செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்.நாஞ்சில் சம்பத்

தென்காசி: நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


தென்காசியில் மதிமுக சார்பில் நேற்றிரவு இன்றைய சூழலில் தமிழ் சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா, அல்லது அடங்கியிருக்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

நடுவராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என பாராட்டப்பட்டவர் வைகோ. ஒரு ஆலை உரிமையாளரிடம் ரூ.1000 கோடி பெற்றுக் கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.

எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென்மாவட்டங்களில் அதி்முகவை தூக்கி நிறுத்தியவருமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், சாத்தூர் ராமசந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாமரை கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா.

இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரனுக்கே அங்கு இடமில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார். ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள்.

வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக் கூடாது. கனி இருக்க காயை விரும்பக் கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

MDMK to ADMK.அதிமுகவுக்கு இழப்பு ஏற்படும் வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்-மதிமுக

நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை. அவரது இந்த துரோகத்தை சாய்க்கும் வகையில் தேர்தலின்போது மதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என்று மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை. அதிமுகவின் துரோகத்தை மறக்காத மதிமுக தொண்டர்கள் தேர்தலில் தக்க முடிவு எடுப்பார்கள்.

எங்கள் மனச்சாட்சிப்படி நாங்கள் வாக்களிப்போம். ஆனால் எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்.

எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் அவரை சந்திக்க வைகோ முன்வரவில்லை.

வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபரின் பணம் சிலருக்கு போயுள்ளது என்றார் சம்பத்.

பாமகவுக்கு ஆதரவாக மதிமுக பிரசாரம்:

இந் நிலையில் தமிழகத்தில் பல இடங்களிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து மதிமுக நகரச் செயலர் வளையாபதி கூறுகையில், நான் தனியாக முடிவெடுத்து பாமகவை ஆதரிக்கவில்லை. எங்கள் மேலிடத்தில் இருந்து பாமகவை ஆதரிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி நாங்கள் பாமகவுக்கு வாக்குச் சேகரித்தோம். கிராமப்புற பகுதிகளில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்களும் பாமகவுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார்.

இதே போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
English summary
MDMK cadres will teach lession to ADMK chief Jayalalitha for expelling MDMK leader Vaiko from alliance without reason, said Vaiko's man friday Nanjil Sampath in Nagapattinam

மதில் மேல் பூனை: முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பம்

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 24 மணி நேரமே இருக்கும் நிலையில், எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் முடிவைக் கணிக்க முடியாமல், கட்சித் தொண்டர்கள் கவலையில் இருக்கின்றனர்.

அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியோடு முடிவுக்கு வந்துவிட்டது. இரு பெரும் திராவிட கட்சிகளும், தங்கள் கொள்கை முழக்கத்தை, முடித்துவிட்டனர். பெரிய கட்சிகளுக்கு இணையாக, பா.ஜ., ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகளும் இழுத்துப் பிடித்தன.பத்திரிகை விளம்பரங்களை அதிகளவில் கொடுத்து, கழகங்களையே வியப்பில் ஆழ்த்தியது ஐ.ஜே.கே., லோக்சபா தேர்தலை விட அதிகளவில் அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து, பிரசாரத்தின் தரத்தையே உயர்த்திக் காட்டியது பா.ஜ.,எல்லாவற்றையும் பார்த்த அப்பாவி வாக்காளர்கள், அமைதியே உருவமாக இருக்கின்றனர். எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என்பது தான் அவர்களின் அமைதிக்கான காரணம். வலுவான ஜாதி பின்னணியோடு, சொந்த ஊரில் செல்வாக்கு கொண்டவர்களை களத்தில் நிறுத்தி, பெருமளவு ஓட்டைப் பிளக்கிறது ஐ.ஜே.கே. "நாம் ஒன்று சேர்ந்தால் தான் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்' என்ற, அவர்களது பேச்சை ஏற்பதா என்பது முதல் குழப்பம்.

அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா, குஜராத், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நல்லாட்சி வழங்கி, தன்னை நிரூபித்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழகத்திலும் அவர்களது பிரசாரம் முனைப்போடு இருந்தது. இந்த முறை இவர்களை நம்பி, மாற்றத்தைக் கொண்டுவரலாமா என்பது இரண்டாவது குழப்பம்.ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., வால் பலன் பெறாத குடும்பம், ஒட்டுமொத்த தமிழகத்திலேயே இல்லை எனச் சொல்லுமளவு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதேனும் ஒரு வகையில், ஏதேனும் ஒரு இலவசப் பொருளோ, நிலமோ, அரசு வேலையோ, குறைந்தபட்சம் வெள்ள நிவாரணமோ கிடைத்துள்ளது. எப்படி வந்தது இந்தப் பணம் என்ற கேள்வியைப் புறந்தள்ளிவிட்டு, கொடுத்தார்களா, இல்லையா என்ற கேள்வி, வாக்காளர்கள் மனதில் இருக்கிறது.

ஊடகங்களின் வலுவான பிரசாரம் மற்றும் கடந்தகால அனுபவம் காரணமாக, "அந்தம்மா மட்டும் செய்ய மாட்டாங்களா, என்ன?' என்ற எதிர்வாதம் சாமானியர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அச்சம் வேறு. எனவே, ஏன் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பளித்துவிடக் கூடாது, என்பது மூன்றாவது குழப்பம்.ஆட்சி எப்படி இருந்தாலும், குடும்ப ஆதிக்கம் இதுவரை இல்லாத உயரத்தைத் தொட்டுவிட்டது. எந்தத் துறையை எடுத்தாலும், அவர்களின் பங்களிப்போடு நின்றுவிடாமல், போட்டியாளர்கள் துரத்தப்படுவதும் கண்கூடாக நடக்கிறது. போதாத குறைக்கு, வரலாறு காணாத மின் வெட்டு, விலைவாசி... அவற்றைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் இல்லாதது ஆகியவை ஆட்சிக்கு எதிரான சிந்தனையை வாக்காளர்கள் மனதில் விதைக்கின்றன. இதுவரை எந்தப் புகாருக்கும் ஆளாகாத விஜயகாந்தின் தே.மு.தி.க.,வும் கூட்டணியில் இணைந்திருப்பதால், ஏன் இந்த முறை ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலக் கூடாது என்பது நான்காவது குழப்பம்.

வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ள இத்தனை குழப்பங்களின் விளைவு தான், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என, தொடர்ந்து வந்த மூன்று கருத்துக் கணிப்புகளின் முடிவாக வந்திருக்கிறது. இதையெல்லாம் காணும் கட்சித் தொண்டர்கள், கவலையில் ஆழ்ந்துள்ளனர். காசு வாங்கிக்கொண்டும் நமக்கு ஓட்டு போடாமல் போய்விடுவரோ என்ற கவலை ஒருபுறம். யார் ஆண்டால் நமக்கென்ன என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்களே என்ற கவலை மறுபுறம்.இரண்டுக்கும் இடையில் தெளிவான தீர்மானம் செய்ய முடியாத நிலையில், கட்சித் தொண்டர்கள் இருக்கின்றனர். தங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என ஆளுக்கொருவரைப் பிடித்து, "எந்தக் கட்சி ஜெயிக்கும்; எவ்வளவு சீட் கிடைக்கும்' என விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைதியான, அதேசமயம் நிதானமான முடிவெடுப்பதில் தேர்ந்தவர்கள் நம் மக்கள். ராஜிவ் கொலை என்ற ஆழிப்பேரலை வீசியபோதே, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனியை வெற்றி பெற வைத்தவர்கள் மக்கள். 1996ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியை அப்படியே கவிழ்த்துப் போட்டனர். முதல்வர் ஜெயலலிதாவே தோல்வியடைய நேர்ந்தது. அடுத்த தேர்தலில், சொற்ப இடங்களிலேயே தி.மு.க., வெற்றி பெற்றது. இந்த முறையும் மக்கள் நல்ல முடிவெடுக்கலாம். என்ன முடிவெடுத்துள்ளனர் என்பதை அறிய, இன்னமும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

பிரான்ஸில் பர்தா அணிந்த 2 பெண்கள் கைது France.Two arrests at burka ban protest

ஏப்.12:  பிரான்ஸில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததையடுத்து பாரீஸில் பர்தா அணிந்து வந்த 2 முஸ்லீம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.பர்தா மீதான தடையை எதிர்த்து புரோவென்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து கென்ஸா டிரைடர் என்பவர் பர்தாவுடன் பாரீஸுக்கு பயணம் செய்தார். புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவரும், மற்றொரு பர்தா அணிந்த பெண்ணும் நாட்ரடாம் தேவாலயத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டனர்.அந்த பெண்களுக்கு 150 யூரோக்கள் அல்லது 132 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம் என டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.எனினும் சட்டவிரோதமாக கூடியதற்காக அவர்கள் எச்சரித்து விடப்பட்டதாக பொது உத்தரவு அதிகாரி அலெக்ஸிஸ் மார்சன் தெரிவித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 5 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். சிறிது நேர காவலுக்குப் பின்னர், டிரைடர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தன்மீது வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் செல்ல முடியும் என்றார்.இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. பெண்களை அடக்குவதற்காக மட்டுமே இது தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.இதனிடையே இந்த சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக குடும்பத்தில் இருந்து காப்பாற்ற அதிமுகவுக்கு வாக்களிக்க

தமிழக தேர்தல்: கோலிவுட்டின் ஆதரவு யாருக்கு?சென்னை, ஏப்.12:  நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்தனர். எனினும் கோலிவுட்டில் அமைதியாக நடைபெற்றுவரும் பிரசாரம் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.மாநிலத்தின் முதல் குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ் சினிமாவை விடுவிப்பதாகக் கூறி பரந்துபட்ட திரைப்பட கூட்டமைப்பைச் சேர்ந்த, கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திமுகவுக்கு எதிராக வாய்மொழி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோலிவுட்டை திமுக குடும்பத்தில் இருந்து காப்பாற்ற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொருவரும் 10 குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என கேமராமேன் ஒருவர் தெரிவித்தார்.நான் தந்தை பெரியாரின் தொண்டர்.  என்னுடைய வாழ்வில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் வாக்களித்ததில்லை. ஆனால் இப்போது பிடிக்கவில்லை என்றாலும் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு தள்ளப்பட்டுள்ளேன் என அவர் கூறினார். எனினும் தனது பெயரை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.மாநிலத்தின் முதல் குடும்பத்தினர் கோலிவுட்டுக்குள் நுழைந்த பிறகு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர் என திரைப்பட ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள 1300 திரையரங்குகளில் பெரும்பாலானவை முதல் குடும்பத்தினரின் பல்வேறு உறுப்பினர்களுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.  இதனால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் அவர்கள் படங்களை தயாரிப்பதை நிறுத்திவைக்க நேரிட்டது என்றார் அவர்.திரைப்படங்கள் தயாரிப்பது குறைந்ததன் காரணமாக இந்தத் துறையில் பல்வேறு வர்த்தகங்களின் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டதாக மற்றொரு திரைப்பட ஊழியர் ஒருவர் தெரிவித்தார். படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குறைந்தபட்ச படப்பிடிப்பு நாட்கள் ஒரு ஆண்டுக்கு 250 ஆக இருந்தது. தற்போது அது 100 நாட்களுக்கும் கீழே குறைந்துவிட்டது என்றார் அவர்.வடபழனியைச் சேர்ந்த தயாரிப்பாளர் விஜய் ராஜ் கூறுகையில், திரைத்துறையின் எதிர்காலத்துக்காக ஒட்டுமொத்த திரைத்துறையினரும் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

Kandhahar விமான கடத்தலில் முக்கிய சதிகாரன் ; சிலி போலீசாரிடம் சிக்கினான்: சி.பி.ஐ.,விரைந்தது

சாண்டியாகோ: முக்கிய பயங்கரவாதிகளை சிறையில் இருந்து மீட்டு செல்லவதற்காக இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்தி சென்று இந்தியாவை பணிய வைத்தசம்பவத்தின் முக்கியப்புள்ளி பல ஆண்டுகள் கழித்து சிலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் விசாரித்து மேலும் தொடர்பான விஷயங்களை கறந்து எடுக்க மத்திய சி.பி.ஐ., போலீஸ் படையினர் சிலி நாட்டுக்கு புறப்படுகின்றனர்.

கடந்த 1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி இந்திய விமானத்தை துப்பாக்கி சகிதமாக காந்தகார் நகருக்கு கடத்தி சென்றனர். 160 பயணிகள் விடுவிக்கப்பட, இந்திய சிறையில் இருக்கும் முக்கிய பயங்கரவாதிகள் 3 பேரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பத கடத்தல் காரர்களின் கோரிக்கை. இதன்படி மவுலானா மசூத் உள்பட 3 முக்கிய பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சதி திட்டத்தில் பண உதவி மற்றும் முக்கய ஆலோசகராக இருந்து இந்த கடத்தலை வெற்றிகரமாக நடத்திய பாகிஸ்தானை அப்துல்ரகூப் என்பவர் சிலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் போலி விசா மூலம் சிலிக்கு வந்தபோது இன்டர்போல் போலீசின் உதவியால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளான். இந்த தகவல் இந்தியாவுக்கு அனுப்பியதையடுத்து இந்திய சி.பி.ஐ., அதிகாரிகள் சிலி விரைந்துள்ளனர்.

