வியாழன், 23 ஜூன், 2016

WHO : மதுரைதான் இந்தியாவிலேயே சுத்தமான காற்று நிறைந்த நகரம் ! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் சுத்தமான காற்று நிறைந்துள்ள நகரங்கள் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் கேரளத்தில் உள்ள கொல்லம், பத்தனம் திட்டா நகரங்களும், கர்நாடகாவில் ஹசன் நகரமும், தமிழகத்தின் மதுரையும் இடம் பெற்றுள்ளன. இது தவிர புதுச்சேரியும் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 நகரங்களுமே தென்னகத்தைச் சேர்ந்தவைதான். வட இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நகரங்களில் காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாம். காற்றில் அதிக மாசு கலந்துள்ள நகரங்களில் இந்தியாவில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, குவாலியர், ராய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, ஃபரிதாபாத், கான்பூர், அம்ரிஸ்தர், லூதியானா நகரங்களிலும் காற்றில் அதிக மாசு உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. விகடன்.காம்

தாடியை அகற்ற மறுத்த அமெரிக்க முஸ்லிம் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் முஸ்லிம் ஒருவர், தாடியை அகற்ற மறுத்த காரணத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, மசூத் சையத் என்ற 32 வயது அதிகாரி நீதிமன்றத்தில் போராடி வருகிறார். நியுயார்க் காவல் துறை விதிகளின்படி, அதில் பணியாற்றும் அதிகாரிகள் தாடி வைக்கக் கூடாது. ஆனால், மத நம்பிக்கைகளுக்காக, ஒரு மில்லி மீட்டர் வரை தாடி வைத்துக் கொள்ள அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதிக்கப்படுவதாக சையத்தின் வழக்கறிஞர், மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் புதன்கிழமை அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா தலித் மாணவியின் வாயில் ஆசிட் ஊற்றினார்கள்...ராகிங் என்று மாற்ற முயற்சி ... A 19-year-old dalit student


கேரள மாநிலத்தின் மலபுரம் மாவட்டத்தில் எடபால் என்ற ஊரைச் சேர்ந்தவர் அஸ்வதி. இவர் கலாபூராகி என்ற இடத்தில் உள்ள அல்கமர் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மே 9ஆம் தேதி அஸ்வதியின் சீனியர் எட்டு பேர் சேர்ந்து அவருக்கு நச்சு கலந்த திரவத்தை ராகிங் என்ற பெயரில் கொடுத்துள்ளனர்.
அதைக் குடித்ததால் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சு.சாமி : நான் மந்திரியானால் 7 நாட்களில் வருமானவரியை ஒழிப்பேன்.

I could do abolish income tax in seven days,says Subramanian Swamyடெல்லி: நான் மத்திய அரசின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்களில் வருமான வரியை ஒழிப்பேன் என ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகர்கள் கழகத்தில் அண்மையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நான் அரசின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்களில் வருமான வரியை ஒழிப்பேன். ஆனால் அரசின் அங்கமாக இல்லை என்பதால், அடுத்த 3 ஆண்டுகளில் வருமான வரியை முற்றிலும் ஒழிப்பேன்"  எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "பணக்காரர்களுக்கு வருமான வரியை எப்படி ஏமாற்றுவது என்பது தெரியும், ஏழைகள் வரி செலுத்தும் இடத்தில் இல்லை. எனவே, நடுத்தர வர்க்கத்தினர் இளம் தொழில் நிபுணர்கள், மாதாந்திர வருவாய் ஈட்டுபவர்கள்தான் வருமான வரி செலுத்துகின்றனர். அதாவது, வருமான வரி மூலம் திரட்டப்படும் ரூ.2 லட்சம் கோடி வருவாயை மற்ற வருவாய் மூலம் ஈடுகட்ட முடியும்.

புதன், 22 ஜூன், 2016

சுப்பிரமணியம் சாமி நிதி அமைச்சர்? அரசியலில் சு.சாமி, வைகோ,பாண்டியன் வகை விபச்சாரிகளுக்கு பணம் பதவிகளுக்கு பஞ்சமில்லை

சுப்பிரமணியன் சாமியின் உண்மையான இலக்கு அருண் ஜெட்லிதானே தவிர மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இல்லை என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. எம்.பி.யான சுப்பிரமணியசாமி சமீபத்தில் போர்க்கொடி தூக்கினார். ரகுராம்ராஜன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதையடுத்து மீண்டும் பதவி நீட்டிப்பு பெற விரும்பவில்லை என்று ரகுராம்ராஜன் அறிவித்தார்.தற்போது மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

யானையை வனத்துறையினர் கொடுமையாக சுட்டு கொன்றனர்....!


