சனி, 25 நவம்பர், 2017

கொடியேற்றிய முதல்வர்: போர்க்கொடியேற்றும் துணை முதல்வர்!

கொடியேற்றிய முதல்வர்: போர்க்கொடியேற்றும் துணை முதல்வர்!minnambalam :கட்சியின் சின்னமும், கொடியும் கிடைத்த பிறகு முதல்முறையாக மதுரையில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவந்த இரட்டை இலை தொடர்பான வழக்கில் எடப்பாடி-பன்னீர் அணிக்கு சின்னம் கிடைத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றியைக் கொண்டாடும் விதமாக மதுரை கப்பலூரில் இன்று (நவம்பர் 25) முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது.
இதையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள தோப்பூரில் அதிமுக கட்சிக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் சின்னமும், கட்சிக் கொடியும் ஒருங்கிணைந்த அணியினருக்கு வந்த பின்னால் நடக்கும் முதல் கொடியேற்று விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

போலி நீதிபதி ... பட்டப்படிப்பையே முடிக்காதவர் 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்

சட்டப் படிப்பையே முடிக்காதவர் நீதிபதி!மின்னம்பலம் :வழக்கறிஞர்களிடையே போலிகள் அதிகம் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை அண்மையில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 90 ஆயிரம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 56 ஆயிரம் பேர் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்குச் சமர்பித்துள்ளனர். 4000ம் பேர் சம்மந்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியடையவில்லை என்றும் 2000ம் பேர் போலி வழக்கறிஞர்கள் என்றும் தெரியவந்தது. 742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நீதித் துறையில் போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அண்மைக் காலமாகச் சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் படிப்பு இல்லாமல் தமிழ்நாடு நீதித் துறையில் 21 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் நீதிபதியாகப் பணியாற்றியது வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது.
மதுரை மாவட்டம் உலகநேரியைச் சேர்ந்த நடராஜன் கர்நாடகாவில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாரதா சட்டக் கல்லூரியில் இளநிலை பொதுச் சட்டத்தைத் தொலை தூரக் கல்வி மூலம் படித்துள்ளார். 1975-78ம் ஆண்டுகளில் மூன்றாம் ஆண்டு மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் பிப்ரவரி 15, 1982 அன்று நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 22 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பணியாற்றி பின் ஜூன் 30, 2003 அன்று ஓய்வு பெற்றார்.

ஆர் கே நகரின் அவலம் தீருமா? திமுக வேட்பாளர் மருது கணேஷ் பேட்டி.

மக்கள் கோபம் வெற்றியைப் பெற்றுத் தரும்!
மின்னம்பலம் :ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், அதுவே தனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்றும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ் இன்று (நவம்பர் 25) அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதற்காகக் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா பேட்டி

tamilthehindu :அசோக்குமார் தற்கொலை வழக்கில், இயக்குநர், நடிகர் சசிகுமாருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா, கந்து வட்டி குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
சசிகுமாருடன் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விளக்கமளிக்க வந்தேன். அசோக்குமார் மரணம் தொடர்பாக விளக்கமளித்தோம், அடுத்தகட்ட விசாரணைக்கு நாளையும் வரவுள்ளோம்
அசோக்குமாரையும் அவரது குடும்பத்தினையும் தவறாக பேசியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

BBC :பாகிஸ்தானில் கலவரம்: தொலைக்காட்சிகள் முடக்கம்.. போலீஸ் அதிகாரி கொலை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த 20 நாள்களாகப் போக்குவரத்தை முடக்கி் போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கம்  பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மூண்ட மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீதினை பதவி நீக்கவேண்டும் என்று கோரி முக்கிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் பல வாரங்களாக மறித்து வருகிறார்கள். இதனால், தலைநகர் இஸ்லாமாபாத் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது.
போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சனிக்கிழமை ரப்பர் குண்டுகளை சுட்டதோடு கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலும் கலைந்து போகாத போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர்.
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சேவைகளை பாகிஸ்தான் அரசு துண்டித்தது.

இரண்டாகும் தமிழ் சினிமா! அன்புச்செழியன் 'விசுவாசம்' ? பின்னணியில் அமைச்சர்கள் தொழிலதிபர்கள் .

நக்கீரன் : அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது - 'விசுவாசம்'. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் பலரும் தங்களது விசுவாசத்தை காட்டுகின்றனர். கடந்த 10 வருடங்களில் அவரது திரைப்படத்தின் டீசர், போஸ்டர், படத்தின் பெயர் போன்றவை வெளியாகும்பொழுது எங்கும் 'அஜித்'தின் பெயர் ட்ரெண்டாகும். ஆனால் இப்பொழுது, பல ஆண்டுகள் கழித்து படம் சாராத ஒரு விஷயத்திற்காக அஜித்தின் பெயர் சில நாட்களாக பேசப்படுகிறது. தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் அன்புச்செழியன் தான் என்று அசோக் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அஜித்திற்கும் இதற்கு முன்னர் அன்புச்செழியன் பிரச்சனை தந்துள்ளார் என்று சொல்லப்பட்டுவருகிறது. 'நான் கடவுள்' பட விவகாரத்தில் பாலாவுக்கு ஆதரவாக அன்புச்செழியன் அஜித்தை மிரட்டினார் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறினார்.

