சனி, 8 அக்டோபர், 2022

1200 கோடி ரூபா போதைப்பொருளுடன் இலங்கையை நோக்கி வந்த கப்பல்

hirunews.lk  :  1200 கோடி ரூபா போதைப்பொருளுடன் இலங்கையை நோக்கி வந்த கப்பல்!
1,200 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர்,கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டு;ள்ளமை தெரியவந்துள்ளது.

தொடரும் லாக் - அப் மரணங்கள்: சென்னையில் ஒருவர் பலி - BBC News

 bbc.com  :  சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், பிறகு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). கடந்த 20ஆம் தேதியன்று ரயில்வே ஊழியரான பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை கல்லால் அடித்து ஆகாஷ் உடைத்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆகாஷை ஓட்டேரி காவல் நிலைய காவல்துறையினர் கடந்த 21ஆம் தேதி பிடித்தனர்.
அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதற்குப் பிறகு அன்று இரவு 11 மணியளவில் ஆகாஷ் மதுபோதையில் மயக்க நிலையில் இருப்பதாக கூறி அவரது சகோதரியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மயக்க நிலையில் இருந்த ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், இன்று சிகிச்சை உயிரிழந்தார். ஆகாஷை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதால்தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.

திமுக துணைப்பொது செயலாளர் ஆவாரா திருமதி கனிமொழி?

May be an image of 2 people, people standing and text that says 'BURHAN MRL MRLAUDIO AUDIO சுடரொளி- 10 உடன்பிறப்பே... எங்கள் உயிர்ச்சொல்! கலைஞர்- அன்பின் அரங்கம்'

மின்னம்பலம் : திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அக்கட்சியின் தற்போதைய மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நாளை (அக்டோபர் 9) நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் நியமிக்கப்பட இருக்கிறார்.
தற்போதைய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.
துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சர்ச்சைகளில் சிக்கி தனது கட்சிப் பதவியை கடந்த ஆகஸ்டு மாதமே ராஜினாமா செய்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர்  மேடையில் இல்லை. இந்த நிலையில்தான் அடுத்த சில தினங்களில் தனது ராஜினாமாவையும் அரசியலில் இருந்தே ஓய்வு  பெறும் முடிவையும் அறிவித்தார் சுப்புலட்சுமி.

பாகிஸ்தான் Ex PM இம்ரான் கான் வீட்டுக்காவலில்

 மாலைமலர் : பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
இதற்கு இம்ரான்கானின் மோசமான நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பொதுகூட்டத்தில் இம்ரான் கான் நீதிபதி, மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வடலூர் ராமலிங்க வள்ளலாரின் உண்மையான படம் .. vadaloor Ramalinga vallalar's original photo

 Thulakol Soma Natarajan :  திரு. Sundar_P அவர்களின் பதிவில்
உள்ள வள்ளலார் படம் இது
இப்படம் குறித்து என்னுடைய கருத்துரை:
வள்ளலாரின் ஓவியம் சற்றே மாறுபட்டுக் காணப்படுகிறது.
வள்ளலார் உருவம் குறித்து,
தொழுவூர் வேலாயுத முதலியார்
குறிப்பிட்டவை இவை:
1.உருவத்தில் சாதாரண உயரமுள்ளவர்
மெலிந்த சரீரமுள்ளவர்.
2.எலும்புகள் தெரியும்.
3.ஆயினும் வீரிய பலமுள்ளவர்.
நிமிர்ந்த தேகம்.
4.தெளிந்த மாநிற (சாதாரண சிவப்பு ) மேனியர்.
5.நீண்ட மெல்லிய நாசியுடையவர்.
6.பறந்த பொறி பறக்குங் கண்களை உடையவர்
7.இவருடைய முகத்தில் சதா சற்று விசனக் குறிகாணப்பட்டிருந்தது.
8.இவர் யோகிகளுக்கு வழக்கமில்லாத பாதரட்சையைத் (ஆர்காட்டு சோடு) தரித்திருந்தார்.
9.இவருடைய உடை, இரண்டு வெள்ளையாடையைத் தவிர வேறில்லை
(ஒரே ஆடையை உடுத்தியிருந்ததாகவும் கேள்வி)
10.இவர் கடும் நிராகாரத் தபசி போலிருந்தார்.
11.இவர் இளைப்பாறியதாக எவரும் அறியமாட்டார்.

