செவ்வாய், 31 டிசம்பர், 2019

கேரளா CAA சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல் மாநிலம்! Breaking news .. வீடியோ


மின்னம்பலம் :சிஏஏவுக்கு எதிராகக் கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரை சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பம் முதலே போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் பேரணிகளும் நடைபெற்றன. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக நார்வே பெண்ணை மத்திய அரசு கொச்சியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.
அண்மையில் கண்ணூர் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிஃப் கான் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதாக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் இதுபோன்று சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

நெல்லை கண்ணனுக்கு நெஞ்சுவலி: போராட்டம் அறிவித்த பாஜக

 நெல்லை கண்ணனுக்கு நெஞ்சுவலி: போராட்டம் அறிவித்த பாஜகமின்னம்பலம் :
பிரதமரையும், அமித் ஷாவையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யவில்லை என்றால் மெரினாவில் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 29 ஆம் தேதி நெல்லையில் எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், ‘மோடி பிரதமர். ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, இவர் சோலி முடிஞ்சுடுச்சு. அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கியலே... நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்கனு நானும் நினைச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணும் நடக்கமாட்டேங்குது. ஒரு சாயபும் பண்ணித் தரமாட்டேங்குதான்” என்று பேசியிருந்தார்.
இது மோடியையும், அமித் ஷாவையும் கொலை செய்ய தூண்டும் பேச்சு என்று ஹெச்.ராஜா உள்ளிட்டோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

`ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்!" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்?

பிபின் ராவத் - ஜியா உல் ஹக் விகடன் : 2019-ம் ஆண்டு முடிவதற்குள், இந்த முடிவின்மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், பிபின் ராவத். ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் பிபின் ராவத், இன்றோடு ஓய்வுபெற்றார். தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியில் இருப்பவர் ஓய்வுபெறும் வயது 65 என சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், பிபின் ராவத் இன்னும் 4 ஆண்டுகள், முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதக் கேடயமாக மாற்றப்பட்ட காஷ்மீரி இளைஞர்பிபின் ராவத்முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பொறுப்பில் இருப்பவர், ஏதாவது ஒரு படையில் தளபதியாக இருந்திருக்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பில் வழங்கப்பட்ட அதே சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம். இந்தப் பதவி, நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. கார்கில் போருக்குப் பின், பாதுகாப்புத்துறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், `முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சுப்ரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டது. எனினும், இது செயல்வடிவம் பெறாமல் இருந்தது.
கடந்த சுதந்திர தின விழா உரையில், பிரதமர் மோடி இதுகுறித்துப் பேசியிருந்தார். அதன்படி, தற்போது பிபின் ராவத் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயணிகள் ரெயில் கட்டணம் உயர்வு - இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

மாலைமலர் :பயணிகளுக்கான ரெயில் கட்டணங்களை இந்தியன் ரெயில்வே இன்று திடீரென உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி: பயணிகளுக்கான ரெயில் கட்டணங்களை இந்தியன் ரெயில்வே இன்று திடீரென உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. குளிர்சாதன வசதி ரெயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு சாதாரண ரெயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள பயணிகள் ரெயில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த கட்டண உயர்வு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது. மேலும், சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஜப்பானில் ஒதுங்கும் கொரியா படகுகள் ...2 தலைகள்... 5 உடல்கள்..


படகுபடகு2 தலைகள்... 5 உடல்கள்.. கொரிய எழுத்துகள்.. ஜப்பான் தீவில் கரை ஒதுங்கிய `பேய்ப் படகு'! vikatan.com/ - ராம் பிரசாத் : ஜப்பானில் கரை ஒதுங்கிய மர்மப் படகில் கிடந்த சடலங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜப்பானின் சாடோ தீவு அருகே நேற்று மர்மப் படகு ஒன்று கரை ஒதுங்கியது. வெள்ளிக்கிழமையன்றே படகு சாடோ தீவுக்கு அருகில் மிதந்துகொண்டிருந்ததைப் பொதுமக்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக மர்மப் படகுக்கு அருகே செல்ல முடியாத சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில்தான் படகானது சனிக்கிழமை மாலை தரைதட்டியது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாகியது.

தமிழக அகதிகள் முகாமில் வாழும் ‘நாடற்ற இந்தியத் தமிழர் ‘, குடியுரிமை.