யார் இந்த ரகூப்:? ரகூப் என்ற ரகூப் ஆல்வி பாகிஸ்தானை சேர்ந்தவன், இவன் விமான கடத்தல் சதிச்செயலுக்கு பிளான் போட்டு கொடுத்தவன. இத்துடன் இதற்கென ஹவாலா பணம் மூலம் 70 ஆயிரம் பயங்கரவாதிகளுக்கு கொடுத்து உதவியிருக்கிறான். இவனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு கடந்த 2000 ல் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. இவனது கை ரேகையோ , புகைப்படமோ இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்த தருணத்தில் சிலியில் சிக்கியவன் ரகூப்தானா என்று கண்டறிய பெரும் சிரமப்பட வேண்டியது இருக்கும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

Winds of change படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா!

ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம்.

இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா.

தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார்.

கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம்.

இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற நிறைய இடங்கள் இங்குள்ளன,
மேடம் ஷிராந்தியுடன் டீ பார்ட்டி எப்போ ஸ்ரேயா?

Nakheeran திமுக dmk 140-அதிமுக admk 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு

சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.


நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும், காங்கிரசுக்கு 24 இடங்களும், பாமகவுக்கு 17 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும், தேமுதிகவுக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம், சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.

Junior Vikatan அதிமுக admk 141-திமுக dmk 92 இடங்களில் முன்னிலை

அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.


மாநிலம் முழுவதும் தனது நிருபர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வை வைத்து இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது ஜூ.வி.

அதிமுக கூட்டணி 141:

இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92:

திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு தொகுதியின் நிலவரம் குறித்து அதில் விவரம் இல்லை.

சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும்

வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள்!

“சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும் என்ட தேவை இருக்கிறதுதானே அண்ணா. சண்ட நடக்கேக்கயும் நாங்க பள்ளிக்கூடம் போனோம்” விவேகமும் தைரியமும் நிறைந்த இந்த வசனங்களைக் கேட்டு உண்மையில் ஒரு கணம் உள்ளத்தில் அதிர்ச்சி நிறைந்து மறைந்தது.கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினருடன் கிளிநொச்சி சென்றபோது வழியில் நாம் சந்தித்த மாணவர்கள் கூறிய வசனங்கள் இவை.கோணாவில் கிராமத்துக்குச் செல்லும் வழியில் நாம் இந்த மாணவர்களைச் சந்தித்தோம்.

வரும் வழியில் அன்று படித்த பாடங்களை ஆர்வத்தோடு படித்துக்கொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டும் சென்ற அவர்களில் சிலருக்கு சப்பாத்து இல்லை. சிலர் பாதணிகள் அணிந்திருந்தார்கள்.வறுமையின் பிடிக்குள் வாழும் சிறுவர்கள் என்பது வெயிலை வெறித்துப்பார்க்கும் பிஞ்சு முகங்களில் தெரிந்தது.
பெயரைச் சொல்வதற்குப் பயந்து அவசரமாய் செல்ல வேண்டும் எனக் காரணம் கூறிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்துப் பேசினோம்.எதிர்பார்ப்புடன் வாழ்கையில் வறுமை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உணர்வுபூர்வமாக அந்தச் சிறுவன் கூறிய வார்த்தைகளில் வெளிப்பட்டது.
யுத்தத்தின் கோரப்பிடியில் பல வருடங்கள். இடியா, வானவேடிக்கையா, குண்டுமழையா என பிரித்தறிய முடியாத பருவங்களில் தப்பிப் பிழைத்த பொழுதுகள்.
கூடிக்குலாவி தன்னோடு விளையாடிய நண்பர்களில் சிலரை ஊனமாகப் பார்த்த அவலம்…. என அடுத்தடுத்து அடுக்கிச் சென்ற வார்த்தைகளில் கொஞ்சம் கூட சோகம் தெரியவில்லை.
ஒன்றுமறியா பிஞ்;சு உள்ளங்களில் கபடமற்று வார்த்தைகள் வெளிவந்துகொண்டிருந்ததை அவதானித்தோம்.
ஆம்..! கல்வி கற்க வேண்டும். வைத்தியராக, ஆசிரியராக, சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக்கிறது. அதனை சாத்தியப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அத்தியாவசியத் தேவைகள் கைகொடுக்கவில்லை என்பதும் புரிந்தது.
அந்தச் சிறுவர்கள் எம்மோடு பேசியதென்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். ஆனால் எமக்குள் பல்வேறு விடயங்களை விதைத்துவிட்டுச் சென்றதாய் உணர்ந்தோம்.தூரத்தில் சென்று திரும்பிப்பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்து மறைந்துபோனார்கள்.
யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகள் அளவுக்கதிகமானவை தான். ஆயினும் இவ்வாறான சிறுவர்களின் நலனுக்காக சமூக அமைப்புக்களாயினும் தனிநபர்களாயினும் இணைந்து கைகொடுப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களின் கனவு நனவாகும்.
தொகுப்பு – இராமானுஜம் நிர்ஷன்
 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவு!


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று முடிகிறது. 5 மணிக்குப் பிறகு பொதுக்கூட்டம் மற்றும் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.தமிழக சட்டசபைத் நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது.வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தேர்தலையொட்டி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொகுதி, தொகுதியாகச் சென்று ஆதரவு திரட்டினர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட், பா.ஜ. கட்சிகளின் தலைவர்களும் தங்கள் அணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!!

கரூர்: இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.


நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.

அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து எந்த இடத்தில் பேசப்போகிறார் என்று கேட்டு, அவர் செல்லும் முன்பே போய் மக்கள் காத்திருக்கின்றனர்.

"ஈழத் தமிழரின் உயிரைக் குடித்த காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதே, நமது தமிழ் சொந்தங்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் தரும் ஆறுதல். அடுத்த தலைமுறைத் தமிழனுக்கு காங்கிரஸ் கட்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட வேண்டும்" என்று அவர் பேசுவதை மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் மக்கள்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில், எதிரணி வேட்பாளர் யாராக இருந்தாலும் கட்சி பார்க்காமல் அவர்களுக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக் கொள்கிறார்.

அவரது பிரச்சாரத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

சமீபத்தில் கரூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது, அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

"அண்ணே, என்னோட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்துடாதீங்க" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாராம்.

ஆனால் சீமான் தனது திட்டத்தை மாற்றவில்லை. திட்டமிட்டபடி கரூருக்குச் சென்றார். அவர் பேச்சைக்கேட்க எக்கச்சக்க கூட்டம் .

கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தங்கை ஜோதிமணி என்னை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டிருந்தார். என்ன செய்வது... என்னால் அப்படி இருக்க முடியாது தங்கையே.

உன்னுடைய, என்னுடைய தமிழ் உறவுகளை படுகொலை செய்த மகா பாதகர்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தக் கட்சியில் இருப்பது உன்னுடைய தவறு. இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.

