சனி, 23 ஏப்ரல், 2022

சபரிமாலா தன்னை அறியாமலே ஜிஹாதியாக மாறிவிடுவாரா? மத தீவிரவாதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை!


 Rishvin Ismath
:  Birds of a feather flock together என்று சொல்வார்கள்.
அதே போன்று Coming events cast their shadows before என்றும் சொல்வார்கள்.
இவற்றைச் சொல்லி விட்டதால் சபரிமாலாவை ஜிஹாதி என்றோ, பயங்கரவாதி என்றோ சொல்லிவிட்டேன் என்று தயவு செய்து யாரும் தப்பாகக் கருதிவிட வேண்டாம்.
எனினும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற முற்படும் ஒருவர், தனது பின்பற்றுதலை மக்கா இஸ்லாத்துடன் மட்டுப் படுத்திக் கொள்ளாமல்,
இஸ்லாத்தின் இறைதூதர் என்றும், அழகிய முன்மாதிரி என்றும் சொல்லப்படுகின்றவரின் மதீனா வாழ்க்கையையும் சேர்த்துத் தீவிரமாகப் பின்பற்ற முயலும் பொழுது,
அவர் தன்னை அறியாமலே ஜிஹாதியாக மாறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது என்ற எச்சரிக்கையை விடுக்காமல் இருக்க முடியாதுள்ளது.

‘தி கிரேட் டிக்டேட்டர்’ - சார்லி சாப்ளினின் முதல் பேசும் படத்தில் சர்வாதிகார ஹிட்லருக்கு எதிராக பேசிய த உரை ... இன்று மிகப்பொருத்தமானது

 Vijayasankar Ramachandran  :  ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்கிற சார்லி சாப்ளின் முதல் பேசும் படத்தில் இடம் பெறும் இந்த உரை காலத்தைக் கடந்து நிற்பது. இங்கும் பொருத்தப் பாடுடையது.
(தமிழில்: ஆர். விஜயசங்கர்)
மன்னிக்கவும், ஆனால் நான் பேரரசனாக நினைக்கவில்லை. அது என் வேலை அல்ல. நான் யாரையும் ஆட்சி செய்யவோ அல்லது வெல்லவோ நினைக்கவில்லை.
முடிந்தால் நான் அனைவருக்கும் உதவ நினைக்கிறேன் –
அது யூதர், ஜெண்டைல், கருப்பர், வெள்ளையர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நினைக்கிறோம்.
மனிதப் பிறவிகள் அப்படித்தான்.
நாம் ஒவ்வொருவரும் மற்றொருவரின் மகிழ்ச்சியினால் வாழ நினைக்கிறோம்,
துயரத்தினால் அல்ல. நாம் ஒருவரையொருவர் வெறுக்கவோ இகழவோ விரும்பவில்லை.

“தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும்” : முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

கலைஞர் செய்திகள் - விக்னேஷ் : பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை – 23.4.2022
“நம்முடைய உச்ச நீதிமன்றத்தினுடைய தலைமை நீதியரசர் அவர்கள் பொறுப்பேற்று ஓர் ஆண்டு இன்றோடு நிறைவு பெறக்கூடிய வகையில், உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு இன்று ஓர் ஆண்டு முடிவடைகிறது. எனக்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி ஓர் ஆண்டு முடிவடையவிருக்கிறது.  

ஆந்திரா அரசு மருத்துவமனையில் இளம்பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரம்

 மாலைமலர் : இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆஸ்பத்திரி காவலாளிகள் 3 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:   ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
விஜயவாடா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இளம்பெண் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அங்குள்ள லிப்ட் அருகே ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் 3 காவலர்கள் இருந்தனர்.

துணிச்சலான பெண் எஸ் ஐ மார்க்க ரெட் தெரசா மீது கத்திக்குத்து .. பழிவாங்கிய ரவுடி

நக்கீரன் - பி சிவன் - ப.ராம்குமார்  : நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் மார்க்க ரெட் தெரசா.
இவர், இதே மாவட்டத்தின் வி.கே.புரம் நகரைச் சேர்ந்தவர். 2016ன் போது டைரக்ட் எஸ்.ஐ.யாகப் பயிற்சிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்,
கடந்த ஒராண்டாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியிலிருக்கிறார்.
மார்க்க ரெட் தெரசா பணியில் சேர்ந்தது முதல் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே காவல் லிமிட்டின் பழவூர் பால் பண்ணைத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ஆறுமுகம் (40) குடிபோதையில் பைக்கை ஒட்டி வந்திருக்கிறார்.