Subaguna Rajan : தமிழக அகதிகள் முகாமில் வாழும் ‘நாடற்ற இந்தியத் தமிழர் ‘, குடியுரிமை.
இந்துத்துவ ராஷ்ட்ரா உருவாக்கும் அவதியின் வடிவமான இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களில், தமிழ்நாட்டின் குரலில் இருந்த ஒரு மாறுபாடு, இலங்கைத் தமிழர் குடியுரிமை தொடர்பிலானது. ‘இந்துக்கள்’ எனும் வகையில் அடங்கங்கூடியவர்களான இவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்பது கேள்வி.
நான் மிகவும் மதிக்கும் ‘உடன்பிறப்புப் ‘பதிவர் ஒருவர் உட்படப் பலர் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை ஏன் இழுக்கிறீர்கள், ‘அவர்கள் யாரும் இங்கே குடியுரிமை பெறத் தவிப்பதில்லையே ‘என்பது அவர்கள் வாதம். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை அவர்களது விருப்பம் அகதி நிலையை வைத்து ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் குடியுரிமை பெறுவதுதான் என்றார்கள்.
என்னிடமும் ஆதாரமான தரவுகள் இல்லாததால் சற்றுக் குழம்பித்தான் போனேன். முகாம் மற்றும் வெளியே இருக்கும் தோழர்களிடம் இதுபற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களை பெற முயன்றேன். அப்போதுதான் தோழர் காமராஜ் அவர்கள் பின்னூட்டத்திலுள்ள காணொலிப் பதிவையும், இலங்கை மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சடகோபன் எழுதிய ‘மலையகமும் மறுவாழ்வும் ‘ என்ற நூலைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

திங்கள், 30 டிசம்பர், 2019

தேவதாசி ஒழிப்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் .. முத்துலட்சுமி ரெட்டிஆகியோரின் ..பங்களிப்புகள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் தாய் தேவதாசி குலத்தில்
பிறந்தவர். தந்தை பார்ப்பனர். அவர் கல்வி கற்று இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் மற்றும் முதல் சட்ட மன்ற உறுப்பினர் என்று நியமனம் செய்யப் படும் வரை அவர் ஒரு பார்ப்பனப் பெண்ணாக வளர்க்கப்பட்டு, பார்ப்பன உள நிலையிலேயே வளர்ந்தார். அவருக்கு பார்ப்பனியத்துக்கான உயர் சாதிய
எண்ணம் மற்றும் இந்திய தேசிய சித்தாந்தம் ஆகியவற்றில் ஈர்ப்பு அதிகம். 1926 இல் அவர் ச. ம. உ. நியமிக்கப் பட்ட பொழுது, பெண்களுகளுக்கு சட்டமன்ற உருப்பினராகும் தகுதி கிடையாது என்று இருந்த விதியை 1924 இல் மாற்றியமைத்து பெண்களுக்கு முழு உறிமை உண்டு என்று சட்டம் இயற்றி, முத்துலட்சுமி ரெட்டி ச. ம. உ. ஆக வழிவகுத்த நீதிக்கட்சியினருடன் மல்லுக் கட்டினார். காரணம் அவர்கள் பார்ப்பனிய விரோதிகள் என்பதால். அதனால் நீதிக் கட்சிக்கு எதிரணியில் செயலாற்றினார். இந்திய தேசியத்துக்காக முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கினார். இந்தக் காலக் கட்டத்தில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவ தாசி ஒழிப்பிற்காக வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருந்தார்.

தேவதாசிகள சிஸ்டம் எவ்வளவு உசத்தி... அதை சிதைச்ச பெரியாரை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் .. பத்மாசினி (சின்மயி அம்மா)


மீ டூ புகழ் சின்மயியம்மா பதமாசினி : 
தேவதாசி திட்டம் எப்பேர்ப்பட்ட உயர்ந்த திட்டம் .?
Entire பாரத தேசத்துக்கும் அது எப்பேர்ப்பட்ட திட்டம்? .
அதை சிதைச்சது பெரியார் .. அதனால அந்த பெரியாரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் ..
அப்போ தேவதாசிகளாக எத்தனை பார்ப்பார பெண்கள் பணிபபுரிந்தனர்? குறிப்பிட்ட ஒரு சில ஜாதிகளுக்கு உரிய தொழிலாகத்தானே உங்களவா அதை வைந்திருந்தார்கள்?
அந்த தேவதாசிகளிடம் செல்வதற்கு உங்க வீட்டு ஆண்கள் சலுகை பெற்று இருந்தார்களே? கோயில்களில் உள்ள தேவதாசிகளுக்கு ஒரு புரோக்கர்கள் ஆக கடமையாற்றியது கோயிலவாதானே?
அது உசத்தியான தொழிலாக இருந்தால் ஏன் உங்கள் வீட்டு பெண்கள் ஒரு போதும் அதை செய்யவில்லை?
உங்களவா எங்கே இலாபம் இருக்கிறதோ அங்கே போய் அதை களவாடுவது உங்க பாரம்பரியம். நீங்கள் போற்றும் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா அந்த ஜாதிதானே? பணமும் புகழும் கொழிக்கும் அவரை லவட்டி கொண்டுபோய் அவரும் ஒரு பார்ப்பனர் என்று நம்பவைத்த கில்லாடித்தனம் எல்லாம் வரலாற்றில் மறைத்து விட கூடிய இரகசியங்களா என்ன?

மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது என அதிமுக அரசு.... கோல போராட்டம் வீடியோ


தினகரன் : சென்னை: மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்தது. ஆனால் திமுக இதற்கு எதிராக வாக்கு அளித்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திமுக சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக சென்னையில் பேரணி நடத்தியது.
இதுதொடர்பாக 8,000 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. தற்போது, CAA,NRCக்கு எதிராக கோலப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
சென்னையில் கோலம் வரைந்த பெண்கள் 5 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது, இன்று அவரது ஆழ்வார்ப்பேட்டை, கோபாலபுர இல்லங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சி.க்கு எதிராகவும் கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முளைகட்டிய தானியங்கள்...!!

வெப்துனியா :முளைகட்டிய பயறுகளில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். தானியங்கள் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. முளைவிட்ட கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும்  பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன.
சிறுதானியமான கம்பை முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
இது உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயத்தை  வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

வீடியோ காலில் யானையுடன் பேசிய பாகனின் மனைவி

வீடியோ காலில் யானையுடன் பேசிய பாகனின் மனைவிவெப்துனியா : தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமிற்கு சென்ற யானையுடன் பாகனின் மனைவி வீடியோ காலில் பேசியதும், அதற்கு யானை பதில் அளித்த விதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் 12-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 2-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இயற்கை சூழலுடன் நண்பர்களை கண்ட யானைகள் துள்ளி குதித்து விளையாடி வருகின்றன. இவைகள் தவிர மவுத் ஆர்கன் வாசித்தும், நடனமாடியும், கால்பந்து விளையாடியும் மகிழ்ந்து வருகின்றன.

இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா?


இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா? மின்னம்பலம் : இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா? எஸ்என்எஸ் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று(டிசம்பர் 29) நடைபெற்றது.
பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப்படத்தில் ராதாரவி, ரோபோ ஷங்கர், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், மதுமிதா உள்ளிட்டவர்களோடு பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சொத்துகள்: சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம்!

சொத்துகள்:  சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம்!மின்னம்பலம் : பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட கரன்சித் தாள்களைப் பயன்படுத்தி சசிகலா 1,674 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலாக தானும் ஜெயலலிதாவும் பங்குதாரர்கள் என்று சசிகலா தெரிவித்ததையும் வருமான வரித்துறை பதிவு செய்திருந்தது. இந்நிலையில்... இது தொடர்பாக சில சாட்சிகளின் வாக்குமூலங்களோடு சசிகலா தன் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் ஆதாரமாக இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் 2017-ல் நவம்பர் மாதம் சோதனை நடத்தியபோது அந்த கடிதம் கிடைத்தது என்று வருமான வரித்துறை கூறுகிறது. பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017-ல் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அந்தக் கடிதம் பற்றி விவேக்கிடம் கே

நெல்லை கண்ணன் கைதாகிரரா.. மோடி, அமித் ஷாவை சோலியை முடிச்சுடுவீங்கன்னு பார்த்தேன்... வில்லங்க வீடியோ .


மின்னம்பலம் : மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தாலும் தமிழகத்தில் அமைதியாக ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் உயிராபத்து ஏற்படுத்தும் அளவுக்கு நெல்லையில் எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமை மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசியிருக்கிறார் என்று டிஜிபியிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று (டிசம்பர் 30) புகார் அளித்திருக்கிறார்.
அப்படி நெல்லை கண்ணன் அந்த மாநாட்டில் என்ன பேசியிருக்கிறார்? நெல்லை கண்ணன் பொதுவாகவே தன் மேடைப் பேச்சில் அனைவரையுமே அவன், இவன் என்ற ஏக விகுதியோடுதான் குறிப்பிடுவார்.

