சனி, 25 பிப்ரவரி, 2012

வீரப்பன் சதாம் உசேன் கடாபி என்கவுண்டர் மனோபாவம்


எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.
‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’  சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சோ Encounter .ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ ஆட்டோ சங்கரோ


சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களும் நல்லவர்களோ, நாட்டுக்காக உழைத்தவர்களோ அல்ல திருடர்கள் அதனால் இந்த என்கவுன்டர் தவறானது இல்லை, தமிழக அரசு மீது தேவையில்லாமல் அவதூறு செய்கிறாரகள் என்று பத்திரிகையாளர் சோ குறிப்பிட்டிருக்கிறாரே,
-கி. சரவணன்.
கொள்ளை, கொலை எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து தண்டனை தரவேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றம்.
வங்கி கொள்ளைக்கே என்கவுன்டர் செய்யவேண்டும் என்று சொல்கிற நடிகர் சோ, ‘சங்கரராமனை கொலை செய்த, ஜெயேந்திர சரஸ்வதியை ஏன் தேவையில்லாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவரையும் என்கவுன்டரில் போட்டு இருக்கலாமே.
அன்றைக்கே அவரை என்கவுன்டரில் போட்டிருந்தால், இன்றைக்கு அவர் சாட்சிகளை களைப்பது, நீதிபதியிடமே பேரம் பேசுவது போன்ற செயல்களை செய்திருப்பாரா?’ என்று கேட்பார் போல் தெரிகிறது. சோ இப்படி கேட்டால் அது நியாயம் இல்லை.
நம்மை பொறுத்தவரை அது ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ கொலை, கொள்ளை செய்த யாரையும் என்கவுன்டரில் சுட்டு சாகடிக்கக் கூடாது.
முறைப்படி விசாரித்துதான் தண்டனை தரவேண்டும்.

760 girls per 1,000 boys..Son-producing” clinics in Gujarat busted

From R. Vasudevan—Reporting from New Delhi
New Delhi, 25 February (Asiantribune.com):
When district officials in Mehsana in Gujarat. studied records of gynaecologists recently, they were stunned to find out that many were virtually running son-producing centres.
Mehsana town is infamous with its ratio at just 760 girls per 1,000 boys - the lowest in the country.
Some of the doctors in the region have individual ratios of just 600 per 1,000 boys in the past few months. Alarmed, government officials have started monitoring the individual sex ratios of doctors.
District collector Rajkumar Beniwal suspended the licence of 15 gynaecologists for three months because of the high number of boys they were delivering at their clinics.
One doctor, for instance, delivered just 250 girls in comparison to 334 boys between April and November 2011. Despite strict requirements of the Pre-Conception & Pre-natal Diagnostic Techniques Act , many have been accused of underreporting number of expecting mothers who have undergone sonography at their clinics.
"If a doctor delivers 50 babies every month, the sonography machine has to be used at least 100 times," Beniwal said. "But these doctors have informed us of only 10 instances where the machine is used." Chief district health officer Deepak Jagani says Mehsana has hit the lowest ebb on the gender index, according to the Census 2011 figures.
- Asian Tribune

35th Chennai Book Fair Student Documentary



சென்னையில் ஆண்டுதோறும் தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருவிழாக்களையொட்டி நடத்தப் பெறும் தமிழ்ப் புத்தகங்களின் கண் காட்சியில், இவ்வாண்டு 57 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன; பல கோடி ரூபாய்களுக்கான  விற்பனை மூலம், தமிழ்ப் புத்தக வெளியீட்டா ளர்கள் பலரும் பயன் பெற்றுள்ளனர்.

சசிகலா வளையத்தில் இருந்து பிரேமலதாவுக்கு வந்த சூட்கேஸ்!


Viruvirupu.comசங்கரன்கோவில் இடைத்தேர்தல் எரவுன்ட்-த-கார்னரில் தயாராக நிற்கும் நேரத்தில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-வின் தீவிர கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது விஜயகாந்தின் தே.மு.தி.க.! என்ன காரணம்? ஒருவேளை தே.மு.தி.க. ஜெயித்து விடலாம் என்ற பயமா?
அதெல்லாம் கிடையாது. வேறு வேறு விவகாரம்.
தமிழக அரசியல் அடுத்து எப்படித் திரும்பப் போகின்றது என்பதற்கான பதில், தே.மு.தி.க.-வின் சில நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது என்கிறார்கள்.
தனித்துப் போட்டியிடுவதாக (ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது) தே.மு.தி.க. வெளிப்படையாக கூறினாலும், உள்ளே வேறு ஒரு டீல் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம், அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளுக்கு உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் இருந்த விஜயகாந்தை போட்டியில் குதிக்க வைத்தது, ஜெயலலிதாவின் சட்டசபை ‘உசுப்பேற்றல்’ பேச்சு மட்டுமல்ல.
அதையும் தாண்டி, இதில் வேறு ஒரு விவகாரமும் உள்ளது.