தமிழக அரசு பணியில் போலி சான்றிதழ் அச்சடித்து சேர்ந்த வடமாநிலத்தவர்கள் .. 500 பேர் சிக்கினர்

”தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
கலைஞர் செய்திகள்  :தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர 500க்கும் மேற்பட்டோர் போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது.
போலி தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழைகளை அளித்து நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணிகளில் சேரும் வட மாநிலத்தவர்களால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம்.
தமிழ்நாடு தேர்வுத்துறையின் அச்சிடப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் பணியில் சேர்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

துப்பு தந்தால் ரூ.50 லட்சம்: சூடு பிடிக்கும் ராமஜெயம் வழக்கு!

துப்பு தந்தால் ரூ.50 லட்சம்: சூடு பிடிக்கும் ராமஜெயம் வழக்கு!

மின்னம்பலம் : தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் கொலையாளிகள் குறித்து துப்பு தந்தால் ரூ. 50 லட்சம் ரொக்கம் அறிவிக்க இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் 2012ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அன்று நடைப் பயிற்சிக்காக வெளியே சென்று இருந்த ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு 33 பேர் உயிரிழப்பு ..; Islamic State claims role

 மாலைமலர் : ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து,
தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. br />கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

எடப்பாடி பழனிசாமி : நிலக்கரியை இருப்பில் வைத்திருக்க இந்த ஆட்சி தவறி விட்டது

நக்கீரன் செய்திப்பிரிவு : அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாததற்கு இதுதான் காரணம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 17,100 மெகாவாட் மின்தேவை இருக்கும்போது 13000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது.
கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது நிலக்கரி கையிருப்பை அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தவறிவிட்டது" எனக் குற்றம் சாட்டினார்.

ராமஜெயம் கொலை (அமைச்சர் நேருவின் தம்பி) வழக்கு : “புதிய துப்பு கிடைத்துள்ளது.. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” - காவல்துறை அறிக்கை!

ராமஜெயம் கொலை வழக்கு : “புதிய துப்பு கிடைத்துள்ளது.. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” - காவல்துறை அறிக்கை!

கலைஞர் செய்திகள் : அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளதாக தமிழக காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியை பாகிஸ்தான் உளவு அமைப்பு கடத்தியது

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்.. உளவு அமைப்பு கடத்தியதா? #WorldUpdates

கலைஞர் செய்திகள்   : பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்.. உளவு அமைப்பு கடத்தியதா? #WorldUpdates
பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டின்: மரியபோல் நகரைக் கைப்பற்றிவிட்டோம்

 tamilmurasu  : உக்­ரே­னின் தென்­து­றை­முக நக­ரான மரி­ய­போலை தமது படை­கள் கைப்­பற்­றி­விட்­ட­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் நேற்று அறி­வித்­தார்.
மரி­ய­போல் நக­ரி­லுள்ள மிகப் பெரிய அஸவ்ஸ்­தால் எஃகு ஆலை தவிர்த்து, அந்­ந­க­ரின் மற்ற அனைத்­துப் பகு­தி­களும் ரஷ்­யப் படை­களின் கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்­து­விட்­ட­தாக அந்­நாட்­டின் தற்­காப்பு அமைச்­சர் செர்கே ஷோய்கு தெரி­வித்­தார்.
“மரி­ய­போல் போன்ற தென்­ப­கு­தி­யி­லுள்ள முக்­கி­ய­மான மையத்­தைக் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­தி­ருப்­பது ரஷ்­யப் படை­க­ளுக்­குக் கிடைத்­துள்ள வெற்றி,” என்று ஷோய்­கு­வு­டன் சேர்ந்து தொலைக்­காட்­சி­வழி உரை­யாற்­றி­ய­போது திரு புட்­டின் குறிப்­பிட்­டார்.