ஜார்கான்ட் பழங்குடியினர் மீதான வழக்குகள் நீக்கம் .. நெஞ்சில் பால்வார்த்த ஹேமந்த் சோரன்

முதல் கையெழுத்து: பழங்குடியினர் நெஞ்சில் பால்வார்த்த ஹேமந்த் சோரன்மின்னம்பலம் : ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக நேற்று (டிசம்பர் 29) பதவியேற்றுக்கொண்ட ஹேமந்த் சோரன் தனது முதல் நடவடிக்கையாக, பதல்கடி இயக்கம் நடத்திய பழங்குடியினர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
இதற்கு முந்தைய முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில், பழங்குடியினரின் நில சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, தொழிற்சாலைகளுக்கு அவற்றை வழங்க வழி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின அமைப்பினர் தொடங்கிய இயக்கம்தான் பதல்கடி.
பதல்கடி, பதல்கரி என்றும் உச்சரிக்கப்படுகிறது. 2018இல் இந்த பெயர் நாடெங்கும் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. 2018 ஜூன் 19 அன்று, ஐந்து தன்னார்வ தொண்டு ஊழியர்கள் பதல்கடி இயக்கத்துடன் தொடர்புடைய ஆயுதமேந்தியவர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அவர்கள் தெரு நாடகம் செய்து கொண்டிருந்தனர். பதல்கடி ஆதரவாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களை ‘டிக்கஸ்’ (வெளியாட்கள்) என்று முத்திரை குத்தினார்கள்.

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம் ....குஜராத் அதிகாரிகள் தகவல் !

gujarath வெப்துனியா:  குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் நகரின் ஹதிஜன் என்ற பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் நித்யானந்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 இந்த நிலையில் நித்யானந்தா, நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதை மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று, மத்திய அரசு, வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பிடித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.

ஸ்டாலின் கனிமொழி வீட்டு முற்றங்களிலும் CAA-NRC" வேண்டாம் என கோலமிட்டு நெத்தியடி.

 rangoli to against CAA in stalin home rangoli to against CAA in stalin homerangoli to against CAA in stalin homeநக்கீரன் : குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு "Against CAA, Against NRC" என எழுதி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெசன்ட் நகரில் பொது இடம், வீட்டு வாசலில் கோலம் போடும் போராட்டம் நடத்திய 6 பெண்கள் காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
 இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  வரும்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில், "அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது" என கூறி கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

நாங்கள் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்கள் .. வாரணாசி குருக்களின் பேட்டி.. வீடியோ

எனது பெயர் பத்து பிரசாத் சாஸ்த்திரி .  நான் துளசி மானஸ் கோயிலின் பிரதம குருக்கள் . நான் வாரணாசி வேதவிற்பன்னர்கள் சங்க தலைவர். நான் சாஸ்திரங்களை நம்புபவன். நான் இந்து  அடிப்படைவாதியாகும் .நான் ஜாதியையும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறேன் .. அதை நம்புகிறேன்.
கடவுளின் வாயிலிருந்து  பிராமணன் பிறந்தான்!  கைகளில் இருந்து  சத்திரியன் பிறந்தான் .! . வயிற்றில் இருந்து வைசியன் பிறந்தான் . கால்களில் இருந்து சூத்திரன் பிறந்தான்.
நான் வேதத்தில் இருந்ததை கூறுகிறேன் .
சிருஷ்டியை வேதமாதா  விளக்கி  கூறுகிறது..
வேதசாஸ்திர கண்ணாடி மூலமாக  மட்டுமே இந்த உலகை பார்க்க நாம் அறியமுடியும்.
வேறு விதமான வழிகளில் உலகை அறிய முயல்வது தவறு.
நான் விமானத்தை ஓட்ட முடியாது . அதை பைலட்தான் செலுத்த முடியும் .அது போலத்தான் ஒவ்வொரு வேலைக்கும் ஒருவர் இருக்கிரான் .
ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் பிரம்மாவினால் விதிக்கப்பட்டு இருக்கிறது.
நாங்கள் எப்படி கற்று கொடுத்தாலும் ஒருவர் வேறு ஜாதிகளின் தொழிலை செய்ய முடியாது .
ஏனெனில் ஒவ்வொருவருக்கும் உரிய தொழில் பல பிறவிகளின் கர்ம வினைப்படி வந்து சேர்க்கிறது
வெறுமனே ஒருவர் படித்து விட்டு உயர்ந்த ஜாதிக்குரிய தொழிலை செய்துவிட முடியாது . அது பல பிறவிகளின் பயனாக வருவது.
நீ ஏன் சூத்திரனாக பிறக்கின்றாய்?
நீ ஏன் பெண்ணாக பிறக்கின்றாய்?
ஒருவருக்கு ஏன் தோல் வெள்ளையாக இருக்கிறது?
வேறு ஒருவருக்கு ஏன் தோல் கருப்பாக இருக்கிறது?
இதெல்லாம் ஜென்ம ஜென்மாந்திரங்களில் செய்த கர்ம வினை பலனாகவே வருகிறது.