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்

tamil.samayam.com  :  இலங்கையில் கடந்த 2009 ஆண் ஆண்டு அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.
சர்வதேச போர் விிதிமுறைகளை மீறி நடைபெற்ற போரில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக உலக நாடுகள் இலங்கை மீது குற்றம்சாட்டின இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் 2012 -21 வரை இலங்கை எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அதனை இலங்கை பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் கடுப்பான சர்வதேச நாடுகள், ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

அமெரிக்க உல்லாச பயணிகளுக்கு திடீர் உத்தரவு: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! U.S issues new India travel advisory;

tamil.samayam.com :அமெரிக்கா திடீர் உத்தரவு; ஆடிப்போய் கிடக்கும் இந்திய அரசு!
பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா பயணமாகவோ வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு, அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகள் வழங்கி வருவது வழக்கமான ஒன்று தான்.
அவ்வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த எச்சரிக்கை அறிக்கையில் குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அடித்த திருமா; இந்து அமைப்புகள் ஷாக்!
அதேப்போல் கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் யாருமே செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அரசு அறிவுறுத்தி உள்ளது.

விருதுநகரில் காதலியை செங்கல்சூளையில் வைத்து அடித்துக்கொன்றவர் கைது!

கொலை

News18 Tamil  :   ராஜபாளையத்தில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே அயன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கள்ளக்காதலியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பேரில் ஒருவர் காவல் துறையிலும் மற்றொருவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் உள்ளார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2022

6 நாளில் சுக்குநூறாக உடைந்த வந்தே பாரத் ரயில், உண்மையில் வெறும் சோப்பு டப்பா தானா? உண்மை என்ன?

tamil.drivespark.com - Balasubramanian Thirumalaiappan  : மும்பை- காந்தி நகர் இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில், சேவை துவங்கப்பட்டு 6 நாளில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த ரயில் விபத்தில் சிக்கிய காரணம் என்ன? இதனால் ரயிலுக்கு என்ன பாதிப்பு? உண்மையில் வந்தே பாரத் ரயில் தரமானது தானா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகர் வரை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் நேற்று காலை 11.15 மணிக்கு வாத்வா - மணி நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்துக்கொண்டிருந்த போது எருமை மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் முன் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்த புகைப்படங்களும் செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் ஒரிஜினல் போட்டோ வெளியானது

 வரலாற்றை திரிக்காதீர் .. அமரர் ஆறுமுக நாவலரின் உண்மையான புகைப்படம் இதுதான்.
நாவலரின் படம் என்று கற்பனையில் ஒரு ஓவியத்தை வரைந்து உலாவ விட்டுளார்கள் சில அதிமேதாவிகள்
இந்த ஓவியத்தை ஒட்டியே சிலையும் செய்து வழக்கம் போல வழிபடுகிறார்கள்
ஒரு வரலாற்று ஆவணம் ஏன் மறைக்கப்படுகிறது?
ஒருவேளை அந்த அசல் புகைப்படம் அவரின் மேன்மையை குறைப்பதாக கருதுகிறார்களோ?
நாவலரின் ஓவியம்  வழக்கமான சைவப்பெரியார்கள் போன்ற மேக்கப்களோடு இருக்கிறது
உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை
உண்மையை உண்மையாகவே பொதுவெளிக்கு முன்வைக்க வேண்டும்
அது எந்த செய்தியை சொல்கிறது என்பதை மக்களிடமும் காலத்திடமும் விட்டுவிடுவோம்

இறந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா திருட்டு! புலி இயக்க தொடர்பு .. பிணை மறுப்பு!

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+40+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

hirunews.lk:   இந்தியாவில் இறந்த பெண்ணின் 40 கோடி ரூபா திருட்டு! முன்னாள் புலி இயக்க தொடர்புடையவர்களுக்கு பிணை மறுப்பு!
மும்பையில் போலி ஆவணங்களைத் தயாரித்து இறந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 கோடி ரூபாவை கையாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள,
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெனிஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கே பாஸ்கரன் ஆகியோர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட 180 நாள் காவல் உத்தரவு தடையை ஆட்சேபித்தே இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில் ஹமீதா ஏ லால்ஜி என்ற இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மீளப்பெற்றப்பட்டுள்ளது.

இலவச பேருந்து வேண்டாம் என்பவர்கள் டிக்கெட் வாங்க அனுமதி.. திட்டத்தை முடக்க சதி?