காங்கிரஸ் என்ற கட்சிதான் தமிழர்களின் முதல் எதிரி. இதனை ஜோதிமணி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அனல் பறக்க பேசிமுடித்தார்.
English summary

பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு:

சென்னை, ஏப். 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழக சட்டப் பேரவைக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் 4.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.  பிரசாரம் முடிந்த பிறகும், வாகன சோதனைகளும், சந்தேகமான இடங்களில் தீவிர சோதனைகளும் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  கூடுதலாக 4 ஆயிரம் போலீஸôர்: தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸôருடன் வெளி மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தமிழகத்தில் பணியில் உள்ளனர். அவர்களுடன், மேலும் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் திங்கள்கிழமை முதல் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  வெளி ஆள்களுக்குத் தடை: தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு திருமண மண்டபங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.  வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? என்பது பற்றியும், விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் எவரேனும் தங்கி உள்ளனரா என்றும் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேர்தலில் வாக்களிப்பதற்கு இந்த முறை இரண்டு ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகள் ஆவணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டன. விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, தனது திருவாரூர் தொகுதியில் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார்.  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வட சென்னை, மத்திய சென்னையில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வட சென்னை தொகுதியிலும் திங்கள்கிழமை காலை முதல் பிரசாரம் செய்ய உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்குச் சேகரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு சென்னையிலும், பாமக நிறுவனர் ராமதாஸ் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கின்றனர்.  மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகிறது.

யாழ் பொருட்கள் பனாகொட இராணுவ முகாமில். விசேட கடை

பானாகொட இராணுவ முகாமில் யாழ் பொருட்களை விற்பனை செய்வதற்காக விசேட கடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தெற்கு மக்களுக்கு வட பகுதி பொருட்கள் கிடைக்கப்பெறுமுகமாக யாழ் இராணுவத் தளபதி ஜெனரல் கத்துருசிங்கவின் ஏற்பாட்டில் அமைச்கப்பட்டுள்ள இக்கடையில் யாழ் மீன், மரக்களிகள் மட்டுமல்லாது பனை உற்பத்தி பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விற்பனை நிலையத்தின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள படையினர் நுகர்வோரிடம் தமிழ்மொழியை யாழ் பேச்சுவழக்கில் பேசுகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா!

- அ. நாராயணன்
நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன.

 தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் எல்லா வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களையும் மார்ச் 30-ம் தேதி பதிவேற்றியது.

 மிக விரைவாக 48 மணி நேரத்துக்குள் அவற்றில் உள்ள எல்லா விவரங்களையும் எடுத்துத் தொகுத்து, நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகத் தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்துள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.

 நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் என்பவர் மீது தான் மிக அதிகமாக 10 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இதுபோக, 34 இபிகோ குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன.

 இவர் போலவே, ஜெயம்கொண்டம் பாமக வேட்பாளர் காடுவெட்டி குரு மீது 9 கிரிமினல் வழக்குகளும், அந்தியூர் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா மீது 7 கிரிமினல் வழக்குகளும் உள்ளன.

 அதிகமாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேறு சில வேட்பாளர்களில் முறையே, திண்டுக்கல் பாஜக வேட்பாளர் டி.ஜி. போஸ் மீது 4 வழக்குகள், சோழவந்தான் பாமக வேட்பாளர் எம். இளஞ்செழியன் மீது 7 வழக்குகள், கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருக்குட்டி மீது 4 வழக்குகள், பட்டுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் என். செந்தில்குமார் மீது 2 வழக்குகள், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது 17 வழக்குகள், பூம்பூகார் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டி . இளஞ்செழியன் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட முக்கியமான கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 66 பேர் மீது உள்ளவை மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகள்.

 பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 அதிமுகவின் 160 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். திமுகவின் 119 வேட்பாளர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸில் 5 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 2 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஒரு பெண் வேட்பாளரைக்கூட களத்தில் இறக்கவில்லை.

 பாமக கட்சியின் பேச்சுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளியும், இரட்டை வேடமும்தான் இத்தேர்தலின் மிக முக்கிய அம்சமாகி உள்ளது. சாராய வியாபாரம், மணல் கொள்ளை, சமூக நீதி என்று தினம் ஒரு பிரச்னையைப் பேசினார் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ். இப்பொழுதோ, சிறிதும் கூச்சமின்றி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பொன்னான ஆட்சி என்று தேர்தல் ஜுரத்தினால் மாற்றிப் பேசி வருகிறார்.

 பல புரட்சிகரமான பெண்ணியக் கருத்துகளை மக்கள் தொலைக்காட்சி மூலம் பேசும் இவரது அமைப்பு வெளியிட்டுள்ள 30 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில், ஒரே ஒரு பெண்ணின் பெயர்கூட இடம் பெறவில்லை.

 பாமகவின் 30 வேட்பாளர்களில், 15 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவேளை தமிழக அரசியல் என்பது இனி வன்முறை சார்ந்துதான் இருக்கும், இதற்கு காடுவெட்டி குரு போன்றவர்கள்தான் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று கருதி, பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பாமக முடிவு செய்துவிட்டதோ என்னவோ?

 தேர்தல் களத்தில் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 240 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் மிக அதிகமாகவே சொத்துக் கணக்கு காண்பித்துள்ளனர்.

 கடந்த தேர்தலின்போது வருமான வரி அட்டை எண் குறிப்பிடாததோடு, ரூ.1.35 கோடி மட்டுமே காண்பித்த திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, இம்முறை தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பச் சொத்து மதிப்பு ரூ.15.43 கோடி.

 கடந்த முறை தேர்தலின்போது திமுக அமைச்சர் பொன்முடி அளித்த சொத்து மதிப்பு ரூ.2.98 கோடி. ஆனால், இப்பொழுது அவரது சொத்து ரூ.8.22 கோடியாக உயர்ந்துள்ளது.

 அமைச்சர்களில், கே.என். நேருவின் சொத்து விவரங்கள்தான் வியப்பைத் தூண்டுகிறது. கடந்த தேர்தலில், ரூ.2.52 கோடி அசையும் சொத்தும், ரூ. 26.9 லட்சம் அசையாச் சொத்தும் காண்பித்துள்ளார் நேரு. இம்முறை அவரது அசையாச் சொத்து ரூ. 26.9 லட்சத்திலிருந்து ரூ.15 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனது மகனின் சொத்து ரூ.14.3 கோடி என்றும், அவர் ரூ.10 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.

 இதைப் பார்க்கும்போது, நாட்டில் வாங்கும் சக்தி அதிகமாகி உள்ளது என்று சில அரசியல் தலைவர்கள் கூறி வருவது உண்மை என்றே தோன்றுகிறது.

 வேட்பாளர்களின் கடன் பற்றிய விவரங்களும் சுவாரஸ்யமானவைதான். கோடீஸ்வரர்களைவிட, கோடிகளில் கடன் வைத்திருக்கும் வேட்பாளர்கள் அதிகமாக உள்ளனர். ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 679 வேட்பாளர்களில், 269 வேட்பாளர்களுக்கு ஒரு கோடிக்கும்மேல் கடன் உள்ளது. ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் சி.காந்தி வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு ரூ.27.8 கோடி. ஆனால், அவரது சொத்தைவிட அதிகமாக ரூ.50.3 கோடி கடன் உள்ளது.