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள்

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள் தினத்தந்தி :  இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். புதுடெல்லி, பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல், அந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார். இந்த
ஆண்டின் கடைசி நிகழ்ச்சியான அதில் அவர் பேசியதாவது:- நம் நாட்டு இளைஞர்கள் நமது அமைப்புமுறையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன்.

திமுகவின் வெற்றியை தன் வியாபார கணக்கில் சேர்க்க துடிக்கும் பிரசாந்த் கிஷோர்

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்பிரசாந்த் கிஷோரின் `பிப்ரவரி புரோகிராம்!’ -அறிவாலயத்தை அலர்ட் செய்த ஸ்டாலின் குடும்பம் VikatanExclusive ஆ.விஜயானந்த் - விகடன் : வரக்கூடிய தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். நம்முடைய வெற்றியை அவர்களின் ஃபுரபைலில் சேர்த்துக்கொள்வார்கள். இதற்காக இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டுமா?
`தேர்தல் வித்தகர்’ பிரசாந்த் கிஷோர் வருகையால் உடன்பிறப்புகள் மத்தியில் உள்ள அச்சம் இன்னும் அகலவில்லை. `உங்கள் கட்சியின் கட்டமைப்பில் தலையிட மாட்டோம் என பி.கே தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து தேர்தல் பணிகள் தொடங்க உள்ளன’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டில் வைத்து பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையொப்பமான அன்று பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் பிரநிதிநி மட்டுமே உடன் இருந்தார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு ஆகியோரும் வந்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தால் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

பூர்வகுடி மக்களை துரத்தும் PWD அயோக்கியர்களே..... கபாலீஸ்வர கோயில் சொத்துகளை வாடைகையோ குத்தைகையோ ...

Parpana Pudinki : காலம் காலமாக சென்னையில் வாழும் பூர்வகுடி மக்களை துரத்தும் PWD அயோக்கியர்களே, இவர்களை விரட்ட துப்பு இருக்கா? மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி
வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனகளின் பட்டியல் பெரிது.
வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

தலித்தாக இருப்பது பிரச்சனை... ஆனால் ஏழை தலித்தாக இருப்பது அதைவிட .

Shalin Maria Lawrence : அதாவது தோழர்,
இங்கே முகநூலில் உட்கார்ந்துகொண்டு என் தலைவர் பெரியவரா ? உன் தலைவர் பெரியவரா ? என்று சண்டை போடுவோம் ஆனால் இதுபோன்ற சண்டை போடுவோர் களம் கண்டு அடிபட்டதாக பெரிதாக பார்த்ததில்லை.
தோழர் இசையரசு அம்பேத்கர் போன்றோர் எந்த கட்சியையும் இயக்கத்தையும் சாராமல் தனி ஆளாக பல வருடங்களாக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் .இவர்களுக்கான ஆதரவு என்பது பெரிதும் கிடையாது.
எந்த கட்சியை சேர்ந்தவர்களும்( கம்யூனிஸ்ட் கட்சியை தவிர) எங்களுக்கு துணையாக நின்று பூர்வகுடிகளுக்காக போராடுவது கிடையாது.
பூர்வ குடிமக்கள் வெளியேறுவதில் ஆளுங்கட்சி முதற்கொண்டு பல
கட்சிகளும் கூட்டு களவாணிகளாகவே இருக்கின்றன. அதனாலேயே பல நேரங்களில் கள்ள மௌனம்.
சென்னை எங்கள் கோட்டை என்று மார்தட்டிக்கொள்ளும் எந்த திராவிட கட்சியும் ஓட்டு போட்ட எங்கள் மக்களுக்காக களத்திற்கு போராட வருவதில்லை.
எங்களைப் போன்றோர் முடிந்தவரை எழுதியும் பார்த்தாயிற்று, பேசியும் பார்த்தாயிற்று ,இசை அரசு போல் சிலர் களத்திற்கு சென்று போராடியும் பார்த்தாயிற்று ...ஆனால் சென்னையின் பிரச்சினைகளுக்கு அதிகமான ஊடக வெளிச்சமும் கவனமும் கிடைப்பதில்லை.