Sasikala:ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள்

Jayalalitha and Gangai Amaran

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காகவே இயக்குநர் - இசையமைப்பாளர் கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று 3-வது நாளாக தனிக்கோர்ட்டில் ஆஜரானார்.

ரசிகர்கள் கொலவெறி - ஹன்சிகா ஆவேசம்!

சில நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் விழாவிற்கு சென்றிருந்தார் ஹன்சிகா மோத்வானி. விழாவை சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு விழா முடிந்ததும் கிளம்பியிருக்கிறார். விழாவிற்கு வரும்போது இருந்த கவனிப்பு கிளம்பும் போது இல்லையாம்.
கோபத்தோடு வெளியே வந்து பார்த்த ஹன்சிகாவிற்கு தலைசுற்றிவிட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் ரசிகர்கள் ஹன்சிகாவைக் காண திரண்டுவிட்டார்களாம். அவர்களை கடந்துசெல்ல முயன்ற ஹன்சிகா ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டார்.
கூட்டத்தில் மூச்சுத் திணறிய ஹன்சிகாவை போலிஸார் காபாற்றுவதற்குள் பல ரசிகர்கள் ஹன்சிகாவை தொட்டுப் பார்க்கும் ஆசையை தீர்த்துக் கொண்டுவிட்டார்களாம். 
சில ரசிகர்கள் சந்தோஷத்தில் செய்வதறியாமல் ஹன்சிகாவின் உடலில் நகக் கீறல்களை போட்டு விட்டார்கள். ஒரு வேளையாக போலீஸார் கடும் முயற்சியால் ஹன்சிகாவை மீட்டெடுப்பதற்குள் ஹன்சிகா பல காயங்களுக்கு ஆளாகிவிட்டிருந்தார்.இது பற்றி பேட்டியளித்த ஹன்சிகா “ ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். அவர்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இனி செக்யூரிட்டி இருந்தால் தான் எங்கும் செல்வேன். அன்று போலீஸ் இல்லையென்றால் என் கதி அவ்வளவு தான்” என்று கூறியிருக்கிறார்.போன முறை சென்னையில் இது போல் நடந்த போதே உஷாராகியிருக்கலாம் என்கின்றனர் சென்னை ரசிகர்கள்.

கல்லூரி Admissionகளில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.கொள்ளை தலைவன் வினோத்குமார்

சென்னை: உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவே கொள்ளைத் தொழிலுக்கு வங்கிக் கொள்ளை கும்பலின் தலைவன் வினோத்குமார் மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வினோத்குமாரின் வாழ்க்கை
மேற்கு வங்காளத்தில் இருந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க சென்னை வந்தவன் தான் வினோத்குமார்.
காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்தான்.
வெளி மாநிலமாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தான். கல்லூரிகளில் சேர விவரம் தெரியாமல் வருவோருக்கு வழி காட்டினான். அவர்களை தனக்கு தெரிந்த கல்லூரிகளில் சேர்ந்து விட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.

நிதிஷ்குமார்: என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல

சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதைவிடுத்து என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல என்று பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் சந்திரிகா ரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், வினோத்குமார் ஆகிய 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அபய்குமார் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் தகவலை தெரிவித்த போலீசார், 5 பேரின் முகவரிகளையும் வெளியிட்டனர்.

என்கவுன்டர்' விடை தெரியாத கேள்விகளால் மர்மம்

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, வங்கி மேலாளரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பிற்பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில், மிரட்டி 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். சம்பவம் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்து இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள

‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும். நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.
இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.

சாமியாருடன் பெண் ஓட்டம் ; வெளிநாட்டு கணவர் அதிர்ச்சி

பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). இவர் வெளி நாட்டில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர் அடிக்கடி பரங்கிப்பேட்டை அருகே உள்ள பள்ளி வாசல் தெருவில் குறி சொல்லும் சாமியார் தாமரைச்செல்வனிடம் சென்று குறி கேட்டு வந்தார்.
குறி கேட்பதற்காக அடிக்கடி சென்று வந்த விஜயலட்சுமிக்கும், சாமியார் தாமரைச்செல்வனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் விஜயலட்சுமியையும், சாமியார் தாமரைச் செல்வனையும் காணவில்லை. இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சுப்பிரமணியன், தனது மனைவியையும், சாமியாரையும் தேடி உள்ளார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறி கேட்க சென்ற பெண், சாமியாரோடு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு முன் இலங்கையில் விற்பனைக்கு வரும் பஜாஜ் குட்டி

ஆர்இ60 என்ற பெயரில் பார்வைக்கு கொண்டு வந்த 4 வீல் பயணிகள் வாகனத்தை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆட்டோரிக்ஷா தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்இ60 என்ற பெயரில் தனது முதல் 4 வீல் பயணிகள் வானத்தை பார்வைக்கு அறிமுகம் செய்தது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பிகினி உடையில் லட்சுமிராய்!