 அதேபோல, கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் வகிக்கும் ஹெச். வசந்தகுமார் அளித்துள்ள சொத்து ரூ.133 கோடி. ஆனால், அவரோ ரூ.46.85 கோடி கடன் காண்பித்துள்ளார்.

 மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு ரூ.64.45 கோடி. ஆனால், அவரது கடன் மதிப்பு ரூ.44.84 கோடி.

 முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 5 ஆண்டுகளில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி வரும் வருமானத்தை உடனுக்குடன் கொடையாக வழங்கி விடுவதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வந்தது.

 அப்படியிருக்க, 2006-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள விவரங்களின்படி, ரூ.23.55 கோடியாக இருந்த அசையும் சொத்து, 5 ஆண்டுகளில் ரூ. 40.95 கோடியாக அதிகரித்தது எப்படி என்பதுதான் புரியவில்லை.

 அதுபோலவே, 2006-ம் ஆண்டு ரூ. 2 கோடி அசையும் சொத்து காண்பித்திருந்த ஜெயலலிதா, இப்பொழுது ரூ.13 கோடியாக அசையும் சொத்து காண்பித்துள்ளார். இதையும் புரியாத புதிர் என்றே சொல்ல வேண்டும்.

 ஆக, 2006-ம் ஆண்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரங்களையும், இப்பொழுது வேட்பாளர்கள் தந்துள்ள விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும்பொழுது, கீழ்க்கண்ட புரிதல்கள் மட்டும் நமக்கு ஏற்படுகின்றன.

 அமைச்சர்கள் உள்பட பெரும்பாலான வேட்பாளர்கள், முழுமையான விவரங்களைத் தமது பிரமாணப் பத்திரத்தில் கொடுப்பதில்லை. அவர்களது கணக்கு வழக்குகள் பல குளறுபடியானவை.

 ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பணங்காய்ச்சி மரங்களாக வைத்துள்ள நிலையில், அவற்றை அறக்கட்டளைகளாக வைத்துக்கொள்ளும் எளிய வசதி நமது மக்கள் பிரதிநிதிகளில் மோசமானவர்களுக்குக் கிடைத்துள்ளது.

 ஆனால், எல்லோருமே தவறான வழியில் செயல்படுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை.

 கருப்புப் பணம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடமாக இந்தியத் தேர்தல் களம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மீண்டும் மீண்டும் கூறி வருவதை நினைவுகூர வேண்டியுள்ளது.

 அவர் கூறுவதை மெய்ப்பிப்பது போன்றே, கமுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக டீக்கடையில் பதுக்கப்பட்ட ரூ. 40 லட்சம் பறிமுதல், மதுரையில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கவர்களில் இருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல், திருச்சியில் உள்ள தனியார் மினி பஸ்ஸில் இருந்து ரூ. 5.11 கோடி பறிமுதல் என்று அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 ஆனால், இன்றைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிற வரலாறு காணாத அதிரடி நடவடிக்கைகளோ, தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகம் தசை பலத்தாலும், கள்ளப் பண பலத்தாலும் சாகடிக்கப்படக் கூடாது எனும் சீரிய நோக்கத்தின் செயல் வடிவம்தான்.

 அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகவும், தீவிரமாகவும், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் பயன்படுத்தி, தமிழகத்தில் தேர்தலைக் கண்ணியமாக நடத்தி, பணநாயக நெருக்கடி நிலையில் இருந்து, உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அவ்வமைப்புக்கு முழு ஆதரவு கொடுத்து நம் தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது.
- தினமணி

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் 2 பேர் சாவு

கொழும்பு புறப்படும் போது மயங்கி விழுந்து இறந்த பரிதாபம்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பு புறப்பட தயாராக இருந்த 2 பயணிகள் மயங்கி விழுந்து மாண்டனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை அடுத்த மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கெழும்பு செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணி அசோகா பண்டரா காமினி (வயது73) விமான பயணத்துக்கான வழக்கமான பரிசோதனைகள் முடிவடைந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய டாக்டர்கள் குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேப் போன்று நேற்று சென்னையில் இருந்து கொச்சி வழியாக கொழும்புக்கு செல்லும் விமானத்தில் கொழும்பு செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த ஆரியாவதி (71) என்பவர் வந்தார். விமான பயணத்துக்கான வழக்கமான சோதனைகள் முடிவடைந்து, அவர் விமானத்தில் ஏறுவதற்காக ஆம்னி பஸ்சில் சென்றார். அவருடன் சென்ற சக பயணிகள் இறங்கி விமானத்தை பிடித்த நிலையில், அவர் மட்டும் இருக்கையில் தனியாக அமர்ந்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அவர் அருகே சென்று பார்த்த போது, அவரும் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழுவினர் வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 பயணிகள் இறந்த சம்பவம் பற்றி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், ஜெயசீலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாழில் படையினர் நிலைகொண்டுள்ள தனியார் வீடுகள் விரைவில் விடுவிக்கப்படும் : இராணுவத் தளபதி

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத் துருப்பினர் விரைவில் அரசாங்கக் காணிகளுக்கு மாற்றப்படுவர் எனவும் இதன் மூலம் இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான வீடுகள் விடுவிக்கப்பட முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். புதுவருட காலத்தில் தமது குடும்பங்களிடமிருந்து பிரிந்திருக்கும் படைச் சிப்பாய்களுக்கு தனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதற்காக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு பலாலியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பலாலி விமானத் தளத்தில் வந்திறங்கிய இராணுவத் தளபதியை பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க வரவேற்றார். இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் சிலரும் இராணுவத் தளபதியுடன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர் சமாதான காலத்தில் சேவையாற்றுவதால் நல்லொழுக்கத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை படையினரிடம் வலியுறுத்திய இராணுவத் தளபதி, பெற்ற புகழை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.  அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இராணுவம் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியை தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு


காணாமல் போன யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை கடந்த ஒரு வாரகாலமாக காணாமல் போன நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். யாழ். சில்லாலையை சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். இவருடைய மரணத்தில் சந்தேகம் கொண்ட பெற்றோர், உடம்பில் கீறல்க் காயங்கள் காணப்படுவதால் இவரை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.ரூபனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பாக தவறான கருத்து


