சனி, 28 டிசம்பர், 2013

ஜெ.சி.டேனியல் ! மலையாள சினிமாவின் தந்தை ஒரு தமிழர்


ஜெ.சி.டேனியல் - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு! ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய
பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம்
அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது

பெரம்பலூர்:முதன்முறையாக இலங்கை அகதிகளுக்கு இந்திய நாட்டின் குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இதற்காக பெரம்பலூர் நகராட்சியில் அகதிகளுக்கு புகைப் படம் எடுக்கும்பணி தொடங்கியது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1983க்கு பிறகு பல்வேறு கட்டங்களில் அங்கு சொத்து, சொந்தங்களை இழந்து உயிர் பிழைக்க அகதிகளாக தாய் தமிழகத்துக்கு வந்தனர். இவர்கள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
 பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே உள்ள முகாமில் 84குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பஅட்டையோ, இந்திய நாட்டின் வாக்காளர் அடையாள அட்டையோ இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கென சிறப்பு ஒதுக் கீட்டில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொதுவிநியோகத்திட்ட உணவுப் பொருட் கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த திட்டங்கள் மூலம் ஏழை மக்களை பாதுகாத்தவர் ஜெயலலிதா: பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சிறந்த திட்டங்கள் மூலம் ஏழை மக்களை பாதுகாத்தவர் ஜெயலலிதா: பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை, டிச.28–
வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடந்தது.
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா எம்.பி. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை மேயர் சைதை துரைசாமி, பேச்சாளர்கள் நடிகர் ராமராஜன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நடிகர் குண்டு கல்யாணம், தியாகு மற்றும் சிந்தை ஆறுமுகம் ஆகியோர் பேசினார்கள்.
பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியால் கடுமையான பொருளாதார நெருக்கடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்தது. விலைவாசி உயர்ந்தாலும் ஏழை–எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் பாதுகாத்தார். பன்னீரு சொந்தமாக சிறிய டீக்கடை வைத்து தானே டீ ஆத்திகொண்டிருந்தார் . இந்த பன்னீரை சி எம் ஆக்கியது ஜெயலலிதாவே , அதனால் பன்னீரு உண்மையே சொல்லுதே 

நித்தியானந்தாவையும் ரஞ்சிதாவையும் மறைந்த மா ஆனந்தமாயியின் ஆத்மா மன்னிக்கட்டும்

தற்போது நடிகை ரஞ்சிதா மா ஆனந்தமையி என்ற புது பெயரை சூடிகொண்டுள்ளார் . மறைந்த மா ஆனந்தமாயியின் பெயரை நித்தியானந்தா உள்ளது கொடுமையாகும்


Sri Anandamayi Ma (Bengali: শ্রী আনন্দময়ী মা) (30 April 1896 - 27 August 1982) was an Indian saint from Bengal. Swami Sivananda (Divine Life Society) described her as "the most perfect flower the Indian soil has produced."[2] Precognition, healing and other miracles were attributed to her by her followers.[3] Paramhansa Yogananda translates Anandamayi as "joy-permeated". This name was given to her by her devotees in the 1920s to describe what they saw as her habitual state of divine joy and bliss.
en.wikipedia.org/wiki/Anandamayi_Ma

டெல்லியின் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு


டெல்லியின் 7-வது முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றார். 45 வயதில் முதல்வரானதன் மூலம் டெல்லியின் முதல் இளம் முதல்வர் என்ற பெருமையை கெஜ்ரிவால் பெற்றுள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லியின் முதல் இளம் முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு அவரைத் தொடர்ந்து ராக்கி பிர்லா, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சவுரப் பரத்வாஜ், கிரீஷ் சோனி, சத்யேந்திர ஜெயின் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 26 வயதான ராக்கி பிர்லாதான் இளம் அமைச்சர். முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால், பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு மெட்ரோ ரயிலில் வந்தார். அவரைப்போல அமைச்சர்களாக பதவியேற்பவர்களும் மெட்ரோ ரயிலில் தான் வந்தனர்.

10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு

சென்னை: 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், 3டி அனிமேஷன் முறையிலும், கணினி மூலம் பயிற்சி பெறும் சிடிக்களும் உள்ளன. 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், 3டி அனிமேஷன் முறையில் ஒலி, ஒளியுடன் விளக்க சிடிக்கள், சமச்சீர் பாடத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கு டிவிடிக்கள் உள்ளன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிசிஇ முறையில் முறையில்Work Sheet, NCRET  மற்றும் Conceptsஆகியவை உள்ளடங்கிய சிடிக்களும் உள்ளன. மேலும்Olympaid, IIT Preparation, Spoken English, Phonics, TNPSC, UPSC, Tally, Quiz, Yoga
உள்பட பல பொறியியல்   சிடிக்கள், திருக்குறள், பாரதியார்   பாடல், கதைகள்  , ராமாயணம், மகாபாரதம் உள்ளன. கல்வி டிவிடி கண்காட்சி டிசம்பர் 20ம் தேதி முதல்   மயிலாப்பூர் குளம் அருகில், தாம்பரத்தில் நகராட்சி அலுவலகம் அருகில், அருணா ஜானகி மஹால். அம்பத்தூரில் திருமால் மஹால் முருகன் கோயில் அருகில், கோயம்பேடு மற்றும் போரூர் ஏ.வி.  எஸ் புத்தக கண்காட்சி வளாகத்திலும் நடக்கிறது. நிரந்தர ஷோரூம் எண் 50, மார்சல்ஸ் ரோடு, லட்சுமி அபார்ட்மென்ட், ராஜரத்தினம் மைதானம் எதிரில், எழும்பூர் சென்னை,8. மேலும் விவரங்களுக்கு 98945 79294, 93802 84061 என்ற எண்களிலும் அருகில் உள்ள புத்தக கடைகளிலும் தொடர்பு கொள்ளவும் தினகரன்.com 

M.R.Radha எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார் !


