சனி, 21 நவம்பர், 2020

மே மாதம் நடந்தது.. பிரபுதேவா - டாக்டர் ஹிமானி திருமணம் உண்மைதான்.. உறுதிப்படுத்தினார் ராஜூ சுந்தரம்!

ரவுடி ரத்தோர்   Raj - tamil.filmibeat.com : சென்னை: பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்று அவர் சகோதரர் ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார். பிரபுதேவா திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.   மணமகள் பிசியோதெரபிஸ்ட் என்றும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவானவர் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். 'இந்து' படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர்,தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரவுடி ரத்தோர் ரவுடி ரத்தோர் இந்தி, தமிழ், தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடித்த போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், தபாங் 3 படங்களை இயக்கியுள்ளார். 

கொரோனா தடுப்பூசி: முன்னணி தடுப்பூசிகளின் தற்போதைய நிலை என்ன?

tamil.indianexpress.com  :    கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான பந்தயத்தில் முன்னிலையில் இருக்கும்  ஃபைசர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனத்தின்  MRNA தடுப்பூசிகளில் 95 சதவீதம் பயன்திரன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.    உலகெங்கிலும், 1.34 மில்லியன் மக்களை கொன்று குவித்த கொரோனா எனும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில்  இந்த செய்தி புது வித நம்பிக்கையை விதைத்தது.

ரஷ்யா தனது ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மருந்தில் 92 சதவிகித செயல்திறன் இருப்பதாக அறிவித்தது.  ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டி  ஆய்வகத்தின் மூலம்  இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது

ஃபைசர் -பயோஎன்டெக் தடுப்பு மருந்து: 

வெற்றி விகிதம்: உலகளாவிய கோவிட் -19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முன்னிலை வகித்து வந்த ஃபைசர் நிறுவனம், ஜெர்மன் பயோஎன்டெக்  என்ற பான்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து  தயாரித்த தடுப்பு மருந்தின் பரிசோதனை முடிவுகளை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.  அதில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது தடுப்பூசி 95 சதவீதம் பயன்திறன் கொண்டைவையாக உள்ளது என்று தெரிவித்தது.

பன்னீர்செல்வம் : அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம்

maalaimalar :சென்னை:  பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,   
2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார்.  இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு

அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா : வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர்!

 தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளை பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர் ,

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்புரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய தயாரில்லை என்று குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா இவ்வாறானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.    veerakesari :பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (21.11.2020) கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் விவசாயம் – பெருந்தோட்டம் – கடற்றொழில் துறைகள் உட்பட எமது நாட்டின் வளங்களை கொண்ட உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. வயதானவர்களுக்கு சக்சஸ்.. நன்றாக வேலை செய்யும்.. இந்தியாவுக்கு குட்நியூஸ்!

 உடனடி தேவை
Velmurugan P -//tamil.oneindia.com :  லண்டன்: ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டியுள்ளது, 
இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு அதிக ஆபத்தில் இருக்கும் மக்கள்தொகையில் பெரும் பகுதியான முதியவர்களை பாதுகாப்பதில் சாத்தியமான பயன்களை ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிரூபித்துள்ளது. தி லான்செட் மருத்துவ இதழில் முதற்கட்ட கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ChAdOx1 nCov-2019 (தொழில்நுட்ப பெயர்) தடுப்பூசி பாதுகாப்பானது. நன்கு வேலை செய்கிறது. வயதானவர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. முக்கியமாக, "ChAdOx1 nCoV-19 தடுப்பூசி இளம் மற்றும் வயதுவந்தவர்களை விட வயதானவர்களிடையே நன்கு வேலை செய்வதாக தோன்றுகிறது..." 

GoBackAmitShah ட்ரெண்டிங்: அமித் ஷா தமிழகம் வருவதையொட்டி ! சனிக்கிழமை காலை ட்விட்டர் ட்ரெண்டிங் நிலவரம்.

GoBackAmitShah
Add caption
  BBC :இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்கள் வெளியிட்ட சில முக்கியச் செய்திகளின் தொகுப்பு. இந்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் வருகைக்கு முன்னரே GoBackAmitShah எனும் ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அவருக்கு ஆதரவாக TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டேகிலும் ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழகம் வரும்போது GoBackModi எனும் ஹேஷ்டேக் கடந்த காலங்களில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  அமித் ஷா வருகை குறித்து பல முன்னணி ஊடங்கங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. தினத்தந்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு.   டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.  

லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?

லட்சுமி விலாஸ் பேங்க்
madrasradicals.com : கடும் நிதிச் சுமையில் தவித்து வந்த லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு கரூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டது.   93 வருட பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் இயங்கி வந்தது. கடந்த ஆண்டு முதலே மூலதனத்தைப் பெருக்குவதற்காக முதலீட்டாளர்களைத் தேடிக் கொண்டிருந்தது. 

லட்சுமி விலாஸ் வங்கியின் உயர்மட்ட குழுவினர் வங்கியை மீட்பதற்கான முறையான திட்டத்தை எதுவும் முன்வைக்காத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை வங்கியின் செயல்பாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஆர்.பி.ஐ அறிவித்தது.

இன்று தமிழகம் வரும் அமித் ஷாவின் சுற்றுப்பயணம் விவரம்

இன்று தமிழகம் வரும் அமித் ஷாவின் சுற்றுப்பயணம் விவரம்
tamil.news18.com : இன்று தமிழகம் வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய  உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். இன்று (சனிக்கிழமை )காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாஜக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்படுகிறது.  
அதன்பின், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை சாலைமார்க்கமாக 1.55 மணிக்கு அடைகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

20th நவம்பர் 1916.. திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நாள்!

Image may contain: 3 people, text that says 'FOUNDERS OF DRAVIDIAN NON-BRAHMIN) MOVEMENT DR.C.NATESAN SIR.PITTYTHEYAGARAYAR DR.TARAVATH MADHAVAN'
நிலவு மாணிக்கம் : தமிழ் நாட்டில் திராவிட மக்களின் (பார்ப்பனரல்லாதோர்) முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் சென்ற நூற்றாண்டின் (20-ஆம் நூற்றாண்டு) துவக்கத்தில், திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் தங்கிப் படிக்கவும், உண்ணவும் விடுதிகள் இன்றி கஷ்டப்பட்டனர். பார்ப்பனர் விடுதிகளில் அவர்கள் தங்கிடவும், உண்ணவும் கூட அனுமதியில்லை.
“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பார்ப்பனர் அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசனார், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார்.

பேரறிவாளன் குற்றவாளியாகவே இருந்தாலும்கூட வாழ்வில் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்டார். விடுதலை செய்வதே நியாயம்

தாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா ஆளுநரே?: பேரறிவாளன் பாடல் வெளியிட்ட  திரைத்துறையினர் | 161 ReleasePerarivalan | Puthiyathalaimurai - Tamil News  | Latest Tamil News | Tamil News ...

Saravanakarthikeyan Chinnadurai : · என் புரிதல் ராஜீவ் படுகொலையின் execution-ல் பேரறிவாளனுக்குப் பங்குண்டு. இங்கே சீசனலாக அல்லது ஃபேஷனுக்காக அரசியல் பேசும் நடிகர்கள், இயக்குநர்கள் சொல்வது போல் அவர் அப்பாவியோ நிரபராதியோ அல்ல. அதாவது ராஜீவை வெடித்துக் கொல்லப் பயன்படவிருக்கின்றன எனத் தெரிந்தே தான் அவர் 9-வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதே பல கட்டுரைக் குறிப்புகளையும் பேட்டிகளையும் உள்வாங்கிய பின் நான் உணர்ந்து கொண்ட சாரம்.    ஆனால் 1991 முதல் இன்று வரை மொத்தம் 29 ஆண்டுகள் - இரட்டை ஆயுள் தண்டனைக்கும் மேலான கால அளவு - சிறையில் தன் இளமைக் காலம் முழுக்க, ஆயுளின் மூன்றில் ஒரு பங்கைக் கழித்து விட்டார். 

ராஜீவ் கொலையில் பேரறிவாளன் நேரடிச் சதிகாரர் அல்ல என்பதையும் குற்றத்தின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது அவர் உரிய தண்டனையை அனுபவித்து விட்டார் என்றே எண்ணுகிறேன். எஞ்சியிருக்கும் வாழ்நாளையேனும் அவர் சுதந்திரமாய்க் கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும். இந்தத் தேசம் அவரை மன்னிக்க வேண்டும்.   

வெள்ளி, 20 நவம்பர், 2020

குஷ்பு பதிலடி: உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு குஷ்பு


dinamalar ;உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு குஷ்பு பதிலடி.  கடலூரில் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டனர். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன், துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கடலூருக்கு இன்று சென்றனர். கடலூர் செல்லும் வழியில் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரிமோதி கடும் விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். 

