சனி, 5 செப்டம்பர், 2020

ஜியோ டெலிகாமின் கதை ! முகேஷ் அம்பானியும் ஊடகங்களும் ”சொல்லாமல் மறைத்த கதை” JIO....

Narain Rajagopalan : · சொல்ல மறந்த கதை +++++      1995 அந்த மனிதர்
சுக்ராமினை பார்க்கிறார். சுக்ராம், அப்போது இந்திய ஒன்றியத்தின் தொலை தொடர்பு துறை அமைச்சர். 9 வட்டங்களுக்கான தொலைத் தொடர்பு ஒப்பந்தம் அவருக்கு போகிறது, ஆனாலும் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியவில்லை. திரும்பவும் சுக்ராம் உள்ளே நுழைந்து, குழப்பி, கட்டிங் வாங்கி, பின்னாளில் சுக்ராம் ஊழல் என்கிற
பெயரோடும் நிறைய சுகரோடும் செத்து போனார். 2010

அந்த நிறுவனம் தொலை தொடர்பு துறை ஏலம் எடுக்க வருகிறது. அது குறிப்பிடும் தொகை பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களுக்கே அதிர்ச்சியை தருகிறது. 12,848 கோடிகள். யாரும் அவ்வளவு விலை கொடுத்து அந்த அலைக்கற்றையை எடுக்க மாட்டார்கள். ஏலத்தின் முடிவில் இந்தியா முழுமைக்குமான BWA (Broadband Wireless Access) தொலை தொடர்பு அந்த நிறுவனத்துக்கு போகிறது. இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்த அதே நாள் மாலையில் அந்த நிறுவனத்தின் 95% பங்கினை ஒருவர் வாங்குகிறார். அதற்கு அவர் கொடுக்கும் விலை 4,800 கோடிகள்.

உடலை பேணுவதில் ஸ்டாலினை பின்பற்றவேண்டும்.

உடலை பேணுவதில் ஸ்டாலினை எல்லோரும் பின்பற்றவேண்டும்.  எவ்வளவு கவனமாக அவர் இருக்கிறார் என்பதை சாதாரண விடயமாக எடுத்து கொள்ள முடியாது . அவரது வயதை ஒத்த பல அரசியல்வாதிகள் தங்கள் உடலை பேணும் விடயத்தில் படு மோசமாக இருக்கிறார்கள் . நாட்டை வழிநடத்த வேண்டிய ஒருவர் தனது உடலையே சரியாக பேண முடியாமல் உள்ளார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய விடயம்தான். சிலருக்கு இயற்கையிலேயே உடலில் பல சிக்கல்கள் இருக்கலாம் . ஆனால் பலரின் குறைபாடுகள் அவர்களின் தவறான வாழ்க்கை முறையினால் ஏற்பட்டவையே. ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.  அம்மையார் ஜெயலலிதா கப்டன் விஜயகாந்த் போன்றோரின் உடல் உபாதைகளுக்கு அவர்களின் தவறான வாழ்வியலே காரணமாகும் . இது அவர்களை குறைகூறுவதற்காக கூறப்படுவதல்ல . மாறாக இது ஒரு ஆழமான படிப்பினையாக எடுத்து கொள்ளவேண்டும் என்ற நல்நோக்கத்தில் கூறுவதாகும் 

தனது உடலையும் மனதையும் ஒழுங்காக பேணுபவர் நிச்சயமாக பொறுப்புணர்வு மிகுந்தவர்தான் .  திறமை எல்லாமே அப்புறம்தான் கவனத்திற்கு எடுத்து கொள்ளவேண்டும் .முதலில் பொறுப்புணர்வு வேண்டும் . அது ஸ்டாலினிடம் இருக்கிறது . அதன் காரணமாகவே அவர் கலைஞரின் அரசியல் வாரிசாகி இருக்கிறார் என்று கருதுகிறேன் . வெறுமனே அவர் மகனாக இருந்ததால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை ..  இந்த உயரத்தை  அவர் உழைத்து பெற்றிருக்கிறார்!

பாஜகவும் குற்ற பின்னணி பிரபலங்களும் .. ஜாக்கி வாசுதேவின் கள்ளர் குகையில் போதைவஸ்து நடிகை ராகினி திவேதி

பாஜகவை ஆதரிக்கும் எவரையும் கொஞ்சம் ஆழமாக உற்று நோக்கினால் அவர்களுக்குள் ஒரு குற்ற பின்னணி இருந்தே தீரும் . குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமாக பாஜக இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல.. பாஜகவின் ஆழமான இந்துத்வா சிந்தனையிலேயே இது இருக்கிறது . சகமனிதர்கள் மீதான அத்து மீறலை ஒரு கோட்பாடாக வரித்து கொண்ட தத்துவம் வேறு எப்படி இருக்க முடியும்?  

பலர் வெளிப்படையாக மிகவும்

நல்லவர்கள் போல தோன்றக்கூடும் . அந்த தோற்றம்தானே பலருக்கு கவசமாக இருக்கிறது . அதிலும் மனிதர்களின் தோற்றம் பற்றிய போலி பிம்பம்தானே ஆண்டாண் டு காலமாக கட்டி எழுப்ப பட்டிருக்கிறது? வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல .   ஹிட்லரும் முசோலினியும் கூட வெள்ளையாக இருந்தவர்கள்தான் என்பதை இந்த அறிவாளிகள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

ஒருவரை ஏமாற்றி அதிகாரம் செலுத்துவது எப்படி என்பது பார்ப்பனீயம் கற்று தந்திருக்கிறது . 

மனிதாபிமானமோ மனசாட்சியே கொஞ்சம் கூட இல்லாத கயவர்களுக்கு இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே நல்ல வசதியான கருத்துக்களை வாரி வழங்கி உள்ளது . 

பொருளாதார மந்த நிலையால் இனிவரும் காலங்களில் ஏற்படவிருக்கும் விபரீதங்கள்

             Karthikeyan Fastura : · ஜிடிபி 23.9% குறைந்து போனதால் நடுத்தர மக்களுக்கு குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாக இருக்கிறார்கள். சம்பள உயர்வு என்பது இனிவரும் காலங்களில் குறைந்து போகும் அல்லது இல்லாமல் போகவே வாய்ப்பு அதிகம்.

Inflation 6.9% க்கு இணையாக சம்பளம் ஏறினால் மட்டுமே இன்றுள்ள நிலை தொடரும். .        அது கூட வராது எனும்போது மிகப்பெரும் நெருக்கடிக்கு ஆளாக போகிறார்கள். இந்த வீடியோவில் முடிந்த அளவு இதை விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

மனு நீதி.. மொத்தம் 150 பாயிண்ட்கள் உள்ளது! கிருஷ்ணவேல் டி எஸ்

கிருஷ்ணவேல் டி எஸ் : மனு நீதி (இருப்பதை அப்படியே மொழிபெயர்த்துள்ளேன், சரியாக புரியவில்லை என்றால் சொல்லுங்க மீண்டும் எளிய தமிழில் மொழி பெயர்த்து தருகிறேன் மொத்தம் 150 பாயிண்ட்கள் உள்ளது ) அதிகாரம் IX. 1. ஒரு கணவன் மற்றும் அவரது மனைவி இணைந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் கடமையின் பாதையில் செல்லும் நித்திய சட்டங்களை இப்போது நான் முன்வைப்பேன்.

2. பகல் மற்றும் இரவு பெண்ணை ஆண்களின் (குடும்பங்களின்) சார்ந்திருக்குமாறு வைத்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் தங்களை சிற்றின்ப இன்பங்களுடன் இணைத்துக்கொண்டால், அவர்கள் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

3. அவளுடைய தந்தை குழந்தை பருவத்தில் (அவளை) பாதுகாக்கிறார், கணவர் இளமையில் (அவளை) பாதுகாக்கிறார், மற்றும் அவரது மகன்கள் வயதான காலத்தில் (அவளை) பாதுகாக்கிறார்கள்; சுதந்திரம் என்பது ஒரு பெண்ணிற்கு ஒருபோதும் பொருந்தாது.

4. சரியான நேரத்தில் மகளை திருமணத்தில் கொடுக்காத தந்தை கண்டிக்கத்தக்கவர்; (சரியான நேரத்தில் அவரது மனைவியை அணுகாத கணவர் கண்டிக்கத்தக்கவர்; மற்றும் கணவர் இறந்த பிறகு தனது தாயைப் பாதுகாக்காத மகன் கண்டிக்கத்தக்கவன்.