Lakshmi Rai in Bhiniதெலுங்குப்படமொன்றில் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிராய், புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்குப்பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் லட்சுமிராய், நடிக்கும் அதிநாயகடு படத்தை டைரக்டர் பரச்சூரி முரளி இயக்குகிறார்.  படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி

சென்னை: "உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, "திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, "மெட்ராஸ் யுனைடெட் லீக்' சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. "சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை' என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், "திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே' என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை! மிர்ரர் ஏட்டில் வெளிவந்த கடிதம்!

 இந்திய மக்களின் மிதமிஞ்சிய கடவுள் நம்பிக்கையைப் பற்றி, அயல்நாட்டில் வளர்க்கப்பட்ட ஒருவர் என்ன நினைக்கிறார் ?
இந்தியாவுக்கு கடவுள் நம்பிக்கை நல்லதை விட, தீமைகளைத் தான் அதிகமாக செய்திருக்கிறது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த நாட்டிலும்...
நான் எந்த நாட்டிலிருந்து இங்கு வந்துள்ளேனோ அங்கேயும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது. இந்தியாவில் நடப்பது போல, அங்கே கடவுளைப் பற்றி அதிகமாகக் கதை அளப் பதும் இல்லை; கடவுளைப் பற்றி அஞ்சு வதும் இல்லை. எனினும் என்னுடைய நாட்டிலே வாழ்க்கை இனிமையாக நடந்து வருகிறது.நேர்மையும் நல்லன்பும் உள்ள மக்களைத்தான் காணுகின்றேனே தவிர, நயவஞ்சகர்களைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை.

பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் கண் மூடித்தனமான வெறி ஏன்?

கலி.பூங்குன்றன்
(Females activists of Durga Vahini, the women wing of Bajrang Dal are being imparted weapons and sword training at its camps for taking part in future activities against minorities.)
இந்த வன்முறைப் பயிற்சிகள் பற்றி சோவாளின் பேனா வாய் திறந்ததுண்டா?
ஆனந்த விகடனின் கேள்வி (1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பன லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல் லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?
ஒரு லாபி என்றால் அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?

30 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்

மாஸ்கோ, பிப். 22-  ரஷியாவின் சைபீரியா பகுதி பனிபிரதேசமா கும். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது. தற்போது அவை அழிந்து விட்டது. இந்த நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் ஒரு அணில் இறைக்காக நிலத் தில் தோண்டியபோது சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன.
அவற்றை உயிரி இயற் பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலை மையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயி ரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக் களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து விஷே சமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊறவைத் தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் நட்டு பயிரிட்டனர்.

டில்லிக்கு இத்தாலியின் தடாலடி!இந்திய மீனவர் கொலை

இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகலை ஏற்படுத்தும் கட்டத்துக்கு சென்றுள்ளது.
கேரள மாநில போலீஸ் இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்வதற்கோ, இந்திய நீதிமன்றம் ஒன்று விசாரணை நடத்துவதற்கோ அதிகாரம் ஏதும் கிடையாது என்று இத்தாலிய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இரு இத்தாலியக் கடற்படையினரின் சார்பில் இத்தாலிய அரசு, கேரள ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமது கடற்படையினர் மீது இந்த விவகாரத்தில் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மாதவன்: படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்

படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார்.
நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன்.

CBIநீதிமன்றம் பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம்-ஊழல்-தீர்ப்பு
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர்.
முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
மிகவும் கறாரான தீர்ப்பாக ஊடகங்கள் இதனைச் சித்தரித்த போதிலும், இத்தீர்ப்பு நடந்துள்ள ஊழலைப் பற்றியதல்ல. உரிமங்கள் வழங்கும் முறையில் சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மட்டுமே இத்தீர்ப்பு குறிப்பிடுகிறது. மற்றபடி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா முதல் அதிகாரிகள் வரையிலான பலரின் குற்றத்தையும், குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டுமா என்பதையும் முடிவு செய்யவேண்டியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்தான் என்று கூறியிருக்கும் இத்தீர்ப்பு, நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

Jeya Cho மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!


மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?








ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

மாணவர்களை புரோக்கர்களாக்கும் கல்லூரிகளால்தான் குற்றங்கள் பெருகின்றது

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்த்து விடுவோருக்கு கணிசமான தொகை புரோக்கர் கமிஷனாக தரப்படுவதால் சென்னை நகரில் வட மாநில மாணவர்களால் பல குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு புரோக்கர் மாணவர்தான் இன்று இரு வங்கிகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.
தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆனால் இந்த வியாபாரம் இன்று கடும் போட்டியும், குற்றச் செயல்களும் நிறைந்ததாக மாறி தமிழக கல்வித்துறைக்குப் பெரும் சாபக்கேடாக மாறி நிற்கிறது.