தமிழகம் முழுவதும் CAA எதிர்ப்புக் கோலங்கள்...

மின்னம்பலம் : கோலம் வரைந்து சிஏஏ,
சிஏஏ: தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கோலங்கள்!என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை காவல் துறை கைது செய்ததற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று (டிசம்பர் 29) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து பெண்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் கோலம் வரைய அனுமதி மறுத்தனர். அதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, 7 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று பெசன்ட் நகர் சமுதாயக் கூடத்தில் அடைத்துவைத்தனர். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரையும் விடுவித்தனர். அவர்கள் மீது முன் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜார்க்கண்ட்டில் ராகுல் ஸ்டாலின் மம்தா கனிமொழி டி ஆர் பாலு ....

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த ஜார்க்கண்ட்
மின்னம்பலம : ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று (டிசம்பர் 29) பதவியேற்றார். நடந்து முடிந்த ஜார்க்கண்ட்
சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள மோரகபடி மைதானத்தில் இன்று பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில், ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ஹேமந்த் சோரனுடன் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆலாம்கர் அலாம், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஓரோன் மற்றும் ஆர்ஜேடி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் சிங் பாகெல், ஹேமந்த் சோரனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CAA சிஏஏ: 10, 000 பேர் மீது வழக்கு, கோலமிட்டவர்கள் கைது!

சிஏஏ: 10, 000 பேர் மீது வழக்கு, கோலமிட்டவர்கள் கைது!மின்னம்பலம் : சிஏஏ எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட 10,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்படவே நேற்று காலை ஆலந்தூர் சிமெண்ட் சாலையில் பேரணி தொடங்கியது.
பேரணியில் கலந்துகொண்ட 10,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், 650 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்திக் கொண்டு, சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக முழக்கம் இட்டபடி சென்றனர். பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கடந்து ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே முடிந்தது.இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார் .. கர்நாடக அரசு 3 நாள் துக்கம்:

கர்நாடக அரசு 3 நாள் துக்கம்:  பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர் உடல் பெங்களூரு வந்ததுஉடலுக்கு ராணுவ மரியாதைபிரதமர் மோடியுடன் பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர்மாலைமலர் : உடல்நலக்குறைவால் இன்று காலமான பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர் உடலுக்கு பெங்களூரு பசவனகுடி பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் பல்வேறு மத்திய - மாநில மந்திரிகள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். சுவாமி விஷ்வேஷா தீர்த்தரின் மறைவுக்கு கர்நாடக அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என எடியூரப்பா அறிவித்தார்.

இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்?

பாம் ஆயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?பாம் ஆயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?;ரஞ்ஜன் அருண் பிரசாத -பிபிசி தமிழுக்காக  :  இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் முள் தேங்காய் செய்கையை இடை நிறுத்தி வைக்க அரசு முன்பு முடிவெடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.
மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து, இந்த முள் தேங்காய் சாகுபடிக்கு நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் தரவும், ரப்பர் மற்றும் தேயிலையைவிட அதிக லாபம் தரும் பயிர் செய்கையை நோக்கி நகரும் முயற்சி என்றும் நிறுவங்கள் தரப்பு கூறுகிறது.

ஜன. 16ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்"- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

education minister say, jan 16th students was not come to schools
nakkheeran.in - பா. சந்தோஷ் : பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான ஜனவரி 16- ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16- ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உரையை காண்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறவில்லை. மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே டி.வி.யில் பார்த்துக்கொள்ளலாம். மாணவர்கள் பயப்படாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனவரி 16- ஆம் தேதி பிரதமர் டெல்லியில் உரையாற்றுகிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி ..

மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை!.
அதற்கு காரணம் அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே.
அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்!
இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடையாகும். .
பிறப்பு, இறப்பு, மறுபிறவி , உயிர்,; கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும் போதே மதங்கள் அவை பற்றி வகுப்பெடுத்த கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும் .
இந்த கதைகள் எமது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே விடாது.
இது ஒரு ஆபத்து என்றால் அடுத்த ஆபத்து இதை எல்லாம் பொத்தாம் பொதுவாக மூர்க்கமாக மறுத்து வேறொரு பக்கத்தில் இருந்து வாதங்கள் வந்துவிடும் .
இதுவும் உண்மையை அலசி ஆராயும் வாய்ப்புக்களை மறுத்து விடும் தடைதான்.
இந்த இருபகுதியினரின் கோட்பாடுகளையும் மீறித்தான் உண்மையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. .
இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.