மாலைமலர் : சென்னை:  தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 8-ந்தேதி முதல் சாதாரண பஸ்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் பஸ்சில் பயணம் செய்ய விரும்பவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கண்டக்டர் வேறு வழியின்றி அந்த மூதாட்டியிடம் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுத்தார்.
இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சகபயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பரபரப்பாக வைரலானது.
இதையடுத்து பஸ்சில் டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பஸ் கண்டக்டர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவித்தனர்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

நக்கீரன் : ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. \
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1- ஆம் தேதி அன்று அவசரச் சட்ட முன்வரைவு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 1- ஆம் தேதியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு

 தினத்தந்தி : தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது.
இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியை தட்டிய கனிமொழி! ஒன்றிய அரசின் ஊரக - பஞ்சாயத்து ராஜ்

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்.. காங்-க்கு திமுக கனிமொழி மூலம் பாஜக வேட்டு.. டெல்லியில் உள்குத்து அனல் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்..
பஞ்சாயத்து ராஜ் திட்டம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாபலிபுரம் தாஜ்மஹாலை பின்தள்ளியது! உலக மக்களை அதிகம் கவர்ந்த மகாபலிபுரம் – தமிழ்நாட்டிற்கு பெருமை

tamil.nativeplanet.com  - Yogalakshmy Ponnan  :  உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் மிக முக்கிய நினைவுச்சின்னமான தாஜ்மஹால் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பது உலகறிந்த விஷயமாகும்!
இந்திய தொல்லியல் துறையின் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்ற தலைப்பில் உலக சுற்றுலா தினத்தன்று துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்ட அறிக்கையின் படி, நம் நாட்டில் வெளிநாட்டினரால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டின் மகாபலிபுரம் முதலிடம் பிடித்துள்ளது! அதனைப் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!
மகேந்திரவர்மனின் காலம் கடந்த படைப்புகள்

சவுக்கு சங்கர் பட்டினி போராட்டத்தை சிறை அதிகாரிகளின் உறுதி மொழியை அடுத்து கைவிட்டார்

Rajkumar R   -  e Oneindia : கடலூர் : கடலூர் மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதிய நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சிறை நிர்வாகம் உறுதியளித்ததன் பேரில்
கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பத்திரியாளரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார்.
இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கொல்லப்படும் இளம்பெண்கள் .. நிகா ஷாக்காராமியின் கதை Iran: Teen protester Nika Shakarami's body stolen,

ஜென்னி ஏ வென்ஹம்மர்  :  நிகா ஷகராமி.என்ற இந்த சிறுமி இப்போது உயிருடன் இல்லை.
ஒரு சுதந்திர பெண்ணாக ஏராளமான கனவுகளோடு வளர்ந்த இந்த சிறுமி ஈரான் கடும்போக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் சித்திரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டு விட்டார்
இவரது உடலை கூட ஈரானின் கலாசார காவலர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை
ஒரு சுதந்திர பெண்ணாக தான் வாழவேண்டும் என்று விரும்பியதை தவிர வேறெந்த இவர் குற்றத்தையும் செய்யவில்லை.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த சிறுமியின்  வாழ்வை கொடூரமாக முடித்துக் கொண்டது.
ஆட்சியின் அடக்குமுறை அநீதிகளின் சின்னமான ஹிஜாபை எரித்தபோது இவர் தனது  உயிரைப் பணயம் வைப்பதை அறிந்தே இருந்தார்  . ஆனாலும் சுதந்திரத்திற்கான வேட்கை இந்த கடும் தீர்மானத்தை மேற்கொள்ள இந்த சிறுமியை உந்தியது.
மெஹ்சா ஆமினி  MahsaAmini கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் நடந்த முதல் போராட்டங்களில் ஒன்றின் இரவில் நிக்கா ஷாக்கராமி  காணாமல் போனார்.
பல இளம் உயிர்கள் பறிக்கப்பட்ட  அந்த இரவில் நிக்கா ஷாகாரமியும் காணாமல் போனார்.

வடகொரியாவுக்கு தென்கொரியா பதிலடி... எல்லைப் பகுதிக்கு 30 போர் விமானங்களை அனுப்பி மிரட்டியது

மாலை மலர்  :  சியோல்:  அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.
இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.

