சனி, 17 நவம்பர், 2012

காதல் சந்தியாவுக்கு கோலிவுட்ல படங்களே இல்லையாம்

லவ் படத்துல நடிச்ச சந்திய நடிகைக்கு கோலிவுட்ல படங்களே இல்லையாம்... இல்லையாம்... டபுள் ஹீரோயின், டிரிபிள் ஹீரோயின் படங்கள்ள நடிக்க வந்த சான்ஸ மறுத்துட்டாராம். இப்ப மல்லுவுட் படங்கள்ள மட்டுமே நம்பிகிட்டிருக்காராம். ‘இப்படித்தான் வந்தனமான நடிகையும் வந்த வாய்ப்ப மறுத்ததால கோலிவுட் கைவிட்டுச்சி. அதே மிஸ்டேக்க நீயும் பண்ணாதேÕனு தோழிங்க லவ் நடிகைக்கு அட்வைஸ் பண்றாங்களாம். அத காதுல வாங்காம, ‘பத்தோட பதினொன்னா நடிக்க என்னால முடியாது. முக்கியமான வேஷமா இருந்தாதான் பண்ணுவேன்Õனு சூடு பறக்க பதில் சொல்றாராம்... சொல்றாராம்... http://www.tamilmurasu.org  காதல் சந்தியாவுக்கு சரியான சான்சே இல்லை 

பாரதிராஜா மீண்டும் மனுதர்மத்துக்கு ஆசைப்பட வேண்டாம்

பாரதிராஜாவா இப்படி?


புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர் களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்
(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)
பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.
இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினை வூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு. http://www.viduthalai.in/

துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?

thuppakki issue here is the inside story துப்பாக்கி படத்தில் சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!), தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட் கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வெளியான மூன்று மணி நேரத்துக்குள், முஸ்லிம் அமைப்புகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. http://tamil.oneindia.in/

பால் தாக்கரே மரணம்... அதிர்ச்சியில் சிவசேனா தொண்டர்கள்.. பதட்டத்தில் மராட்டிய மாநிலம்!

 shiv sena chief bal thackeray passes away at 86 மும்பை: சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது. http://tamil.oneindia.in/

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.
"நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை. www.dinamalar.com/

பி.ஆர்.பழனிச்சாமியின் 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கிரானைட் முறைகேடு வழக்கில் கைதான கிரானைட் சுரங்க அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பி.ஆர்.பழனிச்சாமி தாக்கல் செய்த 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பி.ஆர்.பழனிச்சாமியின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 வழக்கில் ஜாமீன் கோரியதில் எஞ்சிய 2 வழக்கில் விசாரணை அதிகாரி விளக்கம் தர உத்தரவிட்டது. இரு வழக்குகளிலும் வரும் 19ஆம் தேதி விசாரணை அதிகாரி ஆஜராகி விளக்கம் தர ஆணையிட்டுள்ளது.

வெள்ளி, 16 நவம்பர், 2012

இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட சம்பவம் கொடுமையானது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போய்விட்டது என இராவைய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விட்டர் ஐவன் இங்கு குறிப்பிட்டிருந்தார்.இதில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எல்லா இனங்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். எல்லா இனங்களும் சமத்துவமாக வரவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 25- 11- 2012


முதன்முறையாக ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 2012 நவம்பர் 25ல் நடைபெறுகிறது.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கான இணைதேடல் நிகழ்ச்சியை 2012 நவம்பர் 25 ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெரும் அளவில் செய்யப்பட்டுவருகின்றன.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தாலும், அண்மைக்காலத்தில் இத்தகைய திருமணங்களுக்கு எதிராக ஜாதி அமைப்புகள் கருத்துத் தெரிவித்தும், பிரச்சினை செய்தும் வருகின்றன.
மற்றொருபுறம், ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் பலருக்கும் அதற்கான சரியான இணையர் கிடைப்பதில்லை. எனவே ஜாதிமறுப்பு செய்ய விரும்புவோருக்காக முதன்முறையாக இணைதேடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத மறுப்புத் திருமணம் செய்ய விரும்புவோர், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இணைதேடல் பிரிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவைதவிர, இந்நிகழ்வில் மருத்துவ முகாமும், மணமக்களுக்கான மனநல ஆலோசனை முகாமும் நடைபெற உள்ளது.
ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க இப்பணி ஒரு நல்ல ஏற்பாடு என்று பல தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு:

ராமதாசுக்கு ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி! தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு!


கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
தர்மபுரி அருகே தலித் மக்களின் குடிசைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. இதில் பாமக முன்னிலை வகித்துள்ளது. http://www.nakkheeran.in/

அயர்லாந்தில் சவீதா மரணம்: இந்தியாவுக்கான தூதருக்கு சம்மன்

டெல்லி: அயர்லாந்தில் வயிற்றிலேயே இறந்த கருவை அகற்ற மறுத்ததால் இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்த விவகாரம் தொடர்பாக ஆட்சேபத்தையும் கவலையையும் இந்தியாவுக்கான தூதர் ஃபெலம் மெக்கலனிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சவீதா பல் மருத்துவராக அயர்லாந்தில் பணியாற்றி வந்தார். அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்த போது திடீரென வயிற்றிலேயே கரு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று கருவை அகற்றுமாறு கோரினார். ஆனால் சவீதாவின் வயிற்றில் கரு உயிரோடு இருப்பதாகக் கூறி கருவைக் கலைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கு காரணமாக அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தால் தாங்கள் பாதிக்கபப்டுவோம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சவீதா நேற்று உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. http://tamil.oneindia.in/

ராகுல்காந்தி தலைமையில் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும்

 Rahul Lead 2014 Campaign டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மக்களவைத் தேர்தலை ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ்-திக்விஜய் உதவி...
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பொதுச்செயலராக இருக்கும் ராகுல் காந்தி தலைமையேற்கிறார். அக் குழுவில் அகமது பட்டேல், ஜனார்தன் திரிவேதி, திக்விஜய் சிங், மதுசூதன் மிஸ்த்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். http://tamil.oneindia.in/  இனி என்ன இரண்டாவது அணி மூன்றாவது அணிகெல்லாம் கொண்டாட்டம் தான்
 அடுத்த தேர்தலில் காங்கிரசின் மூத்த இளைய தலைவர்கள் பலருக்கும் நல்ல ஒய்வு கிடைக்கும் சாமி 

திருமாவளவன் ஆர்ப்பாட்டம்: சென்னை, தருமபுரி, கடலூரில்

சிதம்பரத்தில் (15.11.2012) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தென், வட மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதிலும் ஜாதி வெறியாட்டங்கள், சமூக விரோத செயல்கள் அதிகளவு நடந்து
வருகின்றன. தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே மோதலை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வது கூடாது என சில அரசியல் கட்சிகள் மேடையில் பேசி வருகின்றன. < தருமபுரியில் பட்டப்பகலில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. 6 மணி நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. இதைக் கண்டித்து நவம்பர் 19-ம் தேதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தருமபுரியில் நவம்பர் 21-ம் தேதியும், கடலூரில் 23-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

Soft Drink கில் மயக்க மருந்து கலந்து மாணவிகளை கெடுத்த டியுசன் ஆசிரியர்

சென்னை கிண்டி மடுவின் கரையை சேர்ந்தவர் மாளவிகா (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் கிண்டி மடுவின்கரை மசூதி காலனி அருகே உள்ள டியூசன் சென்டரிலும் படித்து வந்தார்.இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தான் டியூசன் படிக்கும் ஆசிரியர், தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன்னை கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். இது பற்றி விசாரிக்கும்படி கிண்டி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி கிண்டி உதவி கமிஷனர் ராமன் மேற்பார்வையில், கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பள்ளி மாணவியை கற்பழித்ததாக டியூசன் ஆசிரியர் கண்ணன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் படித்த மற்ற பள்ளி மாணவிகளிடமும் இதேபோல் தவறாக நடந்து கொண்டாரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  Soft Drink கில் மயக்க மருந்து மாணவிகளை கெடுத்த டியுசன் ஆசிரியர் 

4.8 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட டில்லி உத்தரவு! பழைய பாக்கி 52.5 டி.எம்.சி எங்கே?

Viruvirupu
தமிழகத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 8 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சுருக்கி, 4.8 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்புக்குழு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நவம்பர் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டில்லி ஷ்ரம் சக்தி பவனில் நடந்தது.

துப்பாக்கி சில காட்சிகள் கட் ஏ.ஆர்.முருகதாஸ் ask மன்னிப்பு

துப்பாக்கி பட விவகாரத்தில் திடீர் திருப்பம்! காட்சிகள் கட்!! அடுத்த படத்தில் விஜய் இஸ்லாமியர்!! விஜய் நடித்த துப்பாக்கி படம் பற்றி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திய விவகாரம், வித்தியாசமான திருப்பத்தை சந்தித்துள்ளது. படத்திலுள்ள  காட்சிகளை நீக்க சம்மதித்ததுடன், அடுத்த படத்தில் விஜய் இஸ்லாமியராக நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://viruvirupu.com

இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தில் 55 தீவிரவாத முகாம்கள்

அகர்தலா:இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடும், 55 வங்கதேச தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச ராணுவ அதிகாரியிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
அண்டை நாடான வங்கதேசம், மிகவும் ஏழ்மை நாடு. இந்தியாவின், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுடன், 1,900 கி.மீ., எல்லை பகுதியை, வங்கதேசம் கொண்டுள்ளது. அங்கிருந்து, தினமும், ஆயிரக்கணக்கானோர், இந்தியாவிற்குள் ஊடுருவி வரும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக, ஏராளமான தீவிரவாத முகாம்களும், வங்கதேச எல்லையில் செயல்படுகின்றன.அவ்வப்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டாலும், இப்போது, 55க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன.சில நாட்களுக்கு முன், திரிபுரா மாநிலத்தின், சில்ஹெட் நகரில் நடந்த, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில், தீவிரவாத முகாம் பட்டியலை, இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வழங்கினர்.தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச அதிகாரிகளிடம் வழங்கிய, இந்திய அதிகாரிகள், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். http://www.dinamalar.com/

