சனி, 20 பிப்ரவரி, 2016

பொன்.ராதாகிருஷ்ணன்: கடலில் மூழ்கும் கப்பலுக்கு கப்டன்......? விஜயகாந்தை விட ஜெயலலிதாவே பெட்டர்?

கடலில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் செல்வாரா என கேள்வி எழுப்பினர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை;க் சந்திக்கவிருக்கின்றன.

வைகோ சாத்தூரில் போட்டி? நாயுடு வாக்குகள் கைகொடுக்குமாம்...கடந்த தேர்தலில் திமுகவை விட வைகோவுக்கு அதிக...

மதிமுக பொதுச்செயலர் வைகோ இந்தமுறை சாத்தூர் சட்டப் பேரவைத்
தொகுதியில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக, தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று திமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி னார். அந்தத் தேர்தலில் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவை 5,724 வாக்குகள் பின்னுக்குத் தள்ளி, 45,823 வாக்குகள் பெற்றார். இந்த கணக்குகளை வைத்து சாத்தூர் தனக்கு சாதகமாக இருக்கும் என அவர் கணக்குப் போடுவதாகச் சொல் லப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைமைக் கழகப் பொறுப்பாளர் ஒருவர், ’’திமுகவில் இருந்த காலம் தொட்டே பெரும்பாலும் விருதுநகர் மாவ ட்டத்தை மையப் படுத்தியே தேர்தல் களம் கண்டுவரும் வைகோ, இம்முறை சாத்தூர் தொகுதியை விரும்புவதற்கு சாத்தூர் தொகுதியில் நாயுடு சமூகத்தினர் கணிசமாக இருப்பதும் ஒரு காரணம்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சினிமா ஆண்கள்

webdunia.com தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் நடிகரின் மாப்பிள்ளையும் முன்னணி ஒல்லிக்குச்சி நடிகருமான ஒருவர் பற்றிய கிசுகிசு கோடம்பாக்கத்தில் அனலாக பறக்கிறது. சினிமாவில் அந்த மாதிரி விஷயங்கள் சகஜம் தான் என்றாலும், பல நடிகர்கள் பற்றிய விஷயங்கள் கிசுகிசுவோடு பிசுபிசுத்து போகும் ஆனால் இந்த மாப்பிள்ளை நடிகர் பற்றிய விவகாரம் ரொம்பவே ஓப்பனாக பேசப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மாப்பிள்ளை நடிகரின் அந்த மனம் கவர்ந்த நடிகை வேறு யாரும் இல்லைங்க சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் இருந்து இறக்குமதியான கீர்த்தமான ஆண் பெயரை கொண்ட நடிகை தான்.

கருப்பாக இருப்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல!

உலகமயமாக்கலின் மூலம் இங்கு நுழைந்த கார்ப்பரேட் பேய்கள்,  கருப்பினை நமக்கு அசிங்கமானதாக மூளைச் சலவை செய்து வெள்ளை நிறத்தைப் பெற களிம்புகளை நோக்கி ஓட வைத்தன. கருப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்தி இருப்பவை இந்த காஸ்மெடிக்ஸ். ஏழு நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பொய் என்று தெரிந்தும் அதனை வாங்க வைத்திருப்பதன் மூலம் நம்மை ஏமாளிகளாக்கி கொழுத்து பெருத்திருக்கின்றன இந்தப் பெருநிறுவனங்கள்.
என்னதான் நாம் நவநாகரீக மனிதர்களாக மாறி இருந்தாலும், நமது உடையும் பேச்சும் மாறி இருக்கும் அளவுக்கு நமது மனநிலை மாறவில்லை என்பதே உண்மை. அதில் முக்கியமானது இந்த நிறம். 'சிவிலைஸ்டு சொசைட்டி' ( Civilized Society )  என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம், உண்மையில் நிறம் என்ற ஒன்றை காட்டுமிராண்டி தனமாக தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நிற்கிறோம். அதுவும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிற வேறுபாடு குறித்த எண்ணம் ஆழமாக வேறூன்றி கிடக்கிறது.

JNU கண்ஹயா குமாரின் தேசவிரோத விடியோ போலி....பாஜக கும்பலின் தில்லுமுல்லு அம்பலம்

ஜெஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ஹையா குமார் கைது செய்யப்பட்ட பின், சமூக வலைத்தளங்களிலும், சில தொலைகாட்சி சேனல்களிலும் பரவிய வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீடியோக்களை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
கண்ஹயா குமார், கைது செய்யப்பட்ட போது, தேசத்திற்கு எதிராக அவர் கோஷம் எழுப்பியதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

விஜயகாந்த் கூட்டணி முடிவை காஞ்சிபுரத்திலும் அறிவிக்கவில்லை.....ஏரியா விற்பனைன்னா லேசா?