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் உதவி - அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

 மாலைமலர் : உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்நகரைக் கைப்பற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு அதிபர் புதின் ஏற்கனவே  உத்தரவிட்டு இருந்தார்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா ராணுவம் கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 ஏப்ரல், 2022

இசைஞானியை இந்திய ஜனாதிபதியாக்க வேண்டும். .. பழம்பெரும் பத்திரிகையாளர் எல் ஆர் ஜெகதீசன்

 LR Jagadheesan:  அம்பேட்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டில் உருவான நவதலித்திய அரசியல் என்பது அரசு ஊழியர் நலன்கள்; NGOக்களின் தேவைகள்;
கிறிஸ்தவ மிஷினரிகளின் வழிகாட்டுதல்கள்,
மற்றும் RSS அரவணைப்பு மற்றும் ஊக்குவிப்புகள்,
என்கிற பல்வேறு காரணிகளால் வளர்ந்து வலுப்பெற்று இன்று ஒற்றைஜாதிச்சங்க அணிதிரட்டலாய் வந்து முடிந்திருக்கிறது ,
என்கிற கசப்பான உண்மையை இளம் தலைமுறைக்கு முகத்தில் அறைந்து புரியவைத்த பொதுசேவைக்காகவே,
 இசைஞானியை இந்திய ஜனாதிபதியாக்க வேண்டும்.
அந்த பதவிக்கான எல்லா தகுதிகளும் அவருக்குண்டு. அவர் அங்கே அமரவேண்டும் என்பதை நான் முழுமனதோடு கோருகிறேன். ஆதரிக்கிறேன்.
காலமறிந்து இளையராஜா செய்திருக்கும் இந்த மாபெரும் பொதுச்சேவையில் சந்தேகமிருப்பவர்கள் முகநூலில் வேகமாய் இயங்கும்,

மெரீனாவில் குதிரை ஓட்டும் விக்னேஷ் போலீசாரால் அடித்து கொலை லாக்கப் மரணம்

சென்னை மெரீனா பீச்சில் குதிரை ஓட்டுபவர்திரு விக்னேஷ் என்பவர்
இவரை கைது செய்த  போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்து கொலைசெய்ததாக தெரிகிறது.
இது பற்றிய செய்திகளை ஊடகங்கள் பேச மறுப்பது போல தெரிகிறது
இருட்டடிப்பு நடக்கிறதா?
ஏழை பாழை என்றால் கேட்க நாதியில்லையா?
கிரிமினல் போலீசார் வெறுமனே சாத்தான் குளத்தில் மட்டும் இல்லை ..

திருப்பத்தூர் ஆசிரியரை கடுமையாக தாக்க முயற்சித்த மாணவர் இடை நிறுத்தம்

 மாலைமலர் : அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் எனது பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அவன் நன்றாக படிக்க வேண்டும் என கூறி விட்டுச் செல்வார்கள்.
அப்போது பள்ளிகளில் ஆசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் மாணவர்கள் இருப்பார்கள். கல்வி, ஒழுக்கம் என மாணவர்களிடமும் நல்ல பழக்கங்கள் வளர்ந்து வந்தன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகிறார்

 தினத்தந்தி : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) இந்தியா வருகிறார். புறப்படுவதற்கு முன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘இரு தரப்பு உறவுகள் வலுவடையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் லண்டனில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு இன்று வந்து சேருகிறார். அங்கு முதலீடு மற்றும் வர்த்தக விஷயங்களை கவனிக்கிறார். அங்குள்ள பல்கலைக்கழகத்துக்கும் செல்கிறார். சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
22-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். அவரது இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 20 ஏப்ரல், 2022

கொடநாடு வழக்கு சசிகலாவுக்கு அழைப்பு . எடப்பாடியின் நடுக்கம்

 மின்னம்பலம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி மர்ம கும்பல் புகுந்து கொள்ளையடித்ததோடு தங்களை தடுக்க முயன்ற எஸ்டேட்டு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர். அடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விபத்தில் மரணம் போன்ற திடுக்கிடும் சம்பவங்கள் நடந்தன.
தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விசாரணை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் இந்தக் கொலை கொள்ளை சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். சசிகலா சிறையில் இருந்தார்.

