சனி, 14 செப்டம்பர், 2024

மிரட்டப்பட்டாரா திருமா? வாருங்கள் விவாதிப்போம் - LR Jagadheesan !

May be an image of 2 people and text

LR Jagadheesan :  மிரட்டப்பட்டாரா திருமா? வாருங்கள் விவாதிப்போம்
வெளியில் தெரியாமல் மிரட்டல் விடுவதும் பணியவைப்பதும் எப்படின்னு உலகத்துக்கே பாடம் எடுத்தவை/எடுப்பவை அதிமுகவும் திமுகவும். அதிலும் ஜெயலலிதா அதில் பிதாமகி. இன்றளவும் அவருக்கு ஈடு வைக்க ஆளில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கடுமையாக முயல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை.
தற்போதைய திமுக அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஸார் எம்ஜிஆர்இறந்தபோது ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்தார். பின் அவர் தலைமையிலான அதிமுகவில் சேர விரும்பினார். அவரும் அவர் மனைவியும் போயஸ்தோட்டம் வந்து ஜெயலலிதாவிடம் நேரில் மன்னிப்பு கோரினால் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அவருக்கு “அறிவுறுத்தப்பட்டது”. அவரும் மனைவியோடு போயஸ்தோட்டம் போனார்.
அங்கே போனபின் “அம்மா” காலில் விழும்படி சொல்லப்பட்டது. அவர் மட்டுமல்ல. அவர் மனைவியும் விழவேண்டும் என்பது குறிப்பாக சொல்லப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாக இருவரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள். பின்னால் இருந்து அந்தகாட்சி வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

நெப்போலியன் மகன் கல்யாணத்திற்கு முன்பு திடீரென வெளியிட்ட வீடியோ

 tamil.oneindia.com -  V Vasanthi  :  சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு அடுத்த மாதம் நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது என்று கூறியிருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து ஜப்பான் செல்லும் வழியில் தான் எடுக்கும் வீடியோக்களை அடுத்தடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!

 minnambalm -Kavi  :  “அன்னபூர்ணா சீனிவாசனை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது இணையத்தில் வைரலான நிலையில், அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விளக்கமளித்து மன்னிப்பு கோரிய வீடியோ அதைவிட வேகமாக பரவி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  “ஒரே மாவு ஒரே சமையலறை ஒரே மாஸ்டர்… ஆனால் வரி மட்டும் ரெண்டு. இதைக் கேட்டால் மன்னிப்பு கேட்க வேண்டுமா?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சுதாசேஷையனின் நியமனம் தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன..

May be an image of 1 person and smiling

தமிழ்க்கவி  :  பேருக்குத்தான் திராவிடம் ஆடல் ஆட்சி...
உள்ளே நன நடப்பதெல்லாம் வேறு விடயம்
நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்க..
சுதாசேஷையனின் நியமனம் தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் சுதா சேஷையன்.
இவருக்கு தமிழக ஆளுநர் ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருந்தார்.
அந்த ஒரு வருட பணி நீட்டிப்பும் கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக மத்திய அரசு சுதா சேஷையனை நியமித்திருக்கிறது.

எஸ் வி சேகர் : நிர்மலா சீதாராமன் கோவை ஓட்டல் முதலாளியை மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன் . இனி நான் பாஜகவில் இல்லை

அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - நடிகர் எஸ்.வி சேகர்  காட்டம் - தமிழ்நாடு

tamil.oneindia.com -  Rajkumar R  :   கோவை: கோவை அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இந்த விவகாரத்தை கடுமையாக கண்டித்து உள்ளதோடு
இனி பாஜகவில் தொடரப்போவதில்லை என கூறியிருக்கிறார். மேலும் சீனிவாசன் சமூகம் சார்ந்த ஒரு லட்சம் ஓட்டுகள் பாஜவுக்கு கிடைக்காது என கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக நேற்று முன் தினம் கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் - கோவை எம்.பி

 மாலை மலர் :   ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

மணலி துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து: இருளில் மூழ்கிய சென்னை

 மாலை மலர் :  சென்னை மணலி துணை மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை முழுவதும் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது.
மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மத்திய சென்னை, வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மின்சார சேவையில் தடை ஏற்பட்டது. மின்தடையால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பிரதான சாலைகள் அனைத்திலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

வியாழன், 12 செப்டம்பர், 2024

“தர்மம்” ஆபத்தான சொல்! சனாதன லீக்ஸ் - தினகர ஞானகுருசாமி

May be an image of 1 person, temple and text

Dhinakaran Chelliah :  “தர்மம்” ஆபத்தான சொல்!
ஜில்லா பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், அசாம் கண பரிஷத், விதான் பரிஷத்( மேலவை) இப்படி பல பரிஷத் பற்றி கேள்விப் பட்டுள்ளோம்,
ஆனால் “பரிஷத்” ற்கான அர்த்தம் தெரிந்திருக்காது.
அன்றாடம் நாம் புழங்கும் சொற்களில் முக்கியமானது “ தர்மம்”ஆகும், ஆனால் இது எவ்வளவு ஆபத்தான சொல் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
“ஸ்ம்ருதி முக்தாபலம்” என்பது தர்ம சாஸ்திர நூல்கள் அனைத்தையும் திரட்டி வைத்தியநாத தீஷிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
இந்த நூலில்”தர்மம்”பற்றியும் “பரிஷத்”, அதாவது ஒரு நீதி வழங்கும் சபையின் லட்சணம் பற்றியும் வேறு வேறு தர்ம சாஸ்திர நூல்கள் கூறுபவற்றைத் தொகுத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த நூலில் உள்ள விளக்கத்தைப் பார்ப்போம்;
!!!பரிஷத்தின்(சபை) லக்ஷணம்!!