மக்களே மக்களே கிங்கா இருக்கணுமா கின்மேக்கரா இருக்கனுமா ?  அப்புறம் முடிவை அறிவிக்கிறேன் என்றார் சேலம்: காஞ்சிபுரத்தில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் பங்கேற்க
நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, 41 தொகுதிகளை பெற்றார். அதில், 28 இடங்கள் கிடைத்தது. ஓரிரு மாதங்களில் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறினார். தற்போது, 2016 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியும் காத்திருக்கிறது. 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம்' என, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறினாலும், முடிவு எடுப்பதில் விஜயகாந்த் குழப்ப நிலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணியா, பா.ஜ.,வா என்ற நிலையில் தான் அவர் உள்ளார் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.மக்ஸிமம் தொகுதிகளை பறிக்ககணும் நன்னா குடிக்கணும்  பிரேமலதா சந்தோசமா இருக்கணும் சுதீஷ் டெல்லிக்கு போகணும் அப்புறம் சு.சாமிகிட்ட கேக்கணும் ...இதாங்க நம்ப கொள்கை 

பிரேமலதா சாமியாட்டம்....ஜெயலலிதாவே உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே....

காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வேடலில் நடந்த தேமுதிக மாநாட்டின்போது நீண்ட உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சின்போது அவர் தமிழக அமைச்சர்களை சரமாரியாக சாடினார். அடிமைகள் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். a மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நீயெல்லாம் மனுஷனா என்று காட்டமாக கேட்டார். யுபிஎஸ் என்றார். உச்சகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சித்தார் பிரேமலதா. ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர் உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும் என்று அவர் பேசியதுதான் உச்சகட்ட மோசமான பேச்சு.நம்மளுக்கு என்னவோ இது ஒரு வகை  ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது....திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் சு சாமி ரொம்ப நொந்து போய்விட்டார் அதாய்ன் இவுங்க சாமியாடுறாய்ங்க?இப்ப திமுகவை குஷிப்படுத்த இந்த டிராமா...முந்தி அதிமுகவை குஷிப்படுத்த கலைஞர் மீது வசைமாரி.....ரொம்ப கேவலமாக  அரசியல் பண்றாய்ங்க  

அமைச்சர் ரமணா ஆபாச வாட்சாப்.....அமைச்சு,கட்சி பதவிகள் அனைத்தும் காலி

அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கம்: ஜெ. அறிவிப்பு தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார் திருவள்ளுர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் கவனித்துக்கொள்வார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். திருவள்ளுர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான பி.வி.ரமணா, அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இரண்டாவது முறையாகும். nakkheeran,in

Freedom 251..A Hoax..ரூ.145 கோடி வசூல்...உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன்.. சதுரங்க வேட்டை?

புதுடில்லி: சில ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே, மிகவும் விலை குறைவான, 'நானோ' காரை, டாடா நிறுவனம் அறிமுகம் செய்த போது, பல நாடுகள் வியப்புடன் பார்த்தன. தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.'இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை' என, சில தரப்பினர் கூறி வரும் நிலையில், 'இந்த மொபைல் போனை வேண்டி, முன்பதிவு செய்யும் அனைவருக்கும், ஜூன் மாதத்திற்குள் அளிப்போம்' என, 2015 செப்டம்பரில் உருவான, ரிங்கிங் பெல் நிறுவனம் கூறியுள்ளது.

2,000, 'டாஸ்மாக்' கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


சட்டசபை தேர்தல் நெருக்கடியால், கோவில், பள்ளி அருகிலுள்ள, 2,000, 'டாஸ்மாக்' கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மதுவிலக்கை அமல்படுத்துமாறு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், 'அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருப்பதால், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சமீபத்தில் தெரிவித்தார். < இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், பள்ளி, கல்லுாரி, கோவில்களுக்கு அருகிலுள்ள கடைகள், மது விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.

தினமலர்: காங்கிரஸ் அதிர்ச்சி....வெள்ளம்பாதித்த தொகுதிகளை திமுகவே எடுத்துகொள்ளும்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், காங்., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு அக்., மாதம் துவங்கி டிச., மாதம் வரை பெய்த பெரு மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது; நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட்டது.நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு செய்திருந்தால், எப்படியாவது இவர்களுக்குள் கசப்பு ஏற்படவேண்டும் என்று விரும்புவது தெரிகிறது. கசப்பு தொண்டரகளை சோர்வடைய செய்யும். அடிக்கடி திமுகவுக்கு ஏற்படும் விபத்து இதுதான்.  

சீமா முஸ்தாபா : அர்னாப் கோஸ்வாமியின் நேர்மை சந்தேகத்துக்கு உரியது

penniyam.com : தேசத்தையும் அரசாங்கத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பழைய தவறைத்தானே செய்கிறீர்கள்? அரசியல் சார்ந்த அரசாங்கங்கள் சிறியவை. விமர்சனத்தையும், எதிர்க்கருத்தையும் தாங்கும் சக்தியற்றவை. ஆனால் இந்தியா என்கிற நாடு மிகப்பெரியது. பரந்த மனதுடையது. விவாதங்களையும், வேற்றுமைகளையும் நேசிப்பது. அது விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் தாங்கும் சக்தி கொண்டது. இந்திரா காந்தி அவசர நிலையை அமுல்படுத்தினார். அப்போது காங்கிரஸ் தலைவராயிருந்த பரூவா இந்தியாவே இந்திரா; இந்திராவே இந்தியா என்றார். அது அப்படித்தானா? இந்தியா என்பது ஒரு அரசியல்வாதியான இந்திராவுக்கு மேலானது. அரசாங்கங்கள் பாதுகாப்பற்று உணரும்போதுதான் இப்படிப்பட்ட வாய்ப்பாடுகளை முன்னிறுத்துகின்றன. நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப்.
ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு
முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த தேவதூதனைப் போல்தான் முன்னிறுத்திக் கொள்கிறீர்கள்.