SRM மாஜி மாணவன்!கொள்ளைக் கும்பல் தலைவனான

சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்த வினோத்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
வினோத்குமார் குறித்த தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.

தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க -இளைய நடிகர்களுக்கு சேரன் சவால்

பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் திரு சண்முக சுந்தரம், T.K.ராமமூர்த்தி, T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், திருமதி P.சுசீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரு ராம்குமர் கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Encounter சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

சென்னையி்ல் இரு இடங்களில் நடந்த வங்கி்க்கொள்ளையில் தொடர்புடைய வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர்.
சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

ஜெ.க்கு அமெரிக்காவில் இருந்து பணம் வந்த கதை இதுதான்!(எம்.ஏ.எம்.ராமசாமி)

New Delhi, India: The Supreme Court on Tuesday issued notice to Tamil Nadu Chief Minister Jayalalithaa on an appeal filed by the CBI against a Madras High Court judgment, which set aside the 333,000 U.S. dollars gift case against her on the ground of inordinate and unexplained delay at the investigation and trial stages.

சரியாக 20 வருடங்களுக்குமுன் இதே மாதம் (1992 பிப்ரவரி) அப்போதும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் எங்கும் அ.தி.மு.க.-வினரால் கொண்டாடப்பட்டது. அமைச்சர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் ஜெயலலிதாவுக்கு விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்று அமைச்சர்களை நேரடியாக அழைத்து ‘விலையுயர்ந்த பரிசு’ சமாச்சாரத்தை சொன்ன நபர், தற்போது அ.தி.மு.க.-வில் இல்லை. சசிகலா குடும்பத்தினரில் ஒருவராக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உத்தரவிட்ட நபர் கூறிய விலையுயர்ந்த பரிசு, திருவள்ளுவர் சிலையோ, தஞ்சாவூர் தட்டோ அல்ல… பேங்க் டி.டி. (டிமான்ட் டிராஃப்ட்)!
பிப்ரவரி 24-ம் தேதி காலையிலேயே, பிறந்தநாள் பரிசுகளுடன் வி.ஐ.பி.கள் ஆஜராகி விட்டனர். மொத்தம் 89 பேங்க் டிராஃப்ட்டுகள் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசுகளாக கிடைத்தன. 21 வெவ்வேறு பேங்குகளில், 57 நபர்களின் பெயர்களில் எடுக்கப்பட்ட 89 டிராஃப்டுகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபா! (20 வருடங்களுக்குமுன் மிகப்பெரிய தொகை அது)

புதன், 22 பிப்ரவரி, 2012

கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-’மேல்’சாதிக் கும்பல்!


    “கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.
    மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா, சசி சந்திப்பு சிறுதாவூர் பங்களாவில்

    சென்னை: போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது.
    அந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன்கூட்டியே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
    கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தனது நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே டிசம்பர் 10ம் தேதியே சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 12ம் தேதி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.
    இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன் போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    அதிமுக ஆட்சி அமைந்தது முதல் சசிகலாவின் உறவினர்கள் அதிகார மையங்களாக மாறி கோடி கோடியாக வசூலித்ததும், சில பல சொத்துக்களை வாங்கி குவித்ததும் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதா தெரிந்து கொண்டதால் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது.
    இது உண்மையா ... இப்படியெல்லாம் நடக்குமா ? இல்லை இது நாடகமா…

    'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா?பணயக் கைதி எம்.நடராஜன்?

    ண்டை, சச்சரவு, பிரிவு, கைதுப் படலங்களுக்கு மத்தியில் பெங்களூருவில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கும் அதிரடித் திருப்பங்களை எட்டி உள்ளது. நீதிப் போராட்​டமாக மட்டுமே இதுவரை கவனிக்கப்பட்ட வழக்கு, இப்போது பாசப் போராட்டமாகவும் மாறி இருக்கிறது.
    'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சில விஷயங்​களைச் சொல்லப் போகிறார்’ என்று ஒரு குரூப்பும், 'அவர் எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுக்குஎதிராகப் பேச மாட்டார்’ என்று இன்னொரு குரூப்பும் சொல்லி வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டு ஏறினார் சசிகலா. அதே தினத்தில்தான் சென்னையில் நடராஜன் கைது செய்யப்பட்டார். 'சசிகலாவின் மனதை மாற்றுவதற்கு நடராஜன் முயற்சி செய்தது தெரிந்துதான் இந்தக் கைது நடந்துள்ளது’ என்று உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

    செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

    மெரினா: பசங்க மீது பச்சாதாபம், பெண்கள் மீது வெறுப்பு

    தோனி, மெரினா படங்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
    -டி.விஜய், திருச்சி.
    தோனி படம் பார்க்கவில்லை.
    சென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல்.‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை எளிய மக்களின் வாழ்க்கையோடு காட்சிபடுத்தியிருந்தது பிடித்திருந்தது.மெரினாவில் வேலை செய்கிற சிறுவர்களின் சிரமத்தை, மகிழ்ச்சியை இயல்பாகவும், செயற்கையாகவும் கலந்து காட்டியிருந்தாலும் தவறாக ஒன்றும் தெரியவில்லை.