அஸ்ஸாமில் 426 குடும்பங்களின் வீடுகளை இடித்து அவர்களை முகாம்களில்..... அரங்கேறும் நரவேட்டை ..வீடியோ


Saeedhullah : அஸ்ஸாமில் தொடங்கியது நர வேட்டை . தேசியகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி மக்கள் கிளர்ச்சி தொடரும் நிலையில் சத்தமில்லாமல் சட்டத்தை இரக்கமின்றி அமுல்படுத்த துவங்கியுள்ளனர்...
முதல் கட்டமாக அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வனாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிந்து வந்த 426 குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டு உடனடியாக அவர்கள் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமக்கப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளது...
எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 426 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்பட 1800 நபர்கள் தங கள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் வானத்தை வெறித்து பார்த்தபடி உள்ளனர்...
கடந்த பத்து நாட்களாக இணையதள வசதிகள் துண்டித்த காரணமாக அஸ்ஸாம் அரசின் இந்த நரவேட்டை வெளியுலகிறகு தெரியாமல் இருக்க விசயத்தை கேள்விபட்ட அஸ்ஸாம் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள் காவல் துறை கெடுபிடிகளை மீறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 426 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி தைரியமூட்டினர் ...

BBC : பிரியங்கா காந்தி: “உத்தர பிரதேச காவலர்கள் என் கழுத்தைப் பிடித்து திருகினர்”.... வீடியோ

லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியைக் கைது செய்ததற்காக அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற போது இவ்வாறு நடந்ததாகக் கூறினார் பிரியங்கா காந்தி.
76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி இந்த வாரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்வதற்காக முதலில் இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்தும் பின்னர் நடந்தும் சென்றார் பிரியங்கா காந்தி. அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.
பிரியங்கா காந்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

சனி, 28 டிசம்பர், 2019

தமிழக அகதி முகாம்களில் வசிக்கும் மலையக தமிழர்களின் .... கௌரவ முருகன் சிவலிங்கம் அறிக்கை

Murugan Sivalingam : தமிழக அகதி முகாம்களில் வசிக்கும் மலையக அகதிகள்
மூவர் ¸ 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் எழுதிய கடிதத்தை எனது இணையத்தளத்தில் வாசித்து விட்டு என்னோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்களில் பலரின் விருப்பங்கள் தமிழகத்திலேயே குடியுரிமை பெற விரும்புவதாகவும் இலங்கை குடியுரிமை பெற விரும்புபவர்களை இந்திய அரசே அறிந்து ஆவண செய்ய வேண்டும் என்பதும் அத்துடன் வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் தமிழகம் வந்து சென்றுள்ளதாகவும் மலையக மக்கள் பற்றி மலையகத் தலைவர்கள் இவ்விவகாரம் பற்றி பேச வருவார்களா என்றும் கேட்டுள்ளார்கள். மலையக மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் அன்று எழுதிய கீழ்காணும் எனது கடிதத்தை வாசிக்கலாம்.ஓர் அகதி இன்று எழுதிய கடிதத்தை அடுத்து முகநூலில் பதி விடுவேன்....
''தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்
Hon. Members of Parliament
அவசர வேண்டுகோள்.
தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..
Bill on granting Sri Lankan citizenship to Indian origin Tamil refugees in Tamil Nadu refugee camps..
இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.
இன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.;

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்மாலைமலர் : தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கூறியுள்ளனர். அகமதாபாத்: பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 2 மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி சிறை வைத்து இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியது தெரிய வந்தது. மேலும் அந்த இரு பெண்களும் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர்.
அதில், ‘எங்களை யாரும் கடத்தவில்லை. எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என கூறி இருந்தனர். இதற்கிடையே கடத்தல் வழக்கில் நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்ற போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களையும் அவருடன் அழைத்து சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு குஜராத் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கைதிகளால் பண மழையில் நனையும் தமிழக சிறைச்சாலை அதிகாரிகள்!

prison officers in tamilnaduprison officers in tamilnaduprison officers in tamilnadunakkheeran.in - ஜெ.டி.ஆர் : தமிழக அரசியல்வாதிகள் டெண்டர்களில் கமிஷன் வாங்கி பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் எங்கள் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை கொடுக்காமல் கொடுத்தாக கணக்கு காட்டி கைதியையும், அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார்கள். இது குறித்து இது வரை எந்த செய்தியும் வெளிவந்ததே இல்லை என்று சில கைதிகளும், சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளும் நம்மிடம் பேசினர், தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 22,332 கைதிகளை அடைக்க இடவசதி உள்ளது.
அவர்கள் நம்மிடம் பேசினதை அப்படியே தருகிறோம்…

