சனி, 4 ஜனவரி, 2025

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்டு நிறைவு!

 minnambalam.com -christopher :  வேலூர் காட்பாடி அருகே காந்திநகரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்த வந்தனர்.
ஆனால் கதிர் ஆனந்த் துபாய் சென்றிருந்தால், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அதேவேளையில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள துரைமுருகன் ஆதரவாளரும், திமுக மாவட்ட நிர்வாகியுமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்கள், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல்!

May be an image of 1 person

சுமதி விஜயகுமார் ;  Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
 'பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனைத்து பெண்களும் இனிமேல் சொல்ல வேண்டும்.
Gisele Pelicot டால் முடிந்தது. என்னாலும் முடியும் என்று. வெட்கப்பட வேண்டியது நாங்கள் இல்லை.
அவர்கள் தான்.'
Dominique Pelicot அவரது கணவர்.
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் இருவரும் happily married .
அவர்களின் காதலுக்கு சாட்சியாய் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
Gisele ஒரு நிறுவனத்தில் பணிபுரிய, Dominique பல தொழில் துவங்கி எதுவும் சரிவர அமையாமல் இருந்தார். அந்த சமயத்தில் Gisele க்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட , இருவரும் பிரிகிறார்கள்.
காதல் மீண்டும் அவர்களை இணைக்கிறது.

கோவையில் 50 ஆக்கிரமிப்பு வீடுகள்.ஒரே நாளில் இடிப்பு . மேலும் 151 கட்டிடங்களை இடிக்க முடிவு

 tamil.oneindia.com - Velmurugan P  ;கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை காலி செய்ய வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் அங்கிருந்தவரகள் கேட்கவில்லை.. இதையடுத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 50 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
மேலும் 151 கட்டிடங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையை ஒட்டி கிராமங்களே இல்லை என்கிற அளவிற்கு அந்த பகுதியில் எல்லா ஊர்களும் கோவை மாநகரை ஒட்டி வளர்ந்துவிட்டன. இதனால் கோவை மாநகரை சுற்றியுள்ள எல்லா பகுதிகளும் மாநகராட்சியில் தற்போது இணைக்கப்பட உள்ளன. கோவை மாநகரம் தற்போது 100 வார்டுகளாக உள்ள நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், இதன் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

ஐஎஸ் ஐ எஸ் கொடியுடன் சம்சுதீன் ஜாபர் வண்டியை செலுத்தி மக்கள் மீது தாக்குதல் – America நியுஓர்லியன்ஸ் பயங்கரவாதம்

 வீரகேசரி : ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வண்டியை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் – நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்
அமெரிக்க - நியு ஓர்லியன்சில் வண்டியை  கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன
இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் அமெரிக்க இராணுவீரரானநபர் ஒருவர் ஐஎஸ்; அமைப்பின் கொடியுடன் தனது வண்டியை மிக வேகமாக செலுத்தி தற்காலிக வீதிதடைகளை கடந்து வந்து புதுவருடத்தன்று பொதுமக்கள் மீது மோதினார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர் ஏனையவர்களின் உதவியுடனேயே செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வியாழன், 2 ஜனவரி, 2025

16 மாநக​ராட்​சிகள் 13 நகராட்​சிகள், 25 பேரூராட்​சிகள் உருவாக்கம்

 Hindu Tamil : சென்னை: நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்​தலைக் கருத்​தில் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநக​ராட்​சிகள், 41 நகராட்​சிகள் விரிவாக்​கம், கன்னி​யாகுமரி உள்ளிட்ட 13 நகராட்​சிகள், 25 பேரூராட்​சிகள் உருவாக்கம் மற்றும் மறு சீரமைப்​புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலை​யில், தற்போது மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்​துள்ளது.
எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமய​மாக்கலைக் கருத்​தில்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்​டியதன் அவசியம் எழுகிறது.

Bhopal Gaz leak போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றம்.. Toxic Waste From 1984 Gas Tragedy

 மாலை மலர் : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. நச்சுக் கழிவை பாதுகாப்பாக இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.

புதன், 1 ஜனவரி, 2025

அண்ணாமலையின் பொய்களை பரப்பும் முட்டாள்களில் நீங்களும் ஒருவரா?

Annamalai: சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டது ஏன்? - காரணத்தை அடுக்கிய  அண்ணாமலை!

சுமதி விஜயகுமார்  :  ஒவ்வொரு முறையும் பிஜேபி ஒன்றியத்தில் வெற்றி பெரும் போதும், வடமாநிலத்தவர்களால் தான் வெற்றி கிடைத்தது என்று கூறி,
அவர்களை மிக கேவலமாக சித்தரித்து பதிவுகள் இடப்படும். பீடா வாயன்கள், பாணி பூரி, அறிவில்லாதவர்கள் என்று. அதையெல்லாம் கடந்த உபி தேர்தல் அடித்து நொறுக்கியது.
தினம் தினம் ஒருவேளை சோற்றுக்கே போராடும் அந்த மக்களுக்கு மேலே நடக்கும் அரசியலை ஒரு இடத்தில் அமர்ந்து , அலசி ஆராய எல்லாம் நேரம் கிடைக்காது.
சொல்ல வேண்டியதை, தரவுகளுடன், மக்கள் மொழியில் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை துருவ் ரதி நிரூபித்தார்.
கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை,
கல்வி கற்க வாய்ப்பு அமையாதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.