எலெக்டிரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்காக புதிய பேட்டரி கொள்கையை வகுக்க ஒன்றிய அரசு முடிவு

 கலைஞர் செய்திகளை - ஜனனி : வெடித்து சிதறும் இ-பைக்குகள்.. புது கொள்கையை உருவாக்கும் போக்குவரத்துத் துறை.. என்ன செய்யப்போகிறது அரசு?
 பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்டு வருவதால் பொதுமக்களின் கவனம் மின்சார வாகனங்களின் மீது திரும்பியிருக்கிறது. இருப்பினும் ஒரு சில மின்சார வாகனங்களை தவிர மற்றவற்றில் தொடர்ந்து கோளாறு கொடுத்து வருகிறது.
லட்சக்கணக்கில் காசு கட்டி வாங்கிய சிறிது நாட்களிலேயே பெரியளவிலான கோளாறு கொடுப்பதோ அல்லது வெடித்து சிதறுவது மின்சார வாகன பயணாளர்களை பெரிதும் அச்சமடைய வைத்திருக்கிறது.

இயக்குனர் பாக்கியராஜ் : பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள

 மாலைமலர் : சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் பிரதமர் மோடி குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்- இயக்குநர் பாக்கியராஜ்
திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ்- பிரதமர் மோடி
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்கியராஜ் மேலும் கூறியதாவது:-

சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையங்கள்

 மின்னம்பலம் : சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தொழில் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில் நேற்று (ஏப்ரல் 19) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20000 ஹெக்டர் நிலத்தை கைப்பற்றிய தமிழ்நாடு அரசு.. புதிய தொழிற்சாலைகளுக்கு

  Prasanna Venkatesh    -   good Returns Tamil :   :  தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டத்தைக் கையில் எடுத்துள்ள நிலையிலும், புதிதாக உற்பத்தி தளத்தை அமைக்கும் விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களுக்குப் போதுமான நிலத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு அதிகப்படியான நிலத்தைக் கைப்பற்றி வருகிறது.
அப்படி எந்தத் திட்டத்திற்காக, எந்த ஊரில் அதிக நிலத்தைத் தமிழக அரசு கைப்பற்றியுள்ளது தெரியுமா..?
தமிழக அரசு தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 20000 ஹெக்டர் நிலத்தைத் தற்போது கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒரு ஹெக்டர் என்றால் 2.47 ஏக்கர், அப்படியானால் தமிழக அரசு 49,421 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இலங்கையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு நால்வர் கவலைக்கிடம் .. பலர் காயம்

 தினத்தந்தி : இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவம்: அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
கொழும்பு,  அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது.
மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  

இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி அழைப்பாணை! ராகதேவன் மோடியை புகழ்ந்த பின்னணி!

இரண்டு முறை சென்ற ஜிஎஸ்டி சம்மன்: மோடியை இளையராஜா புகழ்ந்த பின்னணி!
மின்னம்பலம் : இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடி பற்றிய ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார்.
அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் பல திட்டங்களை குறிப்பிட்டுப் பாராட்டிய இளையராஜா இன்றைய பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒப்பீட்டுக்கு சமூக தளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. கண்டித்தவர்களில் பலரும், "இளையராஜாவுக்கு பாஜக அரசிடமிருந்து என்ன நெருக்கடியோ... இப்படி பாராட்டியிருக்கிறார்" என்றும் கருத்து வெளியிட்டனர்.        அவர்களின் கணிப்பை போலவே இளையராஜாவுக்கு ஒன்றிய அரசிடமிருந்து கடுமையான நெருக்கடி ஒன்று கடந்த சில மாதங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து மின்னம்பலத்துக்கு கிடைத்த தகவல், மோடி பற்றிய இளையராஜாவின் மிக பெரிய புகழ்ச்சிக்கு பின்னணி இதுவாக இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவதில் வடகிழக்கு மாநிலங்களின் போர்க்கொடி

 இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவதில்  வடகிழக்கு மாநிலங்களின் எதிர்ப்பு எப்படி உள்ளது?
 BBC -திலீப் குமார் ஷர்மா  -    பிபிசி இந்திக்காக குவஹாத்தியில் இருந்து   : :
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் யோசனையை முன்வைத்தார். ஆனால் அசாம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இந்தி மொழியை விருப்பப் பாடமாக வைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியை 'இந்தியாவின் மொழி' என்று வர்ணித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