    இந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை!

    ஒரு ஜோடி தேய்ந்து போன ரப்பர் செருப்புகள் காணாமல் போன 'குற்றத்திற்காக'ப் பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருக்கிறது, இந்தோனேஷிய நீதிமன்றம்
    ஒரு ஜோடி தேய்ந்து போன ரப்பர் செருப்புகள் காணாமல் போன ‘குற்றத்திற்காக’ப் பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருக்கிறது, இந்தோனேசிய நீதிமன்றம்போலீசாரால் அநியாயமாகத் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனை விடுதலை செய்யக்கோரி, போலீசு நிலைய வாயில்களில் தேய்ந்து போன ரப்பர் செருப்புகளை குவிக்கிறார்கள்
    இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.
    14 மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2010-இல், இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத் தலைநகர் பாலு நகரைச் சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியின் ரப்பர் செருப்புகள் காணாமல் போயின.  தனது செருப்பு திருடு போனதாக வழக்குத் தொடுத்தார், அப்போலீசு அதிகாரி.  இவ்வழக்கை விசாரித்து வந்த பாலு நகர நீதிமன்றம், போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட “ஏ.ஏ.எல்.” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளிச் சிறுவனைத் திருடன் என்று தீர்ப்பளித்தது.  திருடு போனதாகக் கூறப்படுவது நூறு ரூபாய்கூடப் பெறாத பழைய செருப்புதான் என்றாலும், இக்குற்றத்திற்கு நீதிமன்றம் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனை ஐந்தாண்டு சிறைவாசமாகும்.

    ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!

    கடந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

    கிங் பிஷர் விமான சேவை மூடப்படுமா? தொடரும் ரத்து- விமானிகள் விலகல்

    கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான சேவைகள் இயக்ககத்திடம் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றார்.
    இந்நிலையில் மும்பையிலிருந்து 13, கொல்கத்தாவிலிருந்து 8, டெல்லியிலிருந்து 4 என விமான சேவைகளை திடீரென ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.

    பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. உள்பட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பரிசாக ரூ. 2 கோடி அளவுக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டன.
    இவற்றை தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.

    திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையை சூறையாடிய கொள்ளையர்கள்-45 கிலோ நகைகள் பறிபோயின!

    திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தது ஒரு கும்பல். இந்த நிலையில் தற்போது அதே திருப்பூரில் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?

    சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படுகின்றது. சென்னையில் மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இந்த கடும் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்ப்டடுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    இனிக்க இனிக்கப் பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள்-ராமதாஸ்

    Ramadossம்ம்ம் எவ்வளவுதான் ராமதாசு இனிக்க இனிக்க பேசினாலும் இந்த முறை எந்த கூட்டணியிலும் சிங்கிள் டிஜிட் சீட்டுக்கள்தான் கிடைக்கும்
     

    திருச்சி: திமுக இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உறுப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    பிரிதானியாவுக்கும் – பிரான்ஸிற்கும் ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    பிரிட்டிஷ்  மற்றும்  பிரெஞ்சு நிறுவனங்களுக்கு எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்தி விட்டதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளது ஈரான். “அவர்களாக நிறுத்தும்வரை   நாம் காத்திருக்கப் போவதில்லை. முந்திக்கொண்டு,  நாமே நிறுத்தி விட்டோம்” என்று அறிவித்துள்ளது   ஈரானிய பெற்றோலிய அமைச்சு.
    ஈரான்மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரும் நடவடிக்கையாக, கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈரானிய எண்ணை இறக்குமதியை ஜூலை 1-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளவுள்ளன என்பதே அந்த அறிவிப்பு.
    ஐரோப்பி ஒன்றியம் இந்த தடையை உடனடியாக அறிவிக்காமல், சுமார் 6 மாதங்களின் பின் தேதியிட்டு அறிவித்த காரணம், ஈரானிய ஆயில் இறக்குமதியை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், புதிய ஏற்றுமதியாளர்களை தேடுவதற்கு அவகாசம் தேவை என்பதால்தான்.
    6 மாதங்களுக்குள் வேறு நாடுகளில் இருந்து எண்ணை இறக்குமதி ஒப்பந்தங்களை செய்துகொண்டு, அதன்பின் சௌகரியமாக ஈரானிய எண்ணை இறக்குமதியை நிறுத்திக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியம் போட்ட திட்டம், ஈரானுக்கு புரியாதா, என்ன?
    “6 மாதங்களின்பின் நீங்கள் நிறுத்த வேண்டாம், இதோ ஞாயிற்றுக்கிழமை இரவோடு  இரவாக நாங்களே நிறுத்தி விடுகிறோம்” என்று நேற்று அறிவித்து பிரிட்டனையும், பிரான்ஸையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது ஈரான்.