இலங்கை கடவுச்சீட்டு இனி புகலிடத்தமிழர்களுக்கு வழங்கப்படமாட்டாது என தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடவுச்சீட்டின்றி புலம்பெயர்நாடுகளில் அகதி அந்தஸ்து கோருபவர்கள், கடவுச்சீட்டின்றி அகதிளாக வாழ்ந்து வருபவர்கள்தான் மேற்படி சிக்கலை எதிர்கொள்ளுகின்றனர். ஏற்கனவே கடவுச்சீட்டு உள்ளவர்கள் புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது பொருந்தாது என தெரியவந்துள்ளது. இணையத்தளங்களில் வெளியான மேற்படி செய்தி குறித்து புகலிடத்தில் வாழும் தமிழர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். செய்தியை வெளியிட்ட இணையத்தளங்கள் சரியான முறையில் செய்தியை வெளியிடாதது குறித்து  தூதரக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலிகள் சிலர் மீண்டும் கைதாகியுள்ளனர்! - பிரதமர் அறிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பயங்கரவாத செயற் பாடுகளில் சம்பந்தப்பட்டதாக கிடைத்த தகவல்களை யடுத்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள தாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட் டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் விடு தலைப்புலி உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இத் திட்டம் இவ் வருடத்துக்குள் முடிப டையும் என பிரதமர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனர் வாழ்வு நிலையத்திலிந்து 313 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் முறையான வகையில் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்து வதற்காக பாதுகாப்பு படையினர் அவர்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். 70 வீதமானோருக்கான புனர்வாழ்வு நட வடிக்கையை நாங்கள் பூர்த்தி செய்துள் ளோம். இவ் வருட இறுதிக்குள் ஏனையோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கை பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்தார்

ஸ்டெர்லைட் ஆலை அகர்வாலின் கோரிக்கையால் தான் மதிமுகவை ஜெயலலிதா கூட்டணியை விட்டு விரட்டினார்

அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ

சென்னை: 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக கண்மணிகள், செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களிடம் தேர்தல் குறித்து கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் வெளி்யிட்ட இன்னொரு அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிலம், நீர், காற்று அனைத்தையும் நச்சுத்தன்மை உடையதாக்கி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்வையும், பாழாக்கி உயிருக்கே ஊறுவிளைவிக்கும் நோய்களை ஏற்படுத்துவதோடு விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும்.

இதனால், இந்த ஆலை அகற்றப்பட வேண்டும் என்று மதிமுக கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறது. தூத்துக்குடியிலும் சுற்றுவட்டாரத்திலும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் போராடினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து தற்காலிக தடை ஆணையையும் பெற்றது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நானே வழக்கு தொடுத்து வாதாடினேன்.

இந் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு தொடுத்தவன் என்ற முறையில் நானும் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் 8 வார காலத்திற்குள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு அறிக்கை தரப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நீரி நிறுவனம் தனது ஆய்வை மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த 40வது நாளில்தான் நீரி நிறுவனத்தினர் வந்தனர். ஆய்வின்போது ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்திலும் நிலத்தின் மீதும், நிலத்தின் அடியிலும் உள்ள நீரையோ அல்லது மண்ணையோ சோதிப்பதற்கு மாதிரிகளை எடுக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், எனது தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகே நீரையும், மண்ணையும் சோதனைக்கு மாதிரி எடுக்க ஒப்புக்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அந்த மாநில அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்தது. 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த ஆலை தொடங்கப்பட்டது.

போபாலில் ஏற்பட்ட ஆலை விபத்தால் நச்சுவாயு படர்ந்து மனித உயிர்கள் பலியானது போல ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலங்களும் நாசமாகும். இந்த ஆலை மூடப்பட்டாலும் இதன் நச்சுத்தன்மை சுற்றுவட்டாரத்திலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவே செய்யும். அமெரிக்காவில் ஒரு தாமிர ஆலை மூடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் அந்த வட்டாரத்தில் நச்சுத்தன்மை நீங்கவில்லை என்பது ஓர் அபாய அறிவிப்பு ஆகும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தை தர்ம யுத்தமாகவே நம்பிக்கையுடன் தொடருவோம் என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வாலின் கோரிக்கையால் தான் மதிமுகவை ஜெயலலிதா கூட்டணியை விட்டு விரட்டினார் என்று பேசப்படும் நிலையில், வைகோவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

IPL Cricket ஐ.பி.எல். அணிகளின் விலைகள்.


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விலை விபரம் (இந்திய ரூபாவில்) வருமாறு:

அணிகள், விலை, உரிமையாளர்
புனே வாரியர்ஸ், 1,702 கோடி ரூபா, சகாரா குழுமம்
கொச்சி டஸ்கர்ஸ், 1,533 கோடி ரூபா,கொச்சி கிரிக்கெட் லிமிற்றெட்
மும்பை இந்தியன்ஸ், 503.55 கோடி ரூபா, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப்ஸ்
பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ், 502.20 கோடி ரூபா, யுபி குரூப்ஸ்

ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் 481.50 கோடி ரூபா,டெக்கான் கிரானிக்கல்
சென்னை சுப்பகிங்ஸ், 413.55 கோடி ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ்
டில்லி டேர்டெவில்ஸ்,378 கோடி ரூபா, ஜி.எம்.ஆர்.குரூப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்,342 கோடி ரூபா, நெஸ்வாடியா, பிரீத்தி ஜிந்தா,
டாபர், அபிஜே சுரேந்திரா குரூப்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,337.95 கோடி ரூபா, ஷாருக்கான்,ஷýகிசாவ்லா, ஜே.மேத்தா
ராஜஸ்தான் ரோயல்ஸ்,301.50 கோடி, எமர்ஜிங் மீடியா, ஷில்பா ஷெட்டிராஜ்குந்த்ரா

வடிவேலு ஒரு டம்மி பீஸ் - பீஸ் போன பல்பு, நடிகை புவனேஸ்வரி கடும் தாக்கு

மதுரை,ஏப்.- 7 - வடிவேலு ஒரு டம்மிபீஸ், பீஸ்போன பல்பு என்று நடிகை புவனேஸ்வரி கடுமையாக தாக்கி பேசினார்
  திருச்சுழியில் அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் இசக்கிமுத்துவை ஆதரித்து  மகளிரணி செயலாளர் நடிகை புவனேஸ்வரி பிரச்சாரம் செய்தார். காரியாபட்டி ஒன்றியத்தில் வக்கனாங்குண்டு,கரியனேந்தல், தோணுகால், தண்டியேந்தல், பிசிண்டி, மல்லாங்கிணறு, வளையங்குளம், கல்குறிச்சி, காரியாப்பட்டி, நரிக்குடி ஒன்றியம் வீரசோழன்,நரிக்குடி, கட்டனூர் மற்றும் இருஞ்சிறை ஆகிய இடங்களில் நடிகை புவனேஸ்வரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்கிறார். இந்த காமெடி பீஸ் மொத்தத்தில் டம்மி பீஸ், பீஸ்போன பல்பு. கட்சியில் உறுப்பினராக  சேராமல் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏன் திமுகவில் தைரியமாக உறுப்பினராக சேரவேண்டியதுதானே. அதுக்கு தில் வேணும்.
   ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த கூட்டம் கருணாநிதி கூட்டம். அதுக்கு எத்தனை சைபர் போடவேண்டும் என்று யோசித்து போடணும். இந்த கூட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசுகிறார். அந்த குஷ்பு தமிழ்நாட்டு பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார். தமிழ்நாட்டு பெண்கள் குஷ்புவை ஊருக்குள் விடக்கூடாது. ஏப் 13ம் தேதி அராஜக ஊழலாட்சி, குடும்ப ஆட்சியை விரட்டுங்கள் என்றார். பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் எம்பி பொ.அன்பழகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்பலம், காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ராஜராஜன், தொகுதி பொறுப்பாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரசை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் - சீமான்

