
பின்னாளில் மூடப்பட்ட ஏரிகளில் ஒன்று நுங்கம்பாக்கத்தின் ஏரி பகுதி. Tank bund road மற்றும் new tank street ஆகியவை நுங்கம்பாக்கம் ஏரியின் இருப்பை நினைவுகூரும் இரண்டு சாலைகள் ஆகும். இது மைலாப்பூரின் நீண்ட ஏரியை (long tank) பல காலம் நிரப்பி வந்தது. பிந்தையது ஒரு காலத்தில் மவுண்ட் ரோட்டின் மேற்கே 70 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது. இது 1920 களின் முற்பகுதியில் தியாகராய (டி) நகர் பகுதியின் மையத்தை உருவாக்குவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டது. நீண்ட ஏரியில் எஞ்சியிருந்தது மாம்பலம் ஏரியாக மாறியது, அதுவும் இறுதியில் நிரப்பப்பட்டு, அந்த பகுதியில் ஒரு லேக் வியூ சாலையை விட்டுச் சென்றது!
இந்நிலையில், நுங்கம்பாக்கம் ஏரியின் அசல் அளவு தெளிவாக பதிவு செய்யப்படவில்லை எனினும், பழைய வரைபடங்களிலிருந்துதோராயமாக டேங்க் பண்ட் ரோடு, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் ஹை ரோடு மற்றும் மஹலிங்கபுரம் பிரதான சாலைகளால் சூழப்பட்டிருந்தது என்று யூகிக்க முடியும்.