குஷ்பு இளங்கோவனின் பாட்டியாம்...EVKS இன் இன்றைய பட்டாசு

தமிழக காங்கிரஸ் தலைவர் இளாங்கோவன் இன்று பேசியபோது, குஷ்பு எனக்கு ஒரு வகையில்  பாட்டி முறை ஆகிறார் என்றார். பெரியார் திரைப்படத்தில் பெரியாராக நடிகர்   சத்யராஜ் மற்றும் அவரது மனைவி மணியம்மையாக குஷ்புவும் நடித்திருந்தார். பெரியாரின் மனைவி என்றால் எனக்கு குஷ்பு பாட்டி முறை தானே எனக்கூறி இளங்கோவன் சிரித்தார். மேலும் பேசிய அவர் நாம் ஒரு கூட்டமாக இல்லாமல் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக பழகுவது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பாகும் என்றார். மக்களுக்காக தியாகம் செய்த ஒரே தலைவர் சோனியாகாந்தி.

மீண்டும் பார்க்கவேண்டிய......வெள்ளைய இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்


சமுகத்தில் பெரும்பாலோர் கொஞ்சம் சட்ட விரோத காரியங்கள் செய்ய தயாராகவே உள்ளார்கள் என்பதுதான் இன்றைய கசப்பான  சமுக உண்மை.

இந்த சமுக அவலத்தை  கொஞ்சம் கூட பிரசார நெடியே இல்லாமல் எடுத்து காட்டியது பாராட்ட படவேண்டியது .
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....ஒரு மசாலா படம் மூளைக்கு இவ்வளவு வேலை கொடுக்கிறதே? வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....இப்படி  ஒரு பெயரில் படம். மக்களின் Unconscious Mind இல்  மிகவும் ஆழமாக பதிந்துள்ள ஒரு அபிப்பிராயத்தையே படத்தின் பெயராக வைத்த  புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்கவே முடியாது. அதே சமயம் கொஞ்சம் அமைதியை கிளறி விடும் சமுகநீதி provoking வாசமும் இந்த பெயரில் மறைந்திருக்கிறது. நகைச்சுவை படம் போல தெரிந்தாலும் அடிப்படையில் இது ஒரு feel good மூவிதான். இவ்வளவு சுத்தமான ஒரு அழகான ஒரு படம் தமிழில் மிகவும் அபூர்வமாகதான் வரும். இதில் ஆபாசமான ஒரு காட்சியும் இல்லை. இந்த படம்  வழக்கமான சினிமாக்களின் பாமரத்தனத்தை மீறி உயர்ந்த ஒரு இடத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்கிறது எனலாம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மும்பை சிவப்பு விளக்கு கல்விக்கு உலக ஆசிரியருக்கான விருது - இந்தியாவில் இருந்து ராபின்

ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என போற்றப்படும் உலகின் மிக உயரிய .
விருதான ‘குளோபல் டீச்சர்’ பரிசின் இந்தாண்டு இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுப்பவர்களின் பட்டியலை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் வெளியிட்டார்.  உலகின் 148 நாடுகளில் இருந்து வந்திருந்த 8000 துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து பத்து ஆசிரியர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பரிசை தட்டி செல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை காத்துக்கொண்டிருக்கிறது. துபாயில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும்  உலகளாவிய கல்வி மற்றும் திறன் குறித்த மாநாட்டில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.2012 இல் நிறுவப்பட்ட இந்த விருது எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடும் தன்னலமற்று சேவை புரிந்து வரும் ஆசிரியர்களை கவுரவிப்பதற்கும் வார்க்கி எனப்படும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.

இறந்த IPS அதிகாரி ஹரீஸ் காவல்துறையில் அரசியல்வாதிகளின் தலையீட்டை அனுமதிப்பதில்லை..தட்ஸ் ஆல் யுவர் ஆனார்

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்த   ஹாரிஸ்  நேர்மையாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி , யாருக்கும் வளைந்து கொடுக்கவில்லை என தெரிகிறது. ஜெயலலிதாவின் அந்தரங்க காவல்துறை ஆலோசகர் பதவியில் உள்ள  ராமானுஜம்  டிஜிபியாக இருந்தபோது, ஹரீஸ் மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பழிவாங்கும் நோக்கத்தோடு ஹரிசுக்கு பதவி உயர்வு வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். இவருக்குப் பின் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக கடும் மன உளைச்சலில் ஹரீஸ் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஹரீஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவரது உடல் அருகே மட்டன் பிரியாணியும் இருந்துள்ளது.

