“பேச்சுவார்த்தைக்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை முழக்கங்களுடன் நடத்தலாமா” என்று அதிகாரிகள் கேட்டதற்கு ” புத்தகம் வாங்கிதான் செல்லவெண்டும். அது இல்லாமல் அங்கு போய் என்ன செய்யப்போகிறொம்” என்று எதிர் கேள்வி கெட்டனர். சமச்சீர் பாடத்தின் தரத்தை பற்றியும் காசு உள்ளவனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி என்ற கல்வி தீண்டாமைக்காகதான் தங்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொண்டனர். பள்ளியில் ஆசியர்களின் அத்துமீறல்களை நம்மிடம் புகாராக கொட்டி தீர்ததனர்.
“குடிநீர் குழாயில் புழு வருகிறது என்றும், சத்துணவில் முட்டை போடுவுதில்லை, பஸ் தாமதமாக வந்தாலும் வாத்தியார் எங்களை அடிக்கிறார், புத்தகம் இல்லாமலேயே படிக்கவில்லை என்று அடிக்கிறார், என்றெல்லாம் ஈட்டியாக துளைத்தார்கள். தாசில்தாரை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரை பார்த்து இவையனைத்தும் சரி செய்ய வெண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். திங்கள் கிழமை மாணவர்களுடன் பெரும்  மாவட்டகல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவொம் என்று உற்சாகத்துடன் கூறி சென்றனர் அந்த மாணவர்கள்.
அரசின் கல்வித்திட்டங்களாகட்டும், இல்லை மக்கள நல திட்டங்களாகட்டும் இவையெதுவும் மக்கள் விழிப்புணர்வின்றி அமலுக்கு வராது. சமச்சீர் கல்விக்கான நூல்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட ஆரம்பித்தால் அதுதான் பாசிச ஜெயாவின் திமிரை அடக்குவதற்கான மருந்தாக செயல்படும். விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர்கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!
மாணவர்களிடையே வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுர முழங்கம்:
  • மாணவர்களே! புத்தகம் வழங்கிய பிறகு பள்ளிக்கு செல்லுங்கள், புத்தகம் இல்லா பள்ளி எதற்கு?
  • தமிழக அரசே! தமிழக அரசே! புத்தகம் வழங்கு புத்தகம் வழங்கு!சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  •  மாணவர்களே, மாணவர்களே! வகுப்பு எதற்கு, வகுப்பு எதற்கு! புத்தகம் இல்லா வகுப்பு எதற்கு!
  • புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! புத்தகமில்லா வகுப்புகளை புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அடைக்காதீர், அடைக்காதீர், புத்தகமில்லா வகுப்புகளில் மாணவர்களை அடைக்காதீர்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அச்சம் தவிர்! அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர், நெஞ்சம் நிமிர்!
  • மாணவர்களே, மாணவர்களே! பள்ளி செல்வோம்! பள்ளி செல்வோம், புத்தகத்துடன் பள்ளி செல்வோம்!
  • தமிழக அரசே, தமிழக அரசே! அமல்படுத்து, அமல்படுத்து! உச்சநீதிமன்றத்தின் உத்திரவுகளை அமல்படுத்து! புத்தகம் வழங்கு, புத்தகம் வழங்கு! சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  • புறக்கணிப்போம், புறக்கணிப்போம்! புத்தகங்கள் கிடைக்கும் வரை வகுப்புகளை புறக்கணிப்போம்!
  • மாணவர்களே, மாணவர்களே! வாருங்கள், வாருங்கள்! வகுப்புகளை விட்டு வெளியே வாருங்கள்!
  • பள்ளிக்கு செல்வோம், பள்ளிக்கு செல்வோம், புத்தகத்துடன் பள்ளிக்கு செல்வோம்!