கோவை வரகலியார் ஆணை பயிற்சி முகாமில் அடைக்கப்பட்ட ஆண் காட்டு யானை மகராஜ் திடீரென மரணமடைந்தது. யானையின் மறைவுக்கு மதுக்கரை பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். யானையை மதுக்கரையிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை மகராஜ் இயற்கையாக மரணமடையவில்லை என்றும் வனத்துறையினரால் அது கொல்லப்பட்டிருக்கலாம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த ஒற்றை ஆண் காட்டு யானையை மதுக்கரை வனப்பகுதியில், கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுகிழமையன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வரகளியார் முகாமில் உள்ள கூண்டில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மகராஜ் என்ற அந்த யானை அடைக்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் நேரடி தேர்வு முறை ரத்து.. கவுன்சிலர்களே தெரிவு செய்வாய்ங்க... சம்பாதிக்க வேணுமே?

மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்கு  ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் அடிப்படையிலேயே தற்போதும் தேர்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாக்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு  திமுக தரப்பினர்  அறிமுக நிலையிலேயே  எதிர்ப்பு தெரிவித்தனர்.

போதைமருந்து கொலை வன்முறை.. பஞ்சாப்பை சீரழித்த பாரதிய ஜனதா + அகாலி தளம் களவாணிகள்

drug-children
ன்னை மன்னித்து விடுங்கள் தந்தையே. நான் உங்களை அவமதித்து விட்டேன். எனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி. கடவுளே.. நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு நன்றி” போதை மறுவாழ்வு மையம் வழங்கிய நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறான் அந்தப் பையன்.< நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது சீனியர் மாணவர்கள் சிலர் ஹெராயின் பொடியை முகர்வதைப் பார்த்தேன். எனக்கும் காசு வாங்காமலேயே கொடுத்தார்கள்
“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தந்தையோடு ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக மதுவைச் சுவைத்துப் பார்த்தேன். மற்ற பையன்கள் அதை ஜன்னத் (சொர்க்கம்) என்றார்கள்”
அந்தப் பையனுக்கு தற்போது 17 வயதாகிறது.

RSS ஸுக்கு யோகா – குஜராத் முதலைகளுக்கு FDI.. ! RAPE-ஐ தடுக்க முடியவில்லையா? அனுபவி! பத்ரி சேஷாத்ரிஅறிவிப்பு!

badhriநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராணுவத் தளவாடங்களை நம் நாடு வாங்கிக்கொண்டுதான் இருக்கும். உலகச் சந்தைகளில் மிகப் பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடு இந்தியா. அரசின் தளவாடங்கள் தயாரிக்கும் சில தொழிற்சாலைகள் தவிர்த்து, தேவைகள் அனைத்தையும் நாம் வெளிநாடுகளில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள், டாங்கிகள், பீரங்கிகள் முதல் பைனாக்குலர் வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வாங்கிக்கொண்டால் செலவு குறையும், ஊழல் குறையும், உள்நாட்டுப் பொருளாதாரம் வளரும், உள்ளூர்த் தொழில்கள் வளரும் என்பது புரிந்துகொள்ள எளிதானது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி.. தொழிற்நுட்பங்கள் யாருக்காக?;

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொட்டிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக தீபன் சங்கர், ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது அங்கு விஷவாயு தாக்கியதால் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
புகழ்பெற்ற தொழிற்நுட்ப வல்லுநர்களை, தொழிற்நுட்பங்களையும் உருவாக்கும் தமிழகத்தின் முன்னணி தொழிற்கல்வி கூடமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு 50%: மாநகராட்சியில் மட்டும்!

சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்யும் சட்டத்தை வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, மூன்றில் ஒருபங்கு இடஒதுக்கீடு வழங்கும் பழைய சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

கேரளா சமஸ்கிருதத்துக்கு தடை.. யோகா தின கொண்டாட்டத்தில் சமஸ்கிருதத்துக்கு இடமளிக்க முடியாது.. அமைச்சர் சைலஜா


நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலர் இதில் பங்கேற்றுள்ளனர். கேரளாவில் அரசு சார்பில் நேற்று யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில், அம்மாநில சுகாதார அமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவருமான சைலஜா பங்கேற்றார்.