கொரோனா வைரஸ்: ரஷ்ய தடுப்பூசி நோய் எதிர்ப்பான்களைத் தூண்டுவது உறுதி - லான்செட் ஆய்வறிக்கை தகவல்

  BBC: தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்த முதல் ஆய்வு அறிக்கையை ரஷ்ய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆரம்ப சோதனைகள் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதைக் காட்டின என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ சஞ்சிகையான தி லான்செட் -ல் வெளியாகி உள்ள அந்த அறிக்கையில், தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உடலில் நோயெதிர்ப்பான்கள் உருவானதாகவும், கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆக்ஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது ரஷ்யா. உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான். தரவுகள் வெளியாகும் முன்னே அனுமதி அளித்த நாடும் ரஷ்யாதான்.

இந்த பரிசோதனைகள் சிறிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை வைத்து இதன் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிட முடியாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாராட்டிய மாப்பிள்ளை- வாழ்த்திய ரஜினி

டிஜிட்டல் திண்ணை: பாராட்டிய மாப்பிள்ளை- வாழ்த்திய ரஜினி

minnambalm :“ரஜினிகாந்த் ஒரு மாதத்துக்கு ஓரிருமுறை ட்விட் செய்வதையும் அதை பலத்த விவாதத்துக்கு உள்ளாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுபோலவே ரஜினிகாந்த் செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு வெளியிட்ட ட்விட்டரும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு வந்துவிட்டது.திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனபோதும் செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 4 மணியோடு வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்துவிட்டது. அவர்களைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. இதை செய்திகள் மூலமாக அறிந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று இரவே ட்விட்டரில் துரைமுருகனுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டார். ’தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். இதுமட்டுமல்ல... மறுநாள் முரசொலியில் ரஜினியின் வாழ்த்தினை ஒருகட்டம் கட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து என செய்தியாக வெளியிட்டு திமுகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

ஸ்டாலினைப் புறக்கணிக்கும் பொன்முடி? மாசெக்கள் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள்

 மாசெக்கள் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள்: ஸ்டாலினைப் புறக்கணிக்கும் பொன்முடி

minnambalam :  திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அதை ஒட்டிய அடுத்த சில மாற்றங்கள் திமுகவில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக நேருவுக்கு இணை: பொன்முடியின் போர்க்கொடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

செப்டம்பர் 9 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இதுபோலவே தற்போது திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாவட்ட அரசியலிலிருந்து உயர்த்தப்பட்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வந்தன. அதேநேரம் பொன்முடி தனக்குத் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதை விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஆசிரியம் பற்றிய பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

inscription   nakkeeran :சிவகங்கை மாவட்டம் கோமாளிப் பட்டியில், உள்ளூர் படையைப் பற்றிய குறிப்புகளுடன் கூடிய இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகளை, சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் அவர்களின் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தகரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன் மற்றும் காளையார் கோவில் சரவண மணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.கல்வெட்டுகளின் செய்தி குறித்து அவர்கள் கூறியதாவது, ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம்  சொல்லுடன் பயின்று வரும் கல்வெட்டுகள் தமிழகத்தில் மொத்தம் எழுபதிற்கும் மிகாமலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளவை. ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனிப்பலகைக் கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்ட கல்வெட்டுகளாகவே உள்ளன.  சோழர், பாண்டியர்களின் ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி அவர்களுள் ஒருவருக்கு அதிகாரத்தை அளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளனர்.

சீனா : எல்லையில் தற்போதைய பதற்ற நிலைக்கு இந்தியாதான் பொறுப்பு ! ராஜ்நாத் சிங்கிடம் கூறிய சீன பாதுகாப்பு அமைச்சர்

தி இந்து ஆங்கிலம் :  லும் சீனா தன் பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது என்று அவர் கூறியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா ஏஜென்சி அவர் கூறியதாக மேற்கோள் காட்டி கூறிய போது, 

எல்லை விவகாரத்தில் சமீபகாலமாக இருநாடு மற்றும் இருநாட்டு ராணுவங்கள் இடையேயான உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் முகத்துக்கு முகம் நேர் கொண்டு சந்தித்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும், என்று கூறியதாக தெரிவித்துள்ளது. எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இந்தியாதான் ஒட்டுமொத்த பொறுப்பு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சீன  பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி தெரிவித்தார்.   பேச்சுவார்த்தைகளில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி, கடந்த வாரம் இந்தியா மீது சாற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுபியதாகத் தெரிகிறது. புதன் கிழமையன்று சீனா தரப்பில், “இந்தியத் தரப்பில்தான் முழு பொறுப்பும் உள்ளது” என்று கூறியிருந்தது. மேலும் இந்தியாதான் பதற்றத்துக்குக் காரணம் என்று கூறி இந்திதன் தன் படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

நரிக்குறவர்களின் கல்வி கண் திறந்த கலைஞர் ! சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்

சுவேதா ஒரு பொறியியல் பட்டதாரி. நரிக்குறவர் சமூகத்தில் முதல் பொறியியல் பட்டதாரிப் பெண் இவரே

சுவேதா முதல் பட்டதாரி

Ksb Boobathi : .. 1972ல் வெளியான குறத்தி மகன் திரைப்படம் பெறு

ம் வெற்றி பெற்றது... அது சமயம் அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர் அப்போது. சாமீய்... உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீங்க ஒங்க படத்தை பார்த்த பிறகுதான் படிப்போட அருமை பெருமை எங்களுக்கு புரிஞ்சது....
எங்க புள்ளைங்களாம் படிக்க நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டி குடுங்க சாமீய்"னு அவங்க பேசி முடிக்க
இயக்குனரான அவர், பள்ளிக்கூடம்லாம் தனி மனிதரால சாத்தியப்படாது ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது
நிறைய சட்ட திட்டங்கள் இருக்குன்னு அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல

என்ன சாமி நீங்க...... நாங்களாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படின்னு அவர்களும் அழ......

இந்தி எதிர்ப்புப் போராளி' சி.இலக்குவனார் நினைவு நாள் (3.9.1973)

 Sundar P : இந்தி எதிர்ப்புப் போராளி' சி.இலக்குவனார் நினைவு நாள் (3.9.1973)

1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழாசிரியர்களே... மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம் தான் தமிழகமெங்கும் மாணவர்களை போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.இலக்குவனார் வைத்த முதல் 'தீ' தான் காங்கிரசு ஆட்சிக்கு கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார் இந்தி எதிர்ப்புப் போருக்கு மாணவர்களை அனுப்பியதோடு தாமும் போர்க்களத்தில் குதித்தார்.

மதுரை முதல் சென்னை வரை 'நடைப்பயணம்' மேற்கொள்ளப் போலதாக அறிவித்த போது முதல்வர் பக்தவத்சலம் உடனே பணி நீக்கம் செய்திட ஆணையிட்டார்.

மாக்சிஸ்ட் எம்பி ரங்கராஜனின் இரட்டை விஷம்

 பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினருக்கான 10 வீத இடஒதுக்கீட்டுக்கு ராஜ்யசபாவில் வாக்களித்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி ரங்கராஜன் (பார்ப்பனர்) தமிழ்நாட்டில் இருந்து தெரிவானவராகும்.

ஒருநீண்ட வரலாற்றை கொண்ட கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு எம்பி இந்த பச்சை துரோகத்தை செய்துவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி அரசியல் செய்ய இவர்களால் முடிகிறது ?

ஏதோதோ பிரச்சனைகள் பற்றி எல்லாம் நீட்டி முழங்கி வகுப்பெடுக்கும் இடதுசாரிகள் இந்த துரோகத்தை முழு சோற்றுக்குள்  பூசணிக்காயை மறைப்பது போல மறைத்து மறந்தும் விட்டார்கள் .

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலைஞர் மீதும் திமுக மீதும் தர்ம நியாயங்கள் எல்லாம் பேசும் இடது சாரிகள் இது பற்றி பொது மன்னிப்பாவது கேட்கவேண்டும் . 

அரசியலில் சோரம் போதல் என்பதற்கு அசல் உதாரணம் இதுதான். 

ஆர் எஸ் எஸ் இன்  அத்தனை திட்டங்களும் பார்ப்பனர் நலம் கருதியே இருக்கும் என்பது மக்கள் ஊரறிந்த உண்மை . ஆனால் ஆர் எஸ் எஸ் இன்  நோக்கங்கள் நிறைவேற நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து வேலை பார்த்து வருவது இந்திய கம்யூனிஸ்ட்டுகள்தான் .   தீஸிஸ் திருடன் ராதாகிருஷ்ணன் நமது 

மதுரையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி.. வாடிக்கையாளர்களை கொள்ளை அடிக்கும் ...

Suresh Selvam : சட்டப்படியான நவீன கொள்ளையர்கள் !

வீட்டுக்கடன் வாங்கிய மருத்துவர் : சார் நான் உங்க கிட்ட எப்போ லோன் வாங்கினேன்?