போலீஸ் தாக்கியதால் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. காட்டுமன்னார்குடி

Demonstration demanding justice for the  jewelry worker in Kattumannarkoil

  nakkheeran.in  :  காட்டுமன்னார்குடி தியாகராஜ தெருவைச் சேர்ந்த காமராஜ்(50) நகை செய்யும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள அன்னை தெரசா நகருக்கு நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஆகஸ்ட் 31 ம் தேதி இரவு சென்றுள்ளார்.  
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டுமன்னார்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  காமராஜை அடித்து  மன வேதனை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செவ்வணக்கம் தோழர்!” சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

 tamil.oneindia.com  Vignesh Selvaraj :   சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தோழர் சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

மனைவியை கழற்றி விட்ட ஜெயம் ரவி, அடுக்கடுக்கான புகார்களை குவித்த ஆர்த்தி!! பக்கா பிளான் போட்டு ...

tamil.asianetnews.com :   ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்துள்ள ஆர்த்தி இன்று வெளியிட்ட  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை பார்க்கும் போது...
ஜெயம் ரவி பிளான் பண்ணி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழில் கடந்த 2003-ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கிய 'ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருடைய அடையாளமாக ஜெயம் என்கிற சொல் மாறியதை தொடர்ந்து 'ஜெயம் ரவி' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

புதன், 11 செப்டம்பர், 2024

Donald டிரம்ப் கமலா Haris நேரடி debate

 nakkheeran.in :  நானா? நீயா?- நேரடி விவாதத்தில் மோதிய அதிபர் வேட்பாளர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தில் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் தங்களது கருத்துக்களை நேருக்கு நேர் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடக்கும் நேரடி விவாதத்தில் ட்ரம்ப் பேசுகையில், ''கமலா அதிபர் ஆனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும். ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் நாடே இல்லாமல் போகும். பைடனின் தவறான கொள்கைகளை கமலாவும் பின்பற்றுகிறார்.

மது போதையில் மாணவன் மீது தாக்குதல்: பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு

 மாலை மலர் :  பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர். கால்பந்து விளையாடிவிட்டு உணவருந்த சென்ற மாணவனை பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதானிக்காக வங்கிகளை திவாலாக்கிய மோடி!

aramonline.in  :    பார்க்கும் நிறுவனங்களை எல்லாம் அதானியின் உடமையாக்குவதற்கும், அவர் கேட்கும் கடன் தள்ளுபடிகளை எல்லாம் வாரி வழங்கி, வங்கிகளை திவாலாக்குவதற்கும் என்றே உருவாக்கப்பட்டது தானா இந்த ஆட்சி..? மக்களின் சேமிப்பை எல்லாம் மன்னவரே திருடனுக்கு தாரை வார்ப்பதா?
சேமித்த பணத்தை சுருட்டியவர்களுக்கும், கடன் வாங்கி கம்பி நீட்டியவர்களுக்கும் இந்த நாட்டில் பஞ்சமில்லை என்றாலும், அரசாங்கமே ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவ முடியுமா? என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்!

  tamil.news18.com  : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் பேசிய ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் மார்க்சிய சிந்தனையாளராக உள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்துவிட்டார்.
கடந்த 52 ஆண்டுகளாகவே அமெரிக்காவில் கருக்கலைப்பு பிரச்சினையாக உள்ளது. பைடன் ஆட்சியில் 9 மாதங்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர்.” என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல் கமலா ஹாரிஸ் பேசுகையில், “நடுத்தர மக்களுக்கான பொருளாதார மேம்பாடுதான் எனது லட்சியம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்” என்று பேசியுள்ளார்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்!

மதுரையில் உதயநிதி- தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்..என்னாச்சு?

 tamil.oneindia.com  - Rajkumar R  : மதுரை : மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு சென்றார்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஓட்டல்களில் உணவு பார்சல் . உணவு சூடு ஆறாமல் இருக்க சில வழிமுறைகள்