சென்னை, மார்ச் 25 - தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியை அது போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
தமிழக தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும். இதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனைப்படி  பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் 50 ஆண்டு காலமாக தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி. காவிரி, முல்லை பெரியாறு, கட்சத் தீவு உள்ளிட்ட எந்த பிரச்சினையிலும் தமிழருக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டதில்லை. நமது எதிரி நாடு பாகிஸ்தான் என்கிறார்கள். எதிரி நாடு பாகிஸ்தான் கடல் எல்லை மீறும் மீனவர்களை இதுவரை சுட்டதில்லை. ஆனால் நமது நட்பு நாடு என்று கூறும் இலங்கை நம் மீனவர்களை கொன்று குவித்துள்ளது.
தொடர்ந்து நம் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழின விரோத காங்கிரசை தமிழகம் முழுவதும் வேரறுப்போம். காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் காங்கிரசை வீழ்த்தும் பிரதான கட்சி வெற்றி பெறும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும். இவ்வாறு சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


புட்டப்பர்த்தி,ஏப்.- 7 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. நேற்றுமுன்தினம் இருந்தது மாதிரியே நேற்றும் சாயி பாபாவின் உடல்நிலை இருந்தது. ஆனால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனளித்து வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தெய்வமாக வணங்கும் சத்ய சாயி பாபாவுக்கு கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி திடீரென்று உடல்நிலை பாதித்தது. அவருக்கு நெஞ்சு  இறுக்கமும், சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. நுரையீரலிலும் பாதித்தது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.  இதனையொட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியது. இருந்தபோதிலும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சையின் பலன் திருப்திகரமாக இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினாலும் அவரது உடல்நிலை நேற்றுமுன்தினம் கவலைக்கிடமாக இருந்தது மாதிரியே நேற்றும் இருந்தது என்று சத்ய சாயி பாபா மருத்துவமனை இயக்குனர் ஏ.என்.சப்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவைகள் சரியாக இருக்கின்றது. இன்னும் செயற்கை சுவாச கருவி மூலம்தான் சுவாசித்து வருகிறார். டையாலிஸ் குறைக்கப்பட்டுள்ளது. அவரது உணர்வில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது

தேர்தல் ஆணையத்தை உரிய நேரத்தில் கேள்வி கேட்பேன்: கருணாநிதி

விழுப்புரம், ஏப். 9: தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதை கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பேன் என்று விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறினார்.

புதுச்சேரி: "வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்' என்று, தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் கமிஷன் எங்களை கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, தேவையற்றது என்றோ, அதை எதிர்த்தோ எதுவும் கூற விரும்பவில்லை. விழுப்புரத்தில் கூட்டம் முடிந்த பின், அரசு விருந்தினர் மாளிகையிலோ அல்லது அரசுக்கு சொந்தமான மண்டபத்திலோ நான் தங்குவதற்கு அனுமதி இல்லை. எங்குதான் தங்கினேன் என்று கேட்பீர்கள். விழுப்புரத்தில் தி.மு.க., அலுவலகத்தில் உள்ள அறையில் தங்கிவிட்டு புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்தேன். தேர்தல் கமிஷனின் பெரிய அதிகாரியான சேஷன் என்ற பெரியவர், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில், நியாயமாக நடக்க முற்பட்டதால், அவரை போலீசாரை கொண்டு துரத்தினர். அவர் விமான நிலையத்தில் ஒளிந்து கொண்டார். பின், காரில் ஏறி வேக வேகமாக தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்குள் சென்றார். பெரிய கும்பல் சுற்றி வளைத்து ஓட்டலை அடித்து நொறுக்கியது. இது, மறந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், நடந்த செய்தி. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், தேர்தல் கமிஷன் என்றால் அப்படித் தான் அடிக்க வேண்டும், நொறுக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காக அல்ல.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய வீரர்களுக்கு இந்திய அரசு சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பரிசை தமிழகம் சார்பில் அளிக்க வேண்டும் என விரும்பினேன். தமிழக வீரர் அஸ்வினுக்கு 1 கோடி ரூபாய், அந்த குழுவுக்கு 3 கோடி ரூபாய் என, மொத்தம் 4 கோடி பரிசு அறிவித்தேன். தேர்தலுக்கு பின் விதிக்கப்பட்ட முறைப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் வழியாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், முதல்வர் பரிசு வழங்கும் காட்சியை படமாக எடுக்கக் கூடாது என்று நிபந்தனை வைக்கப்பட்டது. பரிசு வழங்குவதை அடுத்த மாதம் 13ம் தேதிக்குப் பிறகு ஒத்தி வைத்துள்ளேன். 6 கோடி மக்களில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி நடத்துபவருக்கு இதுதான் நிலை. தேர்தல் கமிஷன் விதிகளை மீற விரும்பவில்லை. குற்றம்சாட்டி எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அடுத்தடுத்த தேர்தலிலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எத்தனை அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Ramadas:ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை

திண்டிவனம் நகரில் தீர்த்த குளம், முருங்கப்பாக்கம், ரோஷணை, கரிய கவுண்டர் வீதி, அவரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது : நான் திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி வர ரோடில் இறங்கி போராடியுள்ளேன். மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது, அரசு மருத்துவமனைக்கு செய்த நன்மைகள் ஏராளம். நிச்சயம் கருணாநிதி தான் முதல்வராக வருவார்.அவர் மூலம் திண்டிவனத்திற்கு நீங்கள் விரும்புகின்றவற்றை செய்து தருவேன். சங்கர் நல்ல வேட்பாளர். இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஜெ., மாணவர்களை ஆடு, மாடு மேய்க்க போகுமாறு கூறுகிறார். கருணாநிதி மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்து, படிக்க கூறுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர். அப்படிபட்ட அ.தி.மு.க.,விற்கு எப்படி ஓட்டு போட முடியும்? கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெ., காப்பியடித்துள்ளார். கருணாநிதி மக்கள் உண்ண, உடுக்க, உறங்க வழி செய்துள்ளார். வேட்பாளர் சங்கர் கடுமையாக உழைப்பவர். நானே எம்.எல்.ஏ.,வாக இருந்து அவரை இயக்குவேன். தி.மு.க., தலைமையிலான கூட்டணி சமய, சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்? anna hazare

ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?
vijayakanth-1கடந்த 5 நாட்களாக இந்தியாவே ஒரு புதிய புரட்சிக்காக ஆயத்தமானது, அன்னா ஹஸாரே என்ற 73 வயது காந்தியவாதியின் தலைமையில். ஆனால் இது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி அல்ல. ஊழலுக்கு எதிரான புரட்சி.