ஹெச்.டி.எப்.சி HDFC Bank HDFC Home Loans

வங்கியின் மேலாளர்: 2006 இல்

ம : எவ்வளவு லோன் வாங்கினேன்

மே: ரூ. 51 லட்சம்

ம: மாசம் எவ்வளவு தவணை செலுத்தி வரேன்?

மே: 57 ஆயிரத்து சொச்சம் சார்.

ம: இதுவரை எவ்வளவு கட்டியிருக்கேன்?

மே: ரூ.94 லட்சம்

ம: அசல் எவ்வளவு குறைந்திருக்கு?

மே: ரூ.14 லட்சம்

ம: அப்போ வட்டி மட்டும் எவ்வளவு கட்டியிருக்கேன்?

இந்தியாவில் 21 மொழிகள் அரசியல் அமைப்பால் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

Seeni Mohan
: மீண்டும் மீண்டும் எழுத சலிப்பாக இருக்கிறது. பல முறை சொல்லி முடித்த பின்னும் சிலர் (பலர்) ஜனநாயகம் குறித்த
போதாமையுடனேயே உரையாடுகிறார்கள். உதாரணத்திற்கு மொழி - சங்பரிவார் அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் மொழி குறித்த சரியான புரிதலுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் - பிகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கட், ஜார்கண்ட், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை இந்தி பேசும் மாநிலங்களாகவே புரிந்து கொள்கிறார்கள். பிஹாரி, போஜ்புரி, மைதிலி, மஹதி (பிகார்) கிழக்கின் இந்தி, மேற்கின் இந்தி, வ்ரஜ, அவதி, கடிபோலி (உத்தரபிரதேசம்) குமாஊங், கட்வாலி, பஹாடி ( ஹிமாசல பிரதேசம்) ராஜஸ்தானி, ஜயபுரி, மார்வாடி (ராஜஸ்தான்) ஹரியாணவி (ஹரியானா) போன்ற எல்லா மொழிகளையும் அழித்து கடிபோலியை முன்னிறுத்தி சமஸ்கிருதம் எழுதப்படும் தேவநாகரி எழுத்தில் எழுதி பார்ப்பனமயப் படுத்துதலைச் சரியான புரிதலுடன் தான் செய்கிறார்கள். (தலைநகர் தில்லி இதில் அடங்காது; அது முற்றாக கடிபோலி மயப்படுத்தப்பட்டு விட்டது)

ஐரோப்பாவில் தேசம் என்ற சொல்லாடல் மிகவும் முக்கியமானதும் அதனுடைய உண்மையான பொருளில் புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. (தேசம் என்ற சொல்லுக்குப் பொறுத்தமான Nation என்ற சொல்லின் பொருளை ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் அகராதியில் பொறுத்திப் பார்க்க வேண்டுகிறேன்) அவர்களுடைய மொழி குறித்த புரிதல் மேன்மையாக இருப்பதற்கு தேசம் குறித்த புரிதலும் காரணம். ( இதன் காரணமாகவே இந்தியாவை தேசம் என்று வரையறுக்க முடியாமல் போகிறது.)  

மதிமுக துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவு.. பேரிடி தலையில் விழுந்துவிட்டது.. வைகோ வேதனை

tamil.oneindia.com -  Velmurugan P  :   சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது: "பேரிடி தலையில் விழுந்துவிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், என் உயிரினும் மேலான பாசச் சகோதரர் நாசரேத் துரை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் வேதனையில் துடி துடித்துப் போனேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணன் நாசரேத் துரைராஜ் அவர்கள். சின்னஞ்சிறு பருவத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புத் தம்பியாக நாசரேத் பகுதியில் அண்ணாவின் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்.

கலைஞரைப் பார்ப்போமா என்று காத்துக்கொண்டிருந்தவர் விஜயகாந்த்

 Rebel Ravi : ; ஜெமினி சினிமா ஆசிரியராக நான் இருந்த போது விஜயகாந்த்
சூப்பர்ஸ்டார் ஆனார் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டேன்...
அதற்காக என் மீது கொலை முயற்சி எல்லாம் நடந்தது..

அதற்கெல்லாம் அஞ்சுபவனா நான்?< உயிரோடிருந்தவரை..ரவிய மாதிரி தைரியசாலி பத்திரிகைக்காரன் யாருமில்லைனு சொல்லிக் கொண்டிருந்தவர் விஜய்காந்தின் நண்பர் இப்ராஹிம் இராவுத்தர்.

அந்தக் காலத்தில்..விஜயகாந்த்.. ஒதுக்கப்பட்டவராக இருந்த போது அவரை ஆதரித்த ஒரு சில பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்..மற்றவர் தேவி மணி..

அப்போது விஜயகாந்த் என்னிடம் கலைஞரைப் பற்றி அதிகம் பேசுவார்..
அவரைச் சந்திக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்படுவார்..
என்னிடமே பல முறை கூறியுள்ளார் தான் திமுக என்று...
ஆனால் ஓப்பனா பிரச்சாரம் பண்ண மாட்டேன் என ஒதுங்கிக்கொள்வார்...

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு

dinamalar.com : சென்னை:பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூறப்படுவதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ. 5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும். × முககவசம் அணியாவிட்டால் ரூ.200 ம் பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.        கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்குரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதன் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           கலெக்டர்களுக்கு தலைமைச்செயலர் கடிதம் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

எது கலைஞரின் சாதனையோ அதை MGR செய்தார் என்கிறீர்கள். Ravishankar Ayyakkannu to Evidence கதிர்,

 அன்பின் Evidence கதிர்,       1971. SC/ST மக்கள்

இட ஒதுக்கீட்டை 16% ல் இருந்து 18% ஆக உயர்த்தியவர் கலைஞர்.

1989. BC இட ஒதுக்கீடை இரண்டாகப் பிரித்து MBC - 20%, BC - 30% என்று கொடுத்தவர் கலைஞர்.

1989. SC/ST என்று ஒன்றாக இருந்த 18%ஐத் தனியாகப் பிரித்து ST - 1%, SC -

18% என்று தனித்தனியாகத் தந்தவர் கலைஞர்.

SC தொகுப்பில் இருந்து ST வெளியேறிய போதும் SC இட ஒதுக்கீட்டைக் குறைக்காமல் அப்படியே 18% தந்தவர் கலைஞர். 

இதன் மூலம் SC மக்களுக்குக் கூடுதல் 1% இடங்கள் கிடைத்தது என்றும் கொள்ளலாம்.

ஆக, SC இட ஒதுக்கீட்டை 3% அளவுக்கு உயர்த்தித் தந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே.  2009. SC மக்களில் கடைநிலையில் உள்ள SCA மக்களுக்கு 3% உள் ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

MGRம் சரி அதிமுகவும் சரி,  SC, ST மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.

ஆனால், எது கலைஞரின் சாதனையோ அதை MGR செய்தார் என்கிறீர்கள்.

திருமாவை சாதித்தலைவராக தூக்கிப்பிடிக்கும் வரை தலித் மக்களை விசிகவினர் வென்றெடுக்க முடியாது...

Chozha Rajan : விசிக தோழர்களுக்காக இந்த பதிவு... என்னதான் அரசியல் இயக்கமாக மாறினாலும் பல ஊர்களில் விசிகவினரை பார்த்து மற்ற சாதியினர் பயப்படும் வகையிலே வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை நினைத்தாலே புல்லரிக்கிறது... அது கிடக்கட்டும்... விசிக தனியே நின்றால், எல்லாத் தொகுதிகளிலும் உள்ள தலித் வாக்குகளை சாதிப் பெயரை சொல்லக்கூடாது... ஆனால் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்பதால் பி.ஆர். என்று அழைக்கப்படும் சாதியினரின் வாக்குகள் அனைத்தையும் விசிக பெற்றுக்காட்ட முடியுமா?

நிச்சயமாக முடியாது...

அவர்கள் பல கட்சிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணியை ஒரு உதாரணமாக சொல்ல விரும்புகிறேன்...

எங்கள் சோழவந்தான் தொகுதியில் பி.ஆர். எனப்படும் சாதியினர் 30 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன. பி.எல். எனப்படுவோரின் வாக்குகள் 30 ஆயிரம் இருக்கின்றன.

திமுக சார்பில் பி.ஆர். வேட்பாளர். ம.ந.கூ. சார்பில் பி.ஆர். வேட்பாளர். அதிமுக சார்பில் பி.எல். வேட்பாளர். ம.ந.கூ.வில் இடம்பெற்றிருந்த மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகளின் வாக்குகள் சுமாராக 20 ஆயிரம் தேறும். ஆனால், விசிக வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 7 ஆயிரத்தை தாண்டவில்லை.

ராமநாதபுரத்தில் பாஜகாவின் மதக்கலவர திட்டத்தை முறியடித்ததால் காத்திருப்போர் பட்டியலில் ராமநாதபுரம் எஸ்பி வருண் குமார்

  minnambalam : ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் நேற்று (செப்டம்பர் 3) மாலை திடீரென காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் பாஜக இருப்பதாக சலசலப்புகள் கிளம்பியுள்ளன.