தீவிரமடையும் வழக்கறிஞர் போராட்டம்


வழக்கறிஞர்களை தண்டிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கும் வழக்கறிஞர் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், இந்த சட்டத் திருத்தத்தை வாபஸ்பெறக் கோரியும், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நாளை பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் கடந்த 19ஆம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சட்டசபையில் இருந்து தி.மு.க- காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர். விஷன் 2025 திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே, மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச தி.மு.க. உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “தேர்தலின்போது 570 கோடி ரூபாய் பிடிபட்டது குறித்து கேட்டோம். கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும். திருப்பூர் அருகே கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதுபோன்ற பல பிரச்சினைகளை பேசினோம்

லைக்கா நிறுவனத்தில் ரெயிட், மோசடி, கைதுகள்...Lycamobile Paris offices raided in money-laundering probe

Lycamobile's offices in Paris have been raided and nineteen people arrested in an investigation into money-laundering, reports BuzzFeed. On 17 June, nine people were charged, including Lycamobile’s general manager in France, Alain Jochimek, the report said. The charges relate to money laundering of at least EUR 17 million and VAT fraud of several million euros, according to a statement from France's national financial prosecutor. லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Lycamobile French offices 'raided over fraud allegations' கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு உண்மையாகவே யோகா விற்பன்னர் ... மோடியை போல போஸ் கொடுக்கலை...

Ahead of International Yoga Day, it seems the entire world has been swept up by the yoga craze.
As the world gears up for this one-of-a-kind event, where people across the world will contort their bodies into various postures, here’s a rare image of the country’s first Prime Minister Pandit Jawaharlal Nehru practising the sirsasana (supported headstand).

This is what what the former PM wrote on the sirsasana. “Among my exercises one please me particularly -- the shiorshasana, standing on the head with the palms of the hands, fingers interlocked, supporting the back of the head, elbows on the floor, body vertical, upside down. I suppose physically this exercise is very good; I liked it even more for its psychological effects on me. The slightly comic position increased my good humour and made me a little more tolerant of life’s vagaries.”

செவ்வாய், 21 ஜூன், 2016

1974 ஜுன் 29-ந்தேதி கலைஞர் கூட்டிய கச்சதீவு ஒப்பந்த எதிர்ப்பு கூட்ட விபரம்

Venkat Ramanujam: கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)
2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)
5. வெங்கடசாமி ,ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)
9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)
10. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
11. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)
12. சக்தி மோகன் (பா.பிளாக்)
13. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:

100 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி .... For Sale?

புதுடெல்லி, சில முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 100 சதவீத அன்னிய முதலீடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முக்கிய சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி விமான சேவை, உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  தவிர ராணுவம், மருந்து, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை எளிதாக்கியது.

சட்டசபையில் அமளி.... கலைஞர் பற்றிய விமர்சனத்தால் திமுக உறுப்பினர்கள் ஆவேசம்

கருணாநிதி குறித்து அதிமுக எம்எல்ஏ பேசியதைக் கண்டித்து பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். சட்டப்பேரவையில் திங்கட்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), ''இந்தியாவிலேயே முதல்முதலாக ஊழலுக்காக சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்டவர் கருணாநிதி'' என கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், கருணாநிதி பற்றி உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் மறுப்பு தெரிவிக்கவே, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். பலர் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்குமாறு வலியுறுத்தினர்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ''கன்னிப் பேச்சு என்பதால் குற்றச்சாட்டு இல்லாமல் பேச வேண்டும்'' என ராஜன் செல்லப்பாவை கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டவாறு இருந்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

ஆங்கில பாடலுக்கு பரதநாட்டியம்... வைரல்


தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை ஆங்கிலப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படி பரதநாட்டிய வீடியோ ஒன்று யூடியுபில் கலக்கி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகியான எல்லி கோல்டிங்கின் மனதை வருடும் ஆங்கில பாடலான ‘லவ் மீ லைக் யு டு ‘ என்ற பாடலின் பின்னணியில் நமது பாரம்பரிய நடன கலையான பரதநாட்டியம் ஆடப்படுவதை யுடியுபில் எண்ணற்றோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த  நாட்டிய கலைஞர்கள் பிரியா வருணேஷ் குமார், பிரமிதா முகர்ஜி, மற்றும் சந்தியா முரளிதரன் ஆகிய மூவரால், இரண்டு நிமிடம் ஓடுமளவில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த வீடியோ கடந்த நவம்பர் 2015 இல் யூடியுபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு மலையாளம் ஓடியா கன்னடம் எல்லாம் செம்மொழிகளாம் ! மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான யுத்தம்?

சென்னை, தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு எந்த அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது? என்பதற்காக ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- செம்மொழி உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இதில், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்படுகின்றன.