தினமலர் கடிதம் : நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி.. இது உங்கள் இடம்

தினமலர்  : தமிழகத்திற்கு, தி.மு.க., நல்லது எதையும் செய்யவில்லை என்றே,
latest tamil news

பலர், இப்பகுதியில் கடிதம் எழுதுகின்றனர். கருணாநிதி, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும், முதல் வேலையாக, மனிதனை மனிதனே இழுக்கும், கைரிக் ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக, சைக்கிள் ரிக் ஷாவை அவர்களுக்கு வழங்கினார்.

காமராஜர் ஏற்படுத்திய சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். கண்ணொளி திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும், கண்ணாடியும் வழங்கினார். பிற்படுத்த மக்களுக்கான, இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, மத்திய அரசுடன் போராடினார்.திருக்குறளின் அருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக, வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில், 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார்; அரசு பேருந்துகளில், திருக்குறள் இடம் பெற செய்தார். தமிழுக்கு, செந்தமிழ் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.  

'ஊனமுற்றோர்' என்ற சொல்லை நீக்கி, 'மாற்றுத்திறனாளி' என மாற்றி, அவர்களுக்கு பெருமை சேர்த்தார். விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, உழவர் சந்தையை அமைத்துக் கொடுத்தார். கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பித்தார். ஆண்டவன் முன், அனைவரும் சமம் என்பதை உணர்த்தி, 'தகுதியுள்ளவர் யார் வேண்டுமானாலும், அர்ச்சகராகலாம்' என, உத்தரவு பிறப்பித்தார்.

அது திரித்துவிடப்பட்ட தகவல்... பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்!

 nakkeeran  :  நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், பூங்கோதை ஆலடி அருணா, உடல்நலக்குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து பூங்கோதை ஆலடி அருணா விளக்கமளித்துள்ளார். அதில், "தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியான தகவல்கள் பொய்யானது. அது திரித்துவிடப்பட்ட தகவல்கள். திடீரென ஏற்பட்ட மயக்கதிற்கான காரணத்தைக் கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருக்கிறேன். சர்க்கரை அளவும், ரத்தம் உறையும் தன்மையும் குறைவாக உள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது" இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்

 

பூங்கோதை ஆலடி அருணா! கட்சிப் பிரச்சினை+ குடும்பப் பிரச்சினை... பகீர் முடிவின் பின்னணி!

கட்சிப் பிரச்சினை+ குடும்பப் பிரச்சினை: பூங்கோதை பகீர் முடிவின் பின்னணி!

minnambalam : தூக்க மாத்திரைகளை உண்டதால், 19 ஆம் தேதி காலை நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை இன்று (நவம்பர் 20) காலை அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

18 ஆம் தேதி தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பூங்கோதைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆவேசமாக அங்கிருந்து வெளியேறிய பூங்கோதை அன்றிரவு தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார். காலையில் வெகுநேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் இருந்தவரை, குடும்பத்தினர் பார்த்து அதிர்ந்து அதன் பின் நெல்லை ஷிபா மருத்துவமனையில் சேர்த்தனர்.

BBC : உதயநிதி திருக்குவளையில் கைது: அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் - திமுக சாலை மறியல்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைதானதை அடுத்து நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உதயநிதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற திமுகவின் தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் தொடங்கிய சில மணிநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கொரோனா காலத்தில், தொண்டர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி காவல்துறையினர் உதயநிதியை கைது செய்ததாக கூறப்பட்டது.

திராவிட இயக்கத்தின் புரட்சி மாதம் நவம்பர்!

Saravanan M : · திராவிட இயக்கத்தின் புரட்சி மாதம் நவம்பர்! - வைகோ. நீதிக்கட்சி பிறந்த இந்த நவம்பருக்கு வரலாற்று முக்கியத்துவங்கள் ஏராளம் உண்டு. நவம்பர் திங்கள் திராவிட இயக்கத்தின் பொன்னேடு. 1912 நவம்பரில்தான் டாக்டர் சி.நடேசனார் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப் பினை உருவாக்கினார். 1913 இதே நவம்பரில்தான் அதன் பெயர் திராவிடர் சங்கமாகப் பெயர் சூட்டப்பட்டது.
1914 இதே நவம்பரில்தான் டாக்டர் சி.நடே சனார் திராவிடன் விடுதியைத் தோற்றுவித்தார்.
1923 இதே நவம்பரில்தான் (நவ.19) நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றது.
1925 இதே நவம்பரில்தான் (நவ.22) தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
1928 இதே நவம்பரில்தான் (நவ.7) ரிவோல்ட்’ ஏட்டை தந்தை பெரியார் தொடங் கினார்.
1932 இதே நவம்பரில்தான் (நவ.7) அய் ரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துத் தந்தை பெரியார் திரும்பினார்.
1933 இதே நவம்பரில்தான் புரட்சி’ இதழை தந்தை பெரியார் தொடங்கினார்.
1938 இதே நவம்பரில்தான் (நவ.13) சென்னையில் கூட்டப் பெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு பெரியார்” என்ற பட்டம் சூட்டப்பட்டது.
1938 இதே நவம்பரில்தான் (நவ.14) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க தந்தை பெரியார் போர் முழக்கமிட்ட நாள்.

இசையமைப்பாளர் தேவா மீது ஓர் இசைத் தீண்டாமை கடை பிடிக்கப்பட்டது?.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் (70)!

 K
athir RS
: இசையமைப்பாளர் தேவா அவர்களைக் கொண்டாடும்  முன்னெடுப்பை பல ஆண்டுகளாக அண்ணன் சிவசங்கரன் சரவணன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார். சப்தஸ்வரங்கள் காலம் தொடங்கி 2010 வரை கூட எந்த இசை நிகழ்ச்சிகளிலும் தேவாவின் எந்த பாடலும் பாடப்பட்டதில்லை.
அவர் மீது அப்படி ஓர் இசைத் தீண்டாமை கடை பிடிக்கப்பட்டது.
தேவா பற்றி மறந்தும் எவரும் எந்த மேடையிலும் சிலாகித்து பேசியது கிடையாது.எந்த இசை நிகழ்சிக்கும் அவரை நடுவராக அமர்த்தியது கிடையாது.
அவரை முதன் முதலில் ஒரு தொலைக்காட்சி ஒரு கானா பாடல் நிகழ்ச்சிக்கு அழைத்ததாக நினைவு.அதைத்தவிர வேறு எங்கும் அவரை கண்டதில்லை.
நான் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியின் ஆடிஷனில் ஏ.வி.ரமணன் சொன்னதை அப்படியே கீழே தருகிறேன்.
தயவு செஞ்சு இந்த மாதிரி பாட்டெல்லாம் குழந்தைங்கள பாட வைக்காதீங்கம்மா உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்//
ஆடிஷனுக்கு வந்திருந்த ஒரு சிறுவன் பாடிய பாடலைக் கேட்டு முகம் சிவக்க அவர் இப்படி சொன்னதற்கு காரணம்.
அந்த சிறுவன் பாடியது "அண்ணா நகரு ஆண்டாளு "
என்ற தேவாவின் கானா பாடல்.

போலீஸ்காரர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: மன அழுத்தத்திலும் குறைந்த சம்பளத்திலும் பணிபுரிகி றோம்.

பாலகணேசன் ருணாசலம் : · சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்செல்வன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: நான், போலீசில், 2003 முதல் பணிபுரிகி றேன். சட்டசபை தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, மனுக்களை, தேர்தல் அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்ப, நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று அனைத்து போலீஸ் சார்பில், இக்கோரிக் கை மனுவை வழங்குகிறேன். அரசு பணி களில், கூடுதல் பணிச்சுமை, தொடர்ந்து பணிபுரியும் துறையாக போலீஸ் உள்ள து. பலர், மன அழுத்தத்திலும், மற்ற மாநி லங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த சம்பளத்திலும், தமிழகத்தில் பணிபுரிகி றோம். 

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, எந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் முன் வரவில்லை.வரும் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானால், எங்கள் கோரிக் கையை நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர் பார்ப்பில் உள்ளோம். போலீசாருக்கு, 8:00 மணி நேர பணி வரையறைசெய்யப்பட வேண்டும்.தினமும் போலீசாரின் குறை, புகார்களை அணுக, மாவட்டந்தோறும் தன்னார்வலர், அடிமட்ட போலீசார் அடங் கிய குழு ஏற்படுத்த வேண்டும்.சங்கம் அமைக்க அனுமதி தேவை. சீருடையில் உள்ள, 'மெட்டல் பட்டன்' முறையை மாற்ற வேண்டும். வார விடுப்பு அவசியம்.   ஞாயிறு, விடுமுறை நாளில் பணிபுரி வோருக்கு, இரட்டை சம்பளம் வழங்க வேண்டும்.

இரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy காலமானார் .. செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்

Image may contain: 1 person
Alexander Dubyanskiy,
Subashini Thf : ·  இரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy,  1941-2020) மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொல்காப்பியம் சமஸ்கிருத அடிப்படை கொண்டதல்ல எனத் தெளிவாக எடுத்துரைத்த அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் இவர்.

 திமுக தலைவர் மு க ஸ்டாலின் :   செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி. சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.

இந்தியா மார்வாடிகள் காலனியாகி விட்டது ! நான்கில் ஒரு பங்கு இந்திய பில்லியனர்கள் மார்வாடிகள் !

Image may contain: text
Saravanan Thangappa :
மார்வாடிகளின் வணிக ரகசியம்!
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் கொடூர வில்லன்கள் அல்லது காமெடியன்களாகத் தான் சேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் இவர்களை “நம்பள் நாளே வரான். பைசா கேக்கறான். நிம்பள் கொடுக்கிறான்” என்று பேசுவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்காமல் ஏழைகளிடம் வட்டிக்காசு வசூலித்து, அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.

மலைகள் பேசினால்.. மலையகத்தில் இருந்து ஒரு குரல்! எஸ்தர் நாதனியேல் இலங்கை!

Esther Nathaniel : · அலுலகத்தில் என்னுடன் பணியாற்றும் ஒருவர் கடும் பக்தர்

கந்த சஷ்டி கோதாவரி காளியாச்சீ காப்பு என பல விரதங்களை பிடிப்பார். நேற்று அவர் ஒரு தொலைபேசியில் உரையாடுகிறார் வணக்கம் சோதிடர் அய்யா நான் இன்னார் கதைக்கிறேன் அய்யா எனது உறவுமுறை பெண் வெளிநாட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அது எங்களுக்கு தொடக்கா இல்லை புடக்கா என கேட்கிறார் ??         வேலை கெட்ட சோதிடனும் சொல்கிறார் தொடக்குத்தானாம் விரதம் புடிக்காதீங்கோ தொடக்கு புடக்கு கழியட்டும் என்கிறாராம் பாருங்கள் ஒரு குழந்தை எந்த பாவமும் புண்ணியம் அறியாத பச்சை உயிரை தொடக்காம் இவனுகளுக்கு பொம்பள உடம்புல ஓடும் இரத்தம் வெளிய வந்தா தொடக்கு உள்ளுக்கு போனா மட்டும் தொடக்கு இல்லை
மலையகத்தில் நோட்டன் என்ற இடமுண்டு கடுமையான குளிரும் மழையும் உள்ள இடம்
நான் சில நண்பர்களுடன் பத்து வருடம் முன்னார் தெப்பட்டன் என்ற இடத்துக்கு புறப்பட்டோம் தெப்பட்டனில் இறங்கி ஒரு பத்தடி நடக்க முடியாது அட்டை அப்பும் விறு விறுவென உடம்பில் ஏறும் அட்டைக்காடு
சிந்தித்துப் பாருங்கள் அங்கு வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களின் நிலைபாட்டை. அட்டையா எந்தப்பக்கம் வருதோ தெரியாது பஸ் வசதியும் இல்லை நோட்டன் என்பது பாதி சிங்களவர்களும் வாழும் இடம்.
நாங்களும் சித்தாலேப சவர்க்காரம் பூசிக் கொண்டு ஊருக்குள் இறங்கிட்டோம் நாங்கள் போவது அங்கே நரிக்குறவர்களை நாடோடிகளை சந்தித்து சில ஆவணங்களை சேகரிக்கவே.

வியாழன், 19 நவம்பர், 2020

கம்யூனிஸ்டு ஜோதி பாசுவை பிரதமராக விடாமல் தடுத்த பிரகாஷ் காரத் .... (சமூக வலை வைப்பிறேசன்ஸ்)

Chozha Rajan : · இப்போதும் என்னை உறுத்தும் ஒரே விஷயம் பிரகாஷ் காரத்... எந்தக் காலத்திலும் கிடைக்காத பிரதமர் பதவியை காங்கிரஸ் உள்பட எல்லோரும் தட்டில் வைத்து கொடுத்தபோது, ஜோதிபாசுவுக்கு கிடைக்கவிடாமல் செய்த பாவி... ஜோதிபாசுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோதிபாசுவும் இந்தியா முழுமைக்கும் அறிமுகமாகி இருக்கலாம்... ஒரே ஒரு மக்கள் நலச் சட்டத்தை இயற்றியிருந்தால் அல்லது முயற்சி செய்து தோற்றிருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மனதில் நின்றிருக்கும்... பாஜகவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது... 

Abdul Rahim : எனக்கும் அந்த வருத்தம் உண்டு. 

அகரம்சேரி ப.ச.  சுரேஷ்குமார் :  உண்மையான கருத்து..கம்னியூஸ்டிலும் பார்ப்பனியம்..அதுவே காரணம்... 

Chozha Rajan : அது அல்ல. அப்படிப் பார்த்தால் ஜோதிபாசு யார்?

குமார்தாஸ் பேரையூர்குமார் : T K ரங்கராஜன் ( 10% உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கீட்டை கடுமையாக ஆதரித்தவர்) 

அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமார் : பார்ப்பனியர்(இனம்)என்பது வேறு..பார்ப்பனியம்(சூழ்ச்சி) என்பது வேறு..

Natarajan Sivaguru அதற்கு பிறகு UPA 2 ஆதரவு வாபஸ் வாங்கியது... 

Chozha Rajan : அது கொடுமையிலும் கொடுமை. கம்யூனிஸ்ட்டுகள் சொன்னதையெல்லாம் கேட்ட அந்த அரசை, பெட்ரோல், ரயில்கட்டணத்தை ஏற்றாமல், 100 நாள் வேலை உத்தரவாதத்தை கொடுத்த அந்த அரசை, வெட்டித்தனமான ஒரு காரணத்தைக் காட்டி கவிழ்க்க முயன்று தோற்று, காங்கிரஸை மம்தாவுடன் கூட்டணி அமைக்கவி்ட்டு, மேற்கு வங்கத்தை இழந்து... கொடுமை தோழர்... · 

Natarajan Sivaguru : . எல்லாவற்றையும் ஏற்க இயலாது 

Chozha Rajan : அது உங்கள் நிலைப்பாடு தோழர். ஆனால், அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு என்பது ஒரு வெற்றுக்காரணம் என்பது எனது கருத்து. அடுத்து அது நிறைவேறாமல் போயிற்றா என்ன? ·

தொழிலதிபர் வைகுண்டராஜனை கடத்தி கொலை செய்ய கூலிப்படை முயற்சி; கமிஷனரிடம் புகார்

tamil.indianexpress.com : விவி மினரல்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான வைகுண்டராஜன், தன்னை கூலிப்படையினர் கண்காணித்து கடத்தி கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

விவி மினரல்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான வைகுண்டராஜன், தன்னை கடத்தி கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் நெல்லை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், தன்னை கடத்துவதற்கு கண்காணித்த நபரை பிடித்துக்கொடுத்ததாகவும் அவரை போலீசார் விட்டுவிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.    திருநெல்வேலி மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்ட ராஜன் கூறியதாவது, “பொறுப்பு போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனது தம்பி மகன் செந்தில், நான் தனியாக போகிறேனா? எங்கே போகிறேன் என்று என்னை கண்காணித்து பின்தொடர்ந்து கண்காணிப்பதற்காக 10-15 ஆட்களை தயார் செய்து வைத்துள்ளார். அப்படி நேற்று என்னை கண்காணித்த ஆட்களில் 2 பேர்களை பிடித்துவிட்டோம். பிடித்த ஆட்களில் ஒருவரை உதவி காவல் ஆணையரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தோம். 

ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?

minnambalam : கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின்
ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?
வெளியூர் பயணங்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். கடந்த 8 மாதங்களில் தூரத்துப் பயணமாக முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பசும்பொன் மட்டுமே சென்றிருக்கிறார். வழக்கமாக பொதுக் கூட்டங்கள், கலந்தாலோசனைகள், நிகழ்ச்சிகளை காணொலி வாயிலாகவே முடித்துவிடும் ஸ்டாலின், முக்கியம் என்றால் மட்டுமே அறிவாலயம் செல்கிறார்.

வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையோ அல்லது ஓய்வு கிடைக்கும் ஏதோ ஒரு நாளில் காலை விடிவதற்கு முன்பே கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் சைக்கிளிங் கிளம்பிவிடுகிறார். ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள், சைக்கிளில் வேகமாக செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் சைக்கிளிங் சென்ற ஸ்டாலின் ஒரு கடை முன்பு செல்போன் பார்த்தபடி சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இன்று வெளியாகின. அதில், ஸ்டாலின் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

பூங்கோதை ஆலடிஅருணா தற்கொலை முயற்சி .. ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ - கடையம் கூட்டத்தில் நடந்தது என்ன?