போலீஸ் அதிகாரியின் தற்கொலைக்கு டிஜிபி ராமனுஜம் காரணம்? வாட்சாப் இல் பரவும் செய்தி

is K Ramanujam, a former DGP who is now a special advisor to the TN government. - See more at: http://www.thenewsminute.com/

 Five months after a Tamil Nadu police officer, DSP Vishnupriya, was found dead in her official residence, the state was in for a rude shock with an IPS officer now being found dead at the Police Officers’ Mess in Chennai on Thursday at 10AM. While the police suspect that N Harish, a 2009-batch TN-cadre IPS officer, killed himself, the nature of his death is being investigated.
Several media reports suggest that Harish was depressed in recent months and that might have led to his death, but the reasons for his depression remain unknown, and there is much speculation in the media as to why he took the tragic step.

தினமணியின் பயம்: தேமுதிக திமுக கூட்டணி அமைந்து விடுமோ?

தேமுதிக தயங்குவது எதனால்?
விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார், தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதைத் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதன் வெற்றியும், ஆட்சியைப் பிடிக்கும் கனவும் தேமுதிகவின் முடிவில்தான் இருக்கிறது என்பதால், கட்சியின் மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை, விஜயகாந்தின் முடிவுக்காக, நகத்தைக் கடித்தபடி பதற்றத்தில் காத்திருக்கிறது திமுக.  இந்த செம்பு நேர்ல போயி பார்த்த மாதிரி நகத்தை கடித்த படி...அடங்கொப்பரான ஜிங்குஜாவுக்கு அளவே இல்லை 

வாழ்வாதாரத்துக்கு வழியில்லாததால் செம்மரம் வெட்டும் மலைவாழ் மக்கள்

தமிழக மலைக் கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தாததால் செம்மரம் வெட்டும் தொழிலுக்குச் செல்வதாக மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப் பகுதியில் கடந்த 6.4.2015-ல் செம்மரம் வெட்டச் சென்றதாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், திருப்பதி வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள சின்ன வீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி, வள்ளியூரைச் சேர்ந்த பெரிய பையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு வெற்றி...தேர்தல் ஜூரம் ஜெ.: சட்டசபையில் சலுகைகள் அறிவிப்பு

சென்னை : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ள ஜெயலலிதா, ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுவதாக அறிவித்துள்ளார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மறியல் செய்து தினமும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைதானார்கள்.

'சீட்' பெற கோடிகளுடன் அலையும் பிரமுகர்கள்

சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், ஐவரணியினரின் வீடுகளுக்கும், தி.மு.க.,வினர், 'ஒன்மேன் குரூப்' வீடுகளுக்கும், 'சூட்கேஸ்'களுடன் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, பிரதான கட்சிகள் எல்லாம், விருப்ப மனுக்களை பெற்றுள்ளன.புதிய பட்டியல்:
அ.தி.மு.க.,வை பொறுத்தமட்டில், தனியார் துப்பறியும் நிறுவனம், உளவுத் துறை, ஐவரணி, விருப்ப மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரிகள் அணி என, நான்கு தரப்பினர் தரும், வேட்பாளர்கள் பட்டியல் அடிப்படையில், தொகுதிக்கு மூவர் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை நேர்காணலுக்கு அழைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.  இந்த அறிவுகெட்ட ஜென்மங்கள் இந்த கோடிகளைவைத்து, நல்ல தொழில்சாலைகள் தொடங்கினால் பலருக்கு தொழில் வாய்ப்பும், அரசியலைவிட நல்ல பேரும், வருமானமும் வரும். சில செம்புகள் மேக் இன் இந்தியா work out ஆகுதுன்னு கருத்து எழுதும். நஷ்டம் வந்தால், அரசியலில் இது சகஜம் என்று போனால் போகுது கருப்பு பணம் தானே என்று இருக்கலாம்.

தினமலர்: சட்டசபையில் சபரீசன் விவகாரம்.....யார் இந்த சபரீசன்?

சட்டசபையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
மார்கண்டேயன் பேசியதால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். 'சபரீசன் குறித்து, அவர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோஷமிட்டபட்டி வலியுத்தினர். சபையில், கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. இதனால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள், கருணாநிதியிடம் விளக்கினர். அதைத் தொடர்ந்து, 'இனி சபை நடவடிக்கைகளில் தி.மு.க., பங்கேற்காது' என, முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா : அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம்

சென்னை,:''கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், 110வது விதியின் கீழ், நேற்று அவர் பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மக்கள் நலன் காக்க, எவ்வாறெல்லாம் செயல்படும்' என, தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு
இருந்தோம்.  Natarajan Ramanathan : நான் சமீபத்தில் தமிழ் நாட்டின் சில பகுதிகளுக்கு சொந்த வேலையாக சென்றுவந்தேன். அனைத்து இடங்களிலும் பெருவாரியாக மக்கள் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என்று திடமாக நம்புகிறார்கள். ஒரு இடத்தில்கூட திமுக வரலாம் என்றுகூட யாருமே சொல்லவில்லை. ஆனால் இப்போது இருக்கும் அளவு MLA மீண்டும் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஆச்சரியமாக BJP க்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளதை அறியமுடிந்தது....நெசமாலுமா? 

ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !


காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள்
ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.