நிதின் கத்காரி கோதாவரியில் இருந்து குழாய் மூலம் காவிரிக்கு நீர் கொண்டுவர திட்டமாம்!


கட்கரியின் கற்பனைத் திட்டம்!மத்திய நீர்வளத் துறை மின்னம்பலம் :அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் (நவம்பர் 23) சென்னையில் செய்தியாளர்களிடம் கோதாவரியிலிருந்து இரும்புக் குழாய் போட்டு, காவிரிக்குத் தண்ணீர் கொண்டுவரப் போவதாகவும், அதற்குப் பிறகு மாநிலங்களுக்கிடையே தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்து போகும் என்றும் கூறியுள்ளார்.
இதை ஒரு கற்பனைத் திட்டம் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.
கோதாவரியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீர் கொண்டுவந்து, கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும், சோசீலாவிலிருந்து 100 டி.எம்.சி. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

சேகர் ரெட்டி வழக்கு நீதிபதி உயிர்பயத்தால் பதவி விலகல் ?

சேகர் ரெட்டி வழக்கிலிருந்து நீதிபதி விலகல்!
மின்னம்பலம் :தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில், 99 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளும் 34 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
100 கிலோவுக்கும் அதிகமாகத் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சேகர் ரெட்டி உள்பட ஆறு பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைக் கடந்த 10ஆம் தேதி விசாரித்த நீதிபதி ரமேஷ், இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆர் கே நகரில் திமுக சார்பாக மருது கணேஷ் மீண்டும் போட்டி? ஆலோசனை நடக்கிறது!

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக டி.டி.வி.தினகரன் நேற்றைய தினமே அறிவித்துவிட்டார்.
வேட்புமனு தாக்கல் வரும் திங்களன்று தொடங்கவுள்ள நிலையில் ஏனைய கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

2016 தேர்தலில் பெரிய மோசடி தேர்தல் ... மோடி + ஜெயலலிதா 75days #apollo மர்ம வினை சூழ்ந்தது

Venkat Ramanujam:
RKnagar போட்டி திமுகவுக்கும் பிஜேபி யின் கைபுள்ளெ ஆகிட்ட தேர்தல் ஆணைத்துக்கும் தானே..
உங்கள் கேள்வியில் கேலி தெரிந்தாலும் ., இது மிகவும் சீரியஸ் பிரச்சனை தான் .
சென்ற 2016 தேர்தலில் மிக பெரிய மோசடி தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 36 லட்ச கள்ள ஓட்டுகளை கவனமாக சேர்த்து மோடி மற்றும் அன்றைய ஜெயலலிதா கூட்டு சதியில் 4 Nos of #570cr போலி எண்களை கொண்ட #Containers பணத்தை பிடிபட்ட 48 மணி நேரம் கழித்து #SBI பணம் என்று நிதி மந்திரி சொன்னதில் இருந்து அது ஆரம்பித்தாலும் ,

♦️ DMK + 108
♦️ ADMK + 115
என்ற leading status quo இருந்த போதே காலை 11 மணிக்கே பிரதமர் #PM11AM ஜெயலலிதாவுக்கு வெற்றி ட்வீட் அடித்ததும் ., அதனை தொடர்ந்து #RSS கைக்கூலிகள் Sumanth Raman in Podhigai Doordarshan Rangaraj Pandey in Thanthi TV பதினோரு மணிக்கே ஆனந்தமாய் கூத்தாடியதை நாம் காணும் வரை நடத்தி காட்டினார்கள் . இதில் கொடுமை என்னவென்றால் இரவு 11 மணிக்கு தான் ஆவடி ரிசல்ட் . அதில் 1395 ஓட்டுகள் அதிகமாக பெற்று அதிமுக பாண்டிராஜன் வெற்றி என்று சொல்கிறார்கள் . பிரதமர் அறிவிப்புக்கு முன்னர் வரை திமுக தான்இங்கையும் லீடிங் .. பிரதமர் அறிவிப்புக்கு பின்னர் counting எண்ணிக்கை நிறுத்தி விட்டு திமுகவின் அப்பாவுவை குண்டு காட்டாக தூக்கி வீசி எறிகிறார்கள் எறிந்து விட்டு மாலையில் 49 ஓட்டுகளில் தோற்றதாக புளாங்கிதம் அடைந்தும் ., பாவம் இயற்கை இறுதியாக ஜெயலலிதா விஷயத்தில் 75days #apollo மர்மாக இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறது . ஜெயலலிதா சென்ற முறை வென்ற 39,000 ஓட்டுகளில் சட்ட பூர்வமாக போராடி இந்தமுறை தேர்தல் ஆணையத்தை 45000 ஓட்டுகளை அழிக்க வைத்த திமுகவை பாராட்டினாலும் , BJP EC nexus மிகவும் சீரியஸ் பிரச்சனை என்பதால் பின்வரு நான்கை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் :

Dec 21st 2017 அன்று இரவே எல்லா பூத் வோட்டு பதிவுகளை கூட்டி #திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்க வேண்டும் .. இதனை தேர்தல் ஆணையம் வெளியிட்ட booth % வோட்டிங் உடன் ஒப்பீடு செய்ய வேண்டும் ..

