சனி, 28 டிசம்பர், 2024

Dr. இராமநாதன் அர்ச்சுனாவின் (MP) வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு

  Arunthathy Gunaseelan : சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா!
அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு.
மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே!
கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே!
அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்..
இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.

ஆண்மை பிரச்சனை முதல் ஆஸ்டியோபோரோஸிஸ் வரை... தினம் காலையில் பூசணி விதை ஒன்றே போதும்

 zeenews.india.com - Vidya Gopalakrishnan : பூசணிக்காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது.
பூசணி விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியம். இவற்றில் துத்தநாகச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன.
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் இதில் நிறைந்துள்ளது.
ஆண்மை பிரச்சனையை தீர்ப்பது முதல், ஆரோக்கியமான எலும்புகள், சிறந்த வளர்சிதை மாற்றம் வரை பல  ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
ஆண்மை பிரச்சனைக்கு தீர்வு

கனிமொழி :அதிமுக ஆட்சியில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணம்

tamil.oneindia.com  - Pavithra Mani :  தூத்துக்குடி: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. இதுகுறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, அதிமுக ஆட்சியில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதே,
இப்போதையே சம்பவத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு மற்றும் காவல்துறை கடுமையான கண்டித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆர் கசிந்தது கடும் சர்ச்சையாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களிடம் புகைப்படம் எடுத்ததும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ராமதாஸ் - அன்புமணி இடையே வார்த்தை மோதல்! விருப்பமில்லையென்றால் வெளியேறு” : மேடையில்,,,

 minnambalam.com - Kavi : இது நான் ஆரம்பித்த கட்சி… விருப்பமில்லை என்றால் யாராக இருந்தாலும் வெளியேறலாம் என்று கூறியதால் ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது.
புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 28) பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, “பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்.
இன்று முதல் அவர் அந்த பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக…. என்று ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே,

கீழ்வெண்மணி! .. உண்மையில் நடந்தது என்ன? தயவு தாட்சண்யம் இல்லாத ஒரு போஸ்ட் மார்ட்டம்

சுமதி விஜயகுமார்  :  25 டிசம்பர் தமிழகத்தின் கரும்பக்கங்களில் ஒன்றை குறிக்கும் நாள். அந்த நாள் வரும் போதெல்லாம் 44 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான அஞ்சலியை செலுத்திவிட்டு மறக்காமல் பெரியாரையும் அண்ணாவையும் குறை கூறாமல் கடப்பதேயில்லை.
கீழ்வெண்மணி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு சொல்ல வேண்டுமேயானால். தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தலைவிரித்து ஆடிய பண்ணையார்கள் ராஜ்யத்தில் அரைப்படி நெல் அதிகம் கேட்டதன் விளைவாக, ஒரு குடிசையில் தஞ்சம் புகுந்த 44 பேரை தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம். அதில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள். இப்படி ஒரு கொடூர நிகழ்வை எவர் ஒருவரும் நியாயப்படுத்தி பேசிவிடவே முடியாது.
பண்ணையாரிடம் வேலைபார்த்த விவசாயிகள் பட்ட துயர் சொல்லி மாளாது.
விவசாயிகளிடம் விழுப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை போராட்டத்திற்கு தயார் செய்ததில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர்களின் பங்களிப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. திராவிட அரசியல்/ சித்தாந்தந்தை எதிர்ப்பவர்கள் ஒவ்வொரு முறை கீழ்வெண்மணி பற்றி பேசும் பொழுதும், பெரியாருக்கு ஜாதி பாசம் அதனால் தான் கீழ்வெண்மணி பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றசாட்டு வைப்பார்கள். ஏனென்றால் அந்த படுகொலைக்கு தலைமை தங்கியது கோபால கிருஷ்ணா 'நாயுடு'. அதை போன்ற அவதூறுகளை எல்லாம் நேர்மையான கம்யூனிஸ்ட்களே உடைத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் நூறாண்டு செம்மொழி கனவை நிறைவேற்றியவர் மன்மோகன் சிங் : டெல்லியில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் உருக்கம்!

 minnambalam.com - christopher  :  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 27) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு 9.50 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடமளிக்க மத்திய அரசு மறுப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

 minnambalam.com  - christopher  ;  மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பதை நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு உலக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2024