மத்திய பல்கலை கழகங்களில் 207 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பறப்பது கட்டாயம்: ஸ்மிருதி இராணி

டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 207 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விடுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் டெல்லியில் அவசர கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

ராஜஸ்தான் போலீஸ் பெண் போட்டியாளர்களின் மார்பு அளவை....பாஜக ஆளும் மாநிலத்தில்...


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காவலர் பணிக்கு ஆள் எடுக்கும் முகாம் ஒன்றில் ஆண் போலீஸ்காரர் ஒருவர் பெண் போட்டியாளர்களின் உடல் அளவுகளை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார் மாவட்டத்தில் வனக்காவலர் பணிக்கு ஆள் எடுக்கும் முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களுக்கு, அங்கே இருந்த ஆண் காவலர் ஒருவர் உயரம், மார்பளவு உள்ளிட்ட அளவுகளை எடுத்துள்ளார். இது வீடியோவாக இணையத்தில் வெளியானது.
இதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் போட்டியாளர்களுக்கு பெண் போலீசே இவ்வாறு செய்ய வேண்டும் என இந்த செயலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உதவி போலீஸ் சுப்பிரண்டன்ட் போலீஸ் வளாகத்திலே இறந்து கிடந்தார்

Senior IPS officer found dead in Chennai Police Officers Mess
32-year-old, N Harish, a native of Karnataka, தமிழக காவல்துறையைச் சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டன்ட் ஹரிஸ் சென்னை எக்மோரில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் மெஸ்ஸிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.  அவரது பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தன் பேட்சில் உள்ள மற்ற அதிகாரிகள் எல்லாம் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று விட்ட நிலையில் 2009- பேட்ச் அதிகாரியான ஹரிஸுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்பது மற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்வியாக எழுந்திருக்கிறது.

லக்னோ..திருமண கொண்டாட்ட துப்பாக்கி வெடித்து மணமகன் பலி

லக்னோ உத்தர பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக மணமகன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் என்ற பகுதியில் நேற்று இரவு மித் ரஸ்தோகி என்ற 28 வயது நபருக்கு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது மகிழ்ச்சி கொண்டத்திற்காக வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளது. 

ட்ராபிக் ராமசாமி: விஜயகாந்த் கட்சி தேர்தலை தனியேதான் சந்திக்கும் என்று கருதுகிறேன்

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. ஏற்கனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை டிராபிக் ராமசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

சிறுமி--தாத்தா திருமணம் ...8 அல்லது 9 வயது சிறுமிகள் 1.5 கோடி வருடம் தோறும்

ஒரு பனிரெண்டு வயது சிறுமியுடன், ஒரு முதியவர் திருமண கோலத்தில் நின்றிருந்த விவகாரம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லெபனானில் ஒரு கடற்கரை அருகில், ஒரு தாத்தா, தன்னுடைய பேத்தி வயதில் உள்ள் ஒரு சிறுமியுடன் திருமண கோலத்தில் நின்றிருந்தார். மணக்கோலத்தில் நின்றிருந்த அவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.அந்த வழியாக வந்தவர்கள் இதை கவனித்து, என்ன விஷயம் என்று அந்த புகைப்படம் எடுப்பவரை விசாரித்தனர். அதற்கு அவர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தி மு க-வினருக்கு சமூக வலைதளப் பயிற்சி...

dmdk feb 1 7 stalinதிமுக பொருளாளர் மு..க.ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவில், ”சென்னையில் கழகத்தின் சார்பில்,”சமூக வலைதளப் பயிற்சி கருத்தரங்கம்” நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளங்களைச் சுமார் 200 மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் நிலை யில், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்ற வர்களில் பெரும்பாலானவர்கள் செல்போன் மற்றும் இணையத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள். வெளிப்படையான, ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு சமூக வலை தளங்கள் பேருதவியாக இருக்கிறது என கருதுகிறேன்.  சமுகவளைதலங்களின் வலிமையை பற்றி இன்னும் பெரிய கட்சிகள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றே தெரிகிறது

அதிமுக - பாஜக கூட்டணி.....வாசன் கோஷ்டி அதிர்ச்சி...போட்டது விளைஞ்சதிடி கண்ணம்மா....

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பான பேச்சு துவங்கி விட்டதாக, 
வெளியான தகவலை அடுத்து, த.மா.கா., தலைவர் வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதன்பின், கட்சி மேலிடம் தங்களை மதிக்கவில்லை என, காரணம் கூறி, காங்கிரசிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார் வாசன். தன் தந்தை மூப்பனாரால், 1996ல் துவக்கப்பட்டு, பின் காங்கிரசில் இணைக்கப்பட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் பெயரில், மீண்டும் கட்சியை துவக்கினார். வரும் சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, த.மா.கா., போட்டியிட விரும்புகிறது. ஆனால், இதுதொடர்பாக நடந்த ரகசிய பேச்சில், த.மா.கா.,வுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, 'சீட்' தரப்படும் என, அ.தி.மு.க., மேலிடம் தெரிவித்ததால், வாசனும், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  ஆனாலும் வாசன்  அதிர்ச்சி என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது அவரு சீனிலேயே இல்லை அப்புறம் என்னா ? "அதிர்ச்சி"