வியாழன், 6 அக்டோபர், 2022

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் சடலங்கள் மீட்பு

மாலை மலர்  :  அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் சடலங்கள் மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.

விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு! 2

nakkheeran.in  :  திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சில குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் உள்ளது விவேகானந்தா ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் உணவு சாப்பிட்ட சிறுவர்கள் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் 11 வயது கொண்ட 2 சிறுவர்களும், 14  வயதுகொண்ட ஒரு சிறுவனும் என மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 10 க்கும் மேற்பட்ட  சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியத் தயாரிப்பு இருமல் மருந்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; புதுடெல்லி விசாரணை

இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மரணங்களுக்கும் மருந்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிக்கையை தன்னிடம் தாக்கல் செய்யும்படி உலக சுகாதார நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம்

tamilmurasu.com.sg : இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மரணங்களுக்கும் மருந்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிக்கையை தன்னிடம் தாக்கல் செய்யும்படி உலக சுகாதார நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம்
இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்

hindutamil.in தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவால் தோற்றுவிக்கப்பட்டது தெலங்கானா ராஷ்டிர சமிதி. ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாகியது. இதையடுத்து, 2014-ல் தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவி ஏற்ற சந்திரசேகர ராவ், 2018-ல் மீண்டும் முதல்வராக தேர்வானார். தெலங்கானா சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில்- 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினர்கடத்தல்

அமெரிக்காவில் துணிகரம் - 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினர்கடத்தல்

மாலை மலர்  :  வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இரு மீனவ குழுக்களிடையே மோதல் -பதற்றம் - பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29



முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்! அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.  முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை  03 ஆம் திகதி காலை  முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்  வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.  இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

புதன், 5 அக்டோபர், 2022

பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது - சென்னை -

  zeenews.india.com - .Karthikeyan   :  சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி,
அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது.
இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர்.
அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர்.

சீன பொருளாதாரம் சரிவை சந்திப்பது ஏன்? ஐந்து காரணங்கள்

BBC தமிழ் :   சுரஞ்சனா திவாரி  -      ஆசிய வணிகத் துறை செய்தியாளர்   :  கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உலகச் சந்தைத் தேவையில் ஏற்பட்ட நலிவு ஆகியவற்றால், சீன பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சீனாவின் அதிகாரபூர்வ காலாண்டு வளர்ச்சி தரவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா இன்னும் சரிவை சந்தித்தால், அந்நாடு பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சீனா நிர்ணயித்துள்ள 5.5% என்ற ஆண்டு வளர்ச்சி விகித இலக்கை எட்ட முடியாத நிலையில், அரசு அதிகாரிகள் இந்த இலக்கை அடைவதற்கான தேவையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஏப்ரல் - ஜூன் காலாண்டு வளர்ச்சியில் சீனா மயிரிழையில் சரிவிலிருந்து தப்பித்தது. ஆனால், இந்த ஆண்டு சில பொருளாதார நிபுணர்கள் எவ்வித வளர்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை.

"திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல!" - வள்ளலார் 200 விழாவில் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம் : வள்ளலாரின் முப்பெரும் விழாவில் இன்று (அக்டோபர் 5) கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவினை தொடங்கி வைத்தார்.
வள்ளலார் 200 இலச்சினை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்ட அவர் தொடர்ந்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள் மற்றும் வள்ளலார் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த முப்பெரும் விழா சிலருக்கு ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கலாம்.

புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் – ஐ.நாவில் குழு !

தேசம் நெட் - அருண்மொழி  :  விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என கோர் குழு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்து கோர் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்ற குறித்த குழு, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளில் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை மற்றும் வீட்டு வருமானம் குறைப்பு போன்றவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் பற்றி கோர் குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா எதிர்வினை

 bbc.com  -      ஜீன் மெக்கென்ஸீ, வெட்டீ டேன், ரூபெர்ட் விங்ஃபீல்ட் ஹேஸ்  : அமெரிக்கா மற்றும் ஜப்பானின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே தீவிரமாக்குவதாகத் தோன்றக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்ரை ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்தியுள்ளது.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் கடலில் விழுவதற்கு முன்பு 4,500 கிமீ (2800 மைல்) தூரம் பயணம் செய்தது. இதுவே இன்னொரு பாதையில் ஏவுகணை சென்றிருந்தால் அமெரிக்க தீவான குவாமை தாக்குவதற்கு அதுவே போதுமான தூரமாக இருந்திருக்கும்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா ஜப்பானுக்கு மேலே செலுத்தும் முதலாவது ஏவுகணை இதுவாகும்.
இதன் காரணமாக பாதுகாப்பாக இருக்கும்படி தனது சில குடிமக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு குண்டுமழை ஒத்திகையில் ஈடுபட்டு எதிர்வினையாற்றின.