எம்.ஆர்.ராதா தன்னை சுட்டுவிட்டு சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். எனக்குச் சொன்ன அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்:– கோயம்புத்தூரில், ராதாண்ணனுக்கு வேண்டிய யாரோ ஒரு செல்வந்தர் படம் எடுக்கப் பணம் கொடுக்கிறதா சொல்றதாகவும், அதனால் ஒரு மாசத்துல படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்குத் தகுந்த மாதிரி நான் சேர்ந்தாற்போல ‘கால்ஷீட்’ தரணும்னு
முத்துக்குமரன் பிக்சர்ஸ் வாசு எங்கிட்டே கேட்டாரு.
போன தடவை மாதிரி இப்பவும் அவர் தவறான தகவல் கொடுத்து, மறுபடியும் என்னை மாட்ட வைக்கப்பாக்கிறதா என் மனசுல பட்டுச்சு. எப்படின்னா அவர் எப்பவுமே அழுத்தந்திருத்தமா பேசமாட்டாரு. நழுவி நழுவிப் பேசுவாரு. அதை வச்சு அவர் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு நான் சொன்னேன்...
பணம் கொடுக்குறவுங்க யாரா இருந்தாலும் சரி, அவுங்களை எங்கிட்டே அழைச்சிட்டு வாங்க. அவுங்களோட நான் நேர்ல பேசி, நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப்புறம்தான் என் கால்ஷீட்டைப் பற்றி நான் முடிவு செய்வேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.
இப்படி நான் சொல்லிக்கிட்டிருக்கும்போது – அதாவது வாசு உட்கார்ந்திருந்த பக்கம் அவர் முகத்தைப் பார்த்து நான் பேசிக்கிட்டிருக்கும்போது – ராதாண்ணன் என் ஓரமா நடந்துக்கிட்டிருந்தார். அப்போ என்னாச்சுன்னா... என்று எம்.ஜி.ஆர். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் கீழ் முனையை எனது இடது காதுக்குள் நுழைத்தபின்பு...
‘இப்போ சட்டுன்னு என் பக்கம் திரும்புங்க’ என்றார். எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார்

எம்.ஆர்.ராதா : கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி. ! ரிவால்வரைக் கொண்டு போனது ! குடிச்சிட்டுப்போனது.!

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:–
எம்.ஆர்.ராதா:– இதோபார், நீ என் புள்ளை மாதிரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஒரு உண்மையை உங்கிட்டேதான் சொல்றேன். நான் பெரியார் வழியைப் பின்பற்றுறவன். இந்த சத்தியம் அது இதுன்னு எல்லாம் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லே. உண்மைன்னா உண்மை. அவ்வளவுதான்.
நான் சுடணுங்குற எண்ணத்துல துப்பாக்கியோட தோட்டத்துக்குப்போகலே. சுடணும்னு முடிவு பண்ணியிருந்தா ஸ்டூடியோவுலேயே வச்சி சுட்டிருப்பேன் இல்லியா?
சுட்டுடுவேன்னு சொல்லி ரிவால்வரைக்காட்டி சும்மா மிரட்டுறதுக்காகத்தான் கொண்டு போனேன். அதுவும் ஏன்? இரண்டு மாசத்துக்குள்ளே முடிச்சு ரிலீஸ் பண்ணணும்னு திட்டம் போட்டு தொடங்கின ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’ படம் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் லேட்டாகி வருஷக்கடைசிக்கு வந்திடுச்சி.
அதனால் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகலே. வட்டி இல்லாம வெறும் கைமாத்தா வாசுவுக்கு நான் கொடுத்த லட்ச ரூபாய் பணத்தை சொன்னபடி எனக்குத் திருப்பிக் கொடுக்க அவனால் முடியவில்லை.
எம்.ஜி.ஆரை வச்சு படம் தொடங்கினா போதும். எல்லா ஏரியாவும் வித்து பணம் கைக்கு வந்திடும். அதுல எனக்குக் கொடுக்கவேண்டிய லட்ச ரூபாயைக் கொடுத்திட்டு பாக்கிய வச்சுப் படத்தை முடிச்சிடலான்னு வாசு சொன்னதை நான் நம்பிட்டேன். அவன் தப்புக்கணக்கு போட்டான். அது நடக்கலே. கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி.

ரியல் எஸ்டேட்: இனி ஏமாற்றுவது எளிதில்லை!