அரகலய கொலைக் களமாவதை தடுத்த ஜெனரல் சவேந்திரா டி சில்வா தன்னிலை விளக்கம்

Office of the Chief of Defence Staff
ஜாப்னா முஸ்லீம் : : அரகலய கொலைக் களமாவதை தடுத்த, விடைபெற்ற ஜெனரல் சவேந்திரவின் செய்தி!
2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும்,
ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும்,
அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

பங்களாதேஷில் எல்லை தாண்டிய 95 இந்திய மீனவர்களை வங்கதேசம் விடுதலை செய்வதாக அறிவிப்பு

 tamil.oneindia.com - Nantha Kumar R : டாக்கா: மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் மோதலுக்கு நடுவேயும் கூட வங்கதேசம் நம் நாட்டிடம் பணிந்துள்ளது. அதன்படி வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 95 மீனவர்களை விடுதலை செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது டிரக்கால் மோதி துப்பாக்கி பிரயோகம் : 10 பேர் உயிரிழப்பு!

 தினமணி : அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2024 இல் 223 படங்கள் தோல்வி- - ரூ.1,000 கோடி இழப்பு! உச்ச நட்சத்திரங்களால் நாசமாகும் தமிழ் சினிமா

 மாலைமலர் : “2024-ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் குவிக்கும், இந்திய சினிமாவையே தமிழ் சினிமா கவனிக்க வைக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.
முன்னணி நடிகர்களின் படங்களால் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா இந்த ஆண்டு கண்ட சாதனைகள், வேதனைகள் குறித்து திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியதாவது:-
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 241 படங்கள் ரிலீசாகி உள்ளன. இதில் அதிக படங்கள் தோல்வி அடைந்து உள்ளன என்பது வருத்தமான விஷயமே.

தாய்லாந்து பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது!

 மாலை மலர்  :  பாங்காக்  பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது.
இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இலங்கை ஆளும் கட்சி எம்.பிக்கள் இருவர் மீது - நடந்தது என்ன..?

jaffnamuslim.com  : பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை யொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று,
 அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீமான் கைது! தடையை மீறி போராட்டம்

 மின்னம்பலம் - Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட வந்த சீமான் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்போடப்பட்டுள்ளது.

திங்கள், 30 டிசம்பர், 2024

பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்!

தினமலர் : பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்
சண்டிகர் : வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காததாக கூறி, மத்திய அரசை கண்டித்து, பஞ்சாப் முழுதும் விவசாயிகள் நேற்று நடத்திய பந்த்தால், ரயில், பஸ் சேவை முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் - ஹரியானா எல்லைகளான ஷம்பு, கானவுரியில், 'டில்லி சலோ' அதாவது, டில்லிக்கு செல்வோம் என்ற போராட்டத்தை கடந்த பிப்., 13 முதல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

திரு. மன்மோகன்! RSS, BJP இந்துத்துவ கும்பல், நாட்டின் சாபக்கேடு.!


Kandasamy Mariyappan 
:  முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் அவர்கள்.!
திருமதி. இந்திரா மற்றும் திரு. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, திருமதி. சோனியா அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற முடிவோடு ஒதுங்கியிருந்தார்.!
திரு. நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்று, புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார்.!
ஆனாலும், இந்துத்துவ கும்பலால் அமைதியாக இருக்க முடியவில்லை.! 

May be an image of text

எனவே காங்கிரஸ் கட்சிக்குள் சரத்பவார், அர்ஜூன் சிங், நட்வர் சிங், கருப்பையா மூப்பனார், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூலமாக மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.!
கடைசியாக சீத்தாராம் கேசரி மூலமாக காங்கிரஸை படுகுழியில் தள்ளி, பாஜக ஆட்சிக்கு வந்தது.!
100 கோடி மக்களை கொண்ட,  மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, மதவெறி பிடித்த இந்துத்துவ கும்பலின் கைக்குள் போவதை உணர்ந்த, திருமதி. சோனியா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்துத்துவ கும்பலை எதிர் கொண்டார்.!

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா போட்ட பாதையில் பயணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகே!

 ஜாப்னா முஸ்லீம் : நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசோடு பேசுவேன் - மருத்துவர் அர்ச்சுனா ராமநாதன் எம்பி

 Ramanathan Archchuna : யாழ்ப்பாண மீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகள் தொடர்பாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தது.
அதனால் அவர்கள் தொடர்பில் சுகாதாரத்துக்கு அடுத்ததாக அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் எனது youtube தளத்தில் பதிவிட்டுள்ளேன்.
நன்றி

விமான விபத்து – 167 பேர் உயிரிழப்பு.. தென்கொரியாவில் விமானம் தரை இறங்கும்போது ..

 தினமணி : தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

ராமதாஸ் Vs அன்புமணி: மோதலுக்கு முன் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன? யார் இந்த முகுந்தன்?

minnambalam.com -Aara :  “பாமக பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் பேசி முடித்த நிலையில் நன்றியுரைக்கு முன்பாக… டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பும் அதற்கு பகிரங்கமாக அன்புமணி தெரிவித்த எதிர்ப்பும்தான் இன்று அரசியல் வட்டாரத்தில் ஹாட்டான விவாதமாக மாறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை நியமிக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அறிவித்தபோது கூட அந்த முகுந்தன் மேடை ஏறவில்லை.
ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை வாங்கிய அன்புமணி, ‘அவர் கட்சிக்கு வந்தே நாலு மாசம் தான் ஆகுது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கப் போகுது. அவருக்கு எதுக்கு இந்த பதவி?’ என்று கேட்க டாக்டர் ராமதாஸ் சூடாகிவிட்டார்.

‘இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ’ என்று  ஆவேசமாகவே தெரிவித்தார்.