கபில் சிபல்: 2ஜி' ஏலம் கோர்ட் உத்தரவுப்படியே நடந்தது

புதுடில்லி:""2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், அரசு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில், கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொண்டோம்,'' என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.கடந்த, 2008ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, வழங்கப்பட்ட, 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மறு ஏலம் நடந்தது. கடந்த, 12ம் தேதி துவங்கி, இரண்டு நாள் நடந்த ஏலத்தில், 9.4 ஆயிரம் கோடி ரூபாய்தான் அரசுக்கு கிடைத்தது. இந்த ஏலத்தின் மூலம், 40 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கில் ஒரு பங்குதான் கிடைத்துள்ளது. http://www.dinamalar.com/
Nava Mayam - newdelhi,இந்தியா

Nava Mayam 1700000000000000000000000000000000 ஊழல்ன்னு, இழப்புன்னு , லஞ்சம் ன்னு , இஷ்டத்துக்கு முட்டையை போட்டு , மக்களை எல்லாம் கூமுட்டையாக்கிடான்களே ...

வியாழன், 15 நவம்பர், 2012

கெஜ்ரிவால் நன்கொடைக்கு கணக்கு காட்டவில்லை.

பிறர் குட்டை உடைக்கும் கெஜ்ரிவால் குட்டை உடைக்கப் போகும் டெல்லிக்காரர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தும் என்.ஜி.ஓ. ஒன்றுக்கு கிடைத்த நன்கொடைப் பணத்திற்கு கணக்கு காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பிரனவ் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் பிரனவ் அரோரா. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்.
அவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கூறிய குற்றச்சாட்டு வருமாறு,
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் மனிஷ் சிசோடியா நடத்தும் என்.ஜி.ஓ. கபிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உள்ளது. அந்த என்.ஜி.ஓ.வுக்கு போர்டு பவுன்டேஷன் அளித்த நன்கொடை பணத்திற்குரிய கணக்கு காட்டப்படவில்லை. மேலும் கெஜ்ரிவால் நடத்தும் பப்ளிக் காஸ் ரிசர்ச் பவுன்டேஷன் என்னும் என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை அவர் வெளியிட வேண்டும்.
கெஜ்ரிவால் பிறர் செய்த ஊழல்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவர் தனது என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்துள்ள நன்கொடை குறித்த சந்தேகங்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும். நான் கெஜ்ரிவால் ஸ்டைலில் அவர் குற்றத்தை ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துவேன். அதன் பிறகு அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

அக்னி பரீட்சைங்கிறது இதுதானோ? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ! DMK???

 Upa Isolated On Fdi May Struggle Numbers சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு- பார்லி.யில் அக்னி பரீட்சைக்கு தயாராகும் மத்திய அரசு

டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் 'சஸ்பென்ஸ்' யுக்தியை கையாளும் திமுகவின் முடிவு எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த உடனேயே ஆளும் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியது. மற்றொரு கூட்டணிக் கட்சியான திமுகவோ இறுதி நேரத்தில் முடிவெடுப்போம் என்று 'சஸ்பென்ஸ்' யுக்தியை அறிவித்திருக்கிறது. http://tamil.oneindia.in/ 

2ஜி ஸ்பெக்ட்ரம் பொய் குற்றச்சாட்டு அம்பலம் பாதி கூட வாங்கப்படவில்லை

ஏலத்துக்கு வந்த 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் பாதி கூட வாங்கப்படவில்லை
ஏலம் மூலம் விற்றிருந்தால் ரூ. 1.76 லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்கும் என்று மத்திய கணக்குத் தணிக்கையாளரான சிஏஜி கூறியது மிகப் பெரியது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.
  ராசாவையும் கனிமொழியையும் பொய்யான குற்றச்சாட்டில் மாட்டிவிட்ட சி ஏ ஜி யின் பித்தலாட்டம் 
 நிறைய நிறுவனங்கள் களத்தில் குதித்திருந்தால் மக்களுக்குத் தான் லாபம் ஏற்பட்டிருக்கும். போட்டி போட்டுக் கொண்டு செல்போன் கட்டணத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், இப்போது நடந்தது என்ன?

 யார்  இதன் பின்னணியில் ?

டெல்லி: ரூ. 30,000 கோடிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்க ஏலத்தில் இறங்கிய மத்திய அரசுக்கு கிடைத்திருப்பது வெறும் ரூ. 9,400 கோடி தான்.
இதன்மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்று இல்லாமல் ஏலம் மூலம் விற்றிருந்தால் ரூ. 1.76 லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்கும் என்று மத்திய கணக்குத் தணிக்கையாளரான சிஏஜி கூறியது மிகப் பெரியது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது. http://tamil.oneindia.in/