'India against corruption' என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.

குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.

பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு.... இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்... ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

சரி... புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி... சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்.... ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.

'இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்' என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்!

பொலிஸ் சேவையில் இணைய வடக்கிலிருந்து 3 ஆயிரம் விண்ணப்பங்கள்


police2 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்ள நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கு இலங்கைப் பொலிஸ் திணைக்களம் திட்டமிடுகிறது.  பொலிஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்கு நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 இல் ஆரம்பமாகுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இதேவேளை, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்துக்குக் கிடைத்திருக்கிறது. முன்னர் வட மாகாண இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைவதில் விரும்பம் கொண்டிராத தன்மையிருந்ததாகவும் இப்போது குறிப்பிடத்தக்களவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வட மாகாணத்திலிருந்து கிடைத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறுகிறது. ஆனால், இரண்டாயிரம் வெற்றிடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 400 வெற்றிடங்கள் உதவி இன்ஸ்பெக்டர்களுக்கும் 1600 வெற்றிடங்கள் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகளுக்கும் உள்ளன. ஆண்கள்,பெண்கள் என இரு சாராரும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். வட,கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டிலுள்ள பல நிலையங்களில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும்.

கலைஞர்: அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள்.

என்னை திட்டியவர்கள், என்னை வசைபொழிந்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை எனக்கு பிறகு என்னை வாழ்த்தத்தான் போகிறார்கள் என, கலைஞர் பேசினார்.
விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர்,
எத்தனை எத்தனை தோழர்கள், எத்தனை எத்தனை இளைஞர்கள், எத்தனை எத்தனை முதியவர்கள் வளர்த்த இயக்கம் இந்த இயக்கம். என்னுடைய அருமை நண்பர் திருமாவளவன் இங்கே பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி உங்களுக்கு அது தெரியுமா. இது தெரியுமா என்று கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிடர் இயக்கத்தினுடைய மூலம் தெரியுமா என்று கேட்டார். திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்கள் யார் யார் என்று தெரியுமா என்று கேட்டார். இதெற்கெல்லாம் ஒரே பதில் வந்திருக்கும். கேள்வி வடிவத்தில். திராவிடர் இயக்கம் என்றால் என்ன என்று யார் இடத்திலே இவர் கேட்டாரோ அவரிடத்திலே இந்த கேள்வி வந்திருந்தால் யாரும் ஆச்சரியப்பட தேவையில்லை.
திராவிடர் இயக்கத்தை அழிக்க இன்றைக்கு புறப்பட்டிருக்கிற ஒரு அம்மையார், திராவிடர் இயக்கத்தை அழித்தே தீருவேன். பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை, இவைகளையெல்லாம் அப்படியே புரட்டி போட்டு இந்த இயக்கத்தை அழிப்பதற்கு புறப்பட்டிருக்கிற ஒரு அம்மையார், உங்களிடத்திலே ஆதரவு கேட்கிறார் என்றால் எதற்கு,. ஆட்சி செலுத்துவதற்காக அல்ல. இந்த ராஜ்யத்தை தான் பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவருடைய மூல நோக்கம். திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும். அந்த நோக்கத்துக்கு ஆதரவாக பெரும்படை. பத்திரிகை படை. அவரிடத்திலே இருக்கிறது. அந்த படையை நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம். ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை என்றைக்கும் நாம் கட்டுப்படுத்துவது இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை நாம் வளர்த்தோமே தவிர, அதை வதைத்தவர்கள் அல்ல. அந்த சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரே காரத்தினால் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். எந்த செய்தியை வேண்டுமானாலும் போடுகிறார்கள்.
இங்கே தம்பி திருமா கேட்டதைப்போல், என்னைப் பற்றி அவர்கள் எழுதுகின்ற செய்திகள், எழுதுகின்ற கதைகள், என்னைப்பற்றி செய்கின்ற பிரச்சாரங்கள் இவைகள் எல்லாம் என்னை எதுவும் செய்து விடவில்லை. நான் அதற்கு மாறாக வளர்ந்து கொண்டே இருக்கிறேன். அவர்கள் வசைபாடட்டும். வசைபாடட்டும்.
அண்ணா ஒருமுறை கேட்டார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை தாக்கிப் பேசும்போது, அண்ணா சொன்னார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா சொன்னார். என்னை இவ்வளவு காலம் திட்டி திட்டித்தான், இங்கே வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள். இன்னும் திட்டுகிறீர்கள் என்னை எங்கே உட்கார வைக்க உத்தேசம் என்று கேட்டார். அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். இவர்கள் திட்டாவிட்டால், இவர்கள் வசைபாடாவிட்டால், நம்முடைய டாக்டர் ராமதாஸ் வாயால் இவ்வளவு வாழ்த்து கிடைத்திருக்குமா. இவர்கள் என்னை இவ்வளவு கேவலமாக பேசாவிட்டால், நம்முடைய திருமாவளவன் வாயால் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்திருக்குமா. நம்முடைய காதர் மொய்தீன் அவர்கள் இவ்வளவு போற்றி புகழ்ந்திருப்பாரா.
அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள். நீங்கள் திட்ட திட்ட, நீங்கள் வசைபாடி பொழிய பொழிய எனக்கு அன்பால், பாசத்தால், பூரிப்பால், உறவால், உண்மையான இதயத்தால் புகழ்பாட, புகழ்பாடி பொழிய டாக்டர் அவர்களும், திருமா போன்றவர்களும்
இருக்கிறார்கள். எனவே நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.


இந்த அன்பு, இந்த உறவு இருந்தால் போதும். என்னை பாராட்டியவர்கள், என்னை திட்டியவர்கள், என்னை வசைபொழிந்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை எனக்கு பிறகு என்னை வாழ்த்தத்தான் போகிறார்கள். என்னை இழிவுப்படுத்தியவர்கள் எல்லாம், ஒரு காலத்திலே என்னை கேவலப்படுத்தியவர்கள் எல்லாம், அதற்காக கண்களிலே கண்ணீர் துளிகளை ஏந்தி கொண்டு வந்து, வருந்திய காலத்தை நான் பார்த்திருக்கின்றேன். நான் அதற்காக கவலைப்படவில்லை. அதனால்தான் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன அந்த வைர வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்ல விரும்புகின்றேன்.
எனக்கு இவர்கள் வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும் இவர்கள் நம்மை தாக்கினாலும், தாக்காவிட்டாலும், என்னுடைய உற்றார், உறவு என்னுடைய பக்கத்திலே அமர்ந்து இருக்கிறது. என்னுடைய உற்றார் உறவினர்கள் என் எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களைவிடவா. உங்களை விட்டா அவர்களுடைய உறவை நாடப் போகிறேன். இல்லை.
இப்படிப்பட்ட நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது நமக்கு காரியம் பெரிது. வீரியம் பெரியதல்ல என்றார்.