சனி, 11 ஜூன், 2022

சுயமரியாதை..யாழ்ப்பாணத்தில் 1927 ஆண்டு வெளிவந்த திராவிடன் பத்திரிகையின் தலையங்கம் சுயமரியாதை!

 ராதா மனோகர் :    1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம்  அவர்கள்!. திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.

இதில் உள்ள விடயங்களை  எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்   இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது   
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.

பைக் நிறுத்துமிடத்தில் அடாவடி வீடியோ லீக்! அறைந்த போலீஸ் இடைநிறுத்தம்

File videw
Policeman suspended for assaulting car park employee

நக்கீரன் செய்திப்பிரிவு  :  இரண்டு சக்கர வாகன காப்பகத்தில் வாகனத்தை நிறுத்த இடமில்லை எனக்கூறிய ஊழியரைக் காவலர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி,
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் இருசக்கர வாகன காப்பகம் ஒன்று உள்ளது.
இந்த இருசக்கர வாகன காப்பகத்திற்கு நன்னிலையில் காவலராக பணிபுரியும் வினோத்குமார் என்பவர் வாகனத்தை நிறுத்த வந்துள்ளார்.

லண்டன் தமிழ் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு – வவுனியாவில் சம்பவம்

May be an image of 2 people, people standing and outdoors

வீரகேசரி : வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
30 வயதுடைய பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கற்பழிப்பை லைவ் ஆக செல் போனில் ஒளி பரப்பிய கொடூரர்கள் .. மத்திய பிரதேசத்தில்

 மாலைமலர் :  இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர
போபால்: குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள்.
அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். காதலன் மீது இருந்த நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள்.

பெண்களை குறிவைத்த பங்காரு! - வெளிவராத உண்மைகள் | Dhinakaran Chellaiah

 Dhinakaran Chelliah  : தற்போதுள்ள மதுரை ஆதீனம் அவர்கள் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்றில் கலைஞர் எழுதிய   “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?!” என்ற திரை வசனத்துக்கு குறிப்பிட்டு இப்படியெல்லாம் கிண்டல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
‘சமயபுரம் மாரியம்மன் துஷ்ட தேவதை என்று சொன்னார்கள்’ என்றெல்லாம்  ஆதீனம் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இவ்வளவு ஏன்,சைவப் பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் “சமய தீக்ஷிதா அநுட்டான விதி” நூலில் நாட்டார் தெய்வங்கள் தாய்தெய்வ வழிபாட்டினை விமர்ச்சித்திருப்பதை ஆதீனகர்த்தா அறியவில்லையா? !
“உயிர்ப்பலியேற்குந் துட்ட தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது.
வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்கு தப்பாது கிடைக்கும்”

கடன் ஒரு லட்சம் கந்து வட்டி 5 லட்சம் .. மிரட்டிய குடுமத்தை சேர்ந்த 5 பேர் கைது

 நக்கீரன் -இளையராஜா  : சேலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வெவ்வேறு புகார்களின்பேரில் ஒரே நாளில் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சேலம் கருப்பூர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனகா (வயது 56). கருப்பூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கருப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''கருப்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த ரத்தினம் (வயது 70) என்பவரிடம் கடந்த 2021- ஆம் ஆண்டு, ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு மாதம் 5 ரூபாய் வட்டி வீதம் தொடர்ந்து வசூலித்து வந்தார்.

வெள்ளி, 10 ஜூன், 2022

பிபிசி நிருபரிடம் எகிறி பாய்ந்த கோவை ஈஷா ஜாக்கி

May be an image of 1 person and text

குமரேசன் சி செ  : நிரூபர் : சுற்றுச்சூழல் சார்ந்து அக்கறையோடு செயல்படக்கூடிய ஈஷா அறக்கட்டளை மீது அதேநேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றனவே. அதுபற்றிய உங்கள் கருத்து.
ஜக்கி :எவ்வளவு தடவை இதையே கேட்பீர்கள்?
நிரூபர் :சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தான்...
ஜக்கி:
உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்கள் செய்தி பார்க்கிறீர்களா அல்லது அரசு துறைகள் சொல்வதைப் பார்க்கிறீர்களா, நீதிமன்றம் சொல்வதைப் பார்க்கிறீர்களா, இல்லை உங்கள் பக்கத்து வீட்டில் பாதி மூளையோடு இருக்கும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கிறீர்களா?
என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாங்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, அனைத்துமே சரியாக உள்ளதாக அரசு துறைகள் சொல்கின்றன.

யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் பொதுமக்களுக்கு உரிய தரும சொத்து என யாழ் நீதிமன்றம் august 17 ஆம் தேதி 1928 இல் தீர்ப்பு அளித்ததுள்ளது

 1928 ஆம் ஆண்டு யாழ்ப்பாண த்தில் இருந்து வெளிவந்த திராவிடன் பத்திரிகையில்   நல்லூர் கோயில் தொடர்பான ஒரு முக்கிய வழக்கு இடம்பெற்றிருக்கிறது
17 ஆகஸ்ட் 1928 இல் வெளிவந்த "திராவிடன்" பத்திரிகை  செய்தி:  
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு!  :
நல்லூர் கந்தசாமி கோயிலை தரும சொத்து என்று நிர்ணயிக்க வேண்டும் என்று ராமநாதன் கோலிச்சில் (காலேஜ் - கல்லூரி) தலைமை உபாத்தியாயராக இருக்கும் ஸ்ரீ சி கே சுவாமிநாதன் அவர்களும் இன்னும் ஆறுபேரும் ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியாரும் அவரது தாயார் ஆகிய  இருவர் மீதும் தொடர்ந்த வழக்கு யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் விசாரணை செய்யப்பட்டது.
முன்பு கோயில் அர்ச்சகராக  இருந்து வேலையை விட்டு போய் கோயில் நிலத்திற்கு வழக்கு தொடர்ந்திருக்கும் பிராமணர்களும் இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமாக பலாத்காரம்.. வாளால் வெட்டி கொலை . கிருஷ்ணகிரியில்

tamil.asianetnews.com  - வினோத் குமார் : மாலை நேரம் ஆனதால் ஆடுகளை ஒன்றாக சேர்த்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் பணியில் லட்சுமியும் துரையும் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது துரையின் ஆடுகள் அங்கிருந்து தூரமாக மேய்ச்சலுக்கு சென்றிருந்ததால், அந்த ஆடுகளை அழைத்து வருவதற்காக அவர் சென்றிருந்தார். அப்போது 35 வயது மதிக்கதக்க வாலிபர், தனியாக இருந்த லட்சுமியிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கனகமுட்டுலு அருகே தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராதா. கூலி தொழிலாளி. இவரின் மனைவி லட்சுமி (40). இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ராதா, கூலி வேலைக்கு சென்ற பின், லட்சுமி ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச்செல்வார். இவருடன் இதேபகுதியை சேர்ந்தவர் துரை (50) என்பவரும் செல்வது வழக்கம்.

குடியரசு தலைவர் தேர்தல் .. பாஜக லிஸ்டில் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் இருக்கிறதாம்

குடியரசுத் தலைவர் தேர்தல்: மோடியின் சாய்ஸ்  யார்? மின்னம்பலம் : குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இருக்கும் ராம் நாத் கோவிந்தை மீண்டும் தேர்ந்தெடுக்கலாம், துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை நிறுத்தலாம் என்ற பொதுவான இரு வாய்ப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருக்கின்றன.
ஆனால் இந்த இரு வாய்ப்புகளையும் பாஜக தலைமை பயன்படுத்த வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். அதன் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அல்லது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு வழங்க பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தினர்.

மகளை கொன்று உடலை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை.. கர்நாடக ஆணவ கொலை

 கலைஞர் செய்திகள : கர்நாடகாவில், மகனை கொன்று உடலை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தையை போலிஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் கைது .. உத்தரப் பிரதேசம்:

 BBC tamil : பப்ஜி’ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் ஒருவனை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்ததாக, இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வியாழன், 9 ஜூன், 2022

ரூ.50 ஆயிரம் லஞ்சம்.. மகன் உடலை வாங்க வீடு, வீடாக பிச்சை எடுத்த பெற்றோர்கள்... பீகார்

மாலை மலர்  :  9 ஜூன் 2022 :  மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.
இந்த நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சமஸ்திபூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது

 மாலை மலர் : குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும்.
புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது.
இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் தீர்ப்பும் பின்தொடரும் எச்சரிக்கையும்.