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்து இலவசம்

சென்னை மாநகரப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழக சட்டப்பேரவையில் 110ஆம் எண் விதியின் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதன்படி சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய விரும்பும் முதியவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்யது அளித்தால், மாதத்திற்கு 10 டோக்கன்கள் தரப்படும் எனவும் அதனை பயணச் சீட்டைப் போலப் பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்யலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை...நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் கொலை

A nursing student was found murdered in a thorny bush at Chokkanathapuram near Panaiyur under Silaiman police station limits late on Wednesday evening.
Police said that the 18-year-old girl, a sophomore of a private nursing college in Tirupuvanam, had gone out to bring back the cattle let out for grazing in the nearby land.மதுரை அருகே நர்சிங் கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பூனையூர் சிந்தாமணியை சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கல்லுாரி முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். ஆடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர், மாணவி ஆடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்திற்கு தேடிச்சென்றுள்ளனர்.ஆடுகள் மட்டும் தானாக மேய்ந்து கொண்டிருக்க மாணவியின் உடல் முட்புதருக்குள் கிடந்துள்ளது. அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சிலைமான் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

புற்றுநோயை தடுக்கும் சீரகம்

சீரகம் புற்றுநோயை தடுக்கும் வல்லமையை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.சீரகத்தை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம்; சேர்த்துக் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துகள் முடக்கம்....சென்னையின் பிரபல தாதா

சென்னை தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.>சென்னை நகரை கலக்கிய பிரபல தாதா காதுகுத்து ரவி. சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்த இவர் மீது கொலை, ஆட்கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது. >சென்னை கே.கே.நகரில் நடந்த கதிரவன் கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாவார்.இவர் முறைகேடாக சேர்த்த சொத்துகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க, அமலாக்க பிரிவுக்கு சென்னை நகர காவல்துறையினர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அம்மாவின் படத்தை சவப்பெட்டி மீது ஒட்டிய நமக்கு வாய்த்த அடிமைகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ இழப்பீடு தொகை 10 லட்ச ரூபாய்க்கான
காசோலையுடன் ,முதலமைச்சர் ஜெயலலிதா படத்தையும் சவப்பெட்டியின் அருகே பிடித்து வைத்திருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் ஒட்டப்பட்ட அம்மா படங்களுக்கு பின், தற்போது சியாச்சினில் பலியான ராணுவ வீரரின் சவப்பெட்டியில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. சிப்பாய் கணேசனின் மனைவிக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் போது எடுக்கப்பட்ட படத்தை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட படம் ஒன்றில் இத்தகைய காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.  பார்க்கவே என்னவோ மாதிரி இருக்கிறது...என்னத்த சொல்ல? 

Freedom 251 உலகின் மிக குறைந்த விலை ஸ்மார்ட் போன் ரூ 251...

உலகின் மிக குறைந்த விலையுள்ள ஸ்மார்ட் போன் இதுதான். இதன் விலை
ரூ  251மட்டும்தான்
The world's cheapest smartphone, Freedom 251, costing just Rs 251 will be launched in the country on Wednesday by Noida-based Ringing Bells Pvt. Ltd.
It was earlier reported that the phone would be officially unveiled in New Delhi on Wednesday evening at an event that will be attended by Dr. Murli Manohar Joshi, MP, with Union Defence Minister Sri Manohar Parrikar as the chief guest.
The phone comes with preinstalled government apps like 'Swachh Bharat'.
According to the company website, the device will feature:
1) 4-inch QHD IPS display,
2) 1.3GHz quad-core processor
3) 1GB RAM
4) 8GB internal storage (expandable up to 32GB)

அழகிரி மறுப்பு: நான் அப்படி சொல்லவே இல்லை...எனக்கு facebook கே கிடையாது

சென்னை: திமுக பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி முகநூலில் கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கமே இல்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அழகிரிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை அந்த கூட்டணி வெல்ல முடியாது என்று அழகிரி கூறிய கருத்தை, யாராலும் ஏற்க முடியாது. அழகிரி செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை, அலட்சியப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். 

கேமராவோடு போராட்டத்திற்கான களத்தையும் தேர்ந்தெடுங்கள்.Arun Mo (அருண் தமிழ்ஸ்டுடியோ)

சினிமாவை வெறுமனே சினிமாவாக பார்க்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. சினிமாவை சமூகத்தின் களையெடுக்கும் ஊடகமாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக கல்வி அமைப்புகள், மாணவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள். நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்வது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஆளும் வர்க்கம் கோட்சேவை கடவுள் என்றால், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இல்லை என்று மறுத்துப் பேசினால் மறுப்பவர் தேச துரோகி என்றாகிப் போகிறார். தமிழ்நாட்டில் இத்தகைய மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்றாலும், கொஞ்சம் சுதாரித்துக் கொள்வது நல்லது. திரைப்படங்கள் இன்னமும் டூயட் பாடுவது எப்படி என்று இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்காமல், களத்தில் துணிவுடன் போராதுவது எப்படி கற்றுக்கொடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. கேமராவோடு போராட்டத்திற்கான வாசகத்தையும் படைப்பாளிகள் எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புதன், 17 பிப்ரவரி, 2016

இஸ்லாம் தேசத்தில் முதன்முறையாக இந்து திருமணத்திற்கு சட்டம்!