May be an image of 1 person, dim sum, tofu and text

வெங்கடேஷ் ஆறுமுகம் :  பார்சல் என்னும் கலை
ஓட்டல்களில் உணவுகளை பார்சல் செய்ய, உணவு சூடு ஆறாமல் இருக்க இன்றைக்கு நவீன பேக்கிங் மெட்டீரியல்கள் ஏராளமாக வந்து விட்டன.
இருந்தாலும் அன்றைக்கு எல்லா ஓட்டல்களிலும் பார்சல் என்றால் நியூஸ் பேப்பரும், வாழையிலையும் தான். அந்த பார்சல் கட்டுவதும் ஒரு தனிக்கலை என்பதே உண்மை.
“இட்லிக்கு வலிக்காம கட்டுப்பா” என என் தந்தை அடிக்கடி சொல்வார்.
பார்சலில் முதலில் இட்லியிலிருந்து வருவோம். இட்லி ஒரு பார்சலுக்கு 2 அதிகபட்சம் 4 இருப்பதே சரியான பார்சல் முறை ஆகும்.
10 இட்லி பார்சல் கேட்டாலும் அப்பா இரண்டு 4 இட்லிகள் பொட்டலங்களும் ஒரு 2இட்லிகள் பொட்டலமும் தான் தருவார்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! -

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

tamil.news18.com  - Malaiarasu M  : தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவை பேசச் சொன்னது யார்? சிக்கிய கல்வி அதிகாரி வாக்குமூலம்!

மின்னம்பலம் -Selvam :  மகாவிஷ்ணு விவகாரம் பற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் விசாரணை நடத்திய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளி ஆகியவற்றில் சர்ச்சையாக பேசி தற்போது சிறையில் இருக்கிறார் பரம்பொருள் ஃபவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு.
தற்போது பள்ளிக்கல்வித் துறைக்குள் ஆசிரியர்கள் மற்றும் மாண்வர்களிடையே முக்கியமான பேசுபொருள், ‘அந்த மகாவிஷ்ணுவை பள்ளிக்கு அழைத்து வந்தது யார்?  அவர் பேச அனுமதி கொடுத்தது யார்?  பரிந்துரைத்தது யார்?’ என்பதுதான். ெப்டம்பர்  6 ஆம் தேதி சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் பள்ளி வாசலில் போராட்டம் நடத்தினார்கள்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

சாரு நிவேதா : டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…

 charuonline.com  : என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.  அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள்.  
கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது.  
அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு.  இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு.  
நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது.  
ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல.  அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது.  
கோடீஸ்வரனான பிறகும் அவர் கண்டக்டராக இருந்தபோது அடித்த மக்டவல் விஸ்கியையே அடித்தார் என்றாலும், மற்ற பொதுவான விஷயங்களில் அவர் ஒரு கோடீஸ்வரரைப் போலவே நடந்து கொண்டார்.   திடீர்ப் பணக்காரர்களுக்கு இது ஒரு தலையாய பிரச்சினை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  இரவு ஏழு மணிக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.  தமிழ் சினிமாவின் நம்பர் ஒன்.  கமல், ரஜினி இருவரையும் வாடா போடா என்று அழைக்கக் கூடியவர்.  ரெமி மார்ட்டினா, விஸ்கியா என்று கேட்டார். 

வவுனியாவில் 14 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; முன்னாள் போராளிக்கு எதிராக முறைப்பாடு

May be an image of 1 person, beard and smiling

ilakkiyainfo.com : வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (07) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான இளைஞர் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

மத்திய பிரதேசத்தில் நடு ரோட்டில் பாலியல் வன்புணர்வு! தடுக்கமால் வீடியோ எடுத்த மக்கள்

நடு ரோட்டில் இளம்பெண் வன்கொடுமை... தடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்த கொடூரர்கள்... பாஜக மாநிலத்தில் அவலம்!

கலைஞர் செய்திகள -KL Reshma  :  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதில் முதன்மையாக திகழ்கிறது.
இந்த சூழலில் தற்போது பாஜக ஆளும் ம.பியில் பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்போக்காளர்களுக்கு அவங்க கேட்கும் வடைகள் சுட முடியாது

May be an image of 5 people and people studying

Loganayaki Lona  :  முற்போக்காளர் பள்ளிக்குள் வர வேண்டும் வர வேண்டும்..நீங்கள் வராமல் அரசைக்குறை சொல்லாதீர்கள் என திமுகவினர் சிலர் முற்போக்காளர்களை  சாடுகின்றனர்.
இந்தப்பள்ளி நான் பணி செய்த கிராமத்துக்கு அருகில் உள்ள அரசுப்பள்ளி.
ஆனால் என்னோட பணி இட எல்லைக்குள் இல்லை.அருகில் உள்ள பள்ளி தான்.அந்தகிராம மாணவிகள் பேருந்தில் தினமும் கவனித்ததால்,பேசியதால் தங்கள் ஊர் மாணவர்கள் ஹார்ன்ஸ்,கூல்லிப் பயன்படுத்துவதாக கூறினர்.
இது குறித்து துறை அதிகாரிக்கு அறிவித்தோம்.அவர்களது நடவடிக்கை எந்த அளவு முழுமை பெற்றது என்பது தெரியாது.
மீண்டும் அதே பள்ளி குறித்து புகார்கள் வந்தன.அந்த தலைமை ஆசிரியரிடம் பள்ளி இடைநின்ற எங்கள் பகுதி மாணவர்களை சேர்ப்பது குறித்து ஏற்கனவே சிலமுறை  பேசியிருக்கிறேன்.