LR Jagadheesan : சட்டம் ஒழுங்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் கொலைகளும்
ஒரு மாநிலத்தின் மாநகரத்தின் சட்டம் ஒழுங்குக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரௌடிகும்பல்கள். அதிலும் அரசியல் லேபிளில் இயங்கும் கட்டப்பஞ்சாயத்து ரௌடிகும்பல்கள் கூடுதல் கொடூரம்.
அவர்களுக்கு எண்ணிக்கை பலம்கொண்ட ஜாதியும் பின்புலமாக இருந்தால் அவர் காவல்தெய்வமாகவும் கடையெழு வள்ளல்களின் நவீன அவதாரமாகவும் போற்றப்படுவார்.
அப்படிப்பட்ட அரசியல் லேபிளில் செயற்பட்ட ஜாதிச்செல்வாக்குமிக்க மோசமான கட்டப்பஞ்சாயத்து கும்பல் தலைவரின் படுகொலையை காட்டி,
ஒரு மாநிலத்தின்/மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,
என்று முக்கோ முக்கென முக்கிக்கொண்டிருக்கும் “மூத்த செய்தியாளர்கள்” தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்று.