உலக வரலாற்றில் முதன்முதலாக முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஒரு நாடு இந்து மதம் சார்ந்த திருமனத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. சுமார் 70 வருடங்களாக பாகிஸ்தான் வாழ் இந்து சமுகமானது தங்களின் திருமணத்திற்கான சட்ட உரிமைகளை கோரிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்துக்கள் அதிகமாக வசிக்கும் (3 மில்லியன்) சிந்து மாகணத்தில் மேற்படி திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வு அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், கட்டாய திருமணங்கள், குழந்தைகள் திருமணங்கள், விதவைகளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமை என்பவற்றில் பல்வேறு குறைகளை கொண்டுள்ளனர்.

பஹுபாலி ஒரு ஸ்டுபிட் படம்..நடிகை ஜமுனா சாட்டை

பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு நடனதபஸ்வினி
என்கிற விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. அப்போது சினிமா உலகம் குறித்து அவர் கோபத்துடன் பேசினார். அவர் கூறியதாவது: நான் சினிமா பார்த்து பல காலம் ஆகிறது. என் பேரன் விருப்பப்பட்டதால் பாகுபலி படம் பார்த்தேன். அது ஒரு ஸ்டுப்பிட் படம். வரலாற்று சிறப்புமிக்க படம் என்று எடுத்துவிட்டு படம் முழுவதும் விஷுவல் எஃபெக்ட் காண்பித்து அதை நிறைவு செய்திருக்கிறார்கள். தற்போதைய புதிய தொழில்நுட்பம் தவிர அதில் சொல்லும்படி ஏதும் இல்லை. கதாநாயகனைத் தவிர இதர கதாபாத்திரங்களுக்குச் சரியான தேர்வு இல்லை என்று கூறினார்.

இந்த உரைதான் ஜவகர்லால் பல்கலைகழகத்தில் புயலை கிளப்பி நாடு முழுவது எதிரொலிக்கிறது

vikatan,com :ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அடுத்த நாள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிவினைக் குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். வியாழன்று அவர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் இது.. "காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். ஹரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத் சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரை சூட்டியுள்ளது. எங்களுக்குத் தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை.

டொனால்ட் ட்ரம்ப் – அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர் !

donald-trump-3vinavu.com”நான் சீனாவை வைத்து அந்த ஆளை ஏதோ ஒரு வகையில் சீக்கிரத்தில் ஒழித்து விடுவேன்”
”அப்படியென்றால் அது அரசியல் படுகொலையாக இருக்குமா?”
”அதை விட மோசமான முறைகள் கூட இருக்கிறது. இவன் ரொம்ப மோசமான ஆள் தெரியுமில்லையா?
இது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. நெறியாளர் பேட்டியெடுப்பது யாராவது மாபியா கும்பலின் தலைவனாக இருக்குமோ என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? குழப்பமே வேண்டாம், பேசியது மிக பயங்கரமான கார்ப்பரேட் மாஃபியா தான் . ஆனால், கெடுவாய்ப்பாக மேற்படி கார்ப்பரேட் மாஃபியா தான் எதிர்வரும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றவர். படுகொலையை விட மோசமாக ஏதோ செய்யப் போவதாக முழங்கியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். இந்த ’நல்லவரின்’ வாயால் கெட்டவர் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பவர் கிம் ஜோங் உன், வட கொரிய அதிபர்.

பாடியாலா நீதிமன்ற வாசலில் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீது தாக்குதல்

தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் நேரு
பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா மீதான தேசத் துரோக வழக்கு விசாரணைக்காக வந்தபோது, வழக்கறிஞர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்;அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, பத்திரிகையாளர் ஒருவரும் நீதிமன்ற வாசலில் வைத்துத் தாக்கப்பட்டார். காவல்துறையினர் அந்தத் தாக்குதலைத் தடுக்க முனையவில்லை என அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அப்ஸல் குரு 2013ஆம் ஆண்டில்தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தியதற்காக கண்ணைய்யா கைதுசெய்யப்பட்டார். இந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதிக்கு குஷ்புவும் நக்மாவும்..... நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி

மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட குஷ்புவும், நக்மாவும்
குஷ்புவின் வீடு சாந்தோமில் உள்ளது. தான் வசிக்கும் தொகுதி என்பதாலும், வெள்ளம் பாதித்த நேரத்தில், மீனவர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு, தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை குஷ்பு வழங்கியதாலும், அவர் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என, அவரின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், குஷ்புக்கு போட்டியாக, கட்சியின் மகளிர் அணி பொது செயலர் நக்மாவும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதால், காங்கிரசில் பரபரப்பு உருவாகி உள்ளது.

மனிதகுல வரலாற்றையே பதிவு செய்திடும் சூப்பர் குறுந்தகடு!