அவன் செய்த கொடுமை’… மாணவி சொன்ன அதிர்ச்சி தகவல்: ஞானசேகரனின் அரசியல் பின்னணி!

 minnambalam.com - Kavi :  சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் தனது காதலரான சீனியர் மாணவருடன் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அங்கு என்னதான் நடந்தது? கைதான ஞானசேகரன் யார்? என்ற தீவிர விசாரணையில் இறங்கினோம்.
கடந்த டிசம்பர் 24 (செவ்வாய் கிழமை) காலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் “டிசம்பர் 23ஆம் தேதி இரவு அண்ணா பல்கலை கழக வளாகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் என்னை மிரட்டி நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்” என்று புகார் அளித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளிநொச்சி எம்பி சிறிதரன்!

 தேசம் நெட்  arulmolivarman : நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது.
இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.
யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்ணாமலை பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை FIR leak பாஜக தந்தையே லீக் செய்தார்?

 Kandasamy Mariyappan :  பாதிக்கப்பட்ட பெண் பாஜக நிர்வாகியின் மகள்.!
மகளின் பாதுகாப்பு மற்றும் secret பற்றிய கவலை இல்லாமல், தமிழ்நாட்டு அரசின் மீது குற்றம்சாட்ட வேண்டுமென்ற ஒரு குறிக்கோளோடு FIR copyஐ வெளியிட்டுள்ளார்.!
பாதிக்கப்பட்ட பெண்ணை எண்ணி வருத்தப்படுகிறேன்.!

தினமணி : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அர்ச்சுனா ராமநாதன் பேசியது என்ன?

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்: காலமானார்! இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி

 BBC News தமிழ் : மன்மோகன் சிங், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் ஒருவர். தார்மீகரீதியாக நேர்மையானவர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.
கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராகவும், அதற்கு முன்னர் நிதியமைச்சராகவும் இருந்தபோது, நாட்டின் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் உள்படப் பல முக்கியமான சீர்திருத்தங்களைச் செதுக்கிய சிற்பியாக அவர் கருதப்படுகிறார்.
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, முழு முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார்.

ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கிய ஆங்கிலேயர்கள்!

May be an image of 9 people and people standing
May be an image of 1 person and standing

ராதா மனோகர் : ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்து செய்த நன்மைகளில் முக்கியமானது
பல ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கியதாகும்.
உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம் :     
பஞ்சாப்  பாட்டியாலா  மகாராஜா பூபிந்தர் சிங்  தினமும் ஒரு புதிய பெண்ணுடன் இரவைக் கழித்தார். அவருக்கு உத்தியோக பூர்வமாக ஐந்து மனைவிகள் இருந்தார்கள்
இவர்களை விட அந்தப்புரத்தில் சுமார் முன்னூறு அழகிகளும் இருந்தார்களாம்.
மனைவிகள் மற்றும் அந்தப்புர அழகிக்கு ஏராளமான கருக்கலைப்புகளும் நடந்ததாம்
மகராஜா ஒரு பெண்ணுடன் முதல் முதலாக இரவைக் கழிப்பதற்கு முன், அந்தப் பெண்ணை ரோஜா பூக்கள்  குங்குமப்பூ ஆகியவற்றை கலந்த நீரில் நீராடுவார்கள்
அப்பெண்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்கு  பிரான்சில் இருந்து ஒரு தையல்காரர் மற்றும் அழகு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்களாம்
மகாராஜா பூபிந்தர் நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் குளத்தில் குளிப்பது வழக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் அமர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பாகி மாளிகையும் இந்த பூபேந்தரின் சொத்துதான் .
முகலாய மன்னர் ஷாஜகான் தனது மும்தாஜ் மனைவியின் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்று கதை அளக்கிறார்கள்.
காதலி மும்தாஜு  தனது பதினான்காவது குழந்தையைப் பெறும்போது இறந்தார்.
 வதவதவென்று டஜன் கணக்கில் பிள்ளைகளை பெற்றால் அந்த பெண்ணுக்கு காதலா இருக்கும்?

வியாழன், 26 டிசம்பர், 2024

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம் - FIR leak பின்னணி.

hindutamil.in : சென்னை: “பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர்.
இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நதியில் கட்ட சீனா திட்டம்! உலகின் மிகப்பெரிய அணை

 dinamalar.com- திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து,
வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது.
உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்ராவில் கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

புதன், 25 டிசம்பர், 2024

பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

May be an image of 5 people and text

 hindutamil.in : சென்னை: "அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
குற்றவாளி மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் நிலை என்ன?