சிறப்புக் கட்டுரை: பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் தீர்ப்பும் பின்தொடரும் எச்சரிக்கையும்...
மின்னம்பலம் - அ.குமரேசன்  : “உலகத்தின் மிகப் பழைமையான தொழில் பாலியல் தொழில்” (தி ஒர்ல்ட்’ஸ் ஓல்டஸ்ட் புரொஃபஷன்) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.
மிகப் பழங்காலத்திலிருந்தே இத்தொழில் இருந்துவருவதை இது காட்டுகிறது. ஆனால் உலகம் முழுவதும் இது ஒரு முறையான வாழ்க்கைத் தொழிலாக (புரஃபஷன்) அங்கீகரிக்கப்பட்டதுமில்லை, மதிக்கப்பட்டதுமில்லை. ‘பிராஸ்டிடியூஸன்’ என்ற சொல்லுக்கு ‘விபச்சாரம்’ என்பதன்றி நேரடியான தமிழ்ச்சொல் இருப்பதாக என்னளவில் தெரியவில்லை,
இருந்தாலும் அது புழக்கத்தில் இல்லை. ஆனால் ‘பிராஸ்டிடியூட்’ என்ற சொல்லுக்குத் தமிழில் பரத்தை, வேசி, விலைமகள் என்றெல்லாம் சொற்கள் உள்ளன. கொச்சையான வசைச் சொல்லும் இருக்கிறது.
ஆண்களிலும் இத்தொழிலைச் செய்பவர்கள் உண்டு என்றாலும், இந்தச் சொற்கள் பெண்களை மட்டுமே அடையாளப்படுத்துகின்றன. ஆணாதிக்கச் சமுதாயத்தில் மொழியும் அதற்கேற்பக் கட்டுப்படுத்தப்படுகிறது.

இலங்கை இந்திய காங்கிரஸ் உதயம் - 25 ஜூலை 1939

நமது மலையகம்: மலையக அரசியலில் நேருவின் வகிபாகம் - என்.சரவணன்

ராதா மனோகர்  :  இலங்கை இந்திய காங்கிரஸ் உதயம் - 25 ஜூலை   1939  இலங்கை! . 
தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள பல  கம்பனிகளில், டிராம் வண்டி சேவை . ஹோட்டல்களில் பணிகள் . நகர சுத்திகரிப்பு  பணிகள் . துறைமுக சேவைகள் மற்றும் போக்குவரத்துக்கு துறைகளில் பணிபுரிந்து  வந்தவர்களின் நலனுக்ககாக 1925 ஆண்டிற்கும் 1930 ஆண்டுக்கும் இடைப்பட்ட  காலங்களில் பல இயக்கங்களும் சங்கங்களும் இயங்கின
இந்த அமைப்புகள்  திரு ஏ இ குணசிங்கா தலைமையில்  இலங்கை தொழிலாளர் யூனியன் என்ற அமைப்பில்  இன மத  பேதமற்று சிங்கள தமிழ்  முஸ்லீம் மலையாள   மற்றும் மலாய் இனமக்களுமாக இணைந்திருந்தனர்.

இந்திய வம்சாவளியினர் இலங்கையை சுரண்டி கொழுக்க வந்தவர்கள் என்றும்,  எல்லா சிறுபான்மை இனமக்கள் மீதும் வெறுப்பு தோன்றலாயிற்று  

புதன், 8 ஜூன், 2022

இலங்கையின் உண்மை நிலை பற்றி பிரதமர் ரணில் ஆற்றிய விசேட உரை!

 எழுகதிர்  : இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது
01.எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகமானது, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மிக சிரமமானது.
02. இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 500 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்காக செலவிட வேண்டியுள்ளது.
03.எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 வீத விலை உயர்வு ஏற்படக்கூடும். அதனால், எரிபொருளுக்கு கூப்பன்களை வழங்கும் யோசனையை நிராகரிக்க முடியாது.

'ஆப்ரேஷன் கந்துவட்டி'- தமிழக டி.ஜி.பி. உத்தரவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'ஆப்ரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரைப் பெற்று வழக்குகளை பதியுமாறு மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில், "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

dostarlimab 100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து- விஞ்ஞானிகள் சாதனை.. வாஷிங்டனில்

 மாலைமலர் :  டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்கு பின், எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?

 tamil.asianetnews.co  - Pothy Raj  : இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவதூறு
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தால் அதிருப்தியும், வேதனையும் அடைந்த முஸ்லிம் நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவு செய்தன. கத்தார், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் நாடுகள் இந்தியத் தூதர்களுக்கு கண்டனம் தெரிவித்தன.