இதுவரை இல்லாத அளவு 360 டெராபைட் மின்னணுத் தகவல்களுடன் 1,380
 பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ளது.
 நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே இருந்தாலும், இதில் 360 டெராபைட் (3.6 லட்சம் ஜிகாபைட்) அளவிலான மின்னணுத் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai IIT காணமல் போன பிரக்திக்ஷா டேராடூன் ஆஸ்ரமத்தில்....ஆன்மீக தேடலாம்

கடந்த மாதம் சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து காணாமல் போன மாணவி,  டேராடூன் ஆசிரமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.மேலும் பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரின்  மகள் பிரதியுஷா சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார்.  26 வயதான இவர்,  ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். t;
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி திடீரென்று பிரதியுஷா மாயமானார். எனக்கு தெரிந்த ஒரு கோடீஸ்வர  அப்பன்காரன் ஊரை அடித்து உலைல போட்டான் மகளுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. ஒரு சாமியாருக்கு பின்னால் போய்விட்டாள். வேற வழி தெரியல்ல.  இளைய தலைமுறை கொஞ்சமாவது மனசாட்சியுடன் இருக்கும் பழைய தலைமுறையின் ஊழலை சகிக்காது 

ப்ரித்திகா யாஷினி ! நாட்டிலேயே முதல் எஸ்.ஐ. ஆகும் திருநங்கை!

நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர், உதவி காவல் ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை, நேற்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராகத் தேர்ச்சி பெற்ற 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் சுமித் சரண், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போது, சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பை ப்ரித்திகா யாஷினி பெற்றுள்ளார்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

இடைக்கால பட்ஜெட் கடன் 2,47,031 கோடிகள்...ஒவ்வொருவர் பேரிலும்..35,000 ரூபாய் கடன்...புரட்சி சாதனைங்கிறது இதைதான்

ஐந்தாண்டு ஆட்சி முடியும் தருவாயில். ...; ஜெயா அரசு சாதனை. .. 35,000 ரூபாய் கடன் ஒவ்வொருவர் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது... மொத்த கடன் இடைக்கால பட்ஜெட் படி 2,47,031 கோடிகள் தான்..
சென்னை அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது.  இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கடந்த 8-ந் தேதி வெளியிட்டிருந்தார்.  நாம எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை எங்க இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து ஆட்சியோ  காட்சியோ...அதாய்ன் நாமக்கு வேணும்

ஜெயலலிதாவைப் பார்த்து பயப்படுகிறீர்களா? ஸ்டாலின் 'மீட்' டில் அதிரடி கேள்விகள்!

சென்னையின் நட்சத்திர ஹோட்டலில் வைத்து கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். சந்திப்பு முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை நெருக்கடியான சூழலிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில் புறமுதுகிடாத விரல் விட்டு எண்ணக் கூடிய தலைவர்களில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. 'நமக்கு நாமே' பயணம் மூலம் கருணாநிதியின் மகனும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 'மக்கள் நேசன்' என்ற அடையாளத்தைப் பெற ஒரு சுற்று போய் வந்து விட்டார். அதேபோல் 'மீடியா நேசன்' என்ற எல்லைக்குள் வந்துவிடவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிதான் இது என்கின்றனர், இந்த 'மீட்' டில் கலந்து கொண்டவர்கள்.

கவிஞர் தாமரை :அப்பாவி தொண்டர்களை உசுப்பேற்றி விட்டு குளிர் காயும் த.தே.வி இயக்கத்தலைவர்கள்

விகடன்.com :கடந்த இரண்டு வாரங்களாக, தம்பி திலீபன் மகேந்திரன் இந்திய
தேசியக் கொடியை எரித்த விவகாரமும் அதன் பின்விளைவுகளும் செய்திகளை ஆக்கிரமித்து வருவதைப் பார்க்கிறேன் முகநூலில், தம்பி கொடியை எரிக்கும் புகைப்படத்தை அப்பட்டமாக வெளியிட்டு, ‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு’ அறைகூவல் விடுத்திருந்ததையும் அப்போதே கவனித்துக் கவலையுற்றேன். எனினும் அதற்காக நான் எந்தப் பதிவும் இடவில்லை, யாரையும் அழைத்து எச்சரிக்கை செய்யவுமில்லை.  எதற்காகவும் இனி அரசியல் பதிவுகள் இடுவதில்லை, அரசியல் களத்தில் நிற்பதில்லை, அரசியல் பேசுவதில்லை என்று நான் எடுத்த கடுமையான நிலைப்பாடு காரணமாக மௌனமாகக் கடந்து விட்டேன்.

தேர்தல் ஜுரம்...கோவிலில் குறிகேட்ட முற்போக்கு திராவிட விஜயகாந்த் பிரேமா சுதீஷ்....நாடு வெளங்கும்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் திருமங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் திமுக, மக்கள் நலன் கூட்டணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. இந்நிலையில், கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாகவும் அவர் குலதெய்வம் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருப்பதி ஆலயம் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார் என்னதான் குலசாமிகிட்ட கேட்டலும் கடைசில சு சாமியின் சொல்வதைதான் கேட்பார்...பிரேமாவும் சுதீசும் சும்மா விட்டுடுவாங்களா?