♦️ தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே வேட்பாளர் பெயர் ஒட்டிய 20 #EVM machines ( ie., 10%) random checking திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர்கள் முன்னால் செய்திட வேண்டும்...

♦️ மேலும் சென்ற முறை 32, 649 ஓட்டுகளில் 21 எம்எல்ஏக்களை திமுக கூட்டணி இழந்ததை நினைவில் நிறுத்தி இந்த முறை ஆர்கே நகரில் #DMK 200+ பூத் ஏஜென்ட் கள் Dec 21~24th மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் .

ஆர்.கே.நகரில் போட்டியிடும் பிரபலம் யார்? தமிழிசையின் திடீர் புதிர்

மாலைமலர்: வரும் டிசம்பர் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தினகரன் மற்றும் தீபா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட போவது உறுதி என்று தெரிவித்துவிட்டனர். அதேபோல் அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் பாஜக ஒரு பிரபலத்தை இந்த தேர்தல் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, '“எந்த விதத்தில் இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமோ அந்த விதத்தில் சந்திப்போம். ஏனென்றால், எங்கள் கட்சிக்கு என்று விதிமுறைகள் இருக்கிறது.

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ - மின்சார ரெயில்களில் பயணம்

மாலைமலர்: சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார். சென்னை:< சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:- சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே க

BBC :எகிப்து மசூதி தாக்குதல் நடத்தியது யார்? சம்பவம் நடந்தது எப்படி?

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 235 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். பிர் அல்-அபெட் நகரில் உள்ள அல்-ரவுடா மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
எதிராளிகளை இலக்கு வைத்து அருகில் உள்ள மலைகளில் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்த மிக மோசமான இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. <எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்
சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எதிப்தின் பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் நடந்துள்ள மோசமான தாக்குதலுக்கு இக்குழுவினரே பின்னணியில் இருந்துள்ளனர்.

வடகொரியா ! ராணுவத்தில் பாலியல் வன்முறை ,,, மேலதிகாரிகள் ....

Thavam Pakkiyam : உலகின் நான்காவது பெரிய
ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய்.
வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்களோடு, தனது ராணுவ பிரிவில் உள்ள படுக்கை அறையில் தங்கியிருந்தார்.
அங்கு ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் சீருடைகளை வைத்துக்கொள்ள ஒரு பெட்டி அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் இரண்டு புகைப்படங்கள் இருக்கும்.
ஒன்று, வடகொரியாவை நிறுவிய கிம் இல்-சுங் புகைப்படம். மற்றொன்று, தற்போதைய தலைவரின் தந்தையான கிம் ஜோங்-இல் புகைப்படம்.
ராணுவத்தைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், அங்கிருந்த நாட்களின் நினைவுகளையும், படைத் தளத்தின் வாசத்தையும் இன்னும் நினைவு கூர முடிகிறது.

வெள்ளி, 24 நவம்பர், 2017

பாலாவின் நோச்சியார் ... ஆம் நாச்சியார் அல்ல ... நக்கலைட்டின் பிரமாண்ட தயாரிப்பு ... அட பாருங்கலே!


பாலா படங்களில் நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. இதோ பாலாவின் பாத்திரங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!
யக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. பிதமாகன் விக்ரம் போல ஜி.வி பிரகாஷ் ஓடுகிறார், ஆடுகிறார், பார்க்கிறார். ஜோதிகா கடைசியில் தே … பயலே என்கிறார். இத்தகைய ஆணாதிக்க வார்த்தையை பயன்படுத்தலாமா, ஜோதிகாவுக்கு அடுக்குமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.
ஒரு கதையில் அதன் பாத்திரத்திற்கேற்ற உரையாடல்கள் வருவதில் என்ன பிரச்சினை? நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் இந்துமதவெறி வசனங்களை பேசித்தான் நடிக்க வேண்டும். மோடியை எதிர்க்கும் அவர் இத்தகைய வெறிப்பேச்சுக்களை பேசலாமா என்று கேட்பது அபத்தம்.