நைஜீரியாவில் மீண்டும் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ- வெளியிட்டது ஐஎஸ் ஆதரவு அமைப்பு


veerakesari : நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இதனை செய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பான ஐஎஸ்டபில்யூஏபீ தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையே தலையைதுண்டித்து படுகொலைசெய்துள்ளாக ஐஎஸ் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் 11 பேர் வரிசையாக நிற்பதை காணமுடிகின்றது. முதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவதையும் பின்னர் ஏனையவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. இதன் பின்னர் அந்த வீடியோவில் தோன்றும் முகமூடியணிந்த நபர் ஒருவர் ஐஎஸ்தலைவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இவர்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிடுகின்றார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : 10,000 மாணவர்கள் மீது வழக்கா?

 சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : 10,000 மாணவர்கள் மீது வழக்கா?மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 1000 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதுடன் தொலைபேசி சேவைகளும், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.
சிஏஏவுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைக் காட்டிலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவு போராடி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி ... வீடியோ

மாலைமலர் : குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் தலைமையில் பேரணி நடைபெற்றது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். ஆலந்தூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை நோக்கி இன்று பேரணி செல்லப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி ஆலந்தூர் கோர்ட்டு அருகே அந்த அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் காலையில் இருந்தே குவிந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சம்சுல்லுகா தலைமையில் ஆலந்தூர் கோர்ட்டு அருகே இருந்து பேரணி புறப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நடத்தப்பட்ட இந்த பேரணி மிகவும் பிரமாண்டமாக இருந்தது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் பங்கேற்றனர்.

நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவனக்கம் .... நீதித்துறையில் ஒரு திராவிட விதை


Karuna Skp : திராவிட வித்தான நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவணக்கம்!!!
இந்த மோகன் ரொம்ப வருத்தம் தேரிவிச்சேன்னு உன் அம்மாவிடம் போய்
சொல்லு!.....
நிஜமான சாதனையாளர்கள், பெரும் ஆளுமைகள் பலருடன் ஒரு நாள், ஒரு கணமேனும் பார்த்துப் பழக வாய்க்கப் பெற்ற பெருவாழ்வு எனது.
ராஜீவ் படுகொலையின் போது அன்று இரவே அந்தக் கொலைப்பழி திமுக மீது போடப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் வன்முறைக்கான
கதவு கேள்வி கேட்பாரேயின்றி திறந்துவிடப் பட்டதை 90களுக்குப் பின் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அது குஜராத் மாடலுக்கான மினி முன்னோட்டம்.
திமுகவினர் வீடுகள், தொழில்கள் என தேடி தேடி அழிக்கப்பட்டன. பற்றியெரியும் தீயை அணைக்ககூட தீயணைப்பு வண்டி வரவில்லை. அப்படிதான் வெளியூரில்
நிறுத்தப்பட்டிருந்த எங்களது பேருந்து ஒன்று முழுவதுமாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது எங்கள் தொழிலுக்கு பெரிய பின்னடைவும், மன வேதனையையும் அளித்தச் சம்பவம்.
பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும்

திமுகவின் ராஜதந்திரம் பாய்ச்சல் வேகத்தில் .... பேரணி தடையும் அதை முறியடித்த வியுகமும் ...

tamil.oneindia.com - ArsathKan ; சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக நடத்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் ஸ்டாலின்.
அரசியலில் கருணாநிதிக்கு இணையாக மதிநுட்பத்துடனும், ராஜதந்திரத்துடனும் யாராலும் காய்களை நகர்த்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில் அவரிடம் கற்ற ராஜதந்திரத்தை ஸ்டாலின் இப்போது பயன்படுத்தியுள்ளார்.
பேரணிக்கு தடைகோரி வாராஹி என்பவர் தொடர்ந்த வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் யாரையும் ஆஜராக்காமலேயே அதில் வெற்றி கண்டு நினைத்ததை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின்.
 ஐகோர்ட்டில் வழக்கு.... குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக இன்று பேரணி நடத்தியுள்ள நிலையில், அதற்கு தடைகோரி வாராஹி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால் திமுக பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதிதரவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் ..மோடியின் பேச்சை கேட்கவேண்டுமாம்

 வெப்துனியா : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி
14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று
அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும்
ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஜனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.>ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற இருப்பதால் அந்த உரையை கேட்க ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும்,