ஆகஸ்ட் 14... ‘ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களை ஏமாற்றி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் பில்டர்களை யும் கிடுக்கிப்பிடி போடும் மசோதா! பல்வேறு கடுமையான விதிகளைக் கொண்ட இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அபார்ட்மென்ட் என்றால் என்ன, பொதுப் பகுதி, கார்பெட் பகுதி, விளம்பரம், ரியல் எஸ்டேட் புராஜெக்ட் உள்ளிட்ட அனைத்துக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்ட, இந்த விதிமுறைகளின் கீழ்தான் ரியல் எஸ்டேட் துறை இயங்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகுதான், தங்களுடைய திட்டங்கள் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பில்டர்கள் விளம்பரம் செய்து, அதை விற்பனை செய்ய முடியும் என்பதும் இதன் விசேஷ அம்சம்!

மோடி விசாரணைக்கு பதிலடி? ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை ! பா.ஜ.க. அரசு அறிவிப்பு


ஜெய்ப்பூர்,
மோடி மீது இளம்பெண் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க முடிவெடுத்த மறுநாளே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா அரசு அறிவித்துள்ளது.
விசாரணை கமிஷன்
குஜராத் மாநிலத்தில் கட்டிடக்கலை வல்லுநரான ஒரு இளம்பெண்ணை உளவு பார்க்க உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனை மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

குஜராத் கலவரம்: வேதனையை விவரிக்க வார்த்தை இல்லை- மோடி ! கொலையும் செய்துவிட்டு அதற்காக கண்ணீரும் விட்டு

குஜராத் கலவரத்தின்போது தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை குஜராத் கலவரம் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளை மோடி பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அந்த கலவரம் தொடர்பாக அவர் வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை என்று கூறப்படும் நிலையில் முதல்முறையாக அவர் மனம் திறந்துள்ளார்.
வலைப்பதிவில்..
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தனது இணையதள வலைப்பதிவில் அவர் மிக உருக்கமாக எழுதியிருப்பதாவது:
நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு மன நிம்மதியை அளித்துள்ளது. இந்த நேரத்தில் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். முதல்முறையாக எனது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். 

சிற்றரசோ, பேரரசோ பதவிச் சண்டை எப்போதும் உண்டே! கம்போடிய கலைக்கோயில்கள்- (பாகம்-3):

கம்­போ­டிய  அர­சு­க­ளுக்கு  எப்­போதும்  சுமத்­தி­ராவில் ஆட்சி செய்த ஸ்ரீ விஜயா அர­சாலும், ஜாவாவில் ஆட்சி செய்த   சைலேந்­தி­ரர்­க­ளாலும் ஆபத்து இருந்து கொண்டே  இருந்­தது. சைலேந்­தி­ரர்கள்  இந்து  மன்­னர்­க­ளாக  இருந்த போதும் ஆட்­சியை  விஸ்­த­ரிக்கும்  நோக்கில்  கம்­போ­டி­யா­விற்குள்  புகுந்து மன்­னனைக் கொன்று ஆட்­சி­யைக்­கைப்­பற்றி  இரண்டாம்  ஜெய­வர்­மனைச் சிறை பிடித்து ஜாவா­விற்கு கொண்டு போனார்கள்.
ஆனால் அவன் எப்­ப­டியோ ஜாவா சிறையில் இருந்து தப்பி கடல் மார்க்­க­மாக  கம்­போ­டியா வந்தான். பிறகு சைலேந்­தி­ரர்­களைப் பழி­வாங்கும் எண்­ணத்­தோடு சித­றிக்­கி­டந்த வீரர்­களைத் திரட்டி கெமர்  ராச்­சி­யத்தைக்  கட்­டி­யெ­ழுப்பி 790 இல் ஆட்­சிக்கு வந்தான்.  ஜாவா சிறையில் இருந்து தப்பி வந்­த­தனால் இவன் செல்­வாக்கு மக்­க­ளி­டையே பர­வி­யது.
இந்­தோ­னே­ஷி­யாவின் சைலேந்­தி­ரர்­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பகு­தி­களை மீட்டு சுதந்­தி­ர­மான கெமர் பேர­ரசை வலு­வாக்­கினான். மன்­னர்­களே கடவுள் என்ற « இறை­ய­ரசன் » God king எனும் மதக்­கோட்­பா­டு­களை மக்­க­ளி­டையே பரப்பினான்.

பெங்களூரு வந்த ரயிலில் தீ; 23 பேர் பலி !

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர்பலியாயினர். பலர் காயம் அடைந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் நான்டட் பகுதியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த நான்டட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நான்டட் எக்ஸ் பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 3.45 மணியளவில் .விபத்து ஏற்பட்டது இவ்விபத்தி்ல் 23பேர் பலியாயினர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தி்ல உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு்ள்ளதாக கூறப்படுகிறது. 5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.  
dinamalar.com

வெள்ளி, 27 டிசம்பர், 2013

டி.ராஜேந்தர். கண்ணீர் : திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க திமுகவில் இணைந்தேன்

திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்,
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்திரர்,
தி.மு.க. தலைவரை பார்க்கலாம் என ஆற்காடு வீராசாமி கூப்பிட்டார். அந்த அன்பு கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை. எல்லா துறையிலும் எனக்கு அவர் ஆசான். தமிழிலும், அரசியலிலும் எனக்கு அவர் குரு. அன்பு கட்டளையை என்னால் மீறமுடியவில்லை.
கட்சியில் இணைந்ததில் மிகவும் சந்தோஷம் என்றார். தலைவர் சொன்னாரு 'லட்சிய திமுகவாக இருக்கிற நீ, திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்' என்றார். அதனால் திமுகவில் இணைந்தேன் என்றார்.
 சினிமா கூத்தாடிக்கு தேவை பணம் புகழ் ! எதையாவது உயர்த்தி பிடித்தால்தானே பருப்பு வேகும் , நேற்றுவரை கருணாநிதி கருணாநிதி என்று ஏகவசனத்தில் வசைபாடிய இந்த கூத்தாடி இனி ஒரே கலைஞர் பஜனை செய்வார் ,இதைதான் அரசியல் ஒரு விபசாரம் என்று சொல்வது 

மோடி சொல்கிறார் வாய்மையே வெல்லும் ! குஜராத்தில் வாய்மை வென்றதா ? NO


அகமதாபாத்: ‘வாய்மையே வெல்லும்' என குஜராத் கலவர வழக்கில் தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் மோடி. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குஜராத் கலவர வழக்கு: ‘வாய்மையே வெல்லும்’ தீர்ப்புக்குப் பின் டுவிட்டரில் கருத்துச் சொன்ன மோடி முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.

மோடி தப்பி விட்டார் ! நீதி செத்துவிட்டது ?மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா


அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி மத வெறியாட்ட வழக்கிலிருந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விடுவித்து அகமதாபாத் பெருநகர கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கேட்டதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் 74 வயதான ஜாகியா ஜாப்ரி கண்ணீர் விட்டு அழுதார். இவர் குல்பர்க் சொசைட்டி கலவரத்தின்போது உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஆவார். குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புபுலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து அப்பீல் செய்து போராடி வந்தவர் ஜாகியா. மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா குல்பர்க் கலவரத்தில் ஜாகியாவின் கணவர் உள்பட மொத்தம் 68 பேர் இந்து மத வெறியர்களால் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். நேற்று தனது அப்பீல் மனுவை அகமதாபாத் கோர்ட் நிராகரித்து உத்தரவிட்டதைக்கேட்டு கதறி அழுது விட்டார்ஜாகியா. அதேசமயம், இந்தத் தீர்ப்புகுறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் சத்யமேவ ஜெயதே அதாவது வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக ஜாகியா தெரிவித்துள்ளார். கண்ணீருடன் காணப்பட்ட அவர் கூறுகையில், நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார். ஜாகியாவின் மகன் தன்வீர் ஜாப்ரி கூறுகையில், இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. எங்கள் முன்பு நீண்டதொரு சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்று உணர்கிறோம் என்றார்.
tamil.oneindia.in

தமிழ் சினிமா 2013 : பெரிய நட்சத்திரங்களால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் சிலரும், குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம் கவனம் பெற்று தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்களும் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் இந்த வருடம் மிகப் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்கள். நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என்று பலரின் பங்குள்ள சினிமாவில், வெற்றிக்குப் பல பங்காளிகள் சேர்ந்துகொண்டாலும் தோல்வியின் முழுப் பொறுப்பும் பல சமயம் இயக்குநர் மீதே விழுகிறது. பெரிய நட்சத்திரங்களால் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்துவிட முடியும் என்றால் தமிழில் ஆண்டுக்கு 15 படங்களாவது பெரும் வெற்றி அடைய வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது. காரணம், பெரிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் வைத்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டிய இயக்குநரின் பங்களிப்பே வெற்றி, தோல்வியைப் பெரிதும் தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய சில இயக்குநர்களின் தோல்விகளை அலசுவோம்.

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்'


முசாபர் நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் பலி
செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் குளிரால் இறந்தார்கள் என்று ஊடகங்கள் கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
குழந்தைகள் நிமோனியாக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
செப்டம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா காவி அணிந்தார் ! இனி இருவரும் சேர்ந்து கடவுளை தேட தடை இல்லை ! New Name மா ஆனந்தமாயி

நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள்.  பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது பிறந்த நாள். நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நடிகை ரஞ்சிதா,  இன்று காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார்.  நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார். ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். அப்போது ரஞ்சிதாவுக்கு ‘மா ஆனந்தமாயி’ என்று பெயர் சூட்டப்பட்டது.தீட்சை பெற்ற ரஞ்சிதா,  ‘’சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டு ள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன்.  இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் அவருக்கு எதிராக செயல்படமாட்டேன்’’என்று கூறியுள்ளார் நித்தியிடம் நடிகை ரஞ்சிதா காவி உடை வாங்கி அணிந்தார் இனி இருவரும் சேர்ந்து கடவுளையும் காசையும் தேட தடை இல்லை ரஞ்சிதா இனி அவர் 

காரைக்காலில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்...அடுத்தடுத்து அக்கிரமம்


காரைக்கால்: 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம்.
tamil.oneindia.in

ஆம் ஆத்மி மீண்டும் தேர்தலை சந்திக்க தீர்மானம்?!அதுவரை காங்கிரஸ் மீது சவாரி !நன்கொடை விவகாரம்: எந்த விசாரணைக்கும் தயார்