மம்தா பானர்ஜி : மேற்கு வங்கம் ரவீந்திரநாத் தாகுரின் மண் .. பாஜக இங்கே நிலை பெறமுடியாது

மோடியை வெளுத்து கட்டிய மம்தா பானர்ஜி, கடும் கோபத்தில் மோடி பிரதமர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
 கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என தொழில்நிறுவனங்களை மிரட்டுகிறீர்கள்; அவர்களோ மேற்கு வங்கத்தை விட்டு நாங்கள் போக முடியாது என அடம் பிடிக்கிறார். ஏனெனில் அவர்களது தொழில் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கான தொழில்துறை திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் தராமல் இருக்கிறீர்கள்?
கருப்பு பண ஒழிப்புக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல. இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படுவதை இந்த நாட்டின் நிதி அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை. அதிகரித்த பயங்கரவாதம் நீங்கள் என்ன துக்ளக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதம் 12% அதிகரித்துள்ளது.

முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்!

thetimestamil : ஆழி செந்தில்நாதன்: சத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தம். விரைவில் சத்துணவுத் திட்டமே நிறுத்தம்.
எல்லாம் இப்படித்தான் தொடங்கும். சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகளில் கொள்முதல் செய்வதில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது, எனவே முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் இப்படித்தான் தொடங்கும். ரேஷன் கடைகளில் தொடங்கியதைப்போல.
பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பது வெகுவிரைவில் நிறுத்தப்படலாம் என்கிற அச்சம் இந்துத்துவ இந்திய அரசை அறிந்தவர்களுக்கு ஏற்படாமல் இருக்காது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சத்துணவுதான். அந்த எம்ஜிஆரின் நூற்றாண்டில், அந்த எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், சத்துணவு சத்தற்ற உணவாக ஆக்கப்பட்டிருக்கிறது!
காமராசர் முதல் ஜெயலலிதா வரை ஊட்டிவளர்த்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரச் சிந்தனைக்கு ஓர் உலகப்புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. அதைக் காக்கவேண்டும். எம்ஜிஆரால் புதுமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு கலைஞரால் முட்டை சேர்க்கப்பட்டு ஊட்டம் சேர்க்கப்பட்டத் திட்டம் அது.

கூகுள் குரோமால் குறைந்த வளர்ச்சி! is Google Chrome slowly killing brand searches?

கூகுள் குரோமால் குறைந்த வளர்ச்சி!மின்னம்பலம் : உலகின் முதன்மை தேடுதளமாக திகழ்ந்து வரும் கூகுள் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு கூகுள் குரோம் என்ற அப்ளிகேஷனை வெளியிட்டது. பயனர்களுக்கு மிக எளிதாகத் தகவல்களை தேடும் வசதிகளுடன் இந்த அப்ளிகேஷன் வழங்கப்பட்டது.
அதனால் கடந்த ஆண்டு (2016) உலகின் மிக பிரபலமான வலைதள தேடு கருவியாக தேர்வானது. இதற்கு காரணம் கூகுள் குரோமில் உள்ள ஓம்னிபாக்ஸ் (omnibox) என்ற வசதிதான்.< இந்த வசதி வெளியாவதற்கு முன்னர் பயனர்கள் ஒரு தகவலை தேட முயற்சிக்கும் பொழுது நேரடியாக கூகுள் நிறுவனத்தின் தேடு தளத்திற்கு செல்லும். அதிலிருந்து நமக்கு தேவையான லிங்க்கை கிளிக் செய்து தேவையான இணையதளத்திற்கு சென்று தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். அப்போது மற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் இடையே தோன்றும்.

துப்புரவாளர்கள் வெட்டி கொலை!.. திண்டுக்கல்லில் ஒரே நாளில்

துப்புரவாளர்கள் வெட்டி கொலை!மின்னம்பலம் : திண்டுக்கல்லில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று துப்புரவு தொழிலாளிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், வீரா, சரவணன் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று (நவம்பர் 24) வேலைக்குச் சென்றுள்ளனர்.
பாலமுருகன் திண்டுக்கல் – சிலுவத்தூர் சாலையிலும், வீரா திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள நாகல்நகர் மேம்பாலம் அருகிலும், சரவணன், என்.வி.ஜி.பி.நகர்ப் பகுதியிலும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் வெவ்வேறு இடங்களில் பணியில் ஈடுபட்டிருந்த மூவரையும் மர்மகும்பல் சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். திரைப்பட பாணியில் நடந்த இந்தச் சம்பவம் திண்டுக்கல் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மோசடி: இந்தியாவுக்கு நான்காவது இடம்!

மின்னம்பலம் : டிஜிட்டல்மயமாவது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தாலும், அது ஆன்லைன் திருட்டுகளுக்கும், மோசடிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது. ஆன்லைன் மோசடியில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
உலகத் தகவல் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய அளவில் ஆன்லைன் மோசடிகளில் இந்தியா நான்காவது இடம் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஆசியாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பேங்கிங் வசதி ஆகியவற்றின் பயன்பாடு இந்தியாவில்தான் அதிகம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் நமீதா திருமணம்! இஸ்கான் கோவிலில் ...