    திங்கள், 20 பிப்ரவரி, 2012

    முதன் முதலாக சந்தானத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு!

    தெலுங்கில் வசூல் சாதனை படைத்த மகதீரா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ராஜ்மௌலி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கும் படம் ”நான் ஈ”. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.ஹீரோ படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுகிறார். மகதீரா படத்தைப் போல் ஹீரோ வில்லனை மறுபிறவியில் பிறவியெடுத்து அழிக்கிறார். மறுபிறவியில் ”ஈ”-ஆக பிறவியெடுத்து வில்லனை அழிக்கும் போது தான் சந்தானத்தின் நடிப்பு ஆரம்பிக்கிறது.ஹீரோயின் சமந்தா மறுபிறவியில் சந்தானத்தை ஹீரோவாக நினைத்து விரட்டி விரட்டி காதலிக்கிறார்.

    Cricket அசாருதீனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு

    புதுடெல்லி : போலி செக் கொடுத்து ஏமாற்றிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன். அவருக்கு சொந்தமாக டெல்லியில் ஒரு வீட்டுமனை உள்ளது. ரூ.4.5 கோடி மதிப்புடைய அந்த வீட்டை விற்க அசாருதீன் முடிவு செய்தார்.
    இதுபற்றி இணையதளத்தில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்த ஒரு டெல்லி தொழில் அதிபர் சோலங்கி அந்த வீட்டை வாங்க முடிவு செய்தார். அதற்காக அசாருதீனுக்கு முன்பணமாக ரூ.1.5 கோடி கொடுத் தார். இந்த சம்பவம் 2008ம் ஆண்டு நடந்தது. அந்த வீட்டின் பத்திரம் அசாருதீன் மற்றும் அவரது முதல் மனைவி சங்கீதா பிஜ்லானி ஆகியோரின் பெயரில் உள்ளது. எனவே வீட்டை விற்க வேண்டுமானால் சங்கீதா பிஜ்லானியின் சம்மதத்தையும் பெற வேண்டும். அவரின் சம்மதம் பெறும் நடவடிக்கையில் அசாருதீன் ஈடுபட்டு இருந்தார்.

    நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

    தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.
    பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.
    தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.

    இருளர் பெண்கள் கற்பழிக்கப்படவேயில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி பதில் மனு

    மெய்யாலுமா????
    சென்னை: இருளர் இனப்பெண்கள் 4 பேரை போலீசார் இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றது மட்டும் தான் உண்மை. ஆனால் அவர்களை கற்பழிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருளர் இனத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீசிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    தேமுதிகவின் அதிமுக.. ஓவர்! அடுத்து திமுக கூட்டணி???


    Vijayakanth
    சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தூக்கி வீசப்பட்டு விட்ட நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை தனது பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேமுதிக கட்சி. இக்கூட்டத்தில் திமுகவில் இணைவது குறித்தும், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
    தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து யாருடனும் அணி சேராமல் தனியாகவே போட்டியிட்டு வந்தது அக்கட்சி. பலர் கூட்டணிக்கு அழைத்தும் கூட விஜயகாந்த் போகவில்லை. இதற்காகவே அவருக்கு பெரும் வாக்காளர் கூட்டம் சேர்ந்தது. இப்படி ஒரு நடுநிலை அரசியல்வாதியைத்தான் தேடி வந்தோம் என்று மக்களும் உற்சாகமடைந்தனர்.

    கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!

    கல்விப் பிச்சை வள்ளல்கள்: நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக இயக்குநர் சசிகுமார்!
    கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!’மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.
    இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையினரின் நோக்கும் கூட.

    மாற்றுத்திறனாளி பெண்ணை விமானத்திலிருந்து இறக்கி விட்ட மனிதநேயமற்ற ஸ்பைஸ்ஜெட் விமானி


    Jeeja Ghoshகொல்கத்தா:  கொல்கத்தாவில் இருந்து கோவா புறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி மனிதநேயமே இல்லாமல் நடந்து கொண்டு அவரை கீழே இறக்கி விட்டார்.
    மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜீஜா கோஷ் (42). மன நலன் குன்றியவர். அவர் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செரிபரல் பால்ஸியில் சிறப்பு ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் நேற்று கொல்கத்தாவில் இருந்து கோவா செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறினார். ஆனால் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி விமானி அவரை கீழே இறக்கி விட்டார்.
    சக பயணிகளும், இவரும் பலமுறை கெஞ்சியும் கூட அந்த விமானி மனம் இறங்காமல் நடந்து கொண்டுள்ளார்.