பெட்ரோல் டீசலுக்கு அந்நிய செலாவணி இல்லாத இலங்கையில் 80 இலட்சம் வாகனங்கள்

வீரகேசரி  : இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமை நாட்டில் நீடித்திருக்கிறது.  மக்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல்  எரிபொருளை பெற முடியாமல் எரிவாயுவை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்வெட்டு அமுலில் இருக்கிறது.  மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்றனர். வரிசைகளிலேயே   உணவு உட்கொண்டு அங்கேயே   உறங்கும் நிலையில் மக்கள் இருக்கின்றனர்.  மிகவும் ஒரு இக்கட்டான கசப்பான அனுபவங்களை பெறக்கூடிய ஒரு பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டில் காணப்படுகிறது.
இந்த நெருக்கடி நிலைமை நாட்டில் அரசியலிலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி  அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்கள் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன.   இறுதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை  அமைக்கப்பட்டு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுப்பணி துறை அலுவலகத்தில் கோலோச்சிய தீண்டாமை! ஒரே டம்ளரா ஒரே டாய்லட்டா ....

untouchability in government office-virudhunagar incident
நக்கீரன் - அதிதேஜா : ‘இந்தியப் போர்க் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட மகாலிங்கம் சீனக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, சில சம்பிரதாயங்களை முடித்தபிறகு, விரைவில் வருடாந்திர விடுப்பில் அனுப்பிவைக்கப்படுவார்.’
-1963 மே 21-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த மகாலிங்கத்தின் மனைவி முனியம்மாவுக்கு அவுரங்காபாத்திலிருந்து ‘கர்னல்’ பிராவல் அனுப்பிய தந்தியில் இடம்பெற்ற வாசகம் இது!
மேலே குறிப்பிட்டுள்ள மகாலிங்கம் – முனியம்மா தம்பதியரின் மகனான மாரியப்பனும், ஒரு ராணுவ வீரராக இருந்து தேசப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்தான்.
ராணுவத்திலிருந்து விலகியபிறகு, TNPSC IV தேர்வில் தேர்ச்சிபெற்று, விருதுநகர் - தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

செவ்வாய், 7 ஜூன், 2022

இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!

 Radha Manohar :  ஈழத்து இலக்கிய உலகில்  நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது. ஈழத்து கவிஞர்கள் அல்லது புனை கதைகளை படைக்கும் இலக்கியவாதிகள் பெரும்பாலும் யுத்தம் அது தந்த வலி பற்றி எழுதுவதே ஒரே நோக்கமாக கொண்டிருப்பது போல தெரிகிறது  அது தவறு என்று கூறவில்லை . ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும்.
இராணுவ தாக்குதல்கள் காரணமாக மக்கள் அடைந்த துன்பத்தை இலக்கிய தளத்தில் முன்வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு போராட்டத்தின் மறுபக்கத்து விளைவுகளையும் பாரபட்சமின்றி இலக்கிய தளத்தில் முன்வைக்கவேண்டும்.
ஏறக்குறைய எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு காவியம் படைக்கும் ஒரு வெறுமை அல்லது பொய் கண்முன்னே தெரிகிறதே?
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் மக்களால் ஜீரணிக்கவே முடியாத ஒரு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தந்தது எந்த நாட்டு இராணுவமும் அல்ல.

சவுதி அரேபிய பெண் விமானிகள் ஒட்டிய எயர்பஸ் A320 விமானம்

Rishvin Ismath : சவுதி அரேபியாவின் சாதாரண கட்டண விமான சேவையான ஃப்ளைஎடீல் இற்குச் சொந்தமான எயர்பஸ் A320 விமானம் கடந்த வியாழக்கிழமை (19 ஆம் திகதி) ரியாத் இலிருந்து ஜித்தாவுக்கு வெற்றிகரமாகப் பறந்து சென்றுள்ளது.
ஒரு விமானம் பறந்த செய்தி முக்கியத்துவம் பெறக் காரணம், குறித்த விமானம் முழுமையாக (முஸ்லிம்) பெண்களால் இயக்கப் பட்டமையே ஆகும்.
'பெண்களுக்கு அறிவில் குறைபாடு இருக்கின்றது, நெருங்கிய உறவினரான ஆண் துணை இல்லாமல் பெண் வெளியே செல்லக் கூடாது,
நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்லும் பெண் விபச்சாரி,  பெண்ணின் சாட்சி ஆணின் சாட்சியின் பாதிக்குத்தான் பெறுமதி, ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு சொத்துத்தான் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்,

1000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மீட்சி பயிற்சி : 14 கடலோர மாவட்டங்கள்

 கலைஞர் செய்திகள்  : 1000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைமுதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
14 கடலோர மாவட்டங்கள்.. 1000 மீனவ இளைஞர்கள்: தமிழ்நாடு அரச  திட்டம் தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இலங்கையில் யூரியா உரம் ரூ.1,500 விலையில் இருந்து ரூ 42,500 ஆக எகிறியது! : நெல் விளைச்சல் என்ன ஆகும்?