 BBC News தமிழ்-  விஜயானந்த் ஆறுமுகம் :  "வேலைக்குப் போய் விட்டு அன்றைய தினம் குலாப் சீக்கிரமாக வந்துவிட்டான்.
மதிய தொழுகையை முடித்துவிட்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
அப்போது மூன்றாவது மாடியில் ஜன்னல் மேல் இருந்த சன்ஷேடு (Sun Shade) குலாப் தலையில விழுந்துவிட்டது" என்கிறார் சையது குலாபின் உறவினர் யாகூப் பாட்ஷா.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குலாபை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது.

கச்சத்தீவு Vs வெட்ஜ்பேங்க் தீவு = Wadge Bank ச்சத்தீவை விட வெட்ஜ் பாங் தீவு வளம் நிறைந்தது

 Kalidasan Swaminathan  :  Katchatheevu and Wadge Bank
கச்சத்தீவு vs வெட்ஜ்பேங்க் தீவு =  Wadge Bank
‘வெட்ஜ் பேங்க்’ என்று ஒரு தீவு.
குமரி முனைக்கு தெற்கே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள தீவு.
அதன் பரப்பளவு 4000 சதுர மைல் அதாவது 6400 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. அதைச்சுற்றி மீன்வளம் மிகவும் அதிகம். அந்த தீவில் ஹைட்ரோ கார்பன் வளம் மிக அதிகம். 1976 இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பு வரை அந்த தீவு யாருக்கு சொந்தம் என்று தீர்க்கப்படவில்லை.
குமரி மாவட்டத்து மீனவரும், இலங்கை மீனவரும் மீன் பிடித்து வந்தனர். கச்சதீவும் அதுபோல் தீர்க்கப்படாத ஒன்றாக இருந்தது. கச்சத்தீவை வெட்ஜ் பேங்குடன் ஒப்பிடும் போது , கட்ச தீவு ஒரு வறண்ட தண்ணீரற்ற தீவு. அதைச்சுற்றி மீன் வளம் கிடையாது. எரி பொருள் வளமும் கிடையாது.

தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு !

  asokan vvr ;  தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு ! Ragaam in tamil film songs by Illayaraja
The Ragam - The Song -The Film Name
Aarabhi - | S R2 M1 P D2 S | S N3 D2 P M1 G3 R2 S -
Aarabhi - Aasai Kiliye - Thambikku Entha Ooru
Aarabhi - Madhurai Vaazhum - Pudhupatti Ponnuthayee
Aarabhi - Mannavane Mannavane - Thandhuvitten Ennai
Aarabhi - Sandhakavigal Paadidum Manathinil - Metti

Abheri - | S G2 M1 P N2 S | S N2 D2 P M1 G2 R2 S -
Abheri - Chinnanjiru Vayathil - Meendum Kokila (Uses Ni3)
Abheri - En Paatu En Paatu - Poomani
Abheri - Ennai Thottu Alli Konda - Unna Ninaichen Paatu Padichen
Abheri - Guruvaayoorappa - Pudhu Pudhu Arthangal (magical prelude & interludes)
Abheri - Kaalidasan Kannadasan - Soorakottai Singakkutti
Abheri - Kaiyetha - Vinodhayathra (Malayalam)
Abheri - Kuyile Kavikuyile - Kavikuyil
Abheri - Megam Karukkudhu - Anandha Ragam
Abheri - Muthamizhae Muthamizhae - Raman Abdulla

