ஞாயிறு, 11 ஜனவரி, 2026

இரான் நாடு கடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவி - மீண்டும் ?

இரானிய எதிர்க்கட்சித் தலைவரும் இரானின் கடைசி மன்னரின் மகனுமான ரெசா பஹ்லவியின் உருவப்படம், இரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியில் உள்ள சிங்கம் மற்றும் சூரியன் சின்னத்தின் மீது பதிக்கப்பட்டுள்ளது.

 பிபிசி பாரசீக சேவை : இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியால் பதவியிறக்கப்பட்ட மன்னரின் மூத்த மகனான இவர் யார்?
பிறந்தது முதலே இரானின் 'மயில் சிம்மாசனத்தை' அலங்கரிக்கத் தயார் செய்யப்பட்ட ரெசா பஹ்லவி, 1979ஆம் ஆண்டு புரட்சி அவரது தந்தையின் முடியாட்சியைத் தூக்கியெறிந்தபோது, அமெரிக்காவில் போர் விமானி பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த அவரது தந்தை முகமது ரெசா ஷா பஹ்லவி, தஞ்சம் புக வேறு நாடு கிடைக்காமல் திணறியதையும், இறுதியில் எகிப்தில் புற்றுநோயால் இறந்ததையும் அவர் தொலைவில் இருந்து கவனித்தார்.

பராசக்தி - மிக ஆபத்தான ஒரு விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்!

May be an image of text that says "பராசக்த" ராதா மனோகர் : பராசக்தி - மிக ஆபத்தான ஒரு விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்திற்கே திருப்பு முனையாக அமைந்த ஒரு வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கு மிக பெரிய துணிச்சல் வேண்டும்!
இந்தி திணிப்புக்கு எதிராக அன்று தமிழகம் போர்க்கொடி தூக்கியது சாதாரண விடயம் அல்ல!
இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிரான உணர்வோ எதிர்ப்போ பெரிதாக  எழுந்திராத ஒரு நிலையில் தமிழகத்தில் அன்று மொழிப்போர் வெடித்ததே ஒரு அசாதாரண நிகழ்வுதான்.
அந்த ஆதிக்க மொழி வெறி,  மொழி திணிப்பு போன்றவை இன்றும் கூட தலைதூக்கி கொண்டிருக்கும்  காலகட்டத்தில்,
இந்த எரியும்  பிரச்னையை திரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
இது தடைகளை தாண்டி திரைக்கு வந்ததே பெரிய சாதனைதான்!
ஒரு சாதாரண திரைப்படத்தை விமர்சிப்பது போல் இந்த புதிய பராசக்தியை என்னால் விமர்சிக்க முடியாமல்  இருக்கிறது. 
இதற்கு காதல் காட்சிகளே தேவை இல்லை .

பராசக்தி தினமணி விமர்சனம்! தீ பரவியதா?

தினமணி : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதை நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே வழிநடத்துகிறார். அம்மாணவர்கள் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், இவர்களின் போராட்டங்கள் பேசப்படுகிறது. அப்படியான சூழலில், மாணவர் சேனையை வழிநடுத்தும் செழியனுக்கு ஒரு இழப்பு ஏற்பட, அக்குழு சத்தமில்லாமல் கலைகிறது.