பி.ஆண்டனிராஜ் -  vikatan : பூங்கோதை எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், மருத்துவரான பூங்கோதை ஆலடிஅருணா. தென்காசி மாவட்ட தி.மு.க-வில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் தனித்துச் செயல்பட்டு வருபவர். தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனுக்கும் பூங்கோதைக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அதனால் தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளரை அழைப்பதில்லை. தன் தம்பி எழில்வாணனுடன் சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. அதனால் எழில்வாணன், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுடன் சேர்ந்து பூங்கோதையை எதிர்த்து ஆலங்குளம் தொகுதிக்குள் அரசியல் செய்து வந்தார்.

மைக்ரோவேவ் ஆயுதங்கள்,, இந்திய ராணுவத்திற்கு எதிராக சீனா பயன்படுத்தியதா?

ப்ரவீன் ஷர்மா p பிபிசி செய்தியாளர் : லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்திய இராணுவத்தின் கூடுதல் பொது இயக்குநரகம்(ஏ.டி.ஜி.பி.ஐ), தனது ட்விட்டர் தளத்தில், "கிழக்கு லடாக்கில் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியது குறித்த ஊடக செய்திகள் ஆதாரமற்றவை, அது குறித்த செய்தி போலியானது," என்று ட்வீட் செய்துள்ளது. சீனாவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்று பாதுகாப்பு நிபுணரும் இந்தியன் டிஃபன்ஸ் ரிவியூ பத்திரிகையின் இணை ஆசிரியருமான கர்னல் தான்வீர் சிங் கூறுகிறார்.
மைக்ரோவேவ் ஆயுதம்

"இதுபோன்ற ஆயுதங்கள் அனைத்தும் ஒரு நேர்க் கோட்டில் தாக்கக்கூடியன. மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்த எளிதானவை அல்ல. இது அறிவார்ந்த சிந்தனைக்கு ஒவ்வாத ஒரு விஷயம். இது சீனாவின் விஷமப் பிரசாரமேயாகும்," என்று சிங் கூறுகிறார்.

நரகாசுரன் வேறு யாருமல்ல வர்தமான மகாவீரரே தான்... திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகளில் தமிழ் ஜைன மதத்தவர்...

Sathyaperumal Balusamy : · நரகாசுரன் வேறு யாருமல்ல வர்தமான மகாவீரரே தான். மகாவீரராகப் பிறப்பதற்கு முன்னான முற்பிறப்புகள் ஒன்றில் அவர் 'நரகவாசி' (denizen of hell) யாக இருந்தார் என்கிறது ஜைன நம்பிக்கை. வைதீக மதத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவை ஜைனம் ஆசீவகம் பௌத்தம் ஆகியன. மக்களின் ஏகோபித்த செல்வாக்கையும் இவை பெற்றிருந்தன. இந்த மும்மதங்களின் செல்வாக்கை ஒழிக்க வைதீகம் செய்த சூழ்ச்சிகள் பல. மகாவீரர் முக்தியடைந்ததை 'மகாவிஷ்ணு பூமா தேவி துணையுடன் நரகாசுரனைக் கொன்றான் என்றும் அந்த நாளே தீபாவளி என்றும் தனது இறந்த நாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் எனறு நரகாசுரன் விஷ்ணுவிடம் வரம் வாங்கிக் கொண்டான்' என்றும் புராணம் எழுதிப் பரப்பிவிட்டது வைதீகம்.
ஆனால், மக்களது கொண்டாட்டம் வேறு மாதிரியானது. தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புத்தாடை அணிவது என்பது அமங்கலச் சடங்கு. அதாவது நெருங்கிய உறவினரது இறப்பிற்குப் பின் செய்யும் சடங்கு.
இந்தச் சடங்கை, மகாவீரரைத் தமது உற்றவராகக் கருதிய மக்கள் ஒவ்வொருவரும் தீபாவளியன்று செய்கிறார்கள். அன்றைக்கு தீபாவளி நோன்பு என்ற பெயரில் உண்ணா நோன்பு இருந்து நடுவீட்டில் படையலிட்டு வணங்கும் வழக்கம் வடமாவட்டங்களில் உண்டு. இந்தப் படையலுக்காக அதிரசம் சுடுவது மிகுந்த பயபக்தியுடன் செய்யப்படும். இன்றைக்கும் திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகளில் தமிழ் ஜைன மதத்தவர் உண்டு.

நீட் கொள்ளை 60 ஆயிரம் கோடி .. மாநில அரசு உறுதியாக சட்டம் இயற்றினால் மட்டுமே நீட் கொடுமையை ஒழிக்க முடியும்

Dev JB : · இந்தியா முழுதும் NEET எழுதியவர்கள் சற்றேறக்குறைய 20லட்சம் பேர். 2வருட NEET கோகிச்சிங்க்கு தலா 3,00,000 என கணக்கிட்டால் ₹6,00,00,00,00,000/- அதாவது 60 ஆயிரம் கோடி. 60 ஆயிரம் கோடி செலவு செய்து, கிடைக்கும் மொத்த
MBBS + BDS சீட்கள் 1,18,316/-.
இவற்றில் MBBS சீட்கள் 80,000/-.
இதில் அரசு மருத்துவ இடங்கள் 41,388/-. தமிழ்நாட்டில் நாம் கட்டிய அரசு மருத்துவகல்லூரிகள் 24.
வருடம் 60 ஆயிரம் கோடியென்றால்.... அதை வைத்துக்கொண்டு அவனுங்க ஆடும் ஆட்டம் தான் நம் குழந்தைகளுக்கான இடங்களை தட்டிபறிப்பது.
மாநில அரசு தன் உரிமைகளை காக்க இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமைகள் வழியாக சட்டமியற்றினால் மட்டுமே NEET போன்ற அநீதிகளை ஒழிக்கமுடியும். 
எடுபிடி மாதிரி முதுகெலும்பில்லாத பிராணி அவனுகளை நக்க வேண்டுமானால் தரையில் படுப்பானே ஒழிய, எதிர்த்து போராட வாய்ப்பே இல்லை. 
அவனுகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியிருக்க 100% வாய்ப்பிருக்கு.
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க விரும்பும் ஒவ்வொரு சுயமரியாதை உள்ள தமிழனும் திமுகவிற்கு மட்டுமே வாக்களிப்பார்.     neet 60 ஆயிரம் கோடி.

கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய்.. எனிமா குழாய்

வெங்கடேஷ் றுமுகம் : ஆரோக்யம் "உங்களுக்குத் தெரியுமா" பெண்கள் மாதம் ஒருமுறை சுயமாக அவர்கள் கர்ப்பப்பை சுத்தம் செய்ய வெறும் ₹300க்கு கிடைக்கும் உபகரணம். கிட்டத்தட்ட ஒருவர் (மட்டும்) ஓராண்டு பயன்படுத்தும் உபகரணம். பெண்கள் மாதாமாதம் தங்கள் மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் முடிந்த மறுநாள் கர்ப்பப்பையை அவர்களே சுயமாக நீரால் கழுவும் முறை. மாதாமாதம் இதைச் செய்வதால் கர்ப்பப்பை சுத்தமாகிறது. 

பீரியட் கால வயிற்றுவலி வராது, வெள்ளைப்படுதல் போன்றவை அறவே ஒழியும் இரத்தப்போக்கு அதிகரிக்காது.. கர்ப்பப்பை கட்டிகள் வராது பீரியட் பிரச்சனைகள் வரவே வராது. இதை எந்த டாக்டரும் பரிந்துரைப்பதே இல்லை! நம் இயற்கை மருத்துவத்தில் இவ்வழி முறை தற்போது அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மதுரையில் காந்தி மியூசியத்தில் இது விற்பனைக்கு உள்ளது.

சில மருந்துகடைகளிலும் உண்டு! இந்த விழிப்புணர்வு வராமல் தடுக்க நாப்கின் வணிகத்தின் கார்ப்பரேட் கைகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறுகின்றனர்.
படம்1 : எனிமா குவளை.
படம் 2 : எனிமா குழாய் & கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய்.
படம் 3 &4 : கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய் முனையில் & பக்கவாட்டில் உள்ள துளைகள்.

ஒன்றுக்கும் உதவாத இத்துபோன வேதங்களை வைத்துதான் இத்தனை பில்டப்புகள்

Image may contain: text that says '"ப்ரஹ்ம சூத்திரத்தில்" சூத்திரர்களின் நாக்கை அறுக்கும் அளவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ருதி என்றெழைக்கப்படும் நான்கு வேதங்களில் உயர்ந்த விசயங்கள் சொல்லப் பட்டுள்ளனவா? என்றால் அதுதான் இல்லை. இவை அனைத்தும் யாகம், வேள்வி, யக்ளும் மாடு, குதிரை, அக்னி, வருணன் வாயு, சோமன் சூரியன்,இ இந்திரன், சுரா பானம்,சே பானம், தஸ்யூ, தாஸர்கள் என இவற்றுக்குள்ளேயே சுற்றி வருவதை வாசிக்கிறவர்கள் உணர்வார்கள் இந்த இத்துப் போன சங்கதிகளுக்காகவா காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள்? என்கிற கேள்வி இந்த நூல்களைப் படிக்கும் அனைவருக்கும் எழும்.'

Dhinakaran Chelliah : வேதங்களும்,இதிகாசங்களும், புராணங்களும், உபநிடதங்களும், ஸ்மிருதிகளும்,சாஸ்திரங்களும்,தர்ம நூல்களும் பாமர எளிய சூத்திர பஞ்சம மக்களுக்கானதல்ல.பெண்களுக்கும் உரியவை அல்ல.இவை அனைத்தும் வைதீகர்களான பிராமணர்,சத்ரியர், வைசியர்களுக்கானவை மட்டுமே.இவை அனைத்தும் அவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்து அவர்களின் புகழைப் பரப்பும் வண்ணமும் எழுதப்பட்டவை.வைதீகர்கள் அல்லாதவர்கள் இவற்றில் பெற்றுக் கொள்ளவோ இணைத்துக் கொள்ளவோ ஒன்றுமேயில்லை.இவை அனைத்தும் வைதீகர்கள் அல்லாத மக்களை அடிமைகளாகவும் எதிரிகளாகவும் இழி பிறவிகளாகவும் சித்தரிக்கின்றன.
வைதீகர் அல்லாத சூத்திரர்,பஞ்சமர்கள், மற்றும் பெண்கள் வேத புராணங்களை கையில் எடுத்து அதை உயர்வாக கருதி தம்மை வைதீகர்களுக்கு அடிமையாகவே பாவித்து,ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நடிகர் பிரபுதேவா பீகார் டாக்டரை திடீர் திருமணம் செய்தார்!

Raj - tamil.filmibeat.com சென்னை: பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா, டாக்டரை திருமணம் செய்துகொண்டார். 

டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர், பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பணியாற்றிவருகிறார். தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கும் இவர், சில படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விஜய் நடித்துள்ள போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், தபாங் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கிலும் சில படங்களை இயக்கி இருக்கிறார்.

சல்மான் கானின் ராதே இப்போது சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இப்போது யங் மங் ஜங், ஊமை விழிகள், பாஹீரா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. சில படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

சரிந்து வரும் மதங்களின் செல்வாக்கு .. உலக ட்ரெண்டு இதுதான்... புள்ளிவிபரங்கள் காட்டும் உண்மை

Umar AH : மதவாதிகளின் வதந்தி**
ஐரோப்பிய கண்டத்தில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது எல்லோரும் இஸ்லாமை விரும்புகிறார்கள் பெண்கள் இஸ்லாமுக்கு மாறுகிறார்கள் , இந்து மதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொல்கிறார்கள் இது உண்மையா?
முதலில் u.k வில் இருந்து ஆராம்பிக்கலாம் u.k என்றால் இங்கிலாந்து , வேல்ஸ், ஸ்காட்லாந்து நாடுகளை அடக்கியது
1.கிருஸ்த்துவம் : 59.5%
2.மதங்களை பின்பற்றாதவர்கள்: 27.7%
3.இஸ்லாம் : 4.4%
4.இந்து மதம்: 1.3%
5.மற்றவை: 1.8%
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் யில் 2001 ஆம் ஆண்டு இஸ்லாம் 3% ஆக இருந்தது 2011 ஆம் ஆண்டு 4.8% ஆகியுள்ளது
இந்து மதம் 2001 யில் 1.1 ஆக இருந்தது 2011 யில் 1.5% ஆகியுள்ளது
மதங்களை வாழ்க்கையில் இருந்து எடுத்தவர்கள் 2001 யில் 14% ஆக இருந்தது 2011 யில் 25% ஆகியுள்ளது
http://en.m.wikipedia.org/.../Religion_in_the_United_Kingdom
_எது வேகமாக வளர்கிறது மனிதம் தானே._
அடுத்தது நார்வே நாட்டை பார்க்கலாம்
கிருஸ்த்துவ மதத்தில் இருப்பவர்கள் 77% பேர்
இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் 3.4 % பேர்
மற்றவை 20%
மதங்களில் இருப்பவர்கள் என்று சொன்னதற்கு காரணம் நார்வே நாட்டில் 22% பேர் மட்டும் தான் கடவுள் நம்பிக்கையாளர்கள் 44% பேர் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஆற்றல் இருக்கிறது என்று நம்புபவர்கள் 
(இவர்கள் நரக சொர்க கதைகளையும் அம்புலி மாமா வையும் நம்புவதில்லை என்பது குறிப்பிடதக்கது) 

தாயை வன்கொடுமை செய்துவிட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்த மகன் ... கர்நாடக மாநிலம்

nakkeeran : கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் இறந்த நிலையில், 21 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண்ணிற்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மகனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் அப்பெண் வேலைக்கு சென்றுக்கொண்டு இருந்தபோது, அவரை வழிமறித்த மகன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஏற்பட்ட தகராறில், கடும் ஆத்திரமடைந்த அவர், தனது தாயை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணின் மகனை கைது செய்து, நீதிமன்றக் காவலில் விசாரித்து வருகின்றனர்.

புதன், 18 நவம்பர், 2020

தமிழக தரவரிசை பட்டியலில் பிற மாநில மாணவர்களா?

தமிழக தரவரிசை பட்டியலில் பிற மாநில மாணவர்களா?
minnambalam.com : தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிறமாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டுத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கான  உள் ஒதுக்கீட்டு ஆணையை இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  "இந்த நாள் அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சட்ட போராட்டமும் நடந்து வருகிறது. நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

maalaimalar.com  : சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா விடுதலை குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்றார்.மேலும், ‘‘7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’’ என்றார்.

EAST WEST AIRLINES உண்மையான சூரர்களை போற்று!.. கேரளா வாஹித் சகோதரர்கள்

 

 Hussain Amma : ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், விமானக் கம்பெனி தொடங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்றுவிட்ட “ஏர் டெக்கான்” கோபி நாத் குறித்து ”சூரரைப் போற்று!!” புண்ணியத்தில் எல்லாருக்குமே இப்போது தெரியும்.

ஏர் இந்தியா மட்டுமே கோலோச்சி வந்த 90-களில், வளைகுடாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்த தென்னிந்தியர்கள், பம்பாய் வந்துதான் தமது ஊர்களுக்குச் செல்ல முடியும். பயணச் செலவு எகிறுவதோடு, உள்ளூர்ப் பயணத்திலேயே விடுமுறையும் வீணாகச் செலவாகி வந்த காலம் அது.
வானத்தைத் தனியாருக்குத் திறந்து விட்ட 1991-ம் வருடம், கேரளாவைச் சேர்ந்த வாஹித் சகோதரர்கள் “EAST WEST AIRLINES" என்ற விமானச் சேவையைத் தொடங்கி, உண்மையிலேயே பெரும் சேவை செய்து வந்தனர்.
அன்னை தெரசா அம்மையாருக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களது விமானத்தில் இலவசச் சேவை அளித்து வந்தனர்.
ஆனால், இத்தொழிலில் அவர்கள் சந்தித்து வந்தது சாதாரணத் தொழிற்போட்டியோ, எதிர்ப்போ அல்ல - கொலை மிரட்டல்!!

கலைஞருக்கு ஷோபா சக்தி எழுதிய நினைவஞ்சலி ...மீள்பதிவு

பிரபாகரனின் 23வது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ,ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் போல வெறுமனே புலிகளிற்கு மட்டுமான நட்புச் சக்தியாகவோ ஈழப் பிரச்சினை குறித்துக் கிஞ்சிற்றும் அறிவில்லாதவராகவோ கலைஞர் இருக்கவில்லை. அவர் ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்திருந்தார். வைகோ அல்லது நெடுமாறன் போல அவர் வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராக இருந்ததில்லை
-- இலங்கை தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தி : New indian express.com
13-8-2018
மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது 'கண்டிவீரன்' சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன்.
தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின.

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா... விரைவில் விடுதலை!!!

nakkheeran.in -நக்கீரன் :[சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து

Jeyalakshmi C - tamil.oneindia.com : செங்கல்பட்டு: பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே விபத்திற்குள்ளானது. 
Car crash on container lorry - Khushbu escapes by Murugan Arul

  காயமின்றி முருகன் அருளால் தப்பியதாக கூறியுள்ளார் குஷ்பு.   பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வரும் குஷ்பு, கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று கார் மூலம் கிளம்பினார். ெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. 

அப்போது குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு இலேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் தனது கணவர் கும்பிடும் கடவுள் முருகன் அருளினால் தப்பியதாக கூறினார்.

பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை

BBC :இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். 

யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறுகின்றார். வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார் பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அதனால்தான் நான் எப்போதும் உரக்கக் கத்திக்கொண்டேயிருக்கிறேன் educationistheonlyweapon என்று

Image may contain: 4 people, people standing
Maha Lakshmi : · ஒரு பங்கு கறி எடுக்க ஆத்தத் தாண்டி எங்க அப்பா மட்டுமல்ல எங்க சேரியில இருக்கிற ஒட்டுமொத்த அப்பன்களும் பொழுது விடியறதுக்குள்ள போயாகணும். கெங்கப்பட்டுக்குப் போனா பின்ரவ கறிக் கிடைக்குங்கிறது ஒருபக்கம் இருந்தாலும் எங்கூரு மாதா கோயில் தெருவுல இராயப்பன் அறுக்குற கறி புதுச்சேரி பழைய சேரிக்குப் பத்தாதுங்கிறது இன்னொருபக்கம்.டீப்னிய எடுத்துக்குனு அந்தக் கருக்கல்ல போய் வரணும். இன்னொரு எலும்புத்துண்டு போடு மவராசானு கெஞ்சி எலும்ப வாங்காதவங்க யாருமிக்கமாட்டாங்க.
கோழிக்கறி  ஆக்கறவிங்களையும் ஆட்டுக்கறி ஆக்கிறவிங்களையும் பெரிய பணக்காரங்கடினு வாய நல்லா பொளந்து வச்சி கண்ணையும் புருவத்தையும் ஒசத்தி சொல்லுவோம். சேரிங்கள்ள யாரோ ஒருசிலரு கோழிய ஆக்குவாங்க.ஆம்பள புள்ளைக நிறைய பேர் இருந்து அவங்க வெளியில எங்கயாவது போய் சம்பாதிக்கிறவங்களா இருந்தா, அந்த வூட்டு பெரிய ஆம்பளைங்க பட்ணத்துல ஆட்டோ, ரிக்ஷா இதுமாதிரி எதாவது ஓட்றவங்களா இருந்தா அவங்களுக்குத்தான் பண்டிகையினே சொல்லலாம்.இன்னும் கேட்டா ஆம்பள புள்ளைங்க இல்லாத வீட்ல தீபாவளி மட்டுமில்ல எல்லா பண்டிகைகளுமே ஒரு சாபம் மாதிரிதான்.நல்ல நாளா இருந்தா என்சோட்டு புள்ளைகளாம் பஸ் ஸ்டாணெடுக்க் ஓடுவாங்க 

அமெரிக்காவில் 4 மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி .. ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகிய மாகாணங்கள்

thinanthanthi : பைசர் நிறுவனம், தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. 

வாஷிங்டன், உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது. தடுப்பூசி வருவது எப்போது என்பதுதான் அங்கு மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.       இந்த நிலையில் முன்னணி மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம், தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.      ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகியவைதான் அந்த 4 மாகாணங்கள் ஆகும்

இலங்கை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க அரசுதீர்மானம் .. மலையக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை


தினக்குரல் :பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்தராஜபக்ஷவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக  உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழி லாளர்களது சம்பளம்  தீர்மானிக்கப்பட்டு வரு கிறது.  இதனை வரவு செலவு திட்ட ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம்.. முதல் எதிர்ப்பு குரல் பத்ம சேஷாத்ரியில் இருந்து வருகிறது.

Muralidharan Pசமச்சீர் கல்வித் திட்டம் வந்த கதை:
ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு கல்வி என்று இருந்த கல்வியை மாற்றி அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தை உருவாக்கினார் முதல்வர் கலைஞர்.
படிக்கும் புத்தகத்தில், மதிப்பெண்களில், தேர்வு முறையில், திருத்தும் முறையில் ஏற்றத் தாழ்வு இருந்த தமிழகத்தில் அனைவருக்கும் ஒரே கல்வி முறையை அமுல்படுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் ஏதோ தருமபுரியில் சிற்றூரில் இருக்கும் மாணவர்களுக்கும் ஒரே சமமான பாடதிட்டம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது சற்று சிக்கலான நிலைதான்.
அதை செவ்வனே செய்தது சமச்சீர் கல்வித் திட்டம்.
எதிர்ப்பு வராமலா இருக்கும்?
வேறு வழியின்றி அனைத்து பள்ளிகளிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு கொடுக்கிறது.
2011ல் ஆட்சியை இழக்கிறது திமுக.
மீண்டும் அதிமுக ஆட்சி. முதல் எதிர்ப்பு குரல் பத்ம சேஷாத்ரி பள்ளியில் இருந்து வருகிறது.
நிபுணர் குழுவில் அந்த பள்ளியும் இருக்கிறதே? குரல் வராதா?
அம்மையார் ஆட்சிக்கு வந்த முதல் வேலையாய் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் ஆணை வருகிறது. 

ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?

madrasradicals.com : ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் எத்தியோப்பியா நாட்டின் ஒரு பகுதியான டிக்ரே(Tigray) மீது அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி இம்மாத தொடக்கத்தில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை ’டிக்ரே மக்கள் புரட்சிக் குழு’வினை (TPLF – Tigray People’s Liberation Force) ஒடுக்குவதற்காக தொடங்கப்பட்டது என்று பிரதமர் அபிய் அகமது தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையானது தற்போது எத்தியோப்பியா நாட்டில் பூதாகரமாக வெடித்து உள்நாட்டு இன யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த உள்நாட்டுப் போரின் வரலாற்று பின்புலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
  • எத்தியோப்பியா 55 நாடுகளின் கூட்டமைப்பான ஆப்ரிக்க யூனியனின் தலைமையகமாக இருந்து வருகிறது. இது ஆப்ரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்.
  • எத்தியோப்பியாவில் முடியாட்சி 1974 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் Derg எனும் தற்காலிக சோசலிச அரசு எத்தியோப்பியாவின் ஆட்சியைத் தொடர்ந்தது. அப்போது டிக்ரே பகுதியில் செயல்பட்டு வந்த மார்க்சிய அடிப்படையிலான புரட்சிக் குழுவானது டிக்ரே தேசிய இன மக்களுக்கு எத்தியோப்பிற்குள்ளாக உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோரியது. Derg ராணுவம் எத்தியோப்பியாவின் தேசிய இன சிக்கலையும் தீர்க்காது, சோசலிசப் புரட்சியையும் நடத்தாது என்று டிக்ரே புரட்சிக் குழு உறுதியாக நம்பியது.

ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து 2,500 ராணுவ வீரர்களை திரும்பப் பெற பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவு

dailythanthi.com ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து 2,500 ராணுவ வீரர்களை திரும்பப் பெற பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றனர். வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

NEET ஐத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வு


   M. K. Stalin : நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்-ஐத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருப்பது ஏன்? தனியான இடஒதுக்கீட்டு முறை எதற்கு? வெண்ணெய் ஒரு கண்ணில்; சுண்ணாம்பு மறு கண்ணிலா?
தமிழகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்!
மேலும்,  மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்இடஒதுக்கீடைப் போராடிப் பெற்றோம்.
அரசாணை வெளியிட்டு 10 நாட்கள் கடந்தும் கலந்தாய்வு நடத்தத் தாமதிப்பது யாருக்குப் பயந்து?
தமிழக இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் 50%-க்கான கலந்தாய்வை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக நடத்திட வேண்டும்!

செவ்வாய், 17 நவம்பர், 2020

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலித் தலைவர்களை தரையில் உட்கார வைத்தார்

Image may contain: ‎2 people, ‎text that says '‎மாடட் 0 கர மனற செயலானர் செல்வராஜ் ராஜபாளையம் முன்னாள் நகர்மற றுப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக சொந்தக் கட சிப் பொறுப்பாளர்களையே காலடிட அமரவைத்திருக்கும் ராஜேந்திரபாலாஜி. ராஜேந்திர அதிமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு கிடைக்கும் மரியாதை தவித் ராட்சித் தலைவளது டியலினத்தைச் சர்ந்த ஊராட்சி ஏர்ரவிபாசர் ஆதிக்கச் மோகன் ராஜ் S பணி செய்ய விட எமல் தடுப்பதாக கூறி உறுப்பினரே! தலித் ஊராட்சி தலைவி ராஜினாமா அறிவிப்பு 5276705 .හcබක්.බn பலح‎'‎‎
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலித் தலைவர்களை  தரையில்

 கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார். ஆனால், தற்பொழுது உள்ள அதிமுக ஆட்சியில்.... 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக காட்ச்சியின் சொந்த தலைவர்களையே தரையில் உட்க்கார்த்தி வைத்திருக்கிறார் . இதை எல்லாம் நடு நிலை முற்போக்காளர்கள் எந்த கேள்வியும் கேட்கவே மாட்டார்கள் .  

முற்போக்கு [போர்வையில்,   சமூக ஆர்வலர் போர்வையில் நிறைய ஆர் எஸ் எஸ் அடியாட்கள் உள்ளார்கள் போலும்  

ASEAN கூட்டமைப்பில் இருந்து இந்தியா விலகியது! குரங்கு கையில் பூமாலையாய் நாடு சிக்கி தவிக்குது!

ஜீர் லி : ASEAN எனப்படும் "தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில்..10 நாடுகள் இடம் பெற்று உள்ளன..புருனை..கம்போடியா.இந்தோனேசியா.லாவோஸ்.பிலிப்பின்ஸ்.மலேசியா.சிங்கப்பூர்.தாய்லாந்து.வியட்னாம்.மியான்மார்.ஆகியன.
இவ்வட்டார ஒத்துழைப்பு.. வர்த்தகம்.சுற்றுலா..பாதுகாப்பு..இப்படி அனைத்திலும் ஒற்றுமையாக வரி. சலுகையுடன் பரஸ்பர நாடுகளுக்குள் தடையற்ற. வர்த்தகம் நிலவுவதால் மக்கள்
பயணம் செய்வதிலும் ..கல்வி வேலை வாய்ப்பு பெறுவதிலும்
நல்ல வாய்ப்பு பெறுகின்றனர்.
சிங்கப்பூர் பிரதமராய் இருந்த காலன்சென்ற லீ குவான் யூ
இந்த நாடுகளில் இந்தியாவையும். சீனாவையும் இனைத்து பெரும் சக்தியாக்கி காட்ட நினைத்து. காலன்சென்ற நரசிம்மராவ் பிரதமராய் இருந்தபோது தன் இந்திய விஜயத்தில் இதுபற்றிய தன் என்னத்தை சொன்னார் திரு லீ. இதன் சாதகத்தையும் எதிர்காலத்தில் இந்திய மக்களின் நன்மை கருதியும்..ASEAN நாடுகளின் பங்காளி நாடுகளாக இந்தியாவும்..சீனாவும் சேர்ந்தது.நரசிம்மராவ் சிங்கப்பூர் வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதன் பின் இந்திய பொருட்கள் தாராளமாக இவ்வட்டாரத்துக்குள் விற்பனைக்கு வர ஆரம்பித்தது. ஹல்திராம் தொடங்கி. ஆச்சி மசாலா வரை கிடைற்றது. இந்த அமைப்பின்
வெற்றி.. ஆஸ்ட்ரேலியா..நியூஸிலாந்து   தென் கொரியா ஆகியவையும் சேர தூண்டி அவர்களும் பங்காளிகளாக இனைந்து
மிக சிறப்பாக வர்த்தகங்கள் மற்றும் பயணங்கள் சிறப்பாய் செயல் படுகிறது.

கவிஞர், நடிகர் சினேகன் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! எஸ்கேப் ஆக முயற்சி...வழக்கு பதிவு

Mari S  -tamil.filmibeat.com :   சென்னை: தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
கவிஞர், நடிகர், பிக் பாஸ் பிரபலம், மநீம இளைஞரணி செயலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சினேகன். 
கொசப்பட்டி அருகே 28 வயது இளைஞர் மீது சினேகன் ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. கட்டிப்பிடி வைத்தியர் கட்டிப்பிடி வைத்தியர் கவிஞராக ஏகப்பட்ட பாடல்களை எழுதி பிரபலமான சினேகன், நடிகர் அவதாரம் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களை அதிகளவில் கட்டிப் பிடித்து கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தார். கமல் கட்சியில் பொறுப்பு கமல் கட்சியில் பொறுப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சினேகன், 
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மநீம சார்பாக கடந்த ஆண்டு தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

திமுக கூட்டணி இறுதி தொகுதி பங்கீடு பட்டியல்... தி.மு.க. நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் -171, காங்கிரஸ்-27, ம.தி.மு.க.-6...

nakkaeeran தாமோதரன் பிரகாஷ் :  எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என திமுக சொல்லிவருகிறது.         அதற்கு ஏற்றார்போல் திமுக இந்தமுறை பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக்-ஐ களமிறக்கி, அனைத்து தேர்தல் பணி வீயூகங்களையும் தயார் செய்து வந்திருக்கிறது. அதேபோல் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் எனும் பட்டியலையும் தயார் செய்துள்ளது ஐபேக். 

 திமுக உட்பட கூட்டணி கட்சிகளின் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை கொடுத்துள்ளது. அதில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பதும், அதில் காங்கிரஸ் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடும் எனும் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ்-27, ம.தி.மு.க.-6, கம்யூனிஸ்ட்கள் தலா 6 மொத்தம்-12, விடுதலை சிறுத்தைகள்-6, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-3, இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்-3, இந்திய ஜனநாயக கட்சி-3, மனித நேய மக்கள் கட்சி-3 என கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தி.மு.க. நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் -171 என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக மதுரவாயல், ராயபுரம், நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம், வேடசந்தூர், திருச்சி (கிழக்கு), முசிறி, காட்டுமன்னார்கோவில், நன்னிலம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, முதுகுளத்தூர், வைகுண்டம், நாங்குநேரி, விளவங்கோடு, கிள்ளியூர், அம்பத்தூர், மதுரை, விளாத்திகுளம், வால்பாறை, ராதாபுரம், மைலாப்பூர், பூவிருந்தவல்லி மற்றும் திருமயம் என 27 இடங்களை ஐபேக் கொடுத்துள்ள பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளர் …உ.பி.யில் மீண்டும் மீண்டும்..

webdunia :சமீப காலமாக உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள பாண்டா மாவட்ட நீர்பாசனத்துறையில் பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த 10 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து வந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் ரகசியமாக எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளங்களுக்குய் விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கைவிடப்படுகிறதா ராமேஸ்வரம் தீவு?

hindutamil.in :புவி வெப்பமாதல், கடல் நீர்மட்டம் உயர்தல் போன்றவை அபாயகரமான பிரச்சினைகளாக மாறி, அடுத்து வரும் தலைமுறைகளின் வாழ்தல் குறித்த கேள்விக்குறியாகி, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கின்றன. ராமேஸ்வரம் பகுதியிலும் கடல் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வடகடல் கரைப் பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களைக் காணவில்லை. காரணம், கடல் மட்டம் உயர்ந்து நிலத்தை விழுங்கியிருக்கிறது. தீவின் வடபகுதியெங்கும் நிலத்தடி நீர் உப்பாகி, பக்தர்களுக்கான தீர்த்தங்களும் வற்றிவிட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் நீராதாரம் முற்றிலுமாக அழிந்து, வாழ்வதற்கே தகுதியற்றதாகத் தீவு மாறிவிடுமோ என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது!

news 7tamil : சம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருகிறது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 86 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.13 அடியை எட்டியுள்ளது. அதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2 ஆயிரத்து 889 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 68 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் நீர்தேக்கமானது 22 அடியை எட்டினால் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. மத்திய அரசு . RBI

 

maalaimalar :  மத்திய அரசு எடுத்த நடவடிக்கை அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியில் நஷ்டம் அதிகரித்து வருவதால் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வங்கியின் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இதன் அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

கேஷ்லெஸ் டிரான்சாக்‌ஷன் வந்தால் என்னாகும்? Digital Dictatorship

Shankar Ji : · கேஷ்லெஸ் டிரான்சாக்‌ஷன் வந்தால் என்னாகும்? முதல்ல தேன் தடவி எல்லாம் சுமுகமாத்தான் ஆரம்பிக்கும். அப்புறம், ஒவ்வொரு டிரான்சாக்சனுக்கும் ஸ்வைபிங் சார்ஜ், இண்டெர்நெட் சார்ஜ், ப்ரிண்டிங் சார்ஜ், ஹாண்ட்லிங் சார்ஜ், செஸ், சர்வீஸ் டாக்ஸ் மெசின்ல தேய்க்கறதுக்குத் தனியாவும், வாங்கற பொருள்ள இப்ப இருக்கற ஆயிரத்தெட்டு டாக்ஸும் தொடரும். 

அப்புறம் குறிப்பிட்ட வங்கிக் கார்ட குறிப்பிட்ட வங்கி மெசின்ல தேய்க்கலன்னா அதுக்கு தனி சர் சார்ஜ் போடப்படலாம். கார்டின் வருடாந்திர கட்டணங்கள் மூன்று மாதத்திற்கொருமுறை என்று மாற்றப்படலாம். கார்ட் ஸ்டேட்மெண்ட் தனிக் காசு. ஏடி எம்மில் பணம் எடுக்க வரைமுறை. காசாக டெப்பாசிட் பண்ணினால் பெனால்டி. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ டி எம்மிமில் மாதம் இருமுறை மட்டுமே காசோ, ஸ்டேட்மெண்ட்டோ பார்க்கமுடியும். வேறு வங்கியில் கார்டை நுழைத்தால் அபராதம்.

ஆன்லைனில் பணம் மாற்றக் கட்டணம், அதற்கும் பலப்பல வரிவிதிப்புகள், கட்டணங்கள்.   

சவுகார்பேட்டை அக்காள் கணவர், குடும்பத்தை கொன்றது ஏன்?.. கைலாஷ் பரபரப்பு வாக்குமூலம்

Vishnupriya R - tamil.oneindia.com: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான கைலாஷ் திடுக்கிடும் வாக்குமூலத்தை போலீஸாரிடம் அளித்துள்ளார். தனது சகோதரியின் கணவர், அவரது குடும்பம் என பாராமல் நெற்றி பொட்டில் சுட்டது ஏன் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர். 

தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷிற்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனே தப்பியோடிய கைலாஷ் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திமுக அணியில் தேமுதிகவுக்கு 8 சீட்? பீகார் எபெக்ட்டால் காங். கோட்டாவில் செம 'வெட்டு'

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த அணியில் இருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. இருந்தபோதும் அந்த கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும்; அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் குறைவான இடங்களையே ஒதுக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதையும் திமுக வலியுறுத்துகிறது. பீகார் தந்த பாடம்... கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தூக்கி கொடுத்துவிட்டு ஆட்சியை கோட்டைவிட்ட கதை இனியும் நடக்கக் கூடாது என்பதிலும் திமுக உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே திமுக அனுபவித்த துயரத்தை இப்போது பீகாரில்

வெற்றிக்கு அருகில் உள்ள தொகுதிகள் இதனால் காங்கிரஸுக்கு அதன் வெற்றி வாய்ப்பு ஏறத்தாழ உறுதி என்கிற தொகுதிகளை மட்டுமே கொடுப்பது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளை காங்கிரஸ் கடந்த காலங்களைப் போல கேட்டு வருகிறது. ஆனால் திமுகவோ இம்முறை நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளில் எதில் காங்கிரஸ் கண்டிப்பாக ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என அலசுகிறது. இதனடிப்படையில் நிலக்கோட்டையை மட்டும் கொடுத்தால் போதும் என நினைக்கிறது திமுக.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி - டொனால்ட் டிரம்ட் டுவீட்

  thinathanthi : வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய ஜோ பைடன் (77 வயது) அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பைடனின் வெற்றியை ஏற்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும், ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து தனது வெற்றியை திருடிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார். பல மாகாணங்களில் டிரம்ப் தரப்பில் கோர்ட்டுகளில் வழக்கு களும் தொடரப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் சொல்வதை அவரது தீவிர ஆதரவாளர்கள் அப்படியே நம்புகின்றனர். இதனால் அவருக்கு ஆதரவாக அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணிகளை நடத்திக்காட்டினர். இந்தநிலையில், தேர்தல் மோசடி மூலம் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் நேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந் நிலையில், தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். ஜார்ஜியாவில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கை போலியானது என டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! – அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

சென்னையில் கனமழை vikatan.com - துரைராஜ் குணசேகரன் - ராகேஷ் பெ : சென்னையில் கனமழை.சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரி திறந்துவிடப்பட்டால், சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இன்றளவும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு அத்தகையது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாகச் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி, தனது 24 அடியில், தற்போது 21 அடி வரை நிரம்பியுள்ளது. அதோடு, ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை எட்டா கனியாக்கும் மின் திருத்த சட்டம்!

aramonline.in  - பீட்டர் துரைராஜ்  : மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மின்சார திருத்தச் சட்டத்தால் இனி மின்சார கட்டணங்கள் தாறுமாறாக உயரவுள்ளன! ’’அப்படி உயர்த்தும் போது மானியம் தருவோம் கவலப்படாதீர்கள்’ ’என்கிறது அரசு! இப்படித்தான் சமையல் எரிவாயு  விலை  உயர்த்தபட்ட போது அதற்கான  மானியத்தை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்று சொல்லப்பட்டது. பிறகு  அப்படி செலுத்தி வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் ரூ.25 மட்டுமே! ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாம் தரும் பணம் ரூ.610.  இதே நிலை நாளை மின்கட்டண விவகாரத்திலும் நடக்கவுள்ளது.

திங்கள், 16 நவம்பர், 2020

கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளில் வாசன் ஐகேர் அருண் தற்கொலை??????/

 கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளில் வாசன் ஐகேர் அருண் தற்கொலை?


மின்னம்பலம்: தமிழகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற வாசன் ஐ கேர் நிறுவனத்தின் அதிபர் டாக்டர் அருண், இன்று (நவம்பர் 16) காலை திடீர் மரணமடைந்துவிட்டார்.    வாசன் ஐ கேர் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதற்கு காரணமாகக் கூறப்படும் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளான இன்று, அருண் மரணம் அடைந்திருப்பது தொழில் வட்டாரங்களைத் தாண்டி அரசியல், பொது வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை பரப்பியிருக்கிறது.    இன்று காலை அருணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் ஆனால் மருத்துவர்கள் சோதித்துவிட்டு, வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று சொன்னதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் வருகின்றன. ஆனபோதும் அருணின் உடல், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் போஸ்ட் மார்டத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. போஸ்டர் மார்ட்ட அறிக்கை வந்தபிறகே அருணின் மரணத்தின் காரணம் தெரியும் என்று சொல்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில். 

மீண்டும் தி.மு.க., அல்லது கலைஞர் தி.மு.க., ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை

dinamalar.com தி.மு.க.,வில், மீண்டும் சேரும் முயற்சியை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி துவக்கி உள்ளார். அது முடியாமல் போனால், இம்மாத இறுதியில், கலைஞர் தி.மு.க., என்ற கட்சியை துவங்க உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் தி.மு.க., அல்லது கலைஞர் தி.மு.க., ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை

வாழ்த்து தீபாவளி பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் அழகிரிக்கு, அவரது ஆதரவாளர்கள், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது, அழகிரியும் தன்னுடன் பேசியவர்களிடம், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து, கருத்துக்கள் கேட்டுள்ளார். பின், 'மீண்டும் கலந்து பேசி, அடுத்தகட்ட முடிவை அறிவிக்கலாம்' என்றும், அவர்களிடம் அழகிரி கூறி உள்ளார்.
இது குறித்து, அழகிரிஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:தி.மு.க.,வில், மீண்டும் இணைய வேண்டும் என்றே, பெரும்பான்மையான ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பொதுச் செயலர் துரைமுருகன் வாயிலாக பேச்சு நடத்த, அழகிரி முயற்சி எடுத்து உள்ளார். எங்களை சேர்க்க, ஸ்டாலின் மறுத்தால், இம்மாத இறுதியில், கலைஞர் தி.மு.க., என்ற கட்சியை துவக்கவும், அவர் முடிவு செய்துள்ளார்.

கலயாணம் மட்டும் பண்ணிக்க மாட்டியா" கத்தியை எடுத்து இளைஞரை சரமாரியாக குத்திய பெண்..

Youth stabbed by Knife a Widow in KodaikkanalHemavandhana -tamil.oneindia.com : திண்டுக்கல்: "அதுக்கு மட்டும் நான் வேணும்.. கலயாணம் மட்டும் பண்ணிக்க மாட்டியா" என்று கேட்டு  உறவில் ஈடுபட்ட 40 வயது பெண், இளைஞரை கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை தந்து வருகிறது. கொடைக்கானல் அருகே வசித்து வந்த பெண் பிரமிளா.. 40 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால் கணவனை இழந்தவர்.. அவர் இறந்து 6 வருஷமாகிற அதே கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்.. 24 வயதாகிறது.. 

டிரைவர் வேலை பார்க்கிறார்.. கொடைக்கானல் சுற்றுலா தளம் என்பதால்,சீசனுக்கு வண்டி ஓட்டுவார்.. பயணிகளுக்கு கைடு அதாவது வழிகாட்டியாகவும் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான், பிரமிளாவுக்கும், பிரதீப்புக்கும் நட்பி அறிமுகமானது. தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு பிரதீப்தான் நிறைய உதவிகளை செய்வார்.. கடைக்கு போவது, பேங்குக்கு போவது என சின்ன சின்ன உதவிகளை செய்து வரவும், அதுவே காதலாக மாறியது.. நெருக்கமாக பழகினர்.. ஒரே வீட்டில் பலமுறை ஜாலியாக இருந்தனர்.