திருப்பதியில் நமீதா திருமணம்!மின்னம்பலம் : நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று (நவம்பர் 24) திருமணம் நடைபெற்றது.
குஜராத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மச்சான்ஸ் என்ற சொல்லின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நமீதா அண்மைக் காலமாகப் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நமீதாவுக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. நமீதா தனது காதலரான வீராவைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ரைஸா அறிவித்திருந்தார். திருப்பதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் நமீதா - வீராவின் நிச்சயதார்த்தமும், அதன் பின்னர் மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இந்த நிலையில் நமீதா வீரா திருமணம் திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது.

Dr.ராமதாஸ் :தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது!

மின்னம்பலம் :ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதாக, நேற்று (நவம்பர் 23) தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று ஆர்கேநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை வெளியிட்டது. இவையிரண்டுக்கும் தொடர்புள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். இன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், மத்திய அரசின் தலையீட்டால் இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அனிதா தற்கொலை: தமிழக டிஜிபிக்கு அழைப்பாணை !

அனிதா தற்கொலை: தமிழக டிஜிபிக்கு  சம்மன்!
மின்னம்பலம் :அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கத் தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தோல்வியுற்ற அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். எனவே அனிதாவின் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 16 முதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆதிதிராவிட நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முருகன் தெரிவித்திருந்தார்.

BBC :எகிப்து மசூதி வெடிகுண்டு, துப்பாக்கி சூடு 200 பேருக்கு மேல் உயிரழப்பு


எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. e>அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் 2013-ம் ஆண்டு முதல் தீவிரமடைந்தன.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் சினாய் தீபகற்பத்தில் அடிக்கடி தாக்குதல் நடப்பதுண்டு. ஆனால், இதுவரை நடந்ததிலேயே அதிக உயிர்ப் பலி கொண்ட தாக்குதல் இதுதான்.

அன்புசெழியன் ஒரு தமிழக சுவிஸ் பேங்க் ,,, சீரழிந்தவர்கள் பட்டியல்....

விகடன்: ம.கா.செந்தில்குமார் அன்புவிடம் எந்தெந்த சினிமா தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் விசாரித்தோம்.
ஞானவேல்ராஜா  ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் இருந்து அவர் தொடங்கினார். “மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஞானவேல்ராஜா பேசியதில் இருந்து அவர் அன்புவின் மீது எந்தளவுக்குகோபத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ‘அவர்ட்ட போகாதீங்க. மீண்டு வெளியே வரமுடியாது. போட்டு அமுக்கிடுவார்’னு பலர் தடுத்தாங்க. அப்ப அதோட விபரீதம் எனக்குத் தெரியலை. உள்ளப்போய் அந்த ஃபைனான்ஸ் ப்ராசஸ் என்னனு அனுபவிச்சப்பிறகுதான் நிலைமை எனக்குப் புரிஞ்சுது. இன்னைக்கு புதுசா வர்றவங்களுக்கு நாங்க சொன்னாலும் அவங்களும் அதை கேட்கமாட்டாங்க’ என்று பேசியவர் கூடவே, ‘தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஃபண்டிங் பண்றதுக்கு 50 ஃபைனான்ஷியர்கள் இருக்காங்க. அந்த 50 பேர்களில் எத்தனை ஃபைனான்ஷியர்களோட பெயர் இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கு? அன்புச்செழியன் என்கிற இவர் ஒருத்தரைப்பற்றித்தானே இத்தனை சர்ச்சை செய்திகள் வந்திருக்கு?’ என்றார். இவை அவரின் மனக்காயங்களில் இருந்து வரும் வார்த்தைகள். இன்று மதுரை அன்புவிடம் கடன் பட்டுள்ளவர்களில் ஞானவேல்ராஜா முக்கியமானவர்.

ஜெ. கைரேகை .. பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் நேரில் வர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ. கைரேகை வழக்கு: பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாலைமலர்:தேர்தல் ஆணைய படிவங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான வழக்கில் பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை: கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

அரக்கோணம் 4 பள்ளி மாணவிகள் தற்கொலை ... கிணற்றில் விழுந்து ... ஆசிரியர் திட்டினார் ...

vellore_incidentதினமணி: வேலூர்: பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிக் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது பணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு பதினொன்றாம் வகுப்பில் பயின்ற மாணவிகள் ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா ஆவர். படிப்பில் இவர்கள் சரியான அக்கறை காட்டாததன் காரணமாக பள்ளி ஆசிரியர்கள் நால்வரையும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட நால்வரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உள்ளனர்.  கிணற்றில் இருந்து மாணவிகள் நான்கு பேரின் உடலும் மீட்கப்பட்டது.

இரட்டை இலையும் அது கடந்து வந்த பாதையும் ...