2019 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்து எஸ்பியாக காத்திருப்போர் பட்டியலில் ராமநாதபுரம் எஸ்பி:  காரணம்  யார்?பொறுப்பேற்ற வருண் குமார், கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றார். அது முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி மாலை ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23 வயதான அருண்பிரகாஷ் என்ற இளைஞரை, ஒரு கும்பல் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்தது.  ராமநாதபுரத்தில் மதக்கலவரத்துக்கு ஏற்பாடு செய்த பாஜகாவின் திட்டத்தை முறியடித்ததால் 

சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க உத்தரவு!

 சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க உத்தரவு!

minnambalam.com :தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.     இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களுக்கு தொடர்ந்து முட்டை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா அல்லது வாரம் தோறும் மொத்தமாக வழங்குவதா என்பன உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

எரியும் கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தப்படாவிடில் இலங்கையின் கிழக்கு கரைக்கு பேராபத்து?

thinakkural.lk : பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் கடலில் விபத்துக்குள்ளாவதும் கடலியல் சூழலுக்கு பேரனர்த்தங்களை உருவாக்குவதும் அடிக்கடி நிகழ்கின்றன. சர்வதேச போக்குவரத்து கப்பல்களை இலகுவாக பதிவு செய்வதற்கு பனாமா ஒரு வசதியான நாடு. அங்குள்ள சட்டங்களைப் பயன்படுத்தி பாவனைக்கு உதவாத சரக்கு கப்பல்களும் பதிவு செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.    இவ்வாறு பதிவு செய்யப்படும் கப்பல்கள் பெருந்தொகை காப்புறுதி இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வேண்டும் என்றே கடலில் கைவிடப்படுவதாகவும் முறைப்பாடுகள் உள்ளன. இத்தகைய கப்பல்கள் பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகளில் இறங்காத சிறிய நாடுகளின் கடற்பரப்புகளில் விபத்துக்குள்ளாகிவருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு கடலில் பனாமா நாட்டு கொடியுடன் மற்றொரு கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் படங்களை கடற்படை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு -ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

maalaimalar : பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு  நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.  பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

maalaimalar: நீட் தேர்வை எதிர்த்து ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  உச்சநீதிமன்றம் ! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’தேர்வுகளை நடத்த அனுமதித்து கடந்த மாதம் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு வரும் 13-ந்தேதி நடக்கிறது. ‘ஜே.இ.இ.’ தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 6-ந்தேதி முடிகிறது.  >இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 6 மாநிலங்களின் மந்திரிகள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “கொரோனா காலத்தில் மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்க தவறி விட்டது, தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களை புறக்கணித்து விட்டது” என கூறப்பட்டிருந்தது.   
இந்த மறுஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், நீட் தேர்வு  திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிகிறது.

சமத்துவபுரம் குறித்து எதிர்மறையான கருத்து ஆங்காங்கே விதைக்கப்படுகிறது

 Suriya Krishnamoorthy : சமீப காலமாக சமத்துவபுரம் குறித்து எதிர்மறையான கருத்து ஆங்காங்கே விதைக்கப்படுகிறது. கலைஞரின் பெருமைமிகு சாதனைகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது இழிவு செய்வார்கள், அதன் தொடர்ச்சியாக தற்போது சமத்துவபுரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்று காலை, ஒரு முற்போக்கு குழுவில் இது தொடர்பான விவாதம் ஒன்று எழுந்தது. அதில்

வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றுக்கு இரண்டு பகுதிகளாக விளக்கம் அளித்தேன். எதிர்காலத்தில் அந்த விளக்கத்திற்கான தேவை அதிகமாகும் என்பதால், இங்கே பதிவு செய்கிறேன். விளக்கம் - 1 (from my experience) சமத்துவபுரத்தில் இருக்கிற என் பெரியப்பா வீட்டில் சில காலம் வளர்ந்தவன் என்கிற முறையில் மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் பலவும் எனக்கு அந்நியமாகத்தான் தெரிகிறது.

 1) கட்சிக்காரர்களுக்கே வீடுகள் ஒதுக்கப்பட்டது -

அரசியலில் இது இயல்பு என்றாலும், பல ஊர்களில் திமுக காரர்கள் சொல்லுவது, ஆட்சி தான் நம்மதுன்னு பேரு, வீடு ஒதுக்குனாலும், கடன் தள்ளுபடின்னாலும் மொதல்ல அவங்களுக்கு தான் நடக்குது.
ஆகவே இந்த குற்றச்சாட்டெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

சமத்துவபுரத்தில் எத்தனையோ அதிமுக வீடுகளையும், கொடிக்கம்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

2) ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டுள்ளது -

இல்லை, நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல் இங்கே யாருக்கும் தெரியாமல் இல்லை. settlement area வுக்கு நடுவில் எங்கிருந்து போய் நிலத்தை கையகப்படுத்துவீர்கள். அப்படியும் தாண்டி எங்கெல்லாம் சாத்தியப்பட்டதோ அங்கெல்லாம் ஊருக்கு மத்தியில் தான் கட்டப்பட்டது. நான் வளர்ந்த பம்பப்படையூர் சமத்துவபுரம் அதற்கொரு சான்று. பணி நிமித்தம் சுற்றித்திரிந்து பட்டீஸ்வரம் சமத்துவபுரம், கல்லக்குடி அருகில் ஓர் சமத்துவபுரம் இப்படி என் நேரடி அனுபவத்திலிருந்தே ஊருக்கு மத்தியில் இருக்கும் சமத்துவப்புரங்களின் பட்டியலை கொடுக்க முடியும்.

நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

 minnambalam.com : நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வருகிறது. .    செட்ப்டம்பர் 1 முதல் 9 வரை ஜே.இ.இ. தேர்வுகள் என்றும், மருத்துவ இடங்களுக்கான நீட் செப்டம்பர் 13 ஆம் தேதி என்றும் தேசிய தேர்வுகள் முகமையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நாட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வருகிறது.

திராவிடத் தலைவர்கள் இந்து கடவுள்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை...

 பாலகணேசன் அருணாசலம்
: · ஏன் அறிவுள்ள திராவிடத் தலைவர்கள் இந்து கடவுள்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை... ஆதிகாலத்தில் தமிழர் களுக்கு (2000 ஆண்டுகள் முன்பு) கடவுள் வழிபாடு கிடையாது...3500 வருடங்களுக்கு முன்பு தமிழர்களின் நாகரீக நகரமான மதுரை யில் (தற்போது கீழடியில் அகழ்வாராய் ச்சி கள் நடந்து வருகிறது) கடவுள்/ஆலய வழிபாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.அதன் காரணமாகவே அங்கு நடந்துகொண்டிருக்கும் அகழ்வா ராய் ச்சிகளுக்கு மத்திய காவி மதவாத அரசு பல இடையூறுகளை செய்து கொண்டிருக்கின்றது நம் கிராமங்களில் கீற்றுக் கொட்டகை மற்றும் ஓடுகளால் வேயப்பட்ட கட்டிடங் களில் அங்காளம்மன் முனியப்பன் பெயர்களில் கோவில் இருப்பதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் அந்த கோயில்களில் உள்ள கடவுள்கள் கடவுள்கள் கிடை யாது...அவர்கள் அந்த அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் நாட்டாமை போன்று மக்களால் தங்களு க்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல உருவாக்கப்பட்ட ஆளுமைகளா கும்..அப்படிப்பட்ட நல்லவர்களின் செயல் களை காலம் உள்ளவரை நிணைத்துக் கொண்டிருக்க வேண்டியதற்காக அவர்களுக்கு கோயில் கட்டப்பட்டது...

சேலத்தில் நள்ளிரவில்குடும்பத்தினர் 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

tamil.oneindia.com :சேலம்: நள்ளிரவில் சேலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தோடு கருகி உயிரிழந்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் மர அறுவை ஆலை உரிமையாளர் கார்த்திக் கடந்த ஆண்டு ஆசை ஆசையாக பார்த்து கட்டிய புது வீட்டில் சமீபத்தில் குடியேறினார். அவரது குடும்பத்தினருடன் உறவினர்களும் அந்த வீட்டில் குடியிருந்தனர். நேற்றிரவு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறின.

 காவல்நிலையத்திற்கு தகவல கொடுத்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், வீட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க போராடினர். எனினும், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக் அவருடைய மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். 

திமுக வென்ற போதெல்லாம் தமிழகம் வென்றிருக்கிறது

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக திரு.துரைமுருகனும் , பொருளாளராக திரு. டி .ஆர் பாலுவும் தெரிவு செயப்பட்டிருக்கிறாரகள்.   

