maka-i-ka-sringam-1திருச்சி ஸ்ரீரங்கத்தில் 10.01.2015 அன்று நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்பட்டோர் இந்த பார்ப்பனிய பண்பாட்டு நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி ஸ்ரீரங்கத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த விழாவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டரை பல்லக்கில் உட்கார வைத்து அதே சமூகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தூக்கிச் சென்று அவரது வீட்டில் விடுவதை ஒரு முறையாக வைத்து நடத்துகின்றனர். மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இந்த பார்ப்பனிய இழி செயலுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது.
மனிதனை மனிதன் சுமப்பது குற்றம் என்று வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே இந்த பார்ப்பன பண்பாட்டு அடிமைத்தன விழாவை எந்த சட்டத்தையும் மதிக்காமல் எடுத்து நடத்துகிறது இந்த பார்ப்பனக் கூட்டம். அதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது போலீசு அடியாள் கூட்டம்.