செவ்வாய், 4 அக்டோபர், 2022

அமைச்சர் சிவசங்கர் மறுப்பு : பேருந்தில் பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தரலாம்?:

கலைஞர் செய்திகள் : பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பொய்யான தகவல் பரவி வருகிறதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கடந்த மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றைய தினமே 'பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் வாழ்க்கையில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டத்தால் இதுவரை 173 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர்.
தி.மு.க அரசின் இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மதுரவாயல் – துறைமுகம் சாலை 2024ல் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!

Maduravayal port road to be opened in 2024 Minister AV Velu

 மின்னம்பலம் : மதுரவாயல் – துறைமுகம் சாலை 2024ல் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!
Kalai
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயல் – துறைமுகம் சாலைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலத்தில், நெடுஞ்சாலை,நீர்வளம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை  மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அமைச்சர்கள் எ.வ வேலு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  

திருவள்ளூர் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது மக்களின் ஏழு வருட போராட்டம்

நக்கீரன் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவர் காவல் துறை உதவியுடன் இடிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வரும் தோக்கமூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலையத்தின் அருகே 2015ம் ஆண்டு மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. மாற்று சமூகத்தினர் கட்டிய அந்த சுவரால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கும் கூலித்தொழிலுக்கும் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சுவரை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தீண்டாமை சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.

சசிதரூரின் வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

மாலை மலர்  : வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்- சசிதரூர் பேட்டி
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார்.

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகிறார்! மீண்டும் தென்னிந்தியர் கைவசமாகும் காங்கிரஸ்

tamil.oneindia.com  -   Noorul Ahamed Jahaber Ali  :  சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த தேர்தல் மூலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி மீண்டும் தென்னிந்தியர்கள் வசமாகும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஒரு தாய் மக்களாய் ஒரு கொள்கைக் குடும்பத்து சொந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம்": முதல்வர் மடல்!

கலைஞர் செய்திகள் :  தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம்! என தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-ஆவது அமைப்புத் தேர்தல் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் மூன்று நாள் வசூல் எவ்வளவு?: அறிவிப்பு...

 தினமணி : மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.

கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?

மின்னம்பலம் : கொட்டும் மழையில் நேற்று உரையாடிய ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 3) தனது 25 ஆவது நாள் யாத்திரையை மைசூருவிலிருந்து தொடங்கினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு, காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது அங்கு மழை பெய்யத் தொடங்கியது. எனினும் அவர் உரையை நிறுத்தவில்லை.
மழையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உரையாற்றிய அவர், “எனது யாத்திரையை இந்த மழையோ, வெயிலோ தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது Zhagaram Editor

May be an image of 1 person and standing

zhagaram.tv :  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த ஈழத் தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த திருமதி.நளினி தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடந்த 12.08.2022 அன்று அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது பாஸ்போர்ட் அதிகாரிகள் அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கியுள்ளார்கள். மறுவாழ்வு முகாமில் பிறந்த இலங்கை தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதன்முறை. இது தொடர்பான ஊடக அறிக்கையில்:

திங்கள், 3 அக்டோபர், 2022

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய நீண்ட கால கோல்டன்ட் விசா கிரீன் விசா .. முழு விபரம்

BBC News தமிழ்  :  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமல்படுத்தப்பட்ட புதிய விசா கொள்கை: இந்தியர்களுக்கு இதனால் நன்மை ஏற்படுமா?
கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விசா கொள்கையில் அறிவித்த மாற்றங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் குடியேற்றக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விசா விதிகளின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கான நீண்ட கால விசா, தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கான புதிய கோல்டன் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த மாற்றப்பட்ட விதிகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் ஏராளமான இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்- சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 9 பேர் உயிரிழப்பு