இருவரும் திமுகவோடு மிக நீண்டகாலமாக பயணித்து கொண்டிருப்பவர்கள் . 

திமுகவோடு பயணிப்பது என்பது ஒரு சுகமான சவாரி அல்ல!   அந்த சவாரியானது  கடும் சோதனைகள் நிரம்பியது.      திமுக ஆட்சியில் இருந்த காலத்தை விட எதிர்க்கட்சியாக இருந்த காலமே அதிகம் .       ஆனாலும்கூட  தமிழகத்தின் பிரமிக்கத்தக்க எழுச்சிகள் பெரிதும் திமுக ஆட்சி காலங்களில் ஏற்படடவை  என்பது திமுகவின் பெருமை சாதனையாகும்.      திமுகவின்  இந்த பாரம்பரிய பயணத்தில் தோளோடு தோளாக நின்ற திராவிட தளபதிகளான திரு துரைமுருகன் திரு பாலு போன்றோர் இன்று முக்கிய பதவிகளுக்கு தெரிவாகி உள்ளனர்.    இவர்களின் தெரிவானது ஏராளமான திமுக அபிமானிகளுக்கு ஒரு மகிழ்ச்சியையும் . ஏன் ஒரு நிம்மதியையும் கூட தந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.  

இவர்களின் கடந்த காலவரலாறு இவர்களின் இந்த தகுதிக்கு சான்றாக உள்ளது . திமுக படு மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது . இன்னும் சரியாக சொல்லப்போனால் பல நாசகார சக்திகளினால் குறி வைக்கப்பட்ட வரலாறு எல்லாம்கூட  உண்டு .

விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பகிர்ந்த கார்ட்டூன்! -திமுகவினர் கொந்தளிப்பு -பல்டி அடித்த சுதீஷ்!

nakkheeran.in  :தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. 

விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ்!

அந்த கார்ட்டூன் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக  தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள்.        அரசியல் கட்சிகளிடத்தில்  சர்ச்சைகளையும் எதிரொலிக்க செய்கிறது சுதீஷின் கார்ட்டூன்.

இலங்கை கடலில் எரிப்பொருள் தாங்கி கப்பலில் தீ.. 19 பேர் மீட்பு, ஒருவர் மாயம் BBC

BBC : இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலில் தீ பரவியமைக்கான காரணம், கப்பலின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே என இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

 MT New Diamond என்ற எரிப்பொருள் தாங்கிய கப்பல் குவைட் நாட்டின் மினா அல் அஹமத் துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்தது. இந்த நிலையில், இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் இன்று காலை விபத்துக்குள்ளாகியது. குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவலே இந்த விபத்துக்கான காரணம் என இலங்கை கடற்படை அறிவித்தது. இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீயை அணைக்க இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. இதன்படி சம்பவ பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படை, கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் 19 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒருவர் காணவில்லை. கேப்டனும் மேலும் ஒரு ஊழியரும் கப்பலிலேயே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையின் 19 ஆவது திருத்த சட்டம் மாற்றப்படுகிறது

Arun Hemachandra : · பெயரளவில் ஓரளவேனும் இருந்த ஜனநாயகத்திற்கான சாவு மணி 20ம் சீர் திருத்தச் சட்டத்தின் மூலம்... ✍️👉 அரசியலமைப்பு பேரவை 'நீக்கம்' - பாராளுமன்ற பேரவையில் சிவில் பிரதிநிதிகளுக்கு இடமில்லை.... ✍️👉 2 சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கம் ✍️👉 ஓராண்டு முடிந்ததும் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியும்.... ✍️👉 உயர் நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம் - பிரதமரைக்கூட நீக்கலாம். '20' இல் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற நிலை காணப்பட்டது. 19 வருவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 

வியாழன், 3 செப்டம்பர், 2020

இயக்குனர் வெற்றி மாறனை45 நிமிடங்கள் நிறுத்திவைத்த மும்பாய் விமான நிலைய இந்தி வெறியர்கள் Flashback

 இந்தி திணிப்பு : சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திக்கு.  

2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம்.   
டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசி

னார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.      ‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்... இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை.   45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்?

என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ?

புலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களையே பிரபாகரனுக்கு வழங்கினர் – எரிக் சொல்ஹெய்ம் புதிய தகவல்

veerakesari :விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை இன்று எவ்வளவோ மேம்பட்டபுலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களையே பிரபாகரனுக்கு வழங்கினர் – எரிக் சொல்ஹெய்ம் புதிய தகவல்தாக இருந்திருக்கும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓரளவு சுயாட்சியை அவர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்று நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுத்து செயற்பட்டவரை அநேகமான எல்லா விடயங்களுமே சரியான திசையில் சென்றன. பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுக்காத வேளைகளில் பிரபாகரனின் செயற்பாடுகள் தவறுதலாகவே அமைந்தன என்றும் சொல்ஹெய்ன் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்ப்பு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

   BBC  : வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வரும் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பாணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்ததன் அடிப்படையில், கூட்டத்தொடர் அலுவல் தொடர்பான அறிவிப்பை மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அதில் இந்த முறை கேள்வி நேரம் எதுவுமின்றி பிற நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொகுதி சார்ந்த முக்கிய கேள்விகளை எழுப்ப உறுப்பினர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றான கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

மாணவி நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட தீயில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் ராமு?

மாணவி எரிக்கப்பட்ட தீயில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்?   minnamblam :கள்ளக்குறிச்சி மாணவி நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தில் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் கைக்கடிகாரம் கருகிய நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. கல்லூரி மாணவி. இவருக்கு இரு சசோதரிகள் உள்ளனர். இவர்கள் 12, 10ஆம் வகுப்புகள் பயின்று வருகின்றனர். ஆன்லைன் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு செல்போனை வைத்து பாடம் கற்பதில் சகோதரிகளுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.       இந்நிலையில் நித்யஸ்ரீ இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உடல் அவரது கிராமத்தில் உள்ள இடுகாட்டில் எரிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் நித்யஸ்ரீ குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.>இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தில் செல்போனின் உதிரிபாகங்கள், கூடுதல் மனித எலும்புகள், மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

ஆ.ராசா : என்னை விட முக்கிய சீனியர்கள் பலர் உள்ளனர்...

tamil.oneindia.com : By Arsath Kan : சென்னை: திமுக பொருளாளர் பதவிக்கு தாம்
ஒதுங்கிய ராசா
போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் பதவிக்கான போட்டி தொடர்பாக ஆ.ராசாவை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், திமுகவில் தன்னை விட முக்கிய சீனியர்கள் பலர் உள்ளதாக ஆ.ராசா விளக்கம் அளித்தார். செப்டம்பர் 9-ம் தேதி பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே செப்டம்பர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளது. அதில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய இரு பெரும் பதவிகளுக்கும் புதிய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுச்செயலாளர் பதவியை பொறுத்தவரை துரைமுருகன் என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. பொருளாளர் பதவிக்கான போட்டி தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திமுக பொது செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

maalaimalar :சென்னை: தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார்.இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

Dr.Kafeel Khan Speaks : 'I Was Tortured In Custody'

India Today : Speaking to India Today's Rajdeep Sardesai, Dr. Kafeel Khan said that he was tortured in custody. He was released from jail today. The NSA charges against Dr Kafeel Khan have been dropped. The Allahabad HC on Tuesday directed immediate release of Dr Kafeel Khan. Watch full bulletin.

டெல்லி டூ லண்டன் பேருந்து பயணம் விரைவில்: 18 நாடுகள், 70 நாட்கள், 20,000 கி.மீ -

லண்டன்      BBC : 2020ஆம் ஆண்டில் பல இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நீங்கள் திட்டங்கள் வைத்திருந்திருப்பீர்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு, வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாமல் இருக்கும் சூழல் ஏற்படும் என்று நினைத்திருக்க மாட்டீர்கள்.

மீண்டும் அடுத்த ஆண்டாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்போதே பலர் மனதில் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

நீங்கள் பயண ஆர்வம் மிக்கவராகவோ அடிக்கடி சுற்றுலா செல்லும் நபராகவோ இருந்தால், இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது.

டெல்லியில் இருந்து லண்டன் வரை பேருந்து பயணம் செய்யும் திட்டத்தை அட்வென்சர்ஸ் ஓவர்லாண்ட் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம். நீங்கள் படிப்பது சரிதான், "டெல்லி டூ லண்டன் பேருந்து".

பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்

Mathivanan Maran -  tamil.oneindia.com :   கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்த காலம் தொடர்பாக நார்வே சமாதான தூதராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் மனம் திறந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் படுகொலை செய்ததை பிரபாகரனே தம்மிடம் ஒப்புக் கொண்டதாக பாலசிங்கம் என்னிடம் கூறினார் என்பதும் ஒன்று. அதேபோல் சமாதானப் பேச்சுவார்த்தைகள், மகிந்த ராஜபக்சேவின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பதிவிட்டு வந்தார் எரிக் சொல்ஹெய்ம். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னரும் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக விரிவாக பேசியிருந்த நிலையில் கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிர்ரருக்கு அவர் தற்போது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

திமுக பொது செயலாளராக துரைமுருகன்? மேலும் புதிதாக இணைப் பொதுச் செயலாளர்கள் பதவிகளும் உருவாகிறது?

நக்கீரன் : தி.மு.கவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்காக கட்சியின் பொதுக்குழுவை வருகிற 9-ஆம் தேதி கூட்டுகிறார் மு.க.ஸ்டாலின். 'ஸும்' செயலி வழியாக நடத்தப்படும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.

பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார். பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சிலர் விரும்பினாலும் டி.ஆர்.பாலுவுக்கே வாய்ப்பு அதிகம் உள்ளது. துரைமுருகன் போன்றே டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.இதற்கிடையே இந்த பொதுக்குழுவில், சில புதிய பொறுப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அதாவது, தலைமை நிலைய  அமைப்புச் செயலாளராக கே.என். நேரு, இணைப் பொதுச் செயலாளர்களாக பொங்கலூர் நா. பழனிசாமி, பொன்முடி, எ. வ. வேலு ஆகியோர் நியமிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் .. லடாக் பிரச்சனை பற்றி பேசுவார்?

நக்கீரன் :ரஷ்யாவில் நடைபெறும் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (02.09.2020) மாலை ரஷியா சென்றடைந்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு' நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இந்தக் கூட்டமைப்பில் சீனாவும் உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த மாநாட்டில் சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொள்ளவிருக்கும் சூழலில், ராஜ்நாத் சிங்கிற்கும் சீன அமைச்சருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. 

எனினும், இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தச் சுற்றுப்பயணத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்து ரஷிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேசுவார் என கூறப்படுகிறது.

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை - லடாக்கில் சீன ராணுவ அத்து மீறலை கண்டித்து மத்திய அரசு

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி தினத்தந்தி :புதுடெல்லி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 

அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

BC+MBC மக்கள் இடஒதுக்கீட்டில் ஏமாற்றப்படடார்கள்?

Ravishankar Ayyakkannu  :    இந்த ஈரேழு லோகத்தில் ஏமாந்த சோனகிரி ஒருவர் உண்டெங்கில்,

அது நம்ம ஆண்ட பரம்பரை BC+MBC மக்களே.

தமிழ்நாட்டில் BC+MBC இட ஒதுக்கீடு எவ்வளவு?  50%.

ஆனால்,    இதே தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம்

2012 ஆம் ஆண்டு 88 உதவிப் பேராசிரியர்களை வேலைக்கு எடுக்கிறது.

BC+MBCக்கு எவ்வளவு கிடைத்தது தெரியுமா?   வெறும் 12.5%

பொதுப் போட்டியில் 60.23% இடங்களைச் சுருட்டி விட்டார்கள்.

இசுலாமியர்கள், பழங்குடி மக்களுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை.

பொதுவாக,  ஒன்றிய அரசின் கீழ் உள்ள IIT, IIM உள்ள பல்கலைகளில் தான் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அறிவோம்.

ஆனால், இது தமிழ்நாட்டுப் பல்கலைகளிலும் நடக்கிறது.  ஏன்?

88 வேலைகள் இருந்தால் அவற்றில் ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்லை.

புதன், 2 செப்டம்பர், 2020

உலக தேங்காய் தினம். ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ .. செப்டம்பர் 2 –

M
aha Laxmi
: செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம். தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

கூர்வாளின் நிழலில் கூறத்தவறிய உண்மைகள் ... நேரில் கூறிய தமிழினி ... Reginold Rgi

  R
eginold Rgi
   விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் ‘ஓர் கூர்வாளின் நிழலில்’ நூலை வாசித்தபோது எனக்கேற்பட்ட உணர்வுகள் விவரிக்கமுடியாதவை. தமிழினியை வன்னியில்  நான் பல தடவைகள் சந்திருந்தேன். தொலைக்காட்சிக்காக நேர்காணலும் செய்திருந்தேன். அவர் எப்போதும் பழக மிக இனிமையானவராக இருந்திருந்தார். பின்னர் அவரது இறுதிக்காலத்திலும் முகநூல் மூலம் தொடர்புகொண்டிருந்தேன். அவரது நூலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் வந்து சென்றன. யார்மீதும் பழி சுமத்தாமல், யாரையும் திட்டித்தீர்க்காமல் தனக்கு தெரிந்த விடயங்களை தனது அனுபவங்களை தமிழினி நூலில் பகிர்ந்திருக்கிறார். யாருடைய மனதும் நோகக்கூடாது என்ற எண்ணத்துடன் அவர் இந்த நூலை எழுதியிருப்பது புரிகிறது. ஆனால் அவ்வாறு பாம்புக்கும் நோகாமல் தடிக்கும் நோகாமல் அடிப்பது சரியா என்ற விமர்சனம் எழக்கூடும்.

புலிகளில் முக்கிய பொறுப்பில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் என்ற வகையில் இப்படியொரு பெரும் அழிவிற்கான காரணங்களையும் தவறுகளையும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திருக்கவேண்டும். அப்படி செய்யாததன் மூலம் ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு பங்களிக்க கூடிய வாய்ப்பை தமிழினி தவற விட்டு விட்டார் என்று என்று ஒரு சாரார் சொல்வார்கள்.   இன்னொரு சாரார் தமிழினி புலிகள் இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்வார்கள்.   வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுவென்பதால் அவற்றை புறந்தள்ளி நூல் பற்றி பார்க்கலாம்.

நாக்பூர்ல சிக்னல் சரியா இருக்காது தோழர். தமிழ்நாட்டுக்கு வாங்க.

 Ravishankar Ayyakkannu :; "இந்தியா போல் தமிழ்நாட்டிலும் 22.5% SC, ST இட ஒதுக்கீடு வேண்டும்" -        சரி, தோழர். தமிழ்நாட்டிலும் SC 15%, ST 7.5% என்று மாற்றி விடுவோம். "

அது எப்படி முடியும்?     தமிழ்நாட்டில் அவ்வளவு ST மக்கள் இல்லையே?" - சரி, இப்போது இருக்கிற SC 18% அப்படியே விட்டு விடுவோம். ST 4.5% ஆக்கி விடுவோமா?

"இல்லை தோழர், SC மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாகத் தர வேண்டும்"

- அப்படி முதலிலேயே SC பற்றி மட்டும் உரையாட வேண்டியது தானே. உங்கள் கணக்கை ஏற்ற ஏன் STஐத் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறீர்கள்?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,

தமிழ்நாட்டின் SC மக்கள் தொகை 20%

அவர்களுக்குத் தரப்படும் ஒதுக்கீடு 18%.

இட ஒதுக்கீட்டின் பலன்,

18/20 = 90% SC மக்களைப் போய் சேர்கிறது.  ஆனால்,

தமிழ்நாட்டில் BC+MBC மக்கள் தொகை குறைந்தபட்சம் 68% என்று வைத்தால் கூட,

50/68 = 73.5% BC+MBC மக்களைத் தான் இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேர்கிறது.

தமிழகத்தில் இருந்து குஜராத் மார்வாடிகளுக்கு சிங்கி அடிக்கும் சங்கிகள் கவனத்திற்கு..!

  Ksb Boobathi  : தமிழகத்தில் இருந்துகொண்டு  குஜராத் மார்வாடிகளுக்கு சிங்கி அடிக்கும்  சங்கிகள்  கவனத்திற்கு..!   தமிழ்நாடுதான் இந்தியாவுலயே டாப்பு...  அதாவது இருக்குற 29 மாநிலத்துக்கும் சேத்து கஞ்சி ஊத்துற பெரியண்ணன்டா நாங்க!     வாய பொளக்காதீங்க டீடெய்ல் கேளு.. 

இந்தியாவுக்கு  வருமானம் அளிக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடம்.. அதாவது கிட்டத்தட்ட 14லட்சம் கோடி GDP தருகிற மாநிலம்....  அப்பால காஞ்சு போன காவிரி மாதிரி ரெண்டு மூணு நதிய வச்சே நாங்க  அரிசி உற்பத்தில இந்தியாவுலயே ரெண்டாவது இடம்... அப்பால மொத்த இந்தியாவுடைய தீப்பெட்டிஉற்பத்தில 80% தமிழகத்துலதான்...
அதாவது கிட்டத்தட்ட 24 மாநிலத்தோட உற்பத்தி எங்களுடைய ஒரே மாநிலம் செய்கிறது....  மொத்த இந்தியாவின் பட்டாசு உற்பத்தில 90% தமிழகம்தான் உற்பத்தி செய்கிறது..
அதாவது கிட்டத்தட்ட 26 மாநிலத்தோட உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது...