திங்கள், 20 ஜூன், 2016

அம்பானி :பிரமோத் மகாஜன் மூலமாக தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியை சரிக்கட்டு.. எஸ்ஸார் டேப்புகள்

essarநாம் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் செய்யும் கட்சிகளை ஓட்டுப் போடுவதன் மூலம் தண்டித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே போல், ஒரு சில அதிகாரிகள் லஞ்ச ஊழல் புரியும் அயோக்கியர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகாயம், உமா சங்கரைப் போல. அவர்களைப் போன்ற அதிகாரிகளைப் போற்ற வேண்டும். இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. ஒருவேளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தால் நீதி மன்றத்தை நாடலாம். கட்டாயம் நீதி வெல்லும். சத்ய மேவ ஜெயதே. ஜெய் ஹிந்த்”.
என்றெல்லாம் நம்மைச் நம்பச் சொல்கின்றன முதலாளிய ஊடகங்கள். இந்த இன்பக் கனவு அவ்வப் போது கலையும் போதெல்லாம் யாராவது ஒரு அண்ணா ஹசாரே – அரவிந்த் கேஜ்ரிவாலை களமிறக்கி கழுத்தில் ஈரத் துணியைச் சுற்றுகின்றன ஊடகங்கள் – கத்தியோடு பின் தொடர்கிறார் மோடி.
உண்மை என்ன?

தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி !

கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன் )ஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்களை ரத்து செய்ததன் மூலம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனக் காட்டிக் கொண்டிருக்கிறது, தமிழகத் தேர்தல் ஆணையம். ஓட்டிற்குப் பணம் என்ற கழிசடை தேர்தல் பண்பாடு விளையாடியதில் தமிழகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் அரவக்குறிச்சிக்கும் அதிக வேறுபாடில்லை என்பது தமிழக மக்களுக்கும் தெரியும்; தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், பணப் பட்டுவாடா நடந்ததைக் கையும் களவுமாக, ஆதாரத்தோடு பிடிக்க முடிந்ததால்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சிரிக்காமல் கூறுகிறது, தேர்தல் ஆணையம். கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன்)

முதல்வர் ஏன் சந்தோஷமாக இல்லை? 12 மே, 2016 ஜெயலிதா ஜாதகம்...சதா நீதிமன்றம் சிறை வாசம் விசாரணை போன்ற?

வியாழன், 12 மே, 2016 ஜெயலிதா ஜாதகம்....குரு திசை சனி புத்தி...
ஜோதிடவாணி .காம் :தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் உண்மையிலேயே   மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு சாதகமாகும். மிகப்பலம் வாய்ந்தவர் என்று கருதப்படும் இவர் உண்மையில் மிகவும் பலம் குறைந்தவர். இவரது இயலாமையை இவர் மறைக்க போடும் வேஷங்களில் பல. அதில் ஒன்றுதான் சதா பிறரை தன்காலில் விழவைக்கும் வியாதி.  . ஒரு விபரீத பலவீன அசுர ஜாதகம் என்பது இவரது ஜாதகம்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதீத
அதிஷ்டம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு துரதிஷ்டமும் இவருக்கு இருக்கிறது.எவ்வளவு பிரமாண்டமான வெற்றிகளை சினிமாவிலும் அரசியலிலும் பெற்றிருந்தாலும் சதா நீதிமன்றம் சிறை வாசம் விசாரணை போன்ற துரதிஷ்டங்கள் இவரை தூங்க விடாமல் செய்யும். 
எவ்வளவு பெரிய பெரிய வெற்றிகளை இவர் அடைந்தாலும் இவர் ஒரு போதும் திருப்தி அடைவதே இல்லை .

அமெரிக்காவில் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் கைகோர்த்தது இந்தியத் தூதரகம்

அமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தை அங்குள்ள இந்தியத் தூதரகம் "இந்து சுயம்சேவாக் சங் "(எச் எஸ் எஸ்)எனும் அமைப்போடு சேர்ந்து கொண்டாடியிருக்கிறது. இந்தத் தகவலைத் தந்துள்ள "இந்து" ஏடு "அந்த அமைப்பானது ஆர் எஸ் எஸ் சின் துணை அமைப்பு" என்பதையும் தெரிவித்துள்ளது. அனைத்து மக்களின் வரிப்பணத் தில் நடக்கிற இந்திய அரசின் தூதரகம் எப்படி ஒரு தனியார் அமைப்போடு சேர்ந்து விழாஎடுக்கலாம்? செலவெல்லாம் அரசினுடையது, அந்த மேடையை ஆக்கிரமித்துக் கொள்வது அந்த தனியார் அமைப்பாக இருக்கும் ! அப்புறம் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் "மதச்சார்பற்ற அரசு" என்பது பொறிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாண்டியராஜனின் மகன் அனுமதியின்றி குட்டி விமானம்.. போலீஸ் விசாரணை