    Sasi &Jeya நாடகங்களை நான் தற்போது நம்புவதில்லை.

    Karunanidhi

    திருச்சி: என் தலைமையில் கல்யாணம் செய்து கொண்ட நடராஜன் கைது செய்யப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

    திருச்சி வந்த அவர் அங்கு கே.என்.நேரு மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
    - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரம் செய்வது எப்போது?

    அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

    - சங்கரன்கோவிலில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறதா?

    பள்ளி மாணவிகள் இருவரை 15 பேர் கும்பல் பலாத்காரம்


    இந்தூர் : மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே உள்ளது பேட்னா கிராமம். இப்பகுதியை சேர்ந்த ஜாவேத் என்ற இளைஞன், டீன்ஏஜ் பள்ளி மாணவியுடன் ஒருவருடம் பழகியுள்ளான். அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், இது குறித்து தனியாக பேசவேண்டும் என ஜாவேத் கூறியுள்ளான். மறுத்தால் அந்தப் பெண் வீட்டு முன் விஷம் குடித்து தற்கொலை செய்வதாக கூறியுள்ளான். பயந்துபோன மாணவி, தன்னுடன் பள்ளியில் படிக்கும் உறவுக்காரப் பெண்ணை துணைக்கு அழைத்து சென்று ஜாவேத்தை சந்திக்க முடிவு செய்தார். பேட்னா கிராமத்துக்கு அருகேயுள்ள தோப்புக்கு கடந்த 10ம் தேதி வரும்படி ஜாவேத் கூறியுள்ளான்.

    நடராஜனை பார்க்க வந்த வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதம்


    திருச்சி : சிறையில் அடைப்பதற்கு முன்பு நடராஜனைப் பார்க்க வந்த வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தஞ்சாவூர் அன்பு நகர் ராமலிங்கம் அளித்த நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் 2வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் நேற்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நடராஜனை அழைத்து வந்த போலீஸ் வாகனத்துடன், அவரது ஆதரவாளர்கள் தனியாக வந்தனர். வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு சிறையில் அவருக்கான அறை ஒதுக்கப்பட்டது.

    ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப்


    ‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

    2ஜி' வழக்கு தீர்ப்பை ஓய்வு பெறும் நாளில் வெளியிட்டது ஏன்?நீதிபதி கங்குலி

    புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்த தீர்ப்பை நான் வெளியிடாமல் இருந்திருந்தால், இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு, மேலும் காலதாமதமாகியிருக்கும்' என, நீதிபதி கங்குலி கூறினார்.
    சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், பணி ஓய்வு பெறும் நாளில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், 122 உரிமங்களை ரத்து செய்தது தொடர்பான தீர்ப்பை அளித்தவருமான ஏ.கே.கங்குலி, தனியார் "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு முன்னதாக ஒத்தி வைக்கப்பட்டதற்கு, நான் காரணம் இல்லை.

    ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

    தமிழ் படம் தான் வேண்டும்- தமன்னா பிடிவாதம்

    நடிகை தமன்னா கேடி படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். அயன், பையா போன்ற படங்களின் வெற்றியால் நம்பர்1 நடிகையாக வலம் வந்த தமன்னா ஏனோ தமிழில் கொஞ்சம் கேப் விட்டுவிட்டார்.அடுத்தடுத்து தெலுங்கில் படங்கள் வந்தாலும் தமிழில் நடிக்காததால் தமன்னாவை இரண்டாவது நடிகையாக நடிக்க கேட்டு விட்டார் ஒரு இயக்குனர்.தமிழ் படங்களில் நடிக்கவில்லையென்றால் மார்க்கெட் இல்லையென்று அர்த்தமா என்று பொங்கி எழுந்தவர் தமிழ் படங்காளில் நடிக்க தயார் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.சில இந்தி படங்களும், தமிழ் படங்களும் தமன்னாவிடம் கதை சொல்ல காத்திருந்த போது தமன்னா தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்தாராம்.

    இனி விளங்கிடும் சி பி ஐ , தா.பாண்டியன் மீண்டும் மாநிலசெயலாளர்


    Tha Pandian
    ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிபிஐ தமிழ் மாநில 22வது மாநில மாநாடு நடைபெற்றது. இன்று மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் இறுதியில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    பணத்தை வாங்கிக் கொண்டு பதவி கொடுத்து விட்டனர் தேமுதிகவினர் குமுறல்

    Vijayakanth
    சென்னை: 28 வருடமாக விஜயகாந்த்துக்கும், அவரது ரசிகர் மன்றத்துக்கும், தேமுதிக கட்சிக்கும் உழைத்த எங்களை மோசடி செய்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்து விட்டனர் என்று சென்னையைச் சேர்ந்த தேமுதிகவினர் குமுறியுள்ளனர்.
    தேமுதிகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிளை, பேரூராட்சி, வட்டம், பகுதி, மாவட்டம் தேர்தல் முடிவுற்று அதற்கான நிர்வாகிகளை கட்சித் தலைமை அறிவித்து வருகிறது.