மாலை மலர் :  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் .சோனியா , பிரியங்கா .கர்நாடகாவில் நாளை இணைகிறார்கள்

 tamil.oneindia.com  -  Mathivanan Maran  :பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ந் தேதி இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா

இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.

bbc.com  :        ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
    பிபிசி நியூஸ், கீயவ்வில் :  இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.
தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது.
ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையும் இந்திய போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியும் 1947 இல் ஜேஆர் ஜெயவர்த்தன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது. விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது . முக்கியமாக இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணிநிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை. அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்பதும் அறியவேண்டிய விடயமாகும் இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்

ராதா மனோகர் :  இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.
விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டிய விடயமாகும் 


Hon. J. R, Jayavaardana

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : “தென்னிலங்கையின் எந்தவொரு தலைவரும் தனிநாட்டு கோரிக்கையை அங்கீகரிக்க மாட்டார்கள்

தேசம் .நெட்  : “தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய சபையில் இணைந்து கொள்ளுங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
தேசியசபையின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றிருந்த நிலையில், பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் அதில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும்.

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் கைது .. போராட்டத்தில் ஈடுபட்ட

மாலை மலர்  :  புதுச்சேரி:   புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.
புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஈரானில் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.... தொடரும் கொடூரம்-பதற்றம்

ஓட்டலில் சாப்பிட்ட 2 பேர் கைது

tamil.oneindia.com  -  Nantha Kumar R  :  தெஹ்ரான்: முஸ்லிம் நாடான ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஹிஜாப்பை கட்டாயமாக அணிய வேண்டும்.
பொது வெளியில் ஹிஜாப் அணிய தவறினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இளம்பெண் கொலை

மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் - யாருக்கு வெற்றி வாய்ப்பு? (மல்லிகார்ஜுன கார்கே?)

hindutamil.in : புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூருக்கு இடையே வரும் 17-ம் தேதி நேரடி போட்டி நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காந்தி குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. இதையே புகாராக எழுப்பும் பாஜக.வை சமாளிக்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நிற்க காந்தி குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. இது நாடு முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்சித் தலைமையும் கடும் விமர்சனங்களில் சிக்கியது.

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் வன்முறை- உயிரிழந்தோர் எண்ணிக்கை 174ஆக உயர்வு

மாலை மலர்   :  இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பா. இரஞ்சித்தின், "நட்சத்திரம் நகர்கிறது"... படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை அற்புதம்.

May be a cartoon of 4 people and text

Anna Mahizhnan  :  நட்சத்திரம் நகர்கிறது ....   
பிரமாண்டங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த படத்தைப் பாருங்கள் என்று என் மனைவி சொன்னாள்.
நேற்றிரவு 2.47 மணி நேரம், பா. இரஞ்சித்தின், "நட்சத்திரம் நகர்கிறது" படத்தைப் பார்த்தேன். யதார்த்தங்கள் மனதைப் பிசைந்தன.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
இளையராஜாவின் இசையை இரசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் படம். இளையராஜாவைப் பல இடங்களில் படம் சிலாகித்துப் பேசுகிறது.
நானும் இளையராஜாவின் இசையை மிகவும் நேசிப்பவன் தான். ஆனால், இளையராஜா என்ற பார்ப்பனீயத்தின் மொத்த உருவமான அந்த மனிதரைப் பிடிக்கவே பிடிக்காது.
செல்லியம்மாள், பாப்பம்மாள் போன்ற பெயர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட பெண்கள் என்பதையும், அந்தத் தவறை உணர்ந்த அடுத்த தலைமுறைகள் அவர்களைக் குல தெய்வமாக்கி வழி படுவதையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து - குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு ...உத்தரபிரதேசத்தில் 27 Dead Tractor Overturns Uttar Pradesh Kanpur

tamil.samayam.com -  Velayuthan Murali : உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள், கான்பூர் மாவட்டத்திற்கு, டிராக்டர் இழுவை வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர். கட்டம்பூர் என்ற இடத்தில் டிராக்டர் இழுவை வாகனம் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென்று இழந்து சாலையோரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளா கம்யூனிஸ்டு தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்! விரிவான தகவல்!

நக்கீரன் : கொடியேரி பாலகிருஷ்ணன் யார்?- விரிவான தகவல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (வயது 68) புற்றுநோய் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
கொடியேரி பாலகிருஷ்ணன் குறித்து விரிவாக பார்ப்போம்!