ஜூன் 20:அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். . தி.நகர் பகுதியில் நடிகர் பாண்டியராஜன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிருத்வி நடிகராக உள்ளார். இளைய மகன் பிரேமராஜன் (வயது 23). இவர் தனது நண்பர்களுடன் மயிலாப்பூர் சிஐடி நகர் அருகே உள்ள வேலஸ் கார்டன் பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் ஆளில்லாத குட்டி விமானத்தை பறக்க விட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருப்பவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.

கொடைக்கானல் வாய்க்காலை ஆக்கிரமித்த நடிகர் மாதவன்.. 4.88 ஏக்கர் நிலத்தை... உயர்நீதிமன்றம் அழைப்பாணை

நடிகர் மாதவன் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மாதவனிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய  அதிகார்கள் வாய்க்காலில் மின் கம்பங்களை   ஊன்றியுள்ளனர்.
கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில் நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்களின் முக்கிய நீராதாரமாகும். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை நடிகர் ஆர்.மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றியுள்ளனர். தம்பி ரொம்ப  நல்லவன்டா .. சொம்பை எடுத்து உள்ள வை

எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரம்: டேப்புகளில் பேசப்படும் விஷயங்களின் அம்பானி, பிரமோத் மகாஜன் பின்புலம்


எஸ்ஸார் டேப்புகள் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டேப்புகளில் பேசப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, இந்தியாவையே உலுக்கிய வழக்கான பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கு. 29.01.2003 அன்று அனில் அம்பானியும், சதீஷ் சேத்துக்கும் இடையேயான உரையாடல் பதிவாகியிருக்கிறது. அதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளரான ஷிவானி பட்நாகர் கொலைச் செய்யப்பட்ட வழக்கை பிரமோத் மகாஜனுக்கு ஆதரவாக நீர்த்துப்போகச் செய்வது குறித்து பேசப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான பிரச்னைகளை அமர்சிங்கை வைத்து ‘சமாளிப்பது’ என்றும் பேசப்படுகிறது. ஷிவானி பட்நாகர், பிரமோத் மகாஜன்
1999ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்நாகர் அவரது டெல்லி இல்லத்தில் கொலைச் செய்யப்பட்டார்.

வாசன் மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியேறினார்

மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் ஜி.கே.வாசன்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற விரும்பிய தமாகா, அழைப்பில்லாததால் அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை. கடைசியாக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியைச் சந்தித்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி இன்னும் இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுப்பப்பட்டு வந்தநிலையில்,

தில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலை வெளியேற்றுவோம்: சுப்பிரமணியன் சுவாமி

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் ரகுராம் ராஜன் நீடிக்க முடியாமல் வெளியேறுவதைப் போல தில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலை வெளியேற்றுவோம் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தில்லியில் மாநகராட்சி கவுன்சிலின் சட்ட ஆலோசகர் எம்.எம். கான் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும் பாஜக எம்.பி. மகேஷ் கிரிக்கும் தொடர்பிருக்கிறது என்பது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு. பாஜக எம்பி மகேஷ் கிரியை ஆளுநர் நஜீப் ஜங் காப்பாற்றுவதாகவும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். 
கேஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டுக்கு எதிரே நேற்று முதல் மகேஷ் கிரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். ஆனால் கேஜ்ரிவாலோ, எம்.எம்.கான் கொலை வழக்கில் மகேஷ் கிரியை மோடி போலீஸ் கைது செய்து விசாரிக்கத்தான் போகிறது என கூறியிருக்கிறார். 

தமிழிசையின் சோத்து அரசியல் .... சங்கராச்சாரி காலடியில் உங்க மந்திரி உட்கார்ந்த போதே சாயம் வெளுத்திருச்சு

0a
0a1cபாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா, அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க, ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக், வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்.பி.யையும், அதுக்கான சாதியையும், அந்த சாதியை காப்பாத்தும் மதத்தையும் வச்சிக்கிட்டு என் ஊட்ல வந்து சாப்பிடறதா சொல்றாங்கன்னா என்ன அர்த்தம்?  குமரி அனந்தனுக்கும் வசந்தகுமாருக்கும் எமது ஆழ்ந்த  காங்கிரஸ் வாழ்த்துக்கள்

3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் - கொங்கு மண்டலத்தின் யானைகளின் வாழ்விடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்

குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் | படம்: ர.கிருபாகரன் குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் | படம்: ர.கிருபாகரன் கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி என்பது காலம் காலமாக யானைகள் வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் உள்ளது.
கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியிருக்கிறது. வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் கோவையில் சமீப காலமாக வனவிலங்குகள் ஊடுருவல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. இதனிடையே விவசாய பரப்புகளில் சேதம் விளைவித்து வரும் காட்டுயானை ஒன்றை பிடித்து, கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால் யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் கோவையின் தென்மேற்குப் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் யானைகளின் வாழ்விடங்களாக இருந்தவை என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால பாறை ஓவியம் ஒன்றும் கோவையில் காணக்கிடைக்கிறது.

அதிமுக ஊழல்களை அம்பலப்படுத்துவேன் - திமுகவில் பழ.கருப்பையா

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தான் மனதளவில் திமுக-வில் இணைந்துவிட்டதாக சொல்லியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ ‘பழ.கருப்பையா மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறார். தொடர்ந்து அவர் இங்கேயே இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் இருக்கும்வரை, அவரும் எங்களோடு இருக்க வேண்டும். இடையில் ஏற்பட்ட கசப்புகளை மறக்க, எப்படி ஒரு கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறோமோ, அதைப் போல கற்கண்டை வாயிலே போட்டு மென்றிருக்கிறோம். அந்த இனிப்பின் உற்சாகத்தில் தொடர்வோம்; தொடர்ந்து கொண்டே இருப்போம்’ என, 'ரோமாபுரி பாண்டியன்' தொடர் பாராட்டு விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பேசினார். தமிழகத்தின் அரும்பெரும் தலைவராக இருக்கும் கருணாநிதி என்னை, திமுகவில் இணையக் கேட்டுக் கொண்ட பின், நான் மறுக்க முடியுமா?
மனதளவில், உடனே திமுக-வில் இணைந்து விட்டேன்.

மோடியும் மைத்திரியும் சேர்ந்து திறந்து வைத்த அமரர் துரையப்பா அரங்கம்...

தான் கொலையாளிகளின் இலக்கு என்பதை நன்கறிந்திருந்த அன்றைய யாழ் மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்கள்  ஒரு கத்தோலிக்க கிறீஸ்தவராவர்.  ஆனாலும்  
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொன்னாலையிலுள்ள வரதராஜ பெருமாள்  கோவிலில் சென்று வழிபடும் வழக்கம் உடையவர். ஜாதி மத பேதம் கடந்து மக்களின் அன்பை, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனம் கவர்ந்தவர். அதனால் ஜாதிய தமிழ் தேசியவாதிகளுக்கு அவர் பெரும் சவாலாக இருந்தார்.  அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றவர்களால்  உசுப்பி விடப்பட்ட   இளைஞர்கள் துரையப்பாவை கொலை செய்ய தருணம் பார்த்து காத்திருந்தனர் .  அதற்காக  அந்த சனிக்கிழமை பிரபாகரன் உள்ளிட்ட கொலைகாரர்கள் காத்திருந்தனர். அன்றில் இருந்துதான் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இரத்த ஆறு ஓடத்தொடங்கியது. அதற்கு  வரதராஜ பெருமாள் கோவிலில் சிந்திய துரையப்பாவின் இரத்தமே கட்டியம் கூறியது போல இருந்தது  . கோவில் படிக்கட்டுகளில் வைத்தே கொலையாளிகள்  அவருக்கு வணக்கம் கூறினார் அவரும் பதில் வணக்கம் கூறினார் அதேகணம் அவரை சுட்டு வீழ்த்தினார்கள் கொலையாளிகள்.
 யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா  மிகவும் ஒரு வித்தியாசமான மனிதர்.


ஞாயிறு, 19 ஜூன், 2016

500 விற்பனை குறைவான இடங்களில் டாஸ்மாக் மூடல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான கடைகள் விற்பனை குறைவான கடைகளாக உள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய கடைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.>அதிமுகவின் புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல் கட்டமாக 500 கடைகள் மூடப்படுவதாகவும், திறந்திருக்கும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12-ஆகக் குறைப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனைத் தொடந்து மூடப்படும் 500 கடைகளுக்கான பட்டியில் சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்படும் 14 கடைகள்