 BBC Tamil : இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப் பொருளான அரிசிக்கு - அடுத்து வரும் மாதங்களில் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, நெற் செய்கைக்கான செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. முன்னர் சாதாரணமாக ஒரு ஏக்கரில் - நெற் செய்கை மேற்கொள்வதற்கு 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் செலவானதாகவும், தற்போது அந்தத் தொகை 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் - ஓய்வுபெற்ற ஆசிரியரும் நெற் காணி உரிமையாளருமான எஸ்.ஏ. றமீஸ் தெரிவிக்கின்றார்.

மதுரை ஆதீனதின் “அம்பாள் என்றைக்கடா பேசினாள்.. விவகாரம்

 Dhinakaran Chelliah  :  தற்போதுள்ள மதுரை ஆதீனம் அவர்கள் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்றில் கலைஞர் எழுதிய   “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?!” என்ற திரை வசனத்துக்கு குறிப்பிட்டு இப்படியெல்லாம் கிண்டல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
‘சமயபுரம் மாரியம்மன் துஷ்ட தேவதை என்று சொன்னார்கள்’ என்றெல்லாம்  ஆதீனம் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இவ்வளவு ஏன்,சைவப் பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் “சமய தீக்ஷிதா அநுட்டான விதி” நூலில் நாட்டார் தெய்வங்கள் தாய்தெய்வ வழிபாட்டினை விமர்ச்சித்திருப்பதை ஆதீனகர்த்தா அறியவில்லையா?!
“உயிர்ப்பலியேற்குந் துட்ட தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது.
வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்கு தப்பாது கிடைக்கும்”

பேருந்துகளில் இ-டிக்கெட்.. பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு” : அமைச்சர் அதிரடி

 கலைஞர் செய்திகள்  : அரசு பேருந்துகளில் இ - டிக்கெட் திட்டம் இந்த ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ - டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

சேலை உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

மின்னம்பலம் : விருதுநகர் ராஜபாளையம் நூல் விலை உயர்வை கண்டித்து கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என வட்டாட்சியர் முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து மருத்துவத்துணி வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என சேலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் முதல் அனிமல் பாஸ் ஓவர் பாலம்; மதுரை அருகே அமைகிறது

 puthiyamugam.com : தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை – திண்டுக்கல் எல்லை அருகே வாடிப்பட்டி வகுத்து மலைப்பகுதியில், வன விலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்து செல்வதற்காக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் அமைய உள்ளது.’பாரத்மாலா பரியோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை, 555 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கி 80 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை, பாலமேடு அருகே, வகுத்து மலை வனப்பகுதி வழியாக அமைக்கப்படுகிறது. எனவே, அந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு மாடுகள், முயல்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வன விலங்குகளை பாதுகாக்க, விலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்திய ஒன்றியத்துக்கு வழி காட்டும் திராவிடம் . திமுக வெறும் கட்சியல்ல ஒரு Trend Setter

 ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை


தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!   
இந்த  நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும்  .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.  
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.   
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும். 

திங்கள், 6 ஜூன், 2022

ஹிந்து/திய .. வல்லரசு கனவில் இருந்து வழுக்கி விழுந்த தேசம் ..

May be an image of 3 people, beard and text that says 'K”MAN KAMAL HAASAN RAAJKAMAL FILMSINTERNATIONAL FILMS LOKESH VIKRAM VIJAY SETHUPATHI FAHADH ANIRUDH MUSICAL PRODUCED BY KAMAL HAASAN .MAHENDRAN FAASIL'
May be an image of 2 people and people standing
May be an image of 1 person and text

