seithigal -  KL Reshma  : முதல்வர் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் கொண்டு செல்ல வேண்டும் என திமுக எம்.எல்.ஏ-வும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு - வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு - கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தி.மு.க மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

. 1710ல் இராமநாதபுர மன்னர் சேதுபதியோடு உடன் கட்டை ஏறிய 47 மனைவிமார் கிறிஸ்தவ பாதிரியார்களின் குறிப்பு

எரியும் நெருப்பையும் வேலையாட்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிவ சிவா என்று கத்திவிட்டு முன்னவரைப் போன்று தைரியமாக எரியும் நெருப்பிற்குள் குதித்தார். பின்னர் வரிசையாக மற்ற பெண்கள் குதித்தனர். சிலர் தைரியமாகவும் சிலர் ஒன்றும் புரியாத பித்தம் பிடித்தவர் போன்றும் வந்தனர். மற்றவர்களைவிடப் பலவீனமான தைரியம் குறைவான ஒரே ஒரு பெண் மட்டும் அருகில் இருந்த கிறிஸ்தவ சிப்பாயிடம் ஓடி, தன்னைக் காப்பாற்ற கெஞ்சினார். இது போன்ற காட்டு மிராண்டித்தனமான சடங்குகளுக்குத் துணை இருக்கக்கூடாது. கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சிப்பாய் இங்கு வந்திருந்தார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு பதறியதால் என்ன செய்வது என்று புரியாமல் அந்தப் பெண்ணை அந்த சிப்பாய் தள்ளிவிட்டதால் அவள் நிலை தடுமாறி தலைகுப்புற எரியும் குழிக்குள் விழுந்தாள்

 குமரேசன் சி செ :  தமிழ்பெண்ணியம்  இந்துபெண்ணியம்!
நூறு புனைவு இலக்கியத்தால் கடத்த முடியாத தமிழக பெண்களின் துன்ப வாழ்வியலை இரண்டு பக்க வரலாற்று குறிப்பு நிகழ்த்துகிறது..
தமிழ் இந்து பெண்களின்
கண்ணீர் கட்டுடைந்தபோது
அனுபவித்த
வலிமிகு வரலாற்றை
வாசிப்பவர்களின் விழிநீரும்
வழிந்தோடும் ..
உலகுக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த தமிழ்-இந்து பண்பாட்டின் இருண்ட பக்கங்கள்
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
கிபி. 1710ல் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த கிழவன் சேதுபதி இறந்தபோது அவனது நாற்பத்தியேழு மனைவியரும் உடன் கட்டை ஏறியதாக யேசு சபைப் பாதிரியார்கள் எழுதி யுள்ளனர். அப்பகுதி வருமாறு:
மறவ நாட்டின் வயதான மன்னர் 1710இல் மரணமடைந்தார். அவருடைய உடலுடன் அவருடைய மனைவியர் (47 பேர்) தங்களையும் எரித்து மாய்த்துக் கொண்ட சதி என்ற சடங்கு நடைபெற்றதாலும் அவருடைய மரணம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 

சோயா பால் (சோயா Torfu / பாலாடை / பன்னீர்) செய்வது எப்படி? செயல் முறை விளக்கம்

 namkural.com    Ambika Saravanan:  சோயா பாலின் நன்மைகள்.  
சோயா பீன்ஸ் பல சோயா பொருட்கள் செய்ய ஆதாரமாக இருக்கின்றது. அவைகள் அனைத்துமே நமது அன்றாட உணவில் பயன் படுத்தப்படுகின்றன.
சோயாவின் தொடக்கம் சீனாவில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தற்பொழுது உலகில் எல்லா இடங்களிலும் சோயா பொருட்கள் கிடைக்கின்றன. சைவ உணவை விரும்பி உண்ணுகிறவர்களுக்கு , சோயா உணவுகள் புரத சத்துக்கு ஒரு சிறந்த மாற்று. சோயா பால் ஆசிய உணவுகளில் அதிகமாக பயன் படுத்தப்படுகின்றது. சோயா பால்,  சீஸுக்கு மாற்றாக தயாரிக்கப்படும்  டோஃபுவில் (Tofu) பயன்படுத்தப்படுகிறது. இதில்  உள்ள பல விதமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருப்பதால் அனைவரும் சோயா பாலை விரும்பி பயன்படுத்துகின்றனர். இது வெனிலா, சாக்லேட் என்று பலவிதமான பிளேவரில் கிடைக்கின்றன. உப்பு சுவையுடன் கூடிய சோயா பால் சீனா  மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

குஜராத் கேபிள் பாலம் இடிந்து 32 பேர் உயிரிழப்பு... 5 நாட்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்...

 nakkheeran.in  :  கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றை கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பல நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,
படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பியில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 3 குற்றவாளிகளின் வீடுகளை இடித்தது மாவட்ட நிர்வாகம்!

tamil.oneindia.com  - Halley Karthik  :  போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளியுள்ளது.
ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(அக்.28) இந்த சிறுமி 7 பேரால் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசப்பட்டுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

தென் கொரியா: சியோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்வு ...

தினமணி : தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது.
குறுகிய தெருக்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பலி எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சோமாலியா இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலி - 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தினத்தந்தி  :  இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மொகாடிஷு(சோமாலியா),
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன.

நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்! காபியோ, சாப்பாடோ கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!.. தமிழ்நாட்டு ஊடகங்களுக்கும் பாஜகவின் செய்தி

 வி.சி. வில்வம் :  பாஜக, ஆர்.எஸ்.எஸ், ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றோரின் ஆதிக்க மனநிலை எப்படியானது தெரியுமா?
"தினமும் பத்திரிகையாளர்கள் எங்களைச் சந்திக்க வேண்டும். நாங்கள் சொல்வதை வாய் மூடி கேட்க வேண்டும்! காபியோ, சாப்பாடோ கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!
அதை மீறிய செய்திகளையோ, எங்கள் மீது விமர்சனம் தொடுக்கும் கேள்விகளையோ கேட்டால் நாயே, பேயே என்போம்,
சிலுப்ப நினைத்தால் குரங்கே என்போம்! அதையும் மீறினால் வேசி ஊடகம் என்போம். உங்களால் எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அடுத்த நாள் எங்களிடம் தான் நிற்க வேண்டும்!
"பத்திரிகையாளர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது", என்பார்கள்!
இந்த "ஜிகால்டி" வேலையெல்லாம் எங்களிடம் செல்லாது! பெரும்பாலான ஊடக உரிமையாளர்கள் எங்கள் வசம்! நீங்கள் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்!
உங்களிடம் தனித்திறமை இருக்கலாம்; பல்லாண்டு அனுபவம் இருக்கலாம்;

பெற்றோர் கடனை அடைக்க ஏலம் விடப்படும் மகள்- சகோதரி... ராஜஸ்தானில் இலட்சக்கணக்கில் விலைபோகும் அவலம்

 விகடன் : ராஜஸ்தானில் கடனை அடைக்க பெற்றோர் தங்களது மகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
நாட்டில் இன்னும் சில இடங்களில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் சிலரை அவர்களின் பெற்றோரே அனுப்பி இருக்கின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடனுக்காக பெண்களை ஏலத்தில் விட்டு கடனை அடைக்கும் கொடூரச் சம்பவங்கள் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்ட கிராமங்களில் கடன் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் அதனை திரும்ப கொடுக்க முடியவில்லையெனில், அவர்கள் தங்களது மகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் கடனை அடைக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

தென் கொரிய ஹாலோவீன் விழா கூட்ட நெரிசல்: டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு / கார்டியாக் அரஸ்ட் -

மெர்லின் தாமஸ் & வோங் பி லீ  -      பிபிசி நியூஸ் :  :  இது தொடர்பாக வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் இதில் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் Crypto Currency மோசடி! 1400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டிய சீனத்தம்பதிகள்

மலையோரம் செய்திகள்  இலங்கையர்களை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் 14000 கோடி ரூபா பணம் கொள்ளை
நாட்டில் சீன தம்பதியினரால் 1400 கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை கொள்ளையிடப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌிக்கொணர்ந்துள்ளனர்.
Crypto Currency முறையில் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தி,
பல்வேறு தரப்பினரை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சதுரங்க வேட்டை பாணி மோசடியில் ஒரு சீன பெண் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

பிரிட்டன் இனவெறியர்களின் பொம்மை சூயல்லா பிராவர்மன் (Suella Braverma) இந்திய வம்சாவளி அமைச்சர்

May be an image of 1 person

Arun Bala  :  பாகிஸ்தானில் பிறந்து, கென்யாவில் வாழ்ந்த பெற்றோர்களுக்கு இங்கிலாந்தில் பிறந்து,
வளர்ந்து, கடந்த வாரம் பிரதமராகியுள்ள ரிஷி சுனாக்கை இந்தியராக்கிக் கொண்டாடிய இந்திய ஊடகங்கள்,
அதே சுனாக் தலைமையிலான அரசில், சக்திவாய்ந்த முக்கிய அமைச்சராக ஆகியுள்ள, ஒரு இந்திய அதிலும் தமிழ் வம்சாவளிப் பெண் பற்றி இலேசாக  முனுமுனுக்கக் கூட இல்லை.
ஆனால் அவர் தான் கடந்த சில நாட்களாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதங்களிலும் ஊடகங்களிலும் முக்கிய பேசு பொருளாக இருக்கிறார்.
சூயல்லா பிராவர்மன் (Suella Braverman) என்கிற பெயர்,
மேற்கத்திய பெயர் போல இருந்தாலும் அவர் மொரீசியத் தமிழ்த் தாய்க்கும்,
கோவாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர்.