Sowmian Vaidyanathan : இரட்டையிலையில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார்கள் - மதுசூதனன்..!
1980 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி...
1986 உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி... 1996 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வி.. 1997 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி...
1999 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி...
2004 பாராளுமன்ற தேர்தலில் அடியோடு தோல்வி...
2006 சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி...
2007 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி...
2009 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி...
இரட்டையிலை சின்னம் தேர்தலுக்கு அறிமுகமாகி 40 ஆண்டுகளில் ஒன்பது பொதுத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியிருக்கின்றது..!
இந்த தோல்விகள் அனைத்துமே எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா என்ற சினிமா புகழ் நட்சத்திரங்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களியே சாத்தியப்படுத்தப்பட்டிருக்கின்றன..!
இந்த நிலையில் பல தோல்விகளைச் சந்த்திருக்கும் இரட்டையிலை... சினிமா கவர்ச்சித் தலைமையும் இல்லாமல்... இனிமேலும் வெற்றி பெறும் என்று பேசுவது எல்லாம்... ஆகச் சிறந்த நகைமுரண்..!
சரி... இந்த இரட்டையிலை எப்பொழுதெல்லாம் எப்படி வென்றிருக்கின்றது என்று பார்ப்போமா..?!
1977இல் கலைஞர் மீது 35க்கும் அதிகமான பொய் வழக்குகளைப் போட்டு... அதற்காக சர்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து... அதை ஊழல் ஊழல் என்று மக்களிடம் பரப்புரை செய்து... ஊழலுக்கு எதிரானவர் என்று எம் ஜி ஆரை முன்னிறுத்தி வாங்கப்பட்ட வெற்றி...!

ரஜினிகாந்த் மந்திராலயாவுக்கு 10 கோடி வழங்கினார்.... குடும்ப பள்ளிகூட சம்பளம்,வாடைகை ?

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு பத்து கோடி ரூபாயை வாரி வழங்கி உள்ளார். இதுவரை தமிழ்நாட்டுக்கு இவர் என்ன செய்துள்ளார்? வெறும் வாய்ச்சவடால் விட்டு தமிழருவி மணியன் , குருமூர்த்தி, மறைந்த சோ ராமசாமி போன்ற சமுக விரோதிகளோடு சேர்ந்துகொண்டு பித்தலாட்டம் செய்து அடிக்கடி  பரபரப்பாக இருப்பதை தவிர ? படம் ஓடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் விளம்பர அரசியல் நடாத்துகிறார்.  உழைத்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க மனம் இல்லை! உழைக்காமல் உண்டு வாழும் இவர்களுக்கு வாரி வழங்கும் மன நிலையை என்னவென்று செல்வது! முகநூல் வறுவல்

மாணவர் ஜோயல் பிரகாஷ் மரணம் .. ஒருத்தர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை

Sivasankaran.Saravanan : மறைந்த ஜோயல் பிரகாஷுடைய கலைப்படைப்புகள் சிலவற்றை பார்த்தபோது அவர் எந்தளவுக்கு அற்புதமான கலைஞனாக மிளிரக்கூடியவர் என்று புரிந்துகொள்ளமுடிகிறது! டெல்லி போன்ற இடங்களில் கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு காரணமாக நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களின் அழுத்தத்தினால் எளிய பின்புலம் கொண்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிற நிகழ்வுகளின் தொடர்ச்சியான தமிழ்நாட்டிலேயே நம் கண் முன்னரே இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது..!

தேனீயில் பன்னீர்செல்வம் பாதுகாப்பில் அன்புசெழியன்

ரௌடிக்கு பெயர் அன்புச்செழியனாம் அப்புடின்னா அன்பா இருக்கிறவனுக்கு பெயர் என்னவாம்? இவன் இப்போதும் மதுரை மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் இந்த பொறுப்பை இவனுக்கு கொடுத்தது ஜெயலலிதாதான். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை பச்சையம்மா போட்டதுக்கு காரணம் என்னன்னா தனியார் பைனான்ஸ் கம்பெனிகளுக்காகத்தான் மக்கள் நலன் மண்ணாங்கட்டி நலன்லாம் ஒன்னும் கிடையாது

இந்திய பீசாக்களில் சீசுக்கு பதிலாக கலப்பட .... அதிர்ச்சி!



Global junk food என்ற டாக்குமெண்டரி பார்த்தேன். இந்தியா குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.
இந்திய டாமினோஸில் 49 ரூபாய்க்கு பீட்சா விற்பதை காட்டினார்கள். 49 ரூபாய்க்கு எப்படி பீட்சா உற்பத்தி செய்து, விற்றூ லாபம் சம்பாதிக்க முடியும் என டாக்குமெண்டரி எடுத்தவருக்கு புரியவில்லை. அதன்பின் டாமினோஸில் வேலை செய்யும் சமையல்காரர் ஒருவரை திருட்டுதனமாக பேட்டி எடுக்கிறார். அவர் பீட்சாவில் சீஸே போடமாட்டோம். மாட்சரில்லா சீஸ் என சொன்னாலும் அதில் இருப்பது மேயோ, மற்றும் சீஸ் பிளேவர் தான் என்றார்.
நம்பாமல் லேபில் கொடுத்து ஆய்வு செய்ய, அதில் சீஸே இல்லை என ஆய்வு முடிவு வந்தது. ஆண்டு 2016. இப்ப என்ன நிலவரமோ தெரியவில்லை...இப்படி பொட்டிகடையில் செய்யும் கலப்படத்தை பன்னாட்டு கம்பனியும் செய்யிம் கொடுமையை என்னவென்பது?
இந்தியாவில் துரித உணவுகங்களில் கலோரி விவரங்களை அச்சிட வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள்...இந்திய மெக்டானல்ட்ஸ் குழந்தைகளை குறிவைத்து விளம்பரம் செய்வதையும், அதை இந்திய சட்டம் தடுப்பதில்லை என்பதையும் காட்டினார்கள்.

ஆர்,கே,நகர் இடைத்தேர்தல் டிசெம்பர் 21.. வேட்புமனு தாக்கல் நவம்பர் 27 இல்

ஆர்,கே,நகர் இடைத்தேர்தல் டிசெம்பர் 21.. வேட்புமனு தாக்கல் நவம்பர் 27 இல் ,, ராஜேஷ் லக்கானி  அறிவிப்பு ! வேகவேகமா இரட்டை இலையை தாமரையோட சேர்த்தாச்சு ... அப்படியே கள்ள ஒட்டு மெஷின் மூலம் இனி எல்லா தேர்தல்களையும் பாஜகவே வெல்லும் ... ? என்னே ஒரு புதிய இந்தியா ? மொத்தமா கம்பி எண்ணமுதல் நடக்கும் இறுதிக்கால கூத்துக்கள் இவை. Troll Trousers 2.0 7· நேத்துதான் சின்னம் யாருக்குன்னு சொன்னானுங்க இன்னைக்கி தேர்தல் தேதி சொல்றானுங்க... இன்னுமாடா இந்தியாவுல தேர்தல் ஆணையம் எல்லாம் சுதந்திரமா செயல்படுதுன்னு நம்புறீங்க??? தேர்தல் ஆணையத்தை மோடி ஆணையம்னும் நீதி மன்றத்தை மோடி மன்றம்னும் காவல் நிலையத்தை மோடி நிலையம்னும் மாத்திட்டு போங்கடா! ஜனநாயகம் எங்கடா...???

வேலூர் மகா லக்ஷ்மி கைது ! நீதிபதி கிருபாகரனின் வஞ்சம் ! முகநூல் பதிவுக்கு ...

Kennedi M G : ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பல நாள் போராட்டம் நடத்தியும் ஊழியர்களை சரிவர அழைத்து பேசாத அரசை கண்டிக்காமல் மாலைக்குள் அனைவரும் பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழியர்களை மட்டும் மிரட்டி உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களை கண்டித்து யாரோ பதிவிட்ட ஒரு முகநூல் பதிவை பதிவரின் பெயரை போட்டு தனது பக்கத்தில் பதிவு செய்த வேலூர் Maha lakshmi என்ற சாதாரண குடும்ப பெண்ணை ஜாமீனில் வரமுடியாத பிரிவின் கீழ் கைது செய்த காவல்துறையையும் தமிழகத்தில் நடக்கிற எத்தனையோ அநியாயங்கள் கோர்ட்டில் வழக்காக நிலுவையில் இருக்கும்போது அதிலெல்லாம் காட்டாத அக்கரையை இந்த பெண்ணை கைது செய்யும் விசயத்தில் காட்டிய நீதிபதி கிருபாகரன் அவர்களை கண்டிக்கிறோம்

அ இ அன்புசெழியன் அண்ணா திமுக ..... மக்களால் நான் மக்களுக்காக நான் ...

Special Correspondent FB Wing :
ராமநாதபுரம் மாவட்டம் பொம்மனேந்தல் கிராமத்தில் இருந்து வெறும் கையேடு மதுரை வந்தான் அன்புசெழியன் . பின்பு சுதாகரன் வழியாக கிடைத்த அதிமுவின் ஆதரவால் கிடுகிடுவென உயர்ந்தான் .
பிரபல இயக்குனர் சசிகுமார் உறவினர் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், சென்னை வளசரவாக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலை கடிதத்தில், ‘சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் தனது தற்கொலைக்கு காரணம்’’ என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அமைச்சரின் சிபாரிசால்தான் போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புச் செழியனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பாப்பானாம்பட்டி. மதுரைக்கு பிழைப்புக்காக அன்புச் செழியனின் குடும்பம் மதுரை கீரைத்துறையில் குடியேறியது.
மதுரையில் தண்டாரா எனப்படும் வேலையை செய்ய ஆரம்பித்த அன்புச் செழியன், 16 வயதில் 1997 களின் ஆரம்பத்தில் 5 ஆயிரம் முதலீட்டில் மதுரையில் சினிமா பெட்டி தூக்கும் நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்க சைக்கிளில் வலம் வந்தார்.
அந்த நபர்கள் மூலமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த திரையரங்குகளில் திரையிடப் படும் சினிமாக்களுக்கு அதன் பெட்டிகளை வாங்க வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