    அதிர்ச்சியில் அஜீத்! இண்டர்நெட்டில்!பில்லா 2

    அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தை சக்ரி டொலட்டி இயக்குகிறார். காந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகியும் இந்த படத்தின் போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டிருந்தது படக்குழு.

    ஷூட்டிங் ஸ்பாட், ஹீரோயின் போட்டோ ஷூட் போன்றவையெல்லாம் ரகசியமாகவே வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பில்லா படத்தின் சில படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகின. படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் போல படக்குழு தான் வெளியிட்டிருப்பார்கள் என அவற்றை பகிர்ந்தும், மொபைல்களிலும் ஏற்றிக் கொண்டனர்.

    அமலாபாலின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு

    ஒரே நேரத்தில் எனது இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று மிக மகிழ்ச்சியாகவும், அதே நேரம் சற்று கலக்கத்துடன் நம்மிடம் தெரிவித்தார் நடிகை அமலா பால்.மைனா படத்தில் அறிமுகமாகி, தெய்வத் திருமகள் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை அமலா பால், நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி என இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வந்துள்ளன. இரண்டு படங்களுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் ஆதவாவுடனும், காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த்துடனும் இணை சேர்ந்துள்ளார் அமலா பால். இரண்டு படங்களுமே காதலை அடிப்படையாக வைத்த படங்கள்தான். ஆனால் நிச்சயமாக இரண்டு கதைகளும் வெவ்வேறான கதைக் கருவைக் கொண்டிருக்கும். நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அமலா பால்.

    ஜெயலலிதாவை காப்பாற்றிய சசிகலா! கோர்ட்டில் நடந்தது என்ன?

    சசிகலா விவகாரத்தில் கிளைமாக்ஸ் தொடங்கி விட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் தடவையாக கோர்ட்டில் வாய்திறந்து வாக்குமூலம் கொடுத்த சசிகலா, “சொத்துக் குவிப்பு விவகாரங்களில் ஜெயலலிதாவுக்கு எந்தப் பங்குமில்லை” என்று கண்ணீர் மல்க, வாக்குமூலம் கொடுத்தே விட்டார்.
    பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராவதைத் தடுக்க சசிகலா தரப்பில் இருந்து முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கோர்ட் பிடிவாதமாக மறுத்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் இன்று கோர்ட் படியேறினர். சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் சொல்வது சசிகலாவுக்கு இதுவே முதல் தடவை.
    விசாரணை இன்றோடு முடிந்து விடவில்லை. சசிகலாவுக்கான கேள்விகளின் ஆரம்பமே இன்றுதான். இவர்களின் பல சொத்துக்கள் தொடர்பான ஒரு பட்டியலே இந்த வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.

    Free Free Free சங்கரன்கோவில் தொகுதியில்


    மிழகத்தில் எங்குமே பார்க்க முடியாத காட்சிகளை மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற சங்கரன்கோவில் தொகுதியில் காண லாம்.
    தேதி அறிவிப்புக்கு முன்னதாக, தொகுதியின் மூலை முடுக்குகளி லெல்லாம் தலைச் சுமையாக, சைக்கி ளில் கட்டிக் கொண்டு, டி.வி.எஸ். 50-களில்... ஆட்டோக்களில்... கார் களில்... அட, ஆம்புலன்ஸிலும்கூட அவைகள்’ தான். அவை என்றால் எவை? இடைத்தேர்தலுக்கான சன் மானமா? ம்ஹூம்.. அப்படிச் சொல்லக் கூடாது... மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்ற அரசாங்கம் கொடுக்கின்ற இலவசப் பொருட்களா? அப்படியும் சொல்லக்கூடாது. பிறகு எப்படித்தான் சொல்வதாம்? அப்படிக் கேளுங்க. இவையெல்லாம் விலையில் லாப் பொருட்கள். விலை யில்லை என்றால் மதிப் பில்லை என்று கருதி விடக்கூடாது. ஆளும் கட்சிக்கு பெருவாரியான வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய மதிப்புமிக்க பொருட் கள்.’இப்படி நாம் சொல்லவில்லை. இரவு- பகல் பாராது இவைகளை வினியோகிக்கின்ற அதிகாரிகளே சொல்கிறார்கள்- ""விலையில்லாப் பொருட்கள் வினியோகத்தில் தமிழகத்தில் மற்ற 233 தொகுதி களில் இதுவரை காட்டாத அக்கறையையும் அங்கு தரவேண்டியவற்றை திருப்பி விட்டும் சங்கரன் கோவில் தொகுதியில் மட்டுமே நாங்கள் அக்கறை காட்டுகிறோமே? ஏன்? நாட்கள் குறைவாகத்தான் இருக்கிறது.