![]() |
tamil.samayam.com : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு பெண்களை வாலிபர்கள் எட்டி உதைத்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வட மாநிலத்தில் நடப்பதை போல சென்னையில் இரு பெண்களை ஒரு கூட்டத்திற்குள் வைத்து எட்டி உதைக்கும் வாலிபர்களின் செயல் பூதாகரமாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலான இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். இதனை அனுமதிக்காத ஆண்கள் சிலர் பெண்களின் வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.