LR Jagadheesan  :  “ஹிந்து/திய வல்லரசுக்கனவு”
“தெய்வபக்தியும் தேசபக்தியும்” இந்துத்துவத்தின் இரு கண்கள். வரலாறு நெடுகிலும் எல்லாவகையான வல்லரசுகளின் வலிமையான அரசியல் கருத்தியல் ஆயுதங்களும் அவையே. உலக வல்லரசுகளின் ஆயுதங்களில் வில்லும் வாளும் ஈட்டியும் துப்பாக்கியும் பீரங்கியும் அணுகுண்டுகளும் மட்டும் இருக்கவில்லை. அவற்றின் அம்பராத்தூணிகளில் இருந்த/இருக்கும் வலிமைவாய்ந்த அம்புககள் கலை, இலக்கிய படைப்புகள்.
இந்திய புராண இதிகாசங்களில் இருந்து தமிழ் சங்கப்பாடல்கள்; பரணிகளில் இருந்து சோழசாம்ராஜ்ஜியங்களில் இருந்து நவீன அமெரிக்க வல்லரசின் வல்லமையை பறைசாற்றும் ஹாலிவுட் படங்கள் வரை வரலாறு நெடுக கலை இலக்கிய படைப்புகள் அந்தந்தகாலகட்டத்தின் வல்லரசுகளுக்கான ஏக்கத்தையும் ஏற்பையும் வெகுமக்களிடம் ஏற்படுத்தும் “கரசேவையை” செய்தே வந்திருக்கின்றன.

பயில்வான் ரங்கநாதனை எக்ஸ்போஸ் செய்த பாடகி சுசீத்திரா! "ரொம்ப எல்லை மீறி போறீங்க

நக்கீரன் செய்திப்பிரிவு  : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன்.
 ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார்.

வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தீர்ப்பு

 

 மாலைமலர் : உத்தரப் பிரதேசம் வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. விசாரணையில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் காரணம் என தெரிய வந்தது. லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

பாஜக பேச்சாளரின் நபி பற்றி பேச்சு . அரபு நாடுகளில் இந்திய பொருட்களுக்கு தடை?

Trending against in Arab world    :  Muhammad Ibrahim Qazi @miqazi   : The Arab world is angered at the derogatory remarks passed against Prophet Muhammadﷺ by Nupur Sharma، Spokesperson of ruling party BJP @timesnow. The Arabs are campaigning to boycott Hindustan products.

BBC News, தமிழ்  :  பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது?
முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக மற்றொரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் சித்தாந்தத்தையோ, ஆட்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்று ஓர் அறிக்கையையும் பாஜக வெளியிட்டுள்ளது.
பொதுவாகவே இந்து பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தும், சமீப காலமாக பெரும்பான்மைவாதத்தை தீவிரமாக முன்னெடுப்பதாக குற்றம்சாட்டப்படும் பாஜக முகாமில் இருந்து இத்தகைய சமிக்ஞைகள் வெளியாவது அரசியல் வட்டாரத்தில் வியப்பை அளித்துள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2022

பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் மா சுப்பிரமணியம் விரிவான பதிலடி

 மின்னம்பலம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மதுரையில் ஜூன் 5ஆம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துசாமி ஆகிய இரு அமைச்சர்களின் துறை மீது குற்றசாட்டை முன்வைத்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்களுடன் வழங்கப்படும் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அண்ணாமலை, “கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிசியன் கிட் அரசு கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் அம்மா என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர்.

திருமாவளவன் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்

 மாலைமலர் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்-
நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அண்ணாமலை இதுபோன்று செயல்படுகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் இன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் பால சிங்கம், தமிழேந்தி, செல்லத்துரை, இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  கெடிலம்  ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று (05/06/2022) மதியம் 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18), பிரியா (வயது 19), மோனிஷா (வயது 16), நவநீதம் (வயது 20), சுமிதா (வயது 18), காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), பிரியதர்ஷிணி (வயது 15) ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் கைதைத் தவிர்க்க தீவிரம்.... தீவிரம்!

 மின்னம்பலம் :: சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 4) மனு தாக்கல் செய்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது பஞ்சாப் மின்சார நிறுவனத்துக்கு சீன பணியாளர்கள் கொண்டுவர படுவதற்கு விசா கொடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம்சாட்டப்பட்டவராக பதிவு செய்யப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரும் கூட்டாளியுமான பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தப் பின்னணியில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பள்ளி திறப்பில் மாற்றம்?: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை .. அறிவிப்பு!

கலைஞர் செய்திகள் : கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். குஜராத்தில் நடந்த கல்வி மாநாட்டிற்கும் அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வித்றை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடத்தி வருகிறோம்.

திமுக ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

  News18 Tamil : :  ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது CMDA மாறியிருக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் அரசில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
23,8800 ஊட்டச்சத்து தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது.

மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்

ராதா மனோகர்: :   1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய
வம்சாவளியினரின் குடியுரிமையை  பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின்  பின்னணி பற்றிய   பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை  செய்திகளும்  நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல  உண்மைகளை  வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக  நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது