கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள சேஷன் நவா
என்ற கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 70
பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மேற்படி குற்றங்களை நிரூபிக்க போதுமான
சாட்சியங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் அவர்கள் அனைவரும் இன்று
வழக்கில் இருந்து விடுவித்து பன்சகந்தா மாவட்ட நீதிமன்றம் இன்று
உத்தரவிட்டுள்ளது.
2-3-2002 அன்று ஏற்பட்ட இந்த கலவரத்தில் 14 முஸ்லிம்கள் பலியாகினர்.
கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
இந்துக்கள் 2 பேர் பலியாகினர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர்கள் 70 பேரும் கும்பலாகச் சென்று
தாக்குதலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்களை நிலைநிறுத்துவதில் போலீஸ் தரப்பு
தோல்வி அடைந்துள்ளது என்பதால் போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால்
அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என பனஸ்கந்தா மாவட்ட கூடுதல்
அமர்வு நீதிபதி வி.கே.புஜாரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.maalaimalar.com
சனி, 14 பிப்ரவரி, 2015
Tapsee: சினிமாவுக்கு வந்ததை எண்ணி வேதனைப்படுகிறேன்
ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி,
அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் தான் எதிர்ப்பார்த்த
வாய்ப்பு கிடைக்காமல் ஆந்திரா, கன்னடம் என்று இடம்பெயர்ந்தார். அங்கேயும்
அவருக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல், இரண்டாம் நாயகி உள்ளிட்ட
வாய்ப்புகளே கிடைத்தது.
சரியான வாய்ப்புகள் இன்றி தடுமாறும் டாப்ஸி, தனது சினிமா வாழ்க்கை குறித்து ரொம்பவே வேதனையுடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
இது
குறித்து பேட்டியில் கூறிய டாப்ஸி, “நான் அழகாக இருக்கிறேன். என்னிடம்
நடிப்பு திறமையும் இருக்கிறது. ஆனாலும் படங்கள் இல்லை. இது எனக்கு வேதனையை
தருகிறது. படித்துவிட்டு ஏதேனும் ஒரு பிசினஸ் செய்து தொழில் அதிபர் ஆக
வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். என் தலையெழுத்து நடிகையாகி விட்டேன்.
Apple Car ? ரகசியமாக மின்சார கார் தயாரிப்பில் ஆப்பிள் கம்யுட்டர்!
Apple Inc. is reportedly building a full-size passenger vehicle. The iPhone manufacturer has a top-secret Silicon Valley facility outside of its Cupertino headquarters where hundreds of employees are reportedly working on an electric vehicle.
Managers from Apple’s iPhone unit have been tasked to oversee the design, the Wall Street Journal reported Friday. The car runs solely on electric power, but currently has no plans for a “self-driving” or autonomous vehicle, the report said. The project is code-named "Titan". Rival Google Inc. has worked on a self-driving car which it says will hit the road in 2020.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை செய்து வருகின்றனர்.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை செய்து வருகின்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்களை நிறுத்த போவதாக மேனகா காந்தி அறிவிப்பு
தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி பிரச்சார குழு மாநில
நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்
நடந்தது.
மத்திய பா.ஜ.க. அரசின் வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தை கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மைக்கு எதிராகவும் – நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்றும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும் கடந்த 9.1.2015 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இக்கூட்டம் ஆதரிக்கிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவதும்–பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் சுயமாக எழுந்து நிற்பதை பொறுக்காத பாஜக ஒரு பொம்பளை ரவுடியை மந்திரியாக்கி தங்கள் அஜண்டாவை நிறைவேத்த துடிக்கிறார்கள்
மத்திய பா.ஜ.க. அரசின் வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தை கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மைக்கு எதிராகவும் – நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்றும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும் கடந்த 9.1.2015 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இக்கூட்டம் ஆதரிக்கிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவதும்–பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் சுயமாக எழுந்து நிற்பதை பொறுக்காத பாஜக ஒரு பொம்பளை ரவுடியை மந்திரியாக்கி தங்கள் அஜண்டாவை நிறைவேத்த துடிக்கிறார்கள்
மெரினாவில் முத்த மழை! கலாசார காவலர்களை ஓட விரட்டிய காதலர் தினம்
மெரினா கடற்கரையில் இன்று திரண்ட காதல்
ஜோடிகள் முத்த மழை பொழிந்து காதலர் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெரினாவில் இன்று பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்த காதல்
ஜோடிகளின் உரையாடல் இது.
பெண்: எனக்கு என்னடா வாங்கி வந்த?
ஆண் : முதலில் நீ என்ன வாங்கி வந்தன்னு சொல்லு? உடனே அந்த பெண் தான் ஆசையாக வாங்கி வந்த காதல் ஜோடி முத்தமிடும் பொம்மையை காட்டினார். உடனே காதலன் ஆவேசமாகி, நான் இதனை கேட்கவில்லை வேற என்ன இருக்கு... என்று கேட்டுக் கொண்டு கையால் சிக்னல் காட்டுகிறார். அடுத்த நொடியே ஈருடல் ஒருடலாகி இருவரும் முத்தமழை பொழிந்தனர்.
பெண்: எனக்கு என்னடா வாங்கி வந்த?
ஆண் : முதலில் நீ என்ன வாங்கி வந்தன்னு சொல்லு? உடனே அந்த பெண் தான் ஆசையாக வாங்கி வந்த காதல் ஜோடி முத்தமிடும் பொம்மையை காட்டினார். உடனே காதலன் ஆவேசமாகி, நான் இதனை கேட்கவில்லை வேற என்ன இருக்கு... என்று கேட்டுக் கொண்டு கையால் சிக்னல் காட்டுகிறார். அடுத்த நொடியே ஈருடல் ஒருடலாகி இருவரும் முத்தமழை பொழிந்தனர்.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு மத்திய பிரதேஷ் வோராவை எப்படி அறங்காவலராக்கலாம்?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளைக்கு மத்திய
பிரதேசத்தைச் சேர்ந்த மோதிலால் வோராவை சோனியா காந்தி நியமித்துள்ளதற்கு
தமிழக காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
1954ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
காமராஜர் காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வாங்கப்பட்ட சொத்துக்களை
நிர்வகிப்பது இந்த அறக்கட்டளையின் பணி.
சென்னை தேனாம்பேட்டையில் 181 கிரவுண்ட் நிலப்பரப்பு கொண்ட காங்கிரஸ்
மைதானம், ராயப்பேட்டையில் 20 கிரவுண்ட் நிலப்பரப்பில் இருக்கும்
சத்தியமூர்த்திபவன் ஆகிய சொத்துக்கள் இதில் அடங்கும்.
இந்த சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக ஜி.கே. வாசன்,
ஜெயந்தி நடராஜன், யசோதா, சுதர்சன் நாச்சியப்பன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரசை விட்டு
வெளியேறியதால் அவர்களுக்கு பதில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, ராஜாஜியின்
பேரன் சி.ஆர்.கேசவன் ஆகியோரை புதிய அறங்காவலர்களாக நியமித்து காங்கிரஸ்
தலைவர் சோனியா அறிவித்தார்.
காதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்? கலாசார காட்டு மிராண்டிகளே காதலினால் மானுடர்க்கு கவலை தீரும்`
கலாச்சாரக் காவலர்களுக்குப் பிரச்சினை அந்நிய கலாச்சாரமா அல்லது காதலா?
சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள், மற்றவர்கள் சாதாரண முழுக்கால் சட்டை.
கையிலோ சட்டைப் பையிலோ மேலைநாட்டு அறிவியலின் இறக்குமதியான செல்ஃபோன்,
ஒருவர்கூட மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய உடையை அணிந்திருக்க வில்லை. 2013-ல்
காதலர் தினத்தன்று இளம் காதலர்களை அடித்தும் உதைத்தும் துரத்துகிறார்கள்.
அந்தப் படையில், இல்லையில்லை சேனையில், பெண்களும் அடக்கம். அந்த சேனையின்
ஆண்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் பெண்கள் மீது கை வைக்க மாட்டார்கள். ஆகவே,
பெண்களைப் பெண்களே ‘கவனித்து’க்கொள்கிறார்கள். பெண்களின் கன்னத்தில் அறை
மேல் அறை கொடுத்துத் துரத்துகிறார்கள். கவனிக்க, சேனையின் வீராங்கனை களில்
அநேகமாக யாரும் சேலை உடுத்தியிருக்க வில்லை. நம்புங்கள், இவர்கள்தான் நமது
இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர்கள்!
யார் இந்த Brooke Axtell ?‘எல்லாப் பெண்களையும் போல பிடித்த பையனை உருகி உருகிக் காதலித்தேன்
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல் நகரில் நடந்த, இசையின் உச்சகட்ட
அங்கீகாரமான ‘கிராமி விருதுகள்’ வழங்கும் விழாவின் ஹைலைட்,
நெகிழ்ச்சியூட்டும் ப்ரூக் அக்ஸ்டெல்லின்(Brooke Axtell) பேச்சு.
யார் இந்த ப்ரூக்?! ஒரு வரியில் சொன்னால், குடும்ப
வன்முறையிலிருந்து மீண்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முழுநேரம் உழைத்துக்
கொண்டிருக்கும் அமெரிக்கப் பெண். அதுக்கும் மேலே... அழகான அரங்கக் கலைஞர்;
அமெரிக்காவின் இளங்கவிஞரும் கூட! முழு நீளமாய் தெரிந்து கொள்ள, நீங்களும்
அவரின் பேச்சைக் கேளுங்கள்!
எல்லாப் பெண்களையும் போல மனதுக்குப் பிடித்த பையனை
உருகி உருகிக் காதலித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவனே என்னை அடித்துத்
துன்புறுத்தினான். அன்பின் மிகுதியால், உளவியல் ரீதியாக அவனுக்கு ஏதோ
பிரச்னை இருக்குமோ என்று, உதவ நினைத்தேன். அவன் மேல் நான் பொழிந்த அன்பை,
அப்போதும் எனக்கு எதிராகவே செயல்படுத்தினான்.
யானையின் பிடியில் இருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்
யானை தும்பிக்கையில் சிக்கிய விவசாயியை போராடி காப்பாற்றிய நாய்
கர்நாடகா, ராம்நகர் மாவட்டம், மாகடியின் சாவனதுர்கா வனப்பகுதியை ஒட்டியுள்ள, அடகமாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி நரசிம்மய்யா, ஹனுமந்தய்யா, நரசய்யா; விவசாயிகள்.
அதே கிராமத்தில் கேழ்வரகு வயலில், நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்; உடன், அவர்களின் நாயும் இருந்தது. நள்ளிரவில், கூட்டமாக யானைகள் அப்பகுதிக்கு வந்தன. இதை பார்த்த நாய், குரைக்கத் துவங்கியது. சத்தம் கேட்டு விழித்த விவசாயிகள், மிரண்டு ஓடத் துவங்கினர். வயது முதிர்வால் ஓட முடியாமல் தவித்த நரசிம்மய்யா, யானை தும்பிக்கையில் சிக்கிக் கொண்டார்.
யானைப் பிடியில், விவசாயி சிக்கியதும் ஆவேசம் அடைந்த நாய், குரைத்தபடி யானைகளை மறித்தது; நரசய்யாவை பிடித்திருந்த யானையின் காலை கடித்து மறித்தது; மிரண்ட யானை, நரசிம்மய்யாவை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது.nakkheeran.in
வெள்ளி, 13 பிப்ரவரி, 2015
காதலர் தின ரோஜாப்பூக்கள் விற்பனை ஜோர் ! நாளை வாலண்டையின் டே கொண்டாட்டம் இன்றே குதுகலம் ஆரம்பம்?
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோயம்பேடு
மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன. 20 பூ
அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காதலர் தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் காதலர்கள் மத்தியில் பாதிரியார் வாலண்டைனுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
காதலர்கள் தினத்தில் காதலர்கள் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வதற்காக பல்வேறு விதமான பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜாப்பூ.
20 பூ ரூ.160–க்கு விற்பனை அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் கடந்த 2 நாட்களாக குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
காதலர் தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் காதலர்கள் மத்தியில் பாதிரியார் வாலண்டைனுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
காதலர்கள் தினத்தில் காதலர்கள் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வதற்காக பல்வேறு விதமான பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜாப்பூ.
20 பூ ரூ.160–க்கு விற்பனை அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் கடந்த 2 நாட்களாக குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர்
சட்டக்கல்லூரி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் பணியால் விரிசல் அடைந்தது.
இதையடுத்து கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், கல்லூரியை
வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவும் அரசு முடிவு செய்ததாக தெரிகிறது.இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த
3–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.சட்டக்கல்லூரி மாணவர்களின்
போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளும்
ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த
10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று
அறிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து போராட்டத்த வாபஸ்
பெறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். dailythanthi.com
12 B இயக்குனர் ஜீவாவை மறக்க முடியுமா ?நடிகர் ஷாம் : சினிமா என்பது இயக்குநரின் மீடியம்தான்.
சென்னை,பிப்.13 (டி.என்.எஸ்) பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘12பி’
படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஷாம் , தற்போது
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு’ படத்தில்
நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படமும் ஷாமின் 25வது படமாகும். இப்படம்
குறித்து அவரிடம் பேசுகையில் உற்சாகமாக நம்மிடம் பேச தொடங்கிய ஷாம்
இடையில்,சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜீவாவின் மறைவையும் நினைத்து
கண்ணீர் சிந்தினார்.
ஷாம் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டது இதோ,
உங்களின் 25வது படம் வரை வந்து விட்டீர்கள்.என்ன உணர்கிறீர்கள் இப்போது?
ஷாம் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டது இதோ,
உங்களின் 25வது படம் வரை வந்து விட்டீர்கள்.என்ன உணர்கிறீர்கள் இப்போது?
பீகார் ராஜஸ்தானிலும் நிச்சயமான தோல்வியை நோக்கி பாஜக! After shock of Aam aadhmi ?
புதுடெல்லி:
தொடர் வெற்றியை சுவைத்த பாஜ, டெல்லியில் படுதோல்வி அடைந்ததையடுத்து, அதன்
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள
பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரையேறுமா என்ற சந்தேகம் அதன்
தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில்,
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக
வெற்றிபெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜ 3 இடங்களை மட்டுமே
பிடித்தது. கடந்தமுறை 31 இடங்களில் வென்ற அக்கட்சி இந்தமுறை ஒற்றை இலக்காக
சுருங்கி விட்டது.ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்தது. உஷாரான பாஜ முழுவீச்சாக
களம் இறங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா
மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. டெல்லியில் பாஜவை
மக்கள் புறக்கணித்து விட்டனர்.
அக்ஷய ட்ரஸ்டின் சுவர் ஏறி குதித்து நிர்வாணமாக ஒரு பெண் ஓடிவந்தார்!
ஐந்து நட்சத்திர விடுதிகளில் சமல் புரிந்து விட்டு பின்னர், வீதியில் உணவு இல்லாமல் தவித்தவர்களை கண்டு அவர்களுக்கு உணவு போடுவதே எனது முதல் நோக்கம் என்று புறப்பட்டவர், நாராயணன் கிருஷ்ணன். ஒரு முதியவர் உணவின்றி தாது கழிவையே சாப்பிடும் புகைப்படத்தை காட்டி, அனைவரையும் அழ வைத்த இவர் சி.என்.என் நடத்திய "ஹீரோ" போட்டியிலும் கலந்துகொண்டார். இவர் ஒரு இந்தியர் மிகவும் நல்லவர் என்று மக்கள் கருதி இவருக்கு வாக்களித்தார்கள் இதனால் கிருஷ்ணன் அதில் வென்று சி.என்.என் ஹீரோ ஆனால். இவரால் அக்சயா என்னும் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. . இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண்.
அமெரிக்க போலீஸின் காட்டு மிராண்டித்தனம் ! இந்திய வயோதிபர் மீது இனவெறி தாக்குதல்?
வாஷிங்டன்: அமெரிக்காவில், அப்பாவி இந்தியர் ஒருவர், போலீஸ் தாக்குதலில்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாய் படேல், 57. இவர், இருவாரங்களுக்கு
முன், அலபாமா மாகாணம், ஹன்ஸ்வில்லி நகரில் வசிக்கும் தன் மகன் சிராக் படேல்
வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், வீட்டருகே நடைபயிற்சியில்
ஈடுபட்டிருந்த போது, அவரை போலீசார் மடக்கி விசாரித்துள்ளனர். ஆங்கிலம்
தெரியாத படேல், திக்கித் திணறி, இந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
ஆனால், போலீசார், குற்றவாளியை பிடிப்பது போல், திடீரென்று படேல் மேல்
பாய்ந்து, அவரது கையை பின்பக்கம் மடக்கி, தரையில் குப்புறப் போட்டு
அமுக்கியுள்ளனர். இதனால் ரத்த காயத்துடன், முதுகுத் தண்டின் ஒரு பகுதி
செயலிழந்து மீண்டும் நிமிர முடியாத பரிதாப நிலைக்கு படேல் ஆளானார். அமேரிக்கா மாப்பிளைக்கு மட்டுமே பொண்ண கொடுப்பேன்னு அடம் புடிக்குற
மாமனார்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. நீங்க பொண்ண கொடுத்துட்டு அதையே சாக்கா
வெச்சு அமேரிக்கா சுத்தி பாக்கலாம்ன்னு நினைச்சா
வியாழன், 12 பிப்ரவரி, 2015
ஆம் ஆத்மியை ஓஹோ என்று புகழும் கார்த்தி சிதம்பரம் அங்கு சேர்ந்து கொள்ளலாமே? இளங்கோவன்
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குப் பிறகு கார்த்தி ப. சிதம்பரம் தனது டுவிட்டரில், “நமக்கு நம்பகமான தலைவர் தேவை மற்றும் பல படிப்பினைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இளங்கோவன், “காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளில் கெஜ்ரிவாலைப் போன்ற ஒரு தலைவரை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக ஆம் ஆத்மி அனுமதித்தால் அக்கட்சியில் சேர்ந்து கொள்வதே நல்லது” என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தன் ஆதரவாளர்களுடன் நடந்த சந்திப்பில் மோடியை புகழ்ந்து பேசிய விவகாரத்தில் கார்த்தி ப. சிதம்பரத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் நினைவுகூரத்தக்கது.nakkheeran.in
ஒபாமாவால்தான் டெல்லியில் பாஜக தோற்றது?அவா வேற என்னத்தை சொல்றது?
இப்டி இருக்குமோ? ஆங்… அப்டி இருக்குமோ?
நிலைகுலைந்திருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும் பாஜகவினரை. டெல்லி பாஜக
தலைவரான சதீஷ் உபாத்யாயவின் பேட்டி ஒரு சோறு பதம். “உண்மையிலேயே இது பெரிய
தோல்வி. உண்மையிலேயே நாங்கள் துளியும் எதிர்பாராத முடிவு இது. தோல்வியை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நாங்கள் அனைவருமே தேர்தல் முடிவைப் பார்த்து
அதிர்ச்சியில் உறைந்திருக்கிறோம். மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்,
இதைச் சொல்லக்கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை.”
ஆஆக டெல்லியைக் கைப்பற்றிவிடும் என்பதை முன்னரே யூகித்துவிட்டாலும்,
இவ்வளவு பெரிய பின்னடைவை பாஜக எதிர்பார்க்கவில்லை. என்ன காரணம் என்று
ஆராய்வதுதான் அடுத்தகட்டமாக கட்சியைத் தூக்கி நிறுத்த உதவும் என்று மோடி
சொல்லிவிட்டதால், இரண்டு நாட்களாக விடுதியில் அறை போட்டு யோசிக்காத
குறையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள்.
டெல்லி பாஜக தோல்விக்கு யாராவது ஒபாமாவைக் காரணமாகச் சொன்னால்
எப்படியிருக்கும்? நம்புவது சிரமம்தான். ஆனால், பாஜகவினரே
அப்படியெல்லாம்கூட யோசிக்கிறார்கள்.
இந்தியா வந்திருந்த ஒபாமா, தொடர்ந்து இந்தியாவின் மதச்சார்பின்மை
தொடர்பாகப் பேசியது, இது தொடர்பான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பாஜக அரசு
ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்தே இங்கொன்றும் அங்கொன்றுமாக, இந்துத்துவ
நடவடிக்கைகள் பரவ ஆரம்பித்தன.
எனினும், அவை பெரும் கவனம் பெற ஆரம்பித்தது ஒபாமாவின் பேச்சுக்குப் பின்தான்.
தஸ்லிமா : அரசையும் மதத்தையும் பிரித்த கேஜிரிவாலுக்கு நன்றி
மதவாத சக்திகளின் ஆதரவை நிராகரித்ததற்காக கேஜ்ரிவாலை பாராட்டியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு அர்விந்த் கேஜ்ரிவாலை
வாழ்த்தியுள்ள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்திய பாரம்பரியத்தின்
அடையாளமான மத சார்பற்ற அரசியலுக்கு ஆம் ஆத்மி தலைவர் புதிய போக்கை
ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "இந்திய
அரசியல்வாதிகள் அர்விந்த் கேஜ்ரிவாலிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள
வேண்டும். சையது அகமது புஹாரி, டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் ஷாஹி போன்ற
மதத் தலைவர்கள் ஆதரவை முற்றிலும் புறக்கணித்துவிட்டு நடுநிலையாக நின்று
தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அர்விந்திடம் கற்றுக்கொள்ள
வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
CNN IBN -னை தொடர்ந்து NDTV யையும் 'வசப்படுத்தியது' ரிலையன்ஸ்? Where is Anti Monopoly Law?
ஈ நாடு. சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி குழுமங்களைத் தொடர்ந்து
என்.டி.டி.வி. தொலைக்காட்சியையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்
வசப்படுத்தியிருப்பது நியூஸ் லாண்ட்ரி என்ற இணையத்தளம் மூலம்
தெரியவந்துள்ளது.
ஜவுளித்துறையில் தொடங்கி செல்போன், சில்லறை காய்கறி கடைகள், பெட்ரோல்
நிறுவனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் என சகல துறைகளிலும் சகட்டுமேனிக்கு
கால்பதித்துக் கிடந்த ரிலையன்ஸ் குழுமம், ஊடகத்துறையையும் தன்வசப்படுத்தும்
கோதாவில் குதிக்கத் தொடங்கியது.
முதல் கட்டமாக 2012ஆம் ஆண்டு சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சியை நடத்தும்
நெட்வொர்க் 18 நிறுவனம் மூலமாக தெலுங்கின் முன்னணி நாளிதழான ஈ நாடு
நிறுவனத்தின் 12 மொழிகளின் தொலைக்காட்சி சேனல்களை ரூ2100 கோடிக்கு
வாங்கியது ரிலையன்ஸ்.
புதன், 11 பிப்ரவரி, 2015
கோலி படத்தை டவுன்லோடு செய்தால் உங்கள் வங்கி பணம் குறையும்: அதிர்ச்சி தகவ
கிரிக்கெட் சீசன் தொடங்கினாலே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் " டாக் " தங்கள் அபிமான வீரர்களைப் பற்றிதான் இருக்கும்.
பவானி சிங்கை நீக்கக் கோரிய க.அன்பழகன் மனு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு
அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று கோரும் திமுக பொதுச்
செயலர் க.அன்பழகனின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று
(புதன்கிழமை) உத்தரவிட்டது.
சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி
திமுக சார்பில் க.அன்பழகன் செய்திருந்த மனு மீதான உத்தரவை கர்நாடக உயர்
நீதிமன்ற நீதிபதிகள் என்.குமார் மற்றும் பி. வீரப்பா ஆகியோர் அடங்கிய
அமர்வு பிறப்பித்தது.
வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்!
புதிதாக வெள்ளை அடித்த சுவருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்னொரு ஜென்மம் வைரமுத்து.
சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும்
வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம். பதிலுக்கு
வைரமுத்து “குமுதம் கோட்டைக்குள் ஒரு ஊழியன் நுழைவதற்குப் பெருந்தகுதி
வேண்டும்” என்று குமுதம் குடும்பவிழாவில் தனது தகுதியை காண்பித்தார்.
நடுப்பக்கத்தில் ஏதாவது ஒரு நடிகையின் தொப்புளைக்காட்டி காசு சம்பாதிக்கும்
பயலுக்கு என்னடா தகுதி? என்று வாசலில் நிற்கும் வாட்ச்மேன் கேட்கவா
போகிறார்! தமிழ் ‘சொரியும்’ வைரமுத்து தாராளமாய் அவிழ்த்து விடலாம்தான்!
சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம்.
இந்திய ஜனநாயக வரலாற்றில் நிச்சயம் இது ஒரு மைல்கல்! ஆம் ஆத்மி வெற்றிக்கு கலைஞர் வாழ்த்து!
டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கும்,
அதன் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் தி.மு.க. தலைவர்
கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் டிவிட்டர் அக்கவுண்டை 'மென்சன்' செய்து கருணாநிதி
தனது டிவிட்டர் தளத்தில் வாழ்த்து செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கருணாநிதி கூறியுள்ளதாவது: டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றுள்ள இந்த
மிகப்பெரும் வெற்றிக்காக திமுக சார்பில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஜனநாயக மற்றும் தேர்தல் வரலாற்றில் இந்த வெற்றி பெரும் மைல்கல்
ஆகும். இந்த நாட்டின் மக்கள், எப்போதுமே மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின்
பக்கமே இருப்பார்கள் என்பதை உங்களது வெற்றி சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபித்து காண்பித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட
காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
மக்களின் மன நிலையை புரிந்து கொண்ட மத்திய அரசு, தனது நிர்வாக உதவிகள்
அனைத்தையும் உங்களுக்கு செய்து தரும். இவ்வாறு கருணாநிதி தனது வாழ்த்து
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
tamil.oneindia.com/
மோடியை மட்டுமல்ல ஜெயாவையும் பயமுறுத்தும் ஆம் ஆத்மியின் வெற்றி!
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்,
இந்த தேர்தல் முடிவு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி
பெற்று உள்ளது. தேர்தல் முடிவு கருத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்
கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லி வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில் தான்
தமிழக வாக்காளர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும்
ஊழல்களால் மனம் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த
துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்
தமிழக சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
டெல்லி தேர்தல்: மாற்றத்தை விரும்பும் மக்களின் வெற்றி ! மக்களை யாரும் அதிகம் .....
இது ஒரு தேவதைக் கதை! அர்விந்த் கேஜ்ரிவால் என்கிற இளவரசனின் கதை. இந்திரப்
பிரஸ்தத்தின் இளவரசியை மணம் முடிப்பதற்கான கதையின் முடிவு சுபமாகவே
ஆகியிருக்கிறது. மோதல், காதல், ஊடல் என ஓராண்டுக் காலம் நடந்த நாடகம்
முடிந்துவிட்டது. டெல்லி சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை காணாத வெற்றியை
மஃப்ளர் மனிதர் பெற்றிருக்கிறார். 70-ல் 67 இடங்களைக் கவர்ந்து ஆஆக வெற்றி
பெற்றிருக்கிறது. ஆஆக-வே எதிர்பாராத பெரும் வெற்றி இது. சரி,
வெற்றியாளர்களைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்வோம். முதலில் தோல்வியாளர்களைப்
பற்றிப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கேஜ்ரிவாலுக்கு என்றால், மிகப் பெரிய
தோல்வி யாருக்கு? தேர்ந்தெடுங்கள்: 1. நரேந்திர மோடி, 2. அமித் ஷா, 3.
கிரண் பேடி, 4. ராகுல் காந்தி.
விடை: மேற்கண்ட யாருமில்லை.
அப்போது யார்தான் நெ.1 தோல்வியாளர்? சந்தேகமேயில்லை திருவாளர் நோட்டாதான்.
ஐ எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் 1½ ஆண்டாக பணயக்கைதியாக இருந்த அமெரிக்க பெண் கொலை
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் கய்லா ஜீன் மியல்லர் (வயது
26). பெற்றோருக்கு ஒரே மகளான இவர், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்தார். சிரியா நாட்டில் பணியாற்றி
வந்தபோது, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால்
கடத்தப்பட்டார். அப்போதிருந்து அவர் தீவிரவாதிகளிடம் பணயக்கைதியாக இருந்து
வந்தார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனது பெற்றோருக்கு கடிதம் எழுதினார். அதைத்தவிர,
அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
இதற்கிடையே, சிரியா நாட்டில் ஜோர்டான் நடத்திய விமான தாக்குதலில் கய்லா
பலியாகி விட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று உறுதிப்படுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘கய்லா கடத்தப்பட்டது மற்றும் மரணத்துக்கு காரணமான
தீவிரவாதிகளை கண்டுபிடித்து, நீதியின் முன்பு நிறுத்துவோம். அதற்கு
எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு பிரச்சினையே அல்ல’ என்றார். மாலைமலர்.com
ஸ்ரீரங்கத்தின் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் நியமனம்! பணப்பட்டுவாடாதான் முடிஞ்சு போச்சே?
ஸ்ரீரங்கத்தின் வருவாய் கோட்டாட்சியர் வி.மனோகரன் மீது தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் எம்.பி. கனிமொழி, டெல்லியில்
புகார் ஒன்றை கொடுத்தார். அவர், ஆளும் கட்சிக்காரர் போல் செயல்படுவதாக அதில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து
அவரது இடத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து நேற்றிரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதில், வி.மனோகரனுக்கு
பதிலாக, சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) டி.ஜி.வினய், ஸ்ரீரங்கம் துணை கலெக்டராக
இடமாற்றம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது maalaimalar.com
வேடந்தாங்கலுக்கு அதிர்ச்சி ! பறவைகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது!
மழை பொய்த்துப் போனதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலுக்கு ஒவ்வோர் ஆண்டும் வேடந்தாங்கலுக்கு குறைந்தது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1,531 பறவைகளே வந்துள்ளன. இது வன ஆர்வலர்கள், அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச் சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் 30 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலுக்கு ஒவ்வோர் ஆண்டும் வேடந்தாங்கலுக்கு குறைந்தது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1,531 பறவைகளே வந்துள்ளன. இது வன ஆர்வலர்கள், அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச் சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் 30 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.
Jeyamohan :இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப்பேசும் ஆற்றல் எனக்கு இல்லை. எந்த நாளிதழுக்கும் இல்லை. இந்திய அரசுக்கே இல்லை.அப்புறமென்ன? கருத்துச்சுதந்திரம் எவருக்கு?
ஜெ,இச்ச்செய்தியைப் பாருங்கள்.
தமிழகத்தில்
கருத்துச் சுதந்திரம் பேசும் முற்போக்காளர்களில் எவரேனும், ஒரே
ஒருவரேனும், இந்த பெண்மணிக்காக பேசினால் உண்மையிலேயே அவர்களிடம் அடிப்படை
நேர்மை உண்டு என நம்புவேன். ஜனாப் அ.மார்க்ஸோ அப்துல் ஹமீது
மனுஷ்யபுத்திரனோ பேசமாட்டார்கள். மற்றவர்கள் ஒருவராவது பேசினால் நல்லது.
சொல்லுங்கள். அதன்பிறகு கருத்துச்சுதந்திரம் பற்றிப்பேசுவோம்இந்தப் பெண்மணி வேண்டுமென்றே ஏதும் செய்யவில்லை. எழுதவில்லை. அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அந்தச்செய்தியில் இணையத்தில் இருந்த ஒரு படம் இடம்பெற்றது. அந்தப்படத்தில் இருந்தவர் கையில் சார்லி ஹெப்டோ இதழின் படம் இருந்தது
அதற்காக அந்த இதழே மூடப்பட்டது. இதழ் உரிமையாளர் மன்னிப்பு கோரினார். அந்த ஆசிரியரே அந்த இதழிலேயே மன்னிப்பு கோரினார். எல்லா முஸ்லீம் அமைப்புகளுக்கும் மன்னிப்பு கோரி கடிதம் போட்டார். ஆனால் ‘மன்னிப்பு அளிக்கமாட்டோம்’ என்று அவருக்கு எதிர்ப்பாளர்கள் அறிவிதார்கள்
தமிழக காங்கிரசின் 10ஆயிரம் கோடி சொத்தை கைப்பற்ற டில்லியில் (சதி) ஆலோசனை!
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக நிறைய சொத்துகள் உள்ளன.
சென்னையில், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள, சத்தியமூர்த்தி
பவன், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம், அதையொட்டியுள்ள மைதானம்
உட்பட, மாநிலம் முழுவதும் இக்கட்சிக்கென, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்
சொத்துகள் உள்ளன.
இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய்
மட்டும், வங்கியில் 52 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இந்த சொத்துகளை
பராமரிக்கவும், நிர்வகிக்கவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை
உள்ளது. இதில், ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். தமிழக
காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வருகிறாரோ, அவரும் இதில் ஒரு
உறுப்பினராக இடம் பெறுவார். அந்த வகையில், இளங்கோவனும் டிரஸ்டில்
இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்ட
உறுப்பினர்கள் என்ற முறையில், யசோதா, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மட்டுமே
தொடர்கின்றனர்.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015
சீமானின் புதிய அரோகரா முன்னணி ! கோவிலை பிடிக்காமல் ஆச்சியை பிடிக்க முடியாதாம் !

(இந்தப் பண்பாட்டுப் புரட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஏற்கனவே செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, அலகு குத்தி, நெருப்பு மிதித்துக் காவடி எடுக்கும் பெரும் புரட்சியாளர்களாகவும் அவர்கள் உள்ளனர்).இது குறித்து, 'தி இந்து' 08.02.15 ஆம் நாளிட்ட தமிழ் நாளேட்டில் 'இயக்குனர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்' என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அரசியலல்ல இந்த மாதிரி கேசுங்க இருந்தாதாய்ன் ஒரு என்டேர்டேயின்மென்ட் இருக்கும் . ஏற்கனவே வைகோ ராஜேந்தர் மணியரசன் நெடுமா வரிசையில் இந்த ஆளும் இருந்துவிட்டு போகட்டும்! கோமாளிகளின் கும்மாளமும் தேவைதானே ?
சர்வதேச பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்ற ஆம் ஆத்மி வெற்றி !
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள இமாலய வெற்றியை சர்வதேச ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
மத்தியில் ஆட்சி அமைத்த ஓராண்டுக்குள் பா.ஜ.க. சந்தித்துள்ள இந்த
தோல்வியையும், அக்கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி அடைந்துள்ள அபார வெற்றியையும்
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ’சிறிய அரசியல் பூகம்பம்’ என வர்ணித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான சராசரி மனிதனால் பா.ஜ.க. சந்தித்துள்ள அதிர்ச்சி தோல்வி இது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது மரண அடி ! நிச்சயம் நாடு முழுவதும் இந்த அடி தொடரும்! வீரமணி!
டெல்லி தேர்தல் முடிவு: மதவாத பிஜேபிக்கு மரண அடி: இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கம்: கி.வீரமணி
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து வருமாறு:
மத்தியில் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடக்கும் பா.ஜ.க. ஆட்சியை கடந்த எட்டு மாதங்களுக்குமுன் வளர்ச்சி என்ற மயக்கப் பேச்சினாலும், காங்கிரஸ் ஆட்சியின்மீது ஏற்பட்ட கோபத்தாலும், பா.ஜ.க. மோடிக்குக் கிடைத்த வெற்றி என்பது நிலையானதா? அல்லது தற்காலிக வித்தைகளின் விளைவா? என்பதுபற்றி ஆராய்ந்து எடை போட்டுச் சொல்லும் மக்கள் -
வாக்காளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அளித்த சரியான தீர்ப்பு என்பதுதான் உண்மை! எனவே, உலகமே தலைநகர் டில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் மோடி அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரத்தை செய்து பார்த்தும், அவரது நண்பர் அமித்ஷா வித்தைகளைக் காட்டியும் விடியற்காலை மூன்று மணி வரை விழித்து வேலை செய்தும், கிரண்பேடி என்ற மாற்றுக் கட்சி முன்னாள் அய்.பி.எஸ். பெண் அதிகாரிக்கு பா.ஜ.க.வில் ‘ஞானஸ்நானம்’ கொடுத்து, உடனேயே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்த நிலையிலும், எதுவும் டில்லியில் எடுபடவில்லை.
வாக்காளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அளித்த சரியான தீர்ப்பு என்பதுதான் உண்மை! எனவே, உலகமே தலைநகர் டில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் மோடி அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரத்தை செய்து பார்த்தும், அவரது நண்பர் அமித்ஷா வித்தைகளைக் காட்டியும் விடியற்காலை மூன்று மணி வரை விழித்து வேலை செய்தும், கிரண்பேடி என்ற மாற்றுக் கட்சி முன்னாள் அய்.பி.எஸ். பெண் அதிகாரிக்கு பா.ஜ.க.வில் ‘ஞானஸ்நானம்’ கொடுத்து, உடனேயே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்த நிலையிலும், எதுவும் டில்லியில் எடுபடவில்லை.
2 ஜி வழக்கில் ஊதிபெருக்கிய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் பம்மி பதுங்கி ....பணமா? பாசமா ? இரண்டுமேயா?
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு
முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா,
பார்ப்பனப் பாசமா ?
ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் எமது முதல் வேலை” – எனத் தனது 56 அங்குல மார்பைத் தட்டி, சவால்விட்டு ஆட்சிக்கு வந்துள்ள மோடி கும்பல், ஊழலோடு சமாதான சகவாழ்வு நடத்திவருவதை ஜெயா-ஜெட்லி சந்திப்பு தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
கடந்த காங்கிரசு ஆட்சியில் 2ஜி, நிலக்கரி ஊழல்-முறைகேடுகள், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் – என அடுத்தடுத்து ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானதை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், கார்ப்பரேட் ஊடகங்கள், அன்னா ஹஸாரேவின் தலைமையில் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அவ்வூழல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகள், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி நம்ம ஊர் கார்த்திக், சூர்யா, விஜ உள்ளிட்ட சினிமா கழிசடைகள் வரையிலான இந்தக் கூட்டணி எப்படியெல்லாம் ஆட்டங் காட்டினார்கள்.
ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் எமது முதல் வேலை” – எனத் தனது 56 அங்குல மார்பைத் தட்டி, சவால்விட்டு ஆட்சிக்கு வந்துள்ள மோடி கும்பல், ஊழலோடு சமாதான சகவாழ்வு நடத்திவருவதை ஜெயா-ஜெட்லி சந்திப்பு தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
கடந்த காங்கிரசு ஆட்சியில் 2ஜி, நிலக்கரி ஊழல்-முறைகேடுகள், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் – என அடுத்தடுத்து ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானதை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், கார்ப்பரேட் ஊடகங்கள், அன்னா ஹஸாரேவின் தலைமையில் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அவ்வூழல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகள், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி நம்ம ஊர் கார்த்திக், சூர்யா, விஜ உள்ளிட்ட சினிமா கழிசடைகள் வரையிலான இந்தக் கூட்டணி எப்படியெல்லாம் ஆட்டங் காட்டினார்கள்.
பாகிஸ்தான் பாடகர்களின் விசாவை இழுத்தடிக்கும் அதிகாரிகள் Ustad Ghulam Fariduddin Ayaz Al-Hussaini Qawwal is a Pakistani Qawwal.
லக்னோ:பாகிஸ்தானை
சேர்ந்த பிரபல சூபி பாடகர்களுக்கு இந்தியா வர மத்திய அரசு விசா
மறுத்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்த பிரபல சூபி பாடகர்கள்
பரிதுதீன் அயாஸ், அபு முகமது இருவரும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் உலகின் பல
நாடுகளுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி
வருகின்றனர்.நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் புகழ் பெற்ற
இந்துஸ்தானி மற்றும் சூபி பாடகரான அமிர் குஸ்ருவின் நேரடி சீடர்
பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்த சூழலில் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில்
சூபி சகோதரர்களின் சீடர்கள் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தனர்.
3ஜி, 4ஜிக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்?
2ஜி’, ‘3ஜி’ யுகங்களைத் தொடர்ந்து வரும் ‘4ஜி’ தகவல் தொடர்பை மென்மேலும் மேம்படுத்தும்!
முக்காலி போட்டு, வீட்டுக் கூடத்திலே வைத்த நிலவழி (லேண்ட் லைன்) தொலைபேசி
தான் முப்பது ஆண்டு முன்பு வரை புழக்கத்தில் இருந்தது. காரில் பொருத்தி
பயன்படுத்தும்படியான நகரும் தொலைபேசியை அமெரிக்க கம்பெனியான மோட்டரோலா
1984-ல் விற்பனைக்கு வெளியிட்டது. அதுதான் முதல் தலைமுறை மொபைல் தொலைபேசி.
தொடர்ந்து 1991-ல், முன்னேறிய தொழில்நுட்பத்தோடு, பின்லாந்தில் அறிமுகமானது
இரண்டாம் தலைமுறை தொலைபேசி. பேச்சையும், குறுஞ்செய்திகளையும் (SMS) 0, 1
ஆகிய டிஜிட்டல் வடிவத்தில் எடுத்துப் போவது ‘2ஜி'-யில் தொடங்கியது. நம்
நாட்டில் இன்று பரவலாகப் பயன்படுவது ‘2ஜி' தான்.
‘3ஜி' ஆகிய மூன்றாம் தலைமுறை மொபைல் சேவை 1998-ல் அறிமுகமானது. வினாடிக்கு
14 ‘மெகாபிட்' அதாவது பத்து கோடி துணுக்கு 0,1 வடிவில் ‘3ஜி’-யில் தகவல்
அனுப்ப முடியும். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு வேகம்கூட ‘2ஜி'-யில் வராது.
ஆம் ஆத்மியின் வெற்றி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை: மம்தா பானர்ஜி
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியை
நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி தேர்தல் வெற்றி இந்திய
அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை என திரிணாமுல் காங்கிரஸ்
கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மக்களுக்குக் கிடைத்த
மிகப்பெரிய வெற்றி. அராஜகவாதிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வி. அரசியல்
லாபங்களுக்காக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பவர்களுக்கு கிடைத்துள்ள
தோல்வி" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "நம் தேசத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில்
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தில்
அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி
வெற்றியில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அனைவருக்கு எங்கள் வாழ்த்துகள்"
என தெரிவித்துள்ளார் /tamil.thehindu.com/
ஆம் ஆத்மி பாஜகவை அடித்து துவைத்தது எப்படி? 4 காரணங்கள் : மோடியால் ஏமாற்று பட்டு விட்டதாக,........
டெல்லி: நாடு முழுவதுமே காணாமல் போன ஆம் ஆத்மி தனது பழைய கோட்டையான
டெல்லியை மீண்டும் பிடித்து வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. வாழ்வா, சாவா
என்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள இந்த வெற்றி, அக்கட்சிக்கும், இந்திய
மாற்று அரசியலுக்கும் முக்கியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் பலத்த அடி வாங்கிய ஆம் ஆத்மி கட்சி,
டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வளர்ந்தது
எப்படி என்பது குறித்து பிற மாநில மக்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் இவைதான) டெல்லி மக்கள் தாங்கள் மோடி அரசால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தனர்.
அரவிந்த் கேஜ்ரிவால்தான் மோடியை எதிர்க்க சரியான ஆள் என்று நம்பினர்.
அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க கூடாது என்பதே டெல்லி மக்களில்
பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. எனவேதான், கேஜ்ரிவால் வெளிப்படையாக தான்
செய்ததை தவறு என்று ஒப்புக்கொண்டார்.
திருவரங்கம் தொகுதியில் புகார்களை விசாரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை . சந்தீப் குமார் சொல்கிறார்!
திருவரங்கம் தொகுதியில் புகார்களை விசாரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
வாகன சோதனை
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
ஸ்ரீரங்கத்தில் பறக்கும்படையின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 40ஆக உயர்த்தி
இருக்கிறோம். புகார் தெரிவிப்பதற்காக தேர்தல் கமிஷனின் 1950 என்ற போன் எண்,
திருச்சி மாவட்டத்துக்கான 04312467777 என்ற எண்ணும் 24 மணிநேரமும்
இயங்கும் மேலும் வீடியோ கண்காணிப்புக் குழுவின் எண்ணிக்கையையும் உயர்த்தி
இருக்கிறோம். வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சோதனைச்சாவடிகளின்
எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது! கருத்து கணிப்பையும் மிஞ்சிய மெஜாரிட்டி 65 தொகுதிகளில் முன்னிலை !
டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; ஆம் ஆத்மி கட்சி 59 தொகுதிகளில் முன்னிலை
டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. 70 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
காலை 10.15 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 59 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.nakkheeran.in மோடிஜி தமிழக 2016 தேர்தலுக்கு நீங்க கண்டிப்பா பிரசாரம் செய்ய வரணும் ..
வரி ஏய்ப்புக்கு உதவியது HSBC எச்.எஸ்.பி.சி வங்கி !
உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான
எச்.எஸ்.பி.சி வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய
உதவியதாக பிபிசிக்கும் ஏனைய சில ஊடகங்களுக்கும் கசிந்த ஆவணங்கள்
காண்பிக்கின்றன.;ஹெச்.எஸ்.பி.சி.க்காக ஜெனீவாவில்
வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007ல் கசியவிட்ட தரவுகளில் இருந்து
கிடைக்கப்பெறுகின்ற தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.
2006-2007 காலகட்டத்தில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
பிரஞ்சு பத்திரிகையான le Monde 'ல மோந்த்'துக்கு இந்த தரவுகள் முதலில் கொடுக்கப்பட்டிருந்தன.
2006-2007 காலகட்டத்தில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
பிரஞ்சு பத்திரிகையான le Monde 'ல மோந்த்'துக்கு இந்த தரவுகள் முதலில் கொடுக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீ ரங்கம் மக்கள் மன்றத்தில் அதிமுக வெற்றி பெற்றதால் மைக்கல் குன்ஹாவின் தீர்ப்பை ? அட்வான்ஸ் செய்தியாக???
ஊழல் செய்த பணத்தாலேயே வோட்டையும் விலைக்கு வாங்கியாகிவிட்டது ...வளர்மதி
வெற்றி பெற்ற பிறகு ஜேஜே தண்டனை பெற்றதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
அதற்க்கு உதாரணம் தான் ஸ்ரீரங்கம் எடை சாரி இடை தேர்தல் என்று அப்பட்டமாக
புளுகலாம்...அதெல்லாம் சரி தான் எப்போ தமிழக மக்கள் வோட்டுக்கு பணம் வாங்கி
வோட்டு போட ஆரம்பித்தார்களோ அப்போதே ஊழலுக்கு எதிராகவும் ,ஆட்சிக்கு
எதிராகவும் கேள்வி கேட்க்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.
அதிமுகவினர் ஸ்ரீரங்கத்தை தக்கவைக்க வேண்டி பணமழை! பன்னீர்செல்வம் நேரடி .......
முதல்வர் பன்னீர்செல்வம், திருச்சிக்கு வந்து, கட்சி
நிர்வாகிளுடன், இடைத்தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பின், தேர்தல்
பிரச்சார வியூகத்தையே, அ.தி.மு.க.,வினர் மாற்றினர். மீண்டும் தொகுதியை
தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, அ.தி.மு.க.,வினர், மூன்று இலக்க
தொகையை, நான்கு இலக்க தொகையாக, வாக்காளர்களுக்கு கொடுக்கத் துவங்கினர்.
கடந்த, இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று, கவரில் பணத்தை
போட்டு கொடுத்துள்ளனர்.அதை பிரித்து பார்த்த, ஸ்ரீரங்கம் தொகுதி
வாக்காளர்கள், இன்ப அதிர்ச்சியடைந்தனர். கவரில் இருந்தது, இரண்டு, 1,000
ரூபாய் தாள்கள். தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் ஓரங்கட்டும்
விதத்தில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை கவரில் வைத்து கொடுத்திருந்தனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், இலவசங்களை கொடுத்த நிலை மாறி, ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை, வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்வதாக, தகவல் வெளியாகி உள்ளது. கரை வேட்டி கட்டாமல், பேன்ட் சட்டையுடன் சென்று, அரசியல்வாதிகள் பணம் பட்டுவாடாவை செய்வதை, தடுக்க முடியாமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், இலவசங்களை கொடுத்த நிலை மாறி, ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை, வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்வதாக, தகவல் வெளியாகி உள்ளது. கரை வேட்டி கட்டாமல், பேன்ட் சட்டையுடன் சென்று, அரசியல்வாதிகள் பணம் பட்டுவாடாவை செய்வதை, தடுக்க முடியாமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
முழு மார்க் பெற ஆசிரியர்களுக்கு விருந்து: தேர்வில் சாதிக்கும் நாமக்கல் மாவட்டத்தில்....
நாமக்கல் : பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு மதிப்பெண்
வழங்கும் ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் சார்பில், 'தடபுடல்' விருந்து
நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு முன், செய்முறைத் தேர்வு நடக்கும்.
தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு நடக்கிறது. இயற்பியல்,
வேதியி யல், உயிரியல், தாவர வியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்ட வற்றுக்கு, வரும், 24ம் தேதிக்குள்
செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்கும்படி தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது பிளஸ்
2 தேர்வருக்கு, மொத்தமுள்ள, 200 மதிப்பெண்ணில், 150 மதிப்பெண் எழுத்துத்
தேர்வாகவும், 50 மதிப்பெண் செய்முறைத் தேர்வாகவும் இருக்கும். அதில்,
செய்முறைத் தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 30 மதிப்பெண் புற
மதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும்
பிரிக்கப்பட்டுள்ளது.அக மற்றும் புற மதிப்பீடு மதிப்பெண் சேர்த்து, 50க்கு,
40 மதிப்பெண் எடுத்தால் தான், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற
மாணவர்களா கவும்; குறைவாக எடுப்பவர்கள், தேர்ச்சி பெறாதவர்களாகவும்
அறிவிக்கப்படுவர்.அதேபோல், 150 மதிப்பெண்ணுக்கான எழுத்துத் தேர்வில்,
குறைந்தபட்சம், 30 மதிப்பெண் பெற வேண்டியது கட்டாயம். இது நாமக்கல் மட்டுமல்ல எல்லா இடத்துலயும் நடக்கறது தான். நான் +2 15
வருஷம் முன்னாடி .......... படிச்சேன். அப்பவே இதத்தான் பண்ணாங்க.
திங்கள், 9 பிப்ரவரி, 2015
கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
மலேசிய - கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வற்றாத ஆராய்ச்சி நீர் ஊற்றாக ஓடிக் கொண்டிருந்தது!
கணினித் தமிழுக்குத் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் உதவியது!கால மாற்றத்திற்கேற்ப புதிய யுக்திகள் - தொழில் நுட்பங்கள் தமிழுக்குத் தேவை தமிழர் தலைவர் படப்பிடிப்பு மலேசிய - கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" கோலாலம்பூர் பிப்.9- கோலாலம்பூரில் நடை பெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்டு ஆய்வுரை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அது குறித்து அவர் விளக்கியுள்ளதைக் கீழே காண்க.
கணினித் தமிழுக்குத் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் உதவியது!கால மாற்றத்திற்கேற்ப புதிய யுக்திகள் - தொழில் நுட்பங்கள் தமிழுக்குத் தேவை தமிழர் தலைவர் படப்பிடிப்பு மலேசிய - கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" கோலாலம்பூர் பிப்.9- கோலாலம்பூரில் நடை பெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்டு ஆய்வுரை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அது குறித்து அவர் விளக்கியுள்ளதைக் கீழே காண்க.
அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ. 2000 வீடு வீடாக கொடுத்து தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் தீயா வேலை ?
ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்றிரவு காவல் துறை அதிகாரிகளையும், ஏனைய
அரசு அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டு தொகுதியில் அனைத்துப்
பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம்
ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக
வழங்கப்பட்டுவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
திருவரங்கம் தொகுதியில் நேற்றிரவு காவல் துறை அதிகாரிகளையும், ஏனைய அரசு
அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டே, எந்த எதிர்க்கட்சியினரையும்
அருகே நெருங்கவிடாமலேயே, ஆளுங்கட்சியினர் இடைத் தேர்தலை நடத்தி முடித்து
விட்டார்கள்! என்ன ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? ஆமாம்,
நேற்றிரவு முழுவதும் திருவரங்கம் தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும்
வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம்
ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக
வழங்கப்பட்டுவிட்டது.
ஸ்டைலாக வந்த மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைகள் ... மாணவி தற்கொலை முயற்சி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மற்ற மாணவர்களின் முன்னிலையில்,
மாணவியின் தலைமுடியை வெட்டியதாக 2 பள்ளி ஆசிரியைகளை பணிநீக்கம் செய்து
பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி
தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள கருத்துவாம்பாடியை சேர்ந்த பிரேம்நாத் என்பவரின்
14 வயது மகள் ஸ்ரீநிதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்ரீநிதி நெற்றியின் முன்பக்கம் சிறிது கூந்தலை விட்டு, அதில் கிளிப்
மாட்டி பள்ளிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை அவரது வகுப்பு ஆசிரியை
கண்டித்துள்ளார். ஆனபோதும் தொடர்ந்து அதே ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு
சென்றுள்ளார் ஸ்ரீநிதி.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் சக மாணவ -
மாணவிகளின் முன்னிலையில், ஸ்ரீநிதியின் தலையின் முன்பக்கத்தில் உள்ள முடியை
கத்திரியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
சக மாணவ-மாணவிகள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான
ஸ்ரீநிதி பள்ளியில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இந்த ஆசிரியயை மாணவியின் அழகை பார்த்து பொறாமையால்தான் இந்த கொடுமையை செய்துள்ளார். இதுபோல பல ஆசிரியர்கள் உள்ளனர். பாடம் சொல்லி கொடுப்பதை விட்டு விட்டு வேறு என்ன வேலை?
பணப்பட்டுவாடா முடிஞ்சு போச்சு, இனி எதுக்கு சிறப்பு அதிகாரி.... தேர்தல் ஆணையம் குறித்து தமிழிசை அதிருப்தி
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா எல்லாம்
முடிந்தபிறகு, தேர்தல் ஆணையம் சிறப்பு அதிகாரியை நியமித்து நடவடிக்கை
எடுத்திருப்பது, குதிரை ஓடியபின் லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பானது என தமிழக
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற
உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன் மீது அதிமுகவினர் தாக்குதல்
நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் சுயமரியாதையை இடித்து தள்ளும் பாத நமஸ்கார பள்ளி கூடங்கள்!
"சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் போற்றுதல் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்."
கண்காட்சியின் ஒரு நிகழ்வாக சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச்
சேர்ந்த 1008 ஆசிரியர்களுக்கு 1008 மாணவர்கள் பாத பூஜை செய்தனர். அப்போது
தீர்த்த நீரால் ஆசிரியர்களின் பாதங்களை மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்அப்போது பல ஆசிரியர்கள் தங்களை மறந்து கண்கலங்கினர்.( முதல் தடைவையாக ஈகோவுக்கு தீனி கிடைத்த மகிழ்ச்சிதாய்ன்) . ஆசிரியர்கள் தங்கள் ஆணவ ஈகோவுக்கு தீனி போட மாணவர்களை பணியவைத்து குருர சந்தோசம் அடையும் சாடிஸ்ட் மனோபாவம் இதுதான். கல்லூரிகளில் புதிய மாணவர்களை பழைய வக்கிரம் பிடித்த மாணவர்கள் ராக்கிங் செய்யும் சாடிசத்தை போலத்தான் இதுவும்,
வறிய நாடுகளுக்கு விசா சலுகை அளிக்க இந்தியா முடிவு
குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு விசா
கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட
பல்வேறு சலுகைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு, வளர்ந்த, வளரும் நாடுகள் வழங்க வேண்டிய உதவிகள் குறித்து விவாதிக்க ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில், மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நார்வே, சுவிட்ஸர்லாந்து உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன.