செவ்வாய், 24 டிசம்பர், 2024

சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன்

May be an image of 2 people

Balasubramania Adityan T. :  எங்க அப்பாவுக்கு 60 ஆம் வயதில் தான் நான் பிறந்தேன்...
எனக்கு சுமார் 15 வயது இருக்கும் போது தினத்தந்தியின் நிர்வாக டிரஸ்டி, சன் பேப்பர் மில் நிர்வாக இயக்குனர், மாலை முரசு இப்படி எத்தனையோ நிர்வாகத்தை தன் பெயரில்  வைத்து இருந்தார்கள்.
அப்போது எங்கள் வீட்டில் 4 கார்கள் உண்டு.
தனது தம்பி சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்  உடன் சிறு வயது முதல் வேலை செய்த மாதவடையான் என்பவரை கயவர்கள் கொலை செய்தனர்.
எப்போது பணத்திற்காக ஒருவரை கொலை செய்ய உன் குடும்பம் துணிந்ததோ அந்த ரத்தக்கரையில் உள்ள ஒரு தம்படி பணம் கூட எனக்குத் தேவை இல்லை. என் பெயரில் உள்ள நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நீயே பெற்றுக் கொண்டு உன் குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள் என்று கூறவே, சி.பா.ஆதித்தன் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த பேப்பர்களில் உடனே கையெழுத்துகள் அனைத்தையும் வாங்கினார்.

திமுக கூட்டணியில் விசிக 25 தொகுதிகளைக் கேட்கிறது

 nakkheeran.in :கூடுதல் தொகுதிகளில் வி.சி.க. போட்டியா?” - தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம்!
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” எனத் தெரிவித்திருந்தார்.

கக்கன் போலியாக கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்து .....

May be an image of 1 person

 Sivakumar Nagarajan  :  கலைஞரும் தமிழ்நாடும் தமிழர்களும் கக்கனுக்கு செய்த துரோகத்தை பார்த்தீங்களா ப்ரோ???
கக்கனை போல வருமா? கக்கனை தோற்கடித்த தமிழ்நாடு! என்ற உலகமகா உருட்டை தமிழ்நாடு அரசியல் வரலாறு அறியாத WhatsApp காலத்து நண்பர்கள் பலர் படித்திருப்பீர்கள்.
25-01-1965 முதல் 12-02-1965 வரை 18 நாள் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயானோர் எண்ணிக்கை, 63.
குமாரபாளையம்-15
பொள்ளாச்சி-10
பாண்டிச்சேரி-10
கோவை-4

தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 தினத்தந்தி :  சென்னை :கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது;
தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

5 மற்றும் 8ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி ரத்து; மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சி - RTE Amendment 2024 :

 tamil.samayam.com - ஜான்வி :  RTE Amendment 2024 : தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலிக்கும் இருக்கும் நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamilகட்டாய தேர்ச்சி முறை ரத்து
கட்டாய தேர்ச்சி முறை ரத்து
RTE Amendment 2024 Compulsory pass for class 5 and 8th cancelled :

திங்கள், 23 டிசம்பர், 2024

உயர் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்! அரசு பள்ளி மாணவர்களுக்கு வந்த ‘செம’ செய்தி.

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!

Who is Ranil Wickremesinghe? | Tamil Guardian

ராதா மனோகர் : இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!
கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மேம்பாடு பூரண வெற்றியை தந்துள்ளது எனலாம்!
மிகப்பெரிய பொருளாதார சுழியில் இருந்து இலங்கை மீண்டுள்ளது  
ஃபிட்ச் மதிப்பீடுகள் நேற்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘RD’ (கட்டுப்படுத்தப்பட்ட இயல்புநிலை) இலிருந்து ‘CCC+’ ஆக உயர்த்தியது.
இது கடந்த வார தொடக்கத்தில் நாட்டின் 12.55 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச இறையாண்மை பத்திரத்தின் (ISB) கடனுக்கான கடனாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலங்கை அதன் திவால்நிலையிலிருந்து மீண்டுள்ளது என்பதே இதன் அடிப்படையில் பொருள்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ஜெய்ப்பூர் விபத்தின்போது தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடிய நபர்: உதவாமல் வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்

தி ஹிண்டு  தமிழ்  : ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எல்பிஜி எரிபொருள் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் எரிபொருள் லாரி வெடித்து சிதறி எல்பிஜி வாயு காற்றில் பரவியது. இதனால் சில மீட்டர் தொலைவில் இருந்த லாரி பேருந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
விபத்து நேரிட்டபோது ஜெய்ப்பூரை சேர்ந்த ராதேஷியாம் (30) வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சமையல் காஸ் காற்றில் பரவியதால் ராதேஷியாம் உடல் முழுவதும் தீப்பற்றியது. அவர் சுமார் 600 மீட்டர் தொலைவு தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடினார்.

கென்யாவில் அதானியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட முக்கிய காரணமாக இருந்த இளைஞர் நெல்சன் அமென்யா

நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

BBC -  எஸ்தர் கஹூம்பி  : அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.
கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.