நான் சந்தோஷமாக இல்லை!’- செயற்குழுவில் வெடித்த ஜெயலலிதா

அவங்க 89 பேர் எதிர்ல உட்கார்ந்துட்டுச் சிரிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு வெற்றியா... இதை வெற்றி என்று சொல்லி, என்னால் சந்தோஷப்பட முடியலை. மொத்தத்தில் நான் சந்தோஷமாக இல்லை. இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்து வரவில்லை. எதிர்பார்க்காதது எல்லாம் பேசிவிட்டார். யாரும் எதிர்பார்க்காததை பேசுவதும், செய்வதும்தானே ஜெயலலிதா ஸ்டைல். அதிமுக-வின் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தோழி சசிகலா சகிதமாக கூட்டத்துக்கு வந்தார் கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. உள்ளே நுழையும்போது ரொம்பவே உற்சாகமாக இருந்தார். கட்சி அலுவலகத்தின் மாடியில் இருந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபோதும், ஜெயலலிதா முகத்தில் அப்படியொரு உற்சாகம்

கர்நாடகாவில் 14 அமைச்சர்கள் பதவி நீக்கம்.. புதிய இளையவர்களுக்கு வாய்ப்பு

பெங்களூர்: கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வருடனும், சித்தராமையாவுடனும் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல முக்கிய மாற்றங்களை செய்யுமாறு சோனியா உத்தர விட்டதாக தெரிவித்தனர். இதன்படி ஊழல் புகாரில் சிக்கியவர்கள், கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியவர்கள் 14 அமைச்சர்களை நீக்கி விட்டு இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் ஆளும் கார்நாடகா அமைச்சரவையில் முதல்வர் சித்தராமையாக அதிரடி மற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

ஜேப்பியார் காலமானார் (85 வயது) சத்தியபாமா கல்வி குழுமம்....MGR உருவாக்கிய கல்வி /சாராய ரவுடி வியாபாரி or குண்டன் !

(ஜேசுஅடிமை பங்கு ராஜ்- Jesuadimai Pangu Raj என்பதன் சுருக்கமே JPR ஜேப்பியார்).
கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.
ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம். “யாரும் எதற்கும் கேள்வியே கேட்க முடியாது என்ற சூழலைத் தகர்த்து, எங்களையும் மனிதனாக மதித்துப் பேசவிடு! என்று நாங்கள் பேசத் துவங்கியதுதான் சங்கத்தின் முதல் வெற்றி” என்கிறார் பு.ஜ.தொ. ஓட்டுநர், மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், (சத்யபாமா பொறியியல் கல்லூரியின்) செயலாளர் வெற்றிவேல் செழியன்.

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் அகால மரணம்

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். கவிஞரின் இறுதிச் சடங்கு திருநெல்வேலியில் நடக்கிறது.
மனுஷ்யபுத்திரன் :’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற தலைப்பை நான் தான் குமரனின் புத்தகத்திற்கு வைத்தேன், அது ஒரு துரதிஷ்டம் பிடித்த தலைப்பு என்று அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை< குமரனின் சாவு ஒரு கருநாகம் போல நெஞ்சில் படுத்திருக்கிறது. அவனது உடலை ஊருக்கு அனுப்பிவிட்டு இன்று மதியம் அவனது வீடு இருந்த தெருவில் நின்றுகொண்டிருந்தபோது வெய்யில் அமிலச் சொட்டாக இறங்கியது. கே.என் சிவராமன் என் தோளை தொட்டு அழுத்தியபோது தெருவில் நின்று கதறிவிடுவேன் போலிருந்தது. இன்று காலை கார்ல் மார்க்ஸ் தொலைபேசியில் தூக்கத்தில் எழுப்பி சொன்ன குமரனின் சாவுச் செய்தியைச் சொன்னபோது துவங்கிய பதட்டம் இன்னும் அடங்க மறுக்கிறது. மருத்துவமனையில் அவனது உடலை வைக்க கொண்டு வந்த கண்ணாடி சவப்பெட்டிகள் போதவே இல்லை. மூன்று முறை மாற்றி மாற்றி எடுத்து வந்தார்கள்.
உண்மையில் சவப்பெட்டிக்குள் செல்ல மறுத்து அவன் பிடிவாதம் பிடித்தான். வற்புறுத்தி அனுப்பி வைத்தோம்

கலைஞர்: திராவிட கொள்கைகை என்பவர்கள் எல்லாம் உண்மையான திராவிட கொள்கையாளர்கள் அல்ல

சென்னை: திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சனிக்கிழமை மாலை, ரோமாபுரிப் பாண்டியன் தொலைக்காட்சித் தொடர் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம்.

இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் அரசே நடத்திவரும் மதுபானக் கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி மூடப்படும் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையடுத்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா மதுபானக் கடைகளின் நேரம் குறைக்கப்படும் என்றும் 500 கடைகள் மூடப்படும் என்றும் கூறியிருந்தார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதியன்று மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி அளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், 500 கடைகளை மூடுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 201 கடைகள் மூடப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், கோவை மண்டலத்தில் 60 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 கடைகளும் மூடப்படுகின்றன.

மூலிகை சிகிச்சையால் போன உயிர்!

‘இவ்வகை மருத்துவம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்தருகிறது?’ என்பதை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரகத் துறையின் தலைமை மருத்துவரான டாக்டர் பி. சௌந்தரராஜன் அவர்கள் விளக்கினார். “மூலிகை மருந்துகளால் எந்த விளைவும் ஏற்படாமல் ஏமாந்த ஒரு பெண்ணின் கதையும் உண்டு” என்று ஆரம்பித்தவர் தொடர்ந்து, “அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி சில வருடங்களாகக் குழந்தை இல்லை. சோதித்துப் பார்த்ததில் சிறுநீரகம் செயலிழந்துள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். என்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வந்தார்கள். டயாலிசிஸ் மற்றும் சிகிச்சைகள் செய்து கொண்டிருந்தோம்.

சென்னை மாணவர்கள் விபரீத பஸ் தினக் கொண்டாட்டம்


சென்னையில் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர், விபரீத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ‘பஸ் தினக் கொண்டாட்டம்’ என்று தொடங்கி, தாங்கள் கல்லூரிக்கு பேருந்தில் பயணப்படும்போது ‘ரூட்டு தல’யாக மாறி, மோதலில் ஈடுபடுகிறார்கள். அரிவாள், உருட்டு கட்டையுடன் தாக்குதல் சம்பவம் நடக்கிறது. பெண் பயணிகளைக் கிண்டலடிக்கின்றனர். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீதும் தாக்குதல் நடக்கிறது. பொது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

ரிசேர்வ் வங்கி கவர்னராக தொடரமாட்டேன் ... ரகுராம் ராஜன் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2–வது முறையாக பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் (வயது 53), முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2003–ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இவர் 2003–2007 காலகட்டத்தில் ‘ஐ.எம்.எப்.’ என்றழைக்கப்படுகிற சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதுமட்டுமின்றி, 2008–ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டியே சரியாக கணித்துக் கூறி, உலகத்தின் கவனத்தை கவர்ந்தவர் ஆவார்.
சர்ச்சை ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4–ந் தேதி நிறைவு அடைகிறது.   டுபாக்கூர்களின்  ஆட்சியில் கவர்னராக இருந்து பேரை கெடுத்துக்க மாட்டேன்?

கலெக்டர்'ஆஷ் நினைவு தினம் ..குற்றாலத்தில் எல்லா ஜாதியும் குளிக்க அனுமதித்ததால் பார்பன வெறியன் வாஞ்சிநாதன் கலெக்டரை சுட்டு கொன்றான்

இன்று, திருநெல்வேலி ஆங்கிலேய கலெக்டர் 'ஆஷ் துரை' நினைவு தினம்.< குற்றாலத்தில் பார்ப்பனிய வெறியர்களால் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களில் சாணார் என்றழைக்கப்பட்ட இன்றைய நாடார்களும் அடக்கம்.
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற அரசாணையை அமல்படுத்தியவர் அன்றைய ஆங்கிலேய திருநெல்வேலி கலெக்டர் மாமனிதர் ஆஷ் துரை.
அந்த அரசாணையால் ஆத்திரமடைந்த பார்ப்பன பயங்கரவாதியான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்தான் ஆஷ் துரை.
ஆனால் ஆஷ் துரை எந்த சமூகத்திற்கு உரிமை பெற்று கொடுத்தாரோ அந்த சமூகத்தை சேர்ந்த பொன்னாரனும், இந்திரா குமாரி புகழ் ஆனந்தனும் அந்த மாமனிதரை கொன்ற பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சி நாதனை போற்றித் திரிவதுதான் காலக்கொடுமை.அன்சாரி முஹம்மது  முகநூல் 

லண்டனில் விஜய மல்லியாவுடன் இந்திய தூதர் விருந்து... 9000 கோடிக்கு ஆட்டைய போட்டவன் ஜாலி

விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் மோசடி செய்தார். மேலும் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார். இதனால் அவர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்றவை வழக்குப்பதிவு செய்துள்ளன. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவரை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசும் ஏற்க மறுத்துவிட்டது. 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய  ஒரு தாசில்தாருக்கு மூன்று வருடம் சிறை .. மல்லியாவுக்கு விருந்து