ஜாதி வெறியிலிருந்து ஒரு கட்சியை உருவாக்கி ஜாதி வெறியை பற்றவைத்தாயிற்று

Nilavinian Manickam : சாதிவெறி கட்சிகள்-ஷண்முக நீதி சாயங்கள் ! 

ஒரு கட்சியை அதன் சாதி வெறியிலிருந்து உருவாக்கி ..அச்சாதியைச் சார்ந்த அனைத்து இளைஞர்களிடத்தும் சாதி வெறியை பற்ற வைத்தாகி விட்டது.   பிறகு தனித்தனியே பல்வேறு பிரிவாக உள்ள அச்சாதி இளைஞர்களை சாதியின் கீழ் ஒரு கற்பனை வளையத்துக்குள் வைத்து ஒருங்கிணைத்து சாதி வெறி ஊட்டுவது.         இது முதல் நிலை. அடுத்தது மக்கள் மன்றத்தில் எவ்வாறு இவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்?       தன் சாதியைச் சார்ந்த சாதி வெறியுள்ளவர்களை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் மற்றும் பெரிய கட்சிகளில் ஊடூருவச் செய்வது. இவ்வாறு ஊடுறுவியோர்,அங்கு இச்சாதிக் கட்சியையும்,தலைவரையும் சமூக நீதிக் கட்சி மற்றும் தலைவரென கட்டமைக்கும் சில்ற பணியை செய்து கொண்டே இருப்பர்.           வழக்கமாக ஒரு அரசியல் கட்சி பேசும் அனைத்து மக்கள் பிரச்சனையும் அறிக்கை மற்றும் இணைய போராட்டங்களின் வாயிலாக பேசுவதால் தங்களின் அடிப்படை அடையாளத்தை மாற்றி விடலாமெனவும் முடிவிலிருப்பர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிவெறியினரின் மொத்த அரசியலை பல்வேறு நிலைகளில் கண்ட எவர்தான் சமூக நீதிக்கட்சியென சான்றளிப்பர்? 

18 வயதுக்கு குறைந்தவர்களை மீன்பிடிக்க பயன் படுத்தினால் தண்டிக்கப் படுவீர்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் எச்சரிக்கை!

 ஐ பி சி : சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே  மீன்பிடிக்கு  பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கடுமையாக தெரிவித்தார்

 இதேவேளை அவர்களை முறையான கல்விக்கு வழிநடத்துவது கட்டாயமாகும் என்றார். நீங்கள் ஒரு மீனவராக இருந்தால், சிறுவர்களை உதவியாளராகவோ அல்லது வேலைவாய்ப்பாகவோ எடுத்துக் கொள்வதால், அவர்களின் கல்வி சீர்குலைவு மற்றும் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல சமூக பிரச்சினைகளை உண்டாக்கும்.   மேலும் நீங்களும் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றார். ஒவ்வொரு மீன்பிடி பயணத்திலும் உங்கள் உதவியாளரின் சேவைகளைப் பெறும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது மீன்வள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம். 

அனைவருக்குமானதா ஆன்லைன் கல்வி?.. தொடரும் தற்கொலைகள்,...

 தொடரும் தற்கொலை: அனைவருக்குமானதா ஆன்லைன் கல்வி?

மின்னம்பலம்: கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி ,கல்லூரிகள் தொடர்ந்து ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போனோ அல்லது மடிக்கணினியோ இல்லாத நிலையில் பெற்றோரிடம் அவற்றை வாங்கி தர சொல்லி கேட்கின்றனர்.ஆனால் இந்த ஊரடங்கால், அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் பிழைப்பு என்று வாழும் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தராத சூழ்நிலையில் கஷ்டப்படுகின்றனர்.

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு - 98 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று மேலும் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல் > dailythanthi.com: தமிழகத்தில் இன்று மேலும் 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

BBC  :கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் துவங்கியவுடன் பொதுப் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சில மாவட்டங்களில் துவங்கப்பட்டபோது தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை தவிர்த்த பிற மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து எல்லா வகையிலான பொதுப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்தந்த மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவுசெய்தது. ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் துவங்கப்படவில்லை.

பிரனாப் முகர்ஜி 34 கருணை மனுக்களில் 30 மனுவை கொலைத்தண்டனையாக அறிவித்தார்.

 Vijay Bhaskarvijay : · இந்திய குடியரசு தலைவர்களில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை நிராகரித்து “இவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்று யார் யார் எவ்வளவு சொன்னார்கள் என்று பார்க்கலாம். இதில் நிராகரித்தது என்பதை கொலைத்தண்டனை எனவும். ஏற்றுக் கொண்டது என்பதை
கொலைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக கருணையோடு மாற்றியது எனவும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். 1. ராஜேந்திர பிரசாத் - 180 கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டார். அவரிடம் வந்த அனைத்து கருணை மனுக்களையும் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார்.

2. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 57 மனுவை ஏற்றார். ஒரே ஒரு மனுவை நிராகரித்து கொலைத்தண்டையை கொடுக்க உத்தரவிட்டார்.

3.ஜாகிர் உசைன் ஒரு மனுவையும் நிராகரிக்கவில்லை. வந்த 22 மனுக்களையும் ஆயுள் தண்டனையாக மாற்றினார்.

4. விவிகிரி தன்னிடம் வந்த மூன்று மனுவையும் ஏற்றுக் கொண்டார். ஆயுள் தண்டனையாக மாற்றினார்.

NEET ஒரு திறமைசாலியை தந்திரத்தைக் காட்டி நீ திறமைசாலி இல்லை என்று பொய்யாக நிருபித்து...

Vijay Bhaskarvijay : 12 x 10 = 120 என்று சமச்சீர் கல்வியில் படித்திருப்பார்கள். அதே கணக்கை நீட் தேர்வில்

 0.12 x 10 = ?? 

0.12 x 0.01 =?? 

120 / 0.012 =??    என்று கேட்பார்கள். மேலே இருக்கும் கணக்கு 12 x 10 = 120 நேரடியானது. கிழே கேட்டிருக்கும் கணக்குகள் கொஞ்சம் சுற்றிவிடுவது. மேலே இருக்கும் கணக்குத் தெரிந்தவர்களுக்கு கிழே இருக்கும் கணக்கு தெரியாது என்றில்லை. அந்தப் பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த கீழே உள்ள கணக்கைத்தான் மற்றவர்கள் தரம் தரம் என்கிறார்கள். மேலே உள்ள கணக்கைப் புரிந்து கொள்வது அடிப்படை அறிவாகும். கிழே இருக்கும் கணக்கைப் போடுவது ஒரு பயிற்சிதான். முதலில் உள்ள கணக்கான 12 x 10 = 120 புரிந்து கொள்வதுதான் முக்கியம். அதுதான் அடிப்படை. அந்த அடிப்படையை சமச்சீர் கல்விபுத்தகங்கள் தேவைக்கு அதிகமாகவே கற்றுக் கொடுக்கின்றன.

இந்த கீழே உள்ள பயிற்சிமுறை இருக்கிறது பாருங்கள். அதாவது
0.12 x 10 = ??
0.12 x 0.01 =??
120 / 0.012 =?? என்று இருக்கிறதல்லவா? இது மாதிரி கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம். யார் ஒருவனையும் இதை வைத்து திணறடிக்கலாம்.

வண . தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் செப் ..2 .. உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை பல்வேறு தமிழறிஞர்களோடு நிறுவினார்

 S
usairaj Babu
: தமிழ் மொழியின் தூதர் என்று அறியப்பட்ட சேவியர் தனிநாயகம் நினைவு தினம் செப் ..2
இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார். வடக்கன்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் குருசாமி என்பவரிடம் தமிழ் பயின்றார்.