Surprise gift வருங்கால கணவருக்கு இளம்பெண் செய்த கொடூரம்.. ஆந்திராவில்

 கலைஞர் செய்திகள் : ஆந்திர மாநிலம் அனகா பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பா. கல்லூரி மாணவியான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமணத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணாவை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கிஃப்ட் கொடுப்பதாக கூறி அவரின் கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார்.
பிறகு தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணாவின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராமகிருஷ்ணா வலியால் துடித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இலங்கை நிதிநெருக்கடி பற்றி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளோடு பேச்சுவார்த்தை

 kuruvi.lk : இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஐந்து நாடுகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதைய நிலையைவிட எதிர்காலத்தில் உக்கிரமான உணவு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும் என மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கையரை அடித்து கொன்ற 6 பேருக்கு மரண தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை

.virakesari.lk :  இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் வைத்து கடந்த வருடம் டிசம்பர் 3ஆம் திகதி அடித்து கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தார்.
அத்துடன், பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

திங்கள், 18 ஏப்ரல், 2022

இதற்கும்... இளையராஜாவின் மோடி கருத்துக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை

 ராதா மனோகர் : கண்ணதாசன்களும் வாலிகளும் விசுவநாதன்களும் புகழின் உச்சியில் இருந்த காலங்களில் யார் யாரோ எல்லாம் எழுதி யார் யாரோ எல்லாம் இசையமைத்த பல அருமையான பாடல்களை  எல்லாம் கண்ணதாசன் வாலி  விஸ்வநாதன்களின் பாடல்களாகவே கருதப்பட்டது
இந்த வரிசையில் பின்பு இளையராஜாவும் வைரமுத்துவும் வந்தார்கள்
தமிழ் திரையுலகம் எத்தனையோ அற்புதமான கவிஞர்களையும் இசை மேதைகளையும் கண்டிருக்கிறது
விளம்பர உலகின் தவறுகளால் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தி என்பது ஒரு ஈவு இரக்கம் அற்ற வில்லனாகவே பல சமயங்களிலும் இருந்திருக்கிறது
அரசியலில் இந்த பொதுப்புத்தி என்பது வெளிப்படையாகவே தெரியும்
கலைஞர் என்றதும் உச்ச ஸ்தாயியில் நீட்டி முழக்கி ராகங்கள் பாடும் பொதுப்புத்தியில் எம்ஜியார் ஜெயலலிதா என்றது தாலாட்டு பாட தொடங்கி விடும்    

யுவன் சங்கர் ராஜா : நான் கறுப்புப் திராவிடன், பெருமைக்குரிய தமிழன் ... இளையராஜாவுக்கு பதிலடி?

 zeenews.india.com :  இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  பல கட்சிகளும், முன்னணி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  
தமிழ்தான் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து பெரும் ஆதரவும் கிடைத்தது.  
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் இந்தித் திணிப்பை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! தலிபான்கள் எச்சரிக்கை!

 விகடன் : ஆப்கானிஸ்தான் நாட்டின் கோஸ்ட், குனார் மாகாணங்களின் மீது பாகிஸ்தான் விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பத்திரிகையாளரும், ஆப்கானிஸ்தானின் பீஸ் வாட்ச் நிறுவனத்தின் நிறுவனருமான ஹபீப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ``பாகிஸ்தான் தனது ராணுவ விமானங்களின் மூலம் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மண்ணில் குண்டுவீசி 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது.

இளையராஜா மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் .. பாஜக சார்பில் நியமனம்?

zeenews.india.com/tamil - Arunachalam Parthiban : பஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..!
'மோடியும் அம்பேத்கரும்' என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டிவிட்டது. அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது தவறானது எனவும், முரணானது எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். அதேசமயம் இளையராஜாவின் கருத்து முற்றிலும் சரியானது என அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்தனர்.