BBC : ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்

வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் இந்த ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டனர்.
இது ஒரு முதல்படி என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. மிக விரைவாக ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அழைத்து கொள்ள தயாராக இருப்பதாக மியான்மர் தெரிவித்துள்ளது.

வியாழன், 23 நவம்பர், 2017

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடலை.. அதில் ஊழல்னு ஊளையிட்டவனெல்லாம் இப்ப என்ன பன்றான்..?

Saravanan Anna Durai : · 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கற்பனைக்கு எட்டாத இழப்பு ஏற்பட்டதாக பொய் குற்றசாட்டு சொன்ன வினோத் ராய் எங்கே? இன்று பாஜக அரசு 2ஜி அலைக்கற்றையை விட விலை மதிப்புள்ள V அலைக்கற்றையை ஏலத்தில் விடாமல் அவற்றை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அண்ணன் ஆ. ராஜா அவர்களின் செயலை நியாயப்படுத்துகிறது. இந்த நாட்டு மக்களிடம் கற்பனை செய்து பார்க்க முடியாத பொய் தகவலை கட்டவிழ்த்துவிட்ட மோசடி வினோத் ராய் மன்னிப்பு கேட்பாரா?  இந்த வினோத்ராய்க்குதான் பத்மா பூஷன் விருது கொடுத்திருக்கானுக

Maakkal மாக்கள் .. குறும்படம் .. மனிதர்களின் மறுப்பக்கத்தில் ஒழிந்திருக்கும் கொடுரம்



Vincent Raj : · மாக்கள் என்கிற இந்த குறும்படம் என்னை வெகுவாக பாதித்தது.அருமையாக இயக்கி இருக்கிறார் தம்பி ஜேம்ஸ் அபிலாஷ்.உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.கலக்கு பா!
Bamini Rajeshwaramudaliyar முழுமையாக பார்க்க முடியவில்லை😭 அடிக்கும் முதல் காட்சியை foreword செய்து பார்த்தேன். போலீஸ் அடிக்கும் காட்சியை பார்க்க முடியாமல் stop பண்ணி விட்டேன். High voltage currant பாய்ந்தது போல் அதிர்ச்சி. பல விதமான உணர்வுகள் உள்ளத்தை தாக்கியது. பயம் என்ற கூட்டினுள் அடைத்து , தாம் பெரியவராக வலம் வருவதற்காக செய்யும் காரியம் இது. பயம் என்ற உணர்வு மனிதர்களை முடக்கி விடும். எனக்கு பிடிக்காத உணர்வு. இதயம் பலயீனமானவர்கள் இதனை எச்சரிக்கையுடன் பார்க்கட்டும். 😡😡😡😡😭😭😭😭
 Radha Manohar இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வன்முறை காட்சிகள் எவ்வளவு கொடுரமாக இருக்கிறது ? இது உண்மையில் அடிக்கடி சமுகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவி விடப்படும் சம்பவங்களின் சித்தரிப்புதான் ,, இதை பார்க்கவே முடியாமல் இருக்கும் Bamini Rajeshwaramudaliyar போன்ற இளகிய மனமுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் , உண்மையை பார்த்தால்தான் அதை பற்றிய சரியான புரிதல் கிடைக்கும் .. இதில் இடம்பெற்ற காட்சிகள் வெறும் ரசிகர்களை திகில் ஊட்ட எடுக்கப்பட்டதல்ல . இதைவிட மோசமனான சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி இடம்பெறுகின்ற ஒரு சூழ்நிலைதான் இன்று உள்ளது. . இதைபற்றிய செய்திகள் உலகம் முழுதும் தெரியவேண்டும் .. கலாச்சாரம் சமயம் பாரம்பரியம் போன்ற சொற்களின் பின்னே ஒழிந்திருக்கும் கொடுரம் இதுதான் ,, இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் தேசம் பெருமை பட என்ன இருக்கிறது?

ட்ரம்ப் மகள் வருகை: தெரு நாய்களைக் கொல்லும் மாநகராட்சி!

ட்ரம்ப் மகள் வருகை: தெரு நாய்களைக் கொல்லும் மாநகராட்சி?மின்னம்பலம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளில் முதல் கட்டமாக பிச்சைக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நகரத்தைச் சுத்தப்படுத்துவதற்காகத் தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்துகொள்கிறார். இதனால் ஹைதராபாத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.