![]() |
LR Jagadheesan : மிரட்டப்பட்டாரா திருமா? வாருங்கள் விவாதிப்போம்
வெளியில் தெரியாமல் மிரட்டல் விடுவதும் பணியவைப்பதும் எப்படின்னு உலகத்துக்கே பாடம் எடுத்தவை/எடுப்பவை அதிமுகவும் திமுகவும். அதிலும் ஜெயலலிதா அதில் பிதாமகி. இன்றளவும் அவருக்கு ஈடு வைக்க ஆளில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கடுமையாக முயல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை.
தற்போதைய திமுக அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஸார் எம்ஜிஆர்இறந்தபோது ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்தார். பின் அவர் தலைமையிலான அதிமுகவில் சேர விரும்பினார். அவரும் அவர் மனைவியும் போயஸ்தோட்டம் வந்து ஜெயலலிதாவிடம் நேரில் மன்னிப்பு கோரினால் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அவருக்கு “அறிவுறுத்தப்பட்டது”. அவரும் மனைவியோடு போயஸ்தோட்டம் போனார்.
அங்கே போனபின் “அம்மா” காலில் விழும்படி சொல்லப்பட்டது. அவர் மட்டுமல்ல. அவர் மனைவியும் விழவேண்டும் என்பது குறிப்பாக சொல்லப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாக இருவரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள். பின்னால் இருந்து அந்தகாட்சி வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுக்கப்பட்டது.