அதில், விசா கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்தது.
குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு, வளர்ந்த, வளரும் நாடுகள் வழங்க வேண்டிய உதவிகள் குறித்து விவாதிக்க ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில், மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நார்வே, சுவிட்ஸர்லாந்து உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன.
அதில், விசா கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்தது.
2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி
அரசு நிறுவனம் என்றாலே பொறுப்பின்மையும் கூடவே வந்து விடுகிறது. எப்படி
வேலை செய்தாலும் சம்பளம் வந்து விடும். தட்டிக்கேட்பார்கள் தண்டனை
கொடுப்பார்கள் என்ற பயமெல்லாம் இல்லை. ஆகவேதான் கட்டுப்பாடு மிகுந்த
தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு வரத் துடிக்கின்றனர். வேலையில்
சேர்ந்துவிட்டால் நிரந்தரம், அப்புறம் அசைக்க முடியாது. இந்த மாதிரி
பலவீனமான நிலைகள் முதலில் மாற வேண்டும். பிறகுதான் ரிசல்ட்டை
எதிர்பார்க்கமுடியும், மாணவர்களையும் எதிர்பார்க்கமுடியும்.
கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது.
கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது.
கம்போடியா கோவிலில் நிர்வாணமாக படம் எடுத்துகொள்ளும் பக்தர்கள்?
கம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது.
இந்தக் கோவில் இந்துக்கோவிலாக இருந்து புத்த மதக் கோவிலாக மாறிய கோவில்.
சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிற இந்தக்கோவிலில்
உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிகிறார்கள்.
அமெரிக்காவில் இருந்துவந்த லின்ட்சே ஆதம்ஸ் (வயது 22), லெஸ்லீ (20) ஆகிய
இரு சகோதரிகளும் கோவில் வளாகத்தில் ஒருவரை ஒருவர் உடலில் எந்தவொரு உடையும்
இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தாங்கள்
செய்தது தவறுதான் என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 15 நாளில் இந்தக்
கோவில் வளாகத்தில் இப்படி நிர்வாணப்படம் எடுத்துக்கொண்டவர்கள் பிடிபடுவது
இது 2-வது முறை.
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015
சுவாமி பிரேமானந்தவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதும் வணங்குகிறாராம்!
நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய
கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக
நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன்
கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப்பதை பொறுக்க
முடியாத ஒரு வாசகர் இப்புகைப்படங்களை தாய்நாடு தளத்துக்கு அனுப்பி வைத்து
உள்ளார்.வட
மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில்
பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி
எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.நீதி துறையால் படுகொலை,
பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு
இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை முன்னாள்
நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து
கூத்தடிப்பதை பொறுக்க முடியாத ஒரு வாசகர் இப்புகைப்படங்களை தாய்நாடு
தளத்துக்கு அனுப்பி வைத்து உள்ளார். என்ன இழவடா இது ? சதா தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும் தமிழையும் பற்றி வகுப்பெடுத்து கொண்டே இவர் இந்த காலாவதியாகி போன கிரிமினல் சாமியை கும்பிடுகிறரே ?இதை போய் ஐ நாவில் முறையிட முடியுமா?
Goa கோவாவுக்கு சர்வதேச அங்கீகாரம்; டாப்-10 'நைட்லைப் சிட்டி' பட்டியலில் 6-வது இடம்
Goa is not India: Official Trailer from openmindfilm on Vimeo.
'நேஷனல் ஜியாகிரபிக்' அமைப்பு நடத்திய நிகழ்வில் சுற்றுலாக்களின் அரசியாக கருதப்படும் கோவாவிற்கு டாப்-10 'நைட்லைப்' நகரங்களில் 6-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பருலேக்கர் கோவா உலகிலேயே பாதுகாப்பான சுற்றுலாத்தலமாக மாறியிருப்பதாக பெருமிதம் கொண்டார். நேஷனல் ஜியாகிரபிக் வழங்கிய பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்து நாட்டின் டப்லின், அதற்கடுத்ததாக, செர்பியாவின் பெல்கிரேடு, பொலிவியாவின் லா பாஸ், பிரேசிலின் சாவோ பாலோ, போர்டி ரோகோவின் சான் ஜூவான், இந்தியாவின் கோவா, ஸ்பெயின் நாட்டின் இபியா, டெக்சாஸிலுள்ள ஹூஸ்டன், கீரிஸ் நாட்டின் தெசலோங்கி, அசெர்பஜானின் பாகு ஆகிய சுற்றுலா தலங்கள் இடம்பெற்றன. ஆனால், அவற்றில் கோவா மட்டுமே அழகான நேர்த்தியான கடற்கரையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுdailythanthi.com
சமந்தா விரைவில் ஸ்விம்மிங் ஆடை விளம்பரத்திற்கு .....
ஸ்ருதிஹாசன்,
சமந்தா சரிக்குசரியாக போட்டியில் குதித்திருந்தாலும் அவர்களுக்கு வரும் பட
வாய்ப்புகள் என்னவோ சமீபகாலமாக மந்தமாகி உள்ளது. தமிழில் ‘புலி' படத்தில்
மட்டுமே நடித்து வருகிறார் ஸ்ருதி. அதுபோல் சமந்தா விக்ரம் ஜோடியாக 'பத்து
எண்ணறதுக்குள்ள' படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இதையடுத்து இருவரும்
விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நகை கடை
விளம்பரத்தில் ஸ்ருதி நடித்தால் செருப்பு கடை விளம்பரத்தில் சமந்தா
நடிக்கிறார். விரைவில் உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளார் சமந்தா.
Mauritius முன்னாள் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கைது
போர்ட் லூயிஸ்,பிப்.07 (டி.என்.எஸ்) கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற
மொரிஷஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த,
அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், நேற்று கைது
செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நவீன்சந்திர ராம்கூலமுக்குச் சொந்தமான கடற்கரை பங்களாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது.இதுகுறித்து
தவறான சாட்சியம் அளிக்க தொழிலதிபர் ஒருவரைத் தூண்டியதாக, தற்போது
ராம்கூலம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எதற்காக பொய்
சாட்சியம் அளிக்க ராம்கூலம் தூண்டினார் என்பது தெரியவரவில்லை.இது குறித்து தகவலறிந்த ராம்கூலமின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வெளியாகியுள்ளது chennaionline.com
மைக்கல் ஜாக்சனின் முகம் எப்படியெல்லாமோ அழகாகப்பட்டது பின்பு மெதுவாக ......
மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன்
விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில்
தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் அவர் தன் வாழ்நாள் முழுக்க வலியை
அனுபவித்து, இறுதியில் அந்த வலியாலே இறந்தும் போனார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவர் இந்த சிகிச்சை செய்யாமல்
இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாரென்றும் அவருக்கு அளிக்கப்பட்ட
சிகிச்சைகள் குறித்தும் வியப்பூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவர் மேற்கொண்ட சிகிச்சைகள்:
1977 - மைக்கேலுக்கு 19 வயது, அந்தக் காலம் பற்றி கூறும் ஜாக்சன் ‘அப்போது
எனக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் நான் அழுவேன்’
என்பார்.
நிதீஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆகிறார்! பீகாரில் உட்கட்சி குழப்பம் / திருப்பம்.
பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய ஜிதன் ராம் மாஞ்சி மறுத்து
விட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு முன்னாள் முதல்வர்
நிதீஷ் குமாரை ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) எம்எல்ஏக்கள் சனிக்கிழமை
தேர்வு செய்தனர்.
இதையடுத்து, நிதீஷ் குமார் விரைவில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று பிகார் முதல்வராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் 2014ஆம் ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, நிதீஷ் குமார் விரைவில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று பிகார் முதல்வராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் 2014ஆம் ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)