ராகுல் காந்தி : இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் அல்ல. 40 லட்சம் பேர்

 கலைஞர் செய்திகள் : நீங்களும் உண்மையை பேச மாட்டீங்க..” கொரோனா மரணங்களை மூடி மறைத்த மோடி அரசு.. அம்பலப்படுத்திய ராகுல்காந்தி!
பிரதமர் மோடி உண்மையை சொல்லவும் மாட்டார். மற்றவர்கள் அதனை சொல்ல அனுமதிக்கவும் மாட்டார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசின் இயலாமை காரணாமாக கொரோனா வைரஸால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை அவர்கள் மறைத்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
உலகில் கொரொனா மூலம் உயிரிழந்தவர்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் உண்மையான கணக்கை உலக சுகாதார நிறுவனம் வெளியிட ஒன்றிய பாஜக அரசு தடையாக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு?

 நக்கீரன் செய்திப்பிரிவு :  நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்திருந்தது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தற்போது வரை ஆளுநர் பதிலளிக்காததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதேநேரத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்றன.

ரணில் விக்கிரமசிங்க : மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகிய கால தலைமை ஏற்க தயார்!

 வீரகேசரி  : மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (17.04.22) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்கு தீர்க்க முடியும் எனவும் ரணில் கூறியுள்ளார்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

2 ஜி ஸ்பெக்ட்ரம் - நாட்டிற்கே அவமானம் என்றனர்!காங்கிரசும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது!

May be an image of text that says ''Spectrum will boost Jio, Bharti's market share' "Telcos significantly widened footprint'

  A Raja ...:   2007ல் திருச்சூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்த பொழுது...
அருகில் அமர்ந்திருந்த ஒரு பார்ப்பணர், இந்த ராசாவுக்கு Spectrumன்னா என்னான்னு தெரியுமா!!!?? கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமா வச்சிக்கிட்டிருக்கானுவ என்று பேசிக்கொண்டு வந்தார்!
உண்மையிலேயே அப்பொழுது, எனக்கு Spectrum என்றால் என்னவென்று தெரியாது!
ஜெர்மனி நிறுவனத்தில் RSMஆக (South India) பணியில் இருந்த பொழுது எனது சம்பளம் Gross 5.5 Lakh/ Per Annum.
எனது கையில் ரூ. 10,000 மதிப்புள்ள Motorazer phone!
2006 ஜனவரியில் Nokia 1100 வைத்திருந்த என்னை எனது Manager திட்டியதால் Motorazer வாங்கிவிட்டேன்!
அன்று Samsung, LG வைத்திருந்தால் அவமானம் அல்லது ஏழை!
BlackBerry வைத்திருந்தால்... சமூகம் பெரிய இடம்!
ஒட்டு மொத்த Mobile Density 10 கோடி என்று எண்ணுகிறேன்.
WhatsApp, Facebook எல்லாம் இல்லை!

ரிஷி கபூரும் பதினைந்து வயது தென்னிந்திய நடிகையும்

இந்தி நடிகர் ரிஷி கபூர் (4 September 1952 — 30 April 2020).
இந்தி படவுலகை ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த கபூர் குடும்பத்தின் அன்றய வாரிசு நடிகர்  
தமிழ்நாட்டின் பழம் பெரும் திரைப்பட நிறுவனம் ஒன்று இவரை வைத்தது ஒரு இந்திப்படம் தயாரிக்க முடிவு செய்தது  (ஜெமினியோ விஜயா வாஹினியோ அல்ல)
இந்நிறுவன மானேஜர்  ரிஷிகபூரின் தந்தை  ராஜ்கபூரிடம் இது பற்றி கேட்டபோது அவர் சம்மதம் தெரிவித்து விட்டு மீதி  விடயங்களை ரிஷியிடம் பேசிக்கொள்ளுங்க என்று கூறினார்
அக் கம்பனி  மானேஜர் ரிஷிகபூரிடம் எல்லா விடயங்களையும் பேசி கதாநாயகியாக ஒரு தென்னிந்திய நடிகையின் பெயரை கூறினார்
அதற்கு ரிஷி கபூர் சம்மதிக்கவில்லை
மாறாக வேறு ஒரு இந்தி நடிகையின் பெயரை சிபாரிசு செய்தார்  
மனேஜரோ எமது நடிகை மிக நன்றாக நடிப்பார் அழகானவர் என்றெல்லாம் கூறிப்பார்த்தார்  
அதற்கு ரிஷிகபூர், அந்த நடிகையை தான் சென்னைக்கு வந்து நேரில் பார்த்து ஒரு இரண்டு மணித்தியாலங்கள் தனிமையில் பேசிய பின்பு முடிவு செய்வதாக கூறினார்
இதற்கு அந்த பெரிய பட நிறுவனமும் சம்மதித்தது
பின்பு சென்னையில் அவருக்காக ஒரு  எக்ஸ்பென்சிவ் நட்சத்திர  ஓட்டலில் ரூம் போட்டனர்