டெல்லியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் பாஜ 31
இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. 31 இடங்களை பிடித்த பாஜ ஆட்சி அமைக்க மறுத்தது. இதனையடுத்து, 2வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். அக்கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். வரும் 28ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘நாங்கள் பொறுப்பேற்றதும் காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவோம்’ என்று கூறியிருந்தார். இது, காங்கிரசாரிடம்  அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் இதன்பின்பும், கெஜ்ரிவால் நேற்று ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், காங்கிரசை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு


ஒரு வரலாற்றுத் தவறு, அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகப் போரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணித் திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது.
ஓரினச் சேர்க்கையாளர் என தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாராணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலன் டியூரிங் (Alan Turing) கணினி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர் (ஹேக்கர்). அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர்.
ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர், சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகள் இனி: தனியார் துப்புரவு பராமரிப்பில்

சென்னை: அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது. தூய்மையற்ற நிலை:>தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், துப்புரவு பணி சரியாக இல்லை; சுகாதாரக் குறைவும், தூய்மையற்ற நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 'பத்மாவதி' என்ற நிறுவனத்துடன், அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளின் கீழ் செயல்படும், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, 31 அரசு மருத்துவமனைகளில், டிச., 20 முதல், இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது 48 மருத்துவமனைகளில்:
இதன்படி, 4,572 துப்புரவு ஊழியர், 1,322 பாதுகாவலர் (செக்யூரிட்டி), 345 மேற்பார்வை யாளர்கள், இந்த நிறுவனம் மூலம் பணிக்கு வந்துள்ளனர். அடுத்ததாக, மாவட்ட மருத்துவமனைகள், முக்கிய தாலுகா மருத்துவமனைகள் என, 48 மருத்துவமனைகளில், தனியார் நிறுவன பராமரிப்பு, அமலுக்கு வர உள்ளது.

கார்விற்பனை கடும் சரிவு ! இரு சக்கர வாகனங்கள் துறையில் பாதிப்பில்லை


மும்பை
விற்பனை சரிவடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோட்டார் வாகன துறையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக இத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கார் நிறுவனங்கள்
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், குறிப்பாக கார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உற்பத்தி குறைப்பு, கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க முயற்சி போன்றவை இதில் அடங்கும். ஊரக பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2012–ஆம் ஆண்டைக் காட்டிலும் விற்பனை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் கிராமங்களின் பங்கு ஏறக்குறைய 33 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் கிராமங்களில் களம் இறங்குவது தற்போது இந்நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. கார்விற்பனை கடும் சரிவு 

சுங்கத்துறை நிபந்தனையால் சீரழியும் பொருளாதாரம்! Export கன்டெய்னர்'களில் அழுகும் வேளாண் விளைபொருட்கள்

சென்னை: சுங்கத்துறை குளறுபடியால், சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய, ஏராளமான வேளாண் விளை பொருட்கள் முடங்கியுள்ளன. இவை, அழுகும் அபாயம் உள்ளதால், சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் விளைபொருட்கள், சென்னையை சுற்றியுள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஏற்றுமதி கிடங்குகளுக்கு வந்து சேரும். சுங்கத் துறை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் பரிசோதனை அதிகாரி ஆய்வு செய்து, கன்டெய்னர்களுக்கு, 'சீல்' வைப்பர். அங்கிருந்து, மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். முத்திரை சரிபார்க்கப்பட்ட பின், ஏற்றுமதிக்காக, சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்படும்.இந்த நடைமுறையில், சுங்கத்துறை சில நாட்களுக்கு முன் திடீர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி, 'தனியார் கிடங்குகளில் சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து, 'சீல்' வைத்தாலும், மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு வந்ததும், கன்டெய்னர், 'சீலை' அகற்றி, மீண்டும் பொருட்களை கணக்கிட வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. இந்திய நண்டு என்று சொல்வது இதுதான். ஒரு நண்டு கூட வெளியே வந்து விடாமல் மற்ற நண்டுகள் கவனமாக பார்த்துக்கொள்ளும்...

குஜராத்தில் இளம்பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்! விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு!

கடந்த 2009ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் நரேந்திரமோடியின் பரிந்துரையின் பேரில் தான், அமித் ஷா உத்தரவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வலதுகரமாக இருந்து வருபவர் அமித்ஷா, தற்போது உ .பி. மாநில பா.ஜ.,வின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது அழுத்தத்தின் பேரில் பெண் ஒருவரை மாநில போலீசார் உளவு பார்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தொலைபேசி ஓட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு, அவ்வாறு நடக்கவில்லை என பிரச்சனை முடிக்கப்பட்டது.

வியாழன், 26 டிசம்பர், 2013

பார்வதி ஓமனகுட்டன்: எதிர்பார்த்தளவுக்கு எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்பு வரவில்லை

மும்பை:தமிழ் ரீமேக் ‘பீட்சாவாவது கைகொடுக்குமா என்ற கவலையில் இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன்.அஜீத்துடன் ‘பில்லா 2‘ படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன். 2008ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் 2வது இடம் பிடித்தவர். உயரம், அழகு எல்லாம் இருந்தாலும் பட வாய்ப்புகள் குவியாததால் கவலையில் இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா‘ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘ஷைத்தான்‘, விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்குகிறார். விஜய் சேதுபதி வேடத்தில் அக்ஷய் ஒபராய், ரம்யா நம்பீசன் வேடத்தில் பார்வதி நடிக்கின்றனர். இயக்குனர் கூறும்போது,‘படம்பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்த முடியாது. பார்வதி, அக்ஷய் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழில் இப்படம் எப்படி உருவானதோ அதிலிருந்து கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி பற்றி முடிவு செய்யவில்லை‘ என்றார்.