திமுக பொருளாளர் ஆகிறார் ஆ. ராசா .. தினமலரின் ஆருடம்

தினமலர் : சென்னை : தி.மு.க., பொதுக்குழு, வரும், ௯ம் தேதி கூடுகிறது. அதில், பொதுச் செயலராக துரைமுருகனும், பொருளாளராக ஆ.ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.      தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவி, நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. அப்பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக, கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது.வரும், 9ம் தேதி, கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி வாயிலாக, இக்கூட்டம் நடக்கிறது.        கூட்டத்தில், பொதுச்செயலராக, துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில், பலத்த போட்டி காணப்படுகிறது.       தி.மு.க., துணை பொதுச் செயலராக, ஐ.பெரியசாமி உள்ளார். எனவே, பொருளாளராக, டி.ஆர்.பாலுவை நியமித்தால், 'ஒரே ஜாதியினருக்கு பதவி' என்ற, விமர்சனம் எழும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொருளாளர் பதவி, டி.ஆர்.பாலுக்கு கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் பொருளாளர் பதவியை எதிர்பார்த்து, காய் நகர்த்தி வந்தனர். ஆனால், தலித் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கொள்கை பரப்பு செயலராக உள்ள, முன்னளாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு, பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

யார் யாருக்கு பொறுப்பு? ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!

minnamblam :மீண்டும் பரபரப்புக்கு வந்திருக்கிறது திமுகவின் பொதுக்குழு. திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகனின் மறைவுக்குப் பின் கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதக் கடைசியில் பொதுக் குழு கூட்டப்பட்டது.டிஜிட்டல் திண்ணை:  யார் யாருக்கு பொறுப்பு? ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!

அந்த பொதுக்குழுவிலே திமுகவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகவே அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டதால் பொதுக்குழுவை அப்போது கூட்ட இயலாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கேரளா ரெஹானா பாத்திமா.. பெண் போராளியை சிறைச்சாலைக்கு அனுப்பிய உடல் ஓவியம்!

ceylonmirror.net - ஜோ : கேரளாவில், ரெஹானா பாத்திமா என்ற பெண் சமூகப்போராளி, தனது இரண்டு மைனர் குழந்தைகளை , அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய செய்து அதை காணொளியாக ஜூன் 2020 இல் சமூக ஊடக தளங்களில் வெளியிட்டார் என்ற காரணத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா, மரபுவழி இஸ்லாமிய குடும்பத்தில் 1986 இல் பிறந்தவர். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இருந்து முதல் தரத்துடன் பி.காம் மற்றும் எம்சிஏ பட்டங்களை முடித்துள்ளார். 14 வயது மகன் மற்றும் எட்டு வயது மகள் என இரண்டு குழந்தைகளின் தாயாவார் ரெஹானா பாத்திமா. பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வல்லுநராக மே 2020 வரை பணியாற்றி வந்தார்.           சபரிமலை பிரச்சினையை தொடர்ந்து கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கவிஞரும் புனே திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றவருமான இவரது கணவர் மனோஜ் கே ஸ்ரீதர் எழுதி இயக்கிய ‘ஏகா’ என்ற மலையாள படத்திலும் ரெஹானா நடித்துள்ளார். மாடலாகவும் பணி செய்து வருகிறார். ஒரு யூடியுப் சேனலும் நடத்தி வருகிறார்.           தனது அரை நிர்வாண உடலில், தனது குழந்தைகளை வைத்து ஓவியம் வரைவதைக் சமூகத்தளத்தில் வெளியிட்ட காணொளியை கண்ட வழக்கறிஞர் ஒருவர், பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் தடுப்பு (போக்ஸோ) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடுத்தார். திருவல்லா காவல் நிலையத்திலும் இவர் மீது இதே செயலுக்காக மற்றொரு நபரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

“மாவீரன் பூலித் தேவன்” முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன்

  M
aha Laxmi
: இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில் பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் “மாவீரன் பூலித் தேவன்” பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப் போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் நூறாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டில் புரட்சிக்கான வித்து இடப்பட்டது. அதை முதன் முதலில் செய்தவர். 1750- ம் ஆண்டில் பூலித்தேவன் என்ற பாளையக்காரர் ஆவார். முதல் ஆங்கிலத் தளபதி ஆன “இன்னிஸ்” என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போர்க்களமும் சென்றார். திருநெல்வேலிச் சீமையிலேயே அதிக சுதந்திரப் போராளிகள் இருந்திருக்கின்றனர் என்பதும் ஒரு முக்கியமான உண்மை ஆகும். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே, சங்கரன் கோவிலுக்குத் தென்மேற்கே, “நெற்கட்டான் சேவல்” என்னும் ஊரின் பாளையக்காரர் ஆன பூலித்தேவனின் தந்தை பெயர் சித்திரபுத்திரத் தேவன், தாயார் சிவஞானம் நாச்சியார். 1715-ல் பிறந்த இவர், மனைவி பெயர் கயல்கன்னி நாச்சியார். மூன்று மக்கட்செல்வங்கள். கோமதி முத்து தலவச்சி, என்ற பெண்ணும், சித்திரபுத்திரத் தேவன், சிவஞான பாண்டியன் என்ற இரு ஆண்மகன்களும் உண்டு.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பட்டியல் அருந்ததியர் உள் ஒதுக்கீடு ! நவ துவாரங்களையும் அடைத்துக் கொண்டது இந்துத்துவ தமிழ் தேசிய அரசியல்.!

 பட்டியல் அருந்ததியர் உள் ஒதுக்கீடு.     .வலுவாக மக்களிடம் சேர்த்தது ஆதித்தமிழர் பேரவை.!     தமிழகம் தலையில் வைத்து கொண்டாடும் தருணம்..!!  நவ துவாரங்களையும் அடைத்துக் கொண்டது இந்துத்துவ ஆன்மீகமும், தமிழ் தேசிய அரசியலும்.!!!    "பெற்றவருக்குத்தான் தெரியும் பிரசவத்தின் வலி"   பெரு.தலித்ராஜா..   இளைஞரணி.மாநில செயலாளர் : .

"உள்ளிட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது" என்று அறிவித்து தமிழகம் சமூகநீதியின் மண் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றத்தின் நீதியரசர் அருண் மிஸ்ரா தலைமையிலான ஐவர் குழு கொண்ட அரசியல் சாசன அமர்வு.  ஆந்திரா பஞ்சாப் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் SC,BC பிரிவிற்க்குள் உள்ள இட ஒதுக்கீட்டின் பலன் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்று கருதி மக்கள் தொகையை கணக்கிட்டு சமமாக பிரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

டாக்டர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

BBC :உத்தர பிரதேச அரசால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த கஃபீல் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் 

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கூறியுள்ள உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. 

மைனஸ் 24% வீழ்ச்சி: பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்!

மின்னம்பலம் : இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மைனஸ் 23.9% அதாவது 24 சதவிகிதம் சரிந்துவிட்டதாக இந்திய அரசின் புள்ளியல் துறை தகவல் வெளியிட்டது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதாரச் சீரழிவு என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாதாளத்துக்குச் சென்ற ஜிடிபி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். “பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்திய தாக்குதலின் விளைவாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது மிக மோசமானது. பொருளாதாரத்தின் அழிவு 2016 ல் பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் இருந்து தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு கொள்கை முடிவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி, முறைசாரா துறையைத் தாக்கி பொருளாதாரத்தை மத்திய அரசு அழிப்பதாகக் கூறினார். இதற்கான எல்லா அறிகுறிகளைக் குறிப்பிட்டு எச்சரித்தும் மத்திய அரசு புறக்கணித்தது என்று கூறியுள்ளார்.

ஒன்றரை வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு.. தூக்கிட்டு தற்கொலை செய்த தாய்.. கோவையில்


 Vishnupriya R - tamil.oneindia.com : | கோவை: கோவையில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கிணத்துக்கடவை அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது. கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார் . தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தமிழ்ச்செல்விக்கு வயிற்றுவலியும் இருந்ததாக கூறப்படுகிறது. 

தமிழ்ச்செல்வி சிறு சிறு விஷயங்களுக்கு கூட எல்லோரிடமும் சண்டைபோட்டு கோபித்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனக மணிக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். 

EMI Moratorium: 2 ஆண்டுகள் நீட்டிக்கலாம் - ரிசர்வ் வங்கி

Vignesh Babu - Samayam Tamil ; EMI மொராடோரியம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடன் தவணைக்கான மொராடோரியம் காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மொராடோரியம் காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

EMI சலுகை எப்போது தொடங்கியது? 

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமெடுக்க தொடங்கியபின் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் வருமானம் இழக்கக்கூடிய சூழல் இருந்ததால், மார்ச் மாதம் முதல் மே 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை செலுத்த கூடுதல் கால அவகாசம் (EMI moratorium) வழங்கப்பட்டது. இதென்ன கடன் தள்ளுபடியா?

ஸ்டாலின் கனிமொழிக்கு அழைப்பு... எனக்கு இல்லையா?!' - கொதித்த குஷ்பு . சத்தியமூர்த்தி பவனில் மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் உருவப் படம்

 


  vikatan.com - ஆ.விஜயானந்த் : காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உருவப்


படத்திறப்பு விழாவையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அடுத்த மோதல் அரங்கேறத் தொடங்கியிருக்கிறது. `எனக்கு படத்திறப்பு விழா பற்றி எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர்... நானே பேப்பரைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது' என ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் உருவப் படம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்வில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், எம்.பி-க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை மையமாக வைத்துத்தான் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் குஷ்பு.