இளயராஜா : எனக்கு மோடியையும் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதிலென்ன தவறு?

 மின்னம்பலம் : அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் பாஜக உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர அமைச்சர் ரோஜா : இந்தியை எவராலும் திணிக்க முடியாது.. ஆனால்.. திருவண்ணாமலையில்

 விஷ்ணுnupriya R -   Oneindia Tamil : s திருவண்ணாமலை: இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார
சித்ரா பவுர்ணமியையொட்டி ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோஜா திருவண்Gadgets ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று வருகை தந்தார்.
அப்போது அவர் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகியோரை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 அவர் கூறுகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அண்ணாமலையாரை பார்க்காமல் இருந்தது மிகவும் வருத்தம் அளித்தது.
தற்போது அண்ணாமலையாரை தரிசனம் செய்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- முதலமைச்சர் ஸ்டாலின்

 மாலைமலர் வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.

உக்கிரேனின் ஜாவெலின், NLAW ஏவுகணை:தாக்குதல்களால் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் – காரணங்கள் என்னென்ன?

BBC - Tamil :  யுக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு மாதங்களுக்குள் ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துவிட்டது.
ரஷ்யா தனது டாங்கிகளை மோசமான முறைகளில் பயன்படுத்தியதும், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்களுமே இந்த இழப்புகளுக்குக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எத்தனை டாங்கிகளை ரஷ்யா இழந்திருக்கிறது?
ரஷ்யா 680 க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக யுக்ரேனின் ராணுவம் கூறுகிறது.
போர்க் களத்தில் இருந்து கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஓரிக்ஸ் எனப்படும் ராணுவ மற்றும் உளவுச் செய்திகளை வெளியிடும் வலைத்தளம், ரஷ்யா சுமார் 460 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் இழந்திருப்பதாகப்பதிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் 400க்கு குறி?.. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த சோனியாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

 Noorul Ahamed Jahaber Ali  --  tamil.oneindia.com  : டெல்லி: மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் வலு குறைவான மாநிலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு 370 -400 தொகுதி
2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து அக்கட்சிக்குள் இருந்த உட்கட்சிப்பூசல் வெட்டவெளிச்சமானது.
தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக, சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பதவியேற்றார்.
2 ஆண்டுகளாகியும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் அக்கட்சி உள்ளது.
 5 மாநில தேர்தல் படுதோல்வி 5 மாநில தேர்தல் படுதோல்வி இந்த நிலையில் நடந்த முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.

இளையராஜா அம்பேத்கர் நரேந்திர மோடி ராகதேவன் சங்கியாகி விட்டாரா?

 B.R.அரவிந்தாக்ஷன்  -  ஊடகவியலாளர்  :  இளையராஜாவுக்கு ஒரு கடிதம்!
அன்புக்குரிய இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு வணக்கம்,
பாபாசாகேப் Dr.அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு BlueKraft Digital Foundation என்ற அமைப்பு வெளியிட்ட "Ambedkar & Modi - Reformer’s Ideas, Performer’s Implementation" என்ற புத்தகத்திற்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை தமிழகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதை அறிவீர்கள்.
உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்,, சமூகவலைத்தளங்களில், உங்களை கடுமையாக விமர்சித்துவரும் நபர்களை  கொஞ்சமும் கண்டுகொள்ளாதீர்கள்.
அவர்களுக்கு பிடிக்காத நரேந்திரமோடியை,அவர்களுக்கு பிடித்த அம்பேத்காரோடு நீங்கள் ஒப்பிட்டு எழுதியதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.