மும்பை பெண்ணை தாக்கிய பஹ்ரெயின் துணை தூதர்! ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக கைது இல்லை!!


இந்தியாவுக்கான பஹ்ரெயின் துணை தூதர் மீது பெண் ஒருவரை தாக்கியதாக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. பஹ்ரெயின் துணை தூதருக்கு வெளிநாட்டு ராஜதந்திரி என்ற பாதுகாப்பு (diplomatic immunity) உள்ளதால், மும்பை போலீஸ் இன்னமும் அவரை கைது செய்யவில்லை.
மும்பையில் உள்ள பஹ்ரெயின் தூதரகத்தில் துணை தூதராக பணிபுரியும் அப்துல் அசீஸ் அல்-காஜா, மல்பார்ஹில் (மும்பை) பகுதியில் உள்ள சில்வர் ஆர்ச் ஹவுஸிங் சொசைட்டி அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். அந்த பில்டிங்கில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட் சரியாக இயங்காத காரணத்தால், லிஃப்டின் கதவுகளை உதைத்துக் கொண்டிருந்தார் துணைத் தூதர் காஜா.

கெஜ்ரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி?

வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக  ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில்  வந்த நிதி தொடர்பாக புகார் எழுந்தது. இதற்கு பதிளத்த கெஜ்ரிவால் நிதி பெற்றது தொடர்பாக எங்களிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனிடையே புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர்  விசாரணையை சந்திக்வுள்ளார்.

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறதுதமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கி.பி 6-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் "தாமு" தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.

மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரி மனு தள்ளுபடி! குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு


குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு: மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரி மனு தள்ளுபடி! அகமதாபாத்: குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை அகமதாபாத் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குஜராத்தில்தான் அதிக அளவில் சமுக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள் ! மோடியின் பயங்கரவாத ஆட்சி!

அமித் ஜெத்வா
கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது. குஜராத்தின் கிர் காடுகளில் நடக்கும் சட்டவிரோத சுரங்கக் கொள்ளையை அம்பலப்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலரான அமித் ஜெத்வா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமித் ஜெத்வா
இக்கொலையின் பின்னணியில், ஜுனாகத் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தினு சோலங்கிக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரை மோடி அரசு பாதுகாப்பதாகவும் அமித் ஜெத்வாவின் தந்தை பிகாபா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், போலீசின் போலி விசாரணையில், சோலங்கிக்கு இதில் எவ்விதத் தொடர்புமில்லை என்ற நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால், இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென, குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிகாபா வழக்கு தொடர்ந்தார்.
இறுதியில், இப்படுகொலையில் சோலங்கிக்கு இருந்த நெருங்கிய உறவு அம்பலமானதால், சி.பி.ஐ, அவரைக் கடந்த மாதம் கைது செய்துள்ளது. குஜராத்தில் தான் அதிக அளவில் சமுக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்

இதயமாற்று சிகிச்சைக்குப்பின் 31 ஆண்டுகளாக வாழும் மனிதர்


லண்டன் மிடில்செக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் மெக்காபர்டி. இவருக்கு இதயகோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கடந்த 1982–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந்தேதி அங்குள்ள ஹேர் பீல்டு ஆஸ்பத்திரியில் அவருக்கு இதய மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு 51 வயது.
அதன்பிறகு அவர் தவறாமல் உரிய மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டு வந்தார். இதனால் அவர் தற்போது 71 வயதில் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதன்மூலம் இதய மாற்று ஆபரேசன் செய்து கொண்ட பிறகு உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் மனிதராக கின்னஸ் சாதனைக்கு ஜான் மெக்காபர்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனைவி,மகன் உதவியுடன் 14 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம் :வக்கீல் கைது

Ujjain:  A 17-year-old schoolgirl who was held captive and allegedly raped repeatedly for two weeks in a house just 50 feet away from her own home in Ujjain, Madhya Pradesh, was rescued on Wednesday morning.
The girl, a class 9 student, had gone to lawyer Balkrishna Joshi on December 12, for help to get a caste certificate. The man, in his late 40s, allegedly held her captive and repeatedly raped her for 14 days. He has been arrested.
The girl has alleged that her captor's wife and son helped him
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும்  ஒன்பதாம் வகுப்பு மாணவியை, மனைவி- மகன் உதவியுடன் 14 நாட்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அழுகை குரலை கேட்டு,  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் மாணவி மீட்கப்பட்டார். 40 வயது மதிக்கதக்க  வக்கீல் பால கிருஷ்ணா ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். வக்கீலின் வீடு, மாணவி குடியிருக்கும் அதே பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது

நய்யாண்டி பிரச்சனைக்குப் பிறகு, நஸ்ரியாவை தமிழ்த்திரையுலகமே ஒதுக்கிவிடுமோ? என்று பதட்டப்பட்டார்கள், ராஜா ராணி படத்தின் மூலம் நஸ்ரியாவின் தீவிர ரசிகர்களகளாகிவிட்டவர்கள். ஆனால் திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகத்தை விட்டு நான் செல்லவில்லை என்று நஸ்ரியா சொல்லாமல் சொன்னாலும் நய்யாண்டி பிரச்சனை நஸ்ரியாவை விட்டுவிடாமல் பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ‘சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு தான் நிகழ்ச்சியையே துவங்குகிறார்கள். ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் நய்யாண்டி திரைப்படம் குறித்த கேள்விக்கு நஸ்ரியா “நய்யாண்டி திரைப்படத்தினால் உண்டான பிரச்சனையால் நான் எப்படிப்பட்ட நடிகை என்பது திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிந்துவிட்டது. இனி என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் முன்பே நான் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று முடிவெடுத்துவிடுவார்கள். இதனால் நான் கதை கேட்டு அதன்பின்பு வேண்டாம் என்று தவிர்க்க தேவையிருக்காது.  இந்த வகையில் நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது” என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் அடித்து கொலை? உறவினர்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). சித்த மருத்துவர். கடந்த செப்டம்பரில் வீட்டு முன் நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான டிராக்டர் திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் ஆலிவலம் போலீசில் செப்டம்பர் 14ம் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து டிராக்டரை திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில். கீரக்களூர் அடுத்த நங்காளி கிராமத்தை சேர்ந்த சுந்தர் (34) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக நேற்று மாலை ஆலிவலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே சுந்தர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  அவரை போலீசார், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்

பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீட்டுக்கும் இலவச குடிநீர் ! ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி : டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், நாளை மறுநாள் பதவியேற்கிறார். முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.டெல்லி பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களை பிடித்த பாஜ, ஆட்சி அமைக்க மறுத்தது. 2ம் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் நஜீபிடம் கடந்த திங்களன்று அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அதை ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரைத்தார்.

ஆம் ஆத்மிக்கு கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது என காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறும் போது இருகட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை கவனிக்க ஒரு குழு ஏற்படுத்த வேண்டும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை ! விரைவில் அவர்கள் சிரிக்கவும் தடை விதிக்கப்படும்?

பாட்னா: பீகாரில், கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத பெண்கள், மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.
அதில், 'திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது' என, தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று, பஞ்., தலைவர், அன்சாரி அறிவித்தார். அதில், ''தடையை மீறி, யாரேனும், மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால், அவர்கள், ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்,'' என, தெரிவித்தார் இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான அரசில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கும், பீம் சிங்கிடம் கேட்டபோது, ''இது போன்ற தடை விதிக்க, யாருக்கும் உரிமையில்லை. பாதிக்கப்பட்ட யாரேனும், புகார் கொடுத்தால், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்,'' என்றார். பைத்தியக்காரத்தனமானது..... நல்ல வேளை திருநங்கைகளுக்கு இந்த தடை இல்லை , சந்தோசம் 

புதன், 25 டிசம்பர், 2013

டாப் 15 லஞ்ச அதிகாரிகள் பட்டியல் 29ஆம் தேதி வெளியீடு! தமிழ் எழுச்சி இயக்கம்


டாப் 15 லஞ்ச அதிகாரிகள் பட்டியல் 29ஆம் தேதி வெளியீடு! ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்!
தமிழகத்தில் உள்ள டாப் 15 லஞ்ச அதிகாரிகளின் பெயர் பட்டியல் வரும் 29ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என தமிழ் எழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் எழுச்சி இயக்கத்தின் மாநில செயலாளர் நந்தகுமார்,
ஊழல், லஞ்சத்துக்கு எதிராக செயல்படும் 20 அமைப்புகளை ஒருங்கிணைத்து ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சார்பில் லஞ்சம் மற்றும் ஊழல் புகாரில் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்படும்போது, புகார் செய்த நபருக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டையில் உலக திரைப்பட விழா ( படங்கள் )