ஸ்டாலின் 'சிக்னலுக்கு' காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்

சென்னை: மதிமுகவுக்கு அதிகம் பாடுபட்டவன் நான்.. இந்த இயக்கத்தை விட்டு விலகவே மாட்டேன் என்று வைகோவுக்கு எதிராக சரவெடி வெடித்து வரும் நாஞ்சில் சம்பத் போட்டி மதிமுகவை உருவாக்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மற்றவர்களைப் போல அவர் திமுகவுக்கு தாவத்தான் போகிறார் என்றே கூறப்படுகிறது.
'தம்பி' நாஞ்சில் சம்பத்தை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதி தயாராகத்தான் இருக்கிறாராம். இதற்கான பேச்சுவார்த்தையின் போது, சம்பத் வரட்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போய்விட்டு திரும்பியிருக்கும் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லையாம்! நாஞ்சில் சம்பத்தும் கூட அவரை மகிழ்விக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் முதல்வராவதை வைகோ விரும்பவில்லை.. அதனாலேயே அதிமுக கூட்டணிக்குப் போவார் என்றெல்லாம் கூறி வருகிறார். http://tamil.oneindia.in/
  வைகோவை போலவே இவரது நாக்கிற்கும் நரம்பு இல்லை என்பது தெரிந்ததே கலைஞரை கேவலப்படுத்தி பேசிய நாராச வார்த்தைகள் எல்லாம் இனி வைகோவை கேவலப்படுத்த பயன்படும் அல்லது பழைய படி ஜெயாவை கேவலப்படுத்த பயன்படும் என்ன இதுவும் வைகோவும் ஒரே ஒரு தாய் பிராணிகள் 

டெல்லியில் வாளால் சராமரியாக வெட்டிக் கொண்ட சீக்கியர்கள்- 8 பேர் காயம்- இருவர் கவலைக்கிடம்

டெல்லி: டெல்லியில் இருபிரிவு சீக்கியர்கள் கத்தியால் மாறி மாறி சராமரியாக வெட்டிக் கொண்டதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. டெல்லியில் சீக்கியர்களின் கோவிலான குருத்வாராவில் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிராமணி அகாலி தளம் மற்றும் சர்னா என்ற குழுவினருக்கிடையே உருவான வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
மோதலின் போது சீக்கியர்கள் தாங்கள் வைத்திருந்த நீண்ட வாளால் ஒருவரையொருவர் வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது

புதுக்கோட்டை. பூப்பெய்திய பெண்ணுக்கு படிப்பெதற்கு''?: 9ம் வகுப்பு மாணவியின் படிப்பை நிறுத்த வைத்த ஜமாஅத்

For many women participating actively in society, economics or politics does not go without saying. One of the main reasons is that they do not have equal rights in terms of education.
Read about how SOS Children stands up for women and girls' education.

Mama! School, school! Girls have the right to education. 

 Posted by:



Schoolgirl, Pune, Indiaபுதுக்கோட்டை: மணல்மேல்குடி அருகே பூப்பெய்த பிறகு பெண்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்று ஜமாஅத் வற்புறுத்தியதன்பேரில் 9வது வகுப்பு மாணவியின் படிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி.ஆர். பட்டனத்தைச் சேர்ந்த நல்ல முகமது- ஹாஜிரம்மாள் தம்பதியின் மகள் ஜனுபா பேகம் (16).
ஹாஜிரம்மாள் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் சமீபத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ஜனுபா மணல்மேல்குடியில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவர் பள்ளிப் படிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தார் வற்புறுத்தினர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர். http://tamil.oneindia.in/

துப்பாக்கி படத்திற்கு கடும் எதிர்ப்பு... பாதுகாப்பு கோரி அரசிடம் விஜய், கலைப்புலி தாணு மனு

சென்னை: தான் நடித்த துப்பாக்கி படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் வெடித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி தமிழக அரசை அணுகியுள்ளார் நடிகர் விஜய்.
சமீபகாலமாக பல்வேறு திரைப்படங்களும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள துப்பாக்கி படத்திற்கு தற்போது இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜேப்பியார்..உலகறிந்த சாராய ரவுடி.. கல்வி வள்ளள்

ஜேப்பியார்
ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை! எம்ஜியார் கண்டெடுத்த கேடி முத்து ..  வினவு 

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் கல்வி வள்ளள் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி.
ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.
இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.
கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.
ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.

விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

ம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று  பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு  ஜெயலலிதாவின்  அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் வலது  கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.
தனது 80-வது பிறந்தநாளையொட்டி, வீட்டுக்‘கே’ வந்து வாழ்த்து  தெரிவித்த ஜெயலலிதாவின் மனிதப்பண்பு, தமிழர் பண்பாடு மற்றும்  இன்னபிற பண்பு நலன்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கும்  புல்லரிப்பைக் காணும்போது, அது எத்தனை சொரிந்தாலும் அடங்காத  அரிப்பு என்று புரிகிறது. சில மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்துக்கு  வருவார் வருவாரென்று அம்மாவுக்காக மண்டப வாசலிலேயே தா.பா.  காத்திருந்த கதையை நினைவுபடுத்தி தா.பா. வைக் கேலி செதிருக்கிறது  விகடன் இதழ்.
இதற்கெல்லாம் கூச்சப்படுபவரல்ல தா.பா. அவரைக் கேட்டால், அது  போன மாசம்” என்பார்.
பார்ப்பன ஊடகங்களாலேயே நியாயப்படுத்த முடியாத, சட்டசபைக் கட்டிட  விவகாரம், செம்மொழி நூலகம், அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி  விவகாரம் ஆகியவை தொடர்பான ஜெ-வின் வக்கிரங்களை தா.பா.  நியாயப்படுத்துகிறார். நூறு கருணாநிதி வந்தாலும் ஒரு  ஜெயலலிதாவுக்கு சமமாக முடியாது” என்று கூவுகிறார். சோரம் போவதில் பாண்டியனுக்கு அடுத்த இடத்தை வைகோவும் பிடிக்க சான்ஸ் இருக்குலே 

தான் இறந்துவிட்டதாக தாயையே நம்ப வைத்த 'ரூ. 1,100 கோடி பிராடு' உல்லாஸ்!

 Stockguru Fraudster Made Mother Believe
டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 1,100 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குரு நிறுவனத்தின் அதிபர உல்லாஸ், தனது தாயையே தான் இறந்துவிட்டதாக நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 2 லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகளுக்கு வட்டியும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இந்த நிறுவனம் மீது 14,303 பேர் புகார் தரவே, அதன் அதிபரான உல்லாஸ் பிரபாகர் கைரே (33), அவரது மனைவி ரக்ஷா உர்ஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ஓராண்டு தேடலுக்குப் பின் அவர்கள் சமீபத்தில் மகாராஷ்டிராவில் வைத்து பிடிபட்டனர்.
இந்த நிறுவனத்தில் 2,05,062 முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் ரூ. 1,100 கோடி வரை (முதலில் ரூ. 493 கோடி என்று தகவல்கள் வந்தன) ஸ்டாக் குரு நிறுவனம் வசூலித்து ஸ்வாஹா செய்துள்ளது.   http://tamil.oneindia.in/

கடும் கோபத்தில் திமுக ! மறக்க முடியுமா ?

பா.ஜ.க. எதிர்ப்பு, உடையாத பானை! தி.மு.க. இந்த விவகாரத்தை தனது ட்ரம்ப் கார்டாக உபயோகிக்க போகிறது மதில் மேல் பூனை!! மமதா விடமாட்டார்!!
Viruvirupu
வெளிநாட்டு சில்லறை வர்த்தகம் நாட்டுக்குள் வரக்கூடிய அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை, தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ‘கடுமையாக’ நோகாமல் எதிர்க்க முடிவு செய்துள்ளது பா.ஜ.க. இந்த திட்டம், சிறு வணிகர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறுகிறது அக்கட்சி.

தலித்துகளுக்கு எதிராக 'பெரும்பான்மை' ஜாதியினர் கை கோர்க்கும் அபாயம்!

Posted by:  Kongu Vellala Goundars Rally Caste
கோவை: தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள், தேவர்கள், நாடார் சமுதாயத்தினரை சாதி வெறியர்கள் போல சித்தரித்துப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பான்மை சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இந்த பேரவை கூறியுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே சாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கப் போவதாக வன்னிய சமுதாயத்தை பெரிதும் நம்பியுள்ள பாமகவின் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த கவுண்டர் பேரவையின் அறிக்கை பல விஷயங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. http://tamil.oneindia.in/

மோடிக்கு எதிராக RSS தலைவர்? கூடாரத்துக்குள் குத்து, வெட்டு?


பார தீய ஜனதாவில் தற் போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிதின் கட்காரி பாரதீய ஜனதா தலைவர் பதவி யில் இருந்து விலக வேண் டும் என்று எல்.கே. அத்வானி, ராம்ஜெத் மலானி வற்புறுத்தினார் கள். என்றாலும் கட்சி மேலிடம் கட்காரிக்கு ஆதரவாக இருந்தது. தலை வர் பதவியில் இருந்து அவர் விலகமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில் நிதின் கட்காரிக்கு எதிரான பிரச்சாரத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலை வர் வைத்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனி யார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நிதின் கட்காரிக்கு எதிரான பிரசாரம் குஜ ராத்தில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் ராம்ஜெத் மலானிதான் நிதின்கட் காரி பதவி விலக வேண்டும் என்றார்.

வீதியில் சென்ற காரில் இருந்த தளபதியை குறிவைத்து விமான ஏவுகணை வந்து தாக்கியது!

Viruvirupu
விமான ஏவுகணை தாக்குதல் ஒன்றில், ஹமாஸ் ராணுவத் தளபதி ஒருவரை கொலை செய்துள்ளது இஸ்ரேலிய விமானப்படை. காசா பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை, இரு தரப்பையும் யுத்தம் ஒன்றுக்கு மிக அருகே கொண்டு வந்திருக்கிறது.
ஹாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தளபதி அஹ்மத் அல்-ஜாபரி, இஸ்ரேவிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவரும் மற்றொருவரும் பயணம் செய்த காரை துல்லியமாக குறிவைத்து ஏவுகணை ஏவியது இஸ்ரேலிய விமானம். காரும், அதில் இருந்த இருவரும் சுக்குநூறாக சிதறிப் போயினர்.

Sri Rangam பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!


பிராமணாள்  என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
 சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலை யில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது...
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர்  நடத்தி வந்தார்.  திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது.

இந்து-முஸ்லிம் மோதல்கள் ஏற்படுவது ஏன்?


மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்  மருதன். ஆங்கில வடிவத்தில் இடம்பெறாத சில குறிப்புகளையும் ஆழம் இதழுக்காக மார்கண்டேய கட்ஜு நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆழம் நவம்பர் இதழில் வெளியான கட்டுரை தமிழ்பேப்பர் வாசகர்களுக்காக இங்கே. பிற கட்டுரைகளை வாசிக்க : http://www.aazham.in/
இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம்.  முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.
150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது?  http://www.tamilpaper.net/?p=7121

நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம் மொழிப்போர் / அத்தியாயம் 12

ஆர். முத்துக்குமார்

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.
இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

நான் தற்கொலை செய்ய போலீஸ் விரும்புகிறது

Pinky Pramanik arrested1
Pinky retired from athletics after she suffered a road accident three years ago.  கொல்கத்தா: நான் தற்கொலை செய்து கொள்ள போலீஸ் விரும்புகிறது என்று தடகள வீராங்கனை பிங்கி பரமனி தெரிவித்துள்ளார்.ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கமும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்ற தடகள வீராங்கனை பிங்கி பரமனி, ஆணாக இருந்து தன்னுடன் குடும்பம் நடத்தி பின்னர், பெண்ணாக மாறி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். கைதாகி ஜாமீனில் விடுதலையான பிங்கியிடம் நடந்த குரோமசோம் சோதனை அறிக்கையில் அவர் ஆண் என்று குறிப்பிடப்பட்டது.

Laurie Baker இயற்கையுடன் சேர்ந்து வீடு கட்டியவர்


Laurence Wilfred "Laurie" Baker (2 March 1917 – 1 April 2007) was a British-born Indian architect, renowned for his initiatives in cost-effective energy-efficient architecture and for his unique space utilisation and simple but aesthetic sensibility. Influenced by Mahatma Gandhi, he sought to incorporate simple designs with local materials and achieved fame with his approach to sustainable architecture as well as in organic architecture. He has been called the "Gandhi of architecture".
 லாரிபேக்கரிடம் காந்தி சொன்னார், எது குறைவான சரக்குப்போக்குவரத்துச் செலவுடன் அமைந்துள்ளதோ அதுவே நல்ல வீடு என்று. அந்த ஒற்றைவரியிலிருந்து பேக்கர் பாணி இல்லங்கள் உருவாயின. பேக்கர் கண்ட கனவு என்பது இந்தியாவின் சாதாரண மக்கள் அவரது பாணியில் இல்லங்களை உருவக்கிக்கொண்டு அதன் வழியாக இங்கே குடியிருப்புகளில் ஒரு தன்னிறைவு உருவாகும் என்று
ஆனால் காந்தியம் பேக்கரின் கண்முன்னாலேயே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தால் கைவிடப்பட்டது. பேக்கரின் குரலை நேருயுக இந்தியா செவிமடுக்கவில்லை. குமரப்பா போல, வினோபா பாவே போல அவரும் ஒதுக்கப்பட்டார். ஆனால் பேக்கர் ஒரு நடைமுறை அறிவியலாளர். ஆகவே தன் வீடுகளை அவர் அறிவியல்பூர்வமாகவும் நிரூபித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் அவரது சோதனை வீடுகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

காரணம் இந்தியாவில் வீட்டுவசதியைப் பெருக்க முயன்ற அரசுகள் அந்தப்பொறுப்பை காண்டிராக்டர்களிடமும் அதிகாரிகளிடமும்தான் கொடுத்தன.  http://www.jeyamohan.in 

விஜய் எனக்கு தங்க மகன்தான் : ஷோபா சந்திரசேகர்

Thanga Magan Vijay Shoba Chandrasekar விஜய் எனக்கு தங்கமகன்தான் என்று அவருடைய தாயார் ஷோபா சந்திரசேகர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தீபாவளி தினத்தில் ஒளிபரப்பான தங்கமகன் விஜய் சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் பற்றிய தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார் ஷோபா.
விஜய் ஒரு நடிகர் என்பது தெரியும். அவருடைய பெர்சனல் பக்கங்களை அவருடைய நண்பர்கள், அவரை இயக்கிய இயக்குநர்கள் கூறுவதை விட விஜய்யின் அம்மாவே சொன்னால் எப்படி இருக்கும் என்று விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் யோசித்திருப்பார்கள் போல அதுதான் தங்க மகன் விஜய்' ஆக மாறியது. விஜய் சிறுவயதில் செய்த குறும்புகள். தங்கையின் மறைவிற்குப் பின்னர் அதற்கு நேர் எதிராக அமைதியாக மாறியது என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

புதன், 14 நவம்பர், 2012

தனிநாடு கோரும் டெக்ஸாஸ் மாநில அமெரிக்கர்கள்

தனிநாடு கோரும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல பல மாநிலங்களும் வெள்ளை மாளிகைக்கு மனு
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்ல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகைக்கு மனுச்செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்தே பலர் இவ்வாறு மனுச்செய்துள்ளனர். வெள்ளை மாளிகை இணையதளத்தின் மக்கள் முறைப்பாட்டைத் தெரிவிக்கும் பக்கத்திலேயே அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லும் மனுக்கள் குவிந்துள்ளன.

நிஜமாகவே கலைஞர் காங்கிரசோடு Divorce? சிதம்பரம் சாதிப்பாரா?

  Chidambaram Meets Karunanidhi Ahead 2ஜி Vs சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: கருணாநிதியை சமாதானப்படுத்த வந்த ப.சிதம்பரம்!

மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!

மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்!வினவு
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்! – படம் நன்றி: தி இந்து
    ரும்புக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்று மேற்கு மகாராஷ்டிராவில் போராடிய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள‌னர்.
    விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஸ்வபிமான் ஷெட்காரி சங்கட்னாவின் தலைவர் ராஜூ ஷெட்டியை கைது செய்து விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது போலீஸ்.
    சாங்லி மாவட்டத்தில் போலீசார் சுட்டதில் சந்திரகாந்த் நலவாடே என்ற விவசாயி துப்பாக்கிக் குண்டு காயங்களினால் உயிரிழந்தார். கோலாப்பூரில் புந்தாலிக் கோகடே என்ற விவசாயி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

    பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!


    பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
     இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

    மீபத்தில் சொந்த வேலையாக பழனி செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து ஊர் திரும்புமுன் கொஞ்சம் நேரம் இருந்ததால், நம்ம தண்டபாணி எப்படி இருக்கிறான் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே என்று தோன்றியது. தண்டபாணியின் ‘பின்புறத்தை’ வெகு வேகமாக வெட்டிச் சுரண்டி விற்று வருகிறார்கள் என்றும், கூடிய சீக்கிரம் விடைப்பாக நின்று கொண்டிருக்கும் முருகன் விழுந்து விடக்கூடும் என்றும் வெகு நாட்களாகவே ஒரு செய்தி உலவியதால், ‘தரிசனத்தை’ நான் தள்ளிப்போட விரும்பவில்லை.  மலையையே சுரண்டி விற்கும் காலத்தில் சிலை எம்மாத்திரம்? http://www.vinavu.com/

    அகதிகளுக்கு 2,500 வீடுகள் முதல்வர் அறிவித்துள்ளார்

    அகதி முகாம்களுக்கு ரூ.25 கோடியில் 2,500 வீடுகள் : ஜெயலலிதா அறிவிப்பு

    சென்னை: தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 2,500 புதிய வீடுகள் கட்டுவதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை மேம்படுத்துதல், வீடுகளை பழுது பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலக கட்டிடம் கட்டுதல், நியாயவிலை கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

    Ottawa கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

    The NRC’s (National Research Council) Falcon 20 aircraft is a testing vehicle for bio jet fuel. The 100 per cent bio jet fuel will son be tested in flight for engine performance and emissions. Brassica Carinata (Ethiopian mustard, Abyssinian mustard) is the raw agricultural product that is refined into bio jet fuel."
    விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று  விமான  நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம். விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன. http://www.ariviyal.in/

    ஒன்பதுல குரு லட்சுமிராய் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ரா

    இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமிராய். ‘ஒன்பதுல குருÕ படத்தை எழுதி இயக்கும் பி.டி.செல்வகுமார் கூறியதாவது:
    கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் 4 இளைஞர்கள் அதன்பிறகு இன்னொரு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவை ததும்ப கதை கூறுகிறது. வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் நண்பர்களாக நடிக்கின்றனர். இதில் இருவித கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமி ராய். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் மந்த்ரா. கீதா சிங், ரூபாஸ்ரீ, சோனா, மனோபாலா, ஷாம்ஸ், சித்ரா லட்சுமணன், சாமிநாதன், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.
    இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதை கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். http://www.tamilmurasu.org/Tamil_News.asp?id=7

    கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஆப்ரிகாவில் வடிவேலு

    இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார் வடிவேலு. நகைச்சுவை நடிகர் வடிவேலு தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு கோலிவுட்டில் வலம் வந்தார்.  இப்போது 1 வருட ஓய்வுக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது பற்றி வடிவேலு கூறியதாவது: இன்னும் சினிமா களத்தில்தான் இருக்கிறேன். இண்டஸ்ரியைவிட்டு எங்கும் போய்விடவில்லை. படங்களில் நடிக்காமல் இருந்த ஓய்வு நாட்களில் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் பொழுதை கழித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்தபோது பார்க்க முடியாமல்போன படங்களை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தேன். அப்போது என்னை சந்தித்து ரசிகர்கள் படங்களில் என்னை பார்க்காதது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்தார்கள். இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது. சினிமாவை நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். இயக்குனர்களிடம் எப்போதும் தொடர்பிலேயே இருந்தேன்.http://www.tamilmurasu.org

    கோவை 10 நாளில் 50 கோடி தங்கம் விற்பனை

     India's fundamental role in global gold market

    APETITE FOR GOLD: People buying the gold jewellery ornaments on the occasion of Diwali – Dhanteras, at jewellery shop in Hyderabad. Photo: Nagara Gopal
    APETITE FOR GOLD: People buying the gold jewellery ornaments on the occasion of Diwali – Dhanteras, at jewellery shop
    கோவை தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்தாலும், தீபாவளி முன்னிட்டு, கடந்த பத்து நாட்களில் மட்டும், கோவை நகரில் உள்ள தங்க நகைக்கடைகளில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல், வர்த்தகம் நடந்துள்ளது.
    பண்டிகை காலத்தில், தங்க நகை வாங்குவதையும், கழுத்தில் அணிந்து மகிழ்வதையும் பெண்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவை நகரில் உள்ள 350க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகளில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருப்பதே இதற்கு ஆதாரம்.   http://www.dinamalar.com/
    அது தானே எவ்வளவு ஏத்தினாலும் உங்களுக்கு வாங்குகிற சக்தி இருக்கும் வரை தயங்க மாட்டீங்க? நீங்க திருந்துவீங்கன்னு நினைச்சா அது எங்க முட்டாள் தனம்.

    கனிமொழி விவகாரத்தில் காங்கிரஸ் பின்னணி? கலைஞர் சிதம்பரம் சந்திப்பு

    காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

    சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.   http://www.dinamalar.com/ 
     
    s.maria alphonse pandian - chennai ,இந்தியா
    வழக்கம் போல முழுக்க முழக்க கற்பனையினால் ஆன ஒரு தலைப்பு முக்கிய செய்தி....கடைசியில் கூறப்பட்டுள்ள கலைஞரின் வார்த்தை மட்டுமே உண்மை..அதாவது அந்நிய முதலீட்டு பிரச்சனையில் திமுகவின் நிலை கூட்டதொடரின்போது அறிவிக்கப்படும் என்பது மட்டும்...ஆட்சி கவிழ்வது நிச்சயம் என்னும் சூழ்நிலை வந்தால் மட்டுமே திமுக ஆதரவை வாபஸ் வாங்கும்..அரசுக்கு எதிராக வாக்களிக்கும்..இல்லையெனில் ஐந்தாண்டுகாலமும் ஆட்சிக்கு ஆதரவே அளிக்கும்...திமுகவால் ஆட்சி கவிழ்ந்தது என்னும் நிலை உருவாகாது....ஐந்தாண்டுகாலம் உறுதியான ஆட்சியை அளிப்போம் என மக்களுக்கு தேர்தலின் பொது வாக்குறுதி அளித்துள்ளது நினைவுகூறத்தக்கது..... 

    France பரிதி கொலை மூன்றாவதாக ஒரு ஊடகவியலாளர் கைது

    கடந்த வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டு பிணக்கு காரணமாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தன் எனக்கூறப்படுகின்ற பரிதி என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ளவர் ஒரு ஊடகவியலாளர். மேற்படி இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின்போது சிறிலங்கா அரசிடம் 50000 ஐரோக்களை பெற்றுக்கொண்டு கொலையை மேற்கொண்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர் என்ற செய்தியை பரப்பியமைக்காக இவ்ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டள்ளார். பிராண்ஸ் அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக இச்செய்தியை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளரை கைது செய்துள்ள பிரண்ஸ் பொலிஸார் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

    செவ்வாய், 13 நவம்பர், 2012

    Viswaroopam அமீர் ஓகே சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்

    கமல் இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம். மேலும் மேலும் பல தொழில்நுட்பங்களை சேர்த்து உலகத்தர படமாக உருவாகிக்கொண்டிருப்பதால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. கமலின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்ட டிரெய்லர்(AURO 3D) ரசிகர்களிடையே பரபரப்பையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்ட அதே சமயத்தில் சில சந்தேகங்களையும் எழுப்பிவிட்டது. விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டிருப்பதாலும், டிரெய்லரில் இஸ்லாமியர்கள் துப்பாக்கியுடன் அதிகம் காணப்படுவதாலும், இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கிடையே எழுந்துள்ளது.

    மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?

    வினவு
    கொச்சிக்கருகிலுள்ள கலமசேரி எச்எம்டி காலனியில் தனது தாயுடன் வசித்து வரும் மஞ்சு (26), தேயிலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அங்கு வேலை பார்த்து வந்த விற்பனை பிரதிநிதி பினு பிரமோத் உடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறிய மஞ்சுவும் பினுவும் 2005 இல் திருமணம் செய்து கொள்கின்றனர்.
    ஒரு மகனும் பிறந்து விட்ட நிலையில் அவர்களது குடும்பத்தில் பணச்சிக்கல் ஏற்படுகிறது. பினு தனது மனைவி மஞ்சுவின் கிட்னி ஒன்றை தனது நண்பனுக்கு வழங்கி அதன் மூலம் ரூ.10 லட்சம் சம்பாதித்து கடனை அடைக்க திட்டமிடுகிறான். அதற்காக மஞ்சுவுடன் அவன் பேச ஆரம்பித்தவுடன் முதலில் மறுத்த மஞ்சு, இல்லையெனில் அவன் மகனை கொலை செய்து விடுவான் என மிரட்டவே சம்மதிக்கிறாள்.

    Bihar cm நிதிஷ் குமார் பாகிஸ்தான் விஜயம்

     

    Bihar’s Chief Minister Nitish Kumar, flanked by Sindh Chief Minister Qaim Ali Shah and members of the Sindh Assembly, lays a floral wreath at Mazar-e-Quaid during his visit on Saturday.
     பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் கராச்சி நகரில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.நேற்று கராச்சியிலிருந்து பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு அவர் பயணமானார்.முன்னதாக, கராச்சி கவர்னர் இஷ்ரத்-உல்-இபாத் அளித்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார் பேசியதாவது:-