 இதுவரை திரைப்படம் பற்றிய எந்த விழாவாக இருந்தாலும் சென்னை தாண்டி சென்றதில்லை. அல்லது பெரு நகரங்களைத் தாண்டி வேறு எங்கும் சென்றதில்லை. ஆனால் த.மு.எ.க.ச திரை இயக்கம் நடத்தும் உலக திரைப்பட திருவிழா சிறு நகரமான பட்டுக்கோட்டையில் 5 நாட்கள் நடந்திருக்கிறது. விழாவை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கவுரவம்பாள் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஏராளமான இயக்குநர்கள், மற்றும் கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு திரப்படத்தைப் பற்றி விமர்சனங்களுடன் விழா கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லி செல்கிறார்கள்.;இந்த திரைப்பட திருவிழாவில்.. உலக அளவில் முதுமை பற்றி பேசும் படங்கள் முதல் கொரியா, செக் குடியரசு, இத்தாலி, தென் கொரியா, மெக்சிக்கோ, இங்கிலாந்து, இந்தியா போன்ற 12 நாடுகளைச் சேர்ந்த 25 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. திரை துறையினர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களிடம் இந்த விழா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.;விசுவல் மீடியா படிக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கல்லூரிகளில் இருந்து திரைப்படத் திருவிழா விற்கு வந்து பார்த்துவிட்டு நாங்களும் இது போன்ற படங்களை எடுப்போம். நிச்சயம் எங்கள் படைப்புகளும் இது போன்ற திருவிழாவில் இடம் பெரும் என்று உறுதிமொழி எடுத்துச் சென்றது சிறப்பு.;இந்த விழாவை ஏன் சிறு நகரமான பட்டுக்கோட்டையில் நடத்த வேண்டும். பெரும் நகரங்களில் இடம் கிடைக்கவில்லையா என்ற நமது கேள்விக்கு.. விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான களப்பிரன்.;த.மு.எ.க.ச வின் திரை இயக்கம் கடந்த 2 ஆண்டுகள் சென்னையில் தான் விழாவை நடத்தியது. சென்னையில் மட்டுமே நடத்துவதை விட சிறு நகரங்களிலும் நடத்தினால் என்ன என்ற கேள்வி எங்களிடம் வந்தது. அதனால் தான் முதலில் மக்கள் கவிஞரின் பட்டுக்கோட்டையை தேர்வு செய்தோம். திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்து முடியும் நாளான செவ்வாய் கிழமை வரை திரை கலைஞர்கள் மட்டும் இன்றி திரை கலைஞர்களாக துடிக்கும் இளைஞர்களும் ஆர்வமாக வந்து படம் பார்த்துவிட்டு இத்தனை நல்ல படங்களையும் படைக்க முடியும் என்பதை அறிந்து கொண்டதுடன். நாங்களும் படம் எடுப்போம். அந்தப் படங்கள் இது போல பேசும் படங்களாக இருக்கும் என்று சபதம் எடுத்துச் செல்கின்றனர்.கல்லூரி மாணவர்களுக்கு இந்த விழா உந்து சக்தியாக உள்ளது. இந்த வரவேற்பை பார்த்தோம் பெரு நகரங்களை விட சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பும் கலைஞர்களை உருவாக்கும் பட்டரையாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். இனி ஒவ்வொரு விழாவும் சிறு நகரங்களில் தான் நடக்கும்.

முருங்கைக்காய் திருடிய ஏழைகளிடம் போலீஸ் அராஜகம் கூடவே Ex MLA ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்)


சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம் பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும் வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறைவாசம் விதிக்கமுடியும்.
குற்றமும் தண்டனையும்
திருவான்மியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.) வெங்கடேசன். அவரது மனைவி ராணிவெங்கடேசன் முன்னாள் சாத்தான்குளம்   காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். மகள் பியூலா ஒரு போலீசு அதிகாரி. மருமகனோ சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ். செல்வமும் சக்தியும், மழையால் சரிந்து கிடந்த வெங்கடேசன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் முருங்கை இலையையும் சில காகளையும் பறித்ததும், அக்குடும்பத்தினர் போலீசிடம் புகார் தந்தனர். இந்த மாபெரும் குற்றத்திற்காகத் தரப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமே! உடனே இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.கள், 10 போலீசார் உள்ளிட்ட ஒரு படையே சென்று கைது நடவடிக்கையில் இறங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிவெங்கடேசன், “நூறு கோடி திருடினா என்ன, முருங்கையைத் திருடினா என்ன,எல்லாமே திருட்டுதானே” என்று ‘நியாயம்’ பேசுகிறார்.

இரண்டாம் உலகம் - விலகியது மகிழ்ச்சி - ஹாரிஸ்! இரண்டாம் உலகம் ரசிகர்களுக்கு புரியாது?

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த என்றென்றும் புன்னகை
திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகிவிட்ட நிலையில், சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவில் மாபெரும் வெற்றிபெற்றுவிட்டது. என்றென்றும் புன்னகை திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த என்றென்றும் புன்னகை படக்குழு ரசிகர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் “என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் கமிட் ஆனபோது நான் இன்னொரு மெகாபட்ஜெட் திரைப்படத்தில்(இரண்டாம் உலகம்) பணியாற்றினேன். இரு திரைப்படங்களும் வெவ்வேறு விதமானவை என்பதால் ஒரே சமயத்தில் இரு படங்களிலும் பணியாற்றமுடியவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: இட்லிக்கு மாவரைத்து கொண்டே எளிய தமிழில் புரட்சி கவிபாடியவர்

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.
படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.
இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு.
அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.

இளையராஜா இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். இதற்காக, ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 இடங்களில் அவருக்கு செயற்கை ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.
ஒத்திகை
இசையமைப்பாளர் இளையராஜா வருகிற 28–ந் தேதி, மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்கான ஒத்திகை, சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் இளையராஜா ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
2 இடங்களில் அடைப்பு
அங்கு அவருக்கு, ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய இதயத்தில் 2 இடங்களில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது. பின்னர் அவருடைய இதயத்தில் 2 இடங்களில் செயற்கை ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன. இளையராஜா இன்னும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருக்கிறார்.

TN 40 தொகுதிகளில் 36ல் தி.மு.க., போட்டியிட முடிவு !

லோக்சபா தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்ட, தி.மு.க., தலைமை, அதற்கான வேலைத் திட்டங்களை வகுத்துள்ளது. பிப்ரவரியில் நடக்கும் திருச்சி மாநாட்டில், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடும் வகையில், கூட்டணி பேச்சு, தொகுதிப் பங்கீட்டை முடிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், 36ல் தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும், தற்போதைய கூட்டணியை விரிவுப்படுத்தும் திட